இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
சனி, 21 மே, 2011
இன அழிப்பின் இரண்டாம் ஆண்டு நினைவு
முள்ளிவாய்க்கால் இன அழிப்பின் இரண்டாம் ஆண்டு நினைவும், ஆத்ம சாந்தி பூஜையும் 20.05.2011 அன்று Leicester முருகன் கோவிலில் மிகவும் அமைதியாகவும், உணர்வுபூர்வமாகவும் நடைபெற்றது. நிறைவில் நாடுகடந்த தமிழீழ அரசின் வெளிவிவகாரங்களுக்கான அமைச்சர் திரு.தயாபரன் ( ஜனகன் மாஸ்டர் ) அவர்கள் தேசத்தின் பாலம் ஈழ மண்ணில் ஆற்றும் பணிகள் பற்றி விளக்கமளித்தார். அதனை தொடர்ந்து, முள்ளிவாய்க்கால் வரை நின்று களமாடிய போராளி ஒருவர், அங்கு மக்கள் பட்ட துயரங்களை அங்கு வந்திருந்த மக்களுடன் பகிர்ந்து கொண்டார். இறுதியாக அன்னதானம் வழங்கப்பட்டது.
இப் பூசையினை தேசத்தின் பாலம் அமைப்பினரும், முன்னாள் போராளிகளும் சேர்ந்து நடத்தி வைத்தனர்.
இப் பூசையினை தேசத்தின் பாலம் அமைப்பினரும், முன்னாள் போராளிகளும் சேர்ந்து நடத்தி வைத்தனர்.
வியாழன், 12 மே, 2011
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)