திங்கள், 21 ஜூன், 2010

லெப்டினன்ட் மலரவன்- ஒரு வேவுப்போராளியின் உண்மைக் கதை

ஆனையிறவு கூட்டுப்படைத்தளம் அந்த ஜனவரி மாதத்து நிசப்தமான குளிரில் உறைந்துபோய்க் கிடந்தது. உடலை ஊடுருவும் உப்புக் காற்றின் குளிரையும் மீறீச் சில உருவங்கள் எதிரியின் முன்னணித் தடைகளை நோக்கி வரிசையாக நகர்ந்து கொண்டிருந்தன.

நாம் வீழ்ந்தாலும் தமிழ் வீழக்கூடாது......

செம்மொழி மாநாடால் கலைஞருக்கு வேண்டப்படாத புகழும், அரசியல் அனுகூலங்களும் கிடைக்கப் போவதென்பது உண்மை. கலைஞரை மட்டும் குறைசொல்லி ஏது பலன்? நாம எல்லோரும் ஒருத்தரை ஒருத்தர் நாம் கொண்ட கொள்கைக்காகப் பிடறியில் குத்துவதில்லையா?! இன்று தமிழினம் என்றுமில்லாதாவாறு பிளவுபட்டுள்ளது. ஓற்றுமையே பலம்; அடம்பன் கொடியும் திரண்டால்தான் மிடுக்கு. கருத்தியல் வேற்றுமைகளைக் களைந்து தமிழுக்காகத் தமிழின் பெயரில் ஒன்றுபடுவோம். ஓன்றுபட்டு தமிழினதும் தமிழர்களினதும் வளர்ச்சிக்கும் சளைக்காது உழைப்போம். சாதி, மத, மார்க்க, வர்க்க, நெறி, அரசியல், சித்தாந்த, கொள்கை, கருத்தியல் வேற்றுமைகளைக் களைந்து தாய்த்தமிழின் பெயரில் ஒன்றுபடுவோம். நாம் வீழ்ந்தாலும் தமிழ் வீழக்கூடாது.

கே.பி அவர்களுக்கு ஓர் திறந்தமடல் - சேரமான்


அமைச்சரோ அல்லது முதலமைச்சரோ...
தெரியவில்லை.


மாண்புமிக்கவரோ அல்லது மேன்மைதங்கியவரோ...
அறியவில்லை.


கே.பியோ, குமரன் பத்மநாதனோ அல்லது செல்வராசா பத்மநாதனோ...
புரியவில்லை.


எவராயிருப்பினும் தவறாக விளித்திருப்பின் மன்னித்தருள்க!

இலங்கை அரசின் போலி முகத்திரையைக் கிழிப்போம் !

சில தினங்களுக்கு முன்னர் புலம்பெயர் நாடுகளில் இருந்து முக்கிய பிரமுகர்களும் மற்றும் கே.பி என்று அழைக்கப்படும் குமரன் பத்மநாதன் என்பவரும் இணைந்து 9 பேர் கொண்ட ஒரு குழு அமைத்திருப்பதாக இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் சண்டே ஒப்சேவர் பத்திரிகை செய்திவெளியிட்டிருந்தது யாவரும் அறிந்ததே. இதன் பின்னணி என்ன, இதில் வெளிவராத செய்திகள் என்ன என்பதை ஆராய்வோம்.

சண்டே லீடர் பத்திரிகை ஆசிரியர் பிரெட்றிக்கா ஜெய்ன்ஸ் இன் மடிக்கணனி நீதிமன்ற பாதுகாப்பில்!

வெள்ளைகொடியுடன் சரணடைய வந்த புலிகளின் முக்கியஸ்தர்களை சுட்டுக்கொல்லுமாறு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச களமுனைத் தளபதி ஒருவருக்கு கட்டளையிட்டிருந்தார் என முன்னாள் இராணுவத்தளபதி ஜெனரல் பொன்சேகா தெரிவித்தாக செய்தி வெளியிட்ட சண்டே லீடர் பத்திரிகை ஆசிரியர் பிரெட்றிக்கா ஜெய்ன்ஸ் இன் மடிக்கணனி நீதிமன்ற பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகள் கைது!

தமிழகத்தின் திருச்சி நகரில் விடுதலைப் புலிகள் 3 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக போலீசார் கூறுகின்றனர்.

பிரிவினைவாத உணர்வைத் தூண்டுகிறது ஜேவிபி

வடக்கு, கிழக்கு தமிழ்மக்களிடம் பிரிவினைவாத உணர்வுகளைத் தூண்டும் வகையில் ஜேவிபி நடந்து கொள்வதாகக் குற்றம்சாட்டியுள்ளார் சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச.
கொழும்பு நாளிதழ் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள செவ்விலேயே ஜேவிபி மீது இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

மீன்பிடிக்க சீனா போடும் தூண்டில்!

முல்லைத்தீவு நந்திக்கடலை மீன்பிடி அபிவிருத்தித் திட்டம் ஒன்றுக்காக சீன நிறுவனம் ஒன்றிடம் கையளிப்பதற்கு இலங்கை அரசாங்கம் தயாராகி வருகிறது. கடற்றொழில் அமைச்சர் ராஜித்தசேனா ரத்ன கடந்த வாரம் இதுபற்றிய தகவலை வெளியிட்டிருந்தார்.

ஞாயிறு, 20 ஜூன், 2010

தமிழர் தரப்பின் நிலை..........

முள்ளிவாய்க்கால் பேரழிவுக்குப் பின்னர் எப்படியெல்லாம் பின்நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறோம் என்பதை நாளுக்கு நாள் எம்மால் உணர முடிகிறது.
அரசியல் ரீதியாகவும் சரி- உரிமைப் போராட்ட ரீதியாகவும் சரி- ஊடகத்துறை ரீதியாகவும் சரி- தமிழர் தரப்பின் நிலை மோசமாகிக் கொண்டிருக்கிறது.
தமிழர்களாகிய எமக்குள்ளே சண்டை போட்டுக் கொள்வதற்குத் தான் எமக்கெல்லாம் நேரம் கிடைத்துள்ளது.

வெற்றி கொண்டாட்டம் எவளவு காலத்திற்க்கு ....??!!!

கருணாநிதியின் செம்மொழி மாநாடு ஒரு கேலிக் கூத்து!

தமிழும், தமிழினமும் வீழ்ந்து கொண்டிருக்கும் இந்தச் சூழ்நிலையில், உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை நடத்துவது கேலிக்கூத்தானது- கடும் கண்டனத்திற்கு உரியது என, அ.தி.மு.க பொதுச் செயலாலாளர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
அவர் இன்றைய சூழலில்

லெப். செல்லக்கிளி - அம்மான்-சதாசிவம் செல்வநாயகம் கல்வியங்காடு, யாழ்ப்பாணம்

1983ம் ஆண்டு யூலை 23ம் திகதி இரவு 11மணியளவில் திருநெல்வேலிச் சந்தியைக் கடந்து யாழ்ப்பாணம் நோக்கி ஒர் வெள்ளை நிற டெலிக்கா வான் வந்துகொண்டிருக்கிறது. வானை செல்லக்கிளி செலுத்த அவனை அடுத்து கையில் S.M.G உடன் கம்பீரமாக உட்கார்ந்திருக்கிறான் விக்ரர். அவனை அடுத்து நான் வானின் பின்பகுதியில் தம்பி, மற்றும் ஏனைய தோழர்கள்.

நேற்றைய ஜப்பானும் இன்றைய தமிழீழமும்!!!!

அமெரிக்காவிலிருந்து புறப்பட்ட அந்த விமானம் 12 மணித்தியாலமும் 15 நிமிடமும் 17 விநாடிகளும் பறந்து 1945 ஆண்டு ஓகஸ்ட் மாதம் 6 ம் திகதி காலை 8 மணிக்கு ஜப்பானின் ஹிரோஷிமா என்ற மிகம்பெரிய கைத்தொழில் நகரம் மீது குட்டிப்பையன் (Little boy) என்ற பெயருடைய அணுகுண்டை வீசியது.


அதனைத் தொடர்ந்து 3வது நாள் அதவாது 9 ம் திகதி நாகசாகி என்ற மற்றொரு கைத்தொழில் நகரம் மீதும் 2வது பெரிய பையன் (Big boy) என்ற பெயருடைய அணுகுண்டையும் அந்த விமானம் வீசியது. உலகம் அதிர்ந்து போனது. முதல் அணுகுண்டு யுரேனியம் இரண்டாவது புளுட்டோனியம்.

ஊடகவியலாளர் ஜெ.எஸ்.திஸாநாயகம் அமெரிக்கா சென்றடந்தார்

ஊடகவியலாளர் ஜெ.எஸ்.திஸாநாயகம் அமெரிவிக்காவிற்கான பயணத்தை மேற்கொண்டிருப்பதாக ஊடகவியலாளர் பாதுகாப்புக் குழு தெரிவித்துள்ளது.

உலக அகதிகள் தினம்( World Refugee Day)

ஜூன் 20 ஆம் திகதி உலக அகதிகள் தினமாக World Refugee Day நினைவுகூரப்படுகிறது. ஆரம்பத்தில் ஜூன் 20 ஆபிரிக்க அகதிகள் தினமாகத்தான் Africa Refugee Day நினைவு கூரப்பட்டது. பின்னர் இத்தினமானது 2000 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் United Nations General Assembly சிறப்புத் தீர்மானமொன்றின்படி, ஆபிரிக்க அகதிகளுக்கான தமது ஆதரவினை வெளிப்படுத்தும் முகமாக, உலக அகதிகள் தினமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.

கே.பி , புலம்பெயர்ந்த புலித் தலைவர்கள்?!!!?

புலிகள் இயக்கத்தின் முன்னாள் சர்வதேச ஆதரவாளர்கள், போருக்குப் பின்னரான புனர்வாழ்வு, புனரமைப்புப் பணிகளில் அரசாங்கத்திற்கு ஒத்துழைக்க முன்வந்துள்ளனர்.
புலிகளின் முன்னாள் சர்வதேச தலைவரான குமரன் பத்மநாதன் உள்ளிட்ட ஒன்பது புலம்பெயர் தமிழ்ப் புத்தி ஜீவிகள் குழு அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றப் போவதாக அறிவித்துள்ளது.