சனி, 5 ஜூன், 2010

மட்டக்களப்பு மீளக்குடியேறிய மக்களின் துயரம்!

தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் முன்னர் இருந்த மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரைப் பகுதியில் வாழும் மக்கள் பெரும் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாக முன்னணிப் பத்திரிகையான இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.
இப் பிரதேசத்தில் அமைக்கப்பட்டிருந்த கிணறுகள் அனைத்தும் வரட்சியால் வற்றிவிட்டதால் அம் மக்கள் குடிநீரைப் பெறுவதற்கு பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக அப் பத்திரிகை சுட்டிக்காட்டியுள்ளது.

முள்ளிவாய்க்கால் மூட்டிய பெருந்தீ!


”தொடர்ந்து வடக்கே போய்க் கொண்டிருந்தால் தெற்கே தான் மிதக்க வேண்டும். அதுவும் தொடங்கிய இடத்திற்தான்.”
வரலாற்றின் பக்கங்களில் முள்ளிவாய்க்கால் ஒரு பாடநூல். இதன் தொகுப்பாசிரியர் மகிந்த ராஜபக்ச. இதன் உப ஆசிரியர்கள் பல்வேறு வெளிநாடுகளும், நாமும் தான்.
நாம் எதிரியை நோக்கி கேள்வி எழுப்ப வேண்டியதில்லை. ஏனெனில் அவன் எதிரி, அவன் எதிரி மட்டுமல்ல, அறநெறிகள் சிறிதும் இல்லாத எதிரி. ஆதலால் நாம் வீழ்ந்துபட்டதற்கான கேள்விகளை முதலில் எம்மை நோக்கியும், அடுத்து சர்வதேச சமூகத்தை நோக்கியும் எழுப்ப வேண்டி உள்ளது.

எந்த நேரத்திலும் போர் வெடிக்கலாம்,,,,

தென் கொரியாவுடன் எந்த நேரத்திலும் போர் வெடிக்கலாம் என்று வட கொரியா எச்சரித்துள்ளது. அண்மையில் வட கொரிய போர் கப்பல் ஒன்று, தென் கொரிய கடல் எல்லைப் பகுதியில் மர்மமான முறையில் மூழ்கடிக்கப்பட்டது.


இந்நிலையில் தென் கொரியாதான் தங்கள் நாட்டு கப்பலை மூழ்கடித்ததாக வட கொரியா குற்றம் சாற்றியது.அத்துடன் தென் கொரியாவுக்கு ஆதரவாக அமெரிக்கா செயல்படுவதாகவும் அது கூறியிருந்தது. ஆனால் கப்பலை தாங்கள் மூழ்கடிக்கவில்லை என்று தென் கொரியா அதனை மறுத்தது. இதனைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையேயான மோதல் அதிகரித்து வந்தது.
இந்நிலையில் ஜெனீவாவில் ஆயுத ஒழிப்பு தொடர்பாக நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய வட கொரிய தூதரக அதிகாரி ரி ஜாங் கான், கொரிய தீபகற்பத்தில் தற்போது நிலவும் சூழல் மிகவும் அபாயகரமாக உள்ளது என்றும், எந்த நேரத்திலும் போர் வெடிக்கலாம் என்றும் கூறினார்.
வட கொரியாவின் போர் கப்பலை மூழ்கடித்து நிலைமையை மோசமாக்கியது தென் கொரியாவும், அமெரிக்காவும்தான் என்றும் குற்றம் சாற்றிய அவர், ஆனால் இந்த இருநாடுகளும் வட கொரியவுக்கு எதிராக மேலும் பொருளாதார தடைகளை விதிக்க கோருவதோடு,வட கொரியாவை தனிமைப்படுத்த முயற்சிப்பதாகவும் கூறினா

ஜூன் 5ல் உலக சுற்றுச் சூழல் தினம்..

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5ம் தேதி உலக சுற்றுச் சூழல் தினமாக கொண்டாடப்படுகிறது. 2009 ம் ஆண்டுக்கான உலக சுற்றுச் சூழல் தினத்தை ‘வானிலை சவாலை எதிர்கொள்ள ஒன்றுபட வேண்டும்’ என்ற கருப்பொருளின் அடிப்படையில் கொண்டாட வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. இந்த நாளை சுற்றுச் சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு தினமாக ஐக்கிய நாடுகள் பயன்படுத்தி வருகின்றன.

தமிழீழத்தை படைத்தளிப்போம்!!-கண்மணி

கடந்த ஆண்டு மே திங்களில் தமிழீழ விடுதலை போராட்டக் களத்தில் நான்காம் கட்ட இறுதி நிகழ்வுகள் தொடர்ந்து கொண்டிருந்தது. இறுதியாக தேசிய தலைவர் கொல்லப்பட்டுவிட்டதாக ஊடகங்கள் அறிவித்தன. இந்திய ஊடகங்கள் சிங்கள பேரினவாதத்தின் மூளையைக் கொண்டு தமது குரலில் பேசியது. தேசிய தலைவரின் அடையாளம் கொண்ட ஒரு உருவத்தை கருணா என்கின்ற இன துரோகியை வைத்து அடையாளம் காட்டினார்கள். பேய் அறைந்ததைப் போல் காணப்பட்ட கருணாவின் முகம் ஒரு சிறு சலனம் இல்லாமல்---

வெள்ளி, 4 ஜூன், 2010

தியாகி பொன்.சிவகுமாரன்(26.08.1950-05.06.1974)

பொன். சிவகுமாரன் ஈழ விடுதலைப் போராட்ட வீரர்களில் ஒரு முன்னோடி ஆவார். யாழ்ப்பாணம், உரும்பிராயில் காவற்துறையினரின் சுற்றி வளைப்பில் நஞ்சருந்தி மரணமடைந்தார். ஈழப்போராட்ட வரலாற்றில் முதன் முதலில் நஞ்சு அருந்தி உயிர் நீத்தவர் இவரே.
சிங்கள இனவாதத்தால் தமிழ் மக்களுக்கெதிரான கொடுமைகளும் படுகொலைகளும் கட்டவிழ்த்து விடப்பட்டு, தமிழ் மக்களின் சுதந்திர இருப்பு சிதைக்கப்பட்டது. இந்நிலையில் தான் அன்று மாணவனாகவிருந்த தியாகி பொன்.சிவகுமாரன், தமிழ் மக்களின் உரிமைகள் மீட்கப்படுவதற்கும் சுதந்திர இருப்பை உறுதிசெய்வதற்கும் ஆயுதப் போராட்டமே சரியான மார்க்கம் என்பதை உணர்ந்து சிங்கள இனவாதத்திற்கெதிராக ஆயுதமேந்திய போராட்டத்தை முன்னெடுத்தார்.

தலைவரின் முகமே..!-கண்மணி





"எதிரி கருவி ஏந்தாவிட்டால் விமர்சனம் என்பதே கருவி. எதிரி கருவி ஏந்திவிட்டால், கருவி என்பதே விமர்சனம்". இந்த வரிகள் நம்மை நம்முடைய போராட்ட நியாயத்தை உணர்த்துகிறது. எதுவரை நாம் அமைதிகாக்க வேண்டும் என்பதை நமக்கு பகைவன்தான் கற்றுத்தருகிறான். இன்று அரசியல்சூழல் மாறிக் கொண்டிருக்கிறது.

தமிழில் ராணுவக் கல்வி… சாதித்துக் காட்டிய பிரபாகரன்!





“அவர் பல துறை நிபுணத்துவம் பெற்ற ஒப்பற்ற தலைவர். தமிழ் ஈழத்துக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்தால் போதும்… வளங்கள் இல்லாவிட்டாலும், தமிழ் ஈழத்தை இன்னொரு சிங்கப்பூராக உருமாற்றிக் காட்டுவார்…”, என்று.


இந்த அவர் யாரென்பது உங்களுக்குச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

தாய் தமிழ்நாடு, தமிழீழம் ,உலக தமிழ் ,மொழியால் ஏற்படும் ஒற்றுமையின் விம்பம் ...........


நீங்கள் "மானாட மயிலாடுங்கள்" அங்கே "மனிதர்களை
வேட்டையாடுகிறது" சிங்களப் பேரினவாத பேய்கள்


உங்களுக்கு "அசத்தப் போவது யாரு!" எங்களுக்கு

முகவரியாய் எம் தலைவன்!!

பகைவனிடம்
சிறைகூடமும்
சித்ரவதையும்
கொலைக்கருவியும்
குவிந்து கிடக்கலாம்.




ஒப்புக்கு ஒற்றுமை என கூச்சலிடுவதை நிறுத்தி உண்மையான ஒற்றுமைக்கு வழி சமையுங்கள்!

நானும் நானும் என்றது போலவே தமிழினத்தின் சாபக்கேடமுள்ளிவாய்க்கால் முடிவுக்கு பின் கடந்த ஒரு வருடமாய் ஆட்டிப்படைத்துக்கொண்டிருந்தது. தமிழீழ தேசம் என்ற நிழல் அரசு இழக்கப்பட்டதை பற்றிய கவலையை விட தமிழர்களின் அடுத்த தலைமை பற்றி கேள்விகளும், தலைமை ஏற்புக்களும் கடந்த மே மாதம் தொடக்கம் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது

துரோகிகளை உருவாக்காதீர்கள்!

முள்ளிவாய்க்கால் முடிவுக்கு பின்பு பலரும் துரோகிகளாக சித்தரிக்கப்பட்டுள்ளனர்.
எந்த ஒரு ஆதரமும் இல்லாமல் எடுத்தவனையெல்லாம் துரோகி,இலங்கை அரசுடன் சேர்ந்தியங்குகிறார்கள்,விலை போய்விட்டார்கள் என்ற ஆதாரமற்ற செய்திகளை வெளியிட்டு தேச விடுதலையை நேசிக்கும் மக்களை குழப்புவதையே சில தமிழ் இணையங்கள் தற்போது வேலையாக வைத்துள்ளது.



வாகரையில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றம்

மட்டக்களப்பு மாவட்டம், வாகரை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கஜவத்தை என்னும் கடற்கரையை அண்டிய பிரதேசத்திலேயே தற்போது சிங்களவர்கள் குடியேற்றப்பட்டுக் கொண்டிருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் திரு பா.அரியநேத்திரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

‌‌தீ ‌விப‌த்து: 104 பே‌ர் ப‌லி

வங்கதேச தலைநகர் டாக்காவில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 104 பேர் பலியாகினர். 50‌க்கு‌‌ம் மே‌ற்ப‌ட்டோ‌ர் படுகாயமடைந்துள்ளனர். வங்கதேசம், பழைய டாக்கா, நஜீராபஜார் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்‌பி‌ல் உள்ள டிரான்ஸ்பார்மர் வெடித்து சிதறிய‌தி‌ல் தீ அருகில் இருந்து அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் தொழிற்சாலை ஒன்றில் பரவியது.
தொழிற்சாலையில் ரசாயனப் ‌பொருட்கள் வைக்கப்பட்டிருந்ததால் தீ வேகமாக பரவிய‌தி‌ல் 104 பே‌ர் உட‌ல் கரு‌கி ப‌லியானா‌ர்க‌ள். 50‌க்கு‌ம் மே‌ற்ப‌ட்டோ‌ர் படுகாயங்களு‌டன் டா‌க்கா மரு‌த்துவ‌க் க‌ல்லூ‌ரி மரு‌த்துவமனை‌யி‌ல் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதி‌ல் பல பே‌ரி‌ன் ‌நிலைமை கவலை‌க்‌கிடமாக இரு‌ப்பதா‌ல் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது. இத‌னிடையே பிரதமர் ஷேக் ஹசீனா , சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்துள்ளதோடு உயிரிழந்தவர்கள் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறியுள்ளார்

செய்தித் துளிகள்........



அரசியற் கட்சியா ? ஊடக அமைப்பா??

“பிரச்சினைகளைப் பற்றித் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்காமல் அவற்றுக்குத் தீர்வு காண்பதே புத்திபூர்வமான சமுகமொன்றின் வளர்ச்சிக்கான பணி’ என்று சொல்லப்படுவதுண்டு. இந்தக் கூற்றுக்கு முற்றிலும் மாறான நிலையில் இன்று இலங்கைத் தமிழரின் அரசியல் முன்னெடுப்புகள் உள்ளன என்றே சொல்லவேண்டும். இன்னும் சொல்லப் போனால், தமிழ் முஸ்லிம் மக்களின் அரசியல் அப்படித்தான் உள்ளது.
போர் முடிந்ததற்குப் பின்னர் தொடருகின்ற அரசியற் போக்கு மிகவும் கவலைக்குரியதாகவும் சிங்கள அதிகாரவர்க்கத்துக்குத் தொடர்ந்து பலியாகும் இயல்பைக்