ஞாயிறு, 2 அக்டோபர், 2011

என்றும் எங்கள் மனங்களில் வாழும் உங்களை மறக்கும் நாள் எங்களது உயிர் போகும் நாள்........

ஒரு விடுதலை வீரனின் சாவு சாதாரண மரண நிகழ்வல்ல. அந்தச் சாவு ஒரு சரித்திரநிகழ்வு. ஒரு உன்னத இலட்சியம் உயிர் பெரும் அற்புதமான நிகழ்வு உண்மையில்
ஒரு விடுதலை வீரன் சாவதில்லை அவனது உயிராக இயங்கி வந்த இலட்சிய நெருப்பு
என்றுமே அணைந்துவிடுவதில்லை. அந்த இலட்சிய நெருப்பு ஒரு வரலாற்றுச்
சக்தியாக மற்றவர்களை பற்றிக்கொள்கிறது ஒரு இனத்தின் தேசிய ஆண்மாவைத்
தட்டியெழுப்பிவிடுகிறது.