செல்வராசா பத்மநாதனை சிறீலங்காவின் படைப் புலனாய்வாளர்களே இயக்கி வருவதாகவும், அவரூடாக புலம்பெயர் மக்களை தம்மிடம் மண்டியிட வைப்பதே சிறீலங்கா அரசின் நோக்கம் என, அண்மையில் கே.பியுடன் சிறீலங்காவின் பாதுகாப்பு அமைச்சின் செயலர் கொட்டாபய ராஜபக்சவைச் சந்தித்து, பிரித்தானியா திரும்பியுள்ள மருத்துவர் வேலாயுதபிள்ளை அருட்குமார் அம்பலப்படுத்தியுள்ளார்.
இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
செவ்வாய், 29 ஜூன், 2010
இந்தியா எங்களோடு இருந்தால் போதும்.....!
தமிழர்கள் எதிராக நடந்த போர்க் குற்றங்கள் குறித்து உலக நாடுகளும், ஐ.நா.வுன் என்ன கூறுகின்றன என்பது குறித்து தனக்கு கவலையேதும் இல்லை என்று கூறியுள்ள சிறிலங்க அதிபர் மகிந்த ராஜபக்ச, இந்தியாவும், அண்டை நாடுகளும் தங்களோடு இருந்தால் போதுமானது என்று கூறியுள்ளார்.
அமெரிக்காவில் 10 ரஷ்ய உளவாளிகள் கைது!
அமெரிக்காவில் சாதாரண மக்களைப் போல தங்கி உளவு பார்த்து வந்த 10 ரஷ்யர்களை அமெரிக்க அதிகாரிகள் கைது செய்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த பத்து பேரும் கடந்த சில ஆண்டுகளாகஅமெரிக்காவில், சாதாரணர்கள் போல வசித்து வந்துள்ளனர்.
திங்கள், 28 ஜூன், 2010
பொருளாதார வளர்ச்சியை எட்ட சமநிலையான அணுகுமுறை.. -G20
நிதி பற்றாக்குறையை குறைக்கவும், பொருளாதார வளர்ச்சியை எட்டவும் சமநிலையான அணுகுமுறையை கடைபிடிக்க வேண்டும் என்று ஜி 20 நாடுகள் அறைகூவல் விடுத்துள்ளன.
வீரவேங்கை பகீன்(அன்னலிங்கம் பகீரதன் மண்டைதீவு)
வீரவேங்கை பகீனுக்கு எப்போதும் சந்தேகம் இந்த சயனைட் வேலை செய்யுமாவென்று. தமது சந்தேகத்தைத் தீர்த்துக் கொள்ள அடிக்கடி தனக்கு மேலுள்ள பொறுப்பாளரிடம் கேட்பார் "அண்ணை இது வேலை செய்யுமோ?" என்று
"அது வேலை செய்யும் போடா" என்று அந்தப் பொறுப்பாளரும் அவரை அனுப்பி வைப்பார். எத்தனை தரம் அந்தப் பொறுப்பாளர் பகீனிடம் கூறினாலும் அதில் அவருக்குத் திருப்தி யில்லை.
"அது வேலை செய்யும் போடா" என்று அந்தப் பொறுப்பாளரும் அவரை அனுப்பி வைப்பார். எத்தனை தரம் அந்தப் பொறுப்பாளர் பகீனிடம் கூறினாலும் அதில் அவருக்குத் திருப்தி யில்லை.
சிறிலங்காவில் சிறு சிறு வன்முறைகளே இடம்பெற்றுள்ளனவாம்!
30 வருடங்கள் இடம்பெற்ற நீண்டகால யுத்தத்தில் ஓரிரு சிறு சம்பவங்களே இடம்பெற்றன. அவற்றைப் பெரிதுபடுத்தவேண்டிய அவசியமில்லை என்று பிரதமர் டி.எம். ஜயரத்ன தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 15 ஆவது வருட ஒன்றுகூடலின்போது பிரதம அதிதியாகக் கலந்து உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
உளவியல் போர்!!உளவியல் போர்!!உளவியல் போர்!!
உலகெங்கும் வாழும் தமிழ் உறவுகள் போருக்கு தம்மை தயார்படுத்திக் கொள்ள வேண்டிய தருணத்திற்கு வந்திருக்கிறார்கள். இந்த போரிலே வெடிமருந்து கிடையாது. துப்பாக்கி கிடையாது. பீரங்கி கிடையாது. இதில் யார் அதிகம் பொய் பேசி வெற்றி பெறுவது என்பதுதான். பொய்யினால் மனதை நிலைகுலைய செய்து, அடுத்தக்கட்டத்திற்கு நம்மை நகரவிடாமல் தடுக்கும் உளவியல் போர்.
மகிந்த இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வி!
சிறிலங்கா தொடர்பில் இந்தியாவும் எமது அயல்நாடுகளுமே எனக்கு முக்கியம். ஏனைய நாடுகள் பற்றி எனக்க கவலை இல்லை. நாட்டில் தற்போதுதான் போர் முடிவடைந்திருக்கிறது. படிப்படியாகத்தான் சகலதையும் செய்யலாம். தீர்வுத்திட்டம் என்பது.....
ஜி.எஸ்.பி. வரி சலுகை ஆகஸ்ட் மாதம் முற்றாக நிறுத்தம்...
ஜி.எஸ்.பி. பிளஸ்' வரிச் சலு கையை ஓகஸ்ட் 15ஆம் திகதி முதல் நிறுத்துவது என ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்துள்ளது என கொழும்பிலுள்ள அதன் தூதுவர் தெரிவித்துள்ளார்.
கே.பி க்கு பொதுமன்னிப்பு வழங்குவது தொடர்பாக கூறமுடியாது.....
புலிகள் அமைப்பிற்கான ஆயுதக்கொளவனவாளரும் பிரபாகரனின் மரணத்தின் பின்னர் அவ்வியக்கத்தின் தலைவர் என தன்னை உலகிற்கு அறிமுகப்படுத்தி கொண்டவருமான கே.பி க்கு பொது மன்னிப்பு வழங்குவது தொடர்பாக தற்போதைக்கு எதுவும் திடமாக கூறமுடியாது என ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வல தெரிவித்துள்ளார்.
ஞாயிறு, 27 ஜூன், 2010
ரத்தத்தை கழுவுகிறான் நரிச்சிரிப்புடன்
வெறுப்பாய் இருக்குது தமிழே!
நெருப்பாய் இல்லாத தமிழனால்!
உன் மீதே
வெறுப்பாய் இருக்குது தமிழே!
ஆரிய அடக்குமுறைக்கு எதிரான
ஆயுதமாய் இருந்தாயே! தமிழே
சமத்துவம், சமதர்மம் என கொள்கைகளை
பறக்கவிட்ட சமணமுனிகளின் சாம்ராஜ்யத்தை
சரித்த ஆயுதமாய் இருந்தாயே! தமிழே
நெருப்பாய் இல்லாத தமிழனால்!
உன் மீதே
வெறுப்பாய் இருக்குது தமிழே!
ஆரிய அடக்குமுறைக்கு எதிரான
ஆயுதமாய் இருந்தாயே! தமிழே
சமத்துவம், சமதர்மம் என கொள்கைகளை
பறக்கவிட்ட சமணமுனிகளின் சாம்ராஜ்யத்தை
சரித்த ஆயுதமாய் இருந்தாயே! தமிழே
குடிவரவினை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் பிரித்தானியா!
குடிவரவினை கட்டுப்படுத்த விசேட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பிரித்தானியாவின் புதிய அரசாங்கம் அறிவித்துள்ளது.
பிரித்தானியாவிற்குள் குடியேறுவோரின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது.
பிரித்தானியாவிற்குள் குடியேறுவோரின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது.
கடற்கரும்புலி லெப்டினன்ட் கேணல் அமுதசுரபி - அல்பா சின்னப்பு நந்தினி யாழ்பாணம்
தாயகத்தைக் காப்பதற்காய் கனத்த மடிகளாய் கரையைத் தேட முயலும் படகுகள் இயந்திரப் பிழைகளால் வேகம் குறைய, தொடரணியாய் எம் கடற்பரப்பில் நகரும் எதிரிகளோடு மாட்டுப்பட வேண்டிவரும் பொழுதுகளில், அல்பாவின் குரல் உயர் அலை வரிசைச் சாதனத்தில் ஒலிக்க நம்புவோம் நாங்கள், எங்கள் கரை தூரத்தில் இல்லை என்று.
உமக்கென தலையெழுத்தோ,
யாருக்கும் இலா உணர்ச்சி
உமக்கு ஏன்?எங்கே உம் உடமைகள்?
எங்கே உம் இருப்பிடம்?
எங்கே உம் உறவுகள்?
எங்கே உம் செல்வங்கள்?
முற்றும் துறந்தவனே மேல்..
உண்ண, உறங்க மடமுண்டு...
உமக்கோ?யாருக்காக?.
அடுத்திங்கு மண்ணில் பிறக்கும்
ஒவ்வொரு சிசுவிலும் உமதுணர்ச்சி
குருதியோடு கலந்திட வேண்டும்..
வாழ்க தமிழ், வாழ்க தமிழினம்,
வாழ்க தமிழினத் தலைவன் நீர்
சர்வதேச ரீதியில் வலிமைமிக்க இரண்டு தரப்புகளுடன் இலங்கை அரசாங்கம் பகிரங்க மோதலில் இறங்கியுள்ளது!
சர்வதேச ரீதியில் வலிமைமிக்க இரண்டு தரப்புகளுடன் இலங்கை அரசாங்கம் பகிரங்க மோதலில் இறங்கியுள்ளது. முதலாவது -தரப்பு ஐ.நாவும் அதன் பொதுச்செயலர் பான் கீ மூனும். இரண்டாவது -தரப்பு ஐரோப்பிய ஒன்றியம்.
இந்த இரண்டு தரப்புகளுடன் இலங்கை அரசு அண்மைக்காலமாக முரண்பட்டு வந்தது. ஆனால் இப்போது அது பெரும் பூகம்பமாக வெடித்துள்ளது.
இந்த இரண்டு தரப்புகளுடன் இலங்கை அரசு அண்மைக்காலமாக முரண்பட்டு வந்தது. ஆனால் இப்போது அது பெரும் பூகம்பமாக வெடித்துள்ளது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)














