செவ்வாய், 18 ஜனவரி, 2011

யாழ் கச்சேரி நல்லூரில் 65பவுண் நகைகள் கத்திமுனையில் கொள்ளை

யாழ்ப்பாணம் கச்சேரி நல்லூர் பகுதி வீடொன்றில் ஓட்டைப் பிரித்து உள் நுழைந்த ஐவர் கொண்ட திருடர் குழுவொன்று அங்குள்ளவர்களை மிரட்டி 65 பவுண் நகைகளைக் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.இதுபற்றி மேலும் தெரியவருவதாவது,வேலுப்பிள்ளை வேதநாயகம் வயது 70 என்பவரது வீட்டிற்குள் சென்ற திருடர் குழுவே அவரது மனைவி வேதநாயகம் பரிமளகாந்தி (வயது 62), அவரது மகளான வேதநாயகம் அர்ச்சனா (வயது21) இவர்களைக் கத்தி முனையில் வைத்தே நகைகளைகொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.

படையினரின் சோதனைகள் சுற்றிவளைப்புக்கள் அதிகரிப்பு!!

மானிப்பாயில்  துப்பாக்கிப் பிரயோகத்தைத் தொடர்ந்து நவாலிப் பகுதியில் சுற்றிவளைப்பு நடவடிக்கையில் படையினர் ஈடுபட்டுள்ளதுடன் மானிப்பாய் நவாலி பிரதான வீதிகளில் இராணுவத்தினர் கடும் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
மானிப்பாய் சங்கரப்பிள்ளை வீதியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் அவ் வீட்டின் குடும்பத்தலைவி தெரிவிக்கையில்
,

மாவை சொல்வது அப்பட்டமான பொய் – பத்மினி சிதம்பரநாதன்

தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தமிழ் தேசிய மக்கள் முன்னணி முக்கிஸ்தர் பத்மினி சிதம்பரநாதனுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுவருவதாக தெரிவித்துள்ள கருத்து முற்றுமுழுதான பொய் என்று பத்மினி சிதம்பரநாதன்  தெரிவித்துள்ளார்.கூட்டுச் சேர்வது தொடர்பில் பத்மினி சிதம்பரநாதனுடனும் பேச்சு நடத்திவருகின்றோம் என்று மாவை சேனாதிராசா தெரிவித்துள்ள கருத்துத் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

வயாவிளான் கிழக்குப்பகுதிகளில் மீளக்குடியமர்த்துவதற்கான அனுமதி கிடைக்கவில்லை

வயாவிளான் கிழக்குப்பகுதிகளில் கண்ணிவெடி அகற்றப்பட்டமைக்கான சான்றிதழ் கிடைக்கப்பெற்றபோதும் பாதுகாப்பு அமைச்சிடம் இருந்து அந்தப்பகுதியில் மக்களை மீளக்குடியமர்த்துவதற்கான அனுமதி கிடைக்கவில்லை என்றுதெரிவிக்கப்படுகின்றது.வலி.வடக்கு பிரதேசங்க ளில் மக்களை மீளக்குடிய மர்த்துவதற்கான நடவடிக்கைகள் கடந்த வருடம் நவம்பர் 27 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.

நல்லிணக்க ஆணைக்குழுவின் அழைப்பை அலட்சியம் செய்தார் சந்திரிகா

கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்க வருமாறு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவுக்கு விடுக்கப்பட்ட அழைப்பை அவர் அலட்சியம் செய்துவருவதாக ஆணைக்குழுவின் உறுப்பினரொருவர் தகவல் தெரிவித்துள்ளார்.சாட்சியமளிக்க வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டு இரண்டு வாரங்கள் கழிந்த நிலையிலும் அது தொடர்பில் அவர் இதுவரை பதிலளிக்கவில்லை என்று கூறப்படுகின்றது. அத்துடன் எதிர்வரும் காலங்களிலும் அவர் பதிலளிக்கவோ, சாட்சியமளிக்கவோ தயாராக இல்லை என்பதாகச் சந்திரிகாவுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இரகசிய சுவிஸ் வங்கிக்கணக்கு விபரங்களை வெளியிடவுள்ள விக்கிலீக்ஸ்

அதிரடியாக இரகசியங்களை வெளியிட்டுவரும் இணையத்தளமான விக்கிலீக்ஸிடம் தற்போது சுமார் 2000 சுவிஸ் வங்கிக்கணக்காளர்களின் இரகசிய கணக்கு விபரங்கள் அடங்கிய 2 இறுவட்டுக்கள் கிடைத்துள்ளதால் இவை கூடிய விரைவில் வெளியாகலாம் எனஎதிர்ப்பார்க்கப்படுகின்றது.இந்த இறுவட்டுக்கள் சுவிஸ் வங்கியின் முன்னாள் உழியர்களில் ஒருவரான ருடோல்ப் எல்மாராலேயே அசாஞ்சேவிற்கு வழங்கப்பட்டுள்ளது.

மெனிக்பாம் முகாமில் இருந்து பெண்கள் கொழும்புக்குப் பலவந்தமாக அனுப்பிவைப்பு

கொழும்பில் உள்ள ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றுவதற்காக வவுனியா மெனிக்பாம் முகாமில் இருந்து பெண்களும் சிறுமியரும் பலவந்தமாக அனுப்பி வைக்கப்படுகின்றனர் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் குற்றம் சுமத்தியுள்ளார்.கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று 18பேரும், திங்களன்று 30 பேரும் வவுனியாவில் இருந்து அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

திங்கள், 17 ஜனவரி, 2011

இலங்கை அகதிகளின் வருகையை தடுப்பது தொடர்பிலான பேச்சுவார்த்தை .கனடா அரசாங்கம்

கனடாவுக்கு செல்லவுள்ளதாக கூறப்படும் மேலும் 400 இலங்கை அகதிகளின் வருகையை தடுப்பது தொடர்பிலான பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாக கனடா அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஒட்டாவா சிட்டிசன் பத்திரிகை, கனேடிய அரச அதிகாரிகளை மேற்கோள் காட்டி இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. தென் கிழக்காசிய நாடு ஒன்றில் இரண்டு இரண்டு தனித்தனி கப்பல்கள் மூலம் 400 தமிழ் அகதிகள் வரையில் கனடா நோக்கி வருவதாக புலனாய்வுத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை தடுப்பது குறித்து தற்போதே கனடா அரசாங்கம் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாக கூறப்படுகிறது.

பத்திரிகை ஒன்றே மக்களைத் தவறாக வழிநடத்துகின்றது .. டக்ளஸ்.

யாழ். குடாநாட்டில் உள்ள பத்திரிகை ஒன்றே மக்களைத் தவறாக வழிநடத்துகின்றது என்று நேற்றுக் குற்றஞ்சாட்டினார் அமைச்சர் டக்ளஸ். வசாவிளானில் புனரமைக்கப்பட்ட கட்டத்தைத் திறந்து வைத்துப் பேசிய அவர், பத்திரிகை ஒன்றைச் சாடுவதில் தனது மூன்றரை நிமிடப் பேச்சின் கணிசமான பகுதியைச் செலவிட்டார். "வழமைபோல் சில பத்திரிகைகள் மக்களைத் தவறாக வழி நடத்தி வருகின்றன. இதற்கு முன்னர் வந்தவேகத்தில் திரும் பியது வசாவிளான் மகாவித்தியாலயம் என முன்பக்கத்தில் செய்தி வெளியிட்டிருந்தது அந்தப்பத்திரிகை

பாகிஸ்தான் இராணுவத் தளபதி இலங்கை பயணம்!

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஜெனரல் அஷ்பாக் பர்வேஷ் கயானி இலங்கை வரவுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.விசேட விமானம் மூலம் பண்டாரநாயக்க – கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தை வந்தடையவுள்ள பாகிஸ்தான் இராணுவ தளபதியை இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரிய விமான நிலையத்தில் வரவேற்கவுள்ளார்.

பொன்சேகா நோய் தாக்கத்திற்கு உட்பட்டுள்ளார்

முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா நோய் எதிர்ப்பு சக்தி குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் அவரது தலைமுடி உதிர்வதுடன், சருமநோய் ஏற்பட்டுள்ளதாகவும்சில வருடங்களுக்கு முன்னர்  இடம்பெற்ற குண்டுத் தாக்குதலின் காரணமாக சரத் பொன்சேகா பாதிப்படைந்ததாகவும் சிறைச்சாலை ஆணையாளர் வி.ஆர்.டி.சில்வாவிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, சரத் பொன்சேகாவிற்கு அவசியமாக சிகிச்சைகள் வழங்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

பெண் மீது துப்பாக்கிப் பிரயோகம் ;யாழ்.மானிப்பாயில்

யாழ். மானிப்பாய் ஆஸ்பத்திரி வீதியில்   இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் பெண்ணொருவர் படுகாயமடைந்து யாழ். போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  இந்த சம்பவத்தில் யாழ். மானிப்பாய் ஆஸ்பத்திரி வீதியை சேர்ந்த 31 வயதான சிறிபாலசுந்தரம் நினோஷா என்பவரே பாடுகாயமடைந்துள்ளார்.
இவர் வீட்டு வாசலில் முன்னால் நின்ற போது இவர் மீது இனந்தெரியாதோர் துப்பாக்கிச்சூட்டை நடத்திவிட்டு தப்பி சென்றுள்ளனர்

சனி, 15 ஜனவரி, 2011

ஊரிக்காடு கடற்கரையில் ஆண் ஒருவரின் சடலம் கரை ஒதுங்கியுள்ளது

வல்வெட்டித்துறை ஊரிக்காடு இராணுவ முகாமுக்கு பின்புறமாக கடற்கரையில்  ஆண் ஒருவரின் சடலம் அழுகிய நிலையில் கரை ஒதுங்கியுள்ளது.சுமார் 45 வயது மதிக்கத்தக்க காக்கி நிற அரைக்காற்சட்டையுடன் காணப்படும் சடலத்தின் இடது கையில் "கே. குப்புசாமி" என்று பச்சை குத்தப்பட்டுள்ளது.5 அடி 4 அங்குலம் உயரம் கொண்ட இந்தச் சடலத்தின் வலது கால் தொடையில் நட்சத்திர அடையாளமும் காணப்படுகிறது என்றும் தலைப்பகுதி மோசமாக அழுகி சிதைந்துள்ளது என்றும் வல்வெட்டித்துறைப் பொலிஸார் தெரிவித்தனர்.சடலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இதேவேளை, இந்தச் சடலம் இந்திய மீனவர் ஒருவருடையதாக இருக்கலாம் எனச் சந்தேகம் தெரிவிக்கப்பட்டது

கூட்டமைப்பு எங்கே செல்கிறது!? ஆனந்த சங்கரி, வரதாஜப்பெருமாள், சித்தார்த்தனுடன் கூட்டு!

தமிழர்விடுதலைக்கூட்டணித் தலைவர் ஆனந்தசங்கரி, ஈபிஆர்எல்எப் வரதர் அணித் தலைவர் வரதாஜப்பெருமாள், புளொட் தலைவர் சித்தார்த்தன், தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் சிவாஜிலிங்கம் உட்பட்டவர்களும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் இணைந்து செயற்படுவதற்கான தீவிர முன்முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.தமிழ் அரங்கத்தில் செயற்பட்டுவந்த குறித்த கட்சிகளின் குழுவினருக்கும் கூட்டமைப்புக் குழுவினருக்கும் இடையிலான குழு நிலைச் சந்திப்புக்கள் நடைபெற்றுவரும் நிலையில் இந்த விடயத்தில் உடன்பாடு எட்டுவதற்கான முனைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய விமானப்படைத் தளபதி இலங்கை பயணம்!

இந்திய விமானப்படைத் தளபதி  எயார் சீப் மார்சல் ஜீ.வீ.நயிக் உத்தியோகபூர்வ பயணம் ஒன்றை மேற்கொண்டு இலங்கை செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பயணத்தின் போது இரு நாட்டு பாதுகாப்பு உறவுகள் குறித்து கலந்துரையாடவுள்ளதாக விமானப்படைத் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.
இந்திய விமானப்படை தளபதி தனது இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி, பாதுகாப்பு செயலாளர் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.இரண்டு நாட்கள் விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை பயணமாகவுள்ள அவர் இலங்கையில் காணப்படும் இராணுவ முகாம்களுக்கும் விஜயம் செய்யவுள்ளார் என்று கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பதவி ஏற்பின் போதே இந்தியாவிற்கு சவால் விடுத்தார் இலங்கை கடற்படைத் தளபதி!

இலங்கை கடற்படை அதிகாரிகள் இந்திய மீனவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதை முடிந்தால் ஆதாரத்துடன் நிரூபிக்குமாறு புதிய கடற்படைத் தளபதி சோமதிலக திஸாநாயக்க சவால் விடுத்துள்ளார்.புதிய கடற்படைத் தளபதியாக நியமிக்கப்பட்ட பின்னர் இன்றைய தினம் தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்ட போதே அவர் சவால் விடுத்துள்ளதாக தெரியவிக்கப்படுகின்றது.இலங்கையின் 17ஆவது கடற்படைத் தளபதியாக சோமதிலக திஸாநாயக்க பாதுகாப்பு செயலாளரால் அண்மையில் நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. சில நாட்களின் முன்னர் இலங்கைக் கடற்படையினர் நடத்திய தாக்குதில் இந்திய மீனவர் ஒருவர் உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது

இலங்கை செல்லத் தயாராகும் ஐ.நா நிபுணர் குழு!

இலங்கையில் நடைபெற்ற இறுதிப் போரின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல் குறித்து தனக்கு ஆலோசனை வழங்கவென ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் நியமித்துள்ள நிபுணர் குழு இலங்கை வர தயாராகி வருவதாக பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.இலங்கை வருவதற்கான சூழ்நிலைகளை ஏற்படுத்தி அதற்கான திட்டங்களை நிபுணர் குழு செயற்படுத்தி வருவதாக வெளிநாட்டு ஊடகமொன்றிற்கு கருத்து வெளியிட்டுள்ள பான் கீ மூன் கூறியுள்ளார்.

80 முன்னாள் போராளிகள் யாழில் விடுதலை

யாழ்ப்பாணத்தில் யாழ் மாவட்ட செயலகம்,, தேசிய இளைஞர் சேவைகள் மன்றம், யாழ் பல்கலைக்கழகம், கல்வித் திணைக்களம் மற்றும் சமூக அமைப்புக்கள் ஆகியவற்றின் அனுசரணையோடு தைப்பொங்கல் கலாசார விழா நடைபெற்றபோது புனர்வாழ்வு அளிக்கப்பட்ட 80 முன்னாள் போராளிகள் உறவினர்களிடம் ஓப்படைக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

வியாழன், 13 ஜனவரி, 2011

புலிகளின் தாக்குதலில் தப்பியவரே புதிய கடற்படைத் தளபதி

17வது கடற்படைத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள ரியர் அட்மிரல் எஸ்.திஸாநாயக்க தமிழீழ விடுதலைப் புலிகள் 1995ஆம் ஆண்டு மேற்கொண்ட தாக்குதல் ஒன்றில் உயிர் தப்பியவர் எனத் தெரிய வருகிறது.1995ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 19ஆம் திகதி திருகோணமலைக் கடற்படைத் தளத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த “ரணசுறு” என்ற சீனத் தயாரிப்புப் பீரங்கிப் படகின் மீது கடற்கரும்புலிகள் மேற்கொண்ட தாக்குதலின் போதே இவர் உயிர் தப்பியிருந்தார். தமிழீழ விடுதலைப் புலிகளால் இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட போது இவர் அப்பீரங்கிப் படகில் இருந்தார். இவருடன் இருந்த பல கடற்படை அதிகாரிகளும் மற்றும் கடற்படையினரும் இத்தாக்குதல் சம்பவத்தில் கொல்லப்பட்டிருந்தனர்.

கிட்டு ஒரு தனிமனித சரித்திரம்,

கிட்டு ஒரு ஓர்மமான போராளி. அவரது வீரம், விவேகம், வேகம், துணிச்சல் மக்களிடையே பிரமிப்பை ஊட்டியது. எண்பது முற்பகுதியில் மக்கள் இராணுவத்துக்குப் பயந்து மூலையில் பதுங்கி நடுங்கி ஒடுங்கி இருந்த காலம். "ஆமி கோட்டையில் இருந்து வெளிக்கிடுறானாம்" என்ற செய்தி காற்றில் வந்தால் போதும். கிட்டு காற்றினும் வேகமாகச் சென்று வெளிக்கிட்ட இராணுவத்தை மறுபடியும் கோட்டைக்குள் அடித்துத் துரத்துவார். அப்படி அடித்துத் துரத்து மட்டும் ஓயமாட்டார். பலாலி, நாவற்குழி, வல்வெட்டித்துறை, பருத்தித்துறை, ஆனையிறவு இப்படி எந்த முகாமில் இருந்து இராணுவம் புறப்பட்டாலும் கிட்டு அங்கு தனது போராளிகளுடன் நிற்பார். கிட்டு களத்தில் நிற்கிறார் என்றால் மக்களுக்கு இனந்தெரியாத துணிவு எங்கிருந்தோ வந்துவிடும்.

உரும்பிராயில் கிணற்றுக்குள்ளிருந்து மீட்கப்பட்ட சடலம் அடையாளம் காணப்பட்டது

உரும்பிராய் யோகபுரம் பகுதியில் கிணற்றுக்குள் இருந்த சடலம் நேற்று மீட்கப்பட்டு போதனா வைத்தியசாலையில் பிரேதப் பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டிருந்தது.குறித்த சம்பவம் தொடர்பில் நீதிமன்ற உத்தரவிற்கமைவாக குறித்த கிணற்றை இறைத்தபோது கிணற்றுக்குள்ளிருந்து கையடக்கத் தொலைபேசி மற்றும் சறம் என்பன மீட்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இது காணாமற் போன தமது உறவினரென உறவினர்களால் சடலம் அடையாளம் காணப்பட்டது இச் சம்பவத்தில் உரும்பிராய் யோகபுரத்தைச் சேர்ந்த மகேஸ்வரன் அமல்ராஜ் 35 வயதுடைய 5 பிள்ளைகளின் தந்தை இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார். இவர் கடந்த 3ம் திகதி காணாமற் போயுள்ளதாக அவரது சகோதரி மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாட்டினைச் செய்துள்ளமை. குறிப்பிடத்தக்கது மனைவி வன்னியில் இடம்பெற்ற இறுதிநேர யுத்தத்தின்போது ஷெல்வீச்சில் பலியானதாகவும் குறித்த நபர் தனது பிள்ளைகளுடன் தாயாருடன் தங்கியிருந்து கூலி வேலை செய்து வருவதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீனவர் கொலை: இலங்கையிடம் இந்தியா புகார்

தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர் ஒருவர், இலங்கைக் கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டை அடுத்து, இது குறித்து, இலங்கையிடம் இந்தியா தனது கவலையை வெளிப்படுத்தியிருக்கிறது. டெல்லியில் உள்ள இலங்கைத் தூதரை அழைத்து இந்திய வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் இது தொடர்பாக முறைப்படி புகார் அளித்திருக்கிறார்கள். நாகை, புதுக்கோட்டை மாவட்டங்ளைச் சேர்ந்த மீனவர்கள், நேற்று ஜெகதாப்பட்டினத்திலிருந்து விசைப்படகில், கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றார்கள். அப்போது, இந்தியக் கடல் எல்லைக்குள்  இலங்கைக் கடற்படை நுழைந்து துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், அதில் பாண்டியன் என்பவர் உயிரிழந்ததாகவும் மீனவர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

புதன், 12 ஜனவரி, 2011

மழை மட்டக்களப்பு மற்றும் அப்பாறையில் கடுமையான பாதிப்புகள்:பத்து லட்சம் பேர் பாதிப்பு

இலங்கையில் பெய்து வரும் கடும் மழை மற்றும் வெள்ளம் காரணமாக பத்து லட்சம் பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளதாக தற்போதுவெளியாகியுள்ளதகவல்கள்தெரிவிக்கின்றன.மட்டக்களப்பு மற்றும் அப்பாறையில் கடுமையான பாதிப்புகள் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள மட்டக்களப்பு மாவட்டத்தில் மணிக்கு மணி அகதிகளுக்கான முகாம்களின் தேவை அதிகரித்து வருகின்றது என்று இலங்கை அமைச்சர் ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார்.அங்கு பால், குழந்தைகளுக்கான உணவு, கொசு வலைகள், துண்டுகள், படுக்கை விரிப்புகள் ஆகியவற்றுக்கான உடனடி தேவை ஏற்பட்டுள்ளது.

இலங்கை அரசை விமர்சிக்கக் கூடாதா? குமுறுகிறார் செங்கடல் பட இயக்குநர் லீனா மணிமேகலை

இலங்கை அரசை விமர்சிக்கக் கூடாது என்று நிபந்தனையே விதிக்கும் அளவுக்கு மோசமான நிலைமைக்குள் படைப் பாளிகளைச் சிறைப்படுத்தப் பார்க்கிறது இந்திய அரசு இவ்வாறு  "செங்கடல்" படத்தின் இயக்குநர் லீனா மணிமேகலை குமுறுகிறார்.துயரத்தில் தவிக்கும் இலங்கைத் தமிழர், இந்தியத் தமிழ் மீனவர்கள் பிரச்சினையில் இலங்கை  இந்திய  தமிழக அரசுகளின் நிலைப்பாட்டை விமர்சிப்பதால் "செங்கடல்" படத்துக்கு சென்னை தணிக்கைக் குழு  தடை விதித்துள்ளது. இப்போது படத்தை மறுதணிக்கைக்கு அனுப்பும் முடிவில் உள்ளார் இயக்குநர் லீனா

தமிழ் தேசிய கூட்டமைப்பு - ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சந்திப்பு

தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. தற்போதைய அரசியில் சூழ்நிலைகள் தொடர்பில் இந்த சந்திப்பின் போது ஆராயப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சந்திப்பில் கூட்டமைப்பின் சார்பில் மாவை சேனாதிராஜா, சுரேஸ் பிரேமசந்திரன், மற்றும் செல்வம் அடைக்கல நாதன், ஆகியோர் கலந்து கொண்டனர். ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ரவுப் ஹக்கிம் மற்றும் பொது செயலாளர் ஹசன் அலி ஆகியேர் பங்கு கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

ஹம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்தி குறித்து இந்தியா கவலை கொண்டுள்ளதாக விக்கிலீக்ஸ் தகவல்

ஹம்பாந்தோட்டை நகரில் சீன அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்பட்டு வரும் துறைமுக அபிவிருத்தி திட்டம் தொடர்பில் இந்தியா கவலை கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.அமெரிக்க இரகசிய இராஜதந்திர ஆவணங்களை வெளியிட்டு வரும் விக்கிலீக்ஸின் பிந்திய வெளியீடுகளில் இந்த விடயம் தொடர்பான தகவல்கள் அடங்கியுள்ளதாக ஏஷியன் ட்ரிபியூன் செய்தி வெளியிட்டுள்ளது.ஏப்ரல் மாதம் 27 ஆம் திகதி 2007 ஆம் ஆண்டு என திகதியிடப்பட்ட இராஜதந்திர தகவல் பரிமாற்ற கோப்பில் இது தொடர்பான தகவல்கள் பரிமாறப்பட்டுள்ளன.

வடபகுதி யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு...இராணுவத்தினர் பிரசாரம்

தென்பகுதி ஆடை உற்பத்தித் தொழிற்சாலைகளில் வடபகுதி யுவதிகளுக்கு வேலைவாய்ப்புப் பெற்றுத்தரப்படும் என்றும் அதற்காக யுவதிகள் தேவைப்படுவதாகவும் நாட்டின் வடபகுதியில் இராணுவத்தினர் பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். இத்தகைய பிரசாரங்கள் எத்தகைய உத்தரவாதமும், ஒப்பந்தமும்,வெளிப்படைத்தன்மையும்இன்றிமேற்கொள்ளப்படுவதாகவும் மக்கள் இது குறித்து விழிப்பாக இருக்குமாறும் வடபகுதியில் அமைந்துள்ள சிவில் அமைப்புக்கள் கேட்டுள்ளன. இலங்கை இராணுவத்திலுள்ள பல்வேறு தரத்தையும் சேர்ந்த அதிகாரிகள் வடபகுதியின் யாழ்ப்பாணம்,வன்னி மற்றும் மீள் குடியேறிய கிராமப்புறங்களுக்குச் சென்று இவ்வாறான பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

'ஒரு சிங்களப் பெண்ணுக்கு இருக்கும் அக்கறை இங்கு உள்ள தமிழர்களுக்கு இல்லையே!!!!!

ஐந்தரை மணி நேரம் தொடர்ந்து பேச்சாளர்கள் முழங்கிக் கொண்டே இருந்தாலும், ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களைக் கட்டிப்போட்டிருந்தது, 'என்ன செய்யலாம் இதற்காக?’ என்ற புத்தகம்! சென்னையில் கடந்த 9-ம்தேதி நடந்த இந்த புத்தக வெளியீட்டுக் கூட்டத்தில், ஒட்டுமொத்தக் கவனத்தையும் ஈர்த்தவர் நிமல்கா பெர்​னாண்டோ.
இலங்கையில் இருந்து வந்திருந்த இவர், பிறப்பால் சிங்களவர். பாகுபாடுகள் மற்றும் இன வெறிக்கு எதிரான சர்வதேச இயக்கத்தின் தலைவரான நிமல்கா பேசப் பேச, 'ஒரு சிங்களப் பெண்ணுக்கு இருக்கும் அக்கறை இங்கு உள்ள தமிழர்களுக்கு இல்லையே?’ என்ற கவலை எல்லோர் முகத்திலும் முளைத்தது.இலங்கை மனித உரிமைப் போராளி நிமல்காவின் ஆங்கிலப் பேச்சில் அழுத்தமான அரசியல் பொறி தெறித்தது. ''நான் தமிழில் பேச முடியாமல் இருப்பதற்கு முதலில் வருந்துகிறேன்.

செவ்வாய், 11 ஜனவரி, 2011

கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் சீன உதவியில் "தயார்நிலை" முகாம்:வலிகாமத்தின் ராணுவத் தளமாகின்றது

முக்கிய மாவீரர் துயிலும் இல்லங்களில் ஒன்றாக இருந்த கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் வலிகாமத்தின் முக்கிய ராணுவத் தளமாகின்றது. மிகப் பெரிய படைத்தளம் ஒன்று அங்கு அமைக்கப்பட்டுள்ளது. நிரந்தர அரையிறுதி தகரங்களைக் கொண்டு இந்தத் தளம் அமைக்கப்பட்டுள்ளது. மாவீரர் துயிலும் இல்லத்தின் முகப்பு நுழைவாயிலை இடித்து வீழ்த்தியுள்ள படைத்தரப்பு அதனை ராணுவ தளத்திற்கேற்ற வகையில் வடிவமைத்தும் இருக்கின்றது. இப்பகுதிகளில் பொதுமக்கள் போக்குவரத்தில் ஈடுபடவும் கடந்த சில வாரங்களாக தடை விதிக்கப்பட்டும் இருந்தது. 

திங்கள், 10 ஜனவரி, 2011

யாழ் சுபாஸ் ஹோட்டல் உரிமையாளரிடம் கையளிப்பு !! சிறீதர் தியேட்டர் கையளிக்கப்படுமா?

யாழ்ப்பாணம் சுபாஸ் ஹோட்டல் இராணுவ முகாம் சித்திரவதைகளுக்கு பெயர் போனது அதே போல சிறிதர் தியேட்டர் ஒட்டுக்குழு அதிபதி டக்ளஸ் இன் அசுரத்தனத்திற்கும் அனியாயங்களுக்கும் பெயர் போனது. போர் முடிந்தும் மேற்கூறிய இடங்களை விட்டு டக்ளஸ் குழுவும் இராணுவமும் இன்னமும் அகலவில்லை. இந்த சூழலில் இப்போ இராணுவம் சுபாஸ் ஹோட்டலை 15 ஆம் திகதி உரிமையாளரிடம் கையளிக்கப்போவதாக கூறியுள்ளது. இதே போல சிறிதர் தியேட்டரை டக்ளஸ் விட்டு விலகுவாரா???

இலங்கைப் புலனாய்வுப் பிரிவினருக்கு பயிற்சி வழங்கத் தயார் – பாகிஸ்தான்

இலங்கைக் காவல்துறை உத்தியோகத்தர்களுக்கும், புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளுக்கும் புலனாய்வுப் பயிற்சிகளை வழங்கத் தயார் என பாகிஸ்தான் அறிவித்துள்ளது.இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவுகளை மேலும் வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென பாகிஸ்தான் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார் இதேவேளை, பாகிஸ்தானின் பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு இலங்கை பூரண ஒத்துழைப்பு வழங்கும் என சபாநயாகர் சமால் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தின் போது பாகிஸ்தான் வழங்கிய ஒத்துழைப்பு அளப்பரியதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

முதற்பெண் தளபதியான மேஜர் சோதியா அவர்களின் வீரவணக்க நாள்


தமிழீழ விடுதலைப்புலிகளின் முதற்பெண் தளபதியான மேஜர் சோதியா அவர்களின் 21 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்’மைக்கேல் வசந்தி’ என்ற இயற்பெயருடைய, யாழ் மாவட்டத்தில் வடமராட்சி, நெல்லியடியைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் யாழ் பல்கலைக்கழகத்தில் மருத்துவபீட மாணவியாவார். 1984 இல் புலிகள் அமைப்பில் இணைந்துகொண்டதோடு முதலாவது பயிற்சிமுகாமிற் பயிற்சிபெற்று தாயகம் திரும்பினார். புலிகளின் படையணியில் மருத்துவப்போராளியாகவும் தளபதியாகவுமிருந்தார்.

உயிர் அச்சுறுத்தல் காரணமாக யாழ்.குடாநாட்டில் மீண்டும்சரணடையும் படலம் ஆரம்பம்

யாழ். குடாநாட்டில் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் உயிர் அச்சுறுத்தல் எனக் கூறி மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ்.அலுவலகத்தில் குடும்பஸ்தர்  ஒருவர் சரணடைந்துள்ளார்.குடாநாட்டில் மீண்டும் படுகொலைகள் இடம்பெற்று வருவதன் காரணமாகவே யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 32 வயதுடைய பிரஸ்தாபகுடும்பஸ்தர்      சரணடைந்துள்ளார்.இவரை மனித உரிமைகள் ஆனைக் குழுவின் யாழ். அலுவலக அதிகாரிகள் யாழ். பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.இதேவேளை, யாழ்.மனித உரிமை ஆனைக்குழு அலுவலக இணைப்பதிகாரி த.கனகராஜ் விடுமுறையில் சென்றுள்ளதால் இது சம்பந்தமாக மேலதிக தகவல்கள் எதனையும் தரமுடியாதுள்ளதாக அங்கு கடமையில் இருந்த அதிகாரிகள் தெரிவித்தனர்

ஞாயிறு, 9 ஜனவரி, 2011

உரும்பிராய் பகுதியில் குடும்பஸ்தரை காணவில்லை

உரும்பிராய் வைத்தியசாலை வீதியைச் சேர்ந்த குடும்பஸ்தர்  காணாமல் போயுள்ளதாக  முறையிடப்பட்டுள்ளது. நான்கு பிள்ளைகளின் தந்தையான 52 வயதுடைய சின்னத்துரை குகதாஸ் என்பவரே காணாமல் போயுள்ளார். செருப்புத் தைக்கும் தொழிலாளியான இவர் தனது வீட்டுத் தேவைக்கு விறகு வாங்கி வருவதாக கூறி கடைக்குச் சென்றவர்  வீட்டிற்குத் திரும்பாத நிலையில் மனைவி இந்த முறைப்பாட்டைச் செய்துள்ளார்.
கடந்த பத்து நாட்களுக்குள் இந்தப் பகுதியில் இருந்து காணாமல் போயுள்ளவர்களில் இது மூன்றாவது சம்பவமாகும் இத்தகைய நிகழ்வுகளையிட்டு இந்தப் பகுதியில் உள்ள மக்கள் பெரிதும் கலங்கிப் போயுள்ளதுடன் பதட்டத்துடனும் காணப்படுகின்றார்கள்
.

புலிகளின் ஆயுதக்கப்பலுக்கு அரசின் தகவல்களை பரிமாறியதாம் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஆயுதக்கப்பல் தொடர்பான அரசின் தகவல்களை யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழு தக்க சமயத்தில், புலிகளிடம் பரிமாறிக் கொண்டது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாகுமாரதுங்க குற்றஞ்சுமத்தியுள்ள போதிலும், அந்தக் குற்றச்சாட்டை யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் தலைவராகச் செயற்பட்ட ட்ரைக்கோவ்டெலிப்சன் மறுத்துள்ளார் என்று விக்கிலீக்ஸ் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

40 போராளிகளுடன் சரணடைந்த புலிகளின் மன்னார் தளபதி எங்கே?

மன்னார் மாவட்டத்தில் புலிகளின் சிறப்புத் தளபதியாக இருந்த எனது கணவர்,40 முக்கிய போராளிகளுடன் 18.05.2009 அன்று  முல்லைத்தீவில் பங்குத்தந்தை வண.பிதாபிரான்சிஸ்ஜோசப் முன்னிலையில் இராணுவத்தினரிடம் சரணடைந்தார்.  இதுவரை அவர் பற்றி தகவல் எதுவும் இல்லை. எனது கணவர் இப்போது எங்கே இருக்கிறார் என்று தகவல் தாருங்கள்.இவ்வாறு  இளம்தாயான ஆர்.வெரோனியா கற்றுக் கொண்டபாடங்கள் நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் கோரிக்கை விடுத்தார். "

செவ்வாய், 4 ஜனவரி, 2011

செம்மணி நீரேரியில் இளைஞர் கும்பல் அட்டகாசம்

செம்மணி நீரேரியில் இளைஞர் கும்பல் ஒன்று மது போதை யில் அரைகுறை ஆடைகளுடன் நீராடியதுடன் வீதியில் வாகனங்களில் சென்றவர்களுடனும் சேஷ்டை விட்டனர். இதனால் பொதுமக்கள் கடும் அசௌ கரியங்களுக்கு உள்ளாகினர்இந்த இளைஞர்களில் பலர் யாழ்.நகரில் கஸ்தூரியார் வீதிப் பகுதியைச் சேர்ந்தவர்கள்.
சிறிய ஹன்ரர் வாகனம் ஒன் றில் வந்து இவர்கள் செம்மணி யில் ஏ9 வீதியில் உப்பளப் பக்கம் இருந்து மறுபக்கமாகப் பாய்ந்த வெள்ள நீரில் அரை குறை ஆடைகளுடன் இறங்கிக் குளித்தனர்.

கரும்புலியாய் வாழ்ந்து, கரும்புலியால் வாழ்ந்து., கரும்புலிகளோடு வாழ்ந்து

புலனாய்வு வழிமுறையில் எதிரிகளைச் செயலிழக்கச் செய்வது பற்றியே அவனது சிந்தனை சுழலும். அவனுடைய எண்ணம் முழுவதும் கரும்புலிகளும், அவர்களது வெற்றிக்குத் தேவையான திட்ட நகர்வுகளுமே நிறைந்திருந்தன.அவன் இன்னமும் வாழ்ந்து சாதித்திருக்க வேண்டியவன். தமி...ழீழத்தின் திறவுகோல்களாய் அமைந்திருக்கக்கூடிய இராணுவ வெற்றிகளை நோக்கியே அவனது படையப்புலனாய்வுச் செயற்பாட்டுக்காலச் சிந்தனைகள் இருந்திருக்கும். அதற்கான அறிவும், ஆற்றலும், பட்டறிவும் அவனிடம் இருந்தது.

ஞாயிறு, 2 ஜனவரி, 2011

கிளாலிப் படுகொலைகள் (02.01.1993 - 29.07.1993 வரை)

யாழ் குடாநாட்டினையும் அதன் வெளி நிலப்பரப்பையும் ஊடறுத்துச் செல்லும் பிரதான தரைவழி மார்க்கம் ஆனையிறவு ஆகும். 1990ஆம் ஆண்டு ஏப்பிரலுக்கு முன்னர் யாழ் குடாநாட்டிலிலுள்ள எட்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்களின் போக்குவரத்து, விநியோகப் பாதையாக ஆனையிறவு ஊடான தரை வழிப்பாதையே இருந்தது. 1990ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் மீண்டும் ஆரம்பமான போரின் விளைவால் தரைவழிப் பாதை மூடப்பட்டது. இதன் பின்னர் யாழ் மக்களின்போக்குவரத்துநகர்வுகள்,உணவுவிநியோகமார்க்கங்கள்என்பனஆனையிறவுக்குமேற்குப்புறமாகஅமைந்துள்ளபூநகரி-கேரதீவு-சங்குப்பிட்டியினூடாக நடைபெற்றது. இப்போக்குவரத்து மார்க்கம் கடல் நீரேரியூடாக இருந்தது.

பறவைகளே எங்கிருந்து வருகிறீர்கள்? முன்பும் நீங்கள் வந்ததாக ஞாபகம்!!!

கனவு பற்றி அதிகமாக ஆய்வு செய்தவர் ‘சிக்மண்ட் பிராய்ட்’ என்ற உளவியலாளர். கனவு பற்றி அவர் முன்வைத்த கருத்துக்கள் முதன்மை பெற்றுள்ள போதிலும் கனவு குறித்த பல கதைகள் ஏற்கெனவே நம்மிடம் உண்டு.திரிசடை கண்ட கனவு சீதையின் விடயத்தில் சரியாகிப் போனது. எனவே கனவுகள் அத்தனையும் நனவிலி மனத்தின் வெளிப்பாடு என்று கூறுவதற்கு அப்பால் எதிர்கால நிகழ்வுகளும் கனவுகளாகக் காட்சி தரும் என்பதை அடியோடு மறுத்துவிட முடியாது. அந்த வகையில் நேற்று இரவு ஆழ்ந்த நித்திரையில் ஒரு கனவு கண்டேன். அது வித்தியாசமான கனவு.மிகப்பெரியதொரு பறவைக் கூட்டம் போட்டி போட்டு பறந்து வருகிறது. பறவைகளில் கறுப்புப் பறவைகள் ஏராளம். பறக்க முடியாத பறவைகளும் தாராளம். குஞ்சுப் பறவைகள் முதல் முதிய பறவைகள் வரை தமது சிறகுகளை விரித்து அடித்துப் பறந்து வரும் வேகத்தைக் கண்ட போது, ஏதோ வைத்த பொருளை எடுக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு அவை பறந்து வருவதாக உணர முடிந்தது.

அரசுடன் பேசும் வாய்ப்பு இந்த மாதம் ஏற்படலாம் -சுரேஷ் பிரேமச்சந்திரன்

அரசியல் தீர்வு தொடர்பாக அரசாங்கத்துடன் இந்த மாதம் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு எதிர்பார்ப்பதாகத் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இச்சந்திப்பு தொடர்பில் அரசாங்கத்திடமிருந்து சாதகமான சமிக்ஞை தென்படுவதாக,, அரசாங்கத்தின் நிலைப்பாடு தொடர்பில் தமக்கு எதுவும் தெரியாது. அவர்கள் உண்மையாக செயற்பட்டால் எமது முன்மொழிவுகளை கையளிப்போம். நாம் பொறுத்திருந்து பார்ப்போம் என்றார். வடக்குக் கிழக்கு மாகாணங்கள் மீண்டும் இணைய வேண்டும். மற்றும் சமஷ்டி முறையின் கீழ் வடக்கு கிழக்கு மாகாணங்களில் அதிகார பரவலாக்கம் இடம்பெற வேண்டும் என கடந்த ஏப்ரல் 8ஆம் திகதி தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்ததையும் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஞாபகப்படுத்தினார்.

இலங்கைக்கான பயணத்தை ஐ.நா. நிபுணர் குழு கைவிட்டது!

ஐ.நா. நிபுணர்குழு இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளும் முடிபை கைவிட்டுள்ளதாகவும் இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு அடுத்த வாரம் வெளியாகும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐ.நா. நிபுணர்குழு இலங்கை வருவதற்கு நுழைவு அனுமதி வழங்கத் தயார் என்றும் ஆனால் அவர்கள் நல்லிணக்க ஆணைக் குழுவை மட்டுமே சந்திக்க முடியும். வேறுயாரையும் சந்திக்கவோ விசாரணை நடத்தவோ முடியாது என்றும் அரசாங்கம் அறிவித்திருந்தது.

புத்தாண்டு தினத்தில் உரும்பிராயில் ஒருவர் காணமற்போயுள்ளார்

புத்தாண்டு தினத்தில் உரும்பிராயில் ஒருவர் காணமற்போயுள்ளார் இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, சிவகுல வீதி, உரும்பிராய் மேற்கு, உரும்பிராயைச் சேர்ந்த ஓட்டோ சாரதியான சோதிநாதன் கோபிநாத் (வயது – 27),என்பவரே நேற்று காணமற் போய்யுள்ளார் புத்தாண்டு தினத்தன்று அதிகாலை 7.30 மணியளவில் ஒரு தொலைபேசி அழைப்பு வந்ததாகவும்,அதனைத் தொடர்ந்து தனக்கு ஒரு HIRE வந்திருப்பதாகவும், உடனே போய்ட்டு வருவதாகவும் கூறிய கோபிநாத் இன்றுவரை வீடு திரும்பவில்லை. கோபிநாத் வீடு திரும்பாததை அடுத்து, அவரது மனைவி  தனது கணவர் காணமற் போயுள்ளார் என முறைப்பாடு செய்துள்ளார். கோபிநாத் ஒரு பிள்ளையின் தந்தையாவார்

சனி, 1 ஜனவரி, 2011

யாழிலும் மீன்பிடி முறைகளில் இறுக்கம்

இலங்கையில் நாடளாவிய ரீதியில் சட்டரீதியாக நடைமுறையில் உள்ள மீன்பிடி முறைகளுக்கமைய யாழ் பிரதேச மீனவர்களும் மீன்பிடி தொழிலில் ஈடுபட வேண்டும் என்றும், அவற்றை மீறிச் செயற்படுபவர்கள் மீன்பிடி தொழில்தண்டனைச்சட்டத்திற்கமைய தண்டிக்கப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய ஆண்டின் துவத்திலிருந்து இந்த நடைமுறை இறுக்கமாக கடைப்பிடிக்கப்படும் என கடற்தொழில் திணைக்களத்தின் யாழ் மாவட்டத்திற்கான உதவிப் பணிப்பாளர் கந்தையா தர்மலிங்கம் தெரிவித்திருக்கின்றார்.

குடாநாட்டில் மர்மமான முறையில் தொடரும் வன்முறைகள்

யாழ் குடாநாட்டில் மர்மமான முறையில் தொடரும் வன்முறைகள் மற்றும் ஆட்கடத்தல் சம்பவங்களினால் அங்குள்ள பொதுமக்கள் மத்தியில் அச்சமும் பதற்ற நிலைமையும் தொடர்வதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கடந்த இரண்டு தினங்களுக்குள், இளைஞன் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கின்றார். மற்றுமொரு இளைஞனும் பெண் ஒருவரும் வெவ்வேறு சம்பவங்களில் கடத்திச் செல்லப்பட்டிருக்கின்றார்கள்.

வவுனியா – மன்னார் எல்லையில் 2500 ஏக்கர் காடழிப்பு! நில ஆக்கிரமிப்பு தீவிரம்

வவுனியா – மன்னார் எல்லையில் உள்ள 2500 ஏக்கர் காடுகள் முற்றாக தமிழ் மக்களுக்குச் சொந்தமான நிலப் பகுதி சிங்கள மயமாக்கப்படும் அதேவேளை இயற்கை வளங்களும் சுரண்டப்பட்டுவருவதாக மன்னார் தகவல்கள் தெரிவிக்கின்றன.இது குறித்து மேலும் தெரியவருவதாவது, மன்னார் மாவட்டத்திற்குபட்ட சின்னத்தம்பனை, மடுக்குளம், வேலங்குளம் ஆகிய கிராமங்களை அண்டியதாக இந்த காடழிப்பு இடம்பெற்று வருவதாக அண்மையில் குறித்த கிராமங்களில் மீளக்குடியமர்ந்த மக்கள் தெரிவித்திருக்கின்றனர்.

வன்னி மக்களைச் சொல்லி சிங்களக் குடியேற்றங்களுக்கு இந்தியா உதவி!!!!

வன்னிமக்களுக்கு எனத் தெரிவித்து வடக்கில் சிங்களக்குடியேற்றங்களுக்கு உதவிபுரியும் நடவடிக்கையில் இந்தியா செயற்பட்டுவருவதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கவென இந்திய அரசினால் அனுப்பப்பட்ட உழவியந்திரங்களில் 200 கஜூ பண்ணை, கோகொணெற் பண்ணை ஆகியவற்றுக்கு அனுப்பப்பட்டதன் அடிப்படையிலேயே இந்தச் சந்தேகம் வலுப்படுத்தப்பட்டுள்ளது.

விடுதலைப் போராட்டத்தின் எதிரிகள் அத்தனைபேரும் அடையாளம் காணப்பட்ட ஆண்டு. பிரபாகரன் என்ற வீரனின் புகழ் தொடர்ந்து அதிகரித்து சென்ற ஆண்டு.!!

2010 என்னும் ஆண்டு. 2011 ஐ ஈழத்தமிழனுக்கென்றே உயில் எழுதிவிட்டுப் போகும் ஆண்டாகும்.
கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக புலிகளால் வழி நடாத்தப்பட்ட இலங்கைத் தமிழர் அரசியல் அவர்களின் வழிநடாத்தல் இல்லாமல் தனிவழி நடந்து பார்த்த முழுமையான ஆண்டு இதுவாகும். இந்த ஆண்டில் நடந்த சம்பவங்கள் என்ன… 2010 விட்டுச் செல்லும் பாடங்கள் என்ன… இதோ சில உதாரணங்கள்…