வெள்ளி, 31 டிசம்பர், 2010

நேற்றும் இன்றும் நாளையும் ஒரே மாதிரித்தான் விடிகிறது.. புதிய வருடம் மாற்றங்களை தர வேண்டும்!

நேற்றும் இன்றும் நாளையும் ஒரே மாதிரித்தான் விடிகிறது. எந்த மாற்றங்களும் இல்லை. எந்த முன்னேற்றங்களும் இல்லை. மூடப்பட்ட ஊர்கள் அப்படியே இருக்கின்றன. உரிமைகள் மறுக்கப்பட்ட  மக்கட் கூட்டத்தின் தொடரும் சாபம், இரத்தமும் சதையுமாய் எங்கள் காலத்திலும் பரவிச் செல்கிறது தமிழர்களுக்கு மட்டும் ஏன் துப்பாக்கிகளின்; அச்சுறுத்தல்கள் எப்பொழுதும் பரிசளிக்கப்படுகின்றன. உரிமைக்காக இலட்சியத்திற்காக துப்பாக்கி ஏந்திய மக்களை, தங்கள் துப்பாக்கிகளும் காக்கி உடைதரித்த துப்பாக்கிகளும் அச்சுறுத்துகின்றன.
 தமிழர்கள் எதையும் கேட்க முடியாத  அச்சமான சூழலுக்குள் வைத்திருக்க வேண்டும் என்று இந்தத் துர்ப்பாக்கியமான  துப்பாக்கிதாரிகளும் நினைக்கிறார்கள் வாழ்வுக்காக போராடும் தமிழ் பேசும் மக்களினின்வாழ்வுரிமைகள் சிறக்க வேண்டும். ஒன்றாய் பலம் சேரக்க வேண்டும்.  இன்றும் சிலர் கொல்லப்படலாம் என்ற அச்சத்தில் இருக்கிறது தாய்நிலம். கொல்லப்பட்டவர்களில் யாரினதோ சடலம் கொண்டு செல்லப்படும் பொழுது வெடியோசைகள் கனத்துக் கேட்கின்றன. இந்த வெடியோசைகள் புதுவருடத்திற்காகவா?
 

சிறிலங்கா காவல்துறை மா அதிபர் எழுதியுள்ள விடுதலைப் புலிகள் தொடர்பான நூல்

விடுதலைப் புலிகளின் எழுச்சியும் வீழ்ச்சியும்‘ என்ற தலைப்பிலான நூல் ஒன்றை சிறிலங்காவின் காவல்துறை மா அதிபர் மகிந்த பாலசூரிய எழுதி வெளியிட்டுள்ளார்.  இந்தநூலில் விடுதலைப் புலிகள் இயக்கத்தை முறியடிப்பதற்கு சிறிலங்கா காவல்துறை தரப்பில் கையாளப்பட்ட உத்திகள் தொடர்பாகவும் அவர் எழுதியுள்ளதாக தெரியவருகிறது.

இலங்கையின் நிபந்தனையை ஐக்கிய நாடுகள் சபை ஏற்க மறுப்பு

ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவால் நியமிக்கப்பட்ட உண்மைகளைக் கண்டறிவதற்கான நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிப்பதற்கு மட்டுமே ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர் குழுவுக்கு நுழைவு அனுமதி வழங்கப்படும் என அரசாங்கம் விதித்திருக்கும் நிபந்தனையை ஐக்கிய நாடுகள் சபை நிராகரித்துள்ளது.  வன்னியில் கடந்த வருடம் இடம்பெற்ற போரின் போது படைத்தரப்பால் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக சுயாதீனமான சர்வதேச விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென மனித உரிமை அமைப்புக்களும் மேற்கத்தேய நாடுகளும் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றன.

அல்வாயில் ஆயுததாரிகளால் பெண் கடத்தப்பட்டார்

அல்வாய் கிழக்குப் பகுதியில் அப்பகுதியிலுள்ள வர்த்தக நிலையமொன்றின் உரிமையாளரான பெண் ஒருவர் வெள்ளைவானில் வந்த 6 பேர் கொண்ட இனந்தெரியாத ஆயுததாரிகளினால் கடத்திச் செல்லப்பட்டுள்ளார். அல்வாய் கிழக்கு மணியம் பாடசாலை வீதியிலுள்ள வர்த்தக நிலையமொன்றின் உரிமையாளரான திருமதி யோகநாதன் புஸ்பாதேவி (வயது 48) என்பவரே இவ்வாறு கடத்தப்பட்டவராவார். நேற்று மாலை அவரது வீட்டிற்குள் நுழைந்த ஆயுததாரிகள் வலுக்கட்டாயமாக அவரை இழுத்துச் சென்றுள்ளனர். இதன்போது தாயாரை ஆயுததாரிகளிடம் இருந்து காப்பாற்றுவதற்காக இழுபறிபட்ட பிள்ளைகளை துப்பாக்கியால் அச்சுறுத்தி விட்டு அவரைக் கடத்திச் சென்றுள்ளனர். கடத்தப்பட்ட பெண் ஆறு பிள்ளைகளின் தாயாராவார்.

'சிலோன் போய் சிறிலங்கா வருகிறது'

இலங்கையில் பழைய காலனித்துவ கால பெயரான சிலோன் என்ற பெயரைக் கொண்டிருக்கும் அனைத்து அரசாங்க நிறுவனங்களுக்கும் சிறிலங்கா என்று பெயரை மாற்றிவைக்க இலங்கை அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.இலங்கைக்கு சிறிலங்கா என்று பெயரிடப்பட்டு 39 வருடங்களுக்குப் பின்னர் தற்போது இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவிருக்கிறது.இந்த பெயர் மாற்ற நடவடிக்கைகள் 2011இல் முடிந்தவரை விரைவாக நடக்கும்.அனாவசியமான காலனித்துவ கால எச்ச சொச்சங்களை களைவோம் என்ற புதுவருட உறுதி மொழியாக இது மேற்கொள்ளப்படவிருக்கிறது.

குடத்தனைச் சம்பவத்தில் படுகாயம் அடைந்தவர் உயிரிழந்தார்!? மணற் விற்பனையை அம்பலப்படுத்தினாராம்!!

வடமராட்சி கிழக்குப் பிரதேசத்தின் குடத்தனை கிழக்கில் வீடு புகுந்து ஆயுததாரிகள் துப்பாக்கியால் சுட்டதில் இளம் குடும்பஸ்தர் தபாலக ஊழியரான தேவராசா கேதீஸ்வரன் (வயது 28) ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மந்திகை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. தனது முகநூல் (Facebook) பகுதியில் சிறீலங்கா இராணுவம் மற்றும் துணைக் குழுக்களின் ஆதரவுடன் யாழ். மணித்தலைப் பகுதியில் மணல் அள்ளப்படுவதால் கடல் நீர் உட்புகுந்துள்ளதற்கான ஆதாரபூர்வமான படங்களையும், கார்த்திகைப் பூவை கையில் வைத்தபடி நிற்கும் படங்களையும் பதிவு செய்து வைத்திருந்தார். இதனாலேயே இவர் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது. அந்தத் தகவலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, குடத்தனை கிழக்கில் உள்ள இவரது வீட்டிற்குள் புகுந்த இனந்தெரியாத ஆயுததாரிகள் அவரது கணனியை காண்பிக்குமாறு கேட்டுள்ளனர். அதற்கிணங்க வீட்டினுள் அழைத்துச் சென்றபோது ஆயுததாரிகள் அவர்மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

வியாழன், 30 டிசம்பர், 2010

ஜனவரி மாதம் புதிய கட்சிகள்

தற்போது தேர்தல்கள் செயலகத்தில் பதிவு செய்துக் கொள்வதற்காக விண்ணப்பித்துள்ள புதிய கட்சிகள் தொடர்பிலான இறுதி தீர்மானம், ஜனவரி மாதம் இறுதிக்குள் மேற்கொள்ளப்படவுள்ளது. கடந்த ஜுன் மாதம் புதிய கட்சிகளை பதிவு செய்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.இதன் போது 85க்கும் மேற்பட்ட அரசியல் அமைப்புகள் விண்ணங்களை வழங்கி இருந்ததாக தேர்தல்கள் செயலகத்தின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை தமிழ் அகதிகளை நாடுகடத்த கூடாது .சர்வதேச மன்னிப்புச் சபை

அகதி அந்தஸ்த்து வழங்கப்பட்ட இலங்கை தமிழ் அகதிகளை மீண்டும் அவுஸ்திரேலியா இலங்கைக்கு நாடுகடத்த கூடாது என வலியுறுத்தப்பட்டுள்ளது. மனித உரிமைகள் கண்கானிப்பகம் மற்றும் சர்வதேச மன்னிப்புச் சபை என்பன இந்த வலியறுத்தலை விடுத்துள்ளதாக த ஒஸ்ட்ரேலியன் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கை புலனாய்வுத்துறையின் தகவல் அடிப்படையில், இலங்கை தமிழ் அகதிகள் பயங்கரவாதத் தொடர்பு கொண்டவர்கள் என அவுஸ்திரேலிய அரசாங்கம் கருவதாக தெரிவிக்கப்படுகிறது.

மீசாலையில் கொலை செய்யப்பட்டவர் முன்னாள் போராளியா ??.

யாழ்ப்பாணம் மீசாலையில்  சடலமாக மீட்கப்பட்டவர் கிளிநொச்சி உருத்திரபுரத்தைச் சேர்ந்தவரென்பதுடன் நலன்புரி நிலையத்திலிருந்து அண்மையில் விடுவிக்கபட்டவரெனவும் தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, மீசாலை வடக்கை சேர்ந்த இவர் கடந்த காலத்தில் நடைபெற்ற இராணுவ நடவடிக்கைகளின்போது இடம பெயர்ந்து சென்று கிளிநொச்சி உருத்திரபுரத்திற்கு சென்று அங்கு விவசாய செய்து வந்துள்ளார். உருத்திரபுரத்திலேயே தொடர்ச்சியாக அவர் கடந்த காலங்களில் வசித்ததுடன் வன்னியில் இடம் பெற்ற யுத்தகாலத்தில் அங்கிருந்து இடம் பெயர்ந்து அதன் பின்னர் வவுனியாவிற்கு இராணுவக் கட்டுப்பட்டு பகுதிக்குச்சென்றார்

யுத்த குற்றவாளி சவேந்திர சில்வாவை பாராட்டும் வகையில் அரசாங்கம் காணியொன்றை அன்பளிப்புச் செய்துள்ளது

ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கான பிரதி நிரந்தர வதிவிடப் பிரதிநிதியும்;, 58ம் படைப்பிரிவின் பொறுப்பதிகாரியுமான மேஜர் ஜெனரல் சாவேந்திர சில்வாவிற்கு, அரசாங்கம் காணியொன்றை அன்பளிப்பு செய்துள்ளது.தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தின் போது ஆற்றிய சேவையை பாராட்டும் வகையில் இவ்வாறு காணித் துண்டொன்று அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளது.

பூசா தடுப்பு முகாமிற்குள் பிரவேசிக்க ஊடகவியலாளர்களுக்கு தடை

பூசா தடுப்பு முகாமிற்குள் பிரவேசிப்பதற்கு  ஊடகவியலாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவினர் பூசா தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளிடம்  சாட்சியங்களை திரட்டியிருந்தனர் இந்த நடவடிக்கைகள் தொடர்பான செய்தி சேகரிப்பில் ஈடுபடுவதற்காக சென்றிருந்த சில ஊடகவியலாளர்களுக்கு தடுப்பு முகாமிற்குள் பிரவேசிப்பதற்கு தடை விதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. பி.பி.சீ ஊடகவியலாளர் மற்றும் உள்நாட்டு ஊடகவிலாளர்கள் சிலருக்கு இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அகதிகளுக்கான பொருட்கள் கடத்தல்

வவுனியா நகருக்கு அருகேயுள்ள அகதிகள் முகாம்களில் உள்ளவர்களுக்காக கொடுக்கப்படும் உணவுப்பொருட்கள் கடத்தப்படுவதாக புகார் எழுந்துள்ளன. இது குறித்து பிபிசி தமிழோசையிடம் கருத்து வெளியிட்ட முகாம்வாசி ஒருவர், உணவுப் பொருட்கள் இரவு நேரத்தில் எடுத்துச் செல்லப்படுவதை மக்கள் பலர் பார்த்திருப்பதாக கூறினார். இதனால் தமக்குறிய உணவு கிடைக்காமல் இருப்பதாகவும் அவர் கூறினார்.  இது பற்றியும், அனாதைப் பள்ளி மாணவர்களின் பயன்பாட்டுக்காக, தொண்டு நிறுவனங்களால் வழங்கப்பட்டுள்ள பாதணிகள், தொப்பிகள், பைகள் போன்றவற்றில் சொற்ப அளவே பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் மற்றவை கடத்தப்பட்டதாகவும் தமக்கு புகார் வந்துள்ளதாக வவுனியா நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார். இது குறித்து அரசாங்க அதிபருக்கு தான் முறையிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

தம்பி பசிலின் வேண்டுதலை அண்ணா மஹிந்த புறக்கணித்தார்.

வெளி நாட்டு பயணங்களை முடித்துக்கொண்டு நாடு திரும்பிய பசில் இராஜபக்‌ஷ தனது அமைச்சிற்கு முழு நேர அமைச்சு செயலர் ஒருவரை தருமாறு கேட்டுள்ளார். தற்போது திறைசேரி செயலர் டி.பி. ஜயசுந்தரவையே மஹிந்த பசிலின் பொருளாதார அமைச்சுக்கு பகுதி நேர செலராக நியமித்துள்ளார்.பசில் இராஜபக்‌ஷ கண் மண் தெரியாமல் பெருவாரியாக பணத்தை சுருட்டிக்கொண்டு இருக்கின்றார் இதில் பங்குகள் சரியாக மஹிந்தவிற்கு போய் சேரவில்லை. கோத்தபாயவை விட பசில் இராஜபக்‌ஷவே பணம் சுருட்டுவதில் வல்லவராம். இதனை அறிந்த மஹிந்த தானே  டி.பி,.ஜெயசுந்தரவை நியமித்துள்ளார்.

அமெரிக்காவில் எரிபொருள் நிலையத்தில் கொல்லப்பட்டவர் ஈழத்தமிழர் (படம்)

அமெரிக்காவில்  பெற்றோல் நிரப்பு நிலையத்தில் கொள்ளையர்களால் சுட்டுக்கொல்லப்பட்டவர்  ஈழத்தமிழராவார். 25 வயதை உடைய சுஜேந்திரன் அமரசிங்கம் என்ர இளைஞரே கொல்லப்பட்டார். அமெரிக்காவின் கன்சாஸ் மானிலத்தில் 59 வது வீதியில் உள்ள பெற்றோல் நிரப்பு நிலையத்தில் அதிகாலை 4.30 மணியளவில் அவர் வேலை பார்த்துக்கொண்டிருக்கும் போது ஆயுதம் தரித்த கொள்ளையர்களால் கொல்லப்பட்டார். கொள்ளையர்கள் ஆயுத முனையில் பணத்தினை பறிக்க முயன்றபோது இவர் போராடியுள்ளார். இதனால் கொள்ளையர்கள் சுட்டுக்கொன்று விட்டு, பணத்தினை எடுத்துக்கொண்டு தப்பி சென்றுள்ளனர். சூட்டுக்காயங்களுடன் இருந்த சுஜேந்திரனை  சிறிது நேரத்தின் பின் வந்த வாடிக்கையாளர்கள் கண்டதுடன் பொலிசாருக்கு தொடர்பு கொண்டு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது அவர் உயிர் பிரிந்ததாக பொலிசார் கூறியுள்ளனர்

புதன், 29 டிசம்பர், 2010

கப்பம் கோரி கடத்தப்பட்ட சாவகச்சேரி இளைஞன் சடலமாக மீட்பு

தென்மராட்சியின் மீசாலைப் பகுதியில் இளைஞர்  ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. கப்பம் கோரி ஆயததாரிகளால் கடத்தப்பட்ட 28 வயதுடைய மகேந்திரன் செல்வம் என்பவரது சடலமே இது என அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த திங்கட்கிழமை கனகம் புளியடியில் உள்ள வீட்டிற்குச் சென்ற இருவர் மோட்டார் சைக்கிளில் அவரை அழைத்துச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது. இவர் ஒரு வாகனப் புறோக்கர் எனத் தெரிவிக்கப்படுகிறது. எனினும் அழைத்துச் சென்றவர்கள் செல்வத்தின் நண்பர்கள் என தாம் நம்பியதாக அவரது சகோதரர் தெரிவித்துள்ளார்.
 

குடாநாட்டில் மீண்டும் வீதிச்சோதனை ஆரம்பம்

யாழ். மாவட்டத்தில் மீண்டும் ஆரம்பமாகியுள்ள படையினரின் வீதிச் சோதனை நடவடிக்கைகளால் மக்கள் அச்சத்துடன் பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர்.குடாநாட்டில் கொலை, கொள்ளைச் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் படையினரின் வீதிச்சோதனை நடவடிக்கைகளும் அதிகரித்துள்ளன. குறிப்பாக நவாலி , சங்கானை, சித்தன்கேணி , தொட்டிலடி, மாசியப்பிட்டி, அளவெட்டி போன்ற பகுதிகளில் இவ்வாறான சோதனைகள் படையினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சிங்களத்தில் தேசிய கீதம் பாடுவதற்கான பயிற்சியை படை அதிகாரிகள் சிலரே,வழங்கி வருகின்றனர்

யாழ்ப்பாணத்தில் சிங்களத்தில் தேசிய கீதம் பாடுவதற்கான பயிற்சியை படை அதிகாரிகள் சிலரே, நேரடியாக பாடசாலை மாணவர்களுக்கு வழங்கி வருகின்றனர். சர்ச்சைக்குரியவகையினில் நடந்து முடிந்த, தேசிய அனர்த்த தினத்தினில் முன்னதாக தமிழ் சிங்களம் ஆகிய இரு மொழிகளிலும் தேசிய கீதத்தினைப் பாட தாம் முடிவெடுத்திருந்ததாக தமிழ் அதிகாரியொருவர் பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார். சிங்கள மொழியில் ஆரம்பித்து அடுத்த வரிகளை தமிழென மாறிமாறி பாடவே மாணவர்கள் பயிற்றப்பட்டிருந்தனர். 

யாழ்.குடாநாட்டில் மீண்டும் குருதியுறையும் “பயப்பீதி’ நோய்!

யாழ்ப்பாணத்தில் மீண்டும் குருதி உறைந்து போகும் சம்பவங்கள் நடக்கத் தொடங்கி விட்டன. வன்னி யுத்தத்திற்குப் பின்னர் புறவய அமைதி காணப்பட்ட போதிலும் அப் புறவய அமைதி நீண்டகாலம் நிலைக்கவில்லை.மீண்டும் அளவெட்டியில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.அந்த ஆரம்பம் சங்கானையில் அந்தணச் சிவாச்சாரியரை பலியடுத்தும் அவரின் இரண்டு புதல்வர்களைக் காயப்படுத்தியும் தனது தாண்டவத்தின் ஒத்திகையைக் காட்டி நின்றது.

வவுனியா சிறைச்சாலை கைதிகள் உண்ணாவிரதப் போராட்டம்: இராணுவத்தினர் தாக்குதல்

வவுனியா சிறைச்சாலை கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட போது இராணுவத்தினர் தாக்குதல் மேற்கொண்டுள்ளதால் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய உறுப்பினரும் கைதியுமான சதீஸ் என்பவரை வவுனியா சிறைச்சாலையில் இருந்து அநுராதப்புர சிறைச்சாலைக்கு மாற்றியதை கண்டித்து வவுனியா சிறைச்சாலை கைதிகள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் வவுனியா இராணுவத்தினர் கைதிகள் மேல் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் மன்னார், வவுனியா, மதவாச்சி பகுதிகளில் இருந்து கைது செய்யப்பட்டவர்களை பார்வையிடச் சென்ற உறவினர்களையும் அனுமதிக்க வில்லை என தெரிவிக்கப்படுகின்றது

தமிழ் இளைஞர் அமெரிக்காவில் சுட்டுக்கொலை!

பொறியிலாளரான வவுனியாவைச் சேர்ந்த தமிழ் இளைஞரொருவர் அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் சுட்டுக்கொல்லப்பட்டார். கொல்லப்பட்டவர் 25 வயதுடைய அமரசிங்கம் சுஜன் என்பவராவர்.ஒரு வருடத்திற்கு முன்னர் புலமைபரிசில் பெற்று அங்கு சென்றிருந்த இவர் பணியாற்றும் வேலைத்தளத்தில் இரவு கொள்ளையர்களினால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது என பெற்றோர் தெரிவித்தார். மேற்படி இளைஞரின் சடலத்தை நாட்டுக்கு எடுத்து வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

திங்கள், 27 டிசம்பர், 2010

என் முதல் புகைப்படத்தை அமைதியாய் பார்ப்பவர்களே....

எட்டு மாதம் எனக்கு
உயிர் இருப்பதை உணரும்
வயதில்லை..
தாயென்னும் உயிருக்குள் உறங்கும்
வயது...
தாய் சாப்பிட்ட உணவு செரிக்கும்
சத்தம் மட்டுமே தெரியுமெனக்கு..
என் செவி வலிக்குமோ என அஞ்சி
என் தாய்,
திரவமாய் குடித்ததும் தெரியுமெனக்கு..
திடீரென வெடிச்சத்தம்...
கருவறை திரைகளுடன் சேர்ந்து
முழுதாய் வளராத
என் செவிப்பறைகளும் கிழிந்தன....

தாயின் உடலில் இருந்து
குழந்தையின் தலைதானே வெளிவரும்!!??
எனக்கு என் முழு உடலும் வந்தது..விழுந்தது...
பிய்ந்து பிய்ந்து..
நைந்து நைந்து..
அதிகமாய் குங்குமப்பூ தின்றாயோ தாயே?
நான் சிவப்பாய்..
நீயோ அதைவிட சிவப்பாய்..
உனக்குப் பிரசவம் பார்த்தது வெடிகுண்டல்லவா?

யாழில் தொடரும் துப்பாக்கிக் கலாச்சாரம் பிரதிக் கல்விப் பணிப்பாளரையும் பலிவாங்கியது _

யாழ். வலிகாமத்தில் பிரதி கல்விப் பணிப்பாளராகக் கடமையாற்றிய மார்க்கண்டு சிவலிங்கம் (வயது 55)  இனந்தெரியாத ஆயுததாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். அவரது வீட்டிற்குக் கொள்ளையிட வந்த ஆயுததாரிகள் தங்க நகைகளைக் கேட்டு மிரட்டியுள்ளனர். அதன் பின்னர் அவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.  யாழ் மாவட்டத்தில் கடந்த ஒன்றரை மாதக்காலப்பகுதியில் இடம்பெற்ற நான்காவது தப்பாக்கிப் பிரயோகம் இதுவாகும்.

இந்திய பாதுகாப்புச் செயலாளர் இலங்கையை வந்தடைந்தார்

இந்திய பாதுகாப்புச் செயலாளர் பிரதீப் குமார் உட்பட 7 பேர் கொண்ட தூதுக்குழுவினர்  இலங்கை வந்தடைந்துள்ளனர். இக் குழுவினர் இலங்கை அதிகாரியுடன் இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.இலங்கை வந்த அவர் பாதுகாப்புச் சம்பந்தமாக பல்வேறுபட்ட அதிகாரியுடன் மூன்று நாட்கள் பேச்சுவார்த்தை யில் ஈடுபடவுள்ளார்.

புலிகளின் தொழில்நுட்பத்துடன் கடற்படைத்தாக்குதல் படகுகள் - வெளிநாட்டுச் சந்தையில் கிராக்கி

இறுதிக் கட்ட போரின்போது விடுதலைப்புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்களுக்கு மேலாக இராணுவம் வியந்துபோன இன்னொரு விடயம்தான் அவர்களின் இயந்திரப் படகுத் தொழில்நுட்பமாகும்.அதன் காரணமாக கடற்புலிகளின் இயந்திரப் படகுகள் மற்றும் புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்டிருந்த தொழில்நுட்பக் குறிப்புகள்  என்பவற்றைக் கொண்டு கடந்த வருடம் தொடக்கம் கொழும்பை அண்மித்த வெலிசறவில் இயந்திரப் படகு தயாரிக்கும் திட்டத்தை கடற்படை ஆரம்பித்தது.

விடுவிக்கப்பட்டவர்கள் மீண்டும் கைதாகின்றனர்

புனர்வாழ்வளிக்கப்பட்டதாக கூறப் பட்டு விடுவிக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் பலர் விசாரணைக்கென்று காரணம் கூறப்பட்டாலும் கைது செய்யப்படும் சம்பவங்கள் அண்மைக்காலமாக அதிகரித்திருப்பதாக தெரிகிறது. யுத்த காலத்திலும் யுத்தத்திற்குப் பின்னரும் சரணடைந்த பல போராளிகள் புனர்வாழ்வு முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டிருந்தனர். பின்னர் இவர்கள் நல்லெண்ண அடிப்படையில் விடுவிக்கப்பட்டனர்.

சனி, 25 டிசம்பர், 2010

தேசிய கீதம் சிங்களத்தில் இசைக்கப்படுவதில் தவறில்லை: டக்ளஸ்

ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் கலந்து கொள்ளும் தேசிய நிகழ்வுகளின் போது தேசிய கீதம் சிங்களத்திலேயே இசைக்கப்படுவது வழக்கம், அதில் தவறிருப்பதாக கூறமுடியாது என்று டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்துகின்றார். அந்த வகையில்  யாழ்ப்பாணத்தில் நடைபெறவிருக்கும் நிகழ்வும் கூட பிரதமர் கலந்து கொள்ளும் ஒரு தேசிய நிகழ்வு என்ற வகையில் சிங்களத்தில் தேசிய கீதம் இசைக்கப்படுவதில் தவறில்லை என்றும் அவர் சுட்டிக் காட்டுகின்றார்.

ஓ! இறைமகனே! யேசு பாலகா!

ஓ! இறைமகனே! யேசு பாலகா! எங்கள் மண்ணில் நடப்பவற்றை ஒரு கணம் பார்! சிலுவையில் அறையப்பட்ட போது உன் திருவுடலில் இருந்து உதிர்ந்த குருதியை விட அதிக குருதியை எங்களுக்காக சொரிவாய். அந்தளவிற்கு துயரம் அதிகமாக இருக்கும். பாதை தெரியாமல், இருளில் வாழ்ந்த மானிடத்தை வழிப் படுத்த அவதரித்த யேசு பாலகா! எங்கள் மண்ணிலும் உன் பிறப்பு நடக்கட்டும்.உன் பிறப்பால் எங்கள் பாவம் ஒழி யட்டும்.நீதி பிறக்கட்டும்.நியாயம் மலரட்டும்.மோசமான அரசியல் ,அதற்காகத் துதிபாடும் நிர்வாகக் கலாசாரங்கள் அத்தனைக்கும் முடிபு கிடைக்கட்டும்.பாலகனே உன் இரண்டாவது பிறப்பு எல்லாம் இழந்த தமிழ் மக்களின் மண்ணில் நடக்கட்டும். ஆமேன்

மானிப்பாயில் யாழ்.மாவட்ட பௌத்த தமிழ் சங்கம்

யாழ்.மாவட்ட பௌத்த தமிழ் சங்கம் என்ற பெயரிலான அமைப்பு ஒன்றினை முன்னெடுப்பதற்கான முனைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக யாழ்ப்பாணத்தை மேற்கோள் காட்டும் தகவல்கள் தெரிவிக்கின்றன.இது குறித்து அந்த அமைப்பிற்கான இணைப்பாளர் எனத் தன்னைக் கூறிக்கொள்ளும் அருள்நேசரத்தினம் ரவிக்குமார் என்பவர் தெரிவித்திருக்கின்றார். யுத்த சூழ்நிலையினால் இந்தச் சங்கத்தின் செயற்பாடுகள் முடங்கிப்போயிருந்தன. தற்போது ஏற்பட்டுள்ள சுமுகமான சூழ்நிலையினைக் கருத்திற்கொண்டு அதனை மீண்டும் யாழ்ப்பாணத்தில் இயக்குவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவுள்ளோம்” என்று தெரிவித்துள்ள குறித்த நபர், சுமார் 100 இற்கு மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்டு ஆரம்பத்தில் இயங்கிய இந்தச் சங்கத்தின் ஊடாக பௌத்த தர்மத்தை போதிக்கும் பாடசாலையொன்றை மானிப்பாயில் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது

புதன், 22 டிசம்பர், 2010

வடலிகள் வானுயரும்........

ஏன் மொட்டைப் பனைமரங்களைப் பார்த்து ஏங்குகிறீர்கள். கீழே நிலத்தைப் பாருங்கள். வடலிகள் வளர்ந்து வருகின்றன. வடலிகள் வானுயரும்’

அடர்ந்த காடுகளுக்குள் மீள்குடியேற்றியுள்ள அரசு.

வன்னிப்பிராந்தியத்தில் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட மக்கள் தொடர்ந்தும் ஏதோ ஒரு வகையில் அசௌகரியங்களுக்கு முகம்கொடுத்து வருவதாகவும் தொடர்ந்தும் இன்னல்களை சந்தித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை அரசு பிரச்சாரம் செய்கின்ற போல அல்லாமல் நிவாரணக்கிராமங்களில் இருந்து அழைத்துவந்து எங்களை அடர்ந்த காடுகளுக்குள் விசப்பாம்புகளுக்கும், யானைகளுக்கும் இரையாக்குவதற்காகவே மீள்குடியேற்றியுள்ளதாக அம்மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில் மாந்தை மேற்குப்பிரதேசச்செயலாளர் பிரிவுக்குட்பட்சன்னார், ஈச்சலவக்கை,பெரியமடு கிராமத்தைச்சேர்ந்த மக்களே அடர்ந்த காட்டுப்பகுதியினுள் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

விக்கிலீக்ஸ் வன்னி வைத்தியர்களின் இரகசியத்தை! போட்டுடைத்தது.

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது யுத்த சூனிய வலயத்தில் பணிபுரிந்த 5 வைத்திய அதிகாரிகள், அழுத்தங்களுடன், பயிற்றுவிக்கப்பட்ட கருத்துகளையே, 2009 ஆம் ஆண்டு ஜூலை மாதம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெரிவித்திருந்ததாக இலங்கைக்கான ஐக்கிய அமெரிக்க உயர்ஸ்தானிகராலயத்தின் அதிகாரி ஜேம்ஸ் மோர், ஐக்கிய அமெரிக்காவிற்கு கூறியுள்ளதாக விக்கிலீக்ஸ்  மற்றுமொரு புதிய தகவலை வெளியிட்டுள்ளது.

கருணாவிடம் உரிமையினை பெறப்போகிறாராம் மாவை!

தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்தினை மிகப் பாரிய அழிவை நோக்கி இட்டுச் சென்ற கருணா என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனை யாழ்ப்பாண எம்.பி மாவை சேனாதிராசா வாயாரப் புகழ்ந்து தள்ளியதுடன் அவரிடம் இருந்து உரிமையினைப் பெற்றுக் கொள்ளப்போவதாகத் தெரிவித்துள்ளமை தமிழ் மக்கள் மத்தியில் வேதனையினைத் தோற்றுவித்துள்ளது. முல்லைத்தீவு மாவட்டம், துணுக்காப் பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் மாவை சேனாதிராசா உரையாற்றும் போது கருணாவை வாயாரப் புகழ்ந்திருக்கின்றார்.

செவ்வாய், 21 டிசம்பர், 2010

விக்கிலீக்ஸ் செய்தி-இலங்கை மறுப்பு

இலங்கை தொடர்பாக விக்கிலீக்ஸ் இணையதளத்தில் வெளியாகியுள்ள தகவல்கள் பொய்யானது என்று இலங்கை அரசு கூறியுள்ளது. கொழும்பிலிருக்கும் அமெரிக்கத் தூதரகத்திலிருந்து வெளியானாதாகக் கூறி விக்கிலீக்ஸ் இணையதளத்தால் பிரசுரிக்கப்பட்டுள்ள ராஜதந்திர தகவல் பறிமாற்றங்களில், இலங்கை அரசு மனித உரிமை மீறல்களை செய்தது, அல்லது அவ்வாறான நடவடிக்கைக்கு துணையாக இருந்தது என்கிற தகவல்களை இலங்கை அரசு மறுத்துள்ளது. இந்தக் குற்றச்சாட்டுகளை திட்டமிட்டு கூறப்படும் பொய்கள் என்று கூறியுள்ள இலங்கை அரசு, இரகசியத் தகவல்கள் சட்டவிரோதமான முறையில் வெளியிடப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளது.

ஆயுததாரி பிள்ளையானால் நேரடியாக பாதிக்கப்பட்டவர்கள் தொடர்புகொள்ளவும்

ஆயுததாரி பிள்ளையானின் டென்மார்க் வருகையை கடந்த வாரமே அறிந்த டென்மார்க் தமிழர் பேரவையின் மானிட விவகார குழுவின் சிறப்புப்பிரிவினர் டென்மார்க் அரசின் அனைத்துலக குற்றவியல் பிரிவினரிடம் தமிழ் மக்கள் மீது ஆயுததாரி பிள்ளையான் புரிந்த மானிடத்திற்கெதிரான குற்றங்களில் சிலவற்றை சேகரித்து டென்மார்க் தமிழர் பேரவையின் வழக்கறிஞர் ஊடாக முறையிட்டுள்ளனர் .ஆயுததாரி பிள்ளையானால் படுகொலை செய்யப்பட்ட அல்லது பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்கள், மனிதவுரிமைசெயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் தொடர்பான மேலதிக விபரங்களையும் ஆதாரங்களையும் உடனடியாக டென்மார்க் தமிழர் பேரவையினர் எதிர்பார்க்கின்றனர். ஆயுததாரியால் நேரடியாக பாதிக்கப்பட்டவர்கள் ஆயுததாரி பிள்ளையான் தொடர்பான வழக்கை விசாரணை செய்து வரும் டென்மார்க் காவல்துறையின் விசேட பிரிவினரிடம் தங்கள் பதிவுகளை நேரடியாக மேற்கொள்ள டென்மார்க் தமிழர் பேரவையினரை தொடர்புகொள்ளவும்.
ஆயுததாரி பிள்ளையான் மற்றும் அவனுடன் டென்மார்க் வந்துள்ள சகாக்கள் தொடர்பான விபரங்களையும் ஆயுததாரிகள் டென்மார்க்கில் தங்கியிருக்கும் விபரங்களையும் உடனடியாக டென்மார்க் தமிழர் பேரவைக்கு தெரிவித்து ஆயுததாரிகள் மீதான நடவடிக்கையை விரைவுபடுத்துமாறு டென்மார்க் வாழ் தமிழ்மக்களைக் கேட்டுக்கொள்கிறோம்.
மேலதிக தொடர்புகளுக்கு :
மின்னஞ்சல்:
forum@dansktamilskforum.dk

ஐ நா குழு விசாரணைகளை நடத்துவதற்காக மட்டுமே இலங்கை செல்ல வேண்டும்: ஹ்யூமன் ரைட்ஸ் வாட்ச்

ஐ நா தலைமைச் செயலர் பான் கீ மூனால் அமைக்கப்பட்டிருக்கும் மூவர் குழு விசாரணைகளை நடத்துவதற்காக மட்டுமே இலங்கை செல்ல வேண்டும் என ஹ்யூமன் ரைட்ஸ் வாட்ச் கூறியுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் தலைமைச் செயலருக்கு இலங்கை விடயங்கள் தொடர்பில் ஆலோசனை கூற அமைக்கப்பட்டிருக்கும் மூவர் குழு, இலங்கை ஜனாதிபதியால் அமைக்கப்பட்டிருக்கும் படிப்பினை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவினரை மட்டுமே சந்திக்கும் நோக்கில் அங்கு சென்றால் அது பயனற்றதாக இருக்கும் என்று மனித உரிமைகள் அமைப்பான ஹ்யூமன் ரைட்ஸ் வாட்ச் தெரிவித்துள்ளது.

யாழ்நகரில் நடைபெறவிருந்த மனித உரிமைகள் மாநாடு EPDP யால் தடுக்கப்பட்டது !

யாழ்.பொது நூலகத்தில் நடத்தப்படவிருந்த மனித உரிமைகள் தொடர்பான மாநாடு கடைசி நேரத்தில் நிறுத்தப்பட்டது குறித்து ஆழ்ந்த கவலையும் விசனமும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் கலந்து கொள்ளவிருந்த பேராளர்கள் இந்த மாநாடு நிறுத்தப்பட்டது தொடர்பாக கடும் அதிருப்தியும் கவலையும் அடைந்துள்ளனர். மனித உரிமைகள் இல்லமும் சிந்தனைக் கூடமும் இணைந்து கடந்த 18,19 ஆம் திகதிகளில் யாழ்.பொது நூலகத்தில் இந்த மாநாட்டை நடத்தவிருந்தன.

போர்க்குற்றங்கள் தொடர்பில் தெளிவான விசாரணை அவசியம்: வில்லியம் ஹேக்

இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் தெளிவான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று பிரித்தானிய வெளிவிவகாரச் செயலாளர் வில்லியம் ஹேக் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். "ஸ்கை நியூஸ்' ஊடகத்துக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறுவலியுறுத்தியுள்ளார்.                                                                                                                                                              

சங்கானையில் தொடரும் துப்பாக்கிமுனை கொள்ளைகள்.

சங்கானைப் பகுதியில் துப்பாக்கி முனையில் நிகழ்த்தப்படும் கொள்ளைச் சம்பவங்கள் தொடர்வதால் அப்பகுதி மக்கள் பெரும் பீதியுடனேயே இரவுப்பொழுதைக் கழிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. திங்கட்கிழமை இரவு சங்கானை, பிரதான வீதி யில் 7 ஆம் கட்டைப் பகுதியில் செல்லத்துரை திருஞானம் என்ப வரது வீட்டில் புகுந்த ஆயுததாரிகள் 15 பவுணுக்கும் மேற்பட்ட நகைகளை அபகரித்துச் சென்றுள்ளனர்.

இந்தியாவின் 50 ஆயிரம் வீட்டுத்திட்டம் பம்மாத்து .பெரும்பாலானவை புனரமைப்புக்குள்ளேயே அடங்கும்.

புதுடில்லி முன்னர் தெரிவித்தது போன்று வடக்கு, கிழக்குப் பகுதிகளில் 50 ஆயிரம் வீடுகள் புதிதாகக் கட்டிக் கொடுக்கப்பட மாட்டா என்று தெரியவந்துள்ளது. இந்தத் திட்டத்துக்கு என 300 மில்லியன் அமெரிக்க டொலர் இந்தியாவால் ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் பெரும்பகுதி சேதமடைந்த வீடுகளைப் புனரமைத்துக் கொடுப்பதற்கே வழங்கப்பட உள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் சுமார் 5,000 வீடுகள் மட்டுமே புதிதாக அமைத்துக் கொடுக்கப்படும் என இலங்கை அரசு அறிவித்துள்ளது. ஏனைய 45,000 வீடுகளும் புனரமைப்பு மட்டுமே செய்யப்பட உள்ளன எனவும் அது தெரிவிக்கிறது.  30 வருடங்களாகப் போரால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மக்களுக்கு உதவும் திட்டத் தின் கீழ் இந்தியா 50,000 வீடுகளைக் கட்டித்தரும் என்று பிரதமர் மன் மோகன்சிங் அறிவித்திருந்தார். இந்தியாவின் இந்தத் திட்டம் நேரடியாக ஈழத் தமிழர்களுக்கு வழங் கப்படும் என்றும் திட்டப் பயனாளிகள் நேரடியாக இந்தியாவாலேயே தெரிவு செய்யப்படுவார்கள் என்றும் இந்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தமிழக முதல்வர் மு.கருணாநிதியிடம் நேரில் உறுதியளித்திருந்தார்.

ஞாயிறு, 19 டிசம்பர், 2010

சிங்களக் குடியேற்றங்களை அமைக்கவே செஞ்சிலுவை வெளியேற்றப்படுகின்றது!!

சிங்களக் குடியேற்றங்களை அமைப்பதற்காகவா இலங்கையின் வட மாகாணத்திலிருந்து சர்வதேச செஞ்சிலுவை சங்க குழு வெளியேற்றப்படுகின்றது என்று பிரித்தானிய நாடாளுமன்ற பொதுச் சபையில் – தொழில் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களால் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளது.

சனி, 18 டிசம்பர், 2010

"போர் குற்றம்"-ஐநா குழுவுக்கு அனுமதி

இலங்கை அரசு, அதன் முன்னைய நிலைப்பாட்டிலிருந்து விலகி, ஐநாவின் தலைமைச் செயலரால் நியமிக்கப்பட்டுள்ள மனித உரிமைக் குழுவை நாட்டுக்குள் அனுமதிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. இறுதிக்கட்டப் போரின்போது இடம்பெற்றதாக கூறப்பட்ட போர்க்கால குற்றங்கள் பற்றி ஆராய்ந்து பான் கிமூனுக்கு ஆலோசனை வழங்குவதற்காக மூவரடங்கிய நிபுணர்குழு நியமிக்கப்பட்டமையை இலங்கை அரசாங்கம் முன்னர் கடுமையாக விமர்சித்து வந்தமை குறிப்பிடத்தக்கது..

வெள்ளி, 17 டிசம்பர், 2010

ஜீவன் கூல் தொடர்பான செய்தி தவறானது! சண்முகலிங்கன் பதில் துணைவேந்தரானார்!

யாழ்.பல்கலைக்கழகத்திற்கு புதிய துணைவேந்தராக பேராசிரியர் ரட்ணஜீவன் கூல் தெரிவானதாக அறிவிப்பு வெளியாகியுள்ளமை பொய்யான தகவல் என்று உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தர் தெரிவு தொடர்பில் கடந்த சிலமாதங்களாக பல்வேறு கருத்துக்கள் வெளியாகியிருந்த நிலையில்  பேராசிரியர் ரட்ணஜீவன் கூல் துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.  இந்நிலையில் குறித்த தகவல் தொடர்பில் யாழ்.பல்கலைக்கழக சமூகத்திடம் தொடர்பு கொண்டு கேட்ட போது அந்தச் செய்தியில் உண்மையில்லை என்று பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவித்தன.

யாழ். பல்கலைக்கழக துணைவேந்தராக பேராசிரியர் கூல்!

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தராக பேராசிரியர் ரட்ணஜீவன் கூல் நியமிக்கப்பட்டுள்ளார்.முன்னர் துணைவேந்தராக இருந்த சண்முகலிங்கத்தின் பதவிக்காலம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து பேராசிரியர் கூலை அந்த பதவிக்கு நியமிக்க பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.ஜனாதிபதியினால் கடந்த புதன்கிழமை பரிந்துரை செய்யப்பட்டதைத் தொடர்ந்து பதவிக்கான அறிவித்தல் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.இந்தநிலையில்  தமது நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது ஏற்கனவே ஒருமுறை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அவர்களால் ரட்ணஜீவன் கூல் யாழ் பல்கலைகழக துணைவேந்தராக நியமிக்கப்பட்ட போதும், அப்போதைய மணவர்களின் எதிர்ப்பு காரணமாக அவர் அப்பதவியை ஏற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்

பெண் போராளிகளை பாலியல் தொழிலுக்கு தள்ளிய துரோகி கருணா-விக்கிலீக்ஸ்

கடந்த 2007ம் ஆண்டு மே மாதம் 17ம் திகதி இடப்பட்டு, அமெரிக்க இராஜாங்க திணைக்களத்துக்கு இலங்கையில் உள்ள தூதரகத்தினால் அனுப்பி வைக்கப்பட்ட இரகசிய ஆவணங்களை நேற்றையதினம் விக்கிலீக்ஸ் வெளியிட்டிருந்தது.

வியாழன், 16 டிசம்பர், 2010

விடுதலைப்புலிகள் இயக்கம் மாற்று தோற்றங்களில் செயற்படுகிறது

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் அழிக்கப்பட்டு விட்டாலும், அது மாற்று தோற்றங்களில் தொடர்ந்தும் செயற்பட்டு வருவதாக வெளிநாட்டு அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.  இது தொடர்பில் இலங்கை அரசாங்கம் அவதானத்துடன் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.  ஆசிய – மத்திய கிழக்கு ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.  தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம், முழு ஆசியாவையும் அச்சுறுத்தும் இயலுமைக் கொண்டது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

லியாம் பொக்ஸின் இலங்கை விஜயம் ஒத்தி வைப்பு

பிரித்தானிய பாதுகாப்பு செயலாளர் லியாம் பொக்க்ஷ், தமது இலங்கைக்கான விஜயத்தை ஒத்தி வைத்தள்ளதாக பி.பி.சி தெரிவித்துள்ளது. இந்த விஜயத்துக்கு பிரித்தானிய வெளியுறவுத்துறை அமைச்சு வெளிப்படுத்திய எதிர்ப்பைத் தொடர்ந்து, அவர் இந்த விஜயத்தை கைவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. எவ்வாறாயினும் லியாம் பொக்ஸின் மத்திய கிழக்கு நாடுகளுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை நீடிக்கும் நோக்கில், இலங்கை தாக, லியாம் பொக்ஸின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

எப்படி இருந்தவர் இப்படியாகிவிட்டார் !!!!!!....

எனக்கான பாதுகாப்பு உத்தரவாதத்தினை வழங்கியிருந்தவர் யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி  மேஜர் ஜெனரல் மகிந்த கத்துருசிங்கவே. நாட்டையும் மக்களையும் காக்கும் தலையாய கடமையில் அவர் நீடூழி வாழ வேண்டும் என இமெல்டா சுகுமார் தெரிவித்திருந்தார்.  புலம்பெயர்ந்த நாடுகளில் தமிழ் இணையங்களை நடத்தி வருகின்றவர்கள் அரசிற்கு விரேதமானவர்கள். அவர்கள் மக்களுக்கும் விரோதமானவர்கள். அவர்கள் பொய்யான வதந்திகளை பரப்பி வருகின்றார்கள். இணையங்களில் அவர்கள் பிழையான பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவதாக யாழ் அரச அதிபர் இமெல்டா சுகுமார் குற்றம் சாட்டியுள்ளார்

வடக்குகிழக்கு மாகாணங்கள் தமிழர்களின் தாயகம் அல்ல: எல்லாவல மேதானந்ததேரர்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் தமிழ் மக்களின் தாயகம் அல்ல. அதற்கான எவ்விதமான சட்டபூர்வ ஆதாரங்களும் இல்லை. அவ்வாறு கூறுவதற்கு உரிமையில்லை. ஆனால் வடக்கு கிழக்கு மாகாணங்கள் தமிழ் மக்களின் தாயக பூமி அல்ல என்பதற்கும் அது சிங்கள மக்களால் ஆளப்பட்ட பிரதேசங்கள் என்பதற்கும் எம்மிடம் அதிகளவான சான்றுகள் உள்ளன. மேலும் வன்னி என்பது தமிழ் சொல் அல்ல. அது சிங்கள சொல்லாகும். அங்கு 1583 விஹாரைகள் இருந்துள்ளன. ஆறாவது பரகும்பா அரசனின் பிரதிநிதியான சபுமல் குமாரயாவே யாழ்ப்பாணத்தின் நல்லூர் கோயிலை கட்டினார் என்று ஜாதிக ஹெல உறுமயவின் பாராளுமன்ற மேதானந்த தேரர் தெரிவித்தார்.

தமிழரைச் செம்மணியிலும் முள்ளி வாய்க்காலிலும் கொன்று குவித்த சரத் பொன்சேகாவுக்குத் தமிழரையே வாக்களிக்கக் கேட்டதை நினைத்துப் பார்த்தால் ஆறறிவு பற்றிப் பேசுவது ???

இன்று தமிழரின் உரிமைப் பிரச்சினையாக ஸ்ரீ லங்காவின் தேசிய கீதத்தை தமிழில் பாடும் உரிமை மறுக்கப் பட்ட விடையம் மிகப் பெரிய அளவில் பேசப் படுகிறது. இதைப் பேசுபவர் தமிழரின்

கடவுள்தான் இனித் தமிழர்களைக் காப்பாற்றவேண்டும் -தந்தை செல்வா

10 வருட செயற்பாட்டுத் திட்டமொன்றின் கீழ் 2011இல் ‘மும்மொழி இலங்கை’ என்ற திட்டத்தினை ஆரம்பிப்பதற்கு நான் முன்மொழிகின்றேன்.இத்திட்டம்.....