செவ்வாய், 30 மார்ச், 2010

தன்னோடு போர்புரிந்து மரணத்தைத் தழுவிய

தன்னோடு போர்புரிந்து மரணத்தைத் தழுவிய “எல்லாள மன்னனுக்கு நினைவுச் சின்னம்” அமைத்த துட்டகெமுனுவின் பரம்பரையில் வந்ததாக கூறிக் கொள்வோர்…? யாழ்ப்பாணத்தில் தேர்தல் பிரசாரங்கள் உச்சக் கட்டத்தை அடைந்துள்ள நிலையில் இரவோடு இரவாக ஒரு காரியம் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. நல்லூரில் அமைந்திருந்த தியாகி திலீபனின் நினைவுத்தூபி இடித்து அழிக்கப்பட்ட சம்பவமே அது. இது தற்செயலானதொரு சம்பவம் அல்ல. அதேவேளை வர்த்தக நோக்கில் நிகழ்த்தப்பட்ட ஒரு காரியமும் அல்ல. நன்கு திட்டமிடப்பட்டு- ஒழுங்கு செய்யப்பட்ட ஒரு நடவடிக்கை என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. “விடுதலைப் புலிகளின் நினைவுச் சின்னங்களை அரசாங்கம் விட்டு வைக்காது- அவற்றைப் பார்வையிடுவதற்குச் சுற்றுலாப் பயணிகள் குவிகின்றதையும் அரசு விரும்பவில்லை. இந்த நினைவுச் சின்னங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டு சுற்றுலா விடுதிகளாக மாற்றப்படும்” என்று அரசாங்கம் கூறியதன் பின்னணியில் தான் இந்தச் சம்பவம் நடந்தேறியிருக்கிறது. தியாகி திலீபனின் நினைவுத்தூபி உடைக்கப்பட்டதன் பின்னணியில் இருந்தவர்கள் யார் என்பது பற்றிய விசாரணைகள் நடக்கப் போவதில்லை. அப்படி நடந்தால் கூட அதற்குக் காரணம் யார் என்பது கண்டுபிடிக்கப்படப் போவதும் இல்லை. காரணம் இப்போதைய சூழ்நிலை அப்படியானது. திலீபனின் நினைவுத்தூபியை உடைத்த சக்திகளின் நோக்கம் என்ன என்ற கேள்வி இப்போது யாழ்ப்பாண மக்களிடையே மட்டுமன்றி தமிழ் மக்கள் அனைவரிடமும் தோன்ற ஆரம்பித்துள்ளது. போர் முடிவுக்கு வந்த பின்னர் வடக்கில் கட்டியமைக்கப்படும் புதிய புதிய நினைவுச் சின்னங்களும், தமிழரின் வழக்கில் இல்லாத பௌத்த மத சின்னங்களும் பல்வேறு அச்சங்களைத் தோற்றுவித்துள்ளன. தமிழ் மக்கள் மீதான இன அடக்குமுறை வேறொரு வடிவத்தை அடைந்து கொண்டிருப்பதன் சாட்சியாகவே இவை அமைந்துள்ளன. இனக்கலவரங்கள், போர் ஆகியவற்றின் பெயரால் ஒரு காலத்தில் தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டனர். ஆனால் இப்போது அதற்கு வாய்ப்பற்ற சூழல் நிலவுவதால், தமிழரின் வரலாற்று- பாரம்பரிய அடையாளங்களையும் கலாசாரப் பின்னணிகளை விளக்கும் நினைவுச் சின்னங்களையும் அழிக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன. இதன் ஒரு கட்டமாகவே திலீபனின் நினைவுத்தூபி சிதைக்கப்பட்டுள்ளது. இந்திய அரசிடம் நீதி கேட்டு உண்ணா நோன்பிருந்து உயிர் துறந்த திலீபனின் நினைவுத் தூபியை எங்கிருந்தோ வந்தவர்கள் சிதைப்பதை பொறுத்துக் கொண்டிருக்க வேண்டிய அளவுக்கு தமிழரின் நிலை வந்து விட்டது. சுமார் ஒரு வருடத்துக்கு முன்னர் இப்படியானதொரு சம்பவம் நிகழ்ந்திருக்காது. அதற்கான துணிவும் யாரிடமும் இருந்ததில்லை. ஆனால் தமிழரிடம் இருந்த ஆயுதபலம் என்ற கவசம் உடைக்கப்பட்ட பின்னர் தான் இப்படியொரு துணிவு அவர்களுக்கு வந்திருக்கிறது. * புலிகளின் நினைவுச் சின்னங்களை அழிப்பதன் மூலம் அரசாங்கமோ அல்லது பெரும்பான்மை சிங்களச் சமூகமோ சாதிக்கப் போவது எதுவுமில்லை. அது வரலாறு. புலிகளுக்கும் அரசுக்கும் இடையில் நிகழ்ந்த முப்பதாண்டுப் போர் உலக வரலாற்றில் இடம் பெற்றுவிட்ட தொன்று. அந்த வரலாற்றை யாரும் மாற்றவோ அழிக்கவோ முடியாது. அதற்கான வலு இலங்கை அரசிடமோ சிங்கள சமூகத்திடமோ கிடையாது. புலிகளினதோ தமிழரினதோ வரலாற்று அடையாளச் சின்னங்களை சிதைத்து விடுவதன் மூலம் தமிழரின் அரசியல் உரிமைக் கோரிக்கைகளுக்கு முடிவு கட்டி விடலாம் என்று கருதுவது வியப்பானது. ஏனென்றால் இந்த வரலாற்று- நினைவுச் சின்னங்களில் இருந்து தான் உரிமைக் கோரிக்கைகள் பிறப்பெடுக்கப் போவதில்லை. அது தமிழரின் இரத்தத்தில் ஊறிப் போயிருப்பது. தமிழரின் வரலாற்று- நினைவுச் சின்னத்தில் இருந்தா புலிகளின் ஆயுதப்போராட்டம் ஆரம்பித்தது? இல்லையே. புலிகளின் நினைவுச் சின்னங்களை- அடையாளச் சின்னங்களை சிங்கள மக்கள் வியப்புடன் பார்ப்பதை அரசாங்கத்தால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. இதன் பின்னணியில் தான் இந்த நினைவுச் சின்னங்களை அழிக்கும் முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. சர்வதேச ரீதியாக போர் மற்றும் பண்பாட்டு நெறிமுறைகள் என்று ஒன்று உள்ளது. எப்படிப்பட்ட எதிரியாக இருந்தாலும் அவர்களின் கல்லறைகளையோ நினைவுத்தூபிகளையோ அழிக்கக் கூடாது என்பதே அது. இந்த உயர் விழுமியம் இப்போது இலங்கையில் செத்துவிட்டது. தன்னோடு போர்புரிந்து மரணத்தைத் தழுவிய எல்லாள மன்னனுக்கு நினைவுச் சின்னம் அமைத்த துட்டகெமுனுவின் பரம்பரையில் வந்ததாக கூறிக் கொள்வோர் அதற்கு மாறான செயல்களின் ஈடுபடுகின்றனர். புலிகளைப் போன்றே அவர்களின் நினைவுத்தூபிகள் கல்லறைகளையும் சிதைத்து விடுவதன் மூலம்- புலிகளின் கனவு, அவர்களின் நினைவுகளையும் இல்லாது அழித்து விடமுடியும் என்று கருதுகிறது அரசாங்கம். புலிகள் இயக்கம் தமிழ்மக்களுக்கு எதிரானது- அவர்களின் சுதந்திரத்துக்கு தடையாக இருந்தது- தமிழரின் நலனுக்கு விரோதமானது என்ற, அரசின் வாதங்களும் பிரசாரங்களும் உண்மையாக இருக்குமேயானால் இத்தகைய நினைவிடங்களையிட்டு ஒரு போதும் அது கவலைப்பட வேண்டியதில்லை. அதேவேளை இந்த நினைவிடங்கள் அடையாளச் சின்னங்களை அழிப்பதன் மூலம் தமிழரின் மனங்களில் இருந்து புலிகள் பற்றிய நினைவுகளை அழித்து விடலாம் என்று கருதினால் அதுவும்; முடியாது. * ஏனெனில் புலிகள் இயக்கம் கடந்த முப்பதாண்டு காலம் தமிழரினது வாழ்வுடன் பின்னிப் பிணைந்து போயிருந்தது. தீதோ நன்றோ அது தவிர்க்க முடியாதாக அமைந்திருந்தது. அதைவிட புலிகள் என்ற பிரமாண்டத்தைக் காண்பித்தே அரசாங்கம் தனது படைகளின் வீரதீரத்தை எடுத்துக் கூற முடியும். புலிகள் என்பது மாயை- என்று அதன் அடிச்சுவட்டை அழித்து விட்டால் புலிகளை அழித்ததற்கான பெருமை இலங்கைப் படைகளுக்கு கிடைக்கப் போவதில்லை. இதைப் புரிந்து கொள்ளாதவர்கள் தான் திலீபனின் நினைவுத்தூபியைச் சிதைத்துள்ளனர். இது அநாகரீகத்தின் உச்சம் என்றால் மிகையில்லை. இரவோடு இரவாக நடந்து முடிந்த இந்தக் காரியத்தை யாழ்ப்பாண மாநகரசபை பார்த்துக் கொண்டிருந்ததா அல்லது பின்னணியில் இருந்ததா என்பது கேள்வி. ? அப் பிரதேசத்தை நிர்வகிப்பது யாழ்ப்பாண மாநகரசபை தான். அதன் நிர்வாகம் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிம் இருப்பதால் மௌனம் காக்கிறது. ஆனால் தேர்தல் நேரத்தில் நடந்திருக்கின்ற இந்தச் சம்பவம் மிகவும் முக்கியமானது. * யாழ்ப்பாணம் தமிழரின் தொன்மையான பண்பாட்டுப் பூமி. அதற்குள் புகுந்து தமிழரின் உரிமைக்காக- அமைதி வழியில் உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த ஒருவரின் நினைவுத்தூபியை உடைக்கும் சக்தி யார் யாருக்கோ எல்லாம் வந்து விட்டது. இது தமிழ் மக்களை அரவணைத்து அவர்களின் உணர்வுகளை மதித்து நடக்கின்ற போக்கின் வெளிப்பாடாகத் தெரியவில்லை. தமிழருக்கு எதிரான இன ரீதியான காழ்ப்புணர்வுகள் மறைந்து போகவில்லை என்பதன் வெளிப்பாடு இது. அதுவும் யாழ்ப்பாணத்துக்குள்ளேயே இப்படியொரு காரியத்தை செய்யும் இந்த இனக்குரோதம் வளர்க்கப்பட்டு வருகிறது. * இன நல்லிணக்கம், அமைதி, ஒற்றுறை, ஒரே நாடு, ஒரே சட்டம் என்றெல்லாம் அரசாங்கம் கூறிக்கொண்டிருக்கிறது. ஆனால் மறுபுறத்தில் அதற்கு மாறான சம்பவங்களே நடந்து கொண்டிருக்கின்றன. திலீபன் நினைவுத்தூபி உடைப்பே இதற்குச் சாட்சியாக அமைந்துள்ளது.

பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளான ஈழத்தமிழ் பெண் வைத்தியசாலையில் மரணம்

தமிழகத்தில் உள்ள கரூர் பகுதியில் உள்ள ஈழத்தமிழ் மக்கள் தங்கியுள்ள முகாமில் உள்ள பெண்ணை காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்ற தமிழக காவல்துறையினர் அவர் மீது பாலியல் துன்புறுத்தல்களை மேற்கொண்டிருந்தனர். காவல்நிலையத்தை சேர்ந்த 3 காவல்துறை அதிகாரிகள் மேற்கொண்ட இந்த துன்புறுத்தல்களால் மயக்கமடைந்த பெண்ணை அவர்கள் முகாம் பகுதியில் அனாதரவாக கைவிட்டு சென்றிருந்தனர். காவல்துறையினரின் இந்த நடவடிக்கையால் மனமுடைந்த குமார் பத்மதேவி (28) என்ற ஈழத்தமிழ் பெண் தனக்கு தனே தீமூட்டி தற்கொலை செய்ய முயன்றிருந்தார். எனினும் அயலவர்களால் காப்பாற்றப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் நேற்று முன்தினம் (28) வைத்தியசாலையில் மரணமடைந்துள்ளார். தன்னை தனியார் வீடு ஒன்றிற்கு அழைத்துச் சென்ற தமிழக காவல்துறையினர் பலியல் துன்புறுத்தல்களை மேற்கொண்டதாகவும், அதனை வெளியே தெரிவித்தால் தனது கணவனை சுட்டு கொன்றுவிடுவதாகவும் மனித உரிமை செயற்பாட்டாளர்களிடம் பத்மதேவி தெரிவித்தள்ளார். இதனிடையே பத்மதேவியின் உடலை காவல்துறையினர் தகனம் செய்யக்கூடாது என்ற கோரிக்கைகளை மனித உரிமை செயற்பாட்டாளர்கள் விடுத்த போதும் அதனை அவர்கள் பொருட்படுத்தாதது அதிக சந்தேகங்களை தோற்றுவித்துள்ளது. ஈழத்தமிழ் மக்களை தீண்டத்தகாதவர்களாக நடாத்திவரும் கருணாநிதி தலைமையிலான தமிழக அரசு அகதிகளாக சென்றுள்ள அப்பாவி மக்கள் மீது பல தரப்பட்ட வன்முறைகளை அண்மைக்காலமாக மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

ஈபிடிபி யினர் தமது சாவகச்சேரி , வவுனியா அலுவலகங்களிலிருந்து தப்பியோட்டம்.

சாவகச்சேரி மற்றும் வவுனியா பிரதேசத்தில் இரு அப்பாவி இளைஞர்கள் கடந்த தினங்களில் கொல்லப்பட்டிருந்தனர். இக்கொடிய கொலைகளை ஈபிடிபி அமைப்பினரே செய்துள்ளதாக தெரியவந்துள்ள நிலையில் சாவகச்சேரி பிரதேச மக்கள் ஈபிடிபி அலுவலகத்தினுள் நுழைந்து காரியாலயத்தை துவம்சம் செய்துள்ளதாக தென்மாராட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன. மக்கள் அலுவலகத்தினுள் நுழைந்தபோது அக்காரியாலத்திலிருந்த ஈபிடிபி உறுப்பினர்கள் தப்பியோடியுள்ளதாகவும், காரியாலயத்தை மீண்டும் கைப்பற்ற அமைச்சரினால் இராணுவ உதவி நாடப்பட்டபோதும், அங்கு மக்கள் கொதித்த நிலையில் காணப்படுவதை சுட்டிக்காட்டிய வட பாதுகாப்புத் தலைமையகம் உடனடியாக செயலில் இறங்க முடியாது என கைவிரித்துள்ளதாக நம்பந்தகுந்த வட்டாரங்களிலிருந்த தெரியவருகின்றது. அதேநேரம் வவுனியா மக்களும் அங்குள்ள ஈபிடிபி அலுவலத்தை தாக்க முன்னேற்பாடுகள் செய்திருந்ததை அறிந்து காரியாலய பிரதேசத்தில் மேலதிக பொலிஸ் ரோந்து இடம்பெறுவதாகவும், காரியாலத்திலிருந்து ஈபிடிபி யினர் தற்காலிகமாக வெளியேறியுள்ளதாகவும் வவுனியா தகவல்கள் தெரிவிக்கின்றன. மேற்படி இரு சம்பவங்கள் தொடர்பாகவும் பொலிஸ் தரப்பிலிருந்த ஈபிடிபி யினருக்கு வெளிப்படையான உதவிகள் எதுவும் கிடைக்கப்பெறமாட்டாது என நம்பகரமாக தெரியவருகின்றது.

வன்னியில் பெய்த கடும் மழையால் மீளக்குடியமர்த்தப்பட்ட மக்கள் பெரும் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர்

வவுனியா வடக்கு மற்றும் முல்லைத்தீவின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் மீளக்குடியமர்த்தப்ட்ட கிராம மக்கள் நேற்றும், நேற்று முன்னாளும் பெய்த மழை காரணமாக பலத்த நெருக்கடிகளை எதிர்கொண்டதாக வன்னித் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது பற்றி தெரியவருவதாவது:- இலங்கைப் படையினரால் வன்னியில் மேற்கொள்ளப்பட்ட நில ஆக்கிரமிப்பு காரணமாக இடம்பெயர்ந்த மக்கள் நீண்ட காலமாக வவுனியா தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். தற்போது அவர்கள் மீளக் குடியமர்வதாக அறிவிக்கப்பட்டு அவர்களின் பகுதிகளுக்கும் செல்வதற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் வவுனியா வடக்கு மற்றும் முல்லைத்தீவின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட கிராம மக்கள் நேற்றும், நேற்று முன்னாளும் பெய்த மழை காரணமாக பலத்த நெருக்கடிகளை எதிர்கொண்டதாக வன்னித் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பிட்ட பகுதிகளில் மக்கள் மீளக் குடியமர்த்தப்பட்ட போதிலும் அவர்களுக்கு 12 தகரங்களும், 5தீராந்திகளும் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. அவர்களின் வீடுகள் அனைத்தும் முழுமையாக சிதைவடைந்துள்ள நிலையில் வழங்கப்பட்ட தகரங்களைப் பயன்படுத்தி மரங்களுக்குக் கீழே கொட்டில்கள் அமைத்தே வாழ்ந்து வருகின்றனர். குடிநீர் தட்டுப்பாடு பாரிய அளவில் நிலவுகின்றது. பழைய கிணறுகளை இறைப்பதற்கான எந்தவித வசதிகளும் செய்து கொடுக்கப்படவில்லை. மல சல கூடங்கள் இல்லாத நிலையில் மக்கள் இயற்கைக் கடன்களைக் கழிப்பதில் நெருக்கடிகளை எதிர்கொள்கின்றனர். பல இடங்களில் ஆற்று நீரை மக்கள் குடிநீராகப் பயன்படுத்துவதாகவும் தெரியவந்துள்ளது. ஆனால் வன்னியின் சகல பாகங்களிலும் அமைக்கப்பட்டுள்ள மிகச் சிறிய காவலரண் முதல் மிகப் பெரிய படை முகாம் வரை அனைத்தினது கூரைகளுக்கும் ஓடுகள் போடப்பட்டே படையினர் நிலை கொண்டுள்ளனர். வன்னி இடப்பெயர்வுகளின் போது மக்களால் ஓடுகள் கழற்றப்படவில்லை என்பது நோக்கத் தக்கது. இந்த நிலையில் மக்களது எஞ்சிய வீடுகள் ஓடுகள், வீட்டு ஜன்னல்கள் என அனைத்தும் சூறையாடப்பட்டுள்ளன. கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக தகரங்களில் அமைக்கப்பட்டுள்ள கொட்டில்களுக்குள் தண்ணீர் சென்றதாகவும், குழந்தைகள், பெரியோர்கள் தடிமன் உட்பட்ட நோய்த் தாக்கங்களை எதிர்கொண்டுள்ளதாகவும் வன்னித் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த மழையானது கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வன்னியில் மக்கள் எதிர்கொண்ட பாரிய அவலத்தை தமக்கு நினைவூட்டியதாக தற்போது வன்னியில் மீளக் குடிமயர்ந்த இளந் தாய் ஒருவர் தெரிவித்திருக்கின்றார். கடந்த ஏப்ரல் மாதம் நந்திக்கடலுக்குச் சமாந்தரமான களப்பு பகுதியில் கொட்டில்களை அமைத்து வாழ்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒரு நாள் பெய்த கடும் மழையால் அனைத்து வீடுகளுக்குள்ளும் முழங்கால் வரையில் தண்ணீர் புகுந்ததால் இரவுப் பொழுதுகளை குழந்தைகளை கைகளில் ஏந்தியபடி நின்று கொண்டே கழித்தனர். அந்த வேளையில் நடத்தப்பட்ட எறிகணைத் தாக்குதல்களில் பதுங்குகுழிகளுக்குள் செல்ல முடியாமலேயே நூற்றுக்கணக்கானோர் படுகொலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பிரித்தானியா வருத்தம் தெரிவிப்பு

இலங்கையின் போர் நிறுத்த காலத்தின் போது இலங்கைக்கு ஆயுத ஏற்றுமதியை மேற்கொண்டமைக்காக பிரித்தானிய, பொதுச்சபை தமது வருத்தத்தை வெளியிட்டுள்ளது. அதேநேரம், ஆயுத ஏற்றுமதி தொடர்பிலான 9 அனுமதிப்பத்திரங்களை பிரித்தானிய ரத்துச்செய்தமை தொடர்பிலும் பொதுச்சபை தமது வரவேற்பை வெளியிட்டுள்ளது. பொதுச்சபையில் உரையாற்றிய, பிரித்தானியாவின் பொதுநலவாய வெளியுறவுத்துறை அமைச்சர், தமது நாடு இலங்கையின் நிலைமையை கவனமாக ஆராய்ந்து வருவதாக தெரிவித்தார். இதேவேளை தமது கருத்தை வெளியிட்டுள்ள, ஆயுத பரிகரண திணைக்களத்தின் உதவி தலைவர் டேவிட் ஹோல், இலங்கையின் கடந்த கால நடைமுறைகளை கொண்டு எதிர்க்காலத்தில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனக்குறிப்பிட்டார்

திங்கள், 29 மார்ச், 2010

"உங்களின் அரசியல் நலன்களுக்காக விடுதலைப் புலிகளை விலை பேசுவது" நியாயமா........?

ஈபிடிபியின் கைங்கரியம் தொடர்கிறது!!

வவுனியாவில் இளைஞர் ஒருவரை ஓட ஓட அடித்து படுகொலை செய்ததன் மூலம் ஈபிடிபின் வழுமையான முகம் மீண்டும் வெளிப்பட்டுள்ளது. வவுனியா சாந்தசோலையைச் சேர்ந்த தங்கராசா கிருஸ்ணகோபால் என்ற இளைஞரை ஈபிடிபியின் 20 பேர் அடித்துக் கொலை செய்த சம்பவம் தொடர்பில் வவுனியாவில் கொதிப்பு நிலை ஏற்பட்டுள்ளது. தங்கராசா குடும்பத்தினரது ஒரே ஒரு பிள்ளையான கிருஸ்ணகோபால் என்ற இளைஞருக்கு நேற்று பிறந்தாள் நடைபெறவிருந்தது. இந்த நிலையில் அவரது பிறந்தநாள் குறித்து அறிந்த ஈபிடிபியினர் தமக்கு மதுபானம் வாங்கித் தருமாறு வற்புறுத்தி அவரை மதுசாலைக்கு அழைத்திருக்கின்றனர். அங்கு சென்ற இருபது ஈபிடிபியினர் மது அருந்தியிருக்கின்றனர். இதனை அடுத்து மதுப் போத்தலால் கிருஸ்ணகோபாலின் தலையில் தாக்கியிருக்கின்றனர். சம்பவத்தை அடுத்து கிருஸ்ணகோபால் வவுனியாவின் வீதி வழியாக ஓடியிருக்கின்றார். அவரை இருபது ஈபிடிபியினரும் துரத்திச் சென்றுள்ளன். வீதியில் அலறியபடி ஓடிய கிருஸ்ணகோபாலது செருப்பு அறுந்ததில் அவர் நிலை தடுமாறி நிலத்தில் வீழ்ந்துள்ளார்.அவரை சுற்றிவளைத்துத் தாக்கிய ஈபிடிபியினர் அருகில் இருந்த எல்லைக் கலினைத் தூக்கி கிருஸ்ணகோபாலது தலையின் மீது போட்டிருக்கின்றனர். சம்பவம் இடம்பெற்ற பகுதியில் உள்ள வீட்டு உரிமையாளர்கள் அவசர சேவைப் பிரிவிற்கு அறிவித்திருக்கின்றனர். அதன் பின்னர் சம்பவ இடத்திற்குச் சென்ற நோயாளர் காவு வண்டி கிருஸ்ண்கோபாலனை மருத்துவமனைக்கு ஏற்றிச் சென்றுள்ளது. படுகாயம் அடைந்த அவர் தன்னை ஈபிடிபியினரே தாக்கியதாக சிறீலங்கா காவல்த்துறையினரிடம் வாக்குமூலம் வழங்கியிருக்கின்றார். இதேவேளை வவுனியாவில் இளைஞர்கள் ஈபிடிபியினர் மீது தாக்குதல் நடத்தப் போவதாக கொதிப்படைந்து உள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. வவுனியாவில் இளைஞர் ஒருவரை ஓட ஓட அடித்து படுகொலை செய்ததன் மூலம் ஈபிடிபின் வழுமையான முகம் மீண்டும் வெளிப்பட்டுள்ளது. வவுனியா சாந்தசோலையைச் சேர்ந்த தங்கராசா கிருஸ்ணகோபால் என்ற இளைஞரை ஈபிடிபியின் 20 பேர் அடித்துக் கொலை செய்த சம்பவம் தொடர்பில் வவுனியாவில் கொதிப்பு நிலை ஏற்பட்டுள்ளது.

ஞாயிறு, 28 மார்ச், 2010

பிள்ளையான் தலைமையில் தாக்குதல்

மட்டக்களப்பு கொக்குவிலில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பிரசார கூட்டத்தில் கலந்து கொள்ள சென்ற பொதுமக்கள் மீது கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் தலைமையிலான குழு இன்று ( Sunday) பிற்பகல் தாக்குதல் நடத்தியுள்ளது. இச்சம்பவத்தில் பிள்ளையாரடி கொக்குவில் பகுதியைச்சேர்ந்த பொதுமக்கள் சிலர் காயமடைந்துள்ளனர். இது தொடர்பாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைமை வேட்பாளர் பொன்.செல்வராசாவும் வேட்பாளர் பிரசன்னா இந்திரகுமாரும் இன்று பிற்பகல் மட்டக்களப்பு காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். இன்று பிற்பகல் மட்டக்களப்பு கொக்குவில் ஆலமரத்தடியில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பிரசாரக்கூட்டம் இடம்பெற இருந்தது. பிற்பகல் 4மணிக்கு கூட்டம் ஆரம்பமாக இருந்த நிலையில் சுமார் 3மணியளவில் கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் மற்றும் மாகாணசபை உறுப்பினர் பிரசாந்தன் ஆகியோர் தலைமையில் 13 வாகனங்களில் விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்புடன் சென்ற குழுவினர் அங்கு கூடி இருந்த மக்கள் மீதும் கூட்ட ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்த மக்கள் மீதும் கண்மூடித்தனமான முறையில் தாக்குதல் நடத்தியதாக கொக்குவில் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். அங்கு கட்டப்பட்டிருந்த பனர்கள் மற்றும் கொடிகளையும் கிழித்து எறிந்ததுடன் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த மேடையையும் சேதமாக்கியுள்ளனர். பிள்ளையான்குழுவினர் சுமார் ஒரு மணிநேரமாக அந்த இடத்தில் நின்று தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து அக்கூட்டம் ரத்துச்செய்யப்பட்டுள்ளதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பு வேட்பாளர் பிரசன்னா இந்திரகுமார் தெரிவித்தார். நேற்று கொக்குவில் பிள்ளையாரடி சத்துருக்கொண்டான் பகுதிகளுக்கு தேர்தல் பிரசாரங்களுக்கு சென்றவர்களை அங்கிருந்த பொதுமக்கள் ஏசித்துரத்தியதாக தெரியவருகிறது. கடந்த காலங்களில் சத்துருக்கொண்டான் கொக்குவில் பகுதியில் சிறிலங்கா அரசாங்க படைகளே பெருந்தொகையான பொதுமக்களை படுகொலை செய்ததாகவும் அவர்களுடன் சேர்ந்தியங்கும் பிள்ளையான் கருணா குழுக்களுக்கு தாம் வாக்கு வழங்கப்போவதில்லை என அப்பிரதேச மக்கள் ஏற்கனவே தெரிவித்திருந்தனர். இதற்கு பழிவாங்கும் முகமாகவே இன்று பிள்ளையான்குழு தாக்குதலை நடத்தி இருப்பதாகவும் அப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

கிளிநொச்சி: அன்றாட வாழ்க்கை போராட்டமே!



தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைநகராகத் திகழ்ந்த கிளிநொச்சி, சிறிலங்கப் படைகளால் தரைமட்டமாக்கப்பட்ட நிலையில், அங்கு மீள் குடியமர்த்தப்பட்ட மக்களின் வாழ்க்கை அன்றாடப் போராட்டமாக உள்ளதென்று அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. 2008இல் கிளிநொச்சி மாவட்டத்தில் மட்டும் 90,000 மக்கள் வசித்து வந்தனர். 2009ஆம் ஆண்டின் துவக்கத்தில் மக்களெல்லாம் வெளியேறிவிட்ட நிலையில் சிறிலங்க இராணுவம் கிளிநொச்சியைக் கைப்பற்றியது. அங்கிருந்து மக்களனைவரும் புலிகளுடன் வெளியேறி முல்லைத் தீவில் - மக்கள் பாதுகாப்பு வலயத்தில் தஞ்சமடைந்தனர். போருக்குப் பின் வன்னி வதை முகாம்களில் அடைப்பட்டுக்கிடந்த அம்மக்களில் தற்போது 24,000 பேர் அவர்கள் வாழ்ந்த கிளிநொச்சியில் மீண்டும் குடியமர்த்தப்பட்டுள்ளனர். கண்டியையும், யாழ்ப்பாணத்தையும் இணைக்கும் ஏ9 நெடுஞ்சாலையில் அமைந்திருந்தாலும், அங்கு குடியிருக்கும் வீடுகள் என்றோ அல்லது தற்காலிகமாக தங்குவதற்கோ எந்த ஒரு கட்டடமும் முழுமையாக இல்லை. சிறிலங்க படைகளின் தொடர் குண்டு வீச்சால் கடும் தாக்கதலிற்கு உள்ளான நகரம் கிளிநொச்சியாகும்.  மீள் குடியமர்த்தலிற்கு அளிக்கப்பட்ட பொருட்களைக் கொண்டு முழுமையாக வீட்டை கட்டிக்கொள்ள முடியவில்லை என்று அங்கு குடியமர்த்தப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர். அரசு அளித்த பொருட்களைக் கொண்டு தாங்கள் அமைத்துள்ள வீட்டின் மேற்கூரையைக் கூட முழுமையாக கட்டிக்கொள்ள போதுமானதாக இல்லை என்று ஐரின் செய்தி நிறுவன செய்தியாளருக்கு அம்மக்கள் தெரிவித்துள்ளனர். “அரசின் உதவியால் தாங்கள் கட்டிக்கொண்ட தற்காலிக வீட்டில் கூரை கூட உறுப்படியாக அமையவில்லை” என்று குமாரி தேவராசா என்ற பெண்மணி கூறியுள்ளார். குடிநீர், கழிப்பறை, மின்சாரம் என்று எந்த வசதியிமின்றி தங்களின் அன்றாட வாழ்க்கை பெரும் போராட்டமாக இருக்கிறது என்று அவர் கூறியுள்ளார். இந்த நிலையில், வரும் ஜூன் மாதம் முதல் அங்கு தென்மேற்கு பருவமழை பெய்யத் துவங்கும்போது அதனை எவ்வாறு சமாளிக்கப் போகிறோம் என்ற கேள்விக் குறியுடன் அம்மக்கள் உள்ளதாக ஐரின் தெரிவிக்கிறது. அரசு அளித்த தகரத்தையும், கட்டைகளையும் கொண்டு பலர் இந்த தற்காலிக வீடுகளைக் கட்டிக்கொண்டுள்ளனர். மற்றவர்கள் பன்னாட்டுத் தொண்டு நிறுவனங்கள் அளித்த கூடாரங்களில்தான் வாழ்ந்து வருகின்றனர். அரசு அளித்துள்ள சொற்பமான நிவராண உதவியில் வாழ்ந்து வருவதாக கூறியுள்ள நளினி ஜபேசன், உழைத்து சம்பாதித்து வாழ்வதற்கு எந்த வாய்ப்பும் இல்லை என்று கூறியுள்ளார்.

சனி, 27 மார்ச், 2010

இந்திய தூதரகம் திறக்கப்படுவதால் திலீபனின் நினைவுத்தூண் இடிப்பு?

யாழ்ப்பாணத்தில் இந்தியத் தூதரக கிளை அலுவலகம் திறக்கப்படுவதற்கும், தியாகி திலீபனின் நினைவுத்தூண் தகர்க்கப்பட்டதற்கும் தொடர்பு இருப்பதாகவும், இந்தியாவின் தூண்டுதல் காரணமாகவே நினைவுத்தூண் தகர்க்கப்பட்டிருக்கலாம் என்றும் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் 'ஈழமுரசு' பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: யாழ்ப்பாணத்தில் இந்திய தூதரகத்தின் அலுவலகம் ஒன்றை அமைப்பதற்கு இந்திய அரசு முடிவு செய்துள்ளது.

அண்மையில் இலங்கை வந்திருந்த இந்திய வெளியுறவுச் செயலாளர் நிருபாமா ராவ், இதற்கான முன்னேற்பாடுகளை மேற்கொண்டிருந்ததுடன், இது தொடர்பான ஆலோசனைகளையும் கொழும்பிலுள்ள தமது தூதரகத்துடன் மேற்கொண்டிருந்தார். இதனையடுத்து, யாழ்ப்பாணத்தில் இந்தியத் துணைத் தூதரகத்தை திறப்பதற்கு இலங்கை அரசு அனுமதி வழங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தன.இந்தத் துணைத் தூதரகம் யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் மே மாதம் திறந்துவைக்கப்பட உள்ளதாக கொழும்பிலுள்ள இந்தியத் தூரகம் அண்மையில் உறுதிப்படுத்தியிருந்தது.

இந்நிலையில், யாழ்ப்பாணம் நல்லூர் பருத்தித்துறை வீதியில் அமைந்திருந்த தியாகி திலீபனின் நினைவு தூண் தகர்க்கப்பட்டு, அலங்கோலப்படுத்தப்பட்டுள்ளது. போர் இடம்பெற்ற காலங்களிலும் சரி, அதன் பின்னரான சமாதான காலத்திலும் சரி சிறிய சேதங்களுக்கு உள்ளான இந்தத்தூண் முற்றாக தகர்க்கப்பட்டிருக்கவில்லை. ஆனால், போர் முடிவடைந்து விட்டதாக கூறப்பட்டு பத்து மாதங்களை எட்டியுள்ள நிலையில், திலீபனின் நினைவுத்தூபி தகர்க்கப்பட்டுள்ளது. இந்த நினைவுத்தூபித் தகர்ப்பினை சிங்களக் காடையர்களோ அல்லது அவர்களின் இராணுவமோ மேற்கொண்டிருந்தாலும் தகர்ப்பிற்கான பின்னணிக் காரணம் வேறு என கருதப்படுகின்றது. குறிப்பாக இந்தியத் தூதரகம் திறக்கப்படுவதற்கும், இந்த நினைவு தூபி தகர்க்பப்பட்டதற்கும் காரணங்கள் ஒற்றுமையாக இருக்கின்றன என பரவலான குற்றச்சாட்டுக்கள் எழத்தொடங்கியுள்ளன. தியாகி திலீபன் இந்திய இராணுவத்தினர் தமிழர் தாயகத்தை ஆக்கிரமித்திருந்த காலப்பகுதியில், ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து சாகும்வரையான உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டவர். இறுதிவரை தனது உறுதியில் தளராது போராடிய திலீபனை, இந்தியா கவனத்தில் எடுக்கத் தவறியது. திலீபன் சாவைத் தழுவினார்.இதனால், அகிம்சைக்கு பெயர் போன நாடு என தன்னைப் பெருமைப்படுத்திய இந்தியாவிற்கு, பெருத்த அவமானமே மிஞ்சியது. இந்நிலையில், யாழ்ப்பாணத்தில் தூதரகம் அமைத்து தங்கப்போகும் இந்தியாவிற்கு திலீபனின் நினைவுத்தூபி தமது தூதரகத்திற்கு அருகில் அமைந்திருப்பது நெருடலாகவும் ஒரு அவமானச் சின்னமாகவும் இருக்கும் என்ற நிலையிலேயே இந்தத் தகர்ப்பு இடம்பெற்றிருப்பதாக கருதப்படுகின்றது. திலீபனின் அகிம்சைப் போராட்டம் இலங்கை அரசுக்கு எதிரானதல்ல. அது இந்திய அரசின் நடவடிக்கைகளுக்கு எதிரானது.எனவே, இந்த நினைவுத்தூபி தகர்ப்பிற்கும் இந்தியத் தூதரகத் திறப்பிற்கும் ஒற்றுமையான காரணங்கள் இருக்கின்றன என்பது தெளிவாகின்றது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவீரர்களின் எலும்புக்கூடுகளும், வரிப்புலிச் சீருடைகளும் கூட தோண்டியெடுக்கப்பட்டு வீதியில் கொட்டப்படுகின்றன.

அண்மைக்காலமாக தமிழீழ தாயக பிரதேசம் எங்கும் விடுதலைப்புலிகளின் நினைவுச்சின்னங்கள்நிலையில் வன்னியில் நேரில்கண்ட சாட்சி ஒருவரின் வெளிவந்த சில அதிர்ச்சி தரும் ஆனால் தமிழர் மனங்களை கொதித்தெழவைக்கும் சில சம்பவங்களை இங்கே தருகிறோம். மாவீரர் துயிலும் இல்லங்கள் அகழப்பட்டு அவ்வாறான துயிலுமில்லங்கள் அங்கு இருந்தன என்ற அடையாளத்தையே இல்லாமல் சிறிலங்கா அரச இராணுவ இயந்திரங்கள் மும்முரமாக ஈடுபட்டிருக்கின்றனர். நடுகற்களையும் கல்லறைகளையும் இடித்தழிப்பதோடு நின்ற இச்செயற்பாடுகள் இப்போது இன்னும் உக்கிரம்பெற்று துயிலுமில்லங்களின் தடயங்களையே இல்லாதளவுக்கு அழிக்கும் நிலைக்கு முற்றியுள்ளது வன்னிவிளாங்குள மாவீரர் துயிலுமில்லம் முற்றாக அழிக்கப்பட்டு உருத்தெரியாமல் மாற்றப்பட்டு வருகிறது. வன்னிவிளாங்குள வவுனிக்குளப் பாதை சீரமை தேவையான கிரவல் மண் வன்னிவிளாங்குள மாவீரர் துயிலுமில்ல வளவிலிருந்தே அகழ்ந்து எடுக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இராணுவத்தினரின் மேற்பார்வையோடு சிங்களத் தொழிலாளர்களைக் கொண்டு நடத்தப்படும் இவ்வேலைத்திட்டத்தில் வன்னிவிளாங்குள துயிலுமில்லப்பகுதி கனரகப் பொறிகளைக் கொண்டு ஆழத் தோண்டப்படுகிறது. உக்கிப் போகாமல் இருக்கும் வரிப்புலிச் சீருடைகளும் மாவீரர்களின் எலும்புக்கூடுகளும் கூட தோண்டியெடுக்கப்பட்டு ஒருபுறத்தில் போடப்படுகின்றன. மணலோடு மணலாகவும் அவை அள்ளிச்சென்று வீதியில் கொட்டப்படுகின்றன. அங்கே பொறுக்கப்படும் சீருடை எச்சங்களும் எலும்புகளும் பொறுக்கப்பட்டு காட்டுக்குள்ளோ வீதிக் கரைகளிலோ வீசப்படுகின்றன.பொதுமக்கள் நன்றாகப் பார்க்கவேண்டுமென்ற நோக்கத்திலும் துயிலுமில்லத்திலிருந்து வீதிக்கரைக்குக் கொண்டுவரப்பட்டு இவை ஒன்றாகப் போடப்படும் நிகழ்வும் தற்போது இடம்பெறுகிறது. தமிழ்மக்களின் ஆன்மாவைச் சீண்டிப்பார்த்துப் பரவசப்படும் ஒரு நிலையே தற்போது நடந்துகொண்டிருப்பதாக குறிப்பிட்ட அத்தமிழ்மகன் கண்ணீரோடு தெரிவித்தார்.இதேபோன்று முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசுட்டான் கற்சிலைமடுக் கிராமத்தில் 1803-08-31 ஆம் ஆண்டு மன்னன் பண்டாரவன்னியன் ஆங்கிலேய தளபதி கப்டன் றிபேக்குடன் ஏற்பட்ட மோதலில் தோல்வி அடைந்தாதாக குறிப்பிட்டு வன்னிமண்ணின் மாபெரும் தமிழ் மன்னன் பண்டாரவன்னியன் நினைவுச் சின்னமாக இருந்த நினைவுக்கல் அழிக்கப்பட்டிருந்தது. இவற்றின் தொடர்ச்சியாக அண்மையில் முன்னர் யாழ்ப்பாணம் நல்லூர் வீதியில் அமைந்திருந்த தியாகி திலீபன் நினைவுத் தூபி அடித்து உடைத்து நொருக்கப்பட்டுமிருந்தது. அகிம்சை வழியில் நீதி கேட்டு பன்னிரு நாட்கள் நீர்கூட அருந்தாது உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாகியின் நினைவுத் தூபியை உடைப்பதென்பது தமிழர்களின் சுயகௌரவத்தை சீண்டிப்பார்க்கும் நிகழ்வாகவே பார்க்கவேண்டும். இவ்வாறு தமிழர்களின் அடையாளங்களையும் சின்னங்களையும் அழிக்கின்ற நடவடிக்கைகள் தன்னெழுச்சியாக நடத்தப்படுவவை அல்ல அண்மையில் சிறிலங்கா அரச அமைச்சர் ஒருவர் புலிகளின் தமிழர்களின் அடையாளங்களையோ அல்லது சின்னங்களையோ அழித்தொழிக்கவே முடிவுசெய்துள்ளதாக அறிவித்திருந்தமையை நாம் மறந்துவிடக்கூடாது. எனவே இவ்வாறு தமிழர் அடையாளங்களை அழிக்கும் நடவடிக்கைகள் முனைப்பு பெறும் அதேவேளை சிங்கள தேசத்தின் அடையாளங்களை தமிழர் பிரதேசங்களில் திணிக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் நடைபெற்றுவருகின்றது.என்பது குறிப்பிடத்தக்கது.

மக்கள் ஒன்றுதிரண்டு காப்பாற்றினர்

கடந்த புதன்கிழமை வன்னி ஆனைவிழுந்தானில் பாடசாலை மாணவியொருத்தியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முனைந்த படையினரின் முயற்சி அப்பகுதி மக்களால் ஒன்றுபட்டு முறியடிக்கப்பட்டுள்ளது. 24.03.2010 புதன்கிழமை அன்று பாடசாலையிலிருந்து திரும்பிக் கொண்டிருந்த குறித்த 15 வயது மாணவியை ஆனைவிழுந்தான் சந்தியில் காவலரண் அமைத்து நிலைகொண்டிருந்த இராணுவத்தினர் கட்டாயப்படுத்தி காவலரணிற்குள் அழைத்துச் சென்றனர். அதேநேரம் அப்பகுதியால் வந்துகொண்டிருந்த வயோதிபர் ஒருவர் இச்சம்பவத்தைப் பார்த்ததும் அயலிலுள்ள மக்களிடம் விரைந்து சென்று தகவலைச் சொன்னார். அப்பகுதி மக்கள் ஒன்றாகத் திரண்டு உடனடியாகவே அக்காவலரணை முற்றுகையிட்டு உள்நுழைந்து அம்மாணவியை மீட்டனர். உடைகள் கிழிக்கப்பட்ட நிலையில் இராணுவத்தினரிடமிருந்து அம்மாணவி மீட்கப்பட்டார். அதேநேரத்தில் அதற்கு அண்மித்த பகுதியில் ஈ.பி.டி.பி. கட்சியின் பரப்புரைக் கூட்டத்தில் டக்ளஸ் தேவானந்தாவும் பங்குபற்றிக் கொண்டிருந்தார். அங்கு விரைந்த மக்கள் இச்சம்பவம் பற்றி அவரிடம் முறையிட்டபோது, இது தொடர்பாக தான் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக அவர் கூறியிருந்தார். ஆயினும் இதுவரை உருப்படியான எந்த நடவடிக்கையும் இச்சம்பவம் தொடர்பில் எடுக்கப்படவில்லை என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கிளிநொச்சி, ஆனைவிழுந்தானில் நடைபெற்ற இச்சம்பவம் அங்குள்ள மக்களிடம் இராணுவத்தினர் மீதான ஆத்திரத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கடந்த மாதம் மட்டக்களப்பிலும் கிணற்றடியில் குளித்துக்கொண்டிருந்த இராணுவத்தினர், பாடசாலை முடிந்து வீதியால் வீடு திரும்பிக் கொண்டிருந்த மாணவி ஒருவரை கலைத்துச்சென்று பாலியல் வன்புணர்வுக்குட்படுத்திருந்தனர். அதன்பின்னர் நடைபெற்ற நீதிமன்ற விசாரணையின் அடையாள அணிவகுப்பின் போது குறிப்பிட்ட மாணவி குற்றவாளிகளை இனங்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சிறிலங்க-ரஷ்ய-சீன கூட்டணி ஐ.நா சபையின் முயற்சியை உடைக்க இந்தியா மீண்டும் துணைபோகுமா?

சிங்கள அரசு தமது விசுவாசிகள் மூலமாக ஐ. நா சபையின் நடவடிக்கையை முறியடிக்க பல பிரயத்தனங்களை எடுத்திருக்கின்றார்கள். குறிப்பாக மூனின் கடந்த வார அறிவித்தலின் பின்னர் தமக்கு வேண்டப்பட்ட 16 க்கும் மேற்பட்ட சிங்கள பேரினவாதிகளைக் கொண்டு இந்த ஆர்ப்பாட்டத்தை ஐ.நா சபையின் பொது செயலாளர் பான் கீ மூனுக்கு எதிராக அமெரிக்காவில் இலங்கை அரசாங்கத்தினால் அரங்கேற்றப்பட்டது. இதில் வேடிக்கை என்னவென்றால் இந்த ஆர்ப்பாட்டத்தின் பின்னர் இந்த போராட்டத்தில் ஈடுபட்ட 16 பேருக்கும் உணவு பொதி மற்றும் 100 டொலர்கள் பணமும் வழங்கப்பட்டது. பின்னர் இவர்களுக்கு ஐ.நா சபைக்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதி பாலித்த கோகன்ன தமது வாசஸ்தலத்தில் வைத்து விருந்துபசாரம் வழங்கியுள்ளார். இதனிடையே ஈழத்தில் இடம்பெற்ற போர்க் குற்றங்களை ஆராய ஐக்கிய நாடுகள் செயாலாளர் நாயகம் நியமிக்க உத்தேசித்துள்ள நிபுணர்கள் அடங்கிய குழுவுக்கு சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளன. இந்த இரு நாடுகளும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் நிரந்தர அங்கத்துவ நாடுகளாக அங்கம் வகிக்கின்றன. மொத்தம் 15 நாடுகளை உறுப்பினராக கொண்ட பாதுகாப்பு சபையில் ஐந்து நிரந்தர உறுப்பு நாடுகளாகவும், 10 தற்காலிக உறுப்பு நாடுகளாகவும் ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்கு சுழற்சி முறையில் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையினால் தெரிவுசெய்யப்படுவர். இந்த 15 நாடுகளில் ஒன்பது நாடுகள் ஆமோதிக்க வேண்டும். இரு வேறு விடயங்களில் இந்த ஒன்பது வாக்குகளையும் பாவிக்கலாம். சில விடயங்களுக்கு இந்த 15 நாடுகளில் ஏதாவது ஒன்பது நாடுகள் வாக்களிக்கலாம். ஆனால் உலகப் பாதுகாப்பு மற்றும் மிக முக்கிய விடயங்களுக்கு இந்த 15 நாடுகளில் ஒன்பது நாடுகளின் அமோக வெற்றி இருக்க வேண்டும். அதிலும் நிரந்தர உறுப்பு நாடுகளின் குறிப்பாக இந்த ஐந்து நாடுகளின் ஆதரவு தேவை. இல்லை என்றால் பாதுகாப்பு சபை எந்தவொரு நடவடிக்கைகளையும் செயல்படுத்த முடியாது. விசாரணை சபையை நியமிப்பதென்பது ஒரு இலகுவான விடயம் ஆனால் ஒரு இறைமையுள்ள சிறிலங்கா என்ற நாட்டுக்கெதிராக எந்த நடவடிக்கைகளையும் எடுக்க இந்த நிரந்தர உறுப்பு நாடுகளின் ஆதரவு தேவை. ரஷ்யா, சீனாவைத் தவிர பிற மூன்று நிரந்தர உறுப்பு நாடுகளான பிரித்தானியா, பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா கடுமையான அழுத்தங்கள் ஐ.நா சபை மீது திணித்துக் கொண்டிருக்கின்றது என்பது தான் நம்பகரமான செய்தி. இதனை ரஷ்ய பிரதமர் விளடீமிர் பூட்டின் மற்றும் சீனத் தலைவர்கள் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்திருக்கின்றார்கள். பான் கீ மூன் அறிவித்த அந்த குறித்த நிபுணர்கள் குழுவை அமைத்து அதன் அறிக்கையை பாதுகாப்புச் சபையில் சமர்ப்பித்தால், சீனாவும், ரஷ்யாவும் தமது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி முறியடிக்க திட்டமிட்டுள்ளார்கள் என்று செய்திகள் வந்து கொண்டிருக்கின்றது. இதில் வேடிக்கை என்னவென்றால் ரஷ்யா எப்படி சீனாவுடன் தோழமை கொண்டுள்ளதோ அதை விட நல்ல உறவை இந்தியா பல தசாப்தங்களாக ரஷ்யாவுடன் வைத்துள்ளது. ஆக ஈழத் தமிழருக்கு எதிராக நடக்கும் திரை மறைவு ராஜதந்திர களத்தில் இந்தியாவும் சீனா, ரஷ்யா, சிறிலங்கா நாடுகளுடன் கைகோர்த்துள்ளார்களா என்பது தான் இப்பொழுது எழும் கேள்வி. உண்மையிலயே இந்தியா ஈழத் தமிழர் மீது கரிசனை வைத்துள்ளது என்றால் ரஷ்யா சிறிலங்காவிற்கு அளிக்கும் ஆதரவை இந்தியாவினால் நிறுத்த முடியும். அதேவேளை ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தின் இந்த செயற்பாடு குறித்து அணிசேரா நாடுகளின் தலைமைப் பொறுப்பை வகிக்கும் எகிப்து ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக்கும் தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளார். இந்தியா நினைத்தால் சிறிலங்காவை கூண்டில் நிறுத்த முடியும். இந்தியாவின் முதல் எதிரியான சீனாவிடம் தோழமை கொண்டு செயல்படும் சிறிலங்காவை ஏன் இந்தியா இன்னும் ஆதரித்து இந்திய மக்களுடன் அறவிடப்பட்டும் வரிப்பணத்தை சிறிலங்காவிடம் கொடுப்பதென்பது இந்தியா தமிழினத்திற்கே துரோகம் செய்கின்றது. ஏறத்தாழ ஏழு கோடி தமிழ் மக்கள் தமது இறைமையான நாடு இந்தியா என்று இன்றும் போராடும் பொழுது அவர்களின் தொப்புள்கொடி உறவுகள் வேண்டி நிற்கும் நீதியை மேற்குலகம் வாங்கித்தரப் போராடும் போது இந்தியா வெறும் மௌனியாக இருப்பதாக காட்டிக்கொண்டு திரைமறைவில் ரஷ்யாவை தூண்டி சிறிலங்காவிற்கு உதவியாக இருக்கச் செய்வதானது நிச்சயம் இந்தியா மிகவும் கொடிய துரோகத்தை தமிழர்கள் மீது திணிக்கின்றது என்பதை அவர்கள் வெகு விரைவிலேயே உணருவார்கள். ஐ.நா சபையின் நாயகம் அறிவித்திருக்கும் சர்வதேச விசாரணைக் குழு ஈழத் தமிழரின் உண்மையான இழப்பை அம்பலப்படுத்தி அவர்களுக்கு நேர்ந்த மனித அவலத்தை உலக சட்ட வரைமுறையின் கீழ் விசாரணை செய்து குற்றவாளிகளை சர்வதேச கூண்டில் நிறுத்தி தண்டனை பெற்று தர மேற்குலகின் ஆக்க பூர்வமான செயல்பாடுகளுக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் ரஷ்ய-சீனா-சிறிலங்க கூட்டணியைத் தோற்கடித்து நீதியை நிலைநாட்ட புத்தரை மற்றும் காந்தியை உலகத்திற்கு தந்த பாரத தேசம் முன்வருமா அல்லது தமிழரை மீண்டும் புதை குழிக்குள் தள்ளும் நிலை வருமா என்பதைக் காலம் தான் பதில் சொல்ல வேண்டும். நன்றி: infotamil

பான் கீ மூனின் இன்னொரு கண்துடைப்பு நாடகமா?

புலம்பெயர் தமிழர் உலகம் அனைத்தும் அறவழிப் போராட்டத்தை முடக்கிவிட்ட வேளை வேறு வழியின்றி தமிழருக்கு இழைத்த கொடுமையை நேரில் பார்த்து நடவடிக்கை எடுப்பதென்ற ஒரு பாணியில் சிறிலங்கா சென்று வன்னியின் மயான பூமியை பார்வையிட்டார் பான் கீ மூன். இதில் வேடிக்கை என்னவென்றால் சிறிலங்காவின் மூத்த இராணுவ மற்றும் அரச அதிகாரிகள் அவருடன் சென்றார்கள். உலகைத் திசை திருப்ப வவுனியாவில் அடைத்து வைத்தவர்களை சென்று பார்த்து ஆறுதல் கூறினார். இதில் இன்னும் வேடிக்கை என்னவென்றால் சிறிலங்கா அரசினால் சிறப்பாக போடப்பட்ட அகதி முகாமையே பான் கீ மூன் பார்க்க அனுமதிக்கப்பட்டார். நாட்டை விட்டு சென்றவுடன் சிறிலங்காவில் போர் ஓய்ந்து விட்டதாகவும் பயங்கரவாதம் அழிக்கப்பட்டு விட்டதாகவும் ஒரேயொரு பிரச்சனை மட்டும் தான் சிறிலங்காவில் இருப்பதாகவும் அதாவது யுத்தத்தினால் இடம்பெயர்ந்து முகாங்களில் இருக்கும் மக்களை அவர்களின் சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்தி அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்க ஐ.நா சபை நடவடிக்கை எடுக்கும் என்றும் பான் கீ மூன் கூறினார். இது போதாதென்று ஒரு புள்ளி விவரத்தையும் அதாவது 7,000 பொதுமக்கள் மட்டுமே இறுதிப் போரில் பலியானதாகவும் கூறினார். தென் கொரிய நாட்டின் முன்னாள் வெளி விவகாரங்கள் அமைச்சரான பான் கீ மூன் கண்டி சென்று புத்த விகாரைக்கும் சென்று சிங்கள பிக்குக்களின் ஆசீர்வாதங்களைப் பெற்று தமிழரைக் கொன்று குவித்த குற்றவாளிகளுடன் விருந்துண்டு விட்டுத் திரும்பி விட்டார். பின்னர் உலக நாடுகளின் அழுத்தங்களின் காரணமாக வேறு எதுவும் செய்வதறியாது சிறிலங்காவில் மேற்கொள்ளப்பட்ட போர்க் குற்றங்கள் குறித்த விசாரணைக்குழுவை அமைப்பது தொடர்பில் தான் அழுத்தங்களை மேற்கொள்ளப்போவதாக பான் கீ மூன் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நவநீதம் பிள்ளையை அண்மையில் சந்தித்த போது தெரிவித்துள்ளார். சிறிலங்காவில் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமைகள் மீறல்கள் குறித்து அனைத்துலக மனித உரிமைகள் அமைப்புக்கள் தெரிவித்து வரும் குற்றச்சாட்டுக்களைத் தான் புறக்கணிக்கப்போவதில்லை என பான் கீ மூன் நவநீதம் பிள்ளையிடம் தெரிவித்திருந்தார். ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழு சுயாதீனமாக இயங்கிவருகின்ற போதும், சிறிலங்கா அரசு மீது காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என நவநீதம் பிள்ளை பான் கீ மூனுக்கு அழுத்தங்களை மேற்கொண்டு வருகின்றார். இவர் ஒரு ஆப்பிரிக்கக் கண்டம் தந்த தமிழ் பெண்மணி. இவரின் செயல் ஒரு தமிழ் பழமொழியை நினைவூட்டிகின்றது‘தான் ஆடா விட்டாலும் தன் தசை ஆடும்’ என்பதிற்கு இணங்க தன் இனம் ஒரு பேரழிவை சந்திக்கும் போது கொதித்தெழுந்த பெண்மணியே நவநீதம் பிள்ளை. சிறிலங்கா மனித உரிமைகள் தொடர்பில் ஆலோசனை வழங்குவதற்கான நிபுணர்கள் குழு ஒன்றை நியமிக்கவிருப்பதாக பான் கீ மூன் அறிவித்ததைத் தொடர்ந்து கொதித்தெழுந்த சிங்களப் பேரினவாதிகள் ஐக்கிய நாடுகள் சபையை வசைபாடினார்கள். சிறிலங்காவின் ஜனாதிபதி, வெளிவிவகார அமைச்சர் மற்றும் சிங்கள உறுமய போன்ற பேரினவாதிகள் ஐ.நா சபையை வசை பாடினார்கள். போதாததற்கு ஐக்கிய நாடுகளின் சட்ட யாப்பின் சரத்துக்களை அறியாமலேயே கொக்கரித்தார்கள். குறிப்பாக பான் கீ மூனிற்கு விசாரணை குழுவை சிறிலங்கா அனுப்ப எந்த அதிகாரமும் இல்லையெனவும் இவர்கள் நாட்டிற்குள் நுழைந்தால் உடனே கைது செய்து கூண்டில் அடைக்கவேண்டும் என்று தமக்கு தெரிந்த வன்முறைவாதத்தினால் கூறுகின்றார்கள் சிங்கள உறுமைய மற்றும் பல சிங்கள ஆதிக்க சக்திகள். பான் கீ மூனை போற்றிப் பேசிய இந்த சிங்கள வாதிகள் பின்னர் அவருக்கு எதிராகப் பல நடவடிக்கைகளை செய்து கொண்டிருக்கின்றார்கள். முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் கைதுக்குப் பின்னர் வந்த தீர்க்கதரிசனம் தான் மூனின் இந்த மாற்றத்திற்கான காரணம் என்று ஒரு சாரார் கூறுகின்றார்கள். இதனை உறுதிப்படுத்துமுகமாக தான் ஐ.நா சபையின் செயல்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இந்த மாற்றத்தின் பின்னர் தான் சிறிலங்காவிற்கும் ஐ.நா சபைக்கும் இடையிலான உறவுநிலையில் முறுகல்கள் ஏற்படத் தொடங்கியுள்ளன. அண்மையில் பான் கீ மூன் ஜனாதிபதி மகிந்தவுடன் பேசியபோது மனிதஉரிமை மீறல்கள் குறித்து தனக்கு ஆலோசனை வழங்குவதற்கு நிபுணர்குழுவொன்றை அமைக்கப் போவதாகவும் கூறியிருந்தார். இந்த விவகாரத்தை இலங்கை அரசுக்கு உத்தியோகபூர்வமாகத் தெரியப்படுத்துவதற்கு தனது அரசியல் விவகார செயலாளர் லைன் பாஸ்கோவை விரைவில் கொழும்புக்கு அனுப்புவதாகவும் பான் கீ மூன் கூறியிருந்தார். இது மகிந்தாவிற்கு விரக்தியை ஏற்படுத்தியது. அவர் அதற்கு உடனடியாகவே தனது எதிர்ப்பைத் தெரிவித்தார். ஆனால் ஒரு கட்டத்துக்கு மேல் அதைச் செய்ய முடியாத நிலையில் அந்த தொலைபேசி உரையாடல் முடிந்து போனது. அதன்பின்னர் தான் ஆரம்பித்தது ஐ.நா பொதுச்செயலருக்கும் இலங்கை அரசுக்கும் இடையிலான மோதல்கள். நிபுணர்கள் குழு அமைக்கப்படுவது நாட்டின் சுதந்திரத்தையும் இறைமையையும் மீறுகின்ற நடவடிக்கை என்றது இலங்கை அரசு. பான் கீ மூன் ஐ.நா பிரகடனத்தை மீறுவதாகவும் அவர் தன்னிச்சையாகச் செயற்படுவதாகவும் குற்றம்சாட்டியது. இலங்கை விவகாரத்தில் நிபுணர் குழுவொன்றை அமைக்க அவருக்கு அதிகாரம் இல்லை என்றது. அதேவேளை ஐ.நா பொதுச்செயலரின் பேச்சாளர்களும் இடைக்கிடையே குழப்பமான தகவல்களை வெளியிட்டுக் கொண்டிருந்தனர். நிபுணர்கள் குழுவை அதிகாரபூர்வமற்ற வகையில் பான் கீ மூன் தெரிவு செய்து விட்டதாக ஒருமுறை கூறினார் அவரது பேச்சாளர். அதற்குப் பின்னர் அப்படி யாரையும் தெரிவு செய்யவில்லை என்றார். இதுபற்றி ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளையுடன் ஆலோசனை நடத்தியுள்ளதாகத் தகவல் வெளியாகியது. நிபுணர் குழு விவகாரம் குறித்து ஐ.நா செயலரின் பேச்சாளர்கள் முன்னுக்குப்பின் முரணான வகையில் செய்திகளை வெளியிட்டது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது. இதனால் ஐ.நா பொதுச்செயலர் தனது நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்குகிறாரா என்ற கேள்வி எழுந்தது. இந்தநிலையில் கடந்த வாரம் இலங்கை தொடர்பான ஆலோசனை வழங்குவதற்கு நிபுணர்குழுவை அமைக்கும் நிலைப்பாட்டில் மாற்றமில்லை, விரைவில் அது அமைக்கபடும் என்றார் பான் கீ மூன். இந்த நிபுணர் குழு அந்த நாட்டின் இறைமையை மீறும் செயல் அல்ல என்றும் நிபுணர்கள் குழு எந்தவகையிலும் இலங்கையின் உள்விவகாரங்களில் தலையீடு செய்யாது என்றும் கூறியிருந்தார் அவர். இது இலங்கை அரசுக்கு மேலும் எரிச்சலை ஏற்படுத்தியது. இதற்குப் பதிலளித்துள்ள வெளிவிவகார அமைச்சர் றோகித போகொல்லாகம, நிபுணர்குழு அமைக்கும் முடிவைக் கைவிடாவிட்டால் ஐ.நாவுடனான உறவுகள் பாதிக்கப்படும் என்று எச்சரித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையினால் வரையறுக்கப்பட்ட நான்காவது ஜெனீவா சட்ட வரைமுறை 12 ஆகஸ்ட் 1949 இயற்றப்பட்டது. இதன் மூன்றாவது சரத்து தெளிவாக கூறுகின்றது. எந்த வேறுபாடும் இன்றி எந்த குழுவும் தாம் ஆயுதத்தை மௌனிக்கச் செய்தால் அவர்களை மதித்து அவர்களுக்கு எந்தக் கெடுதலும் செய்யக் கூடாதென்று. விடுதலை புலிகள் தமது ஆயுதங்களை மௌனிக்கச் செய்த பின்னரும் சிறிலங்கா இராணுவம் கண்மூடித்தனமான பீரங்கித் தாக்குதலை மேற்கொண்டு பல ஆயிரம் தமிழரை கொன்று குவித்தார்கள். அத்துடன் வெள்ளைக்கொடியுடன் சரணடைய வந்த விடுதலைப் புலிகளின் அரசியல் முக்கியஸ்தர்களான நடேசன் மற்றும் புலித்தேவனை அவர்களின் குடும்பங்களின் முன்னே சுட்டுக் கொன்று இந்த உலக சட்ட சரத்தை மீறினார்கள். இப்படியாக பல உலக சட்ட விதிமுறைகளை மீறி ஒரு விடுதலைப் போராட்டத்தை முள்ளிவாய்க்காலில் முடித்ததாக வெற்றிக் களியாட்டம் ஆடினார்கள் சிங்கள ஆதிக்க சக்திகள். இப்பொழுது எழும் கேள்வி என்னவென்றால் இந்த விசாரணைக் குழு பான் கீ மூனால் நியமிக்கபடுவது ஒரு கண்துடைப்பு செயலா அல்லது இந்த விசாரணை எந்தவொரு இடையூறும் இன்று செயல்பட்டு உண்மையான கொலைகாரர்களை உலக நீதி முன் நிறுத்துவார்களா? நிச்சயம் சிங்கள தேசம் இந்த நடவடிக்கைகளை ஒரு போதும் சம்மதிக்காது. உலக அழுத்தங்களுக்காக சிறிலங்கா இந்தக் குழுவை அனுமதித்து சிறிலங்கா எந்த குற்றமும் செய்யவில்லை என்பதை இந்தக் குழு மூலமாக அறிவித்து காலத்தை இழுத்து தமிழரின் கோபம் தணிய இந்தக் குழு செயல்படுமா என்பது காலம் தான் சொல்ல வேண்டும். அதற்கு மகுடம் வைத்தால் போல் சிங்களவர்கள் தமது போராட்டத்தை ஐக்கிய நாடுகள் சபைக்கு எதிராக நடத்தி ஐக்கிய நாடுகள் சபையை தம் பக்கம் இழுக்க பல வேலைகள் திரைமறைவில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. நன்றி: infotamil

ஐ.நா சபை: ஈழத் தமிழர் விடையத்தில் என்ன செய்யபோகிறது?


ஈழத்தில் கடந்த ஆண்டு இடம்பெற்ற போரின் இறுதிப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட போர்க் குற்றங்கள் தொடர்பில் அனைத்துலக மனித உரிமை அமைப்புக்களின் துணையுடன் விசாரணைகளை மேற்கொள்ள ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூன் திட்டமிட்டுள்ளார் என்ற செய்தி மனிதாபிமானிகளினால் வரவேற்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழர்களோ பான் கீ மூனின் இந்த நடவடிக்கையினால் வெற்றி கொண்டாட முடியாது. காரணம் இந்த விசாரணைக் குழு எவ்வாறு இந்த விசாரணையை செய்து உண்மையான குற்றவாளிகளைக் கூண்டில் ஏற்றும் என்பதைப் பொறுத்துத் தான் தமிழரின் வெற்றி தங்கியுள்ளது. கடந்த காலங்களில் ஐக்கிய நாடுகள் சபை தமிழர்களின் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தியே வந்துள்ளது. அத்துடன் விடுதலைக்காகப் போராடிய விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகளாகவே கருதி அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார்கள். சிங்கள இராணுவக் காடையர்கள் பல ஆயிரம் தமிழர்களை கொன்று குவித்து தமிழினத்திற்கு சொல்லொணாத் துயரை விளைவித்த அரக்கர்களைப் பற்றி எதுவித கண்டனத்தையும் தெரிவிக்காமல் ஐக்கிய நாடுகள் சபை இருந்துள்ளது என்பது அவர்களின் கையாலாகத் தனத்தை உறுதிப்படுத்தியது. ஐரோப்பியர்கள் பல அமைப்புக்களை உருவாக்கி அவைகளை உலக தர அமைப்புக்களாக உருவாக்கி தமது பிரச்சனைகளைத் தீர்ப்பதற்காக கையாண்டார்கள். குறிப்பாக 'லீக் ஒவ் நேசன்ஸ்' என்ற அமைப்பை 42 நாடுகள் பங்களிப்புடன் உருவாக்கினார்கள். இந்த அமைப்பு முதலாம் உலகப் போர் முடிவடைந்தவுடனேயே ஆரம்பித்தார்கள். காரணம் இன்னுமொரு உலகப் போரைத் தவிர்ப்பதற்கு. ஆனால் இந்த அமைப்பினால் இரண்டாம் உலகப் போரை நிறுத்த முடியாமல் போய்விட்டது. அதன் விளைவே ஐக்கிய நாடுகள் சபை என்ற பெயருடன் அதன் முன்னய அமைப்புக்களின் அனுபவத்துடன் பயணிக்க ஆரம்பித்தது. குறிப்பாக உலக ஆதிக்க சக்தியாக அமெரிக்கா உயர்ந்தது. அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியான பிராங்க்ளின் ரூசெவேல்ட்டினால் 1942-ஆம் ஆண்டு பரிந்துரை செய்யப்பட்ட பெயர் தான் ஐக்கிய நாடுகள் சபை. இந்த அமைப்பு 24 அக்டோபர் 1945 சட்டபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்த அமைப்பு சில வல்லரசுகளின் கைப்பொம்மையாகவே இருந்து வந்துள்ளது. இந்த அமைப்பின் ஒரேயொரு பிரிவான சமூக, பொருளாதார அமைப்பு உலகின் பட்டி தொட்டியெல்லாம் சென்று வதைப்படும் மக்களுக்காக உதவி செய்கின்றார்கள். இதனால் ஐக்கிய நாடுகள் என்ற உலக அமைப்பின் பெயருக்கு நற்பெயர் பெற்றுத் தந்துள்ளது. மற்றும்படி ஐக்கிய நாடுகள் சபையினால் எந்த பலனும் உலக மக்களுக்கு இல்லை. குறிப்பாக அமெரிக்கா தலைமையில் சென்ற படைகள் இராக்கை சட்டவிரோதமாக ஆக்கிரமித்த பொழுது ஐ. நா சபை எதுவும் செய்யமுடியாமல் போய்விட்டது. ஆக ஐ.நா சபை அமெரிக்க வல்லாதிக்கத்தின் கைப்பொம்மையாக பாவிக்கப்பட்டது. ஈழத்தில் கொடுமை நடைபெற்று கொண்டிருந்த வேளை ஐ.நா சபை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது.

கிளிநொச்சியில் பாரிய படைமுகாம்களுக்கு மத்தியில் புதிய சிறைச்சாலை ஏன்?

இலங்கை கிளிநொச்சியில் புதிய சிறைச்சாலை அமைய உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. 30 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த சிறைச்சாலை மீண்டும் நிறுவப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் கிளிநொச்சி சிறைச்சாலையை விடுதலைப்புலிகள், முகாமாக பயன்படுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது இலங்கையில் நடந்த போர் காரணமாக சிறைச்சாலை இருந்த இடத்தில் சட்ட திட்டங்களை அமுல் செய்வதில் சிக்கல் நிலைமை காணப்பட்டதாகவும், கிளிநொச்சியில் அமைக்கப்படவுள்ள சிறைச்சாலை இலங்கையின் இருபதாவது விளக்க மறியல் சிறைச்சாலை என்றும் கூறப்படுகிறது. இச்சிறைச்சாலை கேள்வியற்ற கைது நடவடிக்கைகளுக்கும் சித்ரவதை முகாமாகவும் தமிழர்களுக்கெதிராக பயன்படுத்தப் படலாம் என ஒருபுறம் செய்தி கசிந்து வருகிறது. இது தமிழர்களால் மேலும் ஒரு போராட்டம் முன்நெடுக்கப்ப்படுமிடத்து போராட்டத்தை வெளியில் தெரியாதவாறு அடக்கி ஒடுக்க இலங்கை அரசிற்கு இலகுவாக அமையும் என்றே தமிழர்களால் நோக்கப்படுகிறது.