புதன், 31 மார்ச், 2010


மண்எண்ணெய், பெற்றோல் மடைக்கதைகளுக்கும் பிரபாகரன் பெயரை பயன்படுத்தும் அரசு

நான் அமைச்சுப் பதவியை எதிர்பார்க்கவில்லை. தாய்நாட்டுக்கு சேவைசெய்ய வேண்டும் என்றே கருதினேன். அதற்கு முதலில் பிரபாகரனை ஒழித்துக் கட்ட வேண்டும். அப்போதே அது சாத்தியமாகும். அதற்காகவே நான் அரசாங்கத்துடன் இணைந்தேன்” என்று நுகர்வோர் விவகார அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். அமைச்சரவையில் சகலரும் அமைதியாக இருந்த போது நான் குரல் கொடுத்தேன், பிரச்சினையை கண்டு முகமூடி அணியவில்லை. பிரச்சினைக்கு முகம்கொடுத்தேன். தேர்தல் காலத்தில் பொருட்களின் விலைகள் குறைந்துள்ளமைதான் எனக்கு பெரும் பிரச்சினையாக இருக்கின்றது என்றும் அவர் சொன்னார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு, ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், “யுத்தத்திற்காக 2008 ஆம் ஆண்டில் 470 பில்லியன் ரூபா செலவிடப்பட்டது. எனினும் பிரபாகரனை ஒழித்துக் கட்டுவதற்கு 2009 ஆம் ஆண்டு 250 மில்லியன் ரூபாவே செலவிடப்பட்டது. அந்தக் காலப்பகுதியில் செலவுகளைக் கட்டுப்படுத்துவதற்காக வரிகள் அதிகரிக்கப்பட்டு பொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டிருந்தன. தற்போது பெற்றோல், டீசல், மண்ணெண்ணெய் உள்ளிட்ட பொருட்களுக்கு முழுமையாகவே வரி அறவிடப்படுவதில்லை. பருப்பு மற்றும் சீனி போன்ற பொருட்களுக்கு அறவிடப்படும் வரி குறைக்கப்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலைகளும் குறைந்துள்ளன. 2009 ஆம் ஆண்டு தமிழ் – சிங்கள புத்தாண்டின் போது பொருட்களின் விலைகள் அதிகரித்திருந்தன. எனினும் இம்முறை குறைவடைந்துள்ளது. இதுவே எனக்குப் பிரச்சினையாக இருக்கின்றது. பொருட்களின் விலைகள் குறையாமல் இருந்திருந்தால் எதிர்க்கட்சிகளுக்குப் பெரும் சந்தோஷமாக இருந்திருக்கும். அரசாங்கத்தைப் பாதுகாப்பதற்கே நடவடிக்கை எடுத்தோமே தவிர அமைச்சுப் பதவியை நான் எதிர்பார்க்கவில்லை. நாட்டுக்குச் சேவையாற்றவேண்டும் என்ற நோக்கிலேயே அரசாங்கத்துடன் இணைந்து கொண்டேன். காஸ் விலை குறைக்கப்பட்டமையினால் நுகர்வோர் மாதத்திற்கு 300 ரூபாவினையும் பெற்றோல் விலை குறைந்தமையினால் 100 லீற்றர் பெற்றோலை பாவிக்கும் ஒருவர் 4200 ரூபாவையும், டீசல் விலை குறைக்கப்பட்டமையினால் 50 லீற்றர் டீசலை பயன்படுத்தும் ஒருவர் 1800 ரூபானையும் மீதப்படுத்த முடிந்துள்ளது” என்றார்.

சிறீலங்காவின் உறவு தொடர்பில் எதிர்காலததில் கவனிக்கவேண்டிய விடயங்கள்: டேவிட் மிலிபாண்ட்

பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் நேற்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் சிறீலங்காவின் உறவுநிலை தொடர்பில் கருத்தில் கொள்ளவேண்டிய மூன்று முக்கிய விடயங்கள் பற்றி தெரிவித்துள்ளார். வன்முறைகளை பற்றி கருத்து தெரிவித்துள்ளார். வன்முறைகள் எந்த நாட்டுக்கும் சமூகத்திற்கும் உதவப்போவதில்லை எனவும் அதனை கட்டுபடுத்தவேண்டும் எனவும் இரண்டாவதாக மனித சமூக பொருளாதாரங்கள் மற்றும் மனித உரிமைகள் தொடர்பில் அனைத்து தரப்பினருக்கும் சமமான தரப்பில் கையாளப்படவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். அவர் குறிப்பாக ஐனாதிபதி தேர்தல்காலத்தில் இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பாகவும் ஊடக சுதந்திரம் தொடர்பாகவும் கவலை வெளியிட்டுள்ளார். ஒரு சமூகத்தில் சிறந்த ஐனநாயகம் தேர்தல்களை நடாத்துவதில் மாதிரமல்லாமல் சுதந்திரமாக தகவல்களை வெளியிடுவதிலும், சுதந்திரமான நீதித்துறையிலும் இருந்துதான் உருவாகிறது என மேலும் தெரிவித்துள்ளார். சிறீலங்காவில் சகல மக்களையும் சமமாக மதித்து சமஉரிமையுடன் வாழக்கூடியவகையில் காப்பில் திருத்தங்களை மேற்கொள்ளவேண்டும் எனவும் இது ஒருசவாலான விடயம் எனவும் சிவில் சமூதாயத்தில் சிறுபான்மை இனமக்களின் உரிமைகளை மதித்து நடப்பது முக்கியமான விடயம் எனவும் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியம் சிறீலங்கா அரசாங்கத்துடன் வர்த்த உறவுகளை மேற்கொள்ள விரும்புவதாகவும் ஆனால் வர்த்தக சலுகைகளை வழங்குவதில் மனித உரிமைகள் தொடர்பான விடயங்கள் பார்க்கப்படுவதால் சிறீலங்காவிற்கு அச்சலுகைகளை வழங்குவதில் இருந்து பலவந்தமாக சலுகைகளை நிறுத்தவேண்டியேற்பட்டது எனவும் தெரிவித்துள்ளார். சிறீலங்கா அரசாங்கம் இவ்விடயங்களில் இந்தக்காலப்பகுதியில் கவனம் செலுத்தும் என தான் நம்புவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

வீடு திரும்பியும் முடியாத துயரம்

சிறிலங்கா அரசு 1.9 லட்சம் இடம்பெயர்ந்த தமிழர்கள் மீள்குடியேறி விட்டதாக அறிவித்து வருகின்றது. ஆனால் பல ஆயிரக்கணக்கான மீள்குடியேறிய மக்களின் பிரச்சினைகள் இன்னும் தீர்ந்த பாடில்லை. ராணுவ பாதுகாப்பு முகாம்களிலிருந்து விடுவிக்கப்பட்டதை மட்டுமே மீள்குடியேறியதாக ஏற்றுக் கொள்ள முடியாது. மார்ச் மாத தொடக்கத்திலிருந்தே மீளக் குடியேறிவரும் இடம்பெயர்ந்த மக்கள் தங்களது வசிப்பிடங்களை அமைப்பதற்கான உதவியாக அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் உயர் ஆணையம் [UNHCR] இதுநாள் வரையும் வழங்கி வந்த உதவியினை இடைநிறுத்தியிருக்கிறது. தமது அமைப்புக்கான நிதி வழங்கல்கள் குறைந்திருப்பதை அடுத்தே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக அந்த அமைப்புக் கூறுகிறது. இந்த மாத தொடக்கத்திலிருந்தே அகதி முகாம்களில் இருப்பவர்களும் மீளக் குடியேறிவரும் இடம்பெயர்ந்த மக்களும் தங்களுக்கு வழங்கப்பட்ட உணவு மற்றும் பிற உதவிகள் நிறுத்தப்பட்டுள்ளது குறித்து தொடர்ந்து புகாரளித்து வருகின்றனர். முகாம்களிலிருந்து விடுவிக்கப்படும் பெண்கள் தனிப்பட்ட சில பிரச்சினைகளை எதிகொள்ள வேண்டிய அவலமும் நீடிக்கிறது. போரினால் கணவனை இழந்த மற்றும் புனர்வாழ்வு மையங்களில் தங்கள் கணவர் காவலில் வைக்கப்பட்டுள்ளதால் பெண்களை தலைமையாகக் கொண்ட குடும்பங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. முக்கியமாக அடிப்படை வசதிகளற்ற பின்தங்கிய பகுதிகளில் குடியேறும் இந்த பெண்கள் மீள்குடியேறிய பகுதிகளில் தங்களுக்கு ஏற்படக்கூடிய சட்ட விரோத செயல்களை நினைத்து அச்சமும் மிகுந்த கவலையும் அடைந்துள்ளதாக ஐ.நா தன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இது குறித்து அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, மீள்குடியேறி வரும் பகுதிகளில் சரியான குளியல் மற்றும் கழிப்பிடங்கள் இல்லாதது இந்த பெண்களுக்கு மேலும் அச்சத்தையும் பாதுகாப்பற்ற நிலையையும் மேலும் அதிகப்படுத்தியுள்ளதுடன் அவர்கள் அந்தரங்கங்களை பாதுகாக்க தனியாகவும் ஆபத்து நிறைந்த நிச்சயமற்ற பகுதிகளுக்கும் செல்ல வேண்டிய அவசியத்திற்குள் தள்ளப்பட்டுள்ளனர். முகாம்களிலேயே பரிசோதனை செய்யப்பட்ட பின்னரும் கூட முகாம்களிலிருந்து விடுவிக்கப்பட்ட போதும் விடுதலை புலிகளுடனான தொடர்பு குறித்த கேள்விகளை தாங்கள் எதிர்நோக்கியதாகவும் அவை ராணுவம் மற்றும் காவல்துறையால் பதிவு செய்யப்பட்டதாகவும் விடுவிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர். புதிதாக மீள்குடியேறி வரும் மக்களுக்கும் அந்த பகுதிகளில் உள்ள காவல் துறை மற்றும் ராணுவத்திற்குமிடையே மொழிப்பிரச்சினையும் உள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மீள்குடியேறிய பகுதிகளில் வாழ்க்கைதரம் மற்றும் அடிப்படை வசதிகள் மிக குறைவாக இருந்த போதிலும் கூட உள்நாட்டிலேயே இடம்பெயர்ந்து அகதிகளாக வாழ்ந்த மக்கள் முகாம்களிலிருந்து தங்கள் வீடுகளுக்கு வந்தது பொதுவாக சற்று திருப்தியளிப்பதாக உள்ளதாக தெரிவிக்கின்றனர்.

எதிரிகளை இனம்கண்டு சிங்களத்தை எதிர்கொள்ளுமா நாடு கடந்த தமிழீழ அரசு...?

நாடு கடந்த தமிழீழ அரசு என்ற பெயரில் புலம்பெயர்ந்த தமிழர்கள் ஆரம்பித்துள்ள புதிய அச்சுறுத்தலை நாம் நன்றாக அறிவோம். அந்த கட்டமைப்பை நாங்கள் நிச்சயம் உடைப்போம்” என்று இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ரோகித்த போகல்லாகம தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் – புலம்பெயர்ந்து வாழும் தமிழ் சமூகமே அரசுக்கு குற்றச்சாட்டுக்களுக்கு உயிர்கொடுத்து சர்வதேச சமூகத்தை முனைப்பாக்குவதில் செயற்பட்டு வருகிறது. புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் இலங்கைக்கு பெரும் அச்சறுத்தலாக இருந்து வருவது எமக்கு நன்றாகவே தெரியும். நாடு கடந்த தமிழீழ அரச என்ற கட்டமைப்பை உருவாக்கி தற்போது இலங்கை அரசுக்கு புதிய அச்சுறுத்தலையும் ஏற்படுத்தியுள்ளார்கள். இந்த கட்டமைப்புக்களை நாம் நிச்சயம் உடைப்போம். அதற்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் புலனாய்வு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.


நடவடிக்கைகளை ஏற்கனவே ஆரம்பித்து விட்ட ஸ்ரீலங்கா புலனாய்வு அதன் அறிகுறியாக கனடா மற்றும் ஜெர்மனியில் அதன் புலனாய்வு நடவடிக்கைகளை மேலும் முடுக்கி விட்டு புலம் பெயர் மக்களிடையே பிளவை ஏற்ப்படுத்தி வருகிறது. மலேசியா இந்தியா போன்ற நாடுகளில் செயற்பட்டதைப் போன்று பிரித்தானியா அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் இதர ஐரோப்பிய நாடுகளில் ஸ்ரீலங்கா புலனாய்வு செயல்பட முடியாத காரணத்தினால் பணத்திற்காகவும் அற்ப சலுகைகளுக்காகவும் விலை போகும் தமிழர்களை ஒன்று சேர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரிய வருகிறது. இதன் ஒரு பகுதியாகவே இலங்கைக்கான ஜெர்மனி நாட்டின் தூதர் ஜெகத் டயஸ் கடந்த வாரம் லண்டன் வந்து இருப்பதாக தகவல் கசிகிறது. எரிவதை பிடுங்கினால் கொதிப்பது தானே அடங்கும் எனும் சூத்திரத்தை பரிசீலித்து பார்க்க நாடு கடந்த அரசாங்கத்திட்க்கு அரணாக இருப்பவர்களையும் தூணாக தாங்கி நிற்பவர்களையும் முதலில் இனம் கண்டு அவர்களை பேரம் பேசி தங்கள் வலையில் வீழ்த்த சதித் திட்டம் நடைபெற்று வருவதாக ஸ்ரீலங்கா அரசாங்க உயர் மட்டத்தில் தகவல்கள் கசிந்துள்ளன. நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினை அச்சம் கொண்டு பார்க்கும் இலங்கையும் இந்தியாவும் முளையிலேயே கிள்ளி எரிய வேண்டும் என சதி திட்டங்களை வகுத்து வருகின்றன. சகல நாடுகளிலும் உள்ள நாடு கடந்த அரசாங்கத்தின் செயல்பாடுகள் குறித்தும், கட்டமைப்பின் இறுக்கம் குறித்தும் தற்பொழுது புலனாய்வு அமைப்புக்கள் தகவல் திரட்டி வருகின்றன. இந்த கட்டமைப்புக்களை முற்றாக அழித்தொழிப்பதற்கு பத்து வருடங்களும் ஆகலாம் என தெரிவித்துள்ளன.


இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஏற்பட்ட தோல்வியாகக் கருதலாம்!

இந்தியா – ஈரான் உறவுகளில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளன. ஈரானுக்கு விஜயம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் எம் கிருஷ்ணாவின் விஜயம் நிறுத்தப்பட்டுள்ளதுடன், இந்திய பிரதமரின் ஈரான் விஜயமும் நிறுத்தப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது. ஈரானின் அணுசக்தித் திட்டத்திற்கு எதிராக இந்திய வாக்களிக்க முற்பட்டுள்ளதே இந்த விரிசல்களுக்கு காரணம் என தெரிவிக்கப்படுகின்ற போதும், ஈரான் பாகிஸ்த்தான், ஆப்கானிஸ்த்தான் ஆகிய நாடுகளுடன் இணைந்து முஸ்லீம் நாடுகளின் துணையுடன் ஆப்கான் பிரச்சனை குறித்த நடவடிக்கையை மேற்கொள்ள திட்டமிட்டதும் விரிசல்களுக்கு காரணம். இந்த உடன்படிக்கைக்கு ஆதரவாக 62 அயல் நாடுகளின் ஆதரவுகளை பெறுவது அவசியமானது. அதனை ஈரான் முன்னெடுத்து வருகின்றது. முஸ்லீம் உலகத்தின் ஆதரவுகளை இந்தியா பெற மேற்கொண்டுவரும் முயற்சிகள் அண்மைக்காலமாக தோல்வியடைந்து வருகின்றன. சவுதி அரேபியாவுக்கு சென்ற இந்திய பிரதமர் மன்மோகன் சிங் தோல்வியுடன் திரும்பியுள்ளார். துருக்கி அரச தலைவரை இந்திய அழைத்துள்ள போதும், அவரும் இந்தியா வருவதை விரும்பவில்லை. துருக்கி பாகிஸ்த்தானை பகைத்துக் கொள்ள விரும்பவில்லை. இந்தியா ஈரானுடன் பேச்சுக்களை மேற்கொள்ள முயன்றபோதும் ஈரான் அதில் அக்கறை கொள்ளவில்லை. இந்திய வெளிவிவகார அமைச்சர் கிருஸ்ணா ஈரானுக்கு விஜயம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்த போதும், அதனை இரு தடவைகள் மாற்றி அமைத்த ஈரான் பின்னர் அதனை கைவிட்டுள்ளது. எதிர்கால விஜயம் தொடர்பிலும் எதனையும் ஈரான் தெரிவிக்கவில்லை. அணுசக்தி திட்டத்தின் மீதான தடை தொடர்பான தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா தனது ஆதரவுகளை தெரிவித்ததை தொடர்ந்து இந்தியாவுக்கான 6 பில்லியன் டொலர் முதலீட்டு திட்டத்தையும் ஈரான் இரத்துச் செய்துள்ளது. இந்த எல்என்ஜி திட்டத்தை மறுஆய்வு செய்யுமாறு இந்தியா விடுத்த கோரிக்கையை ஈரான் நிராகரித்துள்ளது. இதனிடையே இந்தியா இஸ்ரேலுடன் கொண்டுள்ள உறவுகளும், ஈரானை கடும் விசனமடைய வைத்துள்ளது. இந்தியாவின் இரட்டை அணுகுமுறைகள் ஈரான் விடயத்தில் தோல்வி கண்டுள்ளது. பாகிஸ்த்தானின் பிரச்சனையானது புதுடில்லிக்கு சிக்கலானது. 1980 களில் ஈரானும், பாகிஸ்த்தானும் போட்டியான நாடுகள். தமது அனுபவங்களில் இருந்து அவர்கள் தற்போது பாடங்களை கற்றுக்கொண்டுள்ளனர். மன்மோகன் சிங்கின் ஈரான் விஜயம் தொடர்பாக கடந்த ஒரு வருடமாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றபோதும், தற்போது அதில் அக்கறை அற்ற நிலையில் ஈரான் உள்ளது. இவ்வாறு இந்தியாவுக்கும், ஈரானுக்கும் இடையில் பல வேற்றுமைகள் தோற்றம்பெற்று வருகின்றபோதும், ஒரு விடயத்தில் இரு நாடுகளும் ஒரே கொள்கையை கொண்டுள்ளன. அதாவது ஆப்கானிஸ்த்தானில் இருந்து நேட்டோ படையினர் உடனடியாக வெளியேற வேண்டும் என்பதில் தான் இரு நாடுகளும் ஒரே கருத்தை கொண்டுள்ளன. ஆப்கான் பிரச்சனை தொடர்பாக இஸ்ரன்புல் பகுதியில் நடைபெற்ற முத்தரப்பு மாநாட்டுக்கு இந்தியா அழைக்கப்படவில்லை. இந்த மாநாட்டை ஈரான், பாகிஸ்த்தான், ஆப்கானிஸ்த்தான் ஆகிய நாடுகள் ஒழுங்கு செய்திருந்தன. இது தொடர்பில் லண்டனில் நடைபெற்ற மாநாட்டில் இந்தியாவுக்கு இரண்டாம் தர வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. ஈரானில் இருந்து பாகிஸ்த்தான் ஊடாக எண்ணை விநியோக குழாய்களை அமைப்பதற்கு சீனா 2.2 பில்லியன் டொலர்களை முதலீடு செய்துள்ளது. பாகிஸ்த்தானில் இருந்து ஈரானின் தலைநகருக்கு தொடரூந்து பாதைகளை அமைப்பதற்கு துருக்கி பல பில்லியன் டொலர் முதலீட்டை மேற்கொண்டுள்ளது. பாகிஸ்த்தானுடன் தாஜிகிஸ்தான் மற்றும் உபெஸ்கிஸ்த்தான் ஆகிய நாடுகளை இணைக்கும் வீதிகளையும் அமைக்கும் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. முஸ்லீம் உலகத்தின் இந்தியாவுக்கு எதிரான இந்த நடவடிக்கைகள் மேலும் வலுப்பெற்றால் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் தற்காலிக உறுப்புரிமை பெறும் இந்தியாவின் கனவும் கலைந்து விடலாம் என தெரிவிக்கப்படுகின்றது. சொல்வதொன்று செய்வதொன்று என எப்பொழுதுமே இரட்டை நிலையை கையாண்டு வரும் இந்தியா மீது மேற்குலகின் முக்கிய நாடுகள் இந்தியாவின் நிலைப்பாடுகளில் அதிருப்தி கொண்டுள்ளன.இந்தியாவுடன் நட்பு பாராட்டி வந்தாலும் இந்தியா அல்லாத மாற்று சக்தியினால் மேற்குலகின் நலன்கள் பாதுகாக்கப்படுமிடத்து இந்தியாவை மேலும் தனிமைப் படுத்தும் ஒரு நிகழ்வாகவே இந்தியாவின் இரட்டை நிலைப்பாடு அமையலாம். சீனா ரஷ்ய விசயங்களில் ஆர்வம் காட்டும் மகிந்த இந்தியாவினால் மகிந்தவுக்கு இரண்டு முறை விடுக்கப்பட்டிருந்த அழைப்பும் மகிந்தவினால் கிடப்பில் போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மகிந்தவின் இத்தகைய நிலைப்பாடு சீன, பாகிஸ்தான், ரஷ்யவுடன் இணைந்த முஸ்லிம் நாடுகளின் கூட்டு நடவடிக்கையாகவே கருத வாய்ப்புண்டு. இந்தியாவை 26 துண்டுகளாக உடைப்பதன் மூலம் இந்து சமுத்திர பிராந்தியத்தில் அமைதியை உருவாக்க முடியும் என தெரிவித்துவரும் சீனா தற்போது முஸ்லீம் நாடுகளை தனது பக்கம் திருப்பியுள்ளது இந்தியாவின் வெளிவிவகார கொள்கைகளில் ஏற்பட்ட தோல்வியாகவே கருதப்படுகின்றது.

செவ்வாய், 30 மார்ச், 2010

தன்னோடு போர்புரிந்து மரணத்தைத் தழுவிய

தன்னோடு போர்புரிந்து மரணத்தைத் தழுவிய “எல்லாள மன்னனுக்கு நினைவுச் சின்னம்” அமைத்த துட்டகெமுனுவின் பரம்பரையில் வந்ததாக கூறிக் கொள்வோர்…? யாழ்ப்பாணத்தில் தேர்தல் பிரசாரங்கள் உச்சக் கட்டத்தை அடைந்துள்ள நிலையில் இரவோடு இரவாக ஒரு காரியம் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. நல்லூரில் அமைந்திருந்த தியாகி திலீபனின் நினைவுத்தூபி இடித்து அழிக்கப்பட்ட சம்பவமே அது. இது தற்செயலானதொரு சம்பவம் அல்ல. அதேவேளை வர்த்தக நோக்கில் நிகழ்த்தப்பட்ட ஒரு காரியமும் அல்ல. நன்கு திட்டமிடப்பட்டு- ஒழுங்கு செய்யப்பட்ட ஒரு நடவடிக்கை என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. “விடுதலைப் புலிகளின் நினைவுச் சின்னங்களை அரசாங்கம் விட்டு வைக்காது- அவற்றைப் பார்வையிடுவதற்குச் சுற்றுலாப் பயணிகள் குவிகின்றதையும் அரசு விரும்பவில்லை. இந்த நினைவுச் சின்னங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டு சுற்றுலா விடுதிகளாக மாற்றப்படும்” என்று அரசாங்கம் கூறியதன் பின்னணியில் தான் இந்தச் சம்பவம் நடந்தேறியிருக்கிறது. தியாகி திலீபனின் நினைவுத்தூபி உடைக்கப்பட்டதன் பின்னணியில் இருந்தவர்கள் யார் என்பது பற்றிய விசாரணைகள் நடக்கப் போவதில்லை. அப்படி நடந்தால் கூட அதற்குக் காரணம் யார் என்பது கண்டுபிடிக்கப்படப் போவதும் இல்லை. காரணம் இப்போதைய சூழ்நிலை அப்படியானது. திலீபனின் நினைவுத்தூபியை உடைத்த சக்திகளின் நோக்கம் என்ன என்ற கேள்வி இப்போது யாழ்ப்பாண மக்களிடையே மட்டுமன்றி தமிழ் மக்கள் அனைவரிடமும் தோன்ற ஆரம்பித்துள்ளது. போர் முடிவுக்கு வந்த பின்னர் வடக்கில் கட்டியமைக்கப்படும் புதிய புதிய நினைவுச் சின்னங்களும், தமிழரின் வழக்கில் இல்லாத பௌத்த மத சின்னங்களும் பல்வேறு அச்சங்களைத் தோற்றுவித்துள்ளன. தமிழ் மக்கள் மீதான இன அடக்குமுறை வேறொரு வடிவத்தை அடைந்து கொண்டிருப்பதன் சாட்சியாகவே இவை அமைந்துள்ளன. இனக்கலவரங்கள், போர் ஆகியவற்றின் பெயரால் ஒரு காலத்தில் தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டனர். ஆனால் இப்போது அதற்கு வாய்ப்பற்ற சூழல் நிலவுவதால், தமிழரின் வரலாற்று- பாரம்பரிய அடையாளங்களையும் கலாசாரப் பின்னணிகளை விளக்கும் நினைவுச் சின்னங்களையும் அழிக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன. இதன் ஒரு கட்டமாகவே திலீபனின் நினைவுத்தூபி சிதைக்கப்பட்டுள்ளது. இந்திய அரசிடம் நீதி கேட்டு உண்ணா நோன்பிருந்து உயிர் துறந்த திலீபனின் நினைவுத் தூபியை எங்கிருந்தோ வந்தவர்கள் சிதைப்பதை பொறுத்துக் கொண்டிருக்க வேண்டிய அளவுக்கு தமிழரின் நிலை வந்து விட்டது. சுமார் ஒரு வருடத்துக்கு முன்னர் இப்படியானதொரு சம்பவம் நிகழ்ந்திருக்காது. அதற்கான துணிவும் யாரிடமும் இருந்ததில்லை. ஆனால் தமிழரிடம் இருந்த ஆயுதபலம் என்ற கவசம் உடைக்கப்பட்ட பின்னர் தான் இப்படியொரு துணிவு அவர்களுக்கு வந்திருக்கிறது. * புலிகளின் நினைவுச் சின்னங்களை அழிப்பதன் மூலம் அரசாங்கமோ அல்லது பெரும்பான்மை சிங்களச் சமூகமோ சாதிக்கப் போவது எதுவுமில்லை. அது வரலாறு. புலிகளுக்கும் அரசுக்கும் இடையில் நிகழ்ந்த முப்பதாண்டுப் போர் உலக வரலாற்றில் இடம் பெற்றுவிட்ட தொன்று. அந்த வரலாற்றை யாரும் மாற்றவோ அழிக்கவோ முடியாது. அதற்கான வலு இலங்கை அரசிடமோ சிங்கள சமூகத்திடமோ கிடையாது. புலிகளினதோ தமிழரினதோ வரலாற்று அடையாளச் சின்னங்களை சிதைத்து விடுவதன் மூலம் தமிழரின் அரசியல் உரிமைக் கோரிக்கைகளுக்கு முடிவு கட்டி விடலாம் என்று கருதுவது வியப்பானது. ஏனென்றால் இந்த வரலாற்று- நினைவுச் சின்னங்களில் இருந்து தான் உரிமைக் கோரிக்கைகள் பிறப்பெடுக்கப் போவதில்லை. அது தமிழரின் இரத்தத்தில் ஊறிப் போயிருப்பது. தமிழரின் வரலாற்று- நினைவுச் சின்னத்தில் இருந்தா புலிகளின் ஆயுதப்போராட்டம் ஆரம்பித்தது? இல்லையே. புலிகளின் நினைவுச் சின்னங்களை- அடையாளச் சின்னங்களை சிங்கள மக்கள் வியப்புடன் பார்ப்பதை அரசாங்கத்தால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. இதன் பின்னணியில் தான் இந்த நினைவுச் சின்னங்களை அழிக்கும் முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. சர்வதேச ரீதியாக போர் மற்றும் பண்பாட்டு நெறிமுறைகள் என்று ஒன்று உள்ளது. எப்படிப்பட்ட எதிரியாக இருந்தாலும் அவர்களின் கல்லறைகளையோ நினைவுத்தூபிகளையோ அழிக்கக் கூடாது என்பதே அது. இந்த உயர் விழுமியம் இப்போது இலங்கையில் செத்துவிட்டது. தன்னோடு போர்புரிந்து மரணத்தைத் தழுவிய எல்லாள மன்னனுக்கு நினைவுச் சின்னம் அமைத்த துட்டகெமுனுவின் பரம்பரையில் வந்ததாக கூறிக் கொள்வோர் அதற்கு மாறான செயல்களின் ஈடுபடுகின்றனர். புலிகளைப் போன்றே அவர்களின் நினைவுத்தூபிகள் கல்லறைகளையும் சிதைத்து விடுவதன் மூலம்- புலிகளின் கனவு, அவர்களின் நினைவுகளையும் இல்லாது அழித்து விடமுடியும் என்று கருதுகிறது அரசாங்கம். புலிகள் இயக்கம் தமிழ்மக்களுக்கு எதிரானது- அவர்களின் சுதந்திரத்துக்கு தடையாக இருந்தது- தமிழரின் நலனுக்கு விரோதமானது என்ற, அரசின் வாதங்களும் பிரசாரங்களும் உண்மையாக இருக்குமேயானால் இத்தகைய நினைவிடங்களையிட்டு ஒரு போதும் அது கவலைப்பட வேண்டியதில்லை. அதேவேளை இந்த நினைவிடங்கள் அடையாளச் சின்னங்களை அழிப்பதன் மூலம் தமிழரின் மனங்களில் இருந்து புலிகள் பற்றிய நினைவுகளை அழித்து விடலாம் என்று கருதினால் அதுவும்; முடியாது. * ஏனெனில் புலிகள் இயக்கம் கடந்த முப்பதாண்டு காலம் தமிழரினது வாழ்வுடன் பின்னிப் பிணைந்து போயிருந்தது. தீதோ நன்றோ அது தவிர்க்க முடியாதாக அமைந்திருந்தது. அதைவிட புலிகள் என்ற பிரமாண்டத்தைக் காண்பித்தே அரசாங்கம் தனது படைகளின் வீரதீரத்தை எடுத்துக் கூற முடியும். புலிகள் என்பது மாயை- என்று அதன் அடிச்சுவட்டை அழித்து விட்டால் புலிகளை அழித்ததற்கான பெருமை இலங்கைப் படைகளுக்கு கிடைக்கப் போவதில்லை. இதைப் புரிந்து கொள்ளாதவர்கள் தான் திலீபனின் நினைவுத்தூபியைச் சிதைத்துள்ளனர். இது அநாகரீகத்தின் உச்சம் என்றால் மிகையில்லை. இரவோடு இரவாக நடந்து முடிந்த இந்தக் காரியத்தை யாழ்ப்பாண மாநகரசபை பார்த்துக் கொண்டிருந்ததா அல்லது பின்னணியில் இருந்ததா என்பது கேள்வி. ? அப் பிரதேசத்தை நிர்வகிப்பது யாழ்ப்பாண மாநகரசபை தான். அதன் நிர்வாகம் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிம் இருப்பதால் மௌனம் காக்கிறது. ஆனால் தேர்தல் நேரத்தில் நடந்திருக்கின்ற இந்தச் சம்பவம் மிகவும் முக்கியமானது. * யாழ்ப்பாணம் தமிழரின் தொன்மையான பண்பாட்டுப் பூமி. அதற்குள் புகுந்து தமிழரின் உரிமைக்காக- அமைதி வழியில் உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த ஒருவரின் நினைவுத்தூபியை உடைக்கும் சக்தி யார் யாருக்கோ எல்லாம் வந்து விட்டது. இது தமிழ் மக்களை அரவணைத்து அவர்களின் உணர்வுகளை மதித்து நடக்கின்ற போக்கின் வெளிப்பாடாகத் தெரியவில்லை. தமிழருக்கு எதிரான இன ரீதியான காழ்ப்புணர்வுகள் மறைந்து போகவில்லை என்பதன் வெளிப்பாடு இது. அதுவும் யாழ்ப்பாணத்துக்குள்ளேயே இப்படியொரு காரியத்தை செய்யும் இந்த இனக்குரோதம் வளர்க்கப்பட்டு வருகிறது. * இன நல்லிணக்கம், அமைதி, ஒற்றுறை, ஒரே நாடு, ஒரே சட்டம் என்றெல்லாம் அரசாங்கம் கூறிக்கொண்டிருக்கிறது. ஆனால் மறுபுறத்தில் அதற்கு மாறான சம்பவங்களே நடந்து கொண்டிருக்கின்றன. திலீபன் நினைவுத்தூபி உடைப்பே இதற்குச் சாட்சியாக அமைந்துள்ளது.

பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளான ஈழத்தமிழ் பெண் வைத்தியசாலையில் மரணம்

தமிழகத்தில் உள்ள கரூர் பகுதியில் உள்ள ஈழத்தமிழ் மக்கள் தங்கியுள்ள முகாமில் உள்ள பெண்ணை காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்ற தமிழக காவல்துறையினர் அவர் மீது பாலியல் துன்புறுத்தல்களை மேற்கொண்டிருந்தனர். காவல்நிலையத்தை சேர்ந்த 3 காவல்துறை அதிகாரிகள் மேற்கொண்ட இந்த துன்புறுத்தல்களால் மயக்கமடைந்த பெண்ணை அவர்கள் முகாம் பகுதியில் அனாதரவாக கைவிட்டு சென்றிருந்தனர். காவல்துறையினரின் இந்த நடவடிக்கையால் மனமுடைந்த குமார் பத்மதேவி (28) என்ற ஈழத்தமிழ் பெண் தனக்கு தனே தீமூட்டி தற்கொலை செய்ய முயன்றிருந்தார். எனினும் அயலவர்களால் காப்பாற்றப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் நேற்று முன்தினம் (28) வைத்தியசாலையில் மரணமடைந்துள்ளார். தன்னை தனியார் வீடு ஒன்றிற்கு அழைத்துச் சென்ற தமிழக காவல்துறையினர் பலியல் துன்புறுத்தல்களை மேற்கொண்டதாகவும், அதனை வெளியே தெரிவித்தால் தனது கணவனை சுட்டு கொன்றுவிடுவதாகவும் மனித உரிமை செயற்பாட்டாளர்களிடம் பத்மதேவி தெரிவித்தள்ளார். இதனிடையே பத்மதேவியின் உடலை காவல்துறையினர் தகனம் செய்யக்கூடாது என்ற கோரிக்கைகளை மனித உரிமை செயற்பாட்டாளர்கள் விடுத்த போதும் அதனை அவர்கள் பொருட்படுத்தாதது அதிக சந்தேகங்களை தோற்றுவித்துள்ளது. ஈழத்தமிழ் மக்களை தீண்டத்தகாதவர்களாக நடாத்திவரும் கருணாநிதி தலைமையிலான தமிழக அரசு அகதிகளாக சென்றுள்ள அப்பாவி மக்கள் மீது பல தரப்பட்ட வன்முறைகளை அண்மைக்காலமாக மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

ஈபிடிபி யினர் தமது சாவகச்சேரி , வவுனியா அலுவலகங்களிலிருந்து தப்பியோட்டம்.

சாவகச்சேரி மற்றும் வவுனியா பிரதேசத்தில் இரு அப்பாவி இளைஞர்கள் கடந்த தினங்களில் கொல்லப்பட்டிருந்தனர். இக்கொடிய கொலைகளை ஈபிடிபி அமைப்பினரே செய்துள்ளதாக தெரியவந்துள்ள நிலையில் சாவகச்சேரி பிரதேச மக்கள் ஈபிடிபி அலுவலகத்தினுள் நுழைந்து காரியாலயத்தை துவம்சம் செய்துள்ளதாக தென்மாராட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன. மக்கள் அலுவலகத்தினுள் நுழைந்தபோது அக்காரியாலத்திலிருந்த ஈபிடிபி உறுப்பினர்கள் தப்பியோடியுள்ளதாகவும், காரியாலயத்தை மீண்டும் கைப்பற்ற அமைச்சரினால் இராணுவ உதவி நாடப்பட்டபோதும், அங்கு மக்கள் கொதித்த நிலையில் காணப்படுவதை சுட்டிக்காட்டிய வட பாதுகாப்புத் தலைமையகம் உடனடியாக செயலில் இறங்க முடியாது என கைவிரித்துள்ளதாக நம்பந்தகுந்த வட்டாரங்களிலிருந்த தெரியவருகின்றது. அதேநேரம் வவுனியா மக்களும் அங்குள்ள ஈபிடிபி அலுவலத்தை தாக்க முன்னேற்பாடுகள் செய்திருந்ததை அறிந்து காரியாலய பிரதேசத்தில் மேலதிக பொலிஸ் ரோந்து இடம்பெறுவதாகவும், காரியாலத்திலிருந்து ஈபிடிபி யினர் தற்காலிகமாக வெளியேறியுள்ளதாகவும் வவுனியா தகவல்கள் தெரிவிக்கின்றன. மேற்படி இரு சம்பவங்கள் தொடர்பாகவும் பொலிஸ் தரப்பிலிருந்த ஈபிடிபி யினருக்கு வெளிப்படையான உதவிகள் எதுவும் கிடைக்கப்பெறமாட்டாது என நம்பகரமாக தெரியவருகின்றது.

வன்னியில் பெய்த கடும் மழையால் மீளக்குடியமர்த்தப்பட்ட மக்கள் பெரும் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர்

வவுனியா வடக்கு மற்றும் முல்லைத்தீவின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் மீளக்குடியமர்த்தப்ட்ட கிராம மக்கள் நேற்றும், நேற்று முன்னாளும் பெய்த மழை காரணமாக பலத்த நெருக்கடிகளை எதிர்கொண்டதாக வன்னித் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது பற்றி தெரியவருவதாவது:- இலங்கைப் படையினரால் வன்னியில் மேற்கொள்ளப்பட்ட நில ஆக்கிரமிப்பு காரணமாக இடம்பெயர்ந்த மக்கள் நீண்ட காலமாக வவுனியா தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். தற்போது அவர்கள் மீளக் குடியமர்வதாக அறிவிக்கப்பட்டு அவர்களின் பகுதிகளுக்கும் செல்வதற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் வவுனியா வடக்கு மற்றும் முல்லைத்தீவின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட கிராம மக்கள் நேற்றும், நேற்று முன்னாளும் பெய்த மழை காரணமாக பலத்த நெருக்கடிகளை எதிர்கொண்டதாக வன்னித் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பிட்ட பகுதிகளில் மக்கள் மீளக் குடியமர்த்தப்பட்ட போதிலும் அவர்களுக்கு 12 தகரங்களும், 5தீராந்திகளும் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. அவர்களின் வீடுகள் அனைத்தும் முழுமையாக சிதைவடைந்துள்ள நிலையில் வழங்கப்பட்ட தகரங்களைப் பயன்படுத்தி மரங்களுக்குக் கீழே கொட்டில்கள் அமைத்தே வாழ்ந்து வருகின்றனர். குடிநீர் தட்டுப்பாடு பாரிய அளவில் நிலவுகின்றது. பழைய கிணறுகளை இறைப்பதற்கான எந்தவித வசதிகளும் செய்து கொடுக்கப்படவில்லை. மல சல கூடங்கள் இல்லாத நிலையில் மக்கள் இயற்கைக் கடன்களைக் கழிப்பதில் நெருக்கடிகளை எதிர்கொள்கின்றனர். பல இடங்களில் ஆற்று நீரை மக்கள் குடிநீராகப் பயன்படுத்துவதாகவும் தெரியவந்துள்ளது. ஆனால் வன்னியின் சகல பாகங்களிலும் அமைக்கப்பட்டுள்ள மிகச் சிறிய காவலரண் முதல் மிகப் பெரிய படை முகாம் வரை அனைத்தினது கூரைகளுக்கும் ஓடுகள் போடப்பட்டே படையினர் நிலை கொண்டுள்ளனர். வன்னி இடப்பெயர்வுகளின் போது மக்களால் ஓடுகள் கழற்றப்படவில்லை என்பது நோக்கத் தக்கது. இந்த நிலையில் மக்களது எஞ்சிய வீடுகள் ஓடுகள், வீட்டு ஜன்னல்கள் என அனைத்தும் சூறையாடப்பட்டுள்ளன. கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக தகரங்களில் அமைக்கப்பட்டுள்ள கொட்டில்களுக்குள் தண்ணீர் சென்றதாகவும், குழந்தைகள், பெரியோர்கள் தடிமன் உட்பட்ட நோய்த் தாக்கங்களை எதிர்கொண்டுள்ளதாகவும் வன்னித் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த மழையானது கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வன்னியில் மக்கள் எதிர்கொண்ட பாரிய அவலத்தை தமக்கு நினைவூட்டியதாக தற்போது வன்னியில் மீளக் குடிமயர்ந்த இளந் தாய் ஒருவர் தெரிவித்திருக்கின்றார். கடந்த ஏப்ரல் மாதம் நந்திக்கடலுக்குச் சமாந்தரமான களப்பு பகுதியில் கொட்டில்களை அமைத்து வாழ்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒரு நாள் பெய்த கடும் மழையால் அனைத்து வீடுகளுக்குள்ளும் முழங்கால் வரையில் தண்ணீர் புகுந்ததால் இரவுப் பொழுதுகளை குழந்தைகளை கைகளில் ஏந்தியபடி நின்று கொண்டே கழித்தனர். அந்த வேளையில் நடத்தப்பட்ட எறிகணைத் தாக்குதல்களில் பதுங்குகுழிகளுக்குள் செல்ல முடியாமலேயே நூற்றுக்கணக்கானோர் படுகொலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பிரித்தானியா வருத்தம் தெரிவிப்பு

இலங்கையின் போர் நிறுத்த காலத்தின் போது இலங்கைக்கு ஆயுத ஏற்றுமதியை மேற்கொண்டமைக்காக பிரித்தானிய, பொதுச்சபை தமது வருத்தத்தை வெளியிட்டுள்ளது. அதேநேரம், ஆயுத ஏற்றுமதி தொடர்பிலான 9 அனுமதிப்பத்திரங்களை பிரித்தானிய ரத்துச்செய்தமை தொடர்பிலும் பொதுச்சபை தமது வரவேற்பை வெளியிட்டுள்ளது. பொதுச்சபையில் உரையாற்றிய, பிரித்தானியாவின் பொதுநலவாய வெளியுறவுத்துறை அமைச்சர், தமது நாடு இலங்கையின் நிலைமையை கவனமாக ஆராய்ந்து வருவதாக தெரிவித்தார். இதேவேளை தமது கருத்தை வெளியிட்டுள்ள, ஆயுத பரிகரண திணைக்களத்தின் உதவி தலைவர் டேவிட் ஹோல், இலங்கையின் கடந்த கால நடைமுறைகளை கொண்டு எதிர்க்காலத்தில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனக்குறிப்பிட்டார்

திங்கள், 29 மார்ச், 2010

"உங்களின் அரசியல் நலன்களுக்காக விடுதலைப் புலிகளை விலை பேசுவது" நியாயமா........?

ஈபிடிபியின் கைங்கரியம் தொடர்கிறது!!

வவுனியாவில் இளைஞர் ஒருவரை ஓட ஓட அடித்து படுகொலை செய்ததன் மூலம் ஈபிடிபின் வழுமையான முகம் மீண்டும் வெளிப்பட்டுள்ளது. வவுனியா சாந்தசோலையைச் சேர்ந்த தங்கராசா கிருஸ்ணகோபால் என்ற இளைஞரை ஈபிடிபியின் 20 பேர் அடித்துக் கொலை செய்த சம்பவம் தொடர்பில் வவுனியாவில் கொதிப்பு நிலை ஏற்பட்டுள்ளது. தங்கராசா குடும்பத்தினரது ஒரே ஒரு பிள்ளையான கிருஸ்ணகோபால் என்ற இளைஞருக்கு நேற்று பிறந்தாள் நடைபெறவிருந்தது. இந்த நிலையில் அவரது பிறந்தநாள் குறித்து அறிந்த ஈபிடிபியினர் தமக்கு மதுபானம் வாங்கித் தருமாறு வற்புறுத்தி அவரை மதுசாலைக்கு அழைத்திருக்கின்றனர். அங்கு சென்ற இருபது ஈபிடிபியினர் மது அருந்தியிருக்கின்றனர். இதனை அடுத்து மதுப் போத்தலால் கிருஸ்ணகோபாலின் தலையில் தாக்கியிருக்கின்றனர். சம்பவத்தை அடுத்து கிருஸ்ணகோபால் வவுனியாவின் வீதி வழியாக ஓடியிருக்கின்றார். அவரை இருபது ஈபிடிபியினரும் துரத்திச் சென்றுள்ளன். வீதியில் அலறியபடி ஓடிய கிருஸ்ணகோபாலது செருப்பு அறுந்ததில் அவர் நிலை தடுமாறி நிலத்தில் வீழ்ந்துள்ளார்.அவரை சுற்றிவளைத்துத் தாக்கிய ஈபிடிபியினர் அருகில் இருந்த எல்லைக் கலினைத் தூக்கி கிருஸ்ணகோபாலது தலையின் மீது போட்டிருக்கின்றனர். சம்பவம் இடம்பெற்ற பகுதியில் உள்ள வீட்டு உரிமையாளர்கள் அவசர சேவைப் பிரிவிற்கு அறிவித்திருக்கின்றனர். அதன் பின்னர் சம்பவ இடத்திற்குச் சென்ற நோயாளர் காவு வண்டி கிருஸ்ண்கோபாலனை மருத்துவமனைக்கு ஏற்றிச் சென்றுள்ளது. படுகாயம் அடைந்த அவர் தன்னை ஈபிடிபியினரே தாக்கியதாக சிறீலங்கா காவல்த்துறையினரிடம் வாக்குமூலம் வழங்கியிருக்கின்றார். இதேவேளை வவுனியாவில் இளைஞர்கள் ஈபிடிபியினர் மீது தாக்குதல் நடத்தப் போவதாக கொதிப்படைந்து உள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. வவுனியாவில் இளைஞர் ஒருவரை ஓட ஓட அடித்து படுகொலை செய்ததன் மூலம் ஈபிடிபின் வழுமையான முகம் மீண்டும் வெளிப்பட்டுள்ளது. வவுனியா சாந்தசோலையைச் சேர்ந்த தங்கராசா கிருஸ்ணகோபால் என்ற இளைஞரை ஈபிடிபியின் 20 பேர் அடித்துக் கொலை செய்த சம்பவம் தொடர்பில் வவுனியாவில் கொதிப்பு நிலை ஏற்பட்டுள்ளது.

ஞாயிறு, 28 மார்ச், 2010

பிள்ளையான் தலைமையில் தாக்குதல்

மட்டக்களப்பு கொக்குவிலில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பிரசார கூட்டத்தில் கலந்து கொள்ள சென்ற பொதுமக்கள் மீது கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் தலைமையிலான குழு இன்று ( Sunday) பிற்பகல் தாக்குதல் நடத்தியுள்ளது. இச்சம்பவத்தில் பிள்ளையாரடி கொக்குவில் பகுதியைச்சேர்ந்த பொதுமக்கள் சிலர் காயமடைந்துள்ளனர். இது தொடர்பாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைமை வேட்பாளர் பொன்.செல்வராசாவும் வேட்பாளர் பிரசன்னா இந்திரகுமாரும் இன்று பிற்பகல் மட்டக்களப்பு காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். இன்று பிற்பகல் மட்டக்களப்பு கொக்குவில் ஆலமரத்தடியில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பிரசாரக்கூட்டம் இடம்பெற இருந்தது. பிற்பகல் 4மணிக்கு கூட்டம் ஆரம்பமாக இருந்த நிலையில் சுமார் 3மணியளவில் கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் மற்றும் மாகாணசபை உறுப்பினர் பிரசாந்தன் ஆகியோர் தலைமையில் 13 வாகனங்களில் விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்புடன் சென்ற குழுவினர் அங்கு கூடி இருந்த மக்கள் மீதும் கூட்ட ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்த மக்கள் மீதும் கண்மூடித்தனமான முறையில் தாக்குதல் நடத்தியதாக கொக்குவில் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். அங்கு கட்டப்பட்டிருந்த பனர்கள் மற்றும் கொடிகளையும் கிழித்து எறிந்ததுடன் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த மேடையையும் சேதமாக்கியுள்ளனர். பிள்ளையான்குழுவினர் சுமார் ஒரு மணிநேரமாக அந்த இடத்தில் நின்று தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து அக்கூட்டம் ரத்துச்செய்யப்பட்டுள்ளதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பு வேட்பாளர் பிரசன்னா இந்திரகுமார் தெரிவித்தார். நேற்று கொக்குவில் பிள்ளையாரடி சத்துருக்கொண்டான் பகுதிகளுக்கு தேர்தல் பிரசாரங்களுக்கு சென்றவர்களை அங்கிருந்த பொதுமக்கள் ஏசித்துரத்தியதாக தெரியவருகிறது. கடந்த காலங்களில் சத்துருக்கொண்டான் கொக்குவில் பகுதியில் சிறிலங்கா அரசாங்க படைகளே பெருந்தொகையான பொதுமக்களை படுகொலை செய்ததாகவும் அவர்களுடன் சேர்ந்தியங்கும் பிள்ளையான் கருணா குழுக்களுக்கு தாம் வாக்கு வழங்கப்போவதில்லை என அப்பிரதேச மக்கள் ஏற்கனவே தெரிவித்திருந்தனர். இதற்கு பழிவாங்கும் முகமாகவே இன்று பிள்ளையான்குழு தாக்குதலை நடத்தி இருப்பதாகவும் அப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

கிளிநொச்சி: அன்றாட வாழ்க்கை போராட்டமே!



தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைநகராகத் திகழ்ந்த கிளிநொச்சி, சிறிலங்கப் படைகளால் தரைமட்டமாக்கப்பட்ட நிலையில், அங்கு மீள் குடியமர்த்தப்பட்ட மக்களின் வாழ்க்கை அன்றாடப் போராட்டமாக உள்ளதென்று அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. 2008இல் கிளிநொச்சி மாவட்டத்தில் மட்டும் 90,000 மக்கள் வசித்து வந்தனர். 2009ஆம் ஆண்டின் துவக்கத்தில் மக்களெல்லாம் வெளியேறிவிட்ட நிலையில் சிறிலங்க இராணுவம் கிளிநொச்சியைக் கைப்பற்றியது. அங்கிருந்து மக்களனைவரும் புலிகளுடன் வெளியேறி முல்லைத் தீவில் - மக்கள் பாதுகாப்பு வலயத்தில் தஞ்சமடைந்தனர். போருக்குப் பின் வன்னி வதை முகாம்களில் அடைப்பட்டுக்கிடந்த அம்மக்களில் தற்போது 24,000 பேர் அவர்கள் வாழ்ந்த கிளிநொச்சியில் மீண்டும் குடியமர்த்தப்பட்டுள்ளனர். கண்டியையும், யாழ்ப்பாணத்தையும் இணைக்கும் ஏ9 நெடுஞ்சாலையில் அமைந்திருந்தாலும், அங்கு குடியிருக்கும் வீடுகள் என்றோ அல்லது தற்காலிகமாக தங்குவதற்கோ எந்த ஒரு கட்டடமும் முழுமையாக இல்லை. சிறிலங்க படைகளின் தொடர் குண்டு வீச்சால் கடும் தாக்கதலிற்கு உள்ளான நகரம் கிளிநொச்சியாகும்.  மீள் குடியமர்த்தலிற்கு அளிக்கப்பட்ட பொருட்களைக் கொண்டு முழுமையாக வீட்டை கட்டிக்கொள்ள முடியவில்லை என்று அங்கு குடியமர்த்தப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர். அரசு அளித்த பொருட்களைக் கொண்டு தாங்கள் அமைத்துள்ள வீட்டின் மேற்கூரையைக் கூட முழுமையாக கட்டிக்கொள்ள போதுமானதாக இல்லை என்று ஐரின் செய்தி நிறுவன செய்தியாளருக்கு அம்மக்கள் தெரிவித்துள்ளனர். “அரசின் உதவியால் தாங்கள் கட்டிக்கொண்ட தற்காலிக வீட்டில் கூரை கூட உறுப்படியாக அமையவில்லை” என்று குமாரி தேவராசா என்ற பெண்மணி கூறியுள்ளார். குடிநீர், கழிப்பறை, மின்சாரம் என்று எந்த வசதியிமின்றி தங்களின் அன்றாட வாழ்க்கை பெரும் போராட்டமாக இருக்கிறது என்று அவர் கூறியுள்ளார். இந்த நிலையில், வரும் ஜூன் மாதம் முதல் அங்கு தென்மேற்கு பருவமழை பெய்யத் துவங்கும்போது அதனை எவ்வாறு சமாளிக்கப் போகிறோம் என்ற கேள்விக் குறியுடன் அம்மக்கள் உள்ளதாக ஐரின் தெரிவிக்கிறது. அரசு அளித்த தகரத்தையும், கட்டைகளையும் கொண்டு பலர் இந்த தற்காலிக வீடுகளைக் கட்டிக்கொண்டுள்ளனர். மற்றவர்கள் பன்னாட்டுத் தொண்டு நிறுவனங்கள் அளித்த கூடாரங்களில்தான் வாழ்ந்து வருகின்றனர். அரசு அளித்துள்ள சொற்பமான நிவராண உதவியில் வாழ்ந்து வருவதாக கூறியுள்ள நளினி ஜபேசன், உழைத்து சம்பாதித்து வாழ்வதற்கு எந்த வாய்ப்பும் இல்லை என்று கூறியுள்ளார்.

சனி, 27 மார்ச், 2010

இந்திய தூதரகம் திறக்கப்படுவதால் திலீபனின் நினைவுத்தூண் இடிப்பு?

யாழ்ப்பாணத்தில் இந்தியத் தூதரக கிளை அலுவலகம் திறக்கப்படுவதற்கும், தியாகி திலீபனின் நினைவுத்தூண் தகர்க்கப்பட்டதற்கும் தொடர்பு இருப்பதாகவும், இந்தியாவின் தூண்டுதல் காரணமாகவே நினைவுத்தூண் தகர்க்கப்பட்டிருக்கலாம் என்றும் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் 'ஈழமுரசு' பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: யாழ்ப்பாணத்தில் இந்திய தூதரகத்தின் அலுவலகம் ஒன்றை அமைப்பதற்கு இந்திய அரசு முடிவு செய்துள்ளது.

அண்மையில் இலங்கை வந்திருந்த இந்திய வெளியுறவுச் செயலாளர் நிருபாமா ராவ், இதற்கான முன்னேற்பாடுகளை மேற்கொண்டிருந்ததுடன், இது தொடர்பான ஆலோசனைகளையும் கொழும்பிலுள்ள தமது தூதரகத்துடன் மேற்கொண்டிருந்தார். இதனையடுத்து, யாழ்ப்பாணத்தில் இந்தியத் துணைத் தூதரகத்தை திறப்பதற்கு இலங்கை அரசு அனுமதி வழங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தன.இந்தத் துணைத் தூதரகம் யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் மே மாதம் திறந்துவைக்கப்பட உள்ளதாக கொழும்பிலுள்ள இந்தியத் தூரகம் அண்மையில் உறுதிப்படுத்தியிருந்தது.

இந்நிலையில், யாழ்ப்பாணம் நல்லூர் பருத்தித்துறை வீதியில் அமைந்திருந்த தியாகி திலீபனின் நினைவு தூண் தகர்க்கப்பட்டு, அலங்கோலப்படுத்தப்பட்டுள்ளது. போர் இடம்பெற்ற காலங்களிலும் சரி, அதன் பின்னரான சமாதான காலத்திலும் சரி சிறிய சேதங்களுக்கு உள்ளான இந்தத்தூண் முற்றாக தகர்க்கப்பட்டிருக்கவில்லை. ஆனால், போர் முடிவடைந்து விட்டதாக கூறப்பட்டு பத்து மாதங்களை எட்டியுள்ள நிலையில், திலீபனின் நினைவுத்தூபி தகர்க்கப்பட்டுள்ளது. இந்த நினைவுத்தூபித் தகர்ப்பினை சிங்களக் காடையர்களோ அல்லது அவர்களின் இராணுவமோ மேற்கொண்டிருந்தாலும் தகர்ப்பிற்கான பின்னணிக் காரணம் வேறு என கருதப்படுகின்றது. குறிப்பாக இந்தியத் தூதரகம் திறக்கப்படுவதற்கும், இந்த நினைவு தூபி தகர்க்பப்பட்டதற்கும் காரணங்கள் ஒற்றுமையாக இருக்கின்றன என பரவலான குற்றச்சாட்டுக்கள் எழத்தொடங்கியுள்ளன. தியாகி திலீபன் இந்திய இராணுவத்தினர் தமிழர் தாயகத்தை ஆக்கிரமித்திருந்த காலப்பகுதியில், ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து சாகும்வரையான உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டவர். இறுதிவரை தனது உறுதியில் தளராது போராடிய திலீபனை, இந்தியா கவனத்தில் எடுக்கத் தவறியது. திலீபன் சாவைத் தழுவினார்.இதனால், அகிம்சைக்கு பெயர் போன நாடு என தன்னைப் பெருமைப்படுத்திய இந்தியாவிற்கு, பெருத்த அவமானமே மிஞ்சியது. இந்நிலையில், யாழ்ப்பாணத்தில் தூதரகம் அமைத்து தங்கப்போகும் இந்தியாவிற்கு திலீபனின் நினைவுத்தூபி தமது தூதரகத்திற்கு அருகில் அமைந்திருப்பது நெருடலாகவும் ஒரு அவமானச் சின்னமாகவும் இருக்கும் என்ற நிலையிலேயே இந்தத் தகர்ப்பு இடம்பெற்றிருப்பதாக கருதப்படுகின்றது. திலீபனின் அகிம்சைப் போராட்டம் இலங்கை அரசுக்கு எதிரானதல்ல. அது இந்திய அரசின் நடவடிக்கைகளுக்கு எதிரானது.எனவே, இந்த நினைவுத்தூபி தகர்ப்பிற்கும் இந்தியத் தூதரகத் திறப்பிற்கும் ஒற்றுமையான காரணங்கள் இருக்கின்றன என்பது தெளிவாகின்றது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவீரர்களின் எலும்புக்கூடுகளும், வரிப்புலிச் சீருடைகளும் கூட தோண்டியெடுக்கப்பட்டு வீதியில் கொட்டப்படுகின்றன.

அண்மைக்காலமாக தமிழீழ தாயக பிரதேசம் எங்கும் விடுதலைப்புலிகளின் நினைவுச்சின்னங்கள்நிலையில் வன்னியில் நேரில்கண்ட சாட்சி ஒருவரின் வெளிவந்த சில அதிர்ச்சி தரும் ஆனால் தமிழர் மனங்களை கொதித்தெழவைக்கும் சில சம்பவங்களை இங்கே தருகிறோம். மாவீரர் துயிலும் இல்லங்கள் அகழப்பட்டு அவ்வாறான துயிலுமில்லங்கள் அங்கு இருந்தன என்ற அடையாளத்தையே இல்லாமல் சிறிலங்கா அரச இராணுவ இயந்திரங்கள் மும்முரமாக ஈடுபட்டிருக்கின்றனர். நடுகற்களையும் கல்லறைகளையும் இடித்தழிப்பதோடு நின்ற இச்செயற்பாடுகள் இப்போது இன்னும் உக்கிரம்பெற்று துயிலுமில்லங்களின் தடயங்களையே இல்லாதளவுக்கு அழிக்கும் நிலைக்கு முற்றியுள்ளது வன்னிவிளாங்குள மாவீரர் துயிலுமில்லம் முற்றாக அழிக்கப்பட்டு உருத்தெரியாமல் மாற்றப்பட்டு வருகிறது. வன்னிவிளாங்குள வவுனிக்குளப் பாதை சீரமை தேவையான கிரவல் மண் வன்னிவிளாங்குள மாவீரர் துயிலுமில்ல வளவிலிருந்தே அகழ்ந்து எடுக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இராணுவத்தினரின் மேற்பார்வையோடு சிங்களத் தொழிலாளர்களைக் கொண்டு நடத்தப்படும் இவ்வேலைத்திட்டத்தில் வன்னிவிளாங்குள துயிலுமில்லப்பகுதி கனரகப் பொறிகளைக் கொண்டு ஆழத் தோண்டப்படுகிறது. உக்கிப் போகாமல் இருக்கும் வரிப்புலிச் சீருடைகளும் மாவீரர்களின் எலும்புக்கூடுகளும் கூட தோண்டியெடுக்கப்பட்டு ஒருபுறத்தில் போடப்படுகின்றன. மணலோடு மணலாகவும் அவை அள்ளிச்சென்று வீதியில் கொட்டப்படுகின்றன. அங்கே பொறுக்கப்படும் சீருடை எச்சங்களும் எலும்புகளும் பொறுக்கப்பட்டு காட்டுக்குள்ளோ வீதிக் கரைகளிலோ வீசப்படுகின்றன.பொதுமக்கள் நன்றாகப் பார்க்கவேண்டுமென்ற நோக்கத்திலும் துயிலுமில்லத்திலிருந்து வீதிக்கரைக்குக் கொண்டுவரப்பட்டு இவை ஒன்றாகப் போடப்படும் நிகழ்வும் தற்போது இடம்பெறுகிறது. தமிழ்மக்களின் ஆன்மாவைச் சீண்டிப்பார்த்துப் பரவசப்படும் ஒரு நிலையே தற்போது நடந்துகொண்டிருப்பதாக குறிப்பிட்ட அத்தமிழ்மகன் கண்ணீரோடு தெரிவித்தார்.இதேபோன்று முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசுட்டான் கற்சிலைமடுக் கிராமத்தில் 1803-08-31 ஆம் ஆண்டு மன்னன் பண்டாரவன்னியன் ஆங்கிலேய தளபதி கப்டன் றிபேக்குடன் ஏற்பட்ட மோதலில் தோல்வி அடைந்தாதாக குறிப்பிட்டு வன்னிமண்ணின் மாபெரும் தமிழ் மன்னன் பண்டாரவன்னியன் நினைவுச் சின்னமாக இருந்த நினைவுக்கல் அழிக்கப்பட்டிருந்தது. இவற்றின் தொடர்ச்சியாக அண்மையில் முன்னர் யாழ்ப்பாணம் நல்லூர் வீதியில் அமைந்திருந்த தியாகி திலீபன் நினைவுத் தூபி அடித்து உடைத்து நொருக்கப்பட்டுமிருந்தது. அகிம்சை வழியில் நீதி கேட்டு பன்னிரு நாட்கள் நீர்கூட அருந்தாது உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாகியின் நினைவுத் தூபியை உடைப்பதென்பது தமிழர்களின் சுயகௌரவத்தை சீண்டிப்பார்க்கும் நிகழ்வாகவே பார்க்கவேண்டும். இவ்வாறு தமிழர்களின் அடையாளங்களையும் சின்னங்களையும் அழிக்கின்ற நடவடிக்கைகள் தன்னெழுச்சியாக நடத்தப்படுவவை அல்ல அண்மையில் சிறிலங்கா அரச அமைச்சர் ஒருவர் புலிகளின் தமிழர்களின் அடையாளங்களையோ அல்லது சின்னங்களையோ அழித்தொழிக்கவே முடிவுசெய்துள்ளதாக அறிவித்திருந்தமையை நாம் மறந்துவிடக்கூடாது. எனவே இவ்வாறு தமிழர் அடையாளங்களை அழிக்கும் நடவடிக்கைகள் முனைப்பு பெறும் அதேவேளை சிங்கள தேசத்தின் அடையாளங்களை தமிழர் பிரதேசங்களில் திணிக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் நடைபெற்றுவருகின்றது.என்பது குறிப்பிடத்தக்கது.

மக்கள் ஒன்றுதிரண்டு காப்பாற்றினர்

கடந்த புதன்கிழமை வன்னி ஆனைவிழுந்தானில் பாடசாலை மாணவியொருத்தியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முனைந்த படையினரின் முயற்சி அப்பகுதி மக்களால் ஒன்றுபட்டு முறியடிக்கப்பட்டுள்ளது. 24.03.2010 புதன்கிழமை அன்று பாடசாலையிலிருந்து திரும்பிக் கொண்டிருந்த குறித்த 15 வயது மாணவியை ஆனைவிழுந்தான் சந்தியில் காவலரண் அமைத்து நிலைகொண்டிருந்த இராணுவத்தினர் கட்டாயப்படுத்தி காவலரணிற்குள் அழைத்துச் சென்றனர். அதேநேரம் அப்பகுதியால் வந்துகொண்டிருந்த வயோதிபர் ஒருவர் இச்சம்பவத்தைப் பார்த்ததும் அயலிலுள்ள மக்களிடம் விரைந்து சென்று தகவலைச் சொன்னார். அப்பகுதி மக்கள் ஒன்றாகத் திரண்டு உடனடியாகவே அக்காவலரணை முற்றுகையிட்டு உள்நுழைந்து அம்மாணவியை மீட்டனர். உடைகள் கிழிக்கப்பட்ட நிலையில் இராணுவத்தினரிடமிருந்து அம்மாணவி மீட்கப்பட்டார். அதேநேரத்தில் அதற்கு அண்மித்த பகுதியில் ஈ.பி.டி.பி. கட்சியின் பரப்புரைக் கூட்டத்தில் டக்ளஸ் தேவானந்தாவும் பங்குபற்றிக் கொண்டிருந்தார். அங்கு விரைந்த மக்கள் இச்சம்பவம் பற்றி அவரிடம் முறையிட்டபோது, இது தொடர்பாக தான் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக அவர் கூறியிருந்தார். ஆயினும் இதுவரை உருப்படியான எந்த நடவடிக்கையும் இச்சம்பவம் தொடர்பில் எடுக்கப்படவில்லை என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கிளிநொச்சி, ஆனைவிழுந்தானில் நடைபெற்ற இச்சம்பவம் அங்குள்ள மக்களிடம் இராணுவத்தினர் மீதான ஆத்திரத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கடந்த மாதம் மட்டக்களப்பிலும் கிணற்றடியில் குளித்துக்கொண்டிருந்த இராணுவத்தினர், பாடசாலை முடிந்து வீதியால் வீடு திரும்பிக் கொண்டிருந்த மாணவி ஒருவரை கலைத்துச்சென்று பாலியல் வன்புணர்வுக்குட்படுத்திருந்தனர். அதன்பின்னர் நடைபெற்ற நீதிமன்ற விசாரணையின் அடையாள அணிவகுப்பின் போது குறிப்பிட்ட மாணவி குற்றவாளிகளை இனங்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சிறிலங்க-ரஷ்ய-சீன கூட்டணி ஐ.நா சபையின் முயற்சியை உடைக்க இந்தியா மீண்டும் துணைபோகுமா?

சிங்கள அரசு தமது விசுவாசிகள் மூலமாக ஐ. நா சபையின் நடவடிக்கையை முறியடிக்க பல பிரயத்தனங்களை எடுத்திருக்கின்றார்கள். குறிப்பாக மூனின் கடந்த வார அறிவித்தலின் பின்னர் தமக்கு வேண்டப்பட்ட 16 க்கும் மேற்பட்ட சிங்கள பேரினவாதிகளைக் கொண்டு இந்த ஆர்ப்பாட்டத்தை ஐ.நா சபையின் பொது செயலாளர் பான் கீ மூனுக்கு எதிராக அமெரிக்காவில் இலங்கை அரசாங்கத்தினால் அரங்கேற்றப்பட்டது. இதில் வேடிக்கை என்னவென்றால் இந்த ஆர்ப்பாட்டத்தின் பின்னர் இந்த போராட்டத்தில் ஈடுபட்ட 16 பேருக்கும் உணவு பொதி மற்றும் 100 டொலர்கள் பணமும் வழங்கப்பட்டது. பின்னர் இவர்களுக்கு ஐ.நா சபைக்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதி பாலித்த கோகன்ன தமது வாசஸ்தலத்தில் வைத்து விருந்துபசாரம் வழங்கியுள்ளார். இதனிடையே ஈழத்தில் இடம்பெற்ற போர்க் குற்றங்களை ஆராய ஐக்கிய நாடுகள் செயாலாளர் நாயகம் நியமிக்க உத்தேசித்துள்ள நிபுணர்கள் அடங்கிய குழுவுக்கு சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளன. இந்த இரு நாடுகளும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் நிரந்தர அங்கத்துவ நாடுகளாக அங்கம் வகிக்கின்றன. மொத்தம் 15 நாடுகளை உறுப்பினராக கொண்ட பாதுகாப்பு சபையில் ஐந்து நிரந்தர உறுப்பு நாடுகளாகவும், 10 தற்காலிக உறுப்பு நாடுகளாகவும் ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்கு சுழற்சி முறையில் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையினால் தெரிவுசெய்யப்படுவர். இந்த 15 நாடுகளில் ஒன்பது நாடுகள் ஆமோதிக்க வேண்டும். இரு வேறு விடயங்களில் இந்த ஒன்பது வாக்குகளையும் பாவிக்கலாம். சில விடயங்களுக்கு இந்த 15 நாடுகளில் ஏதாவது ஒன்பது நாடுகள் வாக்களிக்கலாம். ஆனால் உலகப் பாதுகாப்பு மற்றும் மிக முக்கிய விடயங்களுக்கு இந்த 15 நாடுகளில் ஒன்பது நாடுகளின் அமோக வெற்றி இருக்க வேண்டும். அதிலும் நிரந்தர உறுப்பு நாடுகளின் குறிப்பாக இந்த ஐந்து நாடுகளின் ஆதரவு தேவை. இல்லை என்றால் பாதுகாப்பு சபை எந்தவொரு நடவடிக்கைகளையும் செயல்படுத்த முடியாது. விசாரணை சபையை நியமிப்பதென்பது ஒரு இலகுவான விடயம் ஆனால் ஒரு இறைமையுள்ள சிறிலங்கா என்ற நாட்டுக்கெதிராக எந்த நடவடிக்கைகளையும் எடுக்க இந்த நிரந்தர உறுப்பு நாடுகளின் ஆதரவு தேவை. ரஷ்யா, சீனாவைத் தவிர பிற மூன்று நிரந்தர உறுப்பு நாடுகளான பிரித்தானியா, பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா கடுமையான அழுத்தங்கள் ஐ.நா சபை மீது திணித்துக் கொண்டிருக்கின்றது என்பது தான் நம்பகரமான செய்தி. இதனை ரஷ்ய பிரதமர் விளடீமிர் பூட்டின் மற்றும் சீனத் தலைவர்கள் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்திருக்கின்றார்கள். பான் கீ மூன் அறிவித்த அந்த குறித்த நிபுணர்கள் குழுவை அமைத்து அதன் அறிக்கையை பாதுகாப்புச் சபையில் சமர்ப்பித்தால், சீனாவும், ரஷ்யாவும் தமது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி முறியடிக்க திட்டமிட்டுள்ளார்கள் என்று செய்திகள் வந்து கொண்டிருக்கின்றது. இதில் வேடிக்கை என்னவென்றால் ரஷ்யா எப்படி சீனாவுடன் தோழமை கொண்டுள்ளதோ அதை விட நல்ல உறவை இந்தியா பல தசாப்தங்களாக ரஷ்யாவுடன் வைத்துள்ளது. ஆக ஈழத் தமிழருக்கு எதிராக நடக்கும் திரை மறைவு ராஜதந்திர களத்தில் இந்தியாவும் சீனா, ரஷ்யா, சிறிலங்கா நாடுகளுடன் கைகோர்த்துள்ளார்களா என்பது தான் இப்பொழுது எழும் கேள்வி. உண்மையிலயே இந்தியா ஈழத் தமிழர் மீது கரிசனை வைத்துள்ளது என்றால் ரஷ்யா சிறிலங்காவிற்கு அளிக்கும் ஆதரவை இந்தியாவினால் நிறுத்த முடியும். அதேவேளை ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தின் இந்த செயற்பாடு குறித்து அணிசேரா நாடுகளின் தலைமைப் பொறுப்பை வகிக்கும் எகிப்து ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக்கும் தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளார். இந்தியா நினைத்தால் சிறிலங்காவை கூண்டில் நிறுத்த முடியும். இந்தியாவின் முதல் எதிரியான சீனாவிடம் தோழமை கொண்டு செயல்படும் சிறிலங்காவை ஏன் இந்தியா இன்னும் ஆதரித்து இந்திய மக்களுடன் அறவிடப்பட்டும் வரிப்பணத்தை சிறிலங்காவிடம் கொடுப்பதென்பது இந்தியா தமிழினத்திற்கே துரோகம் செய்கின்றது. ஏறத்தாழ ஏழு கோடி தமிழ் மக்கள் தமது இறைமையான நாடு இந்தியா என்று இன்றும் போராடும் பொழுது அவர்களின் தொப்புள்கொடி உறவுகள் வேண்டி நிற்கும் நீதியை மேற்குலகம் வாங்கித்தரப் போராடும் போது இந்தியா வெறும் மௌனியாக இருப்பதாக காட்டிக்கொண்டு திரைமறைவில் ரஷ்யாவை தூண்டி சிறிலங்காவிற்கு உதவியாக இருக்கச் செய்வதானது நிச்சயம் இந்தியா மிகவும் கொடிய துரோகத்தை தமிழர்கள் மீது திணிக்கின்றது என்பதை அவர்கள் வெகு விரைவிலேயே உணருவார்கள். ஐ.நா சபையின் நாயகம் அறிவித்திருக்கும் சர்வதேச விசாரணைக் குழு ஈழத் தமிழரின் உண்மையான இழப்பை அம்பலப்படுத்தி அவர்களுக்கு நேர்ந்த மனித அவலத்தை உலக சட்ட வரைமுறையின் கீழ் விசாரணை செய்து குற்றவாளிகளை சர்வதேச கூண்டில் நிறுத்தி தண்டனை பெற்று தர மேற்குலகின் ஆக்க பூர்வமான செயல்பாடுகளுக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் ரஷ்ய-சீனா-சிறிலங்க கூட்டணியைத் தோற்கடித்து நீதியை நிலைநாட்ட புத்தரை மற்றும் காந்தியை உலகத்திற்கு தந்த பாரத தேசம் முன்வருமா அல்லது தமிழரை மீண்டும் புதை குழிக்குள் தள்ளும் நிலை வருமா என்பதைக் காலம் தான் பதில் சொல்ல வேண்டும். நன்றி: infotamil

பான் கீ மூனின் இன்னொரு கண்துடைப்பு நாடகமா?

புலம்பெயர் தமிழர் உலகம் அனைத்தும் அறவழிப் போராட்டத்தை முடக்கிவிட்ட வேளை வேறு வழியின்றி தமிழருக்கு இழைத்த கொடுமையை நேரில் பார்த்து நடவடிக்கை எடுப்பதென்ற ஒரு பாணியில் சிறிலங்கா சென்று வன்னியின் மயான பூமியை பார்வையிட்டார் பான் கீ மூன். இதில் வேடிக்கை என்னவென்றால் சிறிலங்காவின் மூத்த இராணுவ மற்றும் அரச அதிகாரிகள் அவருடன் சென்றார்கள். உலகைத் திசை திருப்ப வவுனியாவில் அடைத்து வைத்தவர்களை சென்று பார்த்து ஆறுதல் கூறினார். இதில் இன்னும் வேடிக்கை என்னவென்றால் சிறிலங்கா அரசினால் சிறப்பாக போடப்பட்ட அகதி முகாமையே பான் கீ மூன் பார்க்க அனுமதிக்கப்பட்டார். நாட்டை விட்டு சென்றவுடன் சிறிலங்காவில் போர் ஓய்ந்து விட்டதாகவும் பயங்கரவாதம் அழிக்கப்பட்டு விட்டதாகவும் ஒரேயொரு பிரச்சனை மட்டும் தான் சிறிலங்காவில் இருப்பதாகவும் அதாவது யுத்தத்தினால் இடம்பெயர்ந்து முகாங்களில் இருக்கும் மக்களை அவர்களின் சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்தி அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்க ஐ.நா சபை நடவடிக்கை எடுக்கும் என்றும் பான் கீ மூன் கூறினார். இது போதாதென்று ஒரு புள்ளி விவரத்தையும் அதாவது 7,000 பொதுமக்கள் மட்டுமே இறுதிப் போரில் பலியானதாகவும் கூறினார். தென் கொரிய நாட்டின் முன்னாள் வெளி விவகாரங்கள் அமைச்சரான பான் கீ மூன் கண்டி சென்று புத்த விகாரைக்கும் சென்று சிங்கள பிக்குக்களின் ஆசீர்வாதங்களைப் பெற்று தமிழரைக் கொன்று குவித்த குற்றவாளிகளுடன் விருந்துண்டு விட்டுத் திரும்பி விட்டார். பின்னர் உலக நாடுகளின் அழுத்தங்களின் காரணமாக வேறு எதுவும் செய்வதறியாது சிறிலங்காவில் மேற்கொள்ளப்பட்ட போர்க் குற்றங்கள் குறித்த விசாரணைக்குழுவை அமைப்பது தொடர்பில் தான் அழுத்தங்களை மேற்கொள்ளப்போவதாக பான் கீ மூன் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நவநீதம் பிள்ளையை அண்மையில் சந்தித்த போது தெரிவித்துள்ளார். சிறிலங்காவில் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமைகள் மீறல்கள் குறித்து அனைத்துலக மனித உரிமைகள் அமைப்புக்கள் தெரிவித்து வரும் குற்றச்சாட்டுக்களைத் தான் புறக்கணிக்கப்போவதில்லை என பான் கீ மூன் நவநீதம் பிள்ளையிடம் தெரிவித்திருந்தார். ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழு சுயாதீனமாக இயங்கிவருகின்ற போதும், சிறிலங்கா அரசு மீது காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என நவநீதம் பிள்ளை பான் கீ மூனுக்கு அழுத்தங்களை மேற்கொண்டு வருகின்றார். இவர் ஒரு ஆப்பிரிக்கக் கண்டம் தந்த தமிழ் பெண்மணி. இவரின் செயல் ஒரு தமிழ் பழமொழியை நினைவூட்டிகின்றது‘தான் ஆடா விட்டாலும் தன் தசை ஆடும்’ என்பதிற்கு இணங்க தன் இனம் ஒரு பேரழிவை சந்திக்கும் போது கொதித்தெழுந்த பெண்மணியே நவநீதம் பிள்ளை. சிறிலங்கா மனித உரிமைகள் தொடர்பில் ஆலோசனை வழங்குவதற்கான நிபுணர்கள் குழு ஒன்றை நியமிக்கவிருப்பதாக பான் கீ மூன் அறிவித்ததைத் தொடர்ந்து கொதித்தெழுந்த சிங்களப் பேரினவாதிகள் ஐக்கிய நாடுகள் சபையை வசைபாடினார்கள். சிறிலங்காவின் ஜனாதிபதி, வெளிவிவகார அமைச்சர் மற்றும் சிங்கள உறுமய போன்ற பேரினவாதிகள் ஐ.நா சபையை வசை பாடினார்கள். போதாததற்கு ஐக்கிய நாடுகளின் சட்ட யாப்பின் சரத்துக்களை அறியாமலேயே கொக்கரித்தார்கள். குறிப்பாக பான் கீ மூனிற்கு விசாரணை குழுவை சிறிலங்கா அனுப்ப எந்த அதிகாரமும் இல்லையெனவும் இவர்கள் நாட்டிற்குள் நுழைந்தால் உடனே கைது செய்து கூண்டில் அடைக்கவேண்டும் என்று தமக்கு தெரிந்த வன்முறைவாதத்தினால் கூறுகின்றார்கள் சிங்கள உறுமைய மற்றும் பல சிங்கள ஆதிக்க சக்திகள். பான் கீ மூனை போற்றிப் பேசிய இந்த சிங்கள வாதிகள் பின்னர் அவருக்கு எதிராகப் பல நடவடிக்கைகளை செய்து கொண்டிருக்கின்றார்கள். முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் கைதுக்குப் பின்னர் வந்த தீர்க்கதரிசனம் தான் மூனின் இந்த மாற்றத்திற்கான காரணம் என்று ஒரு சாரார் கூறுகின்றார்கள். இதனை உறுதிப்படுத்துமுகமாக தான் ஐ.நா சபையின் செயல்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இந்த மாற்றத்தின் பின்னர் தான் சிறிலங்காவிற்கும் ஐ.நா சபைக்கும் இடையிலான உறவுநிலையில் முறுகல்கள் ஏற்படத் தொடங்கியுள்ளன. அண்மையில் பான் கீ மூன் ஜனாதிபதி மகிந்தவுடன் பேசியபோது மனிதஉரிமை மீறல்கள் குறித்து தனக்கு ஆலோசனை வழங்குவதற்கு நிபுணர்குழுவொன்றை அமைக்கப் போவதாகவும் கூறியிருந்தார். இந்த விவகாரத்தை இலங்கை அரசுக்கு உத்தியோகபூர்வமாகத் தெரியப்படுத்துவதற்கு தனது அரசியல் விவகார செயலாளர் லைன் பாஸ்கோவை விரைவில் கொழும்புக்கு அனுப்புவதாகவும் பான் கீ மூன் கூறியிருந்தார். இது மகிந்தாவிற்கு விரக்தியை ஏற்படுத்தியது. அவர் அதற்கு உடனடியாகவே தனது எதிர்ப்பைத் தெரிவித்தார். ஆனால் ஒரு கட்டத்துக்கு மேல் அதைச் செய்ய முடியாத நிலையில் அந்த தொலைபேசி உரையாடல் முடிந்து போனது. அதன்பின்னர் தான் ஆரம்பித்தது ஐ.நா பொதுச்செயலருக்கும் இலங்கை அரசுக்கும் இடையிலான மோதல்கள். நிபுணர்கள் குழு அமைக்கப்படுவது நாட்டின் சுதந்திரத்தையும் இறைமையையும் மீறுகின்ற நடவடிக்கை என்றது இலங்கை அரசு. பான் கீ மூன் ஐ.நா பிரகடனத்தை மீறுவதாகவும் அவர் தன்னிச்சையாகச் செயற்படுவதாகவும் குற்றம்சாட்டியது. இலங்கை விவகாரத்தில் நிபுணர் குழுவொன்றை அமைக்க அவருக்கு அதிகாரம் இல்லை என்றது. அதேவேளை ஐ.நா பொதுச்செயலரின் பேச்சாளர்களும் இடைக்கிடையே குழப்பமான தகவல்களை வெளியிட்டுக் கொண்டிருந்தனர். நிபுணர்கள் குழுவை அதிகாரபூர்வமற்ற வகையில் பான் கீ மூன் தெரிவு செய்து விட்டதாக ஒருமுறை கூறினார் அவரது பேச்சாளர். அதற்குப் பின்னர் அப்படி யாரையும் தெரிவு செய்யவில்லை என்றார். இதுபற்றி ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளையுடன் ஆலோசனை நடத்தியுள்ளதாகத் தகவல் வெளியாகியது. நிபுணர் குழு விவகாரம் குறித்து ஐ.நா செயலரின் பேச்சாளர்கள் முன்னுக்குப்பின் முரணான வகையில் செய்திகளை வெளியிட்டது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது. இதனால் ஐ.நா பொதுச்செயலர் தனது நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்குகிறாரா என்ற கேள்வி எழுந்தது. இந்தநிலையில் கடந்த வாரம் இலங்கை தொடர்பான ஆலோசனை வழங்குவதற்கு நிபுணர்குழுவை அமைக்கும் நிலைப்பாட்டில் மாற்றமில்லை, விரைவில் அது அமைக்கபடும் என்றார் பான் கீ மூன். இந்த நிபுணர் குழு அந்த நாட்டின் இறைமையை மீறும் செயல் அல்ல என்றும் நிபுணர்கள் குழு எந்தவகையிலும் இலங்கையின் உள்விவகாரங்களில் தலையீடு செய்யாது என்றும் கூறியிருந்தார் அவர். இது இலங்கை அரசுக்கு மேலும் எரிச்சலை ஏற்படுத்தியது. இதற்குப் பதிலளித்துள்ள வெளிவிவகார அமைச்சர் றோகித போகொல்லாகம, நிபுணர்குழு அமைக்கும் முடிவைக் கைவிடாவிட்டால் ஐ.நாவுடனான உறவுகள் பாதிக்கப்படும் என்று எச்சரித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையினால் வரையறுக்கப்பட்ட நான்காவது ஜெனீவா சட்ட வரைமுறை 12 ஆகஸ்ட் 1949 இயற்றப்பட்டது. இதன் மூன்றாவது சரத்து தெளிவாக கூறுகின்றது. எந்த வேறுபாடும் இன்றி எந்த குழுவும் தாம் ஆயுதத்தை மௌனிக்கச் செய்தால் அவர்களை மதித்து அவர்களுக்கு எந்தக் கெடுதலும் செய்யக் கூடாதென்று. விடுதலை புலிகள் தமது ஆயுதங்களை மௌனிக்கச் செய்த பின்னரும் சிறிலங்கா இராணுவம் கண்மூடித்தனமான பீரங்கித் தாக்குதலை மேற்கொண்டு பல ஆயிரம் தமிழரை கொன்று குவித்தார்கள். அத்துடன் வெள்ளைக்கொடியுடன் சரணடைய வந்த விடுதலைப் புலிகளின் அரசியல் முக்கியஸ்தர்களான நடேசன் மற்றும் புலித்தேவனை அவர்களின் குடும்பங்களின் முன்னே சுட்டுக் கொன்று இந்த உலக சட்ட சரத்தை மீறினார்கள். இப்படியாக பல உலக சட்ட விதிமுறைகளை மீறி ஒரு விடுதலைப் போராட்டத்தை முள்ளிவாய்க்காலில் முடித்ததாக வெற்றிக் களியாட்டம் ஆடினார்கள் சிங்கள ஆதிக்க சக்திகள். இப்பொழுது எழும் கேள்வி என்னவென்றால் இந்த விசாரணைக் குழு பான் கீ மூனால் நியமிக்கபடுவது ஒரு கண்துடைப்பு செயலா அல்லது இந்த விசாரணை எந்தவொரு இடையூறும் இன்று செயல்பட்டு உண்மையான கொலைகாரர்களை உலக நீதி முன் நிறுத்துவார்களா? நிச்சயம் சிங்கள தேசம் இந்த நடவடிக்கைகளை ஒரு போதும் சம்மதிக்காது. உலக அழுத்தங்களுக்காக சிறிலங்கா இந்தக் குழுவை அனுமதித்து சிறிலங்கா எந்த குற்றமும் செய்யவில்லை என்பதை இந்தக் குழு மூலமாக அறிவித்து காலத்தை இழுத்து தமிழரின் கோபம் தணிய இந்தக் குழு செயல்படுமா என்பது காலம் தான் சொல்ல வேண்டும். அதற்கு மகுடம் வைத்தால் போல் சிங்களவர்கள் தமது போராட்டத்தை ஐக்கிய நாடுகள் சபைக்கு எதிராக நடத்தி ஐக்கிய நாடுகள் சபையை தம் பக்கம் இழுக்க பல வேலைகள் திரைமறைவில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. நன்றி: infotamil

ஐ.நா சபை: ஈழத் தமிழர் விடையத்தில் என்ன செய்யபோகிறது?


ஈழத்தில் கடந்த ஆண்டு இடம்பெற்ற போரின் இறுதிப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட போர்க் குற்றங்கள் தொடர்பில் அனைத்துலக மனித உரிமை அமைப்புக்களின் துணையுடன் விசாரணைகளை மேற்கொள்ள ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூன் திட்டமிட்டுள்ளார் என்ற செய்தி மனிதாபிமானிகளினால் வரவேற்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழர்களோ பான் கீ மூனின் இந்த நடவடிக்கையினால் வெற்றி கொண்டாட முடியாது. காரணம் இந்த விசாரணைக் குழு எவ்வாறு இந்த விசாரணையை செய்து உண்மையான குற்றவாளிகளைக் கூண்டில் ஏற்றும் என்பதைப் பொறுத்துத் தான் தமிழரின் வெற்றி தங்கியுள்ளது. கடந்த காலங்களில் ஐக்கிய நாடுகள் சபை தமிழர்களின் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தியே வந்துள்ளது. அத்துடன் விடுதலைக்காகப் போராடிய விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகளாகவே கருதி அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார்கள். சிங்கள இராணுவக் காடையர்கள் பல ஆயிரம் தமிழர்களை கொன்று குவித்து தமிழினத்திற்கு சொல்லொணாத் துயரை விளைவித்த அரக்கர்களைப் பற்றி எதுவித கண்டனத்தையும் தெரிவிக்காமல் ஐக்கிய நாடுகள் சபை இருந்துள்ளது என்பது அவர்களின் கையாலாகத் தனத்தை உறுதிப்படுத்தியது. ஐரோப்பியர்கள் பல அமைப்புக்களை உருவாக்கி அவைகளை உலக தர அமைப்புக்களாக உருவாக்கி தமது பிரச்சனைகளைத் தீர்ப்பதற்காக கையாண்டார்கள். குறிப்பாக 'லீக் ஒவ் நேசன்ஸ்' என்ற அமைப்பை 42 நாடுகள் பங்களிப்புடன் உருவாக்கினார்கள். இந்த அமைப்பு முதலாம் உலகப் போர் முடிவடைந்தவுடனேயே ஆரம்பித்தார்கள். காரணம் இன்னுமொரு உலகப் போரைத் தவிர்ப்பதற்கு. ஆனால் இந்த அமைப்பினால் இரண்டாம் உலகப் போரை நிறுத்த முடியாமல் போய்விட்டது. அதன் விளைவே ஐக்கிய நாடுகள் சபை என்ற பெயருடன் அதன் முன்னய அமைப்புக்களின் அனுபவத்துடன் பயணிக்க ஆரம்பித்தது. குறிப்பாக உலக ஆதிக்க சக்தியாக அமெரிக்கா உயர்ந்தது. அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியான பிராங்க்ளின் ரூசெவேல்ட்டினால் 1942-ஆம் ஆண்டு பரிந்துரை செய்யப்பட்ட பெயர் தான் ஐக்கிய நாடுகள் சபை. இந்த அமைப்பு 24 அக்டோபர் 1945 சட்டபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்த அமைப்பு சில வல்லரசுகளின் கைப்பொம்மையாகவே இருந்து வந்துள்ளது. இந்த அமைப்பின் ஒரேயொரு பிரிவான சமூக, பொருளாதார அமைப்பு உலகின் பட்டி தொட்டியெல்லாம் சென்று வதைப்படும் மக்களுக்காக உதவி செய்கின்றார்கள். இதனால் ஐக்கிய நாடுகள் என்ற உலக அமைப்பின் பெயருக்கு நற்பெயர் பெற்றுத் தந்துள்ளது. மற்றும்படி ஐக்கிய நாடுகள் சபையினால் எந்த பலனும் உலக மக்களுக்கு இல்லை. குறிப்பாக அமெரிக்கா தலைமையில் சென்ற படைகள் இராக்கை சட்டவிரோதமாக ஆக்கிரமித்த பொழுது ஐ. நா சபை எதுவும் செய்யமுடியாமல் போய்விட்டது. ஆக ஐ.நா சபை அமெரிக்க வல்லாதிக்கத்தின் கைப்பொம்மையாக பாவிக்கப்பட்டது. ஈழத்தில் கொடுமை நடைபெற்று கொண்டிருந்த வேளை ஐ.நா சபை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது.

கிளிநொச்சியில் பாரிய படைமுகாம்களுக்கு மத்தியில் புதிய சிறைச்சாலை ஏன்?

இலங்கை கிளிநொச்சியில் புதிய சிறைச்சாலை அமைய உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. 30 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த சிறைச்சாலை மீண்டும் நிறுவப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் கிளிநொச்சி சிறைச்சாலையை விடுதலைப்புலிகள், முகாமாக பயன்படுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது இலங்கையில் நடந்த போர் காரணமாக சிறைச்சாலை இருந்த இடத்தில் சட்ட திட்டங்களை அமுல் செய்வதில் சிக்கல் நிலைமை காணப்பட்டதாகவும், கிளிநொச்சியில் அமைக்கப்படவுள்ள சிறைச்சாலை இலங்கையின் இருபதாவது விளக்க மறியல் சிறைச்சாலை என்றும் கூறப்படுகிறது. இச்சிறைச்சாலை கேள்வியற்ற கைது நடவடிக்கைகளுக்கும் சித்ரவதை முகாமாகவும் தமிழர்களுக்கெதிராக பயன்படுத்தப் படலாம் என ஒருபுறம் செய்தி கசிந்து வருகிறது. இது தமிழர்களால் மேலும் ஒரு போராட்டம் முன்நெடுக்கப்ப்படுமிடத்து போராட்டத்தை வெளியில் தெரியாதவாறு அடக்கி ஒடுக்க இலங்கை அரசிற்கு இலகுவாக அமையும் என்றே தமிழர்களால் நோக்கப்படுகிறது.

வெள்ளி, 26 மார்ச், 2010

தமிழே நீ நலமா...

நீ இறந்த காலம் நான் நிகழ் காலம் நாம் எதிர் காலம் தமிழே நீ நலமா... அமுதே என்றுன்னை அழைத்தோமே- இன்று அழுதே உன்னைப் பார்க்கின்றோம் உன்னைப் போற்றிட்ட காலம் இறந்தது தாயே மண்ணைப் புகழ்ந்திட்ட ஞாலம் மறைந்தது அம்மா விண்ணைச் சென்றவர் விரைந்திட்ட போதும் பொன்னைப் போன்றவர் கனாவை நிகழ்த்திட அருள் செய்... தமிழே நீ நலமா... தவித்தவருக்கு தானம் செய்திட்ட தாயல்லவா நீ- இன்று அவித்த ஒரு வேளைச் சோற்றிற்கேங்கும் சேயினைக் கண்டாயோ என்னைப் பாருங்கள் ஒரு செயலற்ற பாவி நான் கண்ணைக் கொண்டந்த காட்சி பார்த்தும் திண்ணை விட்டகல திராணியும் இல்லை மண்ணை மீட்டெடுக்க என்னுள் மறவனுமில்லை தமிழே நீ நலமா... சென்றவிடமெல்லாம் வீரவாகை சூட்டிய மறவனன்றோ உன் மகன் - இன்று வென்றுவிட வீரமின்றி பகைவன் எச்சிச் சோற்றினை உண்ணும் துயர நிலையை பார்த்தாயோ நான் என்று நாவிருக்கும்வரை கூறாமல் முடியாது என்று முடித்துவிடக் கூடாமல் என்னுள்ளே ஒளிந்துள்ள மறவனைக் கேட்டுக்கொண்டேன்... நாங்கள் நாங்கள் என்று நாண்கள் எடுத்தால் தானோ வாங்கள் வாங்களென வாழ்த்தும் இவ் வையகம்? தமிழே நீ நலமா... நீ இறந்த காலம் நான் நிகழ் காலம் ஆனால்... பல 'நான்'கள் (நாண்கள்) சேர்ந்திடின்.... நாம் தான் இவ் வையகத்தின் எதிர் காலம்

துணை ஆளுநராக தமிழ்மகன்.

அமெரிக்க இலினொய்ஸ் மாநிலத் துணை ஆளுநராக தமிழர் ஒருவர் நியமிக்கப்படவுள்ளார். ஜனாதிபதி பரக் ஒபாமா இதற்கான தீர்மானித்தை எடுத்துள்ளார்.அமெரிக்காவில் வாழும் தமிழரான ராஜா கிருஷ்ணமூர்த்தி என்பவரையே ஜனாதிபதி ஒபாமா துணை ஆளுனராக நியமிக்கத் தீர்மானித்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. இவர் ஒபாமாவின் அரசாங்கத்தில் கொள்கை திட்டமிடல் ஆலோசகராக கடமையாற்றியவராவார்.இலினொய்ஸ் மாநிலத்துக்கான ஆளுநர், துணை ஆளுநர் பதவிகளுக்கான தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் இடம்பெறவுள்ளது. துணை ஆளுநராக ராஜா கிருஷ்ணமூர்த்தி தெரிவு செய்யப்பட்டால், அமெரிக்க மாநிலமொன்றில் இந்தப் பதவியை வகிக்கும் முதலாவது தமிழர் என்ற பெருமை இவரைச் சார்ந்திருக்கும். ஜனாதிபதி ஒபாமாவின் நீண்டகால நண்பர் ராஜா கிருஷ்ணமூர்த்தி. கடந்த காலங்களில், ஒபாமாவின் தேர்தல் பிரசாரங்களில் ராஜா கிருஷ்ணமூர்த்தி முக்கிய பங்கெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

நாடு கடந்த தமிழீழ அரசின் பிரித்தானிய கிளையின் தேர்தலுக்கான கருத்தரங்கு எங்கே எப்போது?

துப்பாக்கிப் பிரயோகங்களின் எண்ணிக்கையில் உயர்வு

தென் ஆபிரிக்க காவல்துறையினரால் மக்கள் மீது நடத்தப்படும் துப்பாக்கிப் பிரயோகத் தாக்குதல்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. முன்னைய வருடத்துடன் ஒப்பீடு செய்யும் போது கடந்த வருடத்தில் தென் ஆபிரிக்க காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிப் பிரயோகங்களின் எண்ணிக்கை 25 வீதத்தினால் உயர்வடைந்துள்ளது. 2008ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 2009ம் ஆண்டு மார்ச் மாதம் வரையில் தென் ஆபிரிக்க காவல்துறையினர் நடத்திய தாக்குதல்களில் 556 பேர் கொல்லப்பட்டுள்ளனர். குற்றவியல் சட்டத் திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பில் நடைபெற்ற விவாதமொன்றின் போது இந்தத் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தும் குற்றவாளிகளை சுட்டுக் கொல்வதில் தவறில்லை என ஆளும் கட்சி அமைச்சர் ஒருவர் கருத்து வெளியிட்டுள்ளார். உலகில் அதிகளவு குற்றச் செயல்கள் இடம்பெறும் நாடுகளின் வரிசையில் தென் ஆபிரிக்காவும் முக்கிய இடம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது. எவ்வாறெனினும், மக்களை படுகொலை செய்வதற்கான அனுமதிப் பத்திரமாக காவல்துறையினர் சட்டத்தை பயன்படுத்தக் கூடாது என தென் ஆபிரிக்க ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

கோப்பாயில் கிணற்றிற்குள் பெண்ணின் சடலம்

கோப்பாய் தெற்கில் கிணறு ஒன்றிலிருந்து நேற்று மாலை பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இச்சடலம், கோப்பாய் தெற்கு கும்பப்பிள்ளை என்னும் இடத்தைச் சேர்ந்த கணேசபிள்ளை தவமலர் என்பவருடையது என என அடையாளம் காணப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர். ஆனால் இதுவரை 20 மேற்பட்ட சடலங்கள் குடா நாட்டில் கிணற்றிற்குள் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன. இதுவரை இதற்கான காரணங்களை பொலிசாஅர் கண்டு பிடிக்கவில்லை ‘ விசாரணைகள் தொடர்கின்றன` என்றே கூறப்படுகின்றன.

ஏங்கித்தவிப்போரை ஏமாற்றுகிறார்...........

வவுனியாவில் உள்ள சர்வதேச பாடசாலையின் அதிபரான கீதாஞ்சலி நகுலேஸ்வரன் தற்போது நடைபெற உள்ள பாராளுமன்ற பொதுத்தேர்தலில் அரச சார்பில் போட்டியிடுகிறார் இவர் இலங்கை இராணுவத்தின் ஆட்காட்டி என்பதை அனைவரும் அறிந்ததே. கடந்த வருடம் இவரின் கணவர் நகுலேஸ்வரன் இராணுவத்தால் கடத்தப்பட்டு காணாமல் போய்விட்டார் இத்தேர்தலில் கீதாஞ்சலி போட்டியிட கணவர் முற்றிலும் மறுத்ததினால் இருவரிடையேயும் பெருந்தகராறு ஏற்ப்பட்டது. இதனால் பதவி மோகம் பிடித்த கீதாஞ்சலி இராணுவத்திடையே உள்ள தனது செல்வாக்கை பயன் படுத்தி நகுலேஸ்வரனை கடத்தியுள்ளார் என்று பலராலும் பேசப்படுகிறது. எமது தமிழ்ச் சமூகப் பெண்கள் கீகாஞ்சலிக்கு ஏற்ப்பட்ட சம்பவம் நிகழ்ந்திருந்தால் உலகில் உள்ள எல்லாத் தெய்வங்களையும் வேண்டி கோயில் கோயிலாக அலைந்து திரிவது வழமை ஆனால் கீதாஞ்சலி முற்றிலும் மாறாக கணவர் காணாமல் போன அடுத்த வாரமே அரைகுறை ஆடைகளுடன் கொழும்புக்கு அடிக்கடி சுற்றுலா சென்று வருவதாக பாடசாலை ஆசிரியர்கள் வருத்தம் தெருவிக்கின்றனர். தற்போது கீதாஞ்சலி புதுக்கதை ஒன்றை சொல்லி வருகிறார் அதாவது காணாமல் போன தனது கணவனை கண்டுபிடிக்கவே தான் தேர்தலில் போட்டியிடுவதாகவும் வவுனியாவில் ஏற்கனவே காணாமல் போயுள்ளோரின் உறவுகளை அளைத்து விபரம் சேகரிப்பதோடு தனக்கு வாக்களிக்கும்படியும் கேட்டுள்ளார். இப்படி கபட நாடகம் ஆடி அப்பாவி மக்களை ஏமாற்றி தனது அரசியல் தேவைக்கு பயன்படுத்துகிறார் இப்படியாக மக்களை ஏமாற்றும் துரோகிகளை புலிகள் என்றைக்குமே விட்டுவைத்ததில்லை தற்காலிகமாகவே புலிகளின் அனைத்து நடவடிக்கைகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்பதை கீதாஞ்சலி போன்றோர் மறந்துபோய் விட்டனர். மீண்டும் புலிகளின் நடவடிக்கைகள் ஆரம்பிக்கும் போது கீதாஞ்சலியின் பெயரும் அவர்களின் பட்டியலில் உள்ளதா? ஏன்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

வியாழன், 25 மார்ச், 2010

தலைவர்கள் மேடைக்கு மட்டும்தானா?

யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்திருந்த தியாகி திலீபனின் நினைவுத்தூபி அடித்து உடைக்கப்பட்டதை கண்டித்து தமிழ் தேசிய கூட்டமைப்பை சேர்ந்த பொ.ஐங்கரநேசனும் தமிழ் தேசிய மக்கள் முன்னனியை சேர்ந்த கஜேந்திரனும் தமிழர் விடுதலைக்கூட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரியும் அறிக்கை வெளியிட்டுள்ளனர். ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவராக சொல்லப்படும் இரா. சம்பந்தன் அவர்கள் இதுவரை இதுபற்றி எந்த கருத்தினையும் தெரிவிக்கவில்லை. தமிழீழ தேசிய தலைவரின் தந்தை சாவடைந்தபோதும் ஏனைய தலைவர்கள் அஞ்சலி அறிக்கை வெளியிட்டபோதும் சம்பந்தன் அவர்கள் அதுபற்றி அறிக்கை எதனையும் வெளியிடாததுடன் தலைவரின் தந்தையாரின் இறுதி அஞ்சலி நிகழ்வு அன்று திட்டமிட்டபடி தனது கட்சி கூட்டத்தை நடத்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தியாகி திலீபனின் நினைவுதூபி உடைக்கப்பட்டதை கண்டித்து பொ.ஐங்கரநேசன் வெளியிட்ட கண்டன அறிக்கை வருமாறு: யாழ்ப்பாணம் பருத்தித்துறை வீதியில் அமைந்துள்ள தியாகி திலீபனின் நினைவுத் தூபி நள்ளிரவு வேளையில் இனந்தெரியாத நபர்கள் சிலரினால் அடித்து இடித்து நிர்மூலமாக்கப்பட்டுள்ளது. தற்போது பொதுத்தேர்தல் நெருங்கிக்கொண்டு இருக்கும் சந்தர்ப்பத்தில் இந்த இடிப்புச் சம்பவத்தில் ஈடுபட்டவர்களில் அரசியல் நலன்களுக்கு திலீபனின் சிலை பெருந்தடையாக அல்லது அச்சுறுத்தலாக விளங்கி இருக்க வேண்டும். இதனைத் தாங்க முடியாத சக்திகளே இந்தப் பண்பாட்டுக் கொலையில் ஈடுபட்டுள்ளார்கள். ஆனால் நினைவுத்தூபிகளை அழிப்பதன் மூலம் மக்கள் மனங்களில் இருந்து ஒருபோதும் நினைவுகளை அகற்றிவிட முடியாது. திலீபனின் தூபி உடைப்புச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள், திலீபன் போன்ற போராளிகளின் இலட்சியத்தையும் போராட்ட மார்க்கத்தையும் புரிந்து கொள்ள மறுப்பவர்கள் ஆவர். இவர்கள் திலீபன் போன்றவர்களுக்கும் சமூகத்தில் இடமுண்டு என்பதை ஏற்கத் துணிச்சல் அற்ற பேர்வழிகள் ஆவர். இத்தகைய சக்திகளின் அதிகார ஆதிக்கம் அரசியல் கலாச்சாரமாகவே பரிணாமம் பெற்றுவிட்டது. இவர்களே அநாகரிக காலகட்டத்தை நோக்கிச் சமூகத்தையும் வழிநடத்தப் போட்டி போடுகிறார்கள். போராட்ட காலங்களில் கூட வரலாற்றுச் சிறப்பு மிக்க அமைவிடங்கள், சின்னங்கள், கோயில்கள், பாடசாலைகள் மற்றும் வைத்திய சாலைகள் யாவும் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நாகரிக மரபு உண்டு. இதைவிட போர்க்காலங்களில் சரணாகதி அடைந்தவர்கள், அப்பாவிப் பொதுமக்கள் மற்றும் உயிர்நீத்தவர்கள் யாவரையும் கௌரவமாக நடத்தவேண்டிய பொறுப்பும் உண்டு. இதுவரையான உலக அனுபவம் இதைத்தான் வெளிப்படுத்துகின்றது. இலங்கையில் எல்லாளனுக்கும் துட்டகைமுனுவுக்கும் இடையிலான மோதலில் கூட எல்லாளன் இறந்தபோது துட்டகைமுனு எல்லாளனுக்கு உரிய மரியாதை கொடுத்து உடலை அடக்கம் செய்ததாகவே எமக்கு வரலாறு கற்பிக்கின்றது. ஆனால், இந்த மரபு பின்னர் வந்த பௌத்த சிங்கள தலைமைகளிடம் அறவே இல்லாமல் போய்விட்டது. யுத்தக் கைதிகள் பரிமாற்றம், யுத்த தர்மம் போன்ற உயர் விழுமியங்கள் பற்றிக் குறித்துப் பேசக்கூடிய சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். யுத்த காலத்தில் கைப்பற்றப்பட்ட அல்லது சூறையாடப்பட்ட பண்பாட்டுச் சொத்துக்களை திருப்பிக் கொடுத்து விடவேண்டுமென்ற கடமைப்பாடு உண்டென கருத்துரைக்கும் போக்கும் எழுச்சியடைந்து வருகின்றது. இந்நிலையில் திலீபனின் நினைவுத்தூபி உடைப்பு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. அநாகரிக சக்திகள் சமூகத்தின் அனைத்து மட்டங்களிலும் வேகம் கொண்டு வருகின்றார்கள் என்பதையே இது அடையாளம் காட்டி வருகின்றது. போர் வெறுப்புத்தன்மையைக் கடைப்பிடிக்க வேண்டிய சக்திகள் தம்மை போரியல் வெளியுள்ளவர்களாகவே அடையாளம் காட்டுகின்றனர். இவை சமாதானம், அகிம்சை சுட்டும் வாழ் புல நெறிகளுக்கு எதிரானவை. திலீபன் போன்ற குறியீடுகள் உணர்த்திய அரசியல் மார்க்க முறைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட வேண்டிய காலத்தில், திலீபன் எதை எதிர்த்து நின்றானோ அந்த அரசியல் வழிமூலம் திலீபனின் தூபி உடைப்பு நிகழ்த்தப்பட்ட பண்பாட்டுக் கொலை கண்டிக்கத்தக்கது மட்டுமல்ல, தொடரக்கூடாத வழிமுறையும் கூட. தமிழர் விடுதலை கூட்டணி தலைவர் ஆனந்தசங்கரியின் அறிக்கை ஒரு காலத்தில் ஆயுதப்போராட்டத்தின் மீது நம்பிக்கை வைத்துத் தீவிரமாக போராடிய திலீபன் தமிழ் மக்களின் கனவும் இலட்சியமும் நிறைவேறவேண்டுமானால் அதற்கு சரியான வழி தந்தை செல்வா அமரர் அமிர் போன்றோர் உருவாக்கிய தமிழர் விடுதலை கூட்டணியின் அகிம்சை ரீதியிலான போராட்டமே. இந்தப் போராட்டமே சரியென உணர்ந்து சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து உயிரிழந்தவர் திலீபன். இறுதியில் ஓர் அகிம்சைவாதியாக உயிர்நீத்தார் அவர். அவ்வாறான இலட்சியத்தை கொண்டவர்களின் நினைவு தூபியை உடைப்பதென்பது காட்டுமிராண்டித்தனமான செயல் மட்டுமல்ல மன்னிக்கமுடியாத வரலாற்று துரோகமும் கூட. ஒருவரின் நினைவாக அமைக்கப்படும் நினைவு தூபிகளும் சரி சின்னங்களும் சரி உடைக்கப்படுவதென்பது மன்னிக்கமுடியாத குற்றமாகும். இவ்வாறான மிலேச்சத்தனமான செயலை தமிழர் விடுதலை கூட்டணி வன்மையாக கண்டிக்கிறது. தமிழ் தேசிய மக்கள் முன்னனி வெளியிட்ட அறிக்கை தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக காந்திய வழியிலே போராடிய ஈழத்துக் காந்தியே அண்ணன் திலீபன். மருத்துவ பீடத்திற்குத் தெரிவு செய்யப்பட்டு மருத்துவ மாணவனாக இருக்கும்பொழுது தமிழ் மக்களின் அவல வாழ்வு கண்டு அவர்களது நிம்மதியான வாழ்வுக்காக அகிம்சை வழியில் போராடிய உத்தம புருசர். நீராகாரம் அருந்தாமல் மக்களுக்கு விடிவு கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு தனது உடம்பை உருக்கி உரமாக்கியவர். இலங்கைத்தீவில் உள்ள அனைத்துத் தமிழ் மக்களின் நெஞ்சங்களிலும் தெய்வமாகப் பூசிக்கப்படும் உயரிய மனிதர். வணக்கத்திற்குரிய வகையிலே தமிழ் மக்களால் அவரது நினைவாக நிர்மாணிக்கப்பட்டிருந்த நினைவாலயம் சிங்கள பௌத்த பேரினவாத அரசின் கோரக் கரங்களால் சிதைக்கப்பட்ட செய்தி அறிந்து ஒவ்வொரு தமிழனது நெஞ்சமும் அக்கினிப் பிளம்பாகியது. மரணித்த மாவீரனது கல்லறையை காட்டுமிராண்டித்தனமாகச் சிதைத்த செயலை தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணி வன்மையாகக் கண்டிக்கின்றது. தியாகதீபம் திலீபனின் நினைவுச் சுவடுகளை அழிப்பதன் மூலம் தமிழ் மக்களது உயிரோடும் உணர்வோடும் இரண்டறக் கலந்துள்ள உரிமை வேட்கையைச் சிதைத்துவிட முடியுமென சிங்கள பௌத்த பேரினவாத அரசு பகல் கனவு காண்கின்றது. சிங்கள அரசு கற்பனை செய்வது போன்று தமிழ் மக்களது உரிமை வேட்கை ஒரு போதும் தணியப்போவதில்லை என்பதனை இச்சந்தர்ப்பத்தில் தெரிவிக்க விரும்புகின்றோம்.

கோரிக்கையை கண்டு சீற்றமுறும் தென்னிலங்கை!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாப னத்தைக் கண்டு அலறியடித்து சிங்கள மக்களை உசுப்பேத்தி விடும் வகையில் சீறிப் பாய்ந்து கருத்து வெளியிட்டிருக்கின் றது அரசுத் தரப்பு. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள தேர்தல் விஞ்ஞாபனம், தேசிய ஒற்றுமையைக் கட்டியெழுப்புவதற்குப் பலம் சேர்க்காது என்றும், தேசிய ஒற்றுமைக்கு அது ஆபத்தை ஏற்படுத்தக்கூடியது என்றும் அரசு கூறியிருக்கின்றது. அரசின் சார்பில் அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் டலஸ் அழகப்பெரும இந்தக் கருத்தை முன்வைத்திருக்கின்றார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத் தில் உள்ள "தமிழர்களின் தனித்துவம்', "தமிழர் தாயகம்', "தமிழர்களின் சுயநிர்ணய உரிமை' போன்ற சொற்கள் தென் னிலங்கைக்கு வேம்பாய்க் கசக்கின்றன. சிறுபான்மையினருக்கு எதிரான பேரினவாத மேலாதிக்கச் சிந்தனையைத் தென்னிலங்கை பௌத்த சிங்கள மக்களின் மனதில் பெரும் கருத்தியலாக வளர்த்து, அந்த இனவாத அரசியல் மூலம் அதிகாரத்தைக் கைப்பற்றும் குறுகிய மனப் போக்கில் காலம் காலமாகச் செயற்பட்டு வந்த தென்னிலங்கை அரசியல் தலைமைகளுக்கு அந்தப் பேரினவாதப் பூதத்திடமி ருந்து தம்மை விடுவித்துக் கொள்ள முடியாத இயலாத நிலைமை நீடிப்பதை நாம் நேரடியாக அவதானிக்கக்கூடிய தாக இருக்கின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் தொடர் பாகக் கொழும்பு அரசுத் தரப்புக் காட்டிநிற்கும் பிரதிபலிப்புக் கூட அதனையே நமக்கு வெளிப்படுத்தியுள்ளது. நீதியைப் பெறுவதற்கான நியாயத்தை எட்டுவதற்கான கௌரவ வாழ்வையும் அடிப்படை உரிமைகளையும், தமது நீண்டகால அபிலாஷைகளையும் ஈட்டுவதற்கான ஈழத் தமிழர்களின் ஆயுத வழிப் போராட்டத்தை அடக்கி, ஒடுக்கி, சிதைத்து அழிப்பதில் கொழும்பு அரசின் இராணுவ மேலா திக்கம் வெற்றிகண்டிருக்கின்றது. போரில் துவண்டுபோய் நிற்கின்றது தமிழர் தரப்பு தமிழர் தாயகம். இந்தச் சமயத்தில் கூட போர் வெற்றி மமதையில் கொழும்பு அரசு மார்தட்டுகின்றதே தவிர, ஈழத் தமிழர்களுக்கு நியாயம் செய்யும் நீதி வழங்கும் தீர்வை முன்வைப்பதற்கான தாராண் மையை அது வெளிப்படுத்திக் காட்ட விரும்புவதாக இல்லை. "எல்லோரும் ஏற்றுக்கொள்ளத்தக்க தீர்வு' குறித்துத்தான் தென்னிலங்கை அரசும், சில சர்வதேச தரப்புகளும் பேசுகின்றனவே தவிர, சிறுபான்மையினரான தமிழர்களின் நீதி,நியாயமான அபிலாஷைகளை நிறைவுசெய்யும் தீர்வு குறித்து அத்தரப்புகள் பிரஸ்தாபிக்கின்றவையாக இல்லை. இதுவே மனவருத்தத்துக்குரிய விவகாரமாகும். ஜனநாயகத் தேர்தல் ஒன்றிலே வாக்கெடுப்பிலே பெரும் பான்மையினரின் முடிவே இறுதித் தீர்ப்பாக அமையும். அது தான் ஜனநாயக விழுமியமாகும். ஜனநாயகக் கோட்பாட்டின் பண்பியல்பு அதுதான். ஆனால், அதுவே ஜனநாயகப் பெரு மதிப்பின் பின்னடைவும் கூட இழுக்கும் கூட என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. ஒரு தேர்தலில், பெரும்பான்மையினரின் முடிவே இறுதித் தீர்ப்பு என்கின்ற கோட்பாட்டை ஜனநாயக முறைமைக்கான அடிப் படையாக நாம் ஏற்க முடியும். அது எண்ணிக்கை சார்ந்த விடயம். ஆனால், ஒரு பிணக்கிற்கான ஒரு பிரச்சினைக்கான ஒரு சண்டை, சச்சரவுக்கான நீதி முறையான தீர்ப்பு என்பது அந்தச் சச்சரவில் சம்பந்தப்பட்ட தரப்புகளின் எண்ணிக்கை யில் தீர்க்கப்படுவதல்ல. நீதி, நியாயத்தின் அடிப்படையி லேயே அது தீர்க்கப்பட வேண்டும். இலங்கைத் தமிழர்களின் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதுவும் கூட அத்தகைய நீதி, நியாயமான முறையிலேயே அமைய வேண்டும். இலங்கைத் தீவில் தமிழர்களை விட ஐந்து, ஆறு மடங்கு அதிகமான எண்ணிக்கையில் சிங்களவர்கள் வாழக்கூடும். அதற்காக, இனப்பிரச்சினைக்கான தீர்வு என்பது ஜனநாயகக் கோட்பாட்டின் அடிப்படையிலானது என்று கூறிக் கொண்டு ஆட் களின் விருப்பினதும் அவர்களின் எண்ணிக்கையின் அடிப் படையிலும் அமையக்கூடாது. தீர்வு என்பது எண்ணிக்கைக் கணியங்களுக்கு அப்பால் நீதியானதாக, பாதிக்கப்பட்ட தரப்புகளுக்கு நியாயம் செய்வ தாக அமையவேண்டும். இன்னும் விளக்கமாகக் கூறுவதானால் இலங்கைத் தீவின் பெரும்பான்மையினரான பௌத்த, சிங்களவர், இத்தீவின் சிறுபான்மையினரான தமிழ்ப் பேசும் மக்களுக்கு விட்டுக் கொடுத்து, வீசி எறியக்கூடிய "பிச்சை' தான் தீர்வு என்று கருதக்கூடாது. ஜனநாயக நெறிமுறைகளின்படி எண்ணிக்கையில் அதிகமானவர்களான பெரும்பான்மையினர், இந்த இனப்பிரச் சினையில் சம்பந்தப்பட்ட எண்ணிக்கையில் குறைந்தவர்க ளான தமிழ்ப் பேசும் மக்களுக்கு விட்டுக் கொடுக்க வழங்க இரந்து அளிக்க இணங்குவதுதான் தீர்வாக அமைய முடியும் என்ற கருத்தியல் சிந்தனை முற்றிலும் தவறாகும். பாரம்பரியமாக வரலாற்று ரீதியாக காலங்காலமாக தங்களிடம் இருந்து வந்து, இப்போது பேரினத் தரப்பினால் பல வந்தமாக ஆக்கிரமிக்கப்பட்டு, பறிக்கப்பட்டிருக்கும் தமது உரி மைகளையே தமிழர்கள் கோருகின்றார்கள். அதுவே இனப்பிரச் சினைக்கான அடிப்படை. தரப்புகளின் எண்ணிக்கையின் அடிப்படையிலான விருப்பே தீர்வு என்று கருதாமல், நீதி,நியாயத்தின் அடிப்படை யில் அமைவதே தீர்வு என்ற கோட்பாட்டின் கீழ் இப்பிரச் சினைக்கு ஒரு முடிவு தமிழர்களுக்கு வழங்கப்பட வேண்டும். நீதி, நியாயத்தை ஒருபுறம் தள்ளிவைத்துவிட்டு, பௌத்த சிங்களப் பெரும்பான்மையினர், சிறுபான்மையினரான தமிழர்களுக்கு விட்டுக்கொடுத்து இரக்கக்கூடிய பிச்சையே தீர்வாக முடியும் என்ற கருத்தியலில் பேரினவாத அரசுகள் இருப்பதால்தான் தமிழர் தரப்பின் உரிமைக்கான குரல் அந்த அரசுகளுக்கு இப்படி வேம்பாய்க் கசக்கின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் தொடர்பில் அரசு வெளிப்படுத்தி நிற்கும் கருத்துகளும் கூட அத் தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறப்பட்டவை தேசிய ஒற்று மைக்கு ஆபத்தானவை என்ற அரசுத் தரப்பின் எச்சரிக்கை கூட இத்தகைய மேலாதிக்க மனப்போக்கில் அமைந்தவைதான்.

பரிந்துரைக்கின்றது சிறிலங்கா !

பலஸ்தீனத்திலும் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியிருக்கும் பலஸ்தீனத்தின் ஏனைய பகுதிகளிலும் மனித உரிமை நிலைமைகள் மோசமடைந்து செல்வதையடுத்து சிறிலங்கா தனது ஆழ்ந்த கவலையினை வெளியிட்டிருக்கிறது. அமைதி முயற்சிகளைத் தொடர்ந்தும் முன்னோக்கி நகர்த்துவதற்கும் மோசமடைந்திருக்கும் கள நிலைமையினை மீண்டும் சீர்செய்வதற்கும் ஏற்ப தொடர்புடைய தரப்புக்கள் சுய கட்டுப்பாட்டுடனும் பொறுப்புணர்வோடும் நடந்த கொள்ள வேண்டும் என சிறிலங்கா அழைப்பு விடுத்திருக்கிறது. அனைவரும் விரும்புவதைப்போல, இரண்டு தேசங்கள் என்ற யதார்த்தத்தினை ஏற்றுக்கொண்டு, அதன் அடிப்படையில் கொண்டுவரப்படும் தீர்வு யோசனை தான் பலஸ்தீனப் பிரச்சினைக்கு நீடித்து நிலைக்கக் கூடிய தீர்வினைத் தரும் என சிறிலங்காக உறுதியாக நம்புகிறது. இவ்வாறான ஒரு தீர்வு, பலஸ்தீன நிலப்பரப்பில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பினை முடிவுக்குக் கொண்டுவருவதோடு - சுதந்திரமன, இறையாண்மை மிக்க, நீடித்து நிலைக்கக் கூடிய பலஸ்தீனத் தாயகம் அமைவதற்கும் வழி செய்யும். தவிர, பலஸ்தீன மக்கள் தமக்குரிய உரிமைகளை மீளவும் பெற்றுக்கொள்வார்கள். பலஸ்தீன நிலப்பரப்பினை இஸ்ரேலியர்கள் ஆக்கிரமித்து நிற்பது தான் அங்கு மனித உரிமை மீறல்கள் கட்டுக்கடங்காமல் தொடர்வதற்கான அடிப்படைக் காரணம் என சிறிலங்கா வாதிடுகிறது. ஆதலினால், ஆயிரக்கணக்கான பலஸ்தீனியர்கள் தங்களது சொந்த இடங்களிலிருந்து வெளியேற்றப்படுவதற்கு வழிவகுத்த இஸ்ரேலியர்களின் சட்ட விரோதமான நில ஆக்கிரமிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும். இவை - தவிர காசா பகுதியில் பலஸ்தீன மக்கள் மீது ஏற்படுத்தப்பட்டிருக்கும் தடைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படவேண்டும். இவ்வாறு சிறிலங்கா தூதரகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கான நிபுணர்கள் குழு அமைக்கும் நடவடிக்கைகள் தொடங்கியது: பான் கி மூன்

இலங்கையில் போர் குற்றம் தொடர்பில் ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கீ மூனுக்கு ஆலோசனை வழங்கும் நிபுணர்கள் குழுவை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக, பான் கீ மூனின் தலைமையதிகாரி விஜய் நம்பியார் மற்றும் இலங்கைக்கான ஐ. நா.வின் நிரந்தர பிரதிநிதி பாலித கோஹன ஆகியோர் செயற்பட்டு வருவதாக பான் கீ மூன் தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த, பான் கீ மூன், குறித்த நிபுணர்கள் குழுவுக்கான ஆட்களை தேர்வுசெய்யும் நடவடிக்கைகள் நடைபெறுவதாக குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், தமது அரசியல்துறை செயலாளர் லின் பாஸ்கோ, இந்த விடயம் தொடர்பாக இலங்கைக்கு சென்று அந்த நாட்டு அரசாங்கத்துடன் பேச்சு நடத்துவார் என பான் கீ மூன் தெரிவித்துள்ளார். அதேவேளை, குறித்த நிபுணர்கள் குழு அமைக்கப்படுவது இலங்கையின் இறையாண்மையை பாதிக்கும் என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே பான் கீ மூனின் நிபுணர்கள் குழுவில் இடம்பெற ஜப்பான் மறுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்காவுக்கு பின்லேடன் புதிய மிரட்டல்

அமெரிக்க இரட்டைக் கோபுர தாக்குதல் குற்றவாளி காலித் முகமத்திற்கு மரணதண்டனையை நிறைவேற்றினால், தங்களது பிடியில் உள்ள அமெரிக்கப் படையினரை கொல்வோம் என்று அல் - காய்தா இயக்கத்தின் தலைவரான ஒஸாமா பின் லேடன் புதிய மிரட்டலை விடுத்துள்ளார். பின்லேடன் உயிருடன் உள்ளாரா இல்லையா என்பதே உறுதியாக தெரியாத நிலையில் அவரது பெயரில் அமெரிக்காவுக்கு மேற்கண்ட புதிய மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பின்லேடன் பேசியதாக கூறப்படும் ஒலி நாடாவை அல் - ஜஸீரா தொலைக்காட்சி, தனது செய்தியில் ஒளிபரப்பி உள்ளது. அதில், " அமெரிக்க இரட்டைக் கோபுர தாக்குதல் மூளையாக செயல்பட்டதாக குற்றத்தை ஒப்புக்கொண்ட காலித் முகமத் மற்றும் வேறு யாருக்காவது மரணதண்டனையை நிறைவேற்ற முடிவெடுக்கும் தினத்தில், நாங்கள் யாரையெல்லாம் பிடித்து வைத்துள்ளோமோ(அமெரிக்கப் படையினர்) அவர்களை நாங்களும் கொல்ல முடிவெடிக்கப்பட்டுவிடும்" என்று கூறியுள்ளார். மேலும், அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தனது முந்தைய அதிபரின் ( ஜார்ஜ் புஷ்) பாதையிலேயே செல்வதாக கூறியுள்ள பின்லேடன், " எங்களுக்கு எதிராக அநீதி இழைத்த வெள்ளை மாளிகை இருக்கும் அரசியல்வாதிகள் இன்னும் அதை செய்து கொண்டுள்ளனர்.குறிப்பாக பாலஸ்தீனத்தை ஆக்கிரமித்து வரும் இஸ்ரேலுக்கு தொடர்ந்து ஆதரவளித்து வருகின்றனர். 9/11 ல் அமெரிக்காவின் சொந்த நகரத்திலேயே அல்லாவின் உதவியால் தாக்குதல் நடத்தும்வரை, தங்களால் ஒடுக்கப்பட்டவர்களின் கோபத்திற்கு உள்ளாகாதவாறு, தாங்கள் பாதுகாப்பாக இருப்பதாகவே அமெரிக்கர்கள் நினைத்திருந்தனர்" என்றும் அதில் தெரிவித்துள்ளார்.

புதன், 24 மார்ச், 2010

தலைவன் வழிகாட்டுதலில் தொடர்ந்து போராட வேண்டியதன் அவசியம்.

ஈழ விடுதலைப்பயனத்தில் மீண்டும் உறுதியான, தெளிவான முடிவினை அறுதியிட்டு பதிவுசெய்து அந்நிய ஆக்கிரமிப்பிற்குள் சிறைவைக்கப் பட்டிருந்தாலும் தலைவன் வழிநிற்கும் புலிகள் சேனை என தலைநிமிர்ந்து நிற்கின்றனர் எம்தேச மக்கள். சிறிலங்காவின் ஆறாவது சனாதிபதியை தெரிவுசெய்வதற்கான தேர்தல்களமானது எமக்கான உண்மையான உறுதியான ஒரே தலைமை தமிழீழ விடுதலைப்புலிகள்தான் என்பதனை ஏற்கமறுத்தவர்களையும் மறுப்பவர்களையும் தலைகுனியவைத்து தமிழ்தேசம் தலைநிமிர வைத்துள்ளது. இவ்வாறான தீர்ப்பினை நிச்சயமாக எதிர்வரும் பொதுத் தேர்தலிலும் எமது மக்கள் பதிவு செய்து தேசத்தை விலைபேச முற்பட்டவர்களை நிராகரிப்பது உறுதி. இந்த நூற்றாண்டு கண்டிராத வரலாற்றுத் துயரத்தை முள்ளிவாய்காலில் அரங்கேற்றி எமது சொந்தங்களை வேட்டையாடி எமது தேசத்தை சுடுகாடாக்கி எஞ்சியவர்களை ஒருவேளை சோற்றிற்கும் ஒருவாய் தண்ணீருக்கும் கையேந்துபவர்களாக முற்கம்பி வதைமுகாமில் சிறைவைத்தும் தமிழீழ மீட்புப் பணியில் தலைவன் வழிநின்று சமராடிய வீரப் புதல்வர்களை கொடும்சிறை வைத்து வரும் வேளை அதற்கு காரணகர்த்தா யார் என்பதனை மக்கள் தீர்ப்பின் மூலம் உறுதிசெய்து கொள்வதற்காக கடந்த சனவரி 26ம் நாள் சிறிலங்காவே அமர்களப்பட்டு ஓய்ந்து போய் தற்போது தலைகீழ் மாற்றம் கண்டுள்ளது. தமிழின அழிப்பினையும் தமிழீழ விடுதலைப்புலிகளது பலத்தினை முற்றுமுழுதாக அழித்தொழித்து விட்டதனையும் மூலதனமாகக் கொண்டு மகிந்த ராசபக்ச இக்களத்தில் முதன்மையானவராக குதித்த வேளை யாவற்றிலும் உடனிருந்த முன்னால் இராணுவத்தளபதியும் கட்டளை அதிகாரியுமான சரத்பொன்சேகா எதிர்பாராத வகையில் எதிர்க்களம் புகுந்து சிங்களம் இரண்டுபட்டு நிற்பதை உறுதிப்படுத்தியிருந்தார். இவ்வேளை அடையாளம் இழந்துபோயிருந்தவர்களை ஒருங்கினைத்து தமிழர் தரப்பின் அரசியல் தலைமையாக்கி அவர்களுக்கு தேர்தல் மூலம் அங்கீகாரம் கிடைக்க தமிழீழ தேசியத் தலைமை வாய்ப்பளித்திருந்தமையால் இம்முறை அதிக முக்கியத்துவம் வாய்ந்தவர்களாக விளங்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தடுமாற்றமான போக்கினை வெளிப்படுத்தி மீண்டு;ம் ஒருதடவை தமிழர்களால் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். கடந்த 2005இல் சனாதிபதித் தேர்தலை புறக்கணிப்பது என தமிழீழ தேசியத்தலைமை எடுத்த முடிவு தவறானது எனவும் அதனாலேயே இன்றைய அழிவு, அவல நிலை ஏற்பட்டது என்றும் அவற்றை நிவர்த்தி செய்யப்போவதாகவும் தனியாவர்த்தனம் செய்ய முற்பட்ட சம்பந்தனின் முகத்தில் கரியை அள்ளிப் பூசியுள்ளனர் தமிழ் மக்கள். எதிர்பார்ப்புக்கள், நம்பிக்கைகள், எதிர்வு கூறல்களைக்கடந்து சிறிலங்காவின் ஆறாவது சனாதிபதியாக சிங்கள மக்கள் தமக்கான தலைவராக மகிந்த ராசபக்சவினை தேர்ந்தெருத்திருந்தனர். மகிந்தவின் இந்த வெற்றிக்கு பல காரணங்கள் இருந்தாலும் சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்த நிலைப்பாடும் ஒரு காரணமாக அமைந்துவிட்டது. கடந்த 2005 இல் நடைபெற்ற சனாதிபதித் தேர்தலில் 48இலட்சத்து87ஆயிரத்து162 வாக்குகளையும், போர் வெற்றியையும் தமிழின அழிப்பினையும் முக்கிய சாதனையாக காண்பித்து சமகாலத்தில் நடாத்தப்பட்ட மாகாணசபைத் தேர்தல்களில் சுமார் 50இலட்சம் வாக்குகளையும் பெற்றிருந்த மகிந்த ராசபக்ச இம்முறை 60இலட்சத்து15ஆயிரத்து934 வாக்குள் பெற்றதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் நிலைப்பாடே காரணமாக அமைந்திருந்தது என்றால் மிகையாகாது. சிங்கள மக்கள் தெளிவானவர்கள். தமக்கான தலைவனாக மகிந்த ராசபக்சவை தேர்ந்தெடுத்திருந்தமையால் பொன்சேகா ஒன்றும் குறைந்தவர் அல்ல. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு பொன்சேகாவை ஆதரிப்பது என்று முடிவானபின்னர் அதுவரைகாலமும் சிங்கள மக்களது கதாநாயகனாக விளங்கிய பொன்சேகா துரோகியாக மாறிவிட்டார். இதுவே மகிந்தவை வெற்றிபெற இலகுவாக்கியது. பிரதான இனவாதக் கட்சிகள் புடை சூழ போட்டிக்களத்தில் எதிர்நின்ற பொன்சேகாவை கண்டு ஒருகணம் மகிந்த ராசபக்சவே மிரண்டுதான் போயிருந்தமை தேர்தல் முடிவு வெளியாகும் நாளுக்கு முன்புவரை அவரது தோல்விப்பயம் கவ்விய முகமும் பதட்டமான நடவடிக்கையுமே வெளிப்படுத்தியிருந்தது. 2002ல் போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டதை காரணம்காட்டி நாட்டை இரண்டாகப்பிரித்து புலிகளிடம் தாரைவார்த்துவிட்டதாக ரணிலை துரோகியாகக் காட்டி 2005ல் வெற்றி பெற்ற மகிந்தவிற்கு இம்முறை கூட்டமைப்பினருடனான மறைமுக உடன்படிக்கை பேருதவி புரிந்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் சேர்ந்து நாட்டை காட்டிக்கொடுத்துவிட்டதாக மேற்கொண்ட பரப்புரை காரணமாக சிங்கள மக்கள் சரத்பொன்சேகாவை நிராகரித்து மகிந்த ராசபக்சவே தமக்கான சரியான தலைவனாக தெரிவுசெய்துள்ளனர். சுருங்கக் கூறின் சிங்களத்தின் கதாநாயகனை துரோகியாக மாற்றி தோல்வியடையச் செய்த பெருமை சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பையே சாரும். இந்தப் பெருமைக்குரிய சம்மந்தனின் செயற்பாட்டின் எதிர்வினையாக தமிழ்மக்கள் எதிர்கொள்ளப் பேகும் நிலை மிகவும் ஆபத்தானதாகும். எதிரியின் கொடிய வதைகளிற்குள்ளாகிய நிலையிலும் எதிரியின் முற்றுகைக்குள் இருக்கின்ற போதும் தமிழ்த் தேசியத்தின்பால் தாம் வைத்திருக்கும் உறுதியை வாக்களிக்கச் செல்லாது வெளிப்படுத்தியிருக்கும் எமது மக்கள் தற்போதும் எதிர் நோக்கிவரும் கடத்தல் கைதுகள் மூலம் காணாமல்போகும் சம்பவங்களும் மர்மக் கொலைகளுக்கும் எதிர்வரும் நாடகளில் எதிர்கொள்ளப்போகும் யாவற்றிற்கும் சம்மந்தனே பொறுப்பாளியாவார். பொதுவான ஒரு களத்தில் மக்களை வழிநடத்தாது தோல்வியைத் தழுவி தன்னையே காத்துக்கொள்ள முடியாது தற்போது சிறைக்கம்பிகளை எண்ணிக்கொண்டு இருக்கும் சரத்பொன்சேகாவினை ஆதரிப்பது என்ற நிலைப்பாட்டினை எடுத்து குறிப்பிட்ட மக்களையும் அதற்கேற்றவாறு வழிநடத்தி மகிந்தவின் கொலைவெறிப் பார்வைக்கு உள்ளாக்கியுள்னதன் விளைவுகள் என்னவாக இருக்குமோ என்பதை சிந்திக்கும் போது கலக்கமேற்படுகின்றது. முட்கம்பி வதைமுகாமில் சிறைவைக்கப்பட்டுள்ள ஒரு இலட்சத்து ஐம்பதாயிரத்திற்கு மேற்பட்ட மக்களும் சிறப்பு தடுப்பு முகாம்கள் என்ற போர்வையில் தனித்தனியாகவும் குழுவாகவும் அடைத்து வைக்கப்பட்டு எதிர்காலமே சூன்யமாக்கப்பட்டுள்ள பதின் மூவாயிரத்திற்கு மேற்பட்ட போராளிகளதும் நிலை இனி என்னவாகுமோ என்பதற்கு சம்மந்தனால் பதில் கூறமுடியுமா……? அல்லது அவர்களை விடுவிக்கத்தான் முடியுமா…..? சிறிலங்காவின் ஆட்சிபீடத்திற்கு நடாத்தப்படும் தேர்தல்கள் மூலம் தமிழ்மக்கள் எதனையும் பெற்றுவிட முடியாது அவ்வாறு தெரிவு செய்யப்படுபவர்களும் தமிழ்மக்களிற்கு உரித்தான சுயநிர்ணய உரிமைகளை வழங்கி தனித்துவமாக வாழ வழியேற்படுத்தப் போவதில்லை என்ற நிலையை மெய்ப்பிப்பது போன்றே கடந்த 33வருடங்களாக சிறிலங்காவின் தேர்தல்களை புறக்கணித்து வந்துள்ளனர் எமது மக்கள். இதனை முற்றிலும் உணர்ந்து கொண்டதனால்தான் கடந்தமுறை 2005இல் சனாதிபதித் தேர்தலை புறக்கணிப்பது என்ற முடிவை தமிழீழ தேசியத் தலைமை எடுத்திருந்த தமிழர்களதும் சிங்களவர்களதும் எண்ணங்கள், செயற்பாடுகள் முரண்நிலை கொண்டவை என்பதனையும் அவற்றிற்கான தலைமையும் வேறு வேறுவானவை என்பதனையும் அனைத்துலகத்திற்கு புரியவைப்பதற்கு முற்பட்டிருந்தனர். இம்முடிவுதான் தவறானது எனக்கூறி சரத்பொன்சேகா என்ற சிங்களனை ஆதரிப்பதே சரியானது என மக்களை தவறாக வழிநடாத்த முற்பட்ட சம்மந்தனுக்கு சரியான பாடம் புகட்டியுள்ளனர் தமிழத் தேசியத்தில் வழிநடாத்தப்பட்டுள்ள எம் மக்கள். முள்ளிவாய்காலின் பின்னரான காலப்பகுதியில் ஏற்பட்ட துன்ப துயரங்கள் களையப்பட்டு தத்தமது சொந்த இடங்களில் யாருடைய தலையீடும் இல்லாது சுதந்திரமான நடமாட்ட உரிமையுடன் வாழக்கூடிவாறான சூழல், முட்கம்பி வதைமுகாம்களில் அடைபட்டுள்ள இலட்சத்திற்கு மேற்பட்ட மக்களிற்கு கிடைக்காது விடினும் ஓரளவிற்கேனும் தமது வாழ்வினை மீள அமைத்துக் கொள்வதற்கான வாய்ப்பாக ஒரு ஆட்சிமாற்றத்தினை எதிர்பார்த்திருந்தது என்னவோ உண்மதான். ஆனால் அதற்குமப்பால் தமிழர்கள் ஒன்றுபட்டு ஓரணியில் உள்ளோம் என்பதனை சனநாயக முறைப்படி வெளிப்படுத்த கிடைத்த ஓர் அரிய சந்தர்ப்பத்தினை தவறவிட்டு விட்டோமே என்ற வருத்தம்தான் மேலிடுகிறது. தமிழர் பகுதியல் மிகவும் குறைந்தளவே வாக்குப் பதிவு நடைபெற்றிருந்த போதும் அவற்றில் 70சதவிகிதமான வாக்குகள் சரத்பொன்சேகாவிற்கு கிடைத்துள்ளமையானது தமிழர்கள் பொன்சேகாவை மன்னித்து ஏற்றுக்கொள்ள தயாராக உள்ளனர் என அர்த்தப்படுத்திவிட முடியாது. பிரதான எதிரி மகிந்த ராசபக்சவினை தோற்கடிக்க வேண்டும் என்ற எண்ணமும் தமிழின அழிப்பினை மேற்கொண்டதற்கு எக்காலத்திலும் மன்னிப்பே கிடையாது என்பதனை வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பமாக இந்த சனாதிபதித் தேர்தல்களம் கிடைத்த போது அதனை சரியாக பயண்படுத்திக் கொண்டிருந்தனர் வாக்களித்திருந்த தமிழ்மக்கள். எமக்கான தலைமை வேறு இந்த தேர்தல் சிங்களத்தின் தலைமையினை தேர்வுசெய்யும் களம் என்பதனை பட்டவர்த்தனமாக வெளிப்படுத்தும் முகமாக பெரும்பாலான தமிழ்மக்கள் தேர்தலை புறக்கணித்தும், கிடைத்த சந்தர்ப்பத்தினை பயன்படுத்தி கொலைவெறியன் மகிந்த ராசபக்சவிற்கு எதிரான பழிவாங்கும் உணர்வு அணையாத் தீபமாக எம்மனங்களில் கணன்று கொண்டிருக்கின்றது என்பதனை வெளிப்படுத்தும் விதமாக வாக்களித்திவர்களில் பெரும்பாலானவர்கள் சரத்பொன்சேகாவை ஆதரித்து வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. மக்களது இந்த மன உணர்வினை சரியான முறையில் இனம் கண்டு தமிழர் தரப்பு பொதுவேட்பாளராக சிவாசிலிங்கத்தை முன்னிறுத்தி இந்தத் தேர்தல்களத்தை எதிர் கொண்டிருந்தால் இன்னும் அதிகமானவர்கள் முன்வந்து வாக்களித்து எமது மக்களின் மனவெளிப்பாட்டினை சனநாயக முறைப்படி பதிவுசெய்ய வாய்ப்பு ஏற்பட்டிருக்கும். அவ்வாறு நடைபெற்றிருந்தால் தமிழ்மக்கள் இன்று எதிர் நோக்கியருக்கும் அச்சுறுத்தல் நிலையினை தவிர்த்திருக்கராம் அல்லவா….? இந்த அரியவாய்பினை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு சரியானமுறையில் கையாளாது விட்டதனால் மகிந்த ராசபக்சவின் கொலைவெறிப் பார்வை இன்னும் வீரியம் பெற்று எமது மக்களை நோக்கித் திரும்பியுள்ளது. அது எப்போது எவ்வாறு உருவம்பெற்று மீண்டும் தமிழர்களை தாக்கும் என்ற அச்சத்துடன் வாழவேண்டிய நிலைக்கு சம்மந்தன் தலைமையிலான கூட்டமைப்பின் தவறான நிலைப்பாடே காரணமாகும். சனநாயக முறைப்படி தேர்தல்கள்த்தில் குதித்த எதிரணி வேட்பாளரையும் அவர்சார்ந்தவர்களையும் பரம எதிரியாகக் கருதி உயிரச்சத்தை விளைவிதிருக்கும் போதும் எதிர் வேட்பாளரை கைது செய்து சகல வழிகளிலும் முடக்கப்பட்டு கொடுஞ்சிறை வைத்திருக்கும் போது தமிழர்கள் எம்மாத்திரம். சிங்களத்தின் கதாநாயகனாக விளங்கிய சரத்பொன்சேகாவுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட சிறுபான்மை கட்சிகள் அணிசேர்ந்து கொண்டபின்னர் சிங்களவர்களது தனிப்பெரும் தலைவன் மகிந்தராசபக்ச தான் என்ற நிலை ஏற்பட்டுள்ளமை மறுக்கமுடியாத உண்மையாகும். ஆட்சி அதிகார வெறியில் ஊறிப்போயுள்ள மகிந்த ராசபக்ச சகோதரர்களது கையில் சிறிலங்காவின் அதியுச்ச அதிகார பீடங்கள் சிக்கிக் கொண்டிருந்தமையும் இந்த அசாத்தியமான வெற்றிக்கு வாய்ப்பாக அமைந்துள்ளது. எந்தெந்த வகைகளில் சட்டமீறல்களை, அதிகார முறைகேடுகளை, வன்முறைகளை கட்டவிழ்த்து தமக்கு சாதகமான முடிவினை நோக்கி மக்களது தீர்ப்பினை வளைத்துக் கொள்ள முடியுமோ அந்தந்த வழிகளில் எல்லாம் முயற்சி செய்தே இந்த வெற்றியை தமதாக்கிக் கொண்டுள்ளனர் ராசபக்ச சகோதரர்கள். கடந்த இருபது ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிகவும் மோசமன வன்முறை வெறியாட்டங்களிற்கு இடையே இம்முறை சனாதிபதித் தேர்தல் நடைபெற்றுள்ளது. இம்முறை சனாதிபதித் தேர்தலை கண்காணித்த “ட்ரன்ஸ் பரன்ஸி இன்டர் நேசனல்” என்ற தன்னார்வ கண்காணிப்பு அமைப்பின் அதிகாரியான வெலியமூன் இது தொடர்பாக சிங்களப்பத்திரிகையாளர்களிடம் கூறியபோது: ராசபக்சே தேர்தல் நடைமுறைகள் ஆரம்பித்ததில் இருந்து வாக்கு எண்ணிக்கை நடக்கும்வரை அரச இயந்திரத்தை தனது விருப்பப்படி பயன்படுத்தியதாக 427 புகார்கள் எங்களிற்கு வந்துள்ளன, அவரது ஆதரவாளர்கள் தேர்தல்பணியாற்றுவதற்காகவும் வாக்காளர்களை கட்டாயப்படுத்தி வாக்குச்சாவடிகளுக்கு கூட்டிவருவதற்காகாவும் 1024 சிறிலங்கா அரசுப் பேரூந்துகளை பயன்படுத்தியிருக்கின்றார்கள். அதிபர் மாளிகை உள்பட அனைத்து அரச அலுவலகங்களும் ராசபச்சவிற்காக தேர்தல் வேலை பார்த்துள்ளன. இம்முறை நடந்து முடிந்த தேர்தல், வரலாற்றில் மிக மோசமாக நடைபெற்ற தேர்தலாக பதிவு செய்யப்படும் என வெலியமூன் தெரிவித்திருந்தார். இவைதவிர தேர்தலிற்கு முன்கூட்டியே வெற்றிலை சின்னத்திற்கு புள்ளடி போடப்பட்ட நிலையில் உள்ள வாக்குச் சீட்டுக்கள் நிரப்பிய பெட்டிகளை ஏற்றிக் கொண்டு யாழ்ப்பாணம் சென்றது சிறிலங்கா இராணுவவாகனங்கள். எதிர்பாராத விதமான விபத்து சம்பவத்தினை அடுத்து இந்த திருட்டுத்தனம் அம்பலமாகியிருந்தது. தமிழர் பகுதியிலையே இவ்வாறு சித்து வேலைகளை காட்டமுற்பட்ட ராசபக்சே கும்பலுக்கு சிங்களப்பகுதியில் மேற்கொள்வது என்பது கடினமானதாக இருந்திருக்காது, இருக்காது. தீவிர இனவாதவெறியில் ஊறித்திழைத்திருக்கும் சிங்கள மக்களின் வாக்குகள் இருவருக்கும் இடையே பிரிக்கப்பட தமிழர்களது வாக்கே வெற்றியைத் தீர்மாணிக்கும் என்ற நிலை நடந்து முடிந்த சனாதிபதித் தேர்தல் களத்தில் ஏற்பட்டிருந்தது யாவரும் அறிந்ததே. இன்று பலர் இந்த கூற்றை மறுதலிக்க முற்பட்டு தமது புலமையினை காட்டமுற்பட்டுள்ளமை வேடிக்கையாக உள்ளது. மேற் கூறப்பட்ட நிலையே உண்மையாகும். ஏறத்தாள 35இலட்சத்திற்கு மேற்பட்டதாக இருந்த சிறுபான்மை இனமக்களான தமிழர், இசுலாமியர்களது வாக்குள் முழுவதுமாக பதிவாகியிருக்குமாயின் நிலைமையே தலைகீழாக மாறியிருக்கும் என்பதே உண்மையாகும். இதனை உணர்ந்து கொண்டதனால்தான் தமிழர் பகுதிகளில் அச்ச கூழ்நிலையினை தோற்றுவித்து முழுமையாக வாக்குப்பதிவு நடைபெறாது பார்த்துக் கொண்டதுடன் தமது வெற்றியையும் உறுதி செய்து கொண்டுள்ளனர் கொலைவெறி பிடித்த மகிந்த சகோதரர்கள். இதற்கு எலும்பு பொறுக்கிகளாக அவர்களது காலை சுற்றிவரும் துரோகிகள் குழுக்களும் உடந்தையாக இருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இதனை உறுதிப்படுத்துவது போலவே தமிழர் பகுதி வாக்குப்பதிவு முடிவுகள் அமைந்துள்ளன. யாழ்ப்பாணத்தில் வாக்களிப்பு தினத்தன்று அதிகாலைவேளை 13இடங்களில் குண்டுவெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றதும் பேரூந்து சேவைகள் முற்றாக நிறுத்தப்பட்டு ஒருவித அச்சுறுத்தலான சூழ்நிலை ஏற்படுத்தப்பட்டிருந்த போதும் அளிக்கப்பட்ட வாக்குகளில் ராசபக்சவினை விட கிட்டத்தட்ட மூன்று மடங்கு வாக்குகள்(ஒரு இலட்சத்து ஏழாயிரம் வாக்குகள்) பொன்சேகாவிற்கு ஆதரவாக பதிவு செய்யப்பட்டிருந்தது. கள்ளவாக்கு போடுவதற்காக இருபதிற்கு மேற்பட்ட சிங்களக் காடையர்கள் கிளிநொச்சியில் கொண்டுவந்து இறக்கப்பட்டிருந்தமை பண்டாரிக்குளம் கிராமத்தில் பத்தாயிரத்திற்கு மேற்பட்ட மக்களை வாக்களிக்கச் செல்லவிடாது சிறிலங்கா இராணுவத்தினரால் தடுத்து நிறுத்தப்பட்டிருந்தமை ஒட்டுக் குழுக்களின் அடாவடி என வன்னி மாவட்டத்தில் சனநாயகம் காற்றில் பறக்கவிடப்பட்ட நிலையிலும் கொலைபாதகன் மகிந்தவை விட(24ஆயிரம்) சுமார் மூன்று மடங்கு (61ஆயிரம்) வாக்குகள் சரத்பொன்சேகாவிற்கு ஆதரவாக பதிவு செய்யப்பட்டிருந்தது. இதேபோன்று சரத்பொன்சேகாவை ஆதரித்த முசுலீம் காங்கிரசு செல்வாக்கு மிக்க பகுதிகளில் அதிகாலைமுதல் இராணுவ கவசவாகனங்களையும் இராணுவத்தினரையும் நிறுத்தி போர்ச் சூழலை ஏற்படுத்தியிருந்த நிலையிலும் அளிக்கப்பட்ட வாக்குகளில் மூன்றில் இரண்டு மடங்கு வாக்குள் சரத்பொன்சேகாவிற்கு ஆதரவாக பதிவு வெய்யப்பட்டிருந்தது. மலையகப்பகுதி உள்ளிட்ட இதர தமிழர் பகுதிகளிலும் இதே நிலைதான் வெளிப்படுத்தப்பட்டிருந்தது. மொத்தமாக 35இலட்சம் வாக்குப்பலத்தினை கொண்டிருந்த சிறுபான்மை இன தமிழர், இசுலாமியர்களில் ஆறு இலட்சம் பேரே இம்முறை சனாதிபதித் தேர்தலில் வாக்க்ளித்திருந்தனர். அதிலும் 70சதவிகித வாக்குள் சரத்பொன்சேகாவிற்கு ஆதரவாகவே அளிக்கப்பட்டிருந்தது. சரத்பொன்சேகா பெரும்பான்மை வாக்குகள் பெற்ற ஆறு மாவட்டங்களில் தமிழர்கள் அதிகமாக வாழும் யாழ்ப்பாணம், வன்னி, திருகோணமலை, மட்டக்களப்பு உள்ளிட்ட தமிழர்களின் தாயக பூமியான வடகிழக்கு பகுதியில் உள்ள ஐந்து மாவட்டங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சரத்பொன்சேகாவை தமிழர்கள் ஏற்றுக்கொண்டதனாலோ….. அதிகப்பிரசங்கி சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பினரின் வழிகாட்டுதலை ஏற்றுக் கொண்டதனாலோ தாயக மக்கள் இந்த முடிவை வெளிப்படுத்தவில்லை என்பதனையும் மாறாக தலைவணங்கா தேசமாக விளங்கிய வன்னியை சுடுகாடு ஆக்கி எமது இனத்தையே கொன்று குவித்த கொலைபாதகன் மகிந்தராசபக்சவையும் அவனது சகோதரர்களையும் பழிவாங்கவதற்காகவும் தமது எதிர்ப்புக்களை தெரிவிப்பதற்காகவுமே இந்த முடிவை வெளிப்படுத்தியுள்ளனர் என்பதனை இந்த அதிமேதாவிகள் புரிந்து கொள்ள வேண்டும். மேற் சொன்னவை வெறும் வாதத்திற்காக முன்வைக்கவில்லை. தேர்தல் வாக்களிப்பு சூன்யமாக்கப்பட்டால் உடனடியாக மறுதேர்தல் நடாத்தப்படும் என மிகக்கடுமையாக கருத்துத் தெரிவித்த தேர்தல் ஆணையாளர் தயானந்த திசநாயக்க தேர்தல் நிறைவடைந்த பின்னர் துண்டைக்காணோம் துணியைக் காணோம் என கதறித்துடித்து புலம்பியது மேற்சொன்னவற்றின் அடிப்படையிலே ஆகும். கடந்த சில தினங்களாக எனக்குத் தரப்பட்ட அழுத்துங்களும் நெருக்கடிகளும் மிரட்டல்களும் தாங்கமுடியாதவை எனது வரலாற்றில் இத்தகைய அழுத்தங்களை முன்னெப்போதும் நான் சந்திக்கவில்லை. நான் தேர்தல் ஆணையாளராக எட்டுவருடங்கள் கடமையாற்றியிருக்கின்றேன். இப்போது எனது பதவியில் இருந்து என்னை விடுவிக்குமாறு நான் வேண்டுகிறேன். வாக்குகள் எண்ணப்படும் வேளை பலர் மிரட்டப்பட்டனர். புத்தளம் அனுராதபுரம் மாத்தளை ஆகிய பகுதிகளில் தேர்தல் நடைமுறைகளை அமுல்படுத்த விடாமல் தேர்தல் பணியாளர்களும் அதிகாரிகளும் தடுக்கப்பட்டனர். இனியும் இந்தப்பதவியில் நீடிப்பது பொருத்தமாக இருக்காது என்றே கருதுகின்றேன். இனியும் என்னால் நெருக்கடிகளை சமாளிக்க முடியாது. இந்த அறிக்கைக்குபின்னர் எனக்கு என்ன நடக்கும் என்பது தெரியவில்லை. எவ்வளவு விரைவாக இந்தப் பொறுப்பில் இருந்து எ;னனை விடுவிக்க முடியுமோ அவ்வளவு விரைவாக விடுவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன். நடந்து முடிந்த சனாதிபதித் தேர்தல் எவ்வளவு மோசமான சூழலில் நடந்து முடிந்துள்ளது என்பதற்கு இதைவிட என்ன சாட்சியம் வேண்டும். இவ்வாறு கதறிய தேர்தல் ஆணையாளரிற்கு என்ன நிர்ப்பந்தம் ஏற்படுத்தப்பட்டதோ… அடுத்து நடைபெற இருக்கும் பொதுத் தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார்…. எல்லாம் மகிந்தவின் திருவிளையாடல்களே….! உலகில் எங்குமே நடந்திராதவாறு எதிரணி வேட்பாளரையும் அவரது ஆதரவாளர்களையும் தேர்தல் தலைமை ஆணையாளரையும் உயிர்ப்பயம் கொள்ளச் செய்யும் அளவிற்கு மகிந்தவின் ஆட்சி சிறிலங்காவில் அமைந்துள்ளது என்றால் ஏற்கனவே கேட்பாரற்று தமது விருப்பப்படி கொன்று குவிக்கப்பட்டுவந்த தமிழர்களது நிலை என்னவாக இருக்கும் என்பதே உலகத்தமிழர்களது தீராத கவலையாகவும் முடிவு காணமுடியாத அச்சமாகவும் உள்ளது. சிங்களத்திற்கு சேகவம் செய்து தமது எஞ்சிய காலத்தை விரையமாக்கிவரும் டக்ளசுகளையும், கருணாக்களையும், பிள்ளையானகளையும் இந்தத் தேர்தல் மூலம் தூக்கியெறிந்துள்ள எங்கள் மக்கள் கூத்தடிக்கும் சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பினையும் நிராகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அமைச்சுப்பதவிகளை வைத்துப் பல சலுகைகளை காண்பித்து தமது ராசவிசுவாசத்தை காட்டமுற்பட்ட டக்ளசை யாழ்மக்கள் எவ்வாறு நிராகரித்தார்களோ அவ்வாறே தலைவன் நம்பிய தளபதிகளில் ஒருவனாக இருந்து தமிழினத் துரோகியாக மாறி சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் உபதலைவர் என்ற பதவியை அலங்கரித்த கருணாவும் கழிப்பறை கட்டுவதற்கே பசில்ராசபக்சவிடம் அனுமதி வேண்டி தவம் இருக்கும் கிழக்குமாகாண முதலமைச்சர் பதவியை அலங்காரம் செய்யும் பிள்ளையானும் அரும்பணியாற்றிய நிலையிலும் கூட மட்டக்களப்பு மாவட்டத்தில் வாக்கிளத்தவர்களில் 69சதவிகிதமான மக்கள் இவர்களை பொருட்டாக கருதாது பொன்சேகாவிற்கு ஆதரவாக வாக்களித்து துரோகத்திற்குரிய தண்டனையினை வழங்கியிருந்தனர். முழுமையாக தமிழர்கள் வாழும் வடக்கு மாவட்டங்களில் 15-20 சதவிகித வாக்குகளே அளிக்கப்பட்டிருந்மை தமிழ்த் தேசியத்தின்பால் வழிநடாத்தப்பட்ட மக்கள் தெளிவாக உள்ளதை அறிந்து கொள்ள முடிகின்றது. கடந்த முறை 2005இல் சனாதிபதித் தேர்தலை புறக்கணிப்பது என தமிழீழ தேசியத்தலைவர் முடிவெடுத்தது தவறானது என வியாக்கியானம் கூறும் சம்பந்தன் இன்று மக்கள் தன்னிச்சையாக வழங்கியிருக்கும் தீர்ப்பிற்கு என்ன பதில் சொல்லப் போகின்றார். தமிழீழ தனியரசே தமிழர்களுக்கு தீர்வாக அமையும் என்பதில் எனக்கு உடன்பாடில்லை. அதனை நான் எப்போதும் ஆதரித்தது கிடையாது என இன்று பிதற்றும் சம்பந்தன் இதனை தேர்தலுக்கு முன்பு தெளிவாக கூறியிருந்தால் துரோகிகளுக்கு வழங்கியதைவிட மிக அருமையான தீர்ப்பினை பதிவு செய்திருப்பார்கள் தன்மானம் காக்கும் தலைவனின் வழிநிற்கும் தாயகமக்கள். புலத்திலே உருப்பெற்றுவரும் அரசியல் தலைமைத்துவத்தின் வளர்ச்சியே சம்மந்தனை இவ்வாறு தடுமாறவைக்கின்றதோ தெரியவில்ல. வட்டுக் கோட்டை தீர்மாணத்தை மீள்வலியுறுத்தி புலம்பெயர் தேசமெங்கும் நடாத்தப்பட்டுவரும் வாக்கெடுப்பில் வரலாறுகாணாத தீர்ப்பினை புலம்பெயர்வாழ் ஈழத்தமிழர்கள் பதிவு செய்து தமிழீழ தனியரசே எமது விருப்பு என உலக அரங்கில் பறைசாற்றி வரும் நிலையில் சம்பந்தன் எடுத்துவரும் முரண்நிலை பற்றி வேறுஎன்ன சொல்ல. நாடுகடந்த தமிழீழ அரசை நிறுவி அரசியில் ரீதியாக எமது தாயக மீட்பு போராட்டத்தை அனைத்துலக மன்றங்களில் முன்னெடுத்துச் செல்வதற்கு தயாராகிவரும் வேளை தாயகத்தில் இருக்கும் மக்களும் தாமும் போராட்ட உணர்வு குன்றிப்போகாது விடுதலைவேட்கையுடன இருப்ப்தனை கடந்த சனாதிபதித் தேர்தல் மூலம் வெளிப்படுத்தியிருப்பது எம்மை பன்மடங்கு பலம் மிக்கவர்களாக மாற்றியுள்ளதுடன் வீறுகொண்டு களமாடும் உற்சாகத்தினையும் தந்துள்ளது என்றால் மிகையாகாது. நாம் விரும்பியது போன்றே மேற்குலகமும் சிறிலங்காவில் ஆட்சிமாற்றத்தினை விரும்பியதை நடந்து முடிந்த நடைபெற்றுவரும் ராசதந்திர நகர்வுகள் உறுதிப்படுத்துகின்றன. நான்காம் கட்ட ஈழப்போரின் இறுதிநாட்களில் சிறிலங்கா இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மனித உரிமை மீறல்கள் போன்றவற்றை காரணம் காட்டி தைத்த ஆடைகளுக்கான ஏற்றுமதி வரிச்சலுகையினை இடைநிறுத்துவது என போக்கு காட்டிவந்த ஐரோப்பிய ஒன்றியம் தேர்தல் திகதி நெருங்கிவந்தபோது ஆடை ஏற்றுமதிக்கான வரிச்சலுகை நிறுத்தப்படுவதை உறுதி செய்து கொண்டது. அத்துடன் சிறிலங்கா சனாதிபதி மகிந்த ராசபக்ச மற்றும் அவரது சகோதரரும் பாதுகாப்புத்துறை செயலாளருமான கோத்தபாய ராசபக்ச மீதும் போர்க் குற்றவழக்கு போடுவதற்கான முன்நடவடிக்கைகளில் அமெரிக்க தனது பினாமிகளான உலகமன்றங்கள் சபைகளின் ஊடாக ஈடுபட்டது. அவ்வாறு ஒரு ஆட்சி மாற்றத்தினை விரும்பியதற்கு பிரதானமாக இரண்டு விடயங்கள் நோக்கப்படுகின்றது. அமெரிக்h மற்றும் மேற்குலக நாடுகளிற்கு எதிரான களத்தில் அணிவகுத்துள்ள சீனா, ரசியா, கியூபா, வெனிசுலா, ஈரான், சவுதிஅரேபியா, வியட்னாம் போன்ற பல்வேறு நாடுகளுடன் பகிரங்கமான உறவினை மகிந்தராசபக்ச ஏற்படுத்திவருவதுடன் பல்வேறு ஒப்பந்தங்களை ஏற்படுத்தி உறவினை வலுப்படுத்தி வருகின்றமை முதன்மைக் காரணமாகும். அடுத்து: தெற்காசியப் பிராந்தியத்தில் கால்பதித்து தமது மேலாதிக்கத்தினை நிலைநிறுத்துவதற்கான வாய்ப்பினை, தமிழீழ தேசியத்தலைவர் வே.பிரபாகரன் தலைமையிலான தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் ஆளுகையில் அமையும் தமிழீழ தனியரசு பாதிக்கும் எனக்கருதியதால் முள்ளிவாய்கால் வரை விரட்டி விரட்டி தமிழ் மக்களிற்கு அரணாக விளங்கிய எமது விடுதலைப் போராட்டமும் அதன் கட்டமைப்புகளும் சிதைக்கப்பட்டதற்கும் பல்லாயிரக்கணக்கிலான எமதருமை மக்கள் கொன்றொழிக்கப்பட்டதற்கும் ஒத்தாசை வழங்கியிருந்தன இந்த அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள். ஆண்டாண்டுகளாக எமது மக்கள் ஆண்டு அனுபவித்து வந்த அரசு உலக, பிராந்திய வல்லரசுகளின் விருப்பத்திற்கேற்ப முள்ளிவாய்காலில் சிதைக்கப்பட்டு விட்டாலும் புலத்தில் இருக்கும் தலைமைகளும் மக்களும் புது வேகம் பெற்று புதிய பாதையில் பயணிக்க முற்பட்டுள்ளமை இந்த சக்திகளை மீண்டும் அச்சம் கொள்ளவைத்துள்ளது. அதனால்தான் தமது கைப்பாவையாக செயற்படும் பொன்சேகாவை சிறிலங்காவில் சனாதிபதி பதவியில் இருத்தி தமிழர்களிற்கு தற்காலிக தீர்வை திணித்து தனிநாடு, சுயநிர்ணய உரிமை, வலுவான தலைமை போன்றவற்றின் தேவையை இல்லாது செய்து தமது அச்சுறுத்தலை போக்கிக் கொள்வதற்கு இந்த அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் விரும்பியிருந்தன. அவ்வாறு நடைபெற்றிருந்தால் 2002இல் ஏற்படுத்தப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்த காலப்பகுதியில் எவ்வாறு எமது மக்கள் (வன்னி தவிர்ந்த பிரதேசங்களில் வாழ்ந்த பெரும்பாலான மக்கள்) தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் இருந்து அன்நியப்பட்டு கிடைத்த வாழ்க்கையினை ஏற்றுக் கொண்டு வாழப்பழகிக் கொண்டார்களே… அதுபோன்றே தற்போதும் வெளிப்படையாக சில பல வசதிவாய்ப்புக்களை வழங்கி எம்மமை மந்தைகளாக்கியிருப்பார்கள். தற்போது யாழ்ப்பாணத்தில் வீதிச் சோதனைச்சாவடிகள் பெரும்பாலும் அகற்றப்பட்டும் ஆள் அடையாள அட்டை கொண்டுதிரிய வேண்டியதில்லை நினைத்த உடன் சிறிலங்காவின் எப்பகுதிக்கும் சென்று திரும்பலாம் கொழும்பு கடைகளில் கிடைக்கும் அத்தனை பொருட்களும் யாழ்ப்பாணத்தில் ஒவ்வொரு ஊரிலும் தெருக்களிலும் நடைபாதை கடைகளில் கிடைக்கின்றது இவைதவிர இன்னபிற வசதிவாய்ப்புக்ள் எமது மக்களிற்கு கிட்டியுள்ளன. இவையே போதும் என்னற மனநிலைக்கு எமது மக்கள் இப்போதே வந்துவிட்டனர். புலத்திலிருந்து தொடர்பு கொள்ளும் உறவுகளுடனான உரையாடலில் இதனை வெளிப்படுத்தி வருகின்றனர். இப்போது இங்கு ஒரு பிரச்சினையும் இல்லை…. நீங்கள் ஏன் இன்னும் அங்கை இருந்து கஸ்ரப்படுகிறியள்…. ஊருக்கு வரலாம் தானே… இது போன்ற சில வினாக்களை எழுப்பி தமது நிலையினை வெளிப்படுத்திவருகின்றனர். இவை மேற்சொன்னவற்றை உறுதிப்படுத்துகின்றன. உண்மையில் சொல்லப்போனால் எமது மக்கள் பட்டுவந்த துன்பங்கள் ஏற்படுத்திய தாக்கம்தான் தற்போது ஓரளவு தற்காலிக சுகம் கிடைத்தவுடன் குதூகலிக்க வைக்கின்றது. வீட்டுப் படலையை தாண்டும் போது ஒன்றுக்கு பலமுறை அடையாள அட்டையினை எடுத்துவிட்டோமா என உறுதி செய்து கொண்டு புறப்படும் நிலையும் வீதிக்கு வீதி தெருவுக்கு தெரு இராணுவச் சோதனை சாவடிகளில் குந்தியிருந்து எமது அவசரம் தெரியாது சோதனை என்ற பெயரில் அவதிக்குள்ளாக்கும் சிங்கள இராணுவ வீரர்களது ஆக்கினையினை அனுபவித்தவர்களுக்குத் தெரியும் அதன் தாக்கம். அப்போது மீண்டும் ஒரு போராட்டம் தனி நாடு எனக்கூறிக்கொண்டு அடுத்த கட்டத்தை முன்னகர்த முற்பட்டால் எதுக்கு இவ்களுக்கு தேவையில்hத வேலை நாங்கள் சந்தோசமாக இருப்பது இவர்களுக்கு பிடிக்கவில்லை போல…. என்ற கேள்வியே வரவேற்கும். இதுவே இன்றைய நிலையும் கூட. எழுபதுகளின் ஆரம்பத்தில் அடக்கியாண்ட சிங்களனுக்கு எதிராக போரட களம்புகுந்து தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் போதும் இவ்வாறான கேள்விகளே எமது வீரர்களை வரவேற்pருந்தமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் புலம்பெயர் தேசங்களில் முன்னெடுக்கப்பட்டு வரும் அரசியல் ரிதியிலான போராட்டங்களும் வரவேற்பில்லாது போய் முக்கியத்துவம் இல்லாது போயிருக்கும். இதனை கருத்தில் கொண்டுதான் சிறிலங்காவில் தமக்கு சார்பான ஒருதலைமையினை கொண்ட ஆட்சியாக சரத்பொன்சேகாவின் ஆட்சியை அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் விரும்பியிருந்தன. எப்படியோ அது சாத்தியமற்றதாய் போனபிற்பாடு முதற்காரணமான மகிந்தவின் எதிரணி உறவுகளால் சினமடைந்திருந்த அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் புலத்தில் உள்ள ஈழத்தமிழர்களது அரசியல் தலைமையினை ஏற்று அங்கீகரிப்பது போன்று ஒரு தோற்றப்பாட்டினை ஏற்படுத்தி மகிந்தவிற்கு தூக்கத்தை கலைத்துள்ளன. தமக்கு எதிரான அணியுடன் கரம்கோர்க்கும் மகிந்தவை தட்டிவைப்பதற்காகவே எம்மை நெருங்கி வந்து கொஞ்சிக்குலாவும் நாடுகள் எவ்விதத்திலும் எமக்கான நிரந்தர தீர்வினை பெற்றுத்தரப்போவதில்லை என்பதனை நாம் நினைவில் கொள்ள வேண்டும். சிங்களத்திற்கு எதிரான நிலைப்பாடு காரணமாக இருந்தாலும் இவ்வளவு நாட்களாக புலம் பெயர்வாழ் ஈழத்தமிழர்கள் மேற்கொண்ட போராட்டத்தின் காரணமாகவே இன்று அனைத்துலக நாடுகள் ஒப்பிற்காகவேனும் ஏற்றுக்கொள்ள முன்வந்தமைக்கான காரணமாக அமைந்துள்ளது. முன்னர் இந்த புலத்தில் இயங்கிவரும் அரசியல் தலைமைகளை செயலிழக்கச் செய்வதற்கு முன்வந்த இந்த நாடுகள் ஏன் இன்று அரவணைக்கின்றன….? இங்கும் இவர்களது சூழ்ச்சிகள் உள்ளது. முட்கம்பி வதைமுகாம்களில் சிங்களத்தால் கொடும் சிறைவைக்கப்பட்டிருக்கும் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட எமது மக்களை மீட்n;டடுத்து அவர்களது பூர்விக மண்ணில் மீண்டும் குடியேற்றுவதும், அனைத்துலக போர் நியமங்களிற்கு புறம்பாக தனிமைச்சிறையில் வைத்து எதிர்காலமே சூனியமாக்கப்பட்டுள்ள பதின்மூவாயிரத்திற்கு மேற்பட்ட போராளிகளை விடுவித்து மறுவாழ்வு ஏற்படுத்திக் கொடுப்பதும் உடனடித்தேவையாக இருக்கும் போது இந்த நாடுகள், மன்றங்கள், சபைகள், அமைப்புகள் எதுவுமே இதுதொடர்பாக சிங்களத்தை வலியுறுத்தவில்லையே… குறைந்தபட்சம் கோரிக்கையோ வேண்டுதலோ வைக்கவில்லையே. செய்யவேண்டியவற்றை தமது வல்லமையினை பயண்படுத்தி செய்யாது எமக்கான நியாயமான உரிமைகளை பெற்றுத்தராது நாடகமாடி எம்முடன் ஒட்டவரும் இவர்களை அவதானத்துடன் கையாளவேண்டியது அவசியமாகும். எமக்கான விடுதலையை யாரும் தங்கத் தாம்பாளத்தில் வைத்து துக்கித்தரப் போவதில்லை. அது எமது உரிமை. அதனை நாம் போராடித்தான் பெறமுடியும். அதுவே இன்றைய யதார்த்த நிலையும் கூட. அதனால்தான் எமது தேசியத்தலைவர் எவ்வித சமரசங்களிற்கு உட்படாது தனது பாதையில் உறுதியுடன் சுதந்திர சோசலிச தமிழீழம் என்ற இலக்கு நோக்கி போராடிக் கொண்டிருக்கின்றார். முள்ளிவாய்க்காலில் முழுவதுமாக முடிந்துவிட்து என்றநிலையில் கூட சில வல்லாதிக்க நாடுகள் தேசியத்தலைவரிடம் சமரசங்கள் பேசியிருந்த போதும் அவற்றை எமது தேசமக்களின் விடுதலையினை முதன்மைப்படுத்தி புறக்கிணத்திருந்ததுடன் பாதுகாப்பான இடத்திற்கு முக்கிய தளபதிகளுடன் நகர்ந்து சென்று தமது இருப்பினை உறுதிப்படுத்திக்கொண்டுள்ளார். இவ்வாறு பாதுகாப்பான இடத்தில் தமது இருப்பினை வெளிப்படுத்தாது உலக பிராந்திய வல்லரசுகளுடன் மௌணப் போர் புரிந்துவரும் எமது தேசியத் தலைவர் புலம்பெயர்ந்திருக்கும் தமிழர்களாகிய எம்மிடம் எதிர்பார்ப்பது தொடர்ச்சியான பங்களிப்பினையே. “இந்த வரலாற்றுச் சூழமைவில், தமிழர் உலகில் எந்த மூலையில் வாழ்ந்தாலும், எந்த இடத்தில் வளர்ந்தாலும் எமது தேசவிடுதலைக்கு உறுதியாகக் குரல் எழுப்பி, எமது சுதந்திர இயக்கத்தின் கரங்களை பலப்படுத்துமாறு அன்போடு வேண்டுகிறேன். அத்துடன் தங்களது தாராள உதவிகளை வழங்கித் தொடர்ந்தும் பங்களிக்குமாறும் உரிமையோடு கேட்டுக் கொள்கின்றேன்…..” இவ்வாறு கடந்த 2008 மாவீரர் நாள் உரையில் உலகத்தமிழர்களை நோக்கி வேண்டுகோள் விட்டிருந்தார் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள். எனவே அவ்வளியில் தொடர்ந்து போராடுவதே எமது கடரைமயாகும். சத்திய இலட்சியத் தீயில் தம்மையே அழித்துச் சரித்திரமாகிவிட்ட எமது மாவீரர்கள் வழியில் சென்று நாம் எமது இலட்சியத்தினை அடைவோமென தாயக மீட்புப் போரில் களப்பலியாகிய முப்பதாயிரத்திற்கு மேற்பட்ட மாவீரர்களதும் அந்த போரில் தோளோடு தோள்நின்று சாவடைந்த இரண்டு இலட்சத்திற்கு மேற்பட்ட மக்களதும் கல்லறைகள் மீது கரம்பதித்து உறுதிஎடுத்துக்கொண்டு தற்போது ஏற்பட்டுள்ள அனைத்துலக சூழ்சிகள், தடைகள், நெருக்கடிகள் போன்றவற்றை தகர்த்தெறிந்து தலைவன் வழிகாட்டுதலில் தொடர்ந்து போராடுவோம். தமிழீழம் காண்போம். “தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”