வெள்ளி, 18 ஜூன், 2010

விடுதலைப் பயணத்தில் உறுதியுடனும் ஒருமைப்பாட்டுடனும் முன்னேறுவோம்!: வி.ருத்ரகுமாரன்

கடந்த மே மாதம் 17-19 ஆம் நாட்களில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அங்குராப்பணமும் முதலமர்வு நிகழ்வுகளும் நடைபெற்று ஒரு மாதம் பூர்த்தியாகும் இத் தருணத்தில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாட்டு அணுகுமுறையினையும், செயற்பாட்டு முயற்சிகளின் தற்போதைய நிலைமையினையும் மக்களுக்கு அறியத் தருதல் அவசியமானது எனக் கருதுகிறோம்.

செய்தித்துளிகள்



ஒட்டுகுழுக்களின் துண்டுப்பிரசுரம் ....தமிழ்சினிமா எதிர்ப்பு வாரமாம் ....

இலங்கையில் மட்டக்களப்பில் அமைந்திருக்கும் திரையரங்கத் திரைகளுக்கு தீவைப்பு சம்பவம் இடம்பெற்றிருப்பதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்நடவடிக்கை இனந்தெரியாத நபர்களால் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அறியமுடிகிறது. மேலும் அவர்கள் ஒரு துண்டுபிரசுரத்தையும் விட்டுச்சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஆலோசனைக் குழு நியமனமாகிறதாம்?!?!

இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து நடவடிக்கை எடுப்பது தொடர்பான ஆலோசனை வழங்கும் நிபுணர் குழுவை ஒரு சில நாட்களில் ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன் அறிவிக்கவுள்ளார்.

சீனர்களின் வருகையால் தமிழர்களுக்கு ஆபத்து !!!!!!!- ஜெயலலிதா

வட இலங்கையில் சீனர்கள் குவிக்கப்பட்டுள்ளதா‌ல் இலங்கைத் தமிழர்களுக்கு கடுமையான ஆபத்து காத்திருக்கிறது எ‌ன்று எ‌ச்ச‌ரி‌க்கை ‌விடு‌த்து‌ள்ள அ.இ.அ.தி.மு.க பொதுச் செயலர் ஜெயலலிதா, இ‌ந்த ‌பிர‌ச்சனை‌யி‌ல் இந்திய அரசு உடனடியாக தலையிட்டு இலங்கை அரசுடன் கடினமாக நடந்து கொள்ள வேண்டும் எ‌ன்று‌ கே‌ட்டு‌க் கொ‌ண்டு‌ள்ளா‌ர்.

இஸ்ரேலின் மனித உரிமை மீறலால் அதிக மக்கள் பாதிப்பாம் - பாலித

பாலஸ்தீனத்தில் இரேலின் மனித உரிமை மீறல் தொடர்பில் அதிகமானேர் பாதிக்கப்பட்டுள்ளனர். எனினும் அவர்களுக்கு இதுவரை நிதீ கிடைக்கவில்லை எனவும் பாலித கேகன்ன கூறியுள்ளார். பலஸ்தீன் காஸா பகுதியில் இடம்பெற்ற மனித உரிமை மீறல் சம்பங்கள் தொடர்பாக அதிக கவனம் செலுத்தவுள்ளதாகவும் பாலித கூறியுள்ளார்.


கடந்த வாரம் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பாங் கீ மூன் மத்திய கிழக்கு பகுதியில் இடம்பெற்ற மனித உரிமை மீறல் சம்பவங்களை விசாரிப்பதற்கு பாலித்த ஹோகன தலைமையில் குழுவொன்றை நியமித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களையே அதனை விசாரிக்குமாறு கூறும் ஐக்கிய நாடுகளின் புதிய முயற்சியை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்

வியாழன், 17 ஜூன், 2010

புலனாய்வு கட்டமைப்பு,,.............?

ஆளும் கட்சியின் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஆளும் கட்சியின் முக்கியஸ்தர்கள் பற்றிய உளவுபார்க்கும் பொறுப்பு ஜனாதிபதியின் பாதுகாப்பு பிரிவுக்கு பொறுப்பான மேஜர் ஜெனரல் ஜகத் அல்விஸ் தலைமையில் தெரிவுசெய்யப்பட்ட புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கரும்புலி மேஜர் சந்தனா

அவளுக்கு நன்கு தெரிந்திருந்தது, தனது நீண்டநாள் கனவு, இலட்சியம் இம்முறை எந்தத் தடையும் இன்றி வெற்றியடையும் என்று. அந்த நம்பிக்கையின் நிறைவோடு தன்னைப் பெற்றவளை, தன் உறவுகளை இறுதியாக ஒரு தடவை பார்த்துவிட்டு வருவதற்காய் வீடு செல்கிறாள்.

சீமானின் கொள்கை சறுக்கல்?

தமிழ் இனத்தின் போர்வாள் என்று சமீபகாலமாக உணர்வாளர்களால் கொண்டாடப்படுகிறார் சீமான்.
ஆனால் அந்த வாள் அவ்வப்போது மொக்கையாகிவிடுவதும் உண்டு என்பதை நிரூபித்திருக்கிறது அவரது சமீபத்திய முடிவொன்று! தமிழினத்தின் உணர்வை மதிக்காமல் இலங்கைக்கு போய் ஆட்டம் போட்ட பாலிவுட் நடிகர்களின் படங்களை தமிழகத்தில் எங்கும் ரிலீஸ் செய்ய விட மாட்டோம் என்று முழங்கிய சீமான், தனது கொள்கையிலிருந்து வழுக்கி விழுந்திருக்கிறார். அதற்கு அவர் சொல்லியிருக்கும் காரணத்தை அவரது தம்பிகளே ஏற்றுக் கொள்வார்களா என்பதுதான் பெருத்த சந்தேகம்!

தமிழரது கலாச்சாரத்தை அழித்து சிங்களப்பிரதேசமாகும் வடபகுதி!

இலங்கையின் வட மாகாணம் வேறுபட்ட விதத்திலான தாக்குதலை எதிர்கொண்டுள்ளது. இந்தத் தடவை இராணுவ ரீதியான தாக்குதல் இடம்பெறவில்லை. ஆனால், கலாசார,மத ரீதியான தாக்குதலே

யுத்த வெறியனின் ஒரு வருட பூர்த்தி விழா நாளை வெள்ளிக்கிழமை காலி முகத்திடலில் கொண்டாடப்படவுள்ளது



லியன்பாஸ்கோ வற்றாப்பளையில் மக்களை நேரடியாக சந்தித்தார்

முல்லைக்கு சென்ற ஐக்கிய நாடுகளின் தூதுவர் லியன் பஸ்கோ வ்ற்றாப்பளையில் குமரபுரம் மக்களை சந்தித்துள்ளார். அங்கு அவர் மக்களுடன் பேசுகையில் கோரமான போர் முடிந்துவிட்டது. நீங்கள் மீண்டும் வழமையான வாழ்க்கைக்குத் திரும்புவதற்குத் தேவையான உதவிகளை ஐக்கியநாடுகள் சபை செய்துவருகிறது என்றும் கூறியுள்ளார்.

துரோகங்களை தோற்கடிப்போம் -கண்மணி

எதைக் கொண்டு விடுதலையை ஒடுக்க முடியும்? அலைகளை தடுக்க முடியும் காலம் வரும்போது, விடுதலையும் ஒடுக்கப்படலாம். சூரியனை மறைக்க திரைத்தேடி அலையும் ஒரு கூட்டம் இன்னும் இருந்துக் கொண்டுதான் இருக்கிறது. இயல்பாக பற்றி எரியத் தொடங்கிய லட்சியத்தீ எதிர் முழக்கத்தை உதாசீனப்படுத்தி முன்னேறிக் கொண்டிருக்கிறது. தமிழர்களின் வாழ்வியல்

கிர்கிஸ்தான் நாட்டில் கலவரம்!

கிர்கிஸ்தானில் இனப்படுகொலைகளில் நூற்றுக்கணக்கானவர்கள் கொலை செய்யப்பட்டும் காயமுற்றுமுள்ளனர் . மத்திய ஆசியப் பகுதியை அமைதியின்மை ஸ்திரமற்றதாக்குகிறது


ஒரு வாரத்துக்கு மேலாக

செய்தித் துளிகள்


இலங்கைக்கு படிப்பிக்க வேண்டாம்!

இலங்கைக்கு படிப்பிப்பதற்கு முயற்சி செய்ய வேண்டாம் என்று சர்வதேச நிறுவனங்களுக்கு கடும்தொனியில் தெரிவித்த ஐப்பானிய விசேட தூதுவர் யசூஷி அகாஷி, ஜப்பானும் உதவி வழங்கும்போது உதவிபெறும் நாடுகள் மீது தான் விரும்புவதை திணிப்பதில்லை என்று தெரிவித்திருக்கிறார்.