விடுதலைப்புலிகள் அமைப்பினைப் பொறுத்தவரையில் அவர்கள் மிகவும் வல்லமை பொருந்தியவர்களாகவே இருந்தனர்.விடுதலைப்புலிகள் இராணுவத்தினருக்கு சமமான பலத்தினை கொண்டிருந்தனர்.அத்துடன் இராணுவத்தினரால் பயன்படுத்தப்பட்ட சகல ஆயுதங்களும் யுத்தத்தின் போது விடுதலைப் புலிகளாலும் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
வியாழன், 19 ஆகஸ்ட், 2010
படையினரின் சோதனை நடவடிக்கைகள்
கொக்குவில் மற்றும் பூநாறிமரத்தடிப் பகுதிகளில் படையினரின் சோதனை நடவடிக்கைகள் காலையில் இருந்து இரவுவரை தீவிரமாக்கப்பட்டிருந்தன. கொக்குவில், பிரம்படியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற அசம்பாவித சம்பவத்தை அடுத்தே இந்த நடவடிக் கையில் படையினரும், பொலிஸாரும் ஈடுபட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டது.
புதன், 18 ஆகஸ்ட், 2010
விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் ஆபத்தானவர்கள்.........
கே.பியை நம்புகிறேன் ஆனால் புலிகளால் மூளைச் சலவை செய்யப்பட்டவரை நம்பத்தயாரில்லை..காடுகளில் தொடர்ந்து இராணுவம் நிறுத்தி வைக்கப்படும். இலங்கை அரசிடம் சரணடையாத, அடையாளம் காணப்படாத விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் ஆபத்தானவர்கள் என்று தாம் கருதுவதாக இலங்கையின் பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்திருக்கிறார்
மேஜர் மாதவன்
நமது காலம் போரில் மலர்ந்தது. போரின் பாடலை நாங்கள் பாடினோம். அதை மாதவனும் பாடினான். போரின் நாட்களில் நாங்கள் தீயென இருந்தோம். அதில் மாதவனும் கனன்றான். மாதவன் மிக இளைய வயதில் தேசப்பற்றோடும் விடுதலைக் கனவோடும் போராட்டத்தில் இணைந்தவன். தன்னுடைய பயணம் தாயக விடுதலையில்தான் என ஆழமாக நம்பியவன். எல்லோரையும் வியப்பூட்டும்படியாக மாதவனுடைய செயற்பாடுகள் இருந்தன. அன்பில் விளைந்த மனம் இவனுடையது.
மண்டியிட்டு யாசகம் கேட்கின்றேன்.........
ஓட்டிப்போன வயிற்றோடும் -குழி
விழ்ந்த கன்னத்தோடும் -பசி
மயக்கதோடும் -நான்
கேட்கும் யாசகம் எனக்கில்லை...என் இனத்தின் சந்ததிக்கு -வன்னிக்குள்
வெட்டவெளியில் சுட்டெரிக்கும் வெயிலும்
கொட்டும் மழையிலும் தவிக்கும்-என்
இனத்தின் மீட்சிக்காய் நான்.....மண்டியிட்டு யாசகம் கேட்கின்றேன்
உங்களிடம் அவர்களை -நீங்கள்
தூக்கி சுமக்கவேண்டாம் ஒரு கைகொடுங்கள்
மீண்டும் இமயமாய் நிமிர்ந்துகொள்வார்கள்....!!
விழ்ந்த கன்னத்தோடும் -பசி
மயக்கதோடும் -நான்
கேட்கும் யாசகம் எனக்கில்லை...என் இனத்தின் சந்ததிக்கு -வன்னிக்குள்
வெட்டவெளியில் சுட்டெரிக்கும் வெயிலும்
கொட்டும் மழையிலும் தவிக்கும்-என்
இனத்தின் மீட்சிக்காய் நான்.....மண்டியிட்டு யாசகம் கேட்கின்றேன்
உங்களிடம் அவர்களை -நீங்கள்
தூக்கி சுமக்கவேண்டாம் ஒரு கைகொடுங்கள்
மீண்டும் இமயமாய் நிமிர்ந்துகொள்வார்கள்....!!
தென்னிலங்கை வியாபாரிகளின் தகாத செயற்பாட்டால் வாள்வெட்டு !.
தென்னிலங்கையில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு வந்திருந்த தளபாட வியாபாரிகள் மூவர். வீதியால் சென்று கொண்டிருந்த மாணவியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதன் விளைவாக மோட்டார் சைக்கிளில் வந்த சுமார் 10 பேர் கொண்ட மர்ம நபர்கள் கொக்குவில் பகுதியில் துணிகரத் தாக்குதல் ஒன்றை நடத்தி விட்டு மாயமாக மறைந்துள்ளார்கள்.
இராணுவத்தின் தொண்டர் படையணியில் கே.பி ?.
விடுதலைப்புலிகளின் சர்வதேச பொறுப்பாளராக செயற்பட்டு வந்த கே.பி என்ற குமரன் பத்மநாதனை இராணுவத்தின் தொண்டர் படையணியில் இணைந்துக்கொள்வதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக "சதிமெத லங்கா" பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
முப்படைகளின் தளபதியான ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் நிர்வாகத்துறையுடன் சம்பந்தப்பட்ட கௌரவ பதவியை கே.பிக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
முப்படைகளின் தளபதியான ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் நிர்வாகத்துறையுடன் சம்பந்தப்பட்ட கௌரவ பதவியை கே.பிக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
யாழில் மீண்டும் படையினரின் சோதனைக் கெடுபிடிகள்.
யாழ்ப்பாணத்தில் வழமைக்கு மாறாக படையினர் கோப்பாய், அச்சுவேலி, மிருசுவில், நாவற்குழி பகுதிகளில் திடீர் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
இவ் வீதிகள் ஊடாக போக்குவரத்தில் ஈடுபட்ட அனைத்து வாகனங்களும் வழிமறிக்கப்பட்டு தீவிர சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதுடன் இளைஞர்கள் துருவித் துருவி விசாரிக்கப்பட்டனர்.
இவ் வீதிகள் ஊடாக போக்குவரத்தில் ஈடுபட்ட அனைத்து வாகனங்களும் வழிமறிக்கப்பட்டு தீவிர சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதுடன் இளைஞர்கள் துருவித் துருவி விசாரிக்கப்பட்டனர்.
வன்னி பெண்கள் மீதான.............
பல உயிர்களையும் , சொத்துகளையும் இழந்து தமது அன்றாட வாழ்வாதரத்திற்க்கு கையேந்தும் பெண்களை இனம்கண்டு கவர்ச்சிகரமான சலுகைகளையும், சம்பள கொடுப்பனவுகளின் ஊக்கதொகைகள் தருவதாக கூறியே அண்மையில் கிளிநொச்சியில் பகுதியில் பல இளம் யுவதிகளை தேர்வு செய்து கொண்டது.
திங்கள், 16 ஆகஸ்ட், 2010
லெப்.கேணல்.வீரமணி -சுப்பரமணியம் வடிவேல்,வவுனியா
சிங்கள இராணுவத்தின் போர்முனைத் தளங்களில் அதிகம் உயரமில்லாத மிகமிக மெலிந்த ஓரல் முகமும், மினுங்கும் கண்ணும் கொண்ட சிற்றுருவம் ஒன்று நடுநிசியில் உலாவித் திரியும். கழுத்தில் ஒரு நீள வெள்ளைப் பல்லிருக்கும். ஒருமுறை கண்டு விட்டு மறுகணம் பார்த்தால் மறைந்து விடும். சுட்டால் சூடு பிடிக்காது. வருவது போல் தெரிந்தால் பின் எப்படிப் போனதென்று தெரியாது.
எ.வி.சன் சீ கப்பலில் ஆயுதங்கள் எதுவும் இல்லை; அவர்களை திருப்பி அனுப்ப கூடாது...
எம்.வி சன் சீ கப்பலில் பயணித்தவர்களுக்கு அனைத்து வசதிகளும் கப்பலில் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டிருந்ததாக கனேடிய பாதுகாப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
கப்பலில் உறங்குவதற்கான அறைகள், சுத்தமான உணவு வகைகள், சுத்திகரிக்கப்பட்ட நீர், உண்பதற்காக மீன்வகைகள் என அனைத்து வசதிகளும்
கப்பலில் உறங்குவதற்கான அறைகள், சுத்தமான உணவு வகைகள், சுத்திகரிக்கப்பட்ட நீர், உண்பதற்காக மீன்வகைகள் என அனைத்து வசதிகளும்
இளம் பெண்களை கண்டிக்கு வேலைக்கென அழைத்து செல்லமுற்பட்டமைதடுக்கப்பட்டது.!
கவர்ச்சியான சம்பளங்களுடன் பல சலுகைகளும் வழங்கப்படும் என கிளி/யில் இருந்து 40 இளம் O/L, படித்த இளம் பெண்களை கண்டிக்கு கூட்டி செல்ல முற்படும் வேளை தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
வல்வெட்டித்துறையில் இந்திய ராணுவம் நடத்திய படுகொலைகள்!!!!......
1989 ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் வல்வெட்டித்துறையில் இந்திய ராணுவம் நடத்திய படுகொலைகள் வரலாறு காணாத துயர நிகழ்ச்சி ஆகும். பிரபாகரன் அவர்களையும் மற்றும் பல புலிகளையும் பெற்றெடுத்த ஊர் என்பதனாலும், இவ்வூர் மக்கள் அனைவருமே
சனி, 14 ஆகஸ்ட், 2010
ஓடுங்கோ!... ஓடுங்கோ!... நில்லாதிங்கோ!... ஓடுங்கோ!...
கனவுபற்றிய ஆய்வுகள் நிறையவே உண்டு. உளவியலாளரான சிக்மன் புரொட்டின் கனவு பற்றிய கருத்துக்கள் மருத்துவ விஞ்ஞான ஆய்விற்குப் பேருதவி ஆயிற்று. எனினும் சில வகையான கனவுகளுக்கு காரணகாரியம் எதுவும் தெரியவில்லை.இப்படித்தான்.நேற்றிரவு ஆழ்ந்த தூக்கத்தில் ஒரு கனவு.கறுத்தக் கண்ணாடியும், வெள்ளைச்சாரம் நஷனலும் அணிந்த ஒருவர் பலாலி விமான நிலையத்தில் வந்திறங்கினார். அவர் விமானத்தால் இறங்கியதுதான் தாமதம் பொலிஸாரும், இராணுவத்தினரும் அங்கும் இங்கும் ஓடித்திரிந்தனர். இதை பார்த்தபோது வந்தவர் உயர்ந்த பதவியில் இருப்பவர் என உணர்ந்து கொண்டேன். ஆனாலும் ஒரு அதிசயம். அவருடைய கையில் கயிறு இருந்தது.
செங்குருதியால் செந்நிறமான செஞ்சோலை
ஆகஸ்ட் 14 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 7 மணியளவில் கண்மூடித்தனமான வான் தாக்குதல்களுக்கு இலக்காகியது. பேரினவாத அரச படைகளின் நான்கு அதிவேக யுத்த விமானங்கள் மிலேச்சத்தனமாக வீசிய 16 குண்டுகளும் 61 பாடசாலை மாணவிகளின் உயிர்களை பறித்ததுடன் 155 இற்கும் அதிகமான மாணவிகள் படுகாயமடைந்துள்ளனர். கொல்லப்பட்டவர்களில் சிலரது உடல்கள் சிதறியபடி காணப்பட்டன. காயமடைந்தவர்களில் 25 மாணவிகளது நிலைமை கவலைக்கிடமாகவுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்தவர்களில் பலர் அவயவங்களை இழந்திருப்பதாகவும் சிலர் கைகள், கால்கள் இரண்டையும் இழந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
யாழில் ஆயுதங்கள் மீட்பாம்.......
யாழ் குடா பகுதியான கொக்குவில் மற்றும் சங்கத்தானை பகுதியில்
இராணுவத்தின் 52 ம் படையணி படையினர் நடத்திய தேடுதலின் போது
47 கைக்குண்டுகள், c4 கண்ணிவெடிகள் , 22 ற்கு அதிகமான புதிய வகையான சீனா நாட்டில் தயாரிக்கபட்ட கைத்துப்பாக்கிகள் , மோட்டர் குண்டுகள் , தோட்டாக்கள் என்பன கைப்பேற்றபட்டுள்ளதாக இராணுவம் தனது நாளாந்த செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
இராணுவத்தின் 52 ம் படையணி படையினர் நடத்திய தேடுதலின் போது
47 கைக்குண்டுகள், c4 கண்ணிவெடிகள் , 22 ற்கு அதிகமான புதிய வகையான சீனா நாட்டில் தயாரிக்கபட்ட கைத்துப்பாக்கிகள் , மோட்டர் குண்டுகள் , தோட்டாக்கள் என்பன கைப்பேற்றபட்டுள்ளதாக இராணுவம் தனது நாளாந்த செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)














