இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
வியாழன், 12 ஆகஸ்ட், 2010
கப்டன்:அங்கயற்கண்ணி........
கப்டன்:அங்கயற்கண்ணி
துரைசிங்கம்-புஸ்பகலா
மண்கும்பான்,யாழ்ப்பாணம்.
உயர உயர அலைகளை வீசியெறியும் கடலுடன் நெருங்கிய நேசமான உறவை வைத்திருக்கும் அந்தக் கடற்கரை ஒரே வெண்மணல் பிரதேசம். சாதாரணமாக எந்த ஒரு இளம் பெண்ணுக்கும் இந்த வெண்மணற் பரப்பைப் பார்த்தால் தோழியருடன் ஓடிப்பிடித்து விளையாடத் தோன்றும். நீச்சல் பயிற்சியில் ஈடுபடவென கரைக்கு வந்த பெண் புலிகளின் மனம் ஏழைகளின் கண்ணீரில் இளகியது. அனுதாபத்துடன் அந்த மக்களின் நிலையைப் பற்றித் தமக்குள் பேசிக்கொண்டார்கள்.
அங்கயற்கண்ணியின் மனம் இறுகிப் பாறையானது.
“இவங்களுக்கு இதுக்கு ஒரு சரியான பதிலடி குடுக்கவேணும்”
அந்த நிமிடத்திலேயே மனதளவில் அவள் ஒரு கரும்புலியானாள். சிறீலங்காக் கடற்படையின் கப்பல் ஒன்றைக் கரும்புலித்தாக்குதல் மூலம் அழிக்கவேண்டும் என்ற எண்ணம் அப்போதுதான் அவளுள் ஆழ வேரோடியிருக்க வேணும்.
தொடர்ந்தும் எமது மக்கள் சிறீலங்காக் கடற்படையின் தாக்குதலுக்கு அஞ்சி எல்லாவற்றையும் விட்டுவிட்டு ஓடிவருவதும் அன்று முழுவதும் (வருமானம் இல்லாததால்) ஒருவேளைக் கஞ்சிகூடக் குடிக்க வழியில்லாமல் பசியுடன் அழும் தம் குழந்தைகளை சமாதானம் பண்ணமுடியாமல் தமக்குள்ளேயே கண்ணீர்விடும் ஏழைத் தாய்களையும் ஏழைத் தந்தைகளையும் அடிக்கடி காண நேர்ந்தபோதெல்லாம் தான் எடுத்தமுடிவில் மேலும் உறுதி பெற்றாள் அவள்.
தமிழ் இளைஞர்களிடம் ஓர் அன்பு வேண்டுகோள்!!!!.........
அன்புசால் இளைஞர்களுக்கு! தமிழினம் படும் துயர்பற்றி எழுதுவதாக நீங்கள் நினைக்கலாம். அதுபற்றி எல்லாம் எழுத விருப்பவில்லை. எழுதாக் குறைக்கு அழுதால் தீருமா என்ன? எல்லாம் நடந்து முடியட்டும். நீதி, தர்மம், அறம் இருக்குமாயின்-இறைபரம்பொருள் உள்ளதாயின், இந்த மண்ணில் என்றோ ஒருநாள் தமிழ் மக்கள் உரிமை பெற்று பிரவாகம் அடைவர். அப்போது இதனைத் தடுப்பதற்கு யாராலும் முடியாமல் போகும்.
அவ்வாறில்லை தமிழ் மக்களாகிய நாம் துன்பத்தை மட்டுமே அனுபவிக்க வேண்டும் எனில், அது நம் தலைவிதி என்று நினைத்து விட வேண்டியதுதான்.இவ்வாறு இருப்பது புத்திசாலித்தனமா? என்று நீங்கள் கேட்டால் மிகப் பெரும் விடுதலைப்புலிகள் அமைப்புக்குள்ளேயே காட்டிக் கொடுப்போர் இருந்தனர். அதுபோல தற்போதைய தமிழ் அரசியலுக்குள்ளும் எத்தனையோ விதமானவர்கள்.
தமிழினம் அழிவைச் சந்தித்தாலும் அது பற்றிக் கவலை கொள்ளாமல் தங்கள் சுய இலாபத்தை மட்டுமே கண்ணும் கருத்துமாகக் கொண்டிருக்கும் பிரகிருதிகள்.நிலைமை இதுவாக இருக்கும்போது தமிழினத்தை மீட்டெடுப்பது எங்ஙனம்? ஆகையால் எல்லாம் நம் தலைவிதி என்று நினைப்பதை விட வேறு வழியேதும் இருக்கிறதா? உலக நாடுகள் உதவும் என நினைத்து நினைத்து ஏமாந்து அழிந்து போனதைத் தவிர வேறு எதனைக் கண்டோம்?
ஆக, சொந்தக் காலில் நிற்போம். நாமே எங்கள் சுதந்திரத்திற்கும் பொறுப்பென்பதை உணர்வோம். எனினும் எங்கள் அரசியல் எதிர்காலம் பற்றிச் சிந்திப்பதற்கு முன்னதாக, தமிழ் இளைஞர்களின் எதிர்காலம் பற்றி ஒரு கணம் சிந்திப்பதே சாலச் சிறப்புடையதாகும்.
அன்புக்குரிய இளைஞர்களே! நாங்கள் முதலில் எங்களை அறிய வேண்டும். சந்தியில் நிற்பதும், மது அருந்துவதும், கையடக்கத் தொலைபேசியும்தான் எங்கள் சீவியம் என்றால் இந்த மண்ணில் நிகழ்ந்த தியாகங்களுக்கு எந்த அர்த்தமும் இல்லாமல் போகும். தென்பகுதி இளைஞர்களை ஒருகணம் பாருங்கள். யாழ்ப்பாணத்தில் பொருளாதாரத்தை ஈட்டுவதில் அவர்கள் காட்டும் அக்கறை, எத்தனை வடிவங்களில் அவர்கள் நம் மண்ணுக்கு வந்து எங்கள் நிதித் தேட்டத்தை அள்ளிச் செல்கின்றனர்.
ஆனால் நாங்களோ! எதுபற்றியும் கவலையற்றவர்களாக, மோட்டார் சைக்கிளில் ஓடுவதும் கையடக்கத் தொலைபேசியில் உரையாடு வதும்...! எப்படி எங்கள் எதிர்காலம் அமையும். அன்புசால் இளைஞர்களே! உங்கள் கைகளில்தான் தமிழினத்தின் எதிர்காலம் தங்கியுள்ளது. சுவாமி விவேகானந்தர் காட்டிய இளைஞர்களாக நீங்கள் மாறவேண்டும்.
அரசியலின் வகைமையைத் தீர்மானிக்க வேண்டி அறிக்கை விடும் கோமாளிகளாக எங்கள் அரசியல் இருப்பதை மாற்றி ஆக்கபூர்வ மான செயற்பாட்டை அமுல்படுத்தும் அரசியல் கலாசாரத்தைத் தமிழனத்தில் உருவாக்க வேண்டும். வாருங்கள் என்னருமை இளைஞர்களே! அகிம்சைப் பாதையில் அறிவெனும் ஆயுதத்தோடு களத்தில் குதியுங்கள், எங்கள் உரிமையைப் பெற்றுக் கொள்ள...........
அவ்வாறில்லை தமிழ் மக்களாகிய நாம் துன்பத்தை மட்டுமே அனுபவிக்க வேண்டும் எனில், அது நம் தலைவிதி என்று நினைத்து விட வேண்டியதுதான்.இவ்வாறு இருப்பது புத்திசாலித்தனமா? என்று நீங்கள் கேட்டால் மிகப் பெரும் விடுதலைப்புலிகள் அமைப்புக்குள்ளேயே காட்டிக் கொடுப்போர் இருந்தனர். அதுபோல தற்போதைய தமிழ் அரசியலுக்குள்ளும் எத்தனையோ விதமானவர்கள்.
தமிழினம் அழிவைச் சந்தித்தாலும் அது பற்றிக் கவலை கொள்ளாமல் தங்கள் சுய இலாபத்தை மட்டுமே கண்ணும் கருத்துமாகக் கொண்டிருக்கும் பிரகிருதிகள்.நிலைமை இதுவாக இருக்கும்போது தமிழினத்தை மீட்டெடுப்பது எங்ஙனம்? ஆகையால் எல்லாம் நம் தலைவிதி என்று நினைப்பதை விட வேறு வழியேதும் இருக்கிறதா? உலக நாடுகள் உதவும் என நினைத்து நினைத்து ஏமாந்து அழிந்து போனதைத் தவிர வேறு எதனைக் கண்டோம்?
ஆக, சொந்தக் காலில் நிற்போம். நாமே எங்கள் சுதந்திரத்திற்கும் பொறுப்பென்பதை உணர்வோம். எனினும் எங்கள் அரசியல் எதிர்காலம் பற்றிச் சிந்திப்பதற்கு முன்னதாக, தமிழ் இளைஞர்களின் எதிர்காலம் பற்றி ஒரு கணம் சிந்திப்பதே சாலச் சிறப்புடையதாகும்.
அன்புக்குரிய இளைஞர்களே! நாங்கள் முதலில் எங்களை அறிய வேண்டும். சந்தியில் நிற்பதும், மது அருந்துவதும், கையடக்கத் தொலைபேசியும்தான் எங்கள் சீவியம் என்றால் இந்த மண்ணில் நிகழ்ந்த தியாகங்களுக்கு எந்த அர்த்தமும் இல்லாமல் போகும். தென்பகுதி இளைஞர்களை ஒருகணம் பாருங்கள். யாழ்ப்பாணத்தில் பொருளாதாரத்தை ஈட்டுவதில் அவர்கள் காட்டும் அக்கறை, எத்தனை வடிவங்களில் அவர்கள் நம் மண்ணுக்கு வந்து எங்கள் நிதித் தேட்டத்தை அள்ளிச் செல்கின்றனர்.
ஆனால் நாங்களோ! எதுபற்றியும் கவலையற்றவர்களாக, மோட்டார் சைக்கிளில் ஓடுவதும் கையடக்கத் தொலைபேசியில் உரையாடு வதும்...! எப்படி எங்கள் எதிர்காலம் அமையும். அன்புசால் இளைஞர்களே! உங்கள் கைகளில்தான் தமிழினத்தின் எதிர்காலம் தங்கியுள்ளது. சுவாமி விவேகானந்தர் காட்டிய இளைஞர்களாக நீங்கள் மாறவேண்டும்.
அரசியலின் வகைமையைத் தீர்மானிக்க வேண்டி அறிக்கை விடும் கோமாளிகளாக எங்கள் அரசியல் இருப்பதை மாற்றி ஆக்கபூர்வ மான செயற்பாட்டை அமுல்படுத்தும் அரசியல் கலாசாரத்தைத் தமிழனத்தில் உருவாக்க வேண்டும். வாருங்கள் என்னருமை இளைஞர்களே! அகிம்சைப் பாதையில் அறிவெனும் ஆயுதத்தோடு களத்தில் குதியுங்கள், எங்கள் உரிமையைப் பெற்றுக் கொள்ள...........
தமிழ் தேசிய கூட்டமைப்பிலும், இராணுவ புலனாய்வாளர்கள்!
தமிழ் தேசிய கூட்டமைப்பினால் வன்னியின் மீளக்குடியேறிய மக்களுடனான சந்திப்புகளில் இராணுவ புலனாய்வாளர்களும் கலந்து கொண்டு கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவது உறுதிபடுத்த பட்டுள்ளது. படத்தில் குறிப்பிட்ட நபர். ஈசன் என்றும் , அருள் என்றும் , அழைக்கபடுபவர். இவர் விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் ஆவார்,, முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின் இராணுவத்துடன் இணைந்து செயற்படும் நபரானர்.
பல போராளிகளின் கைதுகளிற்கு காரணமான இவர். பொதுமக்கள் தடுத்து வைக்கபடும் முகாம்களிற்கு சென்று விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களை இனம் கண்டு இராணுவம் கைது செய்ய ஒத்தாசை புரிவதுடன் ,, முகாம்களிலிருந்து வெளியேற இருக்கும் இளையவர்களிடம் பல லட்சம் ரூபாய்களை கப்பமாக பெறுவதுடன் , கணவர்களை இழந்து தனியாக வாழும் பெண்களுடன் பாலியல், வன்புணர்ச்சி செயற்பாடுகளிலும், ஈடுபட்டு வருகின்றார்
அண்மையில் நெல்லியடி பிரதேசத்தில் இனந்தெரியாதோரால் சுட்டுகொல்லபட்ட தூயவன் என்பவரும் நபரும் நெருங்கிய நண்பர்கள். எனினும் தற்போது தமிழ் தேசிய கூட்டமைப்பினரின் கலந்துரையாடல்களில் இவர் பங்குபற்றுவதானது பல சந்தேகங்களை மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இவரின் செயற்பாடுகளை இனம்கண்டு எம்மக்கள் விழிப்புணர்வுடன் செயற்படுமாறு வேண்டுகிறோம். இவர் உண்மையில் அரச இராணுவ புலனாய்வுத்துறை உறுப்பினர் என்பதற்க்கான ஆதாரமான அரச இராணுவ புலனாய்வுத்துறை உறுப்பினர்அடையாள அட்டை எமக்கு கிடைக்கபெற்றுள்ளது. அதில் இவருக்கு பொறுப்பான பொறுப்பதிகாரியாக மேஜர் கமகே எனும் இராணுவ புலனாய்வுத்துறை அதிகாரி கையொப்பமிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
புதன், 11 ஆகஸ்ட், 2010
கிழக்கைப் போன்று யாழ்ப்பாணத்திலும் சிவில் சட்டம் வலுப்படுத்தப்படும்.
யாழ்ப்பாணத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற சிவில் சட்டமானது கிழக்கு மாகாணத்தைப் போன்று மேலும் வலுப்படுத்தப்படும் என யாழ். சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நேவின் பத்மதேவா தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், யுத்தம் முடிபுற்ற பின்னர் யாழ்ப்பாணத்தில் சுமுகமான சமாதான நிலை ஏற்பட்டுள்ளது. எனினும் அண்மைக்காலமாக விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் சிலரை மிகவும் இரகசியமான முறையில் குடாநாட்டின் பிரதேசங்களில் கைது செய்ததன் விளைவாகவும் , அவர்கள் வழங்கிய தகவல்களின் பிரகாரம் பல இடங்களில் மறைத்து வைக்கபட்ட வெடிபொருட்கள் மீட்கபடுவதுமான சம்பவங்கள் இடம்பெறுவதால் இறுக்கமானதொரு சட்ட, பாதுகாப்பு நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொள்வார் இந்தச் சூழலில் பொது மக்கள் பயம் அற்றவர்களாக வாழ வேண்டும். இதற்காக யாழ்ப்பாண பொலிஸார் தமது அளப்பரிய சேவையினை மேற்கொள்ள முன்வந்துள்ளனர்.
இதனடிப்படையில் சட்டத்தை சீர் குலைப்போருக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். இதன் முதற்கட்டமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை விசேட நட வடிக்கை ஒன்று மேற்கொள்ளப்பட்டது. இதற்காக 180 பொலி ஸாரும் அவர்களுக்குத் தேவையான வாகனங்களும் பயன் படுத்தப்பட்டது. மாலை 6 மணி தொடக்கம் நள்ளிரவு 12 மணி வரை இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது பாரிய குற்றங்களை விளைவித்தவர்கள், மறைந்திருந்த பிடியாணைக்குரியவர்கள், சட்டவிரோத மது மற்றும் போதைப் பொருட்களை விற்பனை செய்தவர்கள், திருடர்கள் உட்பட 66 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறான நடவடிக்கை கள் யாழ்ப்பாணத்தில் விரிவு படுத்தப்பட்டு பொதுமக்களின் பாதுகாப்புக்கு பொலிஸார் உறுதுணையாக இருப்பார்கள் என அவர் மேலும் தெரிவித்தார்
அந்தண சிரேஷ்டர்களுக்கு!.........
அந்தண சிரேஷ்டர்களுக்கு ஓர் அன்பு மடல்
அந்தண சிரேஷ்டர்கள் அத்தனை பேருக்கும் முதலில் அன்பு வணக்கம். சில வருடங்களுக்கு முன்பும் உங்களுக்குக் கடிதம் எழுதிய ஞாபகம்.கடிதம் எழுதியதன் முடிபு எம்மீதான கோபமாகவே இருந்தது. பரவாயில்லை. சரியைச் சரியெனவும், பிழையைப் பிழையயனவும் கூறிவிடுவது பாவத்திலிருந்து நாம் விடுபடுவதற்கான வழியாகும்.
எனவே சிலவற்றைக் கூறித்தான் ஆக வேண்டும். நேற்று முன்தினம் கீரிமலைக்குச் சென்றோம் ஆடி அமாவாசை. தந்தையர்க்கும் அவர்தம் முந்தையர்க்கும் பிதிர்க்கடன் செய்யும் நாள். ஏகப்பட்டவர்கள் பிதிர்க்கடன் செய்யவந்திருந்தார்கள். கீரிமலை உயர்பாதுகாப்பு வலயமாக இருந்த போதிலும், அந்த புண்ணிய சமுத்திரத்தில் நீராடி பிதிர்க்கடன் தீர்க்க வேண்டும் என்ற பேரவா அவர்களிடமிருந்ததை காண முடிந்தது.
அந்தண சிரேஷ்டர்கள் அத்தனை பேருக்கும் முதலில் அன்பு வணக்கம். சில வருடங்களுக்கு முன்பும் உங்களுக்குக் கடிதம் எழுதிய ஞாபகம்.கடிதம் எழுதியதன் முடிபு எம்மீதான கோபமாகவே இருந்தது. பரவாயில்லை. சரியைச் சரியெனவும், பிழையைப் பிழையயனவும் கூறிவிடுவது பாவத்திலிருந்து நாம் விடுபடுவதற்கான வழியாகும்.
எனவே சிலவற்றைக் கூறித்தான் ஆக வேண்டும். நேற்று முன்தினம் கீரிமலைக்குச் சென்றோம் ஆடி அமாவாசை. தந்தையர்க்கும் அவர்தம் முந்தையர்க்கும் பிதிர்க்கடன் செய்யும் நாள். ஏகப்பட்டவர்கள் பிதிர்க்கடன் செய்யவந்திருந்தார்கள். கீரிமலை உயர்பாதுகாப்பு வலயமாக இருந்த போதிலும், அந்த புண்ணிய சமுத்திரத்தில் நீராடி பிதிர்க்கடன் தீர்க்க வேண்டும் என்ற பேரவா அவர்களிடமிருந்ததை காண முடிந்தது.
கொலை முயற்சியின்...........
திருகோணமலையில் சமாதானமும் சகச நிலையும் வந்துவிட்டது என்று நினைத்து சுவிஸில் வசித்து வந்த கந்தையா சிவபாலன் குடும்பத்தினர் திருகோணமலைக்கு சென்றனர். ஆனால் அங்கே அவரை குறிவைத்து யுத்தம் நடந்த காலத்தில் நடப்பதைப் போல் தலைக்கவசம்(Helmet) அணிந்து முகத்தை மறைத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் வந்தோரால் 02.08.2010 மாலை
கழுத்தறுத்து கொலை செய்ய முயற்சி செய்துள்ளார்கள். அவர் தெய்வாதீனமாக கழுத்தில் வெட்டுக்காயத்துடன் மயிரிழையில் உயிர்தப்பியுள்ளார்.
மேற்படி இவர் கடந்த தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பாக போட்டியிட்ட கந்தையா - ஆனந்தராஜா என்பவரின் சகோதரன் எனும் காரணத்தினாலும் ,இவ் கொலை முயற்சி நடந்தேற முயன்று இருக்கலாம் என இவ்வூர் மக்கள் கருத்து தெரிவித்தனர்..
இளம் யுவதி மயக்கமடைந்த நிலையில் மீட்பு...!
துன்னாலைக் குடவத்தைப் பகுதியில் இளம் யுவதி ஒருவர் மயக்கமடைந்த நிலை யில் மீட்கப்பட்டு யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட் டுள்ளார்.இச் சம்பவம் நேற்றுக் காலை இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாகத் தெரிய வருவதாவது,
துன்னாலை குடவத்தை பல நோக்குக் கூட்டுறவுச் சங்கத்திற்கு அருகில் நேற்று அதி காலை 2.30 மணியளவில்
துன்னாலை குடவத்தை பல நோக்குக் கூட்டுறவுச் சங்கத்திற்கு அருகில் நேற்று அதி காலை 2.30 மணியளவில்
செவ்வாய், 10 ஆகஸ்ட், 2010
எம் இளஞ்செல்வங்களின் தற்க்கொலைக்கான..........?
சுதந்திரமான வாழ்வு, கெளரவமான , கற்பதற்கேற்றதான அமைதியான சூழல் தெரிவுகள் ,அனைத்தையும் இழந்துபோன மனதின் சுமைகளோடு வாழ்வதற்க்கு
நிர்ப்பந்திக்கபடுதலே வன்னி மாணவர்களின் இன்றைய சூழல் , கொடும்போரின் வடுக்களை சுமந்த வாழ்வே வாழ்வழிக்கிறது. யுத்தத்தில் அவயங்களை இழந்து
உற்றார், உறவினர் , நண்பர்களை பிரிந்து ,சாதாரண மக்களாக எப்படி இவர்கள் வாழ்வார்கள்.
உடல் ,உள ரீதியாக பாதிக்கபட்ட மாணவர்களை வழிநாடாத்த முன் வருபவர்கள் யார் ? உதவுபவர்கள் யார் ? யாருமேயில்லை பல எதிர்கால கனவுகளுடன்
சிறகடித்து திரிந்த எம்மலர்களின் கனவுகள் சிதைந்ததும் , சிதைக்கபடுவதுமான காலம் இதுவே எனலாம்
போரின் இழப்புகளிற்குள் மீண்டெழுவதற்குள் சிங்களபேரினவாதத்தின் இராணுவ புலனாய்வு செயற்பாட்டளர்களின் விசாரணைகள் , கெடுபிடிகள் ,
சந்தேகபார்வைகள் , இராணுவ கெடுபிடிகளின் மத்தியில் எவ்வாறு தான் தங்கள் கற்றல் செயற்பாடுகளை கொண்டு செல்ல முடியும்.
யாழ் பல்கலைகழகத்தில் 325 ற்கு அதிகமான மாணவர்கள் எதுவித உதவியுமற்று , வன்னி போரின் வடுக்களை சுமந்து. சுயமான வாழ்வியக்கத்திற்குள்
தள்ளபட்டாலும் தங்களது எதிர்காலம் பற்றிய கேள்விகளுடனும், எந்நேரமும் இராணுவ புலனாய்வாளர்களால் விசாரணைக்கு உள்படுத்தபடுவோம் என்ற
அச்சத்திலேயே தங்களின் வாழ்வியக்கத்தை கொண்டு நகர்த்துவதை காணலாம்
அண்மையில் யாழ் பல்கலைகழக மாணவர்களான ரவீந்திரதாஸ் விக்ரர் - அருள்தாஸ் , வேலாயுதம் - திருவிழி ஆகியோர் கடிதங்களூடாக தம்
மனக்குமுறல்களை இவ்வுலகத்திற்க்கு தெரிவித்துவிட்டு தங்களை மாய்த்து கொண்ட சம்பவம் எம் மனங்களை விட்டு மறையும் முன்பே மீண்டுமொரு அவலம்
நடந்தேறியுள்ளது. வன்னி மாணவர்கள் எனும் காரணத்தால் சக மாணவர்களின் ஏளன பேச்சுக்கள்,, பேராசிரியர்களின் பாகுபடுகள்,, விசனமான பார்வைகள் ,,
அதனை தவிர இராணுவ புலனாய்வாளர்களின் விசாரணை தொந்தரவுகளின் தாக்கத்தின் பாதிப்புகளே மாணவர்களை இந்நிலைக்கு கொண்டு செல்ல
ஏதுவாகின்றது..
மாணவர்களான அருள்தாஸ்,, திருவிழி ஆகிய இருவரும் யாழ்ப்பாண அச்செழு இராணுவ முகாமிற்கு அழைக்கபட்டு புலனாய்வாளர்களால்
விசாரணைக்குள்படுத்தபட்டார்கள் என்பதும் , இருவரின் உடல்களிலுமுள்ள யுத்த தழும்புகளிற்கான காரணங்கள் ஆராயப்பட்டு , எச்சரிக்கை செய்யபட்ட பின்பே
இவ்விருவரும் இக்கோர முடிவிற்க்கு தள்ளபட்டார்கள் என அறியமுடிகிறது.
செஞ்சோலை மாணவியான புஸ்பமலர் ஜெயந்தி (சாளினி) சிறிலங்கா வான்படையால் செஞ்சோலை சிறுவர் இல்லத்தில் மேற்கொள்ள பட்ட வான் தாக்குதலில்
அகப்பட்டு தனது தோழிகள் பலரை இழந்த சோகத்துடன் வாழ்ந்து வந்தவர். வன்னியின் கொடூரபோர் மேலும் அவரை பாதிப்புகுள்ளாக்கியது . உறவுகளை பிரிந்து ,
தான் நேசித்தவர்களை காணமுடியாத அவ் இளம் பிஞ்சின் சோகமான வாழ்வு இவ்வாறான கொடூர முடிவை எற்படுத்தியுள்ளது..
எம் எதிர்கால சிற்பிகளின் கனவுகளை நிறைவு செய்தலும் , அவர்களினை உள ரீதியான உளவுரனூட்டல் ,,மேம்படுத்தல் ,, நம்பிக்கையூட்ட உதவுதலே எம்மாலான
காலக்கடமையாகிறது.
நிர்ப்பந்திக்கபடுதலே வன்னி மாணவர்களின் இன்றைய சூழல் , கொடும்போரின் வடுக்களை சுமந்த வாழ்வே வாழ்வழிக்கிறது. யுத்தத்தில் அவயங்களை இழந்து
உற்றார், உறவினர் , நண்பர்களை பிரிந்து ,சாதாரண மக்களாக எப்படி இவர்கள் வாழ்வார்கள்.
உடல் ,உள ரீதியாக பாதிக்கபட்ட மாணவர்களை வழிநாடாத்த முன் வருபவர்கள் யார் ? உதவுபவர்கள் யார் ? யாருமேயில்லை பல எதிர்கால கனவுகளுடன்
சிறகடித்து திரிந்த எம்மலர்களின் கனவுகள் சிதைந்ததும் , சிதைக்கபடுவதுமான காலம் இதுவே எனலாம்
போரின் இழப்புகளிற்குள் மீண்டெழுவதற்குள் சிங்களபேரினவாதத்தின் இராணுவ புலனாய்வு செயற்பாட்டளர்களின் விசாரணைகள் , கெடுபிடிகள் ,
சந்தேகபார்வைகள் , இராணுவ கெடுபிடிகளின் மத்தியில் எவ்வாறு தான் தங்கள் கற்றல் செயற்பாடுகளை கொண்டு செல்ல முடியும்.
யாழ் பல்கலைகழகத்தில் 325 ற்கு அதிகமான மாணவர்கள் எதுவித உதவியுமற்று , வன்னி போரின் வடுக்களை சுமந்து. சுயமான வாழ்வியக்கத்திற்குள்
தள்ளபட்டாலும் தங்களது எதிர்காலம் பற்றிய கேள்விகளுடனும், எந்நேரமும் இராணுவ புலனாய்வாளர்களால் விசாரணைக்கு உள்படுத்தபடுவோம் என்ற
அச்சத்திலேயே தங்களின் வாழ்வியக்கத்தை கொண்டு நகர்த்துவதை காணலாம்
அண்மையில் யாழ் பல்கலைகழக மாணவர்களான ரவீந்திரதாஸ் விக்ரர் - அருள்தாஸ் , வேலாயுதம் - திருவிழி ஆகியோர் கடிதங்களூடாக தம்
மனக்குமுறல்களை இவ்வுலகத்திற்க்கு தெரிவித்துவிட்டு தங்களை மாய்த்து கொண்ட சம்பவம் எம் மனங்களை விட்டு மறையும் முன்பே மீண்டுமொரு அவலம்
நடந்தேறியுள்ளது. வன்னி மாணவர்கள் எனும் காரணத்தால் சக மாணவர்களின் ஏளன பேச்சுக்கள்,, பேராசிரியர்களின் பாகுபடுகள்,, விசனமான பார்வைகள் ,,
அதனை தவிர இராணுவ புலனாய்வாளர்களின் விசாரணை தொந்தரவுகளின் தாக்கத்தின் பாதிப்புகளே மாணவர்களை இந்நிலைக்கு கொண்டு செல்ல
ஏதுவாகின்றது..
மாணவர்களான அருள்தாஸ்,, திருவிழி ஆகிய இருவரும் யாழ்ப்பாண அச்செழு இராணுவ முகாமிற்கு அழைக்கபட்டு புலனாய்வாளர்களால்
விசாரணைக்குள்படுத்தபட்டார்கள் என்பதும் , இருவரின் உடல்களிலுமுள்ள யுத்த தழும்புகளிற்கான காரணங்கள் ஆராயப்பட்டு , எச்சரிக்கை செய்யபட்ட பின்பே
இவ்விருவரும் இக்கோர முடிவிற்க்கு தள்ளபட்டார்கள் என அறியமுடிகிறது.
செஞ்சோலை மாணவியான புஸ்பமலர் ஜெயந்தி (சாளினி) சிறிலங்கா வான்படையால் செஞ்சோலை சிறுவர் இல்லத்தில் மேற்கொள்ள பட்ட வான் தாக்குதலில்
அகப்பட்டு தனது தோழிகள் பலரை இழந்த சோகத்துடன் வாழ்ந்து வந்தவர். வன்னியின் கொடூரபோர் மேலும் அவரை பாதிப்புகுள்ளாக்கியது . உறவுகளை பிரிந்து ,
தான் நேசித்தவர்களை காணமுடியாத அவ் இளம் பிஞ்சின் சோகமான வாழ்வு இவ்வாறான கொடூர முடிவை எற்படுத்தியுள்ளது..
எம் எதிர்கால சிற்பிகளின் கனவுகளை நிறைவு செய்தலும் , அவர்களினை உள ரீதியான உளவுரனூட்டல் ,,மேம்படுத்தல் ,, நம்பிக்கையூட்ட உதவுதலே எம்மாலான
காலக்கடமையாகிறது.
தமிழர்களுக்கான நீதி கிடைக்கும் வரை இந்த நெடும் பயணம் ஓயக்கூடாது.......
ஐக்கிய நாடுகள் சபை நோக்கி நீதி கேட்டு நடக்கும் இளைஞனின் பயணம் 600 கிலோ மீற்றர்களையும் கடந்து முன்னோக்கி நகர்ந்துகொண்டிருக்கின்றது.
மேஜர் இளநிலவன்
''ஒரு பிச்சைக்காரனின் வயிறு, எளிய சுமை, வலிமை ஏறிய கால்கள்." ஒரு கெரில்லாப் போராளி கொண்டிருக்கவேண்டிய தகுதிகள் இவைகள்தான். உலகின் தலை சிறந்த விடுதலை வீரன் சேகுவேராவின் இதயத்திலிருந்து உதிர்ந்த வார்த்தைகள் அவை. இதை வாசிக்கும்போது என்னுள் ஓடோடி வந்தவர்களுள் நிலவனும் ஒருவன்.
15 வயதுச் சிறுமி மீது வல்லுறவு!
புத்தளம் மாவட்டத்தில் கடமையாற்றும் கிராம சேவையாளர் ஒருவர் 15 வயதுச் சிறுமி ஒருவரைக் கற்பழித்தமைக்காக இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தக் கற்பழிப்புச் சம்பவம் அவருடைய அலுவலகத்தில் நேற்று இடம்பெற்றுள்ளது.
இந்தக் கற்பழிப்புச் சம்பவம் அவருடைய அலுவலகத்தில் நேற்று இடம்பெற்றுள்ளது.
நடந்துமுடிந்த போரின் பின்னரான அரசியலாய்வுகள், புலிகளுக் கெதிரான விமர்சனங்கள், ஒப்பீடுகளனைத்தும் இந்த இனப்பிரச்சனையின் அடித் தளத்தை விளங்கிக்கொள்ளத் தவறிவிட்டன.....
வரலாறு எம்மைச் சுற்றி தன்னை நிகழ்த்திக் கொண்டேயிருக்கிறது. அலையலையாய்ப் படிவுண்ட அதன் பக்கங்களுக்குள் ஒரு மீள முடியாத் துயரத்தின் சாட்சியாய் நாம் விசனித்திருக்கிறோம். ஒரு தேசம் தூர்ந்துகொண்டிருக்கிறது, எமதனைவரின் கனவுகளினூடு.....
முன்னாள் புலிகள் மற்றும் ஆதரவாளர்களுக்கு எப்போது விடுதலை கிடைக்கும் என்ற கேள்விக்குச் சரியான விடை அரசதரப்பில்??
இறுதிப்போரில் சரணடைந்த கைது செய்யப்பட்ட புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர்கள் பற்றிய செய்திகள் இப்போது அதிகமாக வெளிவரத் தொடங்கியுள்ளன. அரசாங்கத் தரப்பே இவர்களைப் பற்றிய செய்திகளை நாளாந்தம் கொடுக்க நினைக்கிறது.
இரண்டொரு மாதங்களுக்கு முன்னர் இந்த நிலை இல்லை. சரணடைந்த புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர்கள் பற்றிய தகவல்களை வெளியிடுவதற்கு அப்போது தயங்கிய அரசாங்கம் படைத்தரப்பும் இப்போது அவர்கள் பற்றிய செய்திகள் தினம் வெளிவருவதை விரும்புகின்றன.
இரண்டொரு மாதங்களுக்கு முன்னர் இந்த நிலை இல்லை. சரணடைந்த புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர்கள் பற்றிய தகவல்களை வெளியிடுவதற்கு அப்போது தயங்கிய அரசாங்கம் படைத்தரப்பும் இப்போது அவர்கள் பற்றிய செய்திகள் தினம் வெளிவருவதை விரும்புகின்றன.
திங்கள், 9 ஆகஸ்ட், 2010
பலவந்தமாக சிங்கள குடியேற்றம்...!
இலங்கையில் திருகோணமலை மாவட்டத்தில் தமிழர்களுக்குச் சொந்தமான விவசாய நிலங்கள் உட்பட 3ஆயிரம் ஏக்கர் சுற்றி வளைக்கப்பட்டு சிஙகளவர்கள் குடியமர்த்தப்பட்டு வருகின்றனர்.
விடுதலைப்புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்டப்போர் முடிவடைந்த பின்னரும்,
விடுதலைப்புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்டப்போர் முடிவடைந்த பின்னரும்,
புலிகளின் தலையில்......தெரிந்தோ தெரியாமலோ??
நோர்வே நாட்டில் நிறுவனங்களில் பெயரலால் வங்கிகளில் கடன்களை பெற்றவர்கள் மற்றும் நிறுவனங்கள் நஷ்டமடைந்து விட்டது என கைகளை உயர்த்தியவர்கள் யாவரும் அதற்கான பொறுப்புக்களை புலிகளின் தலையில் சுமத்துவது தெரியருகின்றது. நோர்வே நாட்டின் தேசியப் பத்திரிகையான டக்பிளாடட் (Dagbladet) மேற்படி இத்தகவல்களை வெளியிட்டுள்ளது.
கப்டன் அன்பரசன்
‘ஐயா’ என்றுதான் அவன் எங்களால் அழைக்கப்பட்டான். அவன் அதை விரும்பாதபோதும், சிலவேளைகளில் ‘இப்பிடிக் கூப்பிட்டா இனி நான் கதைக்க மாட்டன்’ என்று விசனத்துடன் சொன்னாலும் இறுதிவரை நாங்கள் அவனை ‘ஐயா’ என்றுதான் கூப்பிட்டோம். மற்றப் பிரிவினர் அவனை அன்பரசன் என்று கூப்பிட்டாலும் நாங்கள் அவனை ‘ஐயா’ என்றுதான் அழைப்போம். அவன் யாழ்ப்பாணத்தில் ஐயர் குடும்பமொன்றைச் சேர்ந்தவன் என்பதுதான் அதற்குக் காரணம்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)








.jpg)









