வெள்ளி, 29 அக்டோபர், 2010

எல்லா ஊரையும் போலதான் எங்கள் ஊரும்.....

முள்ளிவாய்க்கால் அவலத்தின் பின்பு ஒவ்வொரு வீடுகளிலும் கறுப்புக் கொடி ஏற்றி கொண்டாடங்களைப் புறக்கணித்து வாழும் தமிழக செக்கடிக்குப்பத்து மக்கள்
ஆனால் புலத்திலோ எந்திரன் படத்திற்கு வரிசையில் நிற்கின்றது புலன் பெயர்ந்த ஈனத்தமிழினம்
“எல்லா ஊரையும் போலதான் எங்கள் ஊரும் ஒரு காலத்தில் இருந்தது. ஊரில் ஆறு ஓடாத குறையை சாராய ஆறு நிவர்த்தி செய்தது. மது மயக்கத்தில் எங்கள் சமூகம் அழிந்துகொண்டு வருவதைக் கண்டு மனம் வெறுத்துப் போனோம். தொடர்ச்சியான பிரச்சாரம் மூலமாகவே மனமாற்றத்தைக் கொண்டுவந்தோம். போதைப் பழக்கத்தால் உயிரிழந்த எங்கள் ஊர்க்காரர்களின் சோகக்கதைகளை இளைஞர்களுக்கு பரப்பினோம். மது, சிகரெட் பழக்கங்கள் உடல்நலத்தை கெடுப்பது மட்டுமின்றி குடும்பத்தையும் அழிக்கிறது என்பதை அவர்களுக்கு உணர்த்தினோம். அதன் பலனை இன்று அனுபவிக்கிறோம். எங்கள் இளைஞர்கள் இப்போது பத்தரைமாற்றுத் தங்கங்கள்” என்கிறார் ஊர்ப்பெரியவரான மா. அர்ச்சுனன்.






விவசாயத்தை பிரதானத் தொழிலாக கொண்டவர்கள் செக்கடிக்குப்பத்துக் காரர்கள். அறுபதுகளில் மேல்மலையனூருக்கு பகுத்தறிவுப் பிரச்சாரம் செய்ய பெரியார் வந்தார். செஞ்சிக்கு அண்ணா வந்தார். இவர்களது சிந்தனைகளை மேடைவாயிலாக உணர்ந்த ஒரு இளைஞர் கூட்டம், தங்களை பகுத்தறிவுப் பாதைக்கு திருப்பிக் கொண்டது. மூடநம்பிக்கைகளை ஒழித்து, தமிழுணர்வுக்கு முக்கியத்துவம் தர ஆரம்பித்தார்கள்.

வியாழன், 14 அக்டோபர், 2010

போராளிகளில் மேலும் 500 பேர் விடுவிப்பு

புனர்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னாள் உறுப்பினர்கள் 500 பேர்  பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட உள்ளனர். இதற்கான வைபவம் வவுனியா கலாசார மண்டபத்தில் 15/10/ 2010 காலை நடைபெற உள்ளது  இறுதிக்கட்ட யுத்தத்தின்போது சரணடைந்த புலிகள் இயக்கச் சந்தேக நபர்கள் நாட்டில் உள்ள புனர்வாழ்வு முகாம்களில் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு வருகின்றனர்?. புனர்வாழ்வுப் பயிற்சிகளை நிறைவு செய்த இவர்கள் கட்டம் கட்டமாக இவர்களது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டு வருகின்றனர் என்று தெரிவிக்கப்படுகின்றது. அதேவேளை, நாட்டில் உள்ள புனர்வாழ்வு முகாம்களில் புனர்வாழ்வு பயிற்சிகளை நிறைவு செய்த நாலாயிரத்து ஐந்நூறு பேர் அவர்களது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை அரசாங்கத்தின் படிப்பினைகள் மற்றும் இணக்கப்பாட்டுக்கான ஆணைக்குழு புறக்கணிப்பு

இலங்கை அரசாங்கத்தின் படிப்பினைகள் மற்றும்இணக்கப்பாட்டுக்கான ஆணைக்குழுவின் முன்பாக சாட்சியம் அளிக்க வருமாறு விடுக்கப்பட்ட அழைப்பை சர்வதேச மனித உரிமைக்குழுக்களான சர்வதேச மன்னிப்புச் சபை, ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் மற்றும் இண்டர் நேஷனல் கிறைசிஸ் குரூப் ஆகியவை நிராகரித்துள்ளன. இந்த நிலையிலேயே இந்த ஆணைக்குழுவால் சாட்சியமளிக்க வருமாறு விடுக்கப்பட்ட அழைப்பை இந்த மூன்று சர்வதேச மனித உரிமை அமைப்புக்களும் மறுத்திருக்கின்றன. இந்த ஆணைக்குழுவின் சுயாதீனத்தன்மை குறித்து இத்தகைய சர்வதேச அமைப்புக்கள் பல தடவைகள் முன்னரேயே விமர்சனங்களை முன்வைத்து வந்திருக்கின்ற போதிலும், அந்த விசாரணையை அவை நிராகரித்திருப்பது உள்ளூரிலும், சர்வதேச மட்டத்திலும் தற்போது ஒரு முக்கியமான அம்சமாகப் பார்க்கப்படுகின்றது.

சனி, 9 அக்டோபர், 2010

புலிகளின் பேச்சாளர் இளந்திரையனை இராணுவமே அழைத்துச் சென்றது

2009 ம் ஆண்டு மே மாதம் 17 ம் தேதி தனது கணவர் இராணுவத்தினரால் காயத்திற்கு சிகிச்சையளிக்க வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதாகக் கூறி அழைத்துச் செல்லப்பட்டதாகவும், அதன் பின்னர் தனது கணவனைப் பற்றிய தகவல்கள் இல்லை." என தெரிவித்தார். இளந்திரையன் மனைவி வனிதா சிவரூபன்.  கணவன் இராணுவத்தினரால் அழைத்துச் செல்லப்பட்டு சில நாட்களின் பின்பு முகாமில் தங்கியிருந்தபோது, அங்கு சி.ஐ.டி. என தம்மை அறிமுகப்படுத்தி வந்த இருவர் கணவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகக் கூறி தங்களை அழைத்துச் செல்ல வந்த போதிலும் தாம் மறுத்து விட்டதாகவும் தெரிவித்தார்

நினைவு வீர வணக்கங்கள்

1987.10.10 தமிழீழ வரலாற்றில் புதிய சரிதம் ஒன்றைப் படைக்கப்போகும் அந்த இரவு அமைதியாக உறங்கிக் கொண்டிருந்தது. ஆணிவேர் ஆளப்பதிந்து கொண்டிருந்த எமது போராட்டத்தை அழித்துவிடும் நோக்குடன் தமிழீழத்திற்கு அனுப்பப்பட்ட இந்திய இராணுவம் போராளிகளைத் தேடி, இருள் கிழித்து உலாவத் தொடங்கியது. எல்லா இடங்களிலும் எம்மவரின் விழிகள் பகை வரவை எதிர்பார்த்தபடி காத்திருந்தன. அப்போது நேரம் 1.15. கோப்பாய் கிறேசரடியில் நின்ற மகளிர் அணி வீதியில் போய்வரும் ஊர்திகள் யாருடையவை என அவதானித்தவாறு தாக்குதலுக்குத் தயாராக நிற்க, அதில் ஒருவராக தனது ஆ16 ஐ அணைத்துப்பிடித்தபடி மாலதியும் நிற்கின்றார்.

தமிழீழப் பெண்கள் எழுச்சி நாளும் ,02ஆம் லெப்டினன் மாலதியின் நினைவு நாளும்

மனிதகுல வரலாற்றில் கிறிஸ்துவுக்கு 6000 (ஆறாயிரம்) ஆண்டுகளுக்கு முன் தாய் வழிச் சமூகமே இவ்வுலகில் ஆட்சி புரிந்தது. காடுகளில் குழந்தைகள் குழுக்களாக வாழ்ந்த காலத்தில் தாயின் இராச்சியமே நடைபெற்றது. குழுவிற்கு தாய்தான் தலைமை தாங்கினாள். பெண்ணே பெரிதாக மதிக்கப்பட்டாள். தாய் என்ற சொல்லே மருவி தலைவி என்றாகிவிட்டது என வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர். தன்னுடைய இனத்தைக் காக்கும் சக்தியாக பெண் விளங்கினாள். அவளின் சக்திக்கு கட்டுப்பட்டு பின்னால் செல்ல அவளது சமூகம் தயாராகவிருந்தது அன்று. தனது இனத்தை பாதுகாக்கவும், அவர்களுக்கு உணவு கொடுக்கவும், தேவையானவற்றை தேடிக் கொடுக்கவும், தாயானவள் தன்னைப் பலி கொடுக்கவும் தயாராகவிருந்தாள் என்பது உயர்ந்த தியாகமாகும். அது அன்றே இருந்தது.

புதன், 6 அக்டோபர், 2010

அதிகளவு கைதிகள் சட்டவிரோதமான முறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நாடாக இலங்கை

உலகில் அதிகளவு கைதிகள் சட்டவிரோதமான முறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நாடாக இலங்கை திகழ்வதாக ஜனநாயகத்திற்காக பல்கலைக்கழக விரிவுரையாளர் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. இதில் 8000 அரசியல் கைதிகள் அடங்குவதாக ஜனநாயகத்திற்காக பல்கலைக்கழக விரிவுரையாளர் அமைப்பின் உறுப்பினர் பேராசிரியர் குமார் டேவிட் தெரிவித்துள்ளார். சர்வதேச ஜூரிகள் பேரவையினால் இந்தப் புள்ளி விபரத் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இராணுவ அதிகாரிகளின் நடவடிக்கைகள் கண்காணிப்பு

சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளின் நட வடிக்கைகள் தொடர்பில் உளவு பார்க்கப்படுவதாக சிங்கள இணையம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. சரத் பொன்சேகாவுக்கு ஆதரவான இராணுவ அதிகாரிகளின் நடவடிக்கைகள் இவ்வாறு கண்காணிக்கப்படுவதாக குறித்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.உளவுப் பணிகளை மேற்கொள்வதற்காக விசேட பிரிவொன்று கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. சரத்பொன்சேகாவுக்கு ஆதரவான உயர் இராணுவ அதிகாரிகள் என சந்தேகிக்கப்படும் அதிகாரிகளின் சாரதிகளாகவும் பாதுகாப்பு உத்தியோகத்தர்களாகவும் உளவாளிகள் கடமையாற்றி வருகின்றனர்.

முல்லைத்தீவு மாவட்ட இராணுவக் குடியிருப்புகள், முகாம்கள்

 முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பிலிருந்து வற்றாப்பளை வரையான பிரதேசத்தில் சுமார் 10 ஆயிரம் ஏக்கரில் இராணுவ குடியிருப்புகளையும், பாரிய இராணுவ முகாம் மற்றும் விமான நிலையம் ஆகியவற்றையும்  அமைக்கும் வேலையில் அரசு ஈடுபட்டிருக்கிறது.''வன்னியிலிருந்து இடம் பெயர்ந்தவர்களில் இரண்டரை இலட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட போதிலும் ஒருவருக்குக்கூட நிரந்தர வீடு கட்டிக்கொடுக்கப் படவில்லை என்றும், தகரங்களினால் அமைக்கப்பட்ட தற்காலிக குடிசைகளிலேயே அவர்கள் வாழ்வதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கிறார்கள் 

பண்டாரவன்னியன் சிலையை மீண்டும் அதே இடத்தில் நிறுவ வேண்டும் கற்சிலைமடு மக்கள் கோரிக்கை

கற்சிலைமடுவில் உடைக் கப்பட்டுள்ள வன்னி மன்னன் பண்டாரவன்னியனின் உருவச்சிலையையும், நினைவுக் கல்லையும் மீண்டும் அப்பகுதியில் அமைக்குமாறு கற்சிலைமடு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.எமது வரலாற்றுச் சின்னமான அந்தச் சிலையை விரைவில் அமைப்பதற்கான நடவடிக்கை கள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் சங்கிலியன் மன்னனின் சிலை எவ்வாறு பாதுகாக்கப்பட்டு வரலாற்றுச் சான்றாகப் பேணப்படுகின்றதோ அதேபோன்றே வன்னியில் பண்டார வன்னியனின் சிலையும் பாதுகாக்கப்பட்ட வரலாறு பேணப்பட வேண்டும். எனினும் எமது வரலாற்றை மறைப்பதற்காகத் திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த நடவடிக்கை எமக்கு மிகுந்த மனவேதனையைத் தருகின்றதெனவும் அந்த மக்கள் தெரிவித்துள்ளனர்
.

திங்கள், 4 அக்டோபர், 2010

வீர வணக்கங்கள்

இந்திய அரசின் வஞ்சகச்சதியால் மாண்ட வேங்கைகள் வீரவணக்கங்கள்

தமிழீழக் கடற்பரப்பிலே பயணித்துக் கொண்டிருந்த லெப்.கேணல் குமரப்பா, லெப்.கேணல் புலேந்திரன் உட்பட்ட பன்னிரு வேங்கைகளைக் கைதுசெய்து அவர்களின் சாவுகளுக்கு சிறீலங்கா - இந்திய அரசுகள் காரணமாகின. அது அனைத்து மக்களையும் இன்னுமோர் சோகத்தில் ஆழ்த்தியது. 1987ம் ஆண்டு யூலை 29ம் நாள் சிறீலங்கா - இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. சிறீலங்கா - இந்திய ஒப்பந்தம் மூலம் தமிழ் மக்களிற்கு நன்மைகள் கிட்டும், இந்தியா எமக்கு ஒரு வழியைக்காட்டும் என நம்பியிருந்த மக்களிற்கு மாறாக துன்பங்களையும் துயரங்களையுமே சிறீலங்கா அரசும், இந்திய அரசபடைகளும் சுமத்தின. 1987ம் ஆண்டு ஒக்டோபர் 3ம் நாள் தமிழீழக் கடற்பரப்பிலே நிராயுத பாணிகளாக எதிர்கால எண்ணக் கனவுகளுடன் லெப்.கேணல் குமரப்பா, லெப்.கேணல் புலேந்திரன் உட்பட்ட பன்னிரு வேங்கைகள் படகில் பயணித்தனர். அன்று விடுதலைப் போராட்டம் முனைப்பு பெற்றிருந்த காலத்தில் மிகத்திறமையான படகோட்டிகள், ஆழ்கடலோடிகளாகச் செயற்பட்டவர்கள் இவர்கள்.