ஆண்குரல்:- “அம்மா.... எங்களுடைய தாயகமண்ணின் மீட்சிக்காக.... என்னால் செய்யக்கூடிய தியாகம் எதுவோ.... அதைத்தான் நான் செய்யப்போகிறன்.. அதை மனமகிழ்வோடும் பூரண சந்தோஷத்தோடும் செய்கின்றேன். உங்களுக்கு இது ஜீரணிக்க முடியாத வேதனையாய்த்தான் இருக்கும். எனவே எங்களின் சாவுக்காக கண்ணீர் வடித்து கவலையடைவதைவிட நீங்கள் அதை ஏற்றுக்கொள்வதே எனக்கு நீங்கள் செய்யும் இறுதிக்கடனாய் ஆத்மாசாந்தியாய் இருக்கும் அம்மா..... உங்கள் மகன் நினைவுக்கல்லில் நிமிர்ந்து நிற்பான்.. நீங்கள் சுவாசிக்கும் காற்றில் நனையும் மழைத்துளியில் எல்லாம் உங்கள் மகன் கலந்திருப்பான்....”
இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
வியாழன், 1 ஜூலை, 2010
தமிழக முதல்வரும் போர்க்குற்றவாளிதான்- அ.தி.மு.க
இலங்கை அதிபர் மகிந்த மற்றும் அந்நாட்டு ராணுவத்தில் பணிபுரியும் வீரர்கள் எவ்வாறு போர்க் குற்றவாளிகள் எனக் கருதப்படுகிறார்களோ, அதைப் போல தமிழக முதல்வரும் போர்க்குற்றவாளிதான் என அ.தி.மு.க. பொதுச்செயலர் ஜெயலலிதா குற்றம்சாட்டியுள்ளார்.
லண்டன் வெம்பிளியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேருக்கு லண்டன் நீதிமன்றம் 50 மாத சிறைத்தண்டனையை விதித்துள்ளது.
நிதிமோசடி செய்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் வடக்கு லண்டன் வெம்பிளியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேருக்கு லண்டன் நீதிமன்றம் ஒன்று மொத்தமாக 50 மாத சிறைத்தண்டனையை விதித்துள்ளது.
தமிழ் குடும்பத்தை சேர்ந்த இவர்கள் போலி ஆவணங்களை சமர்ப்பித்து, சுமார் ஒரு லட்சத்து 70 ஆயிரம் ஸ்ரேலிங் பவுண்ட்களை நிதிமோசடி செய்திருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
தமிழ் குடும்பத்தை சேர்ந்த இவர்கள் போலி ஆவணங்களை சமர்ப்பித்து, சுமார் ஒரு லட்சத்து 70 ஆயிரம் ஸ்ரேலிங் பவுண்ட்களை நிதிமோசடி செய்திருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
நாடாளுமன்றத்தில்விஜயகால மகேஸ்வரன் -டக்ளஸ் வாய்த்தர்க்கம்
நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற வரவு செலவுத்திட்டம் மீதான விவாதத்தில் ஐக்கிய தேசிய கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகால மகேஸ்வரன் உரையாற்றிக் கொண்டிருந்த போது அவருக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் இடையில் கடுமையான வாய்த்தர்க்கம் இடம்பெற்றது.
பாலியல் துஷ்பிரயோகம்-அரசு மறுப்பு
கொழும்பு ஆடைத்தொழிற்சாலைகளில் இலங்கை அரசாங்கத்தால் பணிக்கு சேர்த்துவிடப்பட்ட முன்னாள் விடுதலைப்புலிகள் அமைப்பின் பெண் போராளிகள் பாலியல் துஷ்பிரயோக பிரச்சினைகளை எதிர்கொள்வதாக யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சிவஞானம் ஸ்ரீதரன் நாடாளுமன்றத்தில் முறையிட்டுள்ளார்
புதன், 30 ஜூன், 2010
ஆட்டுவித்தால் ஆடுவாரா மகிந்த ?-இதயச்சந்திரன்
வடக்கை இராணுவமயமாக்கும் தீவிரப் பணியில், சிங்களம் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளது. சர்வதேச தன்னார்வுத் தொண்டு நிறுவனங்களை அனுமதிக்காது, தாமே மீள்குடி யேற்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதாகக் கூறும் சிங்கள அரசு, இறுதிப்போரின் இன அழிப்புச் சான்றுகளை அழித்துவருகிறது. முல்லைத்தீவில்
ஐ.நா.வின் நிபுணர் குழுவுக்கு ஒத்துழைப்பு வழங்க தயார்...
ஐக்கிய நாடுகளின் செயலாளர் பான் கீ மூனினால், அமைக்கப்பட்டுள்ள நிபுணர் குழுவிற்கு தாம் ஒத்துழைப்பு வழங்க தயார் என தமிழீழ விடுதலைப்புலிகள் அறிவித்துள்ளனர்.
லெப்டினன்ட் கேணல் ஜீவன்(பிள்ளையான் சந்திரமோகன் கதிரவெளி, மட்டக்களப்பு. மட்டு - அம்பாறை மாவட்ட துணைத் தளபதி )
கையெட்டும் தூரமே கண்ணுக்குத் துலங்காத மைசொட்டும் இரவு. உடலெங்கும் உரிமையோடு கை போட்டிருக்கும் முள் செடிகள். கொழும்பு ரோட் (மட்டு. - கொழும்பு நெடுஞ்சாலை) அண்மித்து விட்டதால் காலணிகள் கைக்கு ஏறுகின்றன. ரைபிள் சிலிங்குகள் சலசலக்காது இறுக்கிப் பிடிக்கப்படுகின்றன. ஆபத்தைத் தவிர்க்கும் அளவிற்கு அவசியமான இடைவெளி விட்டு முன்னே செல்பவரின் சிறு அரவத்தைக் கொண்டு திசையறிந்து செல்வதே ஒரு கலை. தென் ஈழக் காடுகளிலே இந்தக் காலைதான் அவசியமான அரிச்சுவடி.
தமிழீழக் கோரிக்கையை அழிக்க முடியாது!
தமிழீழக் கோரிக்கையை தமிழ் மக்களின் மனங்களில் இருந்து அழிக்க முடியாது எனவும், அது என்றும் உயிர்வாழ்ந்து கொண்டு இருப்பதால், தமிழ் மக்களின் பிரச்சினைக்கு உரிய தீர்வு காணப்பட வேண்டியது அவசியம் எனவும், டுபாயில் இருந்து வெளியாகும் கல்ப் நியூஸ் (Gulf News) பத்திரிகை இன்றைய தனது தனது அபிப்பிராயப் பத்தியில் தெரிவித்துள்ளது.
வன்னியில் பேரழிவு யுத்தம் நடந்த காலப்பகுதியில் ..................?
தொடர்ச்சியா ஈழ விசயத்தில் மற்றவர்களை விட்டுவிட்டு கருணாநிதியை கடுமையாக திட்டுவதற்க்கு கருணாநிதியின் மீதான எந்த காழ்ப்புணர்ச்சியோ சொந்த இதர எரிச்சல்களோ இல்லை, ஈழ விசயத்தில் கருணாநிதியால் ஏதாவது செய்திருக்க இயலும் என்ற ஒரே காரணம், அதை பதவிக்காகவும் ஊழல் பணத்துக்காகவும் தன் குடும்பத்துக்காகவும் ஈழக்குருதியை குடித்து விட்டார் என்பதே அத்தனை கோபங்களுக்கும் முதல் காரணம்...
தமிழ்நாடு நடிகர்கள் .............
பற்றி எரிந்துகொண்டிருக்கிறது ஈழம், ஆனால் இங்குள்ள தமிழ் எழுத்தாளர்கள், கவிஞர்கள் எல்லாம் அதில் குளிர்காய்கிறார்கள். இணையத்தில் நாம் எழுதாவிட்டால் இதைப்பற்றி யாரும் மூச்சுவிட மாட்டார்கள். தமிழ் வார இதழ்களில் விகடன்,குமுதம் மற்றும் நக்கீரனை தவிர வேறு யாரும் எழதவில்லை நாளிதழ்களில் தந்தி, மாலைமலர் தவிர வேறு எதுவும் எழுதவில்லை.
இஸ்லாமிய நாடுகளில் அமைதி நிலவ வேண்டும்!
பாலஸ்தீனம், இஸ்ரேல் இடையே நீடித்து வரும் மோதலுக்கு நிரந்தர தீர்வு காண்பதற்கு அமெரிக்கா, சவுதி அரேபியா இணைந்து முயற்சிகளை தொடர உள்ளதாக அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார். ஜி 20 உறுப்பு நாடுகள் கூட்டத்தில் பங்கேற்க வாஷிங்டன் சென்றுள்ள சவுதி அரேபியா மன்னர் அப்துல்லா, அமெரிக்க அதிபர் ஒபாமாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
இணக்கப்பட்டின் பிரகாரமே நிபுணர்கள் குழு அமைக்கப்பட்டது !
யுத்தம் முடிவடைந்திருந்த நிலையில் இலங்கை வந்திருந்த ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனுக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்குமிடையேயான இணக்கப்பாட்டினடிப்படையிலேயே ஐ.நா செயலாளர் நாயகத்திற்கான ஆலோசனைக் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
சோழியன் குடும்பி சும்மாவா ஆடும் ...
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா எதிர்வரும் வட மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் பதவிக்காக போட்டியிடவுள்ளதாக தெரிவித்துள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து கொள்வதற்கு பகீரத முயற்சிகளை மேற்கொண்டுவரும் டக்ளஸ் தேவானந்தா எந்தக்கட்சியில் போட்டியிடவுள்ளார் என்பதனை இதுவரை வெளியிடவில்லை
இந்த தத்துவம் கூறியவர் .........திரு.கமலக்கண்ணன்
கேபி என்றழைக்கப்படுகின்ற குமரன் பத்மநாதன் நினைத்தால் கூட விடுதலை புலிகளின் நிதியினை இலங்கைக்குள் கொண்டு வரமுடியாது. எனவே சர்வதேச புலம்பெயர் தமிழர்கள் நேரடியாகவேனும் வன்னி மக்களுக்கு உதவ முன் வரவேண்டும். இதற்கான ஏற்பாடுகளை இலங்கை அரசு ஒழுங்கு படுத்திக்கொடுக்கும் என்று மீளக்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)












