ஆகஸ்ட் 14 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 7 மணியளவில் கண்மூடித்தனமான வான் தாக்குதல்களுக்கு இலக்காகியது. பேரினவாத அரச படைகளின் நான்கு அதிவேக யுத்த விமானங்கள் மிலேச்சத்தனமாக வீசிய 16 குண்டுகளும் 61 பாடசாலை மாணவிகளின் உயிர்களை பறித்ததுடன் 155 இற்கும் அதிகமான மாணவிகள் படுகாயமடைந்துள்ளனர். கொல்லப்பட்டவர்களில் சிலரது உடல்கள் சிதறியபடி காணப்பட்டன. காயமடைந்தவர்களில் 25 மாணவிகளது நிலைமை கவலைக்கிடமாகவுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்தவர்களில் பலர் அவயவங்களை இழந்திருப்பதாகவும் சிலர் கைகள், கால்கள் இரண்டையும் இழந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
சனி, 14 ஆகஸ்ட், 2010
யாழில் ஆயுதங்கள் மீட்பாம்.......
யாழ் குடா பகுதியான கொக்குவில் மற்றும் சங்கத்தானை பகுதியில்
இராணுவத்தின் 52 ம் படையணி படையினர் நடத்திய தேடுதலின் போது
47 கைக்குண்டுகள், c4 கண்ணிவெடிகள் , 22 ற்கு அதிகமான புதிய வகையான சீனா நாட்டில் தயாரிக்கபட்ட கைத்துப்பாக்கிகள் , மோட்டர் குண்டுகள் , தோட்டாக்கள் என்பன கைப்பேற்றபட்டுள்ளதாக இராணுவம் தனது நாளாந்த செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
இராணுவத்தின் 52 ம் படையணி படையினர் நடத்திய தேடுதலின் போது
47 கைக்குண்டுகள், c4 கண்ணிவெடிகள் , 22 ற்கு அதிகமான புதிய வகையான சீனா நாட்டில் தயாரிக்கபட்ட கைத்துப்பாக்கிகள் , மோட்டர் குண்டுகள் , தோட்டாக்கள் என்பன கைப்பேற்றபட்டுள்ளதாக இராணுவம் தனது நாளாந்த செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
வெள்ளி, 13 ஆகஸ்ட், 2010
செஞ்சோலைசெல்வங்களின் படுகொலையின் நான்காம் ஆண்டு நினைவு !!!!.....
2006 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 14 ஆம் திகதி வன்னிப்பெரு நிலப்பரப்பில் அமைந்துள்ள செஞ்சோலை வளாகத்தினுள் சிங்கள இனவெறி அரசின் போர் விமானங்கள் கண்மூடித்தனமாக நடாத்திய விமானக் குண்டுவீச்சில் கொடூரமாக கொல்லப்பட்ட எமது செல்வங்களை நாம் தொலைத்த நாள்
சிங்கள இனவாத அரசின் இன வெறி தாண்டவம் அரங்கேறிய நாள் .உலகமே மௌனமாக இருந்த நாள் ..எமது செல்வங்களின் ஆத்மா சாந்தியினை வேண்டி நாம் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செய்வோம் ..நாம் எமது செல்வங்களை புதைக்கவில்லை மாறாக விதைத்து உள்ளோம்...
சிங்கள இனவாத அரசின் இன வெறி தாண்டவம் அரங்கேறிய நாள் .உலகமே மௌனமாக இருந்த நாள் ..எமது செல்வங்களின் ஆத்மா சாந்தியினை வேண்டி நாம் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செய்வோம் ..நாம் எமது செல்வங்களை புதைக்கவில்லை மாறாக விதைத்து உள்ளோம்...
உறவுகளைச் சந்திப்பதில் சிக்கல்கள்!!!!.....
கடந்த வருடம் இடம்பெற்ற இறுதிப்போரின் போது இராணுவத்தினரிடம் சரணடைந்த முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள புனர்வாழ்வு நிலையங்களுக்கு சென்றுவருவதில் அவர்களது குடும்ப உறவினர்கள் பெரும் சிரமங்களை எதிர் நோக்குவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இராணுவத்தினரிடம் சரணடைந்த 11 ஆயிரம் பேரில். எண்ணாயிரம் பேர் வரையில் வவுனியா, திருகோணமலை, பொலநறுவை போன்ற பல் வேறுமட்டங்களில் அரசாங்கத்தினால் அமைக்கப்பட்டுள்ள புனர் வாழ்வு நிலையங்களில் தங்கவைக்கப்பட்டிருக்கின்றார்கள்.
இவர்களுக்கு புனர்வாழ்வுப் பயிற்சியளிப்பதற்காகவே இந்த நிலையங்கள் அமைக்கப்பட்டிருப்பதாக அரசாங்கம் கூறுகின்றது. யுத்தம் முடிவடைந்து ஒருவருடத்திற்கு மேற்பட்ட நிலையில் இவ்வாறு தங்கவைக்கப்பட்டிருப்பவர்களை குறிப்பாக பொலனறுவை மாவட்டத்திற்கு சென்று பார்ப்பதில் அவர்களின் குடும்ப உறவினர்கள் பல்வேறு கஷ்டங்களை எதிர்நோக்கியிருக்கின்றார்கள்.
போரினால் ஏற்பட்ட இடப்பெயர்வின் விளைவாக அனைத்தையும் இழந்து நிர்க்கதியான நிலையில் அரசாங்கம் வழங்குகின்ற நிவாரண உதவிகளில் மாத்திரம் தங்கியிருக்கின்ற இந்தக் குடும்பங்கள் பெருமளவு நிதி செலவு, 5 மணித்தியாலங்கள் பிரயாணம் செய்து தமது கணவன்மாரை, அல்லது மகன்மாரை பார்க்க வேண்டியிருக்கிறது. இளம் மனைவியர் தம்முடன் சிறு குழந்தைகளையும் அழைத்துச்செல்லவேண்டிய நிர்ப்பந்தம்.
இந்த நிலையில் சர்வதேச செஞ்சிலுவைக்குழு, மற்றும் மனித உரிமைகளுக்கான இல்லம் போன்ற அமைப்புக்கள் இவர்களின் பிரயாணத் தேவைக்காக உதவ முன்வந்துள்ள போதிலும் அவர்களின் தேவை அளப்பரியதாக இருக்கின்றது. இந்த நிலையில் பொலநறுவை மாவட்டத்தில் உள்ள மூன்று புனர்வாழ்வு நிலையங்களுக்கும், தாங்கள் அடிக்கடி சென்று அவர்களைப் பார்ப்பதற்கான உதவிகளைச் செய்வதைவிட அவர்களை விடுதலை செய்வதால் தங்களுக்கும் தமது குடும்பங்களுக்கும் பேருதவியாக இருக்கும் என்று கூறுகின்றார்கள்
கப்டன் அருணன்
அன்று மாலையே நாங்கள் தங்கியிருந்த வீடு களைகட்டத் தொடங்கியது. வழமையான – அலுப்புத்தட்டும் இரவுகள் போலன்றி இன்றைய இரவு சுவாரசியமாகக் கழியப் போகின்றது என்ற உற்சாகம் எம்மைத் தொற்றிக் கொண்டது. விறகு, சீனி, தேயிலை என்று தேனீர் போடத் தேவையான பொருட்களைச் சரிபார்த்து வைத்துக் கொண்டான் மறவன். இந்தப் பரபரப்பெல்லாம் அருணனுக்கானத்தான். வரப்போகும் விருந்தாளியை எதிர்பார்த்துக் காத்திருந்தோம்.
நான் அருணனை முதன்முதல் கண்டது கற்சிலைமடுவில். எமது கற்கை நெறி கற்சிலைமடுவில் நடந்துகொண்டிருந்தபோது அங்கிருந்த நிர்வாக அலுவலகத்துக்கு வந்திருந்தான். பல படையணிகள், துறைகளிலிருந்து வந்த போராளிகள் அக்கற்கை நெறியில் இருந்தனர். அருணன் முன்பு விடுதலைப் புலிகளின் ஆங்கிலக் கல்லூரியில் இருந்திருக்க வேண்டும். எம்மோடு நின்ற ஆங்கிலக் கல்லூரிப் போராளிகளான கப்டன் கர்ணன், மேஜர் பூபதி (இவர்கள் இருவரும் பின்னர் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் கடலில் வீரச்சாவு) ஆகியோரைச் சந்திக்க வந்துபோய்க்கொண்டிருந்த அருணன் ஓரிரு நாட்களிலேயே எம்மோடு நெருக்கமாகிவிட்டான். அவனது சுபாவமே அப்படித்தான். யாரோடும் இலகுவில் நெருக்கமாகிவிடுவான்.
அருணன் எமது வீட்டுக்கு வரும் நாட்கள் மிகமிக இனிமையாகக் கழியும். எந்தநேரமும் ஏதாவது பகிடிவிட்டுக் கொண்டேயிருப்பான். சிலநாட்களின் பின்னர்தான் அருணனின் கூத்துப்பாடல்கள் பாடும் திறமை எமக்குத் தெரியவந்தது. பிறகென்ன? அவன் வரும் நாட்களில் தவறாது சில பாடல்கள் பாடிக்காட்டித்தான் செல்லமுடியும்.
அப்போது ஜெயசிக்குறு இராணுவ நடவடிக்கை நடந்துகொண்டிருந்தது. எதிரி கரிப்பட்டமுறிப்பைக் கைப்பற்றியிருந்தான். அங்கிருந்து அவனை மேலும் முன்னேறவிடாமல் புலிகளின் அணிகள் தடுத்து நின்றிருந்தன. அப்போது அம்பகாமம் பகுதியில் சிறுத்தைப் படையணியின் ஒரு கொம்பனி நிலைகொண்டிருந்தது. அந்த அணியிலே அருணனும் இணைத்துக் கொள்ளப்பட்டான்.
நான் அருணனை முதன்முதல் கண்டது கற்சிலைமடுவில். எமது கற்கை நெறி கற்சிலைமடுவில் நடந்துகொண்டிருந்தபோது அங்கிருந்த நிர்வாக அலுவலகத்துக்கு வந்திருந்தான். பல படையணிகள், துறைகளிலிருந்து வந்த போராளிகள் அக்கற்கை நெறியில் இருந்தனர். அருணன் முன்பு விடுதலைப் புலிகளின் ஆங்கிலக் கல்லூரியில் இருந்திருக்க வேண்டும். எம்மோடு நின்ற ஆங்கிலக் கல்லூரிப் போராளிகளான கப்டன் கர்ணன், மேஜர் பூபதி (இவர்கள் இருவரும் பின்னர் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் கடலில் வீரச்சாவு) ஆகியோரைச் சந்திக்க வந்துபோய்க்கொண்டிருந்த அருணன் ஓரிரு நாட்களிலேயே எம்மோடு நெருக்கமாகிவிட்டான். அவனது சுபாவமே அப்படித்தான். யாரோடும் இலகுவில் நெருக்கமாகிவிடுவான்.
அருணன் எமது வீட்டுக்கு வரும் நாட்கள் மிகமிக இனிமையாகக் கழியும். எந்தநேரமும் ஏதாவது பகிடிவிட்டுக் கொண்டேயிருப்பான். சிலநாட்களின் பின்னர்தான் அருணனின் கூத்துப்பாடல்கள் பாடும் திறமை எமக்குத் தெரியவந்தது. பிறகென்ன? அவன் வரும் நாட்களில் தவறாது சில பாடல்கள் பாடிக்காட்டித்தான் செல்லமுடியும்.
அப்போது ஜெயசிக்குறு இராணுவ நடவடிக்கை நடந்துகொண்டிருந்தது. எதிரி கரிப்பட்டமுறிப்பைக் கைப்பற்றியிருந்தான். அங்கிருந்து அவனை மேலும் முன்னேறவிடாமல் புலிகளின் அணிகள் தடுத்து நின்றிருந்தன. அப்போது அம்பகாமம் பகுதியில் சிறுத்தைப் படையணியின் ஒரு கொம்பனி நிலைகொண்டிருந்தது. அந்த அணியிலே அருணனும் இணைத்துக் கொள்ளப்பட்டான்.
காணி பிடிக்கிறார் கெளதம புத்தர் உறுதிக்காரச் சிவன் எங்கே?........
வடக்கில் தமிழ் மக்களின் மீள்குடியேற்றம் நடக்கின்றதோ இல்லையோ கெளதம புத்தபிரான் மட்டும் வடக்கில் அதிக காணிகளைக் கைப்பற்றி விட்டார்.
வீதிகள், குளங்கள், அரசமரங்கள், கடற் கரையோரங்கள் எங்கும் கெளதம புத்தபிரானின் குடியிருப்புகள் எதற்காக இப்படி? அறத்தின் வழியில் அகிம்சையின் பாதையில் மனுக்குலத்தை வழிப்படுத்த போதித்த கெளதம புத்தபிரானுக்கு சிவனின் குடும்பம் குடியிருக்கும் வடக்கில் ஏன் இத்தனை விருப்பு?
ஓ! தன் பக்தர்கள் வடபுலத்தில் குடியேற்றப் படுவதற்கு முன்னதாக தான் குடியிருக்க வேண்டும் என்பதற்காகவா?பரவாயில்லை, நிலையில்லாத இந்த உலகில் இவை மட்டும் நிலையாகிவிடுமா என்ன? இவையெல்லாம் தற்காலக் கவலைகள் தான். யுத்தத்தில் தோற்றவனைவிட வென்றவனுக்கே அதிக கவலை என்று கூறியவர் கெளதம புத்தபிரான்.
எனவே அவரின் காணி சுவீகரிப்புக் குறித்து நாம் கவலை கொள்ளத் தேவையில்லை. ஆனா லும் சொந்தக்காணிக்காரச் சிவன் குடும்பம் தம் வீட்டில் குடியிருக்க முடியாமல் இருப்பதை நினைக்கும் போதுதான் மனம் வெதும்புகின்றது.எத்தனையோ சைவாலயங்கள் யுத்தத்தால் உடைந்து சிதைந்து போயுள்ளன. பல ஆலயங்கள் கவனிப்பாரற்று பூசை வழிபாடுகள் ஏதும் அற்று இருண்டு போயுள்ளன.
நிலைமை இதுவாக இருக்கும் போது அவசர அவசரமாக கெளதம புத்தபிரான் காணி பிடிப்பது அவ்வளவு நல்லதல்ல. இந்து மதத்திற்கும் பெளத்தத்திற்கும் இடையே நெருங்கிய தொடர்புண்டு.இந்து மதக்கடவுள்கள் அதாவது சிவனின் குடும்ப உறுப்பினர்கள் பலர் விகாரைகளில் வைத்து வழிபாடாற்றப்படுகின்றனர்.
அதேநேரம் சமய கிரியை முறைகளிலும், அனுஷ்டானங்களிலும், சிற்ப சாஸ்திரங்களிலும் இந்து-பெளத்த கொள்கைகள் ஒத்துப் போவதை அவதானிக்க முடியும்.நிலைமை இதுவாக இருக்கும் போது வட புலத்தில் அதிலும் குறிப்பிட்டுக் கூறக்கூடியதாக வன்னிப் பெருநிலப்பரப்பிலும், யாழ். குடாநாட்டிலும் புத்தபிரானை பிரதிஷ்டை செய்வதென்பது உள்நோக்கம் கொண்டதாகும்.
எனவே சமயங்கள் கூறும் அறவழிகளைப் பின் பற்றுவதே மனித குலம் மேன்மையுறுவதற்கான வழியாகும். இதைவிடுத்து சமயத்தால், இனத்தால் மக்களை பிரித்து விரோதங்களை தோற்றுவிப்பதை தெய்வங்கள் ஒரு போதும் ஏற்பதும் இல்லை; அவை நிலைக்க விடுவதும் இல்லை.
ஆகையால் இலங்கை திருநாட்டில் அவரவர் வாழ்வியல் கோலங்களைப் பின்பற்றவும் தத்தம் சமய விழுமியங்களைத் தாம் வாழும் இடங்களில் நிலைநிறுத்தவும் கூடிய சட்டங்கள் உருவாக்கப்பட்டு அவை நடைமுறைப் படுத்தப்பட வேண்டும். இல்லையேல் பிரதிஷ்டைகளுக்கு தனியான பாதுகாப்பு அமைப்புகள் தேவையானவையாக இருக்கும்.
வீதிகள், குளங்கள், அரசமரங்கள், கடற் கரையோரங்கள் எங்கும் கெளதம புத்தபிரானின் குடியிருப்புகள் எதற்காக இப்படி? அறத்தின் வழியில் அகிம்சையின் பாதையில் மனுக்குலத்தை வழிப்படுத்த போதித்த கெளதம புத்தபிரானுக்கு சிவனின் குடும்பம் குடியிருக்கும் வடக்கில் ஏன் இத்தனை விருப்பு?
ஓ! தன் பக்தர்கள் வடபுலத்தில் குடியேற்றப் படுவதற்கு முன்னதாக தான் குடியிருக்க வேண்டும் என்பதற்காகவா?பரவாயில்லை, நிலையில்லாத இந்த உலகில் இவை மட்டும் நிலையாகிவிடுமா என்ன? இவையெல்லாம் தற்காலக் கவலைகள் தான். யுத்தத்தில் தோற்றவனைவிட வென்றவனுக்கே அதிக கவலை என்று கூறியவர் கெளதம புத்தபிரான்.
எனவே அவரின் காணி சுவீகரிப்புக் குறித்து நாம் கவலை கொள்ளத் தேவையில்லை. ஆனா லும் சொந்தக்காணிக்காரச் சிவன் குடும்பம் தம் வீட்டில் குடியிருக்க முடியாமல் இருப்பதை நினைக்கும் போதுதான் மனம் வெதும்புகின்றது.எத்தனையோ சைவாலயங்கள் யுத்தத்தால் உடைந்து சிதைந்து போயுள்ளன. பல ஆலயங்கள் கவனிப்பாரற்று பூசை வழிபாடுகள் ஏதும் அற்று இருண்டு போயுள்ளன.
நிலைமை இதுவாக இருக்கும் போது அவசர அவசரமாக கெளதம புத்தபிரான் காணி பிடிப்பது அவ்வளவு நல்லதல்ல. இந்து மதத்திற்கும் பெளத்தத்திற்கும் இடையே நெருங்கிய தொடர்புண்டு.இந்து மதக்கடவுள்கள் அதாவது சிவனின் குடும்ப உறுப்பினர்கள் பலர் விகாரைகளில் வைத்து வழிபாடாற்றப்படுகின்றனர்.
அதேநேரம் சமய கிரியை முறைகளிலும், அனுஷ்டானங்களிலும், சிற்ப சாஸ்திரங்களிலும் இந்து-பெளத்த கொள்கைகள் ஒத்துப் போவதை அவதானிக்க முடியும்.நிலைமை இதுவாக இருக்கும் போது வட புலத்தில் அதிலும் குறிப்பிட்டுக் கூறக்கூடியதாக வன்னிப் பெருநிலப்பரப்பிலும், யாழ். குடாநாட்டிலும் புத்தபிரானை பிரதிஷ்டை செய்வதென்பது உள்நோக்கம் கொண்டதாகும்.
எனவே சமயங்கள் கூறும் அறவழிகளைப் பின் பற்றுவதே மனித குலம் மேன்மையுறுவதற்கான வழியாகும். இதைவிடுத்து சமயத்தால், இனத்தால் மக்களை பிரித்து விரோதங்களை தோற்றுவிப்பதை தெய்வங்கள் ஒரு போதும் ஏற்பதும் இல்லை; அவை நிலைக்க விடுவதும் இல்லை.
ஆகையால் இலங்கை திருநாட்டில் அவரவர் வாழ்வியல் கோலங்களைப் பின்பற்றவும் தத்தம் சமய விழுமியங்களைத் தாம் வாழும் இடங்களில் நிலைநிறுத்தவும் கூடிய சட்டங்கள் உருவாக்கப்பட்டு அவை நடைமுறைப் படுத்தப்பட வேண்டும். இல்லையேல் பிரதிஷ்டைகளுக்கு தனியான பாதுகாப்பு அமைப்புகள் தேவையானவையாக இருக்கும்.
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் .நல்லூர் முருகனுக்கு நேர்த்திக் கடன்!!!.....
யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று நல்லூர் முருகனுக்கு நேர்த்திக் கடன் வைத்திருந்தாராம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் மூத்த புதல்வர் நாமல் ராஜபக்ஸ எம்.பி. இந்நேரத்தின் கடனை நிறைவேற்றினால் ஆலயத்தைத் தரிசனம் செய்து வழிபாடு செய்வார் என்று முருகப் பெருமானுக்கு சத்தியம் செய்திருந்தாராம். இந்நேர்த்திக்கடனை நிறைவேற்றினார்.பரிவாரங்கள் சகிதம் நல்லூர்க் கந்தனைத் தரிசித்தார். விசேட பூசை வழிபாடுகளையும் மேற்கொண்டார்.
இலங்கை ஜனாதிபதியின் மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச, பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் பிரதி அமைச்சர் டிலான் பெரேரா , மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் ஜோன்ஸன் பெர் னாண்டோ ஆகியோர் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்தனர்.
சத்தியசோதனையில் சாதனை படைக்க வாரீர்!.....
வன்னியில் இராணுவம் மற்றும் அவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த நான்கு இலட்சம் பேரைக் குடியமர்த்தத் திட்டமிட்டுள்ளதாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ் பிரேமச்சந்திரன், சுமந்திரன், சிறிதரன் ஆகியோர் கூட்டாக அறிவித்துள்ளனர்.
வன்னிப் பகுதியில் இராணுவக் குடும்பங்களைக் குடியமர்த்தும் நடவடிக்கை இடம்பெறப் போகும் தகவல்கள் தமிழ் மக்களுக்குத் தெரிந்த விடயம்.ஏ-9 பாதையால் பயணிக்கும் எவரும் இராணுவத்தின் குடும்பத்தினருக்கு வீடமைப்பதற்கான கட்டடப் பொருள்கள் அடுக்கி வைத்திருப்பதை அவதானித்து வருகின்றனர். இருந்தும் அதனைப் பகிரங்கப்படுத்த எவரும் இல்லை என்ற ஆதங்கம் இருந்தது. தற்போது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் வன்னியில், நான்கு இலட்சம் சிங்களவர்களைக் குடியமர்த்த அரசு திட்டந்தீட்டியுள்ளதை வெளிப்படுத்தியுள்ளனர்.
என்ன செய்வது? எங்கும் போக்கிரித்தனங்கள் தலை விரித்தாடத் தொடங்கினால் தேவையற்ற-ஆரோக்கிய மற்ற மற்றவர்களின் மனங்களை நோகடிக்கக் கூடிய வெறுவிலித்தன விமர்சனங்களே தாண்டவம் ஆடும்.இப்போதும் நாம் கூறுகின்றோம். அன்புக்குரிய தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களே! தமிழ் மக்களின் நலன் கருதி ஒன்றுசேருங்கள். ஓரணியில் திரளுங்கள். அப்போது தமிழ் மக்கள் அனுபவிக்கும் துன்பங்கள் வெளிச்சத்துக்கு வந்து சேரும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ் பிரேமச்சந்திரன், சுமந்திரன், சிறிதரன் ஆகிய மூவரும் வன்னிக்குச் சென்றனர்.
இராணுவ சீருடைகளை காணோமாம்?............
கிளிநொச்சி மாவட்டத்தின் வன்னேரிக்குளம் பகுதியில் அமைந்துள்ள இராணுவ மினி முகாம் ஒன்றிலே கடமையாற்றி வரும் படைவீரர்களது இராணுவ சீருடைகள் களவாடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது .துவைத்து காயப் போடப்பட்ட சீருடைகளே களவாடப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்தச் சம்பவம் பிரதேசத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சீருடைகளை களவாடிய நபர்கள் இராணுவத்திற்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் நோக்கில் குற்றச் செயல்களில் ஈடுபடக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக இராணுவத்தினர் அறிவித்துள்ளனர்.பிரதேச மக்கள் இது தொடர்பில் விழிப்புடன் செயற்பட வேண்டுமென அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். களவாடப்பட்ட இராணுவச் சீருடைகள் , சந்தேகத்திடமானவர்களின் நடமாட்டங்கள் பற்றி ஏதேனும் தகவல்கள் கிடைத்தால் உடனடியாக அறிவிக்குமாறு படையினர் பொதுமக்களிடம் கோரியுள்ளனர்.
சீருடைகளை களவாடிய நபர்கள் இராணுவத்திற்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் நோக்கில் குற்றச் செயல்களில் ஈடுபடக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக இராணுவத்தினர் அறிவித்துள்ளனர்.பிரதேச மக்கள் இது தொடர்பில் விழிப்புடன் செயற்பட வேண்டுமென அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். களவாடப்பட்ட இராணுவச் சீருடைகள் , சந்தேகத்திடமானவர்களின் நடமாட்டங்கள் பற்றி ஏதேனும் தகவல்கள் கிடைத்தால் உடனடியாக அறிவிக்குமாறு படையினர் பொதுமக்களிடம் கோரியுள்ளனர்.
வியாழன், 12 ஆகஸ்ட், 2010
கப்டன்:அங்கயற்கண்ணி........
கப்டன்:அங்கயற்கண்ணி
துரைசிங்கம்-புஸ்பகலா
மண்கும்பான்,யாழ்ப்பாணம்.
உயர உயர அலைகளை வீசியெறியும் கடலுடன் நெருங்கிய நேசமான உறவை வைத்திருக்கும் அந்தக் கடற்கரை ஒரே வெண்மணல் பிரதேசம். சாதாரணமாக எந்த ஒரு இளம் பெண்ணுக்கும் இந்த வெண்மணற் பரப்பைப் பார்த்தால் தோழியருடன் ஓடிப்பிடித்து விளையாடத் தோன்றும். நீச்சல் பயிற்சியில் ஈடுபடவென கரைக்கு வந்த பெண் புலிகளின் மனம் ஏழைகளின் கண்ணீரில் இளகியது. அனுதாபத்துடன் அந்த மக்களின் நிலையைப் பற்றித் தமக்குள் பேசிக்கொண்டார்கள்.
அங்கயற்கண்ணியின் மனம் இறுகிப் பாறையானது.
“இவங்களுக்கு இதுக்கு ஒரு சரியான பதிலடி குடுக்கவேணும்”
அந்த நிமிடத்திலேயே மனதளவில் அவள் ஒரு கரும்புலியானாள். சிறீலங்காக் கடற்படையின் கப்பல் ஒன்றைக் கரும்புலித்தாக்குதல் மூலம் அழிக்கவேண்டும் என்ற எண்ணம் அப்போதுதான் அவளுள் ஆழ வேரோடியிருக்க வேணும்.
தொடர்ந்தும் எமது மக்கள் சிறீலங்காக் கடற்படையின் தாக்குதலுக்கு அஞ்சி எல்லாவற்றையும் விட்டுவிட்டு ஓடிவருவதும் அன்று முழுவதும் (வருமானம் இல்லாததால்) ஒருவேளைக் கஞ்சிகூடக் குடிக்க வழியில்லாமல் பசியுடன் அழும் தம் குழந்தைகளை சமாதானம் பண்ணமுடியாமல் தமக்குள்ளேயே கண்ணீர்விடும் ஏழைத் தாய்களையும் ஏழைத் தந்தைகளையும் அடிக்கடி காண நேர்ந்தபோதெல்லாம் தான் எடுத்தமுடிவில் மேலும் உறுதி பெற்றாள் அவள்.
தமிழ் இளைஞர்களிடம் ஓர் அன்பு வேண்டுகோள்!!!!.........
அன்புசால் இளைஞர்களுக்கு! தமிழினம் படும் துயர்பற்றி எழுதுவதாக நீங்கள் நினைக்கலாம். அதுபற்றி எல்லாம் எழுத விருப்பவில்லை. எழுதாக் குறைக்கு அழுதால் தீருமா என்ன? எல்லாம் நடந்து முடியட்டும். நீதி, தர்மம், அறம் இருக்குமாயின்-இறைபரம்பொருள் உள்ளதாயின், இந்த மண்ணில் என்றோ ஒருநாள் தமிழ் மக்கள் உரிமை பெற்று பிரவாகம் அடைவர். அப்போது இதனைத் தடுப்பதற்கு யாராலும் முடியாமல் போகும்.
அவ்வாறில்லை தமிழ் மக்களாகிய நாம் துன்பத்தை மட்டுமே அனுபவிக்க வேண்டும் எனில், அது நம் தலைவிதி என்று நினைத்து விட வேண்டியதுதான்.இவ்வாறு இருப்பது புத்திசாலித்தனமா? என்று நீங்கள் கேட்டால் மிகப் பெரும் விடுதலைப்புலிகள் அமைப்புக்குள்ளேயே காட்டிக் கொடுப்போர் இருந்தனர். அதுபோல தற்போதைய தமிழ் அரசியலுக்குள்ளும் எத்தனையோ விதமானவர்கள்.
தமிழினம் அழிவைச் சந்தித்தாலும் அது பற்றிக் கவலை கொள்ளாமல் தங்கள் சுய இலாபத்தை மட்டுமே கண்ணும் கருத்துமாகக் கொண்டிருக்கும் பிரகிருதிகள்.நிலைமை இதுவாக இருக்கும்போது தமிழினத்தை மீட்டெடுப்பது எங்ஙனம்? ஆகையால் எல்லாம் நம் தலைவிதி என்று நினைப்பதை விட வேறு வழியேதும் இருக்கிறதா? உலக நாடுகள் உதவும் என நினைத்து நினைத்து ஏமாந்து அழிந்து போனதைத் தவிர வேறு எதனைக் கண்டோம்?
ஆக, சொந்தக் காலில் நிற்போம். நாமே எங்கள் சுதந்திரத்திற்கும் பொறுப்பென்பதை உணர்வோம். எனினும் எங்கள் அரசியல் எதிர்காலம் பற்றிச் சிந்திப்பதற்கு முன்னதாக, தமிழ் இளைஞர்களின் எதிர்காலம் பற்றி ஒரு கணம் சிந்திப்பதே சாலச் சிறப்புடையதாகும்.
அன்புக்குரிய இளைஞர்களே! நாங்கள் முதலில் எங்களை அறிய வேண்டும். சந்தியில் நிற்பதும், மது அருந்துவதும், கையடக்கத் தொலைபேசியும்தான் எங்கள் சீவியம் என்றால் இந்த மண்ணில் நிகழ்ந்த தியாகங்களுக்கு எந்த அர்த்தமும் இல்லாமல் போகும். தென்பகுதி இளைஞர்களை ஒருகணம் பாருங்கள். யாழ்ப்பாணத்தில் பொருளாதாரத்தை ஈட்டுவதில் அவர்கள் காட்டும் அக்கறை, எத்தனை வடிவங்களில் அவர்கள் நம் மண்ணுக்கு வந்து எங்கள் நிதித் தேட்டத்தை அள்ளிச் செல்கின்றனர்.
ஆனால் நாங்களோ! எதுபற்றியும் கவலையற்றவர்களாக, மோட்டார் சைக்கிளில் ஓடுவதும் கையடக்கத் தொலைபேசியில் உரையாடு வதும்...! எப்படி எங்கள் எதிர்காலம் அமையும். அன்புசால் இளைஞர்களே! உங்கள் கைகளில்தான் தமிழினத்தின் எதிர்காலம் தங்கியுள்ளது. சுவாமி விவேகானந்தர் காட்டிய இளைஞர்களாக நீங்கள் மாறவேண்டும்.
அரசியலின் வகைமையைத் தீர்மானிக்க வேண்டி அறிக்கை விடும் கோமாளிகளாக எங்கள் அரசியல் இருப்பதை மாற்றி ஆக்கபூர்வ மான செயற்பாட்டை அமுல்படுத்தும் அரசியல் கலாசாரத்தைத் தமிழனத்தில் உருவாக்க வேண்டும். வாருங்கள் என்னருமை இளைஞர்களே! அகிம்சைப் பாதையில் அறிவெனும் ஆயுதத்தோடு களத்தில் குதியுங்கள், எங்கள் உரிமையைப் பெற்றுக் கொள்ள...........
அவ்வாறில்லை தமிழ் மக்களாகிய நாம் துன்பத்தை மட்டுமே அனுபவிக்க வேண்டும் எனில், அது நம் தலைவிதி என்று நினைத்து விட வேண்டியதுதான்.இவ்வாறு இருப்பது புத்திசாலித்தனமா? என்று நீங்கள் கேட்டால் மிகப் பெரும் விடுதலைப்புலிகள் அமைப்புக்குள்ளேயே காட்டிக் கொடுப்போர் இருந்தனர். அதுபோல தற்போதைய தமிழ் அரசியலுக்குள்ளும் எத்தனையோ விதமானவர்கள்.
தமிழினம் அழிவைச் சந்தித்தாலும் அது பற்றிக் கவலை கொள்ளாமல் தங்கள் சுய இலாபத்தை மட்டுமே கண்ணும் கருத்துமாகக் கொண்டிருக்கும் பிரகிருதிகள்.நிலைமை இதுவாக இருக்கும்போது தமிழினத்தை மீட்டெடுப்பது எங்ஙனம்? ஆகையால் எல்லாம் நம் தலைவிதி என்று நினைப்பதை விட வேறு வழியேதும் இருக்கிறதா? உலக நாடுகள் உதவும் என நினைத்து நினைத்து ஏமாந்து அழிந்து போனதைத் தவிர வேறு எதனைக் கண்டோம்?
ஆக, சொந்தக் காலில் நிற்போம். நாமே எங்கள் சுதந்திரத்திற்கும் பொறுப்பென்பதை உணர்வோம். எனினும் எங்கள் அரசியல் எதிர்காலம் பற்றிச் சிந்திப்பதற்கு முன்னதாக, தமிழ் இளைஞர்களின் எதிர்காலம் பற்றி ஒரு கணம் சிந்திப்பதே சாலச் சிறப்புடையதாகும்.
அன்புக்குரிய இளைஞர்களே! நாங்கள் முதலில் எங்களை அறிய வேண்டும். சந்தியில் நிற்பதும், மது அருந்துவதும், கையடக்கத் தொலைபேசியும்தான் எங்கள் சீவியம் என்றால் இந்த மண்ணில் நிகழ்ந்த தியாகங்களுக்கு எந்த அர்த்தமும் இல்லாமல் போகும். தென்பகுதி இளைஞர்களை ஒருகணம் பாருங்கள். யாழ்ப்பாணத்தில் பொருளாதாரத்தை ஈட்டுவதில் அவர்கள் காட்டும் அக்கறை, எத்தனை வடிவங்களில் அவர்கள் நம் மண்ணுக்கு வந்து எங்கள் நிதித் தேட்டத்தை அள்ளிச் செல்கின்றனர்.
ஆனால் நாங்களோ! எதுபற்றியும் கவலையற்றவர்களாக, மோட்டார் சைக்கிளில் ஓடுவதும் கையடக்கத் தொலைபேசியில் உரையாடு வதும்...! எப்படி எங்கள் எதிர்காலம் அமையும். அன்புசால் இளைஞர்களே! உங்கள் கைகளில்தான் தமிழினத்தின் எதிர்காலம் தங்கியுள்ளது. சுவாமி விவேகானந்தர் காட்டிய இளைஞர்களாக நீங்கள் மாறவேண்டும்.
அரசியலின் வகைமையைத் தீர்மானிக்க வேண்டி அறிக்கை விடும் கோமாளிகளாக எங்கள் அரசியல் இருப்பதை மாற்றி ஆக்கபூர்வ மான செயற்பாட்டை அமுல்படுத்தும் அரசியல் கலாசாரத்தைத் தமிழனத்தில் உருவாக்க வேண்டும். வாருங்கள் என்னருமை இளைஞர்களே! அகிம்சைப் பாதையில் அறிவெனும் ஆயுதத்தோடு களத்தில் குதியுங்கள், எங்கள் உரிமையைப் பெற்றுக் கொள்ள...........
தமிழ் தேசிய கூட்டமைப்பிலும், இராணுவ புலனாய்வாளர்கள்!
தமிழ் தேசிய கூட்டமைப்பினால் வன்னியின் மீளக்குடியேறிய மக்களுடனான சந்திப்புகளில் இராணுவ புலனாய்வாளர்களும் கலந்து கொண்டு கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவது உறுதிபடுத்த பட்டுள்ளது. படத்தில் குறிப்பிட்ட நபர். ஈசன் என்றும் , அருள் என்றும் , அழைக்கபடுபவர். இவர் விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் ஆவார்,, முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின் இராணுவத்துடன் இணைந்து செயற்படும் நபரானர்.
பல போராளிகளின் கைதுகளிற்கு காரணமான இவர். பொதுமக்கள் தடுத்து வைக்கபடும் முகாம்களிற்கு சென்று விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களை இனம் கண்டு இராணுவம் கைது செய்ய ஒத்தாசை புரிவதுடன் ,, முகாம்களிலிருந்து வெளியேற இருக்கும் இளையவர்களிடம் பல லட்சம் ரூபாய்களை கப்பமாக பெறுவதுடன் , கணவர்களை இழந்து தனியாக வாழும் பெண்களுடன் பாலியல், வன்புணர்ச்சி செயற்பாடுகளிலும், ஈடுபட்டு வருகின்றார்
அண்மையில் நெல்லியடி பிரதேசத்தில் இனந்தெரியாதோரால் சுட்டுகொல்லபட்ட தூயவன் என்பவரும் நபரும் நெருங்கிய நண்பர்கள். எனினும் தற்போது தமிழ் தேசிய கூட்டமைப்பினரின் கலந்துரையாடல்களில் இவர் பங்குபற்றுவதானது பல சந்தேகங்களை மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இவரின் செயற்பாடுகளை இனம்கண்டு எம்மக்கள் விழிப்புணர்வுடன் செயற்படுமாறு வேண்டுகிறோம். இவர் உண்மையில் அரச இராணுவ புலனாய்வுத்துறை உறுப்பினர் என்பதற்க்கான ஆதாரமான அரச இராணுவ புலனாய்வுத்துறை உறுப்பினர்அடையாள அட்டை எமக்கு கிடைக்கபெற்றுள்ளது. அதில் இவருக்கு பொறுப்பான பொறுப்பதிகாரியாக மேஜர் கமகே எனும் இராணுவ புலனாய்வுத்துறை அதிகாரி கையொப்பமிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
புதன், 11 ஆகஸ்ட், 2010
கிழக்கைப் போன்று யாழ்ப்பாணத்திலும் சிவில் சட்டம் வலுப்படுத்தப்படும்.
யாழ்ப்பாணத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற சிவில் சட்டமானது கிழக்கு மாகாணத்தைப் போன்று மேலும் வலுப்படுத்தப்படும் என யாழ். சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நேவின் பத்மதேவா தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், யுத்தம் முடிபுற்ற பின்னர் யாழ்ப்பாணத்தில் சுமுகமான சமாதான நிலை ஏற்பட்டுள்ளது. எனினும் அண்மைக்காலமாக விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் சிலரை மிகவும் இரகசியமான முறையில் குடாநாட்டின் பிரதேசங்களில் கைது செய்ததன் விளைவாகவும் , அவர்கள் வழங்கிய தகவல்களின் பிரகாரம் பல இடங்களில் மறைத்து வைக்கபட்ட வெடிபொருட்கள் மீட்கபடுவதுமான சம்பவங்கள் இடம்பெறுவதால் இறுக்கமானதொரு சட்ட, பாதுகாப்பு நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொள்வார் இந்தச் சூழலில் பொது மக்கள் பயம் அற்றவர்களாக வாழ வேண்டும். இதற்காக யாழ்ப்பாண பொலிஸார் தமது அளப்பரிய சேவையினை மேற்கொள்ள முன்வந்துள்ளனர்.
இதனடிப்படையில் சட்டத்தை சீர் குலைப்போருக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். இதன் முதற்கட்டமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை விசேட நட வடிக்கை ஒன்று மேற்கொள்ளப்பட்டது. இதற்காக 180 பொலி ஸாரும் அவர்களுக்குத் தேவையான வாகனங்களும் பயன் படுத்தப்பட்டது. மாலை 6 மணி தொடக்கம் நள்ளிரவு 12 மணி வரை இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது பாரிய குற்றங்களை விளைவித்தவர்கள், மறைந்திருந்த பிடியாணைக்குரியவர்கள், சட்டவிரோத மது மற்றும் போதைப் பொருட்களை விற்பனை செய்தவர்கள், திருடர்கள் உட்பட 66 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறான நடவடிக்கை கள் யாழ்ப்பாணத்தில் விரிவு படுத்தப்பட்டு பொதுமக்களின் பாதுகாப்புக்கு பொலிஸார் உறுதுணையாக இருப்பார்கள் என அவர் மேலும் தெரிவித்தார்
அந்தண சிரேஷ்டர்களுக்கு!.........
அந்தண சிரேஷ்டர்களுக்கு ஓர் அன்பு மடல்
அந்தண சிரேஷ்டர்கள் அத்தனை பேருக்கும் முதலில் அன்பு வணக்கம். சில வருடங்களுக்கு முன்பும் உங்களுக்குக் கடிதம் எழுதிய ஞாபகம்.கடிதம் எழுதியதன் முடிபு எம்மீதான கோபமாகவே இருந்தது. பரவாயில்லை. சரியைச் சரியெனவும், பிழையைப் பிழையயனவும் கூறிவிடுவது பாவத்திலிருந்து நாம் விடுபடுவதற்கான வழியாகும்.
எனவே சிலவற்றைக் கூறித்தான் ஆக வேண்டும். நேற்று முன்தினம் கீரிமலைக்குச் சென்றோம் ஆடி அமாவாசை. தந்தையர்க்கும் அவர்தம் முந்தையர்க்கும் பிதிர்க்கடன் செய்யும் நாள். ஏகப்பட்டவர்கள் பிதிர்க்கடன் செய்யவந்திருந்தார்கள். கீரிமலை உயர்பாதுகாப்பு வலயமாக இருந்த போதிலும், அந்த புண்ணிய சமுத்திரத்தில் நீராடி பிதிர்க்கடன் தீர்க்க வேண்டும் என்ற பேரவா அவர்களிடமிருந்ததை காண முடிந்தது.
அந்தண சிரேஷ்டர்கள் அத்தனை பேருக்கும் முதலில் அன்பு வணக்கம். சில வருடங்களுக்கு முன்பும் உங்களுக்குக் கடிதம் எழுதிய ஞாபகம்.கடிதம் எழுதியதன் முடிபு எம்மீதான கோபமாகவே இருந்தது. பரவாயில்லை. சரியைச் சரியெனவும், பிழையைப் பிழையயனவும் கூறிவிடுவது பாவத்திலிருந்து நாம் விடுபடுவதற்கான வழியாகும்.
எனவே சிலவற்றைக் கூறித்தான் ஆக வேண்டும். நேற்று முன்தினம் கீரிமலைக்குச் சென்றோம் ஆடி அமாவாசை. தந்தையர்க்கும் அவர்தம் முந்தையர்க்கும் பிதிர்க்கடன் செய்யும் நாள். ஏகப்பட்டவர்கள் பிதிர்க்கடன் செய்யவந்திருந்தார்கள். கீரிமலை உயர்பாதுகாப்பு வலயமாக இருந்த போதிலும், அந்த புண்ணிய சமுத்திரத்தில் நீராடி பிதிர்க்கடன் தீர்க்க வேண்டும் என்ற பேரவா அவர்களிடமிருந்ததை காண முடிந்தது.
கொலை முயற்சியின்...........
திருகோணமலையில் சமாதானமும் சகச நிலையும் வந்துவிட்டது என்று நினைத்து சுவிஸில் வசித்து வந்த கந்தையா சிவபாலன் குடும்பத்தினர் திருகோணமலைக்கு சென்றனர். ஆனால் அங்கே அவரை குறிவைத்து யுத்தம் நடந்த காலத்தில் நடப்பதைப் போல் தலைக்கவசம்(Helmet) அணிந்து முகத்தை மறைத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் வந்தோரால் 02.08.2010 மாலை
கழுத்தறுத்து கொலை செய்ய முயற்சி செய்துள்ளார்கள். அவர் தெய்வாதீனமாக கழுத்தில் வெட்டுக்காயத்துடன் மயிரிழையில் உயிர்தப்பியுள்ளார்.
மேற்படி இவர் கடந்த தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பாக போட்டியிட்ட கந்தையா - ஆனந்தராஜா என்பவரின் சகோதரன் எனும் காரணத்தினாலும் ,இவ் கொலை முயற்சி நடந்தேற முயன்று இருக்கலாம் என இவ்வூர் மக்கள் கருத்து தெரிவித்தனர்..
இளம் யுவதி மயக்கமடைந்த நிலையில் மீட்பு...!
துன்னாலைக் குடவத்தைப் பகுதியில் இளம் யுவதி ஒருவர் மயக்கமடைந்த நிலை யில் மீட்கப்பட்டு யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட் டுள்ளார்.இச் சம்பவம் நேற்றுக் காலை இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாகத் தெரிய வருவதாவது,
துன்னாலை குடவத்தை பல நோக்குக் கூட்டுறவுச் சங்கத்திற்கு அருகில் நேற்று அதி காலை 2.30 மணியளவில்
துன்னாலை குடவத்தை பல நோக்குக் கூட்டுறவுச் சங்கத்திற்கு அருகில் நேற்று அதி காலை 2.30 மணியளவில்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)















