செவ்வாய், 31 ஆகஸ்ட், 2010

வாருங்கள் பழகலாம் ?..........

ஐரோப்பிய ஒன்றியத்தின் வரிசலுகையினைப் பெறுதல், அனைத்து நாடுகளில் இருந்து வரும் உல்லாசபயணிகளின் வரவினை கூட்டுதல், வெளி நாட்டு முதலீடுகளை அதிகரித்தல் என்பனவே அண்மையில் வெளி நாட்டு அமைச்சருக்கு கொடுக்கப்பட்ட இலக்கு. இதற்கேற்ப காய்களை நகர்த்துமாறு அனைத்து நாட்டு தூதரகங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கில் சிங்களக் குடியேற்றங்கள்

இனப்பிரச்சினை தீவிரம் பெறுவதற்கான தோற்றுவாய்களில் ஒன்றாக இருந்த சிங்களக் குடியேற்றங்கள் மறுபடியும் தமிழ்மக்களுக்கு அச்சத்தைக் கொடுக்க ஆரம்பித்து விட்டன. முன்னர் கிழக்கில் தான் சிங்களக் குடியேற்றங்கள் பற்றிய அச்சம் ஏற்பட்டிருந்தது. கிழக்கைத் தமிர்களிடம் இருந்து பறிக்கும் முயற்சிகள் நடப்பதாக தமிழர்கள் முன்னர் பயந்தார்கள். அதுபோலவே நடந்தும் விட்டது. இப்போது வடக்கின் மீது அதேபோன்று குறி வைக்கப்பட்டிருக்கிறது.


நிருபமா ராவின் நெருங்கிய நண்பனாம் !!!!! ......டக்ளஸ்

இலங்கை சென்றுள்ள இந்திய வெளியுறவுச் செயலர் நிருபமாராவிடம், இலங்கைத் தமிழ் மக்களுக்குச் செய்திருக்க வேண்டிய பல விடயங்களை இந்திய அரசு செய்யத் தவறிவிட்டது என யாழ்ப்பாணத்தில் அவரை சந்தித்த தமிழ் மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.


ஏன் நாம் கொல்லப்பட்டோம் யாரால் என்று.....


பிஞ்சென்றும் பூவென்றும் பிரித்து
அவ் சிறு வண்டு கூட பார்த்து தான் தேன்பருகும்.
இங்கு சிங்கள வெறியனுக்கு தமிழ் பிஞ்சின்
இறப்பெனில் சந்தோசம். செய்த சிப்பாய்க்கு பதவி
உயர்வுகள் தானாக கிட்டும்.
பெற்றதாய் முன்னே தந்தையும் தமையனும் கூடவே
இறந்து கிடப்பது தான் விதியா????
இதை பார்த்து வெறும் காகித துண்டின் அறிக்கைகள்
எழுதிடத்தான் ஐ.நாவே நீயா??
சர்வவல்லமை கொண்டதாய் சொல்லும்
சர்வ தேசத்தின் பணியா??


காந்திய நாடே நீகொடுத்த குண்டுகள் இங்கு
இவரை துளைத்துள்ளது.
அந்த பிஞ்கின் உயிரையும் கூட குடித்துள்ளது.
இதுதான் காந்தி உனக்கு சொல்லி தந்ததா??
இல்லை புத்தரின் போதனையும் இதுதானா??
வாழப்பிறந்தவரா நாங்கள் இல்லை
பலராலும் வஞ்சிக்க பிறந்தவரா??
சொல்லி விட்டு கொல்லுங்கள் சாகும் போது தன்னும்
தெரிந்து கொண்டு இறப்போம்
ஏன் நாம் கொல்லப்பட்டோம் யாரால் என்று

கப்டன் ஈழமாறன் (இராமையா தினேஷ்)

"டேய் மச்சான் என்னைக் கொண்டுபோய் வீடுறா... என்ர பெடியள் என்ன மாதிரியோ... விடடா மச்சான்..." வைத்திய சாலையின் கட்டிலில் இருந்தபடி, காலில் குத்திய திருக்கை முள்ளைப் பற்றிப் பெரிதும் கவலைப் படாதவனாய், தன் அருகில் இருந்த போராளியிடம் கூறிக் கொண்டிருந்தான் "ஈழமாறன்" அவனின் நச்சரிப்பைத் தாங்காது வைத்தியரிடம் அவர்களுக்கு, அவரின் வார்த்தைகள் ஏமாற்றத்தையே கொடுக்கும். "விசம் உடனே இறங்காது தம்பி. இதால ஆக்கள் செத்துப்போயிருக்கினம். ஒரு இரண்டு நாள் பொறும்! பிறகு போகலாம்." என்ப் புன்னகை முகத்தில் தவழவிட்டவாறு சொல்வதை, ஏமாற்றத்துடன் பார்ப்பான் அவன்.

திங்கள், 30 ஆகஸ்ட், 2010

பொன்னகருக்குள் நுழைந்த மக்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டனர்

பொன்னகர் மக்கள் குடியிருப்பதற்காக தங்கள் காணிகளுக்கு நுழைந்த பொழுது அவர்கள் தடுக்கப்பட்டு வெளியில் அனுப்பப்பட்ட சம்பவம் பெரும் பதற்றத்தை உண்டாக்கியது. கடந்த சில மாதங்களாக காணிகளுக்குச் செல்லவிடாமல் இந்த மக்கள் தடுக்கப்பட்டுள்ளனர். காணிகள் வடக்குமாகாணசபைக்கு சுவீகரிக்கப்படுகின்றன என்று கூறப்பட்டு தடுக்கப்பட்டுள்ள மக்கள் பொன்னகரிலும் கிளிநொச்சி மத்திய கல்லூரியிலும் தங்கியிருந்தனர்.


இந்திய இராணுவ உயர்மட்டக் குழுவினர் இலங்கைக்கு.....

இந்திய இராணுவத் தளபதி வி.கே.சிங் , அதேபோல இராணுவத்தின் பல்வேறு மட்டத்திலான தளபதிகளும் இலங்கைக்குவரவுள்ளதாக தகவல்கள் தெரிவித்தன.அதேவேளை இலங்கையிலிருந்தும் இராணுவ தளபதிகள் இந்தியா செல்லவுள்ளனராம். இரு நாடுகளுக்கிடையிலான பரஸ்பர பாதுகாப்பு ஒத்துழைப்பு கடலோரப்பாதுகாப்பு போன்றவை
தொடர்பாக இந்த பயணம் அமையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

"உயரிய சிந்தனை" இந்த தொழில் தருநர்களுக்கு எவ்வாறு வந்தது?

வடக்கில் உள்ள இளைஞர்,யுவதிகளின் வறுமை நிலை, வேலைவாய்ப்பின்மை போன்றவற்றைப் பயன்படுத்தி அவர்களுக்கு கைநிறைய சம்பளத்துடனும் இன்னும் பல சலுகைகளுடனும் தென்னிலங்கையிலுள்ள நிறுவனங்களில் வேலைவாய்ப்புகளைப் பெற்றுத்தருவதாகக் கூறி சட்டவிரோதமான முறையில் அந்த அப்பாவிகளைத் தென்னிலங்கைக்கு அழைத்துச் சென்று அவர்களின் எதிர்கால வாழ்க்கையை சீரழிக்கும் நடவடிக்கைகளில் சில போலி தொழில் தருநர்களும் தொழில் தரகர்களும் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகத் தற்போது பல்வேறு குற்றச்சாட்டுகளும் கிளம்பியுள்ளன

விடுதலைப் புலிகளின் ஆறு விமானங்கள் எரித்திரியாவில்.....

தனி இயந்திரங்களைக் கொண்டு இயங்கக் கூடிய ஆறு விமானங்களை புலிகள் எரித்தியாவில் பாதுகாப்பதாக சர்வதேச பயங்கர வாத ஒழிப்பு தொடர்பான நிபுணர் பேராசிரியர் சேனக ஜயசேகர தெரிவித்துள்ளார்.பேராசிரியர் சேனகஜயசேகர பயங்கரவாத ஒழிப்பு மற்றும் புலனாய்வுத் தொடர்பான சிட்னி பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக கடமையாற்றுகிறார். அவர் இதுதொடர்பில் மேலும் தெரிவித்ததாவது,

3 லட்சத்துக்கும் அதிக கண்ணிகள்

இன்னமும் 2ஆயிரம் சதுர கிலோ மீற்றர் பரப்பளவில் கண்ணிகள் வன்னிப் பகுதியில் அகற்றப்படவேண்டியுள்ளன. மேஜர் ஜெனரல் உதய வன்னியில் புதைக்கப்பட்ட கண்ணிவெடிகளில் அரைப் பங்கு மீட்கப்பட்டுவிட்டன. 2ஆயிரம் சதுர கிலோ மீற்றரில் புதைந்துள்ள 3 லட்சத்துக்கும் அதிக கண்ணிகள் இன்னும் அகற்றப்படாத நிலையில் வன்னியில் புதைக்கப்பட்ட கண்ணிவெடிகளில் அரைப் பங்கு மீட்கப்பட்டுவிட்டன. இதுவரை 1,800 சதுர கிலோ மீற்றர் பிரதேசத்தில் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ளன. புதைக்கப்பட்டு அடையாளம் காணமுடியாத நிலையில் உள்ள 3 லட்சத்து 500 கண்ணிவெடிகளை கண்டுபிடித்து அழிக்கப்படவேண்டியுள்ளன

ஐந்நூறுபோராளிகள் ஒப்படைக்கப்படவுள்ளனர்

புனர்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னாள் விடுதலைப்புலிகள் அமைப்பின் மேலும் ஐந்நூறுபோராளிகள் எதிர்வரும் 4ஆம் திகதி சனிக்கிழமை பெற்றோர் மற்றும் உறவினர்களிடம்ஒப்படைக்கப்படவுள்ளனர்.

வியாழன், 26 ஆகஸ்ட், 2010

17ம் ஆண்டு நினைவுநாள்

கிளாலி கடல்நீரேரியில் போக்குவரத்தில் ஈடுபட்டிருந்த மக்கள் மீது தாக்குதல் நடத்தவந்த சிறிலங்கா கடற்படையினர் மீது தாக்குதலை மேற்கொண்டு இரு நீரூந்து விசைப்படகுகளை மூழ்கடித்து வீரகாவியமான கடற்கரும்புலிகள் மேஜர் நிலவன்(வரதன்) மற்றும் கப்டன் மதன் ஆகியோரின் 17ம் ஆண்டு நினைவுநாள்(26.08.1993) இன்றாகும்

மேஜர் நேரியன்..

ஓ.... அந்த நாள் எங்கள் இதயத்தை இடி வந்து தாக்கிய நாள் எம்முயிர்த் தோழன் விதையாகிப் போன செய்தியது. எம் செவிப்பறையை அதிரவைத்த நாள். எம் வாழ்வுக் காலமதில் காலக்கடல் கரைத்துச் சென்ற நாட்களில் சோகத்தின் எல்லையைத் தொட்ட நாள். நீளும் எங்கள் இவன் கனவினை வாழ்வில் சுமப்போம். என்பதை எங்கள் எழுத்தால் மட்டுமல்ல எம் உள்ளத்தாலும் உறுதியெடுத்துக் கொள்ளும் நாள். எனம் கரம் பிடிக்கும் எழுது கோலால் இவன் வாழ்வினை முழுமையாக வரைந்திட முடியாது. என்றாலும் எழுதத் துடித்தது எம் மனம். சிறு துளியென்றாலும் உன்னால் முடிந்ததை எழுது என்றது. இவன் வீர வரலாற்றில் துளிகள் இங்கே.........

மருத்துவ பீட மாணவன் சாரங்கன் தற்கொலையா.? கொலையா ?

வைத்தீஸ்வரன் - சாரங்கன் கடந்த பொது தேர்தலின் போது ஈ.பி.டி.பி அமைப்பிற்கெதிரான பிரச்சார வேலைகளை முன்னின்று செயற்படுத்தியொருவர் ஜனாதிபதி ராஜபக்சவினால் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்க்கு எதிராக யாழ் குடா நாட்டில் களமிறக்கபட்ட அங்கஜன் - இராமநாதனின் நெருங்கிய நண்பனே மாணவன் சாரங்கன் என்பதும். ஜனாதி பதிராஜபக்சவினால் அண்மையில் யாழ் மாவட்ட சுதந்திர கட்சி அமைப்பாளராக அங்கஜன் தெரிவு செய்யபட்ட நிலையில் அவரின் நெருங்கிய நண்பனின் மரணம் பல்கலைகழக மாணவர்கள் மத்தியில் பலத்த சந்தேகங்களை எழுப்பியுள்ளது


புதன், 25 ஆகஸ்ட், 2010

தமிழர்களின் நிலைவரத்தை ஆராய................?

இலங்கைத் தமிழர்களினதும் இடம்பெயர்ந்த மக்களினதும் நிலைவரத்தை நேரில் ஆராய்வதற்காக இந்தமாத இறுதியில் இலங்கைக்கு தான் பயணம் மேற்கொள்ள விருப்பதாகவும் அதற்கு முன்னர் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் கொழும்புக்குச் செல்வாரெனவும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா அறிவித்திருக்கிறார்.

மட்டக்களப்பிலிருந்து இளம் பெண்களை தென் பகுதிக்குக் கூட்டிச் செல்லும் முயற்சி தடுக்கப்பட்டது

மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த இளம் பெண்களை தென்பகுதிக்கு அழைததுச் செல்லும் முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டது. தென்னிலங்கையிலுள்ள ஆடைத் தொழிற்சாலைகளில் வேலை வழங்குவதாகக் கூறி ஆடைத் தொழிற்சாலை நிறுவனங்களைச் சேர்ந்த சிலரால் இப்பெண்கள் அழைத்துச் செல்லப்படவிருந்தனர்.


“தமிழனின் கண்ணீர் தலையைக்கொய்யும்”

இராணுவ அதிகாரிகளை நினைத்தபடி பந்தாடவும், அவர்களுக்கு பதவி உயர்வு, பதவி இறக்கம்,கட்டாய ஓய்வு என்று எதையும் செய்யும் வல்லமையைப் பெற்றிருந்தார் சரத் பொன்சேகா. புலிகளை அழிக்கும் தேவைக்கு சரத் பொன்சேகா அவசியமானவர் என்பதால் அவருக்கு இந்த அதிகாரங்களைக் கொடுத்திருந்தது அரசாங்கம். தான் கேட்ட அதிகாரங்கள் அனைத்தும் கிடைத்ததால் அவர் பதவியில் இருந்த போது தலைகால் புரியாமல் நடந்து கொண்டார் என்பது வெளிப்படையான விடயம்.

ஆபாசப்படம் எடுத்தவர்கள் கைது : சிக்கியவர்கள் தமிழ்ப்பெண்களா?

கொழும்பு, பெட்டா மல்வத்த சாலையில் நெடுங்காலமாக இளம்பெண்களை வைத்து நீலப்படம் எடுத்த நான்கு இளைஞர்களை கொழும்பு குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். இவர்களிடமிருந்து லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள குறுந்தகடுகள், படமெடுக்கும் கருவிகள், சஞ்சிகைகள் போன்றவை கைப்பற்றப்பட்டுள்ளன.


இந்தக் கும்பலில் சிக்கியுள்ள பெண்கள் விபச்சாரத் தொழிலில் ஈடுபடுபவர்களா ? அல்லது வதை முகாம்களில் வாடும் அப்பாவிப் பெண்களைக் கடத்தி வந்து இவ்வாறு படமெடுக்கின்றனரா ? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், வதை முகாம்களிலிருந்து அவ்வப்போது கடத்திச் செல்லப்படும் தமிழ்ப் பெண்களை மயக்க மருந்து கொடுத்து இவ்வாறு உதாசீனப்படுத்துகின்றனரா என்ற சந்தேகம் தமிழர்களிடையே நிலவி வருகிறது. இதுபற்றிய விசாரணை நடந்து முடிந்தாலும் சிங்களக் காடையர்களின் ஆட்சியில் உண்மையான முழு தகவலும் வெளிவருமா என்பது கேள்விக்குறியே?.

செவ்வாய், 24 ஆகஸ்ட், 2010

மாநகரசபை உறுப்பினர் கடத்தப்பட்டுள்ளார். பிள்ளையானில் சந்தேகம்

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பின் உறுப்பினரும் மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினருமான கில்லி என்றழைக்கப்படும் பிரகாசம் சகாயமணி காணாமல் போயுள்ளதாக அவரது மனைவி சகாயமணி மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

தமிழர்கள் இந்த நாட்டின் உரித்தாளர்கள் அல்ல என நினைப்பது மகாதவறு.

இலங்கைத் திருநாட்டில் தமிழர்களின் தாயக மான வடக்கு கிழக்கு மாகாணங்களில் என்ன தான் நடக்கின்றது என்பதை உணரமுடியாத நிலையில் தமிழ் மக்கள் உள்ளனர். விடுதலைப் போராட்டம் நடைபெற்றது உண்மை.அந்தப் போராட்டம் போர் மூலம் முறியடிக்கப் பட்டமை உண்மை.தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை யுத்தத்தின் மூலம் அரசு தோற்கடித்து விட்டமைக்காக தமிழர்கள் இந்த நாட்டின் உரித்தாளர்கள் அல்ல என நினைப்பது மகாதவறு.

தமிழனின் உயிர் குடித்த இராணுவ அதிகாரி சவேந்திரா டி சில்வா ஐக்கிய நாடுகளின் தூதுவரா?

வன்னி போரில் சரணடைந்தோர்களை சுட்டுக்கொன்ற இராணுவ தளபதி ஐக்கிய நாடுகளின் தூதுவராக செல்கின்றார். போரின் இறுதிப்பகுதியில் வெள்ளைக்கொடியுடன் சரணடந்த போராளிகளான நடேசன் மற்றும் புலிதேவன் ஆகியோரை சுட்டுக்கொன்ற 58 வது டிவிசன் கட்டளை அதிகாரி மேஜர் கெனெரல் சவேந்திர சில்வாவே இவ்வாறு ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான நிரந்தர துணைத்தூதராக நியமிக்கப்படவுள்ளார்.

யாரை கண்காணிக்க ராடரும்,வேவு விமானமும்...........

கொழும்பு இரத்மலானை விமானப்படை தளத்தில் அமெரிக்கா, தனது செலவில் நவீன ராடர் கருவி ஒன்றை அமைத்துக் கொடுத்துள்ளது. சுமார் 6 மில்லியன் அமெரிக்க டாலர் பெறுமதியான இந்த நவீனரக ராடர், செய்மதியூடாக தொலைத் தொடர்புகளையும், தரவுகளின் பரிமாற்றங்களையும், துல்லியமாக அறியும் திறன்கொண்டது எனக் கூறப்படுகிறது. பீச் கிராப் என அழைக்கப்படும், ஆளில்லா வேவு விமானங்களையும் அவதானித்து இதனூடாக் கட்டுப்படுத்தமுடியும் என அமெரிக்க தொழில்நுட்பவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.


உங்களை நீங்களே!.....

முள்ளிக்குளம் முதல்

முள்ளிவாய்க்கால் வரை
அவன் களத்தில்
சமரின் வடுக்கள்
தங்கிய உடம்பு
குருதி கொட்டியே
மெலிந்த தேகம்.


பெற்றவர் இழந்த
பெரும் துயர் நெஞ்சில்
மக்களின் துயரம் அவன்
மனதைப் பிழியும்
உறுதி தளர்ந்திடா
உண்மை வீரன்
குண்டு மழையில்
குற்றுயிரானான்

சிறையிலிருக்கும் அம்மாவே... நீங்கள் வரவே மாட்டீர்களா?"


அன்பின் அம்மாவுக்கு,
சுவாசிக்கக் காற்றிருக்கிறது. உண்ண ஒருவேளை சோறு கிடைக்கிறது. துன்பங்களின் மத்தியிலும் உங்கள் மடியில் சாய்ந்துறங்கிய நிம்மதியான நினைவுகளுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். நீங்கள் நலமாயிருக்கிறீர்களா? உங்களின் நலத்திற்கு என்றும் குறைவரக்கூடாது என்பதுதான் எனது முதல் பிரார்த்தனையும் வேண்டுதலும். நம் குலதெய்வம் உங்களின் நலன் காக்கட்டும்.

போரின் முடிவுக்குப் பின்னரான நிரந்தரமான படைகளின் பிரசன்னம்

மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கு வழங்கப்படுவதாகக் கூறப்படும் உதவிகளைப் பொறுத்தரை அரசாங்கத்தின் அறிவிப்புக்கும் அந்த மக்களுக்கு கிடைக்கப் பெற்றிருக்கின்றவைக்கும் இடையேயான வேறுபாட்டை விளக்குவதற்கு நாம் இங்கு உதாரணங்களைக் காட்ட வேண்டிய தேவையில்லை. அந்த மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளை ஓரளவுக்கேனும் தீர்த்து வைக்கக்கூடிய போதிய உருப்படியான நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டதாக இல்லை.

"செவிடன் காதில் ஊதிய சங்கு".. விரைவான மீள்குடியேற்றம். ஆயர் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை கோரிக்கை

இலங்கையில் இன்னமும் முகாம்களில் தங்கியிருக்கும் சுமார் ஐம்பதாயிரம் பேரை அவர்களின் சொந்த இடங்களில் விரை வில் குடியேற்றுவது குறித்தும், ஏற்கெனவே மீள்குடியேற்றப் பட்டவர்களுக்கு தேவையான வாழ்வாதாரங்களை உருவாக்கு வது குறித்தும் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கத்தோலிக்க ஆயர்களின் குழு வலியுறுத்தியுள்ளது.

திங்கள், 23 ஆகஸ்ட், 2010

நண்பர்கள் இருக்கும் இடத்தை அறிந்து கொள்ளும் புதிய வசதி ...பேஸ்புக் ப்ளேசெஸ்

கடந்த சில மாதங்களாக பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வரும் சமூக வலைத்தளங்களில் ஒன்றான பேஸ்புக் அதனை பயன்படுத்துபவர்கள் இருக்கும் இடத்தை அறிந்து கொள்ளும் படியான ஒரு புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.


கொழும்பில் தமிழ் வர்த்தகர் கடத்தல்

கொழும்பில் உள்ள புறக்கோட்டை பகுதியில் ஒலிவர் பெனர்னான்டோ என்ற தமிழ் வர்த்தகர் ஒருவர் இனம்தெரியாத ஆயுததாரிகளால் காலை கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவித்துள்ளன

சிறீலங்காவில் போர் நிறைவுபெற்றுவிட்டதாக சிறீலங்கா அரசு தெரிவித்து 15 மாதங்கள் கடந்துள்ள நிலையிலும் சிறீலங்காவில் தமிழ் மக்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்வது இங்கு குறிப்பிடத்தக்கது.

இந்திய படையினரை நினைவுகூரும் முகமாக நினைவு மண்டபம்

சிறீலங்காவின் வடக்கு – கிழக்கு பகுதியில் இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் நடைபெற்ற போரில் கொல்லப்பட்ட இந்திய படையினரை நினைவுகூரும் முகமாக நினைவு மண்டபம் ஒன்றை சிறீலங்கா அரசு கொழும்பில் அமைத்துள்ளது.


வெளிநாட்டு கடவுச்சீட்டு வைத்திருப்போர் தரைவழியாக யாழ் செல்ல அனுமதியில்லை

சுற்றுலாப் பயணிகள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட வெளிநாட்டு கடவுச்சீட்டு வைத்திருப்போர் வடபகுதிக்கு நெடுஞ்சாலை வழியாக பயணம் செய்வதற்கான தடை தொடர்ந்தும் நடைமுறையில் இருப்பதாக சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

தமிழரிற்கு இழைத்த கொடுமையை அனுபவிக்கும்.........பொன்சேகா

கடந்த ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவை எதிர்த்துப் போட்டியிட்டதற்காக அரசாங்கம் தன்னைப் பழிவாங்கப் பார்க்கிறதுஇலங்கையின் நீதித்துறை மீது தனக்கு நம்பிக்கையில்லையென்றாலும், தன் மீது விதிக்கப்பட்டுள்ள தீர்ப்பை எதிர்த்து தான் மேல்முறையீடுகள் செய்யப்போவதாக அவர் தெரிவித்தார்.


"எங்கு போய் முறையிட்டாலும் எனக்கு நீதி கிடைக்கப்போவதில்லை என்பது எனக்கு நூறு சதவீதம் தெரியும். அது பற்றி எங்களுக்கு கவலையில்லை. எது வந்தாலும் எதிர்கொள்ள நான் தயாராக இருக்கிறேன்", என்றார் அவர்

யாழ். மருத்துவ பீட மாணவன் சுன்னாகத்தில் சடலமாக மீட்பு!

யாழ். மருத்துவபீடத்தின் 3ஆம் ஆண்டு மாணவனான சாரங்கன் சுன்னாகத்தில் கயிற்றில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.இவர் பயிற்சிக்காக யாழ். போதனா வைத்தியசாலையின் 7ஆம் இலக்க நோயாளர் விடுதியில் கடமையாற்றி வருகின்றார்.


குறித்த மாணவன் தாயாருடன் வாழ்ந்து வந்ததாகவும் தாயார் கடந்த சில நாள்களுக்கு முன்னர் வெளிநாட்டில் கல்வி கற்ற மற்றுமொரு சகோதரனின் பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றுள்ள நிலையில் இவர் தனித்து வீட்டில் தங்கியிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஞாயிறு, 22 ஆகஸ்ட், 2010

ஒரு இனத்தின் வாழ்வாதாரப் போராட்டம் இன்னொருவரின் பொழுதுபோக்கு........

அறுபதாண்டுகளுக்கும் மேலாக ஈழத்தில் நடந்துவரும் தமிழ் உரிமைப் போர் கடும் சவால்களை எதிர்நோக்கியிருக்கிறது. இப்போரில் நிகழ்ந்த படுகொலைகளும், இன்றும் இலங்கையின் திரைமறைவில் தொடரும் சுமார் 12000 போராளிகளின் சிறைவைப்பு, அவர்கள் மீதான வன்கொடுமைகள், மக்களின் நிலங்களை அரசு பறித்தல், சிங்களப் பேரினவாத அரசியல் ஆகியன உலகின் உணர்வுள்ள தமிழர்களின் ...மனங்களைச் சொல்லொணாத வேதனையில் ஆழ்த்தி வருவதைக் காண்கிறோம். இந்த வேதனைக்கு மருந்திட வேண்டிய உலகம் மௌனத்தில் ஆழ்ந்திருக்க, ஒரு விளையாட்டு நிறுவனம் வெந்த புண்ணிலே வேலைப் பாய்ச்சுவதுபோன்ற செயலொன்றைச் செய்திருக்கிறது.


2ம் லெப். சுரேந்தினி

ஜனந்தினி-பரமானந்தம் - இளவாலை வலிகாமத்தின் வடபகுதியில் அமைந்த அழகிய கிராமம்தான் இளவாலை. விவசாயிகளின் கை வண்ணத்ததில் பசுமை குறையாது செழிப்புடன் விளங்கியது. தமிழீழ சுதந்திரப் போராட்டத்திற்கு பெரும் உறுதுணையாக பல ஆண், பெண் போராளிகளைத் தந்து புகழ் பூத்த மண்ணது. அந்த மண்ணில் பிறந்ததாலோ என்னவோ ஜனந்தினியும் அச்சம் சிறிதும் இன்றி ஆயுதம் கரத்தில் ஏந்தி களம் பல கண்டு வீரச்சாவை புகழுடன் தழுவிக் கொணடவள்.

அனுருத்த ரத்வத்தை மலேசியாவிற்கான புதிய தூதர்.

சந்திரிக்காவின் மாமனும் முன் நாள் பாதுகாப்பு துணை அமைச்சரும் பிரபல தமிழின படுகொலைகளின் சூத்திரதாரியுமான அனுருத்த ரத்வத்தை அவர்கள் மலேசியாவிற்கான புதிய தூதராக விரைவில் செல்கின்றார்.

இதற்கான பேச்சுவார்த்தை அண்மையில் மஹிந்தவினால் மேற்கொள்ளப்பட்டது.

தமிழா, நீ பேசுவது தமிழா?.........

உலகின் மூலையெங்கும் தமிழ் இருக்கிறது. தமிழனின் மூளையில் மட்டும்தான் தமிழ் இல்லை' என தமிழ்க் கவிஞர் ஒருவர் கவலைப்பட்டதுபோல் இன்று தமிழர்களின் நாவில் தமிழ் இல்லை. தமிழன் உச்சரிக்கும் வார்த்தைகளைச் சலித்தெடுத்தால் பத்துக்கு இரண்டு தமிழ்ச் சொற்கள் மிஞ்சுமா என்று தெரியவில்லை.


ஒன்றுபடு ஒன்றுபடு ..........

மாவீரர் நாமென்று

மகுடங்கள் வேண்டா
புகழுரைகள் வேண்டா
புதுச் சோடனைகள் வேண்டா
வண்ணமலர் வேண்டா
வாசனைகள் வேண்டா
நெய்விளக்கு வேண்டா
நெக்குருகும் பாடல்தணும் வேண்டா
ஒன்றுமட்டும் வேண்டுகிறோம் உந்தனிடம்
ஒன்றுபடு ஒன்றுபடு ..........

'எக்னாமிஸ்ட்' சஞ்சிகை பறிமுதல்


இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட ‘எக்னாமிஸ்ட்’சஞ்சிகை சுங்க அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை இந்த சஞ்சிகையின் இறக்குமதியாளரும் பிரசுரிப்பாளருமான விஜித யாப்பா தெரிவித்துள்ளார்

சனி, 21 ஆகஸ்ட், 2010

கப்டன் திவாகினி

கப்டன் திவாகினி தொலைத் தொடர்பாளராய் பணி ஆரம்பித்து நிர்வாகப் பணியும் இடையிடையே போர்களப்பணியும் ஆற்றியவள். அலைகள் விரிந்து ஓயாத அலை மூன்று வீச்சம் கொண்ட தருணத்தில் ஆட்பற்றாக்குறை நிவர்த்தியாய் தருணத்திற்குப் பொருத்தமாய் எல்.எம்.ஜி (L.M.G) கனரக இயக்குநராய் வேவுப்புலியாய் வேண்டிய விதமாய் அடையாளப்பட்டுக் கொண்டவள்.

தோல் இருக்க சுளை விழுங்கும்.........

தோல் இருக்க சுளை விழுங்கும் வடிவம். இது என்ன என்று நீங்கள் கேட்கலாம். இதுபற்றி விளங்கப்படுத்துவதை விட, இலங்கை தமிழர் விடயத்தில் அரசின் நடவடிக்கை தான் இது என்று கூறுவது விளக்கம் பெறுவதற்குச் சுலபமாக இருக்கும். அதாவது, தமிழ் மக்கள் கடந்த காலங்களில் பட்டதுன்ப, துயரம் ஏராளம். அந்த துயரம் இன் னமும் முடிந்தபாடாக இல்லை.


சிறைக் கைதி பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் பலி

கைதிகள் இருவர் தப்பிச் செல்ல முற்பட்டதாகவும், சிறைச்சாலை பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் குறித்த நபர் உயிரிழந்துள்ளதாகவும் .கண்டி, போகம்பரை சிறைச்சாலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகக் சிறைச்சாலைகள் ஆணையாளர் வீ.ஆர். டி சில்வா தெரிவித்துள்ளார்.

மனித நேய நடைப் பயணம் செய்த சிவந்தன் நேற்று இலக்கையடைந்தார்

ஈழத் தமிழர்களுக்கு நீதிவேண்டும் என்று கோரிப் பிரித்தானியத் தலைநகர் லண்டனிலிருந்து சுவிஸ்சர்லாந்தின் தலைநகர் ஜெனீவாவில் அமைந்திருக்கும் ஐ.நா. மனித உரமைகள் சபையை நோக்கி மனிதநேய நடைப்பயணத்தை பலநாள்களாக மேற்கொண்டுள்ள சிவந்தன் நேற்று தனது இலக்கினை அடைந்தவிட்டார்.


வடக்கை முழுமையாக மையப்படுத்தி யாழ்ப்பாணத்தில் இந்திய தூதரக அலுவலகம்


யாழ்ப்பாணம், அம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களில் இந்தியாவின் தனித்தனித் துணைத் தூதரகங்கள் அமைக்கப்படவுள்ளமை குறித்து இலங்கை அரசுக்கு நேற்று உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


வெள்ளி, 20 ஆகஸ்ட், 2010

இந்து சமுத்திரத்தின் அமைதிக்கு அச்சுறுத்தல்.. நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் நிறைவேற்றுனர் திரு விசுவநாதன் ருத்ரகுமாரன்

இலங்கைத் தீவில் பாரம்பரியமாக வாழ்ந்து வரும் ஈழத் தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட இனப்படுகொலையையும், தமிழக மீனவர்கள் மீது மேற்கொள்ளும் தாக்குதலும் , சிங்களம் தமிழின மக்கள் மீது கொண்டுள்ள இனவஞ்சம் இலங்கை தீவின் எல்லைகளினையும் தாண்டி தமிழக மக்களையும் நோக்கி நீண்டிருப்பதானது இலங்கையின் எல்லைதாண்டிய ஒடுக்கு முறையின் கொடூர முகத்தினையும், அது தமிழ் மக்கள் மீது கொண்டுள்ள வெறுப்புணர்வினையுமே நிதர்சனமாக வெளிப்படுத்துகிறது.


கடற்கரும்புலி மேஜர் சந்தனா

அவளுக்கு நன்கு தெரிந்திருந்தது, தனது நீண்டநாள் கனவு, இலட்சியம் இம்முறை எந்தத் தடையும் இன்றி வெற்றியடையும் என்று. அந்த நம்பிக்கையின் நிறைவோடு தன்னைப் பெற்றவளை, தன் உறவுகளை இறுதியாக ஒரு தடவை பார்த்துவிட்டு வருவதற்காய் வீடு செல்கிறாள்.

எல்லாம் போயிற்று ,எல்லார் உயிரும் என்னைப் போல
இன்னும் வாழ்வதில் எத்தனை பிரியமுடன்வாழாது போயினர்.....?
வரலாறு எழுதிய கதைகளில் அவர்கள்பெயரிட்ட பிள்ளைகளும்
துணைவந்த துணைவிகளும்தனித்துப் போயினர்......
ஒரு நேர உணவிற்கும்ஒற்றைப் படுக்கை நிழலுக்கும்
எவரையெல்லாமோ இறைஞ்சி....எஞ்சிக் கிடப்பது கண்ணீர் மட்டுமேயான
இயலாத் துயரோடு இன்னும் நம்புகிறார்கள்....என்னை, உன்னை   ,
 எம் எல்லோரையும்....

தமிழ் இளைஞர்கள் கைது.

கண்டி மாவட்டம், அலவத்துகொட பிரதேசத்தில் வவுனியாவை சேர்ந்த நான்கு தமிழ் இளைஞர்களை பொலிஸார் நேற்று கைதுசெய்துள்ளனர் .கண்டியில் நடைபெற்று வரும் பௌத்தர்களின் எசல பெரஹராவை பார்ப்பதற்காக இவர்கள் வந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உரிய அடையாளப்படுத்தல் ஆவணங்களை கொண்டிருக்காமை காரணமாகவே இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மட்டக்கிளப்பில் யுவதியொருவர் காணாமல் போயுள்ளார்..

பொன்னம்பலம் - சாந்தகுமாரி வயது 28 கரையாகண் தீவு , கன்னங்குடா மட்டக்கிளப்பு. எனும் முகவரியை கொண்ட யுவதி காணமல்போயுள்ளார்.

சம்பவம் பற்றி தெரியவருவதாவது வன்னி இடப்பெயர்வின் மூலம் இடம்பெயர்ந்து அண்மையிலேயே தன் தாயாருடன் சொந்த இடத்தில் மீள்குடியேற்றபட்ட போதிலும் இராணுவ புலனாய்வாளர்களினதும் ,

புலிகளுக்கு வாகனங்கள் விற்பனை நால்வர் கைது

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு வாகனங்களை விற்பனை செய்த நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.வாடகை அடிப்படையில் பெற்றுக்கொள்ளப்பட்ட பெறுமதி வாய்ந்த வாகனங்கள், போலி ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு புலிகளுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு போலி ஆவணங்களைத் தயாரித்து விற்பனை செய்யப்பட்ட ஐந்து வாகனங்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.


வியாழன், 19 ஆகஸ்ட், 2010

இந்திய பட பாட்சா பாணியில் தமிழருக்கு எச்சரிக்கை விடும்......பிள்ளையான்

முஸ்லிம் மக்களுக்கான மாதிரிக் கிராமம் அமைக்கப்படுவதை யாராலும் தடுக்க முடியாது. இதையும் மீறி தடுக்கும் முயற்சியில் யாராவது தமிழர்கள் ஈடுபட்டால் அதை எதிர்கொள்வதற்கு நான் ஒரு முதலமைச்சராக இன்றி பழைய பிள்ளையானாக மாற வேண்டி வரும். எச்சரிக்கிறார் - சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்)