2009 மே மாதத்தில் விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசாங்கத்துக்குமிடையிலான யுத்தம் முடிவுக்கு வந்தது. ஆனால், இந்த இறுதி யுத்தம் மிகப் பெரிய மனிதப் பேரழிவுகளை ஏற்படுத்தியது. உலகத்தின் கனத்த மௌனத்தின் முன்னே, அந்த மௌனத்தைச் சாட்சியாக வைத்து நடத்தப்பட்ட மனிதப் பேரழிவானது, மனித நாகரிகத்தையே தலைகுனியவைக்கும் அளவுக்குக் கொடுமையானது.
மனிதர்கள் எந்த வகையிலும் பெறுமதியற்றவர்கள் என்று ஆக்கப்பட்ட கணங்கள் அந்தப் போர்க்களத்தில், அந்த நாட்களில் நடந்தேறியது. போர் வெற்றி எல்லா விழுமியங்களையும் அழித்த நாட்கள் அவை.
இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
செவ்வாய், 25 மே, 2010
மாவீரர்களின் எண்ணங்களுக்கு ஏற்புடையவர்களாக...................
எதிரிகளிடமிருந்து நாம் பாடம் கற்க வேண்டும். சில நேரங்களில் அவர்களாகவே தமது அறியாமையை, அவர்கள் கற்றறிந்ததை, நாம் வெற்றிக் கொள்வதற்காக நம்மிடம் தாரைவார்த்துவிடுவார்கள். நாம் மண்ணைக் கீறி விதைத்த வித்துக்களிலிருந்து அறுவடைக்கான களத்திற்கு வருகிறோம். நாம் விளைச்சலை களத்துமேட்டில் சேர்க்கும் கட்டாய நிலைக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறோம்.
வீழ்ச்சி என்பது நிரந்தரமானது அல்ல. ..................!
ஆதிக்க சக்திகள் எப்போதும் ஒரே மாதிரித்தான் இருந்திருக்கிறார்கள். அது ஜெர்மனாக இருக்கட்டும், இந்தியாவாக இருக்கட்டும், பிரிட்டனாக இருக்கட்டும், ரஷியாவாக இருக்கட்டும். ஆதிக்கமும் அதன் அடங்காப்பிடாரித் தனமும் வெவ்வேறாக இருந்ததில்லை. பல பத்தாண்டுகளை கடந்து நாம் போய் பார்த்தாலும், போராளிகள் சித்ரவதைப்பட்ட...ு இறந்துபோயிருக்கிறார்கள்.
உலக நாடுகள் பல வழங்கிய அதிநவீன ஆயுதங்களே புலிகளைத் தோற்கடிக்க உதவியது-திவயின
புலிகள் இயக்கத்தினருக்கு எதிராக அரசபடையினர் மேற்கொண்டிருந்த வன்னி இராணுவ நடவடிக்கைகளிலும் அதன் இறுதிக்கட்ட இராணுவ நடவடிக்கைகளிலும் பயன்படுத்துவதற்காக ஐக்கிய அமெரிக்கா, சீனா, இத்தாலி, கனடா, பாகிஸ்தான், பிரிட்டன், பல்கேரியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலிருந்து பல்வேறு நவீன தொழில் நுட்பங்களைக்கொண்ட கனரக மற்றும் இலகுரக ஆயுதங்கள் உபகரணங்களை அரசு கொள்வனவு செய்திருந்தது.
திரும்பும் இடமெங்கும் பயங்கரக் காட்சிகள் வன்னி இறுதிப் போரின் போது நம்பமுடியாத கோர அழிவுகள்!
வன்னியில் இறுதிப்போர் நடைபெற்றவேளை நினைத்துப் பார்க்க முடியாத, கோரமான அழிவுகள் நடைபெற்றி ருக்கின்றன. அந்தப் பகுதிகள் நம்பமுடியாத அளவுக்கு பயங்கரமான அழிவுகளைக் கொண்டிருக்கின்றன. எங்கும் அதிர்ச்சிதரும் காட்சிகளையே காண நேர்ந்தது.
இவ்வாறு தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன்.
திங்கள், 24 மே, 2010
காணமல் போன உறவுகளைத் தேடி கண்ணீர் வடிக்கும் ஜீவன்கள்
காணாமல்போனோரை கண்டறியும் குழுவினரால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டமொன்று வவுனியா பஸ் நிலையத்துக்கு முன்னால் இன்று காலை நடைபெற்றது. காணாமல்போனோர்களின் பெற்றோர்கள், உறவினர்கள் என்று சுமார் 300க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தின்போது தமது பிள்ளைகளைக் கண்டுபிடித்து தருமாறு அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.


சவாலாகும் போர் வெற்றிக் கொண்டாட்டங்கள்.!
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிவுக்கு வந்த முதலாவது ஆண்டு நிறைவைக் கொண்டாடுவதற்கு கடந்த வாரம் அரசாங்கம் பெருமெடுப்பிலான ஏற்பாடுகளைச் செய்திருந்தது. கடந்த 20ஆம் திகதி காலிமுகத்திடலில் பிரமாண்டமான வெற்றிவிழா, இராணுவ அணிவகுப்பு என்பன நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அவையெல்லாம் இயற்கையின் கோரத் தாண்டவத்துக்கு முன்பாக நின்று பிடிக்க முடியாமல்
பகத்சிங்கும் தேசிய தலைவரும்!!
புரட்சி என்பது ரத்த ஆறு பெருக்கெடுக்கும் ஒரு போராட்டமாய் இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. அது ஒன்றும் வெடிகுண்டு அல்லது துப்பாக்கியின் மீதான பக்தி இல்லை. குறிக்கோளை அடைவதற்கு அவை சில வேளைகளில் வெறும் வழிகளாக அமைவதுண்டு. நான் பயங்கரவாதி இல்லை. என் பலம் முழுவதையும் ஒன்றுக்கூட்டி உறக்க அறிவிக்கிறேன். நான் பயங்கரவாதி இல்லை.
தடுக்குமா புலம்பெயர் தமிழர் சமூகம்?
நாட்டின் தற்போதைய நிலவரம் குறித்து தற்போது பிரசல்ஸிற்கு விஜயம செய்துள்ள சட்ட மா அதிபர் மொஹான் பீரிஸ் தலைமையிலான இராஜதந்திரிகள், ஐரோப்பிய ஒன்றிய முக்கியஸ்தர்களுக்கு இலங்கை நிலவரம் குறித்து விளக்கமளித்துள்ளனர். குறிப்பாக இலங்கையில் சமாதானத்தை நிலைநாட்டுவதற்காக எடுக்கப்பட்டுள்ள முயற்சிகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
சிறுமியைக் கடத்தும் முயற்சி சாவகச்சேரியில் முறியடிப்பு
சாவகச்சேரி நவீன சந்தைப் பகுதியில் வைத்து ஆறு வயதுச் சிறுமி ஒருவரைக் கடந்த வெள்ளிக்கிழமை கடத்தும் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் முள்ளிவாய்க்கால் பகுதி யில் கணவனை இழந்த பெண் ஒருவர் தனது உறவினரைப் பார்ப்பதற்கு வவுனியா செல்வதற்காக சாவகச்சேரிக்கு வந்திருந்தார். அங்கு இவரது ஆறு வயது மகளை நவீன சந்தை விறாந்தையில் விட்டு விட்டு சந்தைக் குள் மரக்கறி வாங்கச் சென்றி ருந்தார். மரக்கறி வாங்கிவிட்டு அவர் வந்து பார்த்தபோது மகளைக் காணாது அப்பகுதி முழுவதும் தேடிவிட்டுக் கடைசியாகப் பொலிஸ் நிலை யத்திலும், சாவகச்சேரிப் புலனாய்வுப் பிரிவி லும் முறையிட்டார். இதையடுத்து புலனாய்வுத்துறையினரும் தேடுதல் வேட்டையில் இறங்கினர். இதன் பயனாக இரவு 7மணியளவில் சாவகச்சேரி டச்சு வீதியிலுள்ள பேக்கரி ஒன்றுக்கு முன் பாக உள்ள மிதிவண்டி திருத்தும் நிலை யத்தில் காணாமல்போன சிறுமி கண்டு பிடிக் கப்பட்டார். அங்கு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டிருந்த வேளையில் கடத்திச் சென்ற நபர் அங்கு வந்தபோது மிதிவண்டி திருத்தும் நிலைய உரிமையாளர் அவரை அடையாளம் காட்டினார். சிறுமியைக் கடத் திச் சென்ற நபர் நிலைமை அறிந்து ஓடத் தொடங்கினார். எனினும் நின்ற பொதுமக்க ளும் பொலிஸாரும் அந்த நபரைத் துரத்திச் சென்று பிடித்தனர். மட்டுவிலைச் சேர்ந்த இந்நபர் தனிப் பட்ட பகை காரணமாகவே சிறுமியை கடத் தியதா கக் கூறப்பட்டது. இந்நபரை பொலி ஸார் கைது செய்து அழைத்துச் சென்றனர்.
1987 ஆம் ஆண்டின் உடன்படிக்கையை மீண்டும் அல்படுத்துக !
1987 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட இந்திய – இலங்கை உடன்படிக்கையை மீண்டும் அல்படுத்துமாறு இலங்கையிடம் இந்தியா கோரியுள்ளது. இந்த உடன்படிக்கையின் அடிப்படையிலேயே அதிகாரப் பகிர்வு மற்றும் மாகாணசபை முறைகள் தொடர்பான செயல்முறைகளுக்கு வழிகோலப்பட்டிருந்தது. ஆனால் பின்னர் வடமாகாணத்தையும் கிழக்கு மாகாணத்தையும் இரண்டாகப் பிரிக்கும் உத்தரவை உயர் நீதிமன்றம் பிறப்பித்தது. வடகிழக்கு மக்களுக்கு அரசியல் தீர்வொன்றை பெற்றுக்கொடுப்பதற்கு சமமாக இந்திய -இலங்கை உடன்படிக்கையை அல்படுத்த வேண்டும் என்பது இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கின் எண்ணமாகும் எனவும் இந்தியத் தலைமைகள் இது தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளதாகவும் தூதரக வட்டாரத் தகவல் மூலம் தெரியவருகிறது. வடக்கில் பயங்கரவாதத்தைத் தோற்கடிப்பதற்கு இந்திய அரசு பூரண ஒத்துழைப்பை இலங்கைக்கு வழங்கியுள்ளதால் இப்போது இந்தியா இலங்கை உடன்படிக்கையை அல்படுத்தப்பட வேண்டியது அவசியம் என்ற கருத்து நிலவுவதாகத் தெரியவருகிறது. இந்தியாவின் இந்தக் கோரிக்கை தொடர்பாக அடுத்த மாதம் முதல் வாரத்தில் இந்தியாவுக்கு விஜயம் செய்யும் ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷவுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்படவுள்ளன. அதற்கு முன்னர் ஆரம்பக் கட்டம் பேச்சுவார்த்தைகளை நடத்தும் பொருட்டு அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் அடுத்த வாரம் புதுடில்லி செல்லவுள்ளார்.
உண்மையை நிரூபிக்கும்வரை தொடரப்போகும் போர்க்குற்றச்சாட்டு..
விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிப்போரின் போது போர்க்குற்றங்கள் நடந்ததாக இலங்கை அரசுக்கு எதிரான குற்றச்சாட்டு தொடர்ச்சியாக வரத்தொடங்கியுள்ளது. அடுத்தடுத்து சனல்4 தொலைக்காட்சி இரண்டு ஒளிப்பதிவுகளை வெளியிட்டது. முதலாவது ஒளிப்பதிவு பொய்யானது என்று பாதுகாப்பு அமைச்சு உள்ளூர் நிபுணர்களைக்கொண்டு கூற வைத்தது. ஆனால் இதுகுறித்து ஆய்வு நடத்திய அமெரிக்க நிபுணர்கள் அது உண்மையானதே என்று கூறியிருந்தனர்
ஞாயிறு, 23 மே, 2010
சூடான் பிரதிநிதியின் ஆலோசனைகளும் நிபுணர் குழுக்களின் பிரவேசமும் – இதயச்சந்திரன்
அமெரிக்காவின் பிலடெல்பியா மாநிலத்தில் நடைபெற்ற, நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதல் அமர்வில், தென் சூடான் மக்கள் விடுதலை இயக்கத்தின் (SPLM) அமெரிக்க பிரதிநிதி டொமச் றொச்சும் (Domach Rauch) முன்னாள் அமெரிக்காவின் சட்டமா அதிபர் ராம்சே கிளார்க்கும் (Ramsey Clark) சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டுள்ளனர். இவர்களின் பிரசன்னம், பல செய்திகளைக் காவி நிற்பதனை உணரலாம். அவர்கள் அங்கு ஆற்றிய உரைகளில்
வாருங்கள் மீட்டெடுப்போம் களப் போராளிகளை!!
வீர வரலாற்றை வாசிக்கும்போது நமக்கெல்லாம் உணர்வு சிலிர்த்தது. ரத்தம் கொதித்தது, மகிழ்ச்சி பொங்கியது. அடடா... தமிழனின் வீரம் தரணியெங்கும் கொட்ட, எமது தமிழ் குலக் கொடிகள் களம்காணும் காவியம் வரலாறாய் அல்ல, நம் கண்முன்னே வரிவரியாய் வாசிக்கிறோமே என்று புலங்காதிகப்பட்டோம். நாம் அந்த வார்த்தைகளை கேட்டபோது, எண்ணங்களெல்லாம் எழுச்சியாய், எரிதழலாய், ஏற்றமிகு தமிழ் உணர்வை எமது உச்சி முதல் உள்ளங்கால்வரை பெரும் அனலாய் பரப்பியது. அவர்கள் ஆயுதம் ஏந்துகிறார்கள் என்கிற வார்த்தைகள், எம்மையும் அறியாமல் எமது விரல்களை அசைத்துப் பார்த்தது. தமிழனின் அடையாளம் இதோ,
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)







.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)






