புதன், 29 ஜூன், 2011

தமிழர் வாழ்வின் அனைத்துத் துறைகளிலும் இராணுவப் புலனாய்வாளர்கள்???

வடக்கிலும் கிழக்கிலும் இராணுவ ஆட்சி தொடங்கி பதினைந்து வருடங்களுக்கு மேலாகிறது. சுதந்திரமாக இயங்கிய வன்னி வீழ்ச்சி அடைந்து இரு வருடங்களுக்கு மேலாகிறது. கூட்டிக் கழித்துப் பார்த்தால் தாயகம் முழுவதும் இன்று அடிமை நிலைக்குத் தள்ளப்பட்டதை உணர முடியும்.

செவ்வாய், 21 ஜூன், 2011

இன்று தலைவனின் அமைதியான நிலைக்கு நாமே பொறுப்பு, இந்த நிலையை நீக்குவதும் நமது பொறுப்பே............................

சேனல்4 வெளியிட்ட காணொளியில் புலிகளை மிக கொடுமையான போராட்ட குழு, கொடூரவாதிகள் என்று தெரிவிக்கிறார்கள். ஒரே சாட்சியமாக முகாம்களுக்கு நுழையும் முன் ஒரு வெடிகுண்டு வெடித்து நிறைய சிங்கள ராணுவமும், சில பொதுமக்களும் இறக்க நேரிட்டது. இதை புலிகள் தான் செய்தார்கள் என்று இராணுவம் கூறுகிறது. மக்கள் கூறவில்லை புலிகளும் மக்களை கொன்றார்கள் என நிரூபிக்க ஏதும் ஆதாரங்கள் எவரிடமும் உண்டா?

ஞாயிறு, 5 ஜூன், 2011

அண்ணன் இன்னும் சாகவில்லை….!

அன்புத்தங்கையே இசைப்பிரியாவே..
உன் உரிந்தமேனியைக் காட்டி
உழுத்துப் போன உலகம்
போர்க்குற்றம் பேச வந்திருக்கிறது..
கோபப்படாதே என்
குலக்கொழுந்தே கொஞ்சம் கேள்..!
என் இரத்தத்தின் இரத்தமே..
என் தமிழ் உதிரக்கொடியில்
ஒட்டிப் பிறந்த ஒரேயொரு உறவே..!

சனி, 4 ஜூன், 2011

எமது இனம் எழுந்துநின்று போர்க்கோலம் கொண்ட காலத்தின் அடையாளங்கள் அவர்கள்,,,

நிழற்படங்களை பார்த்தபோது மனது நொருங்கிப்போவது உண்மைதான். அந்த சதுப்பு நிலத்தின் ஆழம்குறைந்த நீருக்குள்ளாக எமக்காக போராடிய வீரர்களின் உயிரற்ற உடல்களின் கால்களை பிடித்து சிங்கள இராணுவத்தினர் இழுத்து வரும் காட்சியை நிழற்படத்தில் காணும்போது இதயம் சுக்குநுறாக வெடிப்பது போலவே இருக்கிறது.

புதன், 1 ஜூன், 2011

தமிழினப்படுகொலை - ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் விவாதம் !!!!!!!

ஈழத் தமிழினப் படுகொலைகளைக் கண்டித்து பல புலம்பெயர் நாடுகளில் வாழும் பெரும் எண்ணிக்கையான தமிழ் உணர்வாளர்கள் இன்று பெல்ஜியம் நாட்டின் புறுசெல் நகரில் அமைந்துள்ள ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றத்தில் உணர்வுபூர்வமாக ஒன்றுகூடியுள்ளனர்.