சனி, 31 ஜூலை, 2010

எப்படி கேபி ஒரு இன உணர்வுள்ள தமிழனாக ......?ஒட்டு மொத்த போராட்டத்தையும் குறைசொல்ல இவருக்கு என்னதகுதி ? பேட்டி என்று புலம்புகிறார் ...???

கேபி உள்ளூர் ஊடகத்திற்கு வழங்கிய உளறல்
4வது ஈழப் போரின் கடைசி மாதங்களில் நீங்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்பு கொண்டிருந்தீர்களா? வன்னிப் பகுதியில் விடுதலைப் புலிகளின் தலைமை தப்ப முடியாத அளவுக்கு சிக்கியிருந்ததா? ராணுவத்தை தடுக்க முடியவில்லை என்று உங்களது தலைமை உங்களிடம் கூறியதா?

“புலிகளின் பெயரைக் கறைப்படுத்துவதாக எண்ணி, தேசத்திற்காக மாண்ட தமிழர்களின் தியாகத்தை மறந்து விடாதீர்கள்”

தமிழர்களுக்காக கட்டப்பட்ட இராணுவக் கட்டமைப்பு, அழிக்கப்பட்ட நிலையில், அப்பிரதேசங்கள் அனைத்திலும் சிங்கள ஆக்கிரமிப்புக்கள் இடம் பெறுவதையும், ஒரே தேசத்திற்குள் அதாவது சிங்கள பிரதேசங்களில் தமிழ் பதாகைகள் நிராகரிக்கப்பட்ட நிலையில், தமிழ் பிரதேசத்தில் வலுக் கட்டாய

புலத்திலுள்ளவர்களின் கடமை .............!

யாழ்ப்பாணத்தில் கஞ்சா அபின் போன்ற போதை வஸ்துக்களை சமூகச் சீர்கேடுகளை ஊக்குவிக்கும்நடவடிக்கைகளில் ஸ்ரீலங்கா படையினர் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


ஆபாசப் புத்தகங்கள் மற்றும் சீடீக்களின் விற்பனை, கஞ்சா அபின் போன்ற போதை வஸ்துக்களின் பாவனை போன்றவற்றை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளின் பின்னணியில் படையினர் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அன்பான தமிழ் மக்களே! ஏன் இன்னும் நாம் விழித்துக் கொள்ளாமல் இருக்கிறோம்??? ஏன் இன்னும் இன்னும் எம்மை நாமே அழிப்பதற்கு துணைபோகின்றோம்??? தயவுசெய்து சிந்தியுங்கள்!!!!!!!!

தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு ஒரு நீண்ட வரலாறுண்டு. இருப்பினும் தமிழ்மக்களின் மனங்களின் தடம்பதித்த சில வரலாற்றுத் துணுக்குகளை மீள்நினைவுக்குட்படுத்தல் பொருத்தமாகும். ஒரு இயக்கத்தை உருவாக்குவது என்பது கஷ்டம் மிகுந்த அத்தியாயம். அதன் கட்டமைப்பு குலையாமல் மூன்று தசாப்தங்கள் வரை நகர்த்தி வந்தது என்பது பெரும் எதிர்நீச்சல்கள் மலிந்த அத்தியாயம்.

ஊடகங்கள் மீது வன்முறை !!!போர் முடிந்தது என்ற சொல்லுக்கு என்ன ...???த.தே.கூ உறுப்பினர் மகிந்தவுக்கு முறையிட்டுள்ளாராம்..

யுத்தம் நிலவிய காலப்பகுதியில் பல்வேறு ஊடக நிறுவனங்கள் தாக்கப்பட்ட அதேவேளை, ஊடகவியலாளர்கள் பலரும் கொல்லப்பட்டனர். ஆனால் யுத்தம் முடிவடைந்து சமாதான சூழல் ஏற்பட்ட பின்னரும் இவ்வாறு ஊடகங்களுக்கு எதிராக அராஜகங்கள் கட்டவிழ்த்து விடுவது மிகவும் கண்டிக்கத்தக்கது.

மேஜர் பசிலன் ( நல்லையா அமிர்தலிங்கம், முல்லைத்தீவு)

சொந்த மண்ணிலேயே அடிப்படை உரிமைகள் கூட மறுக்கப்பட்டு திட்டமிட்ட முறையில் அழிக்கப்படுகின்ற தமிழ் மக்கள், தம் உரிமையைப் பெற்றுத் தருவார்கள் என்ற நம்பிக்கையுடன் தமிழ் மிதவாதிகளுக்கு வாக்குகளை  அள்ளி வழங்கினார்கள்.
சிங்களப் பேரினவாத அரசு மாநில சயாட்சி, மாவட்டசபை, சமஸ்டி ஆட்சி என்று, உரிமைகளற்ற திட்டங்களைத் தீட்டி இதே மிதவாதிகள் மூலம்

பரிசோதனைக்கு தேவையான தர்சிகாவின் உடல் பாகங்கள் சில மாயமானது ஏன் ?

வேலணை அரசினர் வைத்தியசாலை யின் குடும்பநல மருத்துவமாது தர்சிகாவின் சடலத்தில் இருந்து அப்புறப்படுத் தப்பட்டதாகக் கூறப்படும் பரிசோதனைக்குத் தேவைப்படும் உடலின் குறிப்பிட்ட சில உறுப்புகளின் பாகங்களும் கொழும்பு சட்ட வைத்திய அதிகாரிக்கு அனுப்பப்பட விருக்கின்றன.
கைதடி ஊற்றல் மயானத்தில் புதைக் கப்பட்டிருந்த தர்சிகாவின் சடலம்

இவர்களுக்கு தேவை பாராளுமன்ற கதிரை அதனால் முறையிடுவார்கள் தானே ......

பல்வேறு காரணங்களுக்காக வெளிநாடுகளுக்குக் சென்றவர்கள் மற்றும் யாழ்ப்பாண மாவட்டத்தைவிட்டு வெளியேறியவர்களின் விருப்பத்தை அறியாது, அவர்களை வாக்காளர் இடாப்பிலிருந்து நீக்குவதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்க்கின்றது.

கடலில் மூழ்கும் நிலையில் அகதிகளுடன் இருந்த படகு அவுஸ்திரேலியாவில் மீட்பு

கடலில் மூழ்கும் அபாயநிலையில் இருந்த இலங்கை அகதிகள் உள்ளிட்ட 81பேர் அவுஸ்திரேலியாவின் வடமேற்கு கிறிஸ்மஸ் தீவுக் கடற்பரப்பில் வைத்து கடந்த புதன்கிழமை கடற்படையினரால் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
அகதிகளுடன் சேர்த்து, அவர்களை அவுஸ்திரேலியாவுக்கு கடத்திய நான்கு இந்தோனேசிய ஆட்கடத்தல்காரர்களும்

இலங்கை இராணுவ உயர் அதிகாரியின் வாக்கு மூலம்....

தமிழீழ த்தேசியத்தலைவரின் இளைய புதல்வன் பாலசந்திரன் உட்பட கைது செய்யப்பட்ட போராளிகளை சிங்களப்படை சித்திரவதையின் பின்னர் கொன்றுள்ளதாக சிறிலங்கா இராணுவ அதிகாரி வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
அமெரிக்காவிடம் தஞ்சம் கோரிய இந்த அதிகாரி அங்குள்ள நீதிமன்ற நீதிபதி முன் நிலையில்

கோத்தபாயவின் உத்தரவின் பேரில் போர்குற்ற நடவடிக்கையில் ஈடுபட்ட இராணுவ அதிகாரிகள் சுட்டுக்கொலை ...


கோத்தபாயவின் உத்தரவின் பேரில் போர்குற்ற நடவடிக்கையில் ஈடுபட்ட இராணுவ அதிகாரிகள் சிலரை கோத்தபாயவின் இரகசிய கொலைப்படை போட்டு தள்ளிவிட்டதாக இலங்கையில் இருந்து தப்பிவந்த சிங்கள ஊடகவியலாளர் கூறியுள்ளார்.

தமிழரின் காவலர் பிரசன்னம் இல்லாததால் ஸ்ரீலங்காவின் காவல்துறையினரின் அனுசரணையுடன் நடைபெறும் வல்லுறவுகள் ...

யாழ்ப்பாணத்தில் என்றுமில்லாதவாறு இடம்பெற்று வரும் பாலியல் பலாத்காரங்கள், வல்லுறவுகள் மற்றும் சட்ட ஒழுங்கு சீரழிவுகளால் மக்கள் அதிர்ந்து போயுள்ளனர்.
வலிகாமத்தின் அளவெட்டிப் பகுதியில் ஆலயத் திருவிழா முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த யுவதி ஒருவர் கடத்திச் செல்லப்பட்டு

நாம் எதைப் பேசினாலும் மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடவே பலர் காத்திருக்கிறார்கள்-ஹக்கீம்

தமிழ் மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பாக அரசாங்கம் உரிய தேவையான அக்கறை காட்டவில்லை. ஆனால் வடக்கு, கிழக்கில் உள்ள கனிய வளங்களைச் சுவீகரித்து இலாபம் தேடுவதிலேயே அதிக அளவில் அக்கறை காட்டுகிறது. இவ்வாறு முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் சாடினார்.

வெள்ளி, 30 ஜூலை, 2010

இலங்கை பான் கீ மூனுக்கு எதிராக குற்றச் சாட்டுக்களை சுமத்தியுள்ளது...

பான் கீ மூன் இரண்டாம் தடவையாகவும் செயலாளர் நாயகமாக பதவி வகிப்பதனை தடுப்பதற்கு அரசாங்கம் பல்வேறு வழிகளில் முனைப்புக்களை மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தெற்கே கதிர்காமத்தில் "சிங்களக் கந்தனும்", வடக்கே நல்லூரில் "தமிழ்க் கந்தனும்" ஒருவரை ஒருவர் முறைத்துக் கொண்டு நிற்கிறார்கள்


இலங்கையில் இனப்பிரச்சினை கடவுளையும் விட்டு வைக்கவில்லை. ஆடி மாதம் தெற்கே கதிர்காமத்திலும், வடக்கே நல்லூரிலுமாக இரு பிரசித்தி பெற்ற முருகன் ஆலயங்கள் விழாக்கோலம் பூண்டுள்ளன. கதிர்காமம் வரும் பக்தர்கள் பெரும்பாலும் சிங்களவர்களாகவும், நல்லூர் வரும் பக்தர்கள் பெரும்பாலும் தமிழர்களாகவும் உள்ளனர்.

இவ்வளவு இழந்தப்பின்னும் நாம் கேட்பது எமது அரை ஏக்கர் நிலத்தை மட்டுமே!


தொடர்ந்து மூன்று மாதங்களுக்கும் மேலாக தமது சொந்த இடங்களில் குடியேற்றாமல் சாந்தபுரம் வித்தியா லயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள கிளிநொச்சி சாந்தபுரம் மக்களை சந்திப்பதற்காக தமிழ்த் தேசியச் கூட்டமைப்பின் நாடாளுமன்ற பிரிதிநிதிகள் உட்பட்ட குழுவினர் நேற்றை தினம்(29-07-2010) சென்றிருந்தனர்.

கப்டன் - தமிழ்மதி (கந்தையா-விஜயலட்சுமி) தம்பிலுவில்-அம்பாறை

2005 ம் ஆண்டின் பகுதியில் தன்னை விடுதலைப் போராட்டத்தின் பால் இணைத்து கொண்டு பொறிவெடிகள்,, வரைபடம்,, மருத்துவம். தொடர்பான கற்கை நெறிகளில் ஈடுபட்டு தனது திறமைகளை வெளிக்கொணர்ந்தார்.


அம்பாறை வனப்பகுதியில் இடம்பெறும் எதிரிமீதான தேடுதல் நடவடிக்கை தாக்குதல் நடவடிக்கை அனைத்திலும் சிறப்பாக செயற்பட்டவர்.
2007 -04- 25 வக்குமுட்டிய பகுதியில் எம்மால் மேற்கொள்ளபட்ட

தமிழன் வாழவைக்கிறான் சிங்களவரை, தானமாக சிறுநீரகத்தை கொடுத்து ஆனால் சிங்களபௌத்த வெறி பிடிச்ச அரசோ ..????

மூளை செயலிழந்து உயிரிழந்த தமிழ் இளைஞன் ஒருவனின் சிறுநீரகத்தை இரண்டு சிங்கள நோயாளிகளுக்கு மாற்றீடு செய்யும் சத்திர சிகிச்சை கண்டி பொது வைத்தியசாலை வெற்றிகரமான முறையில் இடம்பெற்றது.

கே.பி இன் கம்போடியா சொத்து விபரம் பற்றி கம்போடியா பொருளாதார ஆலோசகருடன் பசில் பிரதிநிகள் ரகசியபேச்சு வார்த்தை ...

தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் தக்சின் சினவத்ரா தனது பிறந்தநாளை கொண்டாட கடந்த 25 ஆம் திகதி தனிப்பட்ட விமானத்தில் இலங்கை சென்றதாகவும் அவர் கட்டுநாயக்கவில் உள்ள ஏர்போர்ட் கார்டன் விடுதியில் வைத்து அமைச்சர் பசில் ராஜபக்சாவின் பிரதிநிதிகளுடன் இரகசிய பேச்சுவாரத்தைகளை நடத்தியதாகவும் வெளிவிவகார அமைச்சின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

விடுதலைப்புலிகளின் முன்னைய வெளிகள பொறுப்பாளரின் பேட்டி.....! ஒட்டு மொத்த எமது போராட்டத்தை அடகு வைத்தது போல் ....

அரசாங்கத்தின் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னைய வெளிகளபொறுப்பாளர் குமரன் பத்மநாதன் உள்நாட்டு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வி....

மிகவும் களைத்த நிலையிலேயே 7வது நாளாக சிவந்தன் தனது உறுதிமிக்க மனிதநேயப் பயணத்தை தொடருகின்றார்......

கடும் வெயில், காற்றின் மத்தியில் ஏற்றம் இறக்கமான பிரதேசங்கள் ஊடாகதமிழ் மக்களிற்காக நீதிகேட்டு இன்று 7வது நாளாக சிவந்தன் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி தனது மனிதநேய நடை பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

உறவுகளைத் தேடி அலையும் பெற்றோர்!

வவுனியாவில் நடமாடும் நிவாரணச் சேவை நிலையத்தில் ஒன்று கூடிய இடம்பெயர்ந்த மக்களின் உறவினர்கள் தமது அன்புக்குரியவர்கள் பற்றிய தகவல்களை வழங்குமாறு சிறீலங்கா காவல்துறையினரிடம் வலியுறுத்தியுள்ளனர். தமது பிள்ளைகளுக்கு என்ன நடந்தது என்பது குறித்து

லெப்.கேணல் கௌசல்யன்


கௌசல்யன் கொக்கட்டிச்சோலை பண்டாரியாவெளியை பிறப்பிடமாகக் கொண்டவன். தமது பாடசாலைப் பருவம் அது சிங்கள வெறி இராணுவம் தமிழர் தாயகத்தில் தமிழின அழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டமை இந்த கௌசல்யன் மனதை சுட்டெரித்தது. தேசியத் தலைவனின் விடுதலைப் போராட்டம் அவனை ஈர்த்தது. இதன் விளைவாய் இவன் விடுதலைப் போராட்டத்தில் இணைகிறான்.

இலங்கையில் வானொலி நிலையம் தாக்கப்பட்டது!

இலங்கையில் பிரபல வானொலி ஒலிபரப்பு நிறுவனமான 'வொய்ஸ் ஒப் ஏஸியா நெட்வேர்க்' (Voice of Asia Network)இன் சியத்த எப்.எம்., றியல் ரேடியோ, வெற்றி எப்.எம்., ஆகியவற்றின் செய்திப்பிரிவு இன்று அதிகாலை இனந்தெரியாத நபர்களினால் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது.

புலிகளை அழிக்க உதவி செய்தும் இலங்கையில் ஆதிக்கம் செய்ய முடியாத நிலை இந்தியாவிற்கு -கேர்னல் கரிகரன்

1987 ஜூலை 29 இல் இலங்கை-இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு 23 வருடங்கள் கழிந்துள்ளது. ராஜீவ் ஜெயவர்தனாஉடன்படிக்கையென இந்த ஒப்பந்தம் குறிப்பிடப்படுகிறது.துரதிர்ஷ்டவசமாக இந்த விடயமானது மகிழ்ச்சியற்ற விதத்திலேயே நினைவுகூரப்படுகின்றது.

இலங்கை ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்துடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்தி கொள்ள வேண்டும் -ஜப்பான்

அரசாங்க படைகளினால் யுத்தக் குற்றச் செயல்கள் புரியப்பட்டதாக தெரிவிக்கப்படுவது குறித்து ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்திற்கும் இலங்கைக்கும் இடையே முரண்பாடுகள் ஏற்பட்டுள்ள நிலையில், இலங்கை ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்துடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்தி கொள்ள வேண்டும் என்று

சீன ராணுவம் கண்ணிவெடி அகற்றும் போர்வையில்,இலங்கையில் கால் பதிப்பது ....இந்தியாவை நோட்டம் விடவா ?

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிலக்கண்ணிவெடிகளை அகற்றும் பணிகளைத் துரிதப்படுத்து வதற்காக சீன இராணுவம் செல்கின்றது. இவர்கள் ஐந்து வருடம் அங்கு தங்கியிருந்து கண்ணிவெடிகளை அகற்றுவார்களாம்

தமிழ் மக்களின் காணிகளை கொள்ளையடிக்கவே இந்திய தூதுக்குழு வருகை !

வடபகுதி தமிழ் மக்களின் காணிகளை கொள்ளையடிப்பதற்காகவே இந்திய அரசாங்கத்தின் தூதுக் குழு இலங்கை வருகிறதே தவிர தமிழ் மக்களை மீளக் குடியமர்த்துவதை கண்காணிப்பதற்கல்ல என்று இட துசாரி முன்னணியின் அமைப்புச் செயலாளர் சமல் ஜயநித்தி தெரிவித்தார்.

வியாழன், 29 ஜூலை, 2010

சீனாவின் திட்டம் எத்தனை நாளைக்கு இலங்கையை காப்பாற்றும் ?

சீனா உலகில் சனத்தொகையில் கூடிய நாடு மட்டும் அல்ல, உலக குற்றவாளிகள் தொகையிலும் சீனாவே முதலிடம் 1.57 மில்லியன் கைதிகள் சீனாவில் உள்ளனர். எனவே இவர்களை பராமரிப்பதற்கு பதிலாக இவர்களை வெளி நாடுகளில் வேலைக்கமர்த்துவது சீனாவிற்கு பொருளாதார ரீதியகாவும், பாதுகாப்பு ரீதியாகவும் பெரும் இலாபமாகும்.

தமிழின துரோகியா ?எதிரியா?நண்பனா ?காவலனா ?இந்த கே .பி

கொழும்பு இனவாத முன்னணி பத்திரிகையான த ஐலண்ட பத்திரிகைக்கு கே.பி. பதமனாதன் செவ்வி வழங்கியுள்ளார். இந்த செவ்வியில் மஹிந்த இராஜபக்‌ஷவை புகழ்ந்து தள்ளியுள்ளார் பத்மநாதன்.

பரமேஸ்வரன் வழக்கில் வெற்றி!

லண்டனில் உண்ணாவிரதம் இருந்த இலங்கை தமிழ் இளைஞர் பரமேஸ்வரன் சுப்ரமணியம், உண்ணாவிரத நாட்களில் பர்கர் சாப்பிட்டதாக செய்தி வெளியிட்ட பத்திரிக்கைகளுக்கு எதிரான வழக்கில் வெற்றி பெற்றுள்ளார்.

6 வது நாளாக உறுதி தளராது மனிதநேய நடைபயணம் ..

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி மனிதநேய நடை பயணம் மேற்கொண்டுள்ள சிவந்தன், பிரான்சின் கடற்கரையான கலையில் இருந்து 115 கிலோமீற்றர் தூரத்தை நடந்து கடந்துள்ளார்.

சழூக சீர்கேடுகள் அரங்கேறும் இடமாக கிளிநொச்சி உருவாக்க படுகிறதா?

கிளிநொச்சி நகரிலிருந்து 02 மைல் தொலைவிலுள்ள பாரதிபுரம் கிராமத்தில் கடந்த வியாழன்று ஆண்டு- 05 ல் கல்வி கற்கும் பாடசாலை சிறுமியொருவர் பாலியல் வன்புணர்விற்கு உள்ளாக்கபடுதலிற்கான முயற்சியொன்று

வீழ்ந்தது வெட்கமல்ல, எழமுடியாமல் , வீழ்ந்து கிடப்பதுதான் வெட்கத்துக்குரியது

தமிழ் தலைமைகள் தமிழ் மக்களுக்கு என்ன செய்யப்போகிறார்கள்?
ஒன்றும் தெளிவாகத் தெரியவில்லை. யாரிடம் இதுக்கெல்லாம் விளக்கம் கேட்க முடியும்? ஏதோ போகிற போக்கில் போகிறோம்’ என்று தன்பாட்டில் புலம்புவதைப்போலச் சொல்லிக் கொண்டிருந்தார் யாரோ ஒருவர். இது நடந்தது முறிகண்டியில். இந்த மாதிரிக் குழப்பங்களோடுதான்

இராணுவபெண்சிப்பாய் மீது போலீஸ் வல்லுறவு குறித்து விசாரணை ஆரம்பமாம் ...

பொலிஸ் உத்தியோகஸ்தர்களால் தான் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதாக இராணுவத்தைவிட்டு தப்பியோடிய பெண்ணொருவர் செய்த புகார் தொடர்பாக விசாரிப்பதற்கு தியத்தலாவ இராணுவ பொலிஸாருக்கு உதவுவதற்காக விசேட புலனாய்வுக் குழுவொன்றை இராணுவம் நியமித்துள்ளது.

முருகனா தமிழனா .....?

(இலங்கையில் வர்த்தகம் செய்யும் இந்திய தமிழ் முதலாளிகளை தடுத்தாலே போதும். இலங்கையின் பொருளாதாரம் எப்போதோ ஆட்டம் கண்டிருக்கும்.)கொழும்பு நகரில் ஆடிவேல் திருவிழாவில் ரத பவனி வந்த முருகப் பெருமான், ஜனாதிபதி மாளிகைக்கு நேரில் சென்று ராஜபக்ஷவுக்கு முதல் மரியாதை வழங்கியுள்ளார்.



லெப்.கேணல் ராதா( கனகசபாபதி ஹரிச்சந்திரா - வண்ணார்பண்ணை யாழ்)

யார் இந்த ராதா? தமிழீழ போராட்ட வரலாற்றை தெரிந்து கொண்டவர்கட்கு ராதாவை தெரியாமல் இருக்க முடியாது. யாழ் இந்துக்கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் போதே ஆற்றலும் ஆளுமையும் மிக்க

இராணுவத் தேவைக்காக நிலங்கள் கையகப்படுத்தப்படுவதால், போரின் காரணமாக இடம் பெயர நேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் தமது சொந்த இடங்களுக்கு திரும்புவது கேள்விக் குறியாகியுள்ளது.....!

இராணுவத் தேவைக்காக நிலங்கள் கையகப்படுத்தப்படுவதால், போரின் காரணமாக இடம்பெயர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் தமது சொந்த இடங்களுக்குத் திரும்புவது கேள்விக்குறியாகியுள்ளது. முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்ட நிர்வாகப் பிரிவுகளுக்கு உட்பட்ட ஏ-9 வீதியின் கிழக்குப்

மனித உரிமை மீறல் ,போர்குற்றம் ,இனப்படுகொலைக்கு நீதி அவசியம் ..

போர்க் குற்றங்கள், இனப்படுகொலை, மனிதத்துவத்துக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக நீதி வழங்கப்பட வேண்டும் என்பது குறித்தும் பதிலளிக்கும் கடப்பாடு தொடர்பாகவும் அமெரிக்கா உறுதியான நிலைப்பாட்டில் இருப்பதாக ஐ.நா.வுக்கான அந்நாட்டுத் தூதுவர் சூசன்ரைஸ் கூறியுள்ளார்.

அம்மனுக்கு வந்த சோதனை ....ஜனநாயகம் இதுவல்லவோ .

வாகரை பிரதேசத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கண்டெடுக்கப்பட்ட அம்மன் முகக் கலசம் நீதிமன்ற உத்தரவின் பேரில் கதிரவெளி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய நிர்வாகத்திடம்10 இலட்சம் ரூபா சரீர பிணையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மலேசியாவில் தமிழ் இளைஞர்கள் இருவர் மீது படுகொலைக் குற்றச்சாட்டு!

மலேசியாவில் இலங்கைத் தமிழ் இளைஞர்கள் இருவர் மீது படுகொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாக சர்வதேச இணையதளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. எஸ்.ஜெயரூபன் மற்றும் டி.சிவஐங்கரன் ஆகிய இரண்டு பேர் மீதே இவ்வாறு குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

போரின் வடுக்களால் பாதிக்கப்பட்டவர்களுக்காக கலை நிகழ்வு ,

தமிழர்தாயகத்தில் போரினால் அவயவங்களை இழந்தும், பார்வையை இழந்த மாற்றுத்திறனற்றோருக்கு உதவும் முகமாக பட்ச வொர்க் நிறுவனத்துக்கு வலு சேர்ப்பதற்கு யேர்மனியில் இரண்டாவது இடமாக ஜேர்மன் பெர்லின் நகரில் புறநாநூற்றுக் கலை நிகழ்வு நடைபெற்றது .இவ் நிகழ்வில்

மங்கள சமரவீரவை கொலை செய்ய தகவல் வழங்கியதற்காக இருவருக்கு சிறை

மஹிந்த அமைச்சரவையில் முன்னர் வெளிவிவகாராமைச்சராக இருந்தவரும் தற்போதைய மஹிந்தவின் எதிரியுமான மங்கள சமரவீர அவர்களை கொல்வதற்கு விடுதலைப்புலிகளுக்கு தகவல் வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்ட இரு படைத்துறையினருக்கு 11 வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.