ஞாயிறு, 4 ஜூலை, 2010

அவல வாழ்க்கையா! வாழ்க்கையே அவலத்திலா! விடைதெரியாது??????

எதிரி என இதுவரை கூறிவந்தவர்கள் வீசி வைத்துள்ள கொலை வலைக்குள் பாதுகாப்பு என குடிபுகுந்தவர் பலர் அவர்கள் வரும் போது அணைக்கப்பட்டதும் பின்னர் அவர்களின் உயிர் அணைக்கப்படுவதும் நீங்கள் தெரிந்ததுதான் ஆனாலும் ஒவ்வொருவரும் உயிர்காப்பதற்கும் மண்கிடங்கில் கூவும் செல்லுக்கு பதுங்கும் வாழ்க்கைக்கும் விடைகொடுக்கவே வவுனியா செல்வதாக எண்ணித்தான் கடந்தார்கள்.

தனை மாய்த்து எமைக் காத்த புலிவீரர் இவ்வுலகில் இல்லையே. புதுயுகம் படைக்கப்... புறப்பட்ட வீரர் நாமில்லையே...!

கரும்புலிகள், எம் தேசத்தின் அழியாச் சுடர்கள் ,..........

இயலாதது என்று ஒன்றில்லை
இவர்க்கு ,
தியாகம் ஒன்றைத்தவிர
வேறு தெரியாது இவர்க்கு,
தலைவனின் சிந்தனையில்
பூத்த கந்தக மலர்கள் ,
தன்னினத்திற்காக
உயிர்விடும் தன்னலமற்ற
மறவர்கள் .

தேசத்திற்காய் வெடித்துப்போகின்ற தேசப்புயல்கள்....!!!

புனலிலும் அனலாய் கனன்றிடும்
புனித மேனியர்...!!!
புயலாய் காற்றிலும் சுழன்றிடும்
புதுக்காவிய நாயகர்கள்...!!!


தேகம் மீதிலே வெடிகளைச்சுமந்து - தமிழீழ
தேசத்திற்காய் வெடித்துப்போகின்ற தேசப்புயல்கள்....!!!
வெஞ்சின கரு வேங்கைகளே...!!!
வெற்றியோடு திரும்பும் உங்கள் நாமம் மட்டுமே...

"உயிராயுதம்"

கரும்புலி அடிமுடி அறிய முடியாத அற்புதம்.. கரும்புலி சாவுக்குத் தேதிகுறிக்கும் சரித்திரம். கந்தகத்தை மேனியிற் கட்டிய சந்தனம். வீதியுலாவுக்காக வெளியில் வராத விக்கிரகம். உயிர்மூச்சை ஊதிவிடும் உன்னதம். அடிமுடியை அறியமுடியாத அற்புதம் தென்றலும் புயலும் சேர்ந்ததான கலவை. இவர்களை எழுதத் தொடங்கினால்...

கரும்புலியின் இறுதிக்கடிதம் .............

“வானேறி வந்து குண்டு போடுகின்ற சிங்கங்களை அவையின் குகைக்குள்ளேயே சந்திக்கப் போகின்றோம்- நீங்கள் எழுந்து மூச்சாக நின்றால் போதும் தமிழீழம் விரைவாக வந்து சேரும்” என்று அனுராதபுரம் சிறிலங்கா வான் படைத்தளம் மீதான தாக்குதலுக்குத் தலைமையேற்றுச்சென்ற கரும்புலி லெப். கேணல் இளங்கோ தமது அணியின் சார்பில் எழுதிய இறுதிக் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

அறிந்ததும் அறியாததுமான அற்புதம்கள்!




எமை போல அவர்களிற்குள்ளூம்,ஆசையிருந்தது........
அன்பிருந்ததது.........காதலிருந்தது.............


நாம் சொத்தையும்,,சுகங்கள் தேடிய போது.....அவர்கள் சுகத்தை துறந்து துறவரம் பூண்டார்கள்.
நாம் வசதியான வாழ்வை தேடினோம்.....அவர்கள் எமை வாழ வைக்க தம்மை ஆகுதி ஆக்கி கொண்டார்கள்!
நாம் வசதியான வாழ்விற்காகவும்,எம் உறவுகள் வாழ்வதற்க்கும் புலம்பெயர்ந்தோம்.
அவர்களோ தங்களின் இலட்சியத்திற்காக புலம்பெயர்ந்த போதும் கந்தக வெடி சுமந்து தடையுடைத்தவர்கள்.......


எம் உயிர்ப்பின் காரணத்தை......உயிர்வாழ்வின் அவசியத்தை உணர்த்தி சென்றவர்கள்..
இவ்வுலக வாழ்வில் எத்தனனயோ மனிதமனங்களினை ஆய்வு செய்யும் எவராலும் கண்டறிய முடியாத மனங்களிற்க்கு சொந்தக்காரர்கள்...
வெடிக்க போகும் கடைசி நிமிடம் வரை புன்முறூவலே முகத்தில் தெரியும் புயலின் பூக்கள்..
இயற்கையின் வேறுபடுத்தலின் தொந்தரவுகளாலும்,மென்மையானவர்களல்ல!!!.....
எம்மாலும் சாதிக்க முடியுமென சாதித்த சாதனையாளர்கள்.....


தாக்குதல் நேரத்திலும் அந்த கடைசி நிமிடத்திலும் இலக்கு மட்டுமே அழிக்கபட வேண்டும் தவறுதலாக யாராவது அப்பாவிகளை இழந்து விடக்கூடாது என்பதற்காய் வெடி சுமந்த நிலையிலும் தங்களை தாங்களாக தனியாக அழித்து கொண்ட அற்புதமானவர்கள்!!!!


தங்கள் இலட்சியம் நிறைவேற உதவியவர்களை கடைசி நிமிடம் வரை நன்றி மறக்காத மறவர்கள்........
தாக்குதலிற்காய் தாய் மண்னை விட்டு புறப்படும் கடைசி நொடியில் அவர்கள் மனதில் அலை மோதும் எண்ணஙகள்.......
தனியே தனித்திருந்து பழைய ஞாபகங்கள் கண்முன் தலை விரித்தாட தன் நண்பர்களின் இலட்சியங்களின் நிறைவேற்றல்கள்........
தோழியரின் தியாகங்கள் அதற்க்கு மேலாய் தடையுடைக்க போகும் இலக்கு.........
நேரம் நெருங்க நெருங்க தாய் மண்னை முத்தமிட்டு கையசைத்து போவதை யார் தான் மறப்பார் இவ்வுலகில்...............


தம் உயிர் கூட்டை உதறி காற்றாகி, எம் தேசத்துக்கு இன்றும் சுவாசம் தந்துகொண்டிருக்கின்ற _எம் கண்மணிகள் இவர்கள்!!!!.........

செய்திகள்..........................

சனி, 3 ஜூலை, 2010

எம் தேசத்திற்காய் எங்கெங்கும்...............


என்றுமே புரியாத புதிர்கள்!
மனதிலே விடுதலையை சும்ந்தவர்கள்!
எரிமலையாய் தடை உடைத்த கந்தக பூக்கள்!
புயலாய் சுழன்றடித்த் தென்றல்கள்!....................


இவர்களோடு பழகிய கணங்களை நினைத்து பார்க்கிறேன்.அற்புதமாய்,வரமாய்,கிடைக்கின்ற ஞானிகளின் தரிசனங்களின் பேறாய் இவர்களின் வரவுகள் இருக்கும்.
எரிமலையாய் வாழ்ந்த இவ் உள்ளங்களில்தான் எத்தனையோ நெகிழ்ச்சிகள்,துன்பங்கள்,இன்பங்கள்,காதல்கள்,துயரங்கள் அதற்கு மேலாய் தாயகத்தை நேசித்தார்கள்.
தங்கள் இலட்சியத்தை நிறைவேற்ற தம் உடல்களிலேயே கந்தகவெடி சுமந்தவர்கள்.
நவநாகரீகமாக,சுகபோகமாக,சுயமாக,எதிரியின் குகைகளில் வாழ்ந்த போதும் தடை உடைத்து வ்ழி சமைத்தவர்கள்.அலைபாயும் மனவுலகில் புதுமைகளையும்,
ஆசைகளையும் மனதில் தேக்கி நிற்கும் இளவயதில் தாயகத்தை,மண்ணின் துயரத்தை மனதில் சுமந்த வ்ல்லவர்கள்.
காதலனிற்கு காதலியாய்,காதலிக்கு காதலனாய்,உறவுகளிற்கு உயிராய் உணர்வுகள் மிளிர்ந்தபோதும் தேசத்தின் தடை உடைப்பே இவர்களின் இலட்சியமானது.


தமது இலக்கு எய்தும்வரை அக்குறிக்கோளே வாழ்வாக வரிந்து கொண்டவர்கள்!


அன்றொரு மாலைப்பொழுது இலக்கு ஒன்றை அழிப்பதற்கான திட்டமிடல்கள் நடந்தேறி இருந்தது. இலக்கை அழிப்பதற்கான கரும்புலிவீரன் சற்று தொலைவில் தயாராக இருந்தான்.
தளத்தின் தாக்குதல் பொறுப்பாளனின் வழி காட்டலில் தாக்குத்ல் திட்டங்கள் வரையப்பட்டு தாக்குதல் நிறைவேற தயாரான பொழுது கரும்புலிவீரன் நின்ற பகுதி
இராணுவச்சுற்றிவ்ளைப்புக்குள்ளாக்கப்படுகிறது.
கரும்புலி வீரனோ அவ்விடத்தை விட்டு வெளியேற முடியாதநிலை,தாக்குதல் இலக்காக கருதப்பட்ட சிங்கள இராணுவ முதன்மை நிலை அதிகாரியை தவறவிட்டால் பின்பு அழிப்பதற்கான சாத்தியங்கள் இன்மை,
அத்தோடு கிழக்கு மாகாணத்தில் பல படுகொலைகளை முன் நின்று நாடாத்திய அவ் அதிகாரியின் பாதுகாப்பையும் அதிகப் படுத்தியிருந்தது சிங்கள அரசதரப்பு.
இராணுவ அதிகாரியை தவற விடுதல் என்பது சாத்தியமற்றது என கருதிய அவ்தாக்குதலிற்கு பொறுப்பான பொறுப்பாளன் தானே கந்தகபொதியை சுமக்க தயாராகிறான்.
குறித்ததாக்குதல் நேரத்தில் இலக்கின் மீது தான் வரிந்து கொண்ட இலட்சியத்திற்காய் தம் உடலை வெடியாக்கி இலக்கினை அழித்தான்.


அவ் புலிவீரன் மனதில் இருந்ததுதான் என்ன?..........
புரிந்து கொள்ளுங்கள் கரும்புலிவீரரின் மனங்களை........


சிறு வயதிலே உறவுகளை பிரிந்த் புலிவீரனவன்,சிங்களப்படையினரால் சகோதரியின் குடும்பம் சிதைக்கபட்டு இருந்த்து. இயக்கத்தில் பொறுப்பாளனாகி,கரும்புலியாகி நின்றான்.
தன் உறவினர்களுடன் எதுவித தொடர்பும் கொண்டிருக்கவில்லை. அவன் கொழும்பில் தாக்குத்ல் நடவடிக்கைக்கான வேவுகளில் ஈடுபட்ட கரும்புலிகளில் இவனும் ஒருவன்.
மிக நீண்டகாலம் காத்திருந்த இலக்கு மீதான தாக்குதல் தருணம் அது.


இலக்கு வரும் வரை கொழும்பின் வீதியொன்றில் வெடிமருந்து அங்கியோடு காத்திருந்த வேளை மென்மையான கரமொன்று இவன் கரம் பற்றியது.
அவ்மென்மையான கரங்களுக்குரியவள் நீண்டகாலம் பிரிந்த்திருந்த தனது சகோதரியென்று இனம் கண்டபின்பும் உறவுகளிற்கு இடம் கொடுக்காத புலிவீரன்
"யாரக்கா நீங்கள் உங்களுக்கு யார் வேண்டும்" என்ற கேள்வியோடு சகோதரியை மேலே பேசவிடாது தடுத்தான்.தான் அழிக்கபோகும் இலக்கு மட்டுமே அவ் வேளை தன் மனதில் நிறைத்திருந்தான்.
ஒருவாறு நிதானித்து சகோதரியை அவ்விடத்தை விட்டு அகலச்செய்து விட்டு எம்மோடு தொலைபேசியில் "அண்ணே நான் யாரை என் உயிரைவிட நேசித்தேனோ அவளை கடைசி நிமிடத்தில் கண்டேன்.
என் அக்காவின் குடும்பத்தை அழித்த கொடியவர்களின் குகையை அழிக்கும் கடைசி நிமிடத்தில் என் அக்காவின் முகம் கண்ட பூரிப்பில் எனக்கான இலக்கை அழிக்கிறேன்." என்று சொன்னான்.
சொன்னவாறே செய்து முடித்து மனங்களில் நிலையாகி போனான்........


எழுத்துக்களால் சிறைப்பிடிக்கமுடியாத சிகரங்கள் இவர்கள்!!!!!!!!!!!!!!!!!!!!


கல்லுக்குள்ளே ஈரம் உண்டு!
கசிவதும் உண்டு!
கரும்புலிகள் விழிகளில் - நீர்
வழிவதுமுண்டு!!!!!!!!!!!!

வெள்ளி, 2 ஜூலை, 2010

இரகசியம்

எனக்குத் தெரியும்
அங்கே சிதறிய செங்குருதியின்
சொந்தக் காரனை
அவன் பெயர்
காற்றின் அசைவுக்குள்
தவழ்ந்து செல்லாது
அது இரகசியமாய்ப்
பேணப்பட வேண்டிய
உன்னத பெயர்
சிலரின் இதய அறைக்குள் மட்டுமே
அவனுக்கான சடங்குகள்
நடக்கும்
பெற்ற தாயும் அறியாத
பரம இரகசியம்
அவனது விடுதலை வேள்வி
அந்த செங்குருதியின்
சொந்தக் காரனின் பெயர்
எந்த நடுகல்லிலும் இல்லை
மலரும் தமிழீழத்தில்
உரத்து உச்சரிக்கப்படலாம்
அந்த வேங்கையின்
அதிசய சாதனைகள்

கரும்புலி மேஜர் டாம்போ(காசிப்பிள்ளை தயாபரன் நாச்சிக்குடா மன்னார்)

1991 மூன்றாம் மாத நடுப்பகுதி:
சிலாபத்துறை இராணுவ முகாம்மீது ஒர் பாரிய தாக்குதல் நடத்துவதென தீர்மானக்கப்பட்டது.


"அண்ணை, மன்னாரில நடக்கிற முதலாவது கரும்புலித் தாக்குதலை நான்தான் செய்யவேணும்" இது கரும்புலி மேஜர் டாம்போ மிகத் தெளிவாகத் தன் தளபதியிடம் கூறிக்கொண்டது. தாக்குதலுக்கான நாள் வந்தது. அவனது விருப்பப்படியே அம் முகாம் மீதான தாக்குதலுக்காக, வெடி மருந்து நிரப்பிய வண்டியை ஓட்டிச் செல்வது டாம்போதான் எனத் தீர்மானிக்கப்பட்டது.

பிழைக்கத்தெரியாத என் தலைவா..

இனத்தை அடகு வைத்து பிழைத்திருக்கலாம்
உன் பேரன்கள் உலகின் பெரிய பணக்காரர்
வரிசையில் வந்து சேர

புலனாய்வாளர்களின் உள்நோக்கம் கொண்ட சதி...!

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள குடும்பிமலை காட்டுப் பகுதியில் சில நாட்களுக்கு முன்பு சிறிலங்கா இராணுவ அணிக்கும் புலிகளுக்கும் இடையில் சண்டை நடந்ததாகவும் அதனால் அந்த பகுதியில் விமானப் படைக்குச் சொந்தமான கிபீர் விமானங்கள் குண்டு வீச்சு தாக்குதலில் ஈடுபட்டது.

அரசாங்க அதிபர் நியமனம் தொடர்பாக குழப்பம்

யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் யார் என்பது தொடர்பாக நேற்று வியாழக்கிழமை குழப்பகரமான நிலைமை ஏற்பட்டது.