வெள்ளி, 20 ஆகஸ்ட், 2010

எல்லாம் போயிற்று ,எல்லார் உயிரும் என்னைப் போல
இன்னும் வாழ்வதில் எத்தனை பிரியமுடன்வாழாது போயினர்.....?
வரலாறு எழுதிய கதைகளில் அவர்கள்பெயரிட்ட பிள்ளைகளும்
துணைவந்த துணைவிகளும்தனித்துப் போயினர்......
ஒரு நேர உணவிற்கும்ஒற்றைப் படுக்கை நிழலுக்கும்
எவரையெல்லாமோ இறைஞ்சி....எஞ்சிக் கிடப்பது கண்ணீர் மட்டுமேயான
இயலாத் துயரோடு இன்னும் நம்புகிறார்கள்....என்னை, உன்னை   ,
 எம் எல்லோரையும்....

தமிழ் இளைஞர்கள் கைது.

கண்டி மாவட்டம், அலவத்துகொட பிரதேசத்தில் வவுனியாவை சேர்ந்த நான்கு தமிழ் இளைஞர்களை பொலிஸார் நேற்று கைதுசெய்துள்ளனர் .கண்டியில் நடைபெற்று வரும் பௌத்தர்களின் எசல பெரஹராவை பார்ப்பதற்காக இவர்கள் வந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உரிய அடையாளப்படுத்தல் ஆவணங்களை கொண்டிருக்காமை காரணமாகவே இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மட்டக்கிளப்பில் யுவதியொருவர் காணாமல் போயுள்ளார்..

பொன்னம்பலம் - சாந்தகுமாரி வயது 28 கரையாகண் தீவு , கன்னங்குடா மட்டக்கிளப்பு. எனும் முகவரியை கொண்ட யுவதி காணமல்போயுள்ளார்.

சம்பவம் பற்றி தெரியவருவதாவது வன்னி இடப்பெயர்வின் மூலம் இடம்பெயர்ந்து அண்மையிலேயே தன் தாயாருடன் சொந்த இடத்தில் மீள்குடியேற்றபட்ட போதிலும் இராணுவ புலனாய்வாளர்களினதும் ,

புலிகளுக்கு வாகனங்கள் விற்பனை நால்வர் கைது

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு வாகனங்களை விற்பனை செய்த நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.வாடகை அடிப்படையில் பெற்றுக்கொள்ளப்பட்ட பெறுமதி வாய்ந்த வாகனங்கள், போலி ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு புலிகளுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு போலி ஆவணங்களைத் தயாரித்து விற்பனை செய்யப்பட்ட ஐந்து வாகனங்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.


வியாழன், 19 ஆகஸ்ட், 2010

இந்திய பட பாட்சா பாணியில் தமிழருக்கு எச்சரிக்கை விடும்......பிள்ளையான்

முஸ்லிம் மக்களுக்கான மாதிரிக் கிராமம் அமைக்கப்படுவதை யாராலும் தடுக்க முடியாது. இதையும் மீறி தடுக்கும் முயற்சியில் யாராவது தமிழர்கள் ஈடுபட்டால் அதை எதிர்கொள்வதற்கு நான் ஒரு முதலமைச்சராக இன்றி பழைய பிள்ளையானாக மாற வேண்டி வரும். எச்சரிக்கிறார் - சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்)

நாங்கள் மெலிந்து விட்டோம்
நிலத்திற்காய் குரல்கள் அழுகின்றன
நாங்கள் மீண்டும் மீண்டும் அகதிகளாக்கப்படுகிறோம்
இந்த நிலம் ஆக்கிரமிப்பாளர்களுக்கு மிகவும் பிடித்திருக்கிறது
நிலத்திற்கான வழிகள் தடுக்கப்பட்டிருக்கின்றன.
பிறந்த நிலத்தில் சிறைவைக்கபபட்டவர்களாயிருக்க,
எங்கள் காணிகள் மிக சமீபமாயிருக்கின்றன,
மிதிவெடிகளை தூக்கி எறியும்,
குழந்தைகள் தயாராக முன்னால் நிற்கின்றனர்.
வீட்டுக்குச் செல்லத் துடிக்கும் இந்தக் குழந்தைகள்
குண்டுகளுக்கோ துப்பாக்கிச் சூடுகளுக்கோ அஞ்சாதிருக்கின்றனர்.

கேணல் ராயு

மனித வாழ்வில் ஒவ்வொருவருடைய வாழ்வனுபவமும் தனித்துவமானது. இவ வாழ்வனுபவ நிலையில் எல்லா மனிதர்களும் தனித்துவமானவர்கள். ஆனால் இத்தனித்துவத்தை மனித இருப்பு நிலையின் ஆழத்துக்குச்சென்று அதனைத் தரிசித்து அதை வெளிக்கொணர்பவர்கள் ஒருசிலரே. ஈழ விடுதலைப்போராட்டப் பாதையில் எத்தனையோ போராளிகள் தன்னலமற்ற ஆழமான தேசப்பற்றும் விடுதலை வேட்கையும் கொண்ட தனித்துவ மனிதர்களாக வாழ்ந்துள்ளனர்.

விடுதலைப்புலிகள் மிகவும் வல்லமை பொருந்தியவர்கள்......கோதாபய ராஜபக்க்ஷ

விடுதலைப்புலிகள் அமைப்பினைப் பொறுத்தவரையில் அவர்கள் மிகவும் வல்லமை பொருந்தியவர்களாகவே இருந்தனர்.விடுதலைப்புலிகள் இராணுவத்தினருக்கு சமமான பலத்தினை கொண்டிருந்தனர்.அத்துடன் இராணுவத்தினரால் பயன்படுத்தப்பட்ட சகல ஆயுதங்களும் யுத்தத்தின் போது விடுதலைப் புலிகளாலும் பயன்படுத்தப்பட்டுள்ளது.


படையினரின் சோதனை நடவடிக்கைகள்

கொக்குவில் மற்றும் பூநாறிமரத்தடிப் பகுதிகளில் படையினரின் சோதனை நடவடிக்கைகள் காலையில் இருந்து இரவுவரை தீவிரமாக்கப்பட்டிருந்தன. கொக்குவில், பிரம்படியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற அசம்பாவித சம்பவத்தை அடுத்தே இந்த நடவடிக் கையில் படையினரும், பொலிஸாரும் ஈடுபட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டது.

புதன், 18 ஆகஸ்ட், 2010

விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் ஆபத்தானவர்கள்.........

கே.பியை நம்புகிறேன் ஆனால் புலிகளால் மூளைச் சலவை செய்யப்பட்டவரை நம்பத்தயாரில்லை..காடுகளில் தொடர்ந்து இராணுவம் நிறுத்தி வைக்கப்படும். இலங்கை அரசிடம் சரணடையாத, அடையாளம் காணப்படாத விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் ஆபத்தானவர்கள் என்று தாம் கருதுவதாக இலங்கையின் பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்திருக்கிறார்

மேஜர் மாதவன்

நமது காலம் போரில் மலர்ந்தது. போரின் பாடலை நாங்கள் பாடினோம். அதை மாதவனும் பாடினான். போரின் நாட்களில் நாங்கள் தீயென இருந்தோம். அதில் மாதவனும் கனன்றான். மாதவன் மிக இளைய வயதில் தேசப்பற்றோடும் விடுதலைக் கனவோடும் போராட்டத்தில் இணைந்தவன். தன்னுடைய பயணம் தாயக விடுதலையில்தான் என ஆழமாக நம்பியவன்.  எல்லோரையும் வியப்பூட்டும்படியாக மாதவனுடைய செயற்பாடுகள் இருந்தன. அன்பில் விளைந்த மனம் இவனுடையது.

மண்டியிட்டு யாசகம் கேட்கின்றேன்.........

ஓட்டிப்போன வயிற்றோடும் -குழி
விழ்ந்த கன்னத்தோடும் -பசி
மயக்கதோடும் -நான்
கேட்கும் யாசகம் எனக்கில்லை...என் இனத்தின் சந்ததிக்கு -வன்னிக்குள்
வெட்டவெளியில் சுட்டெரிக்கும் வெயிலும்
கொட்டும் மழையிலும் தவிக்கும்-என்
இனத்தின் மீட்சிக்காய் நான்.....மண்டியிட்டு யாசகம் கேட்கின்றேன்
உங்களிடம் அவர்களை -நீங்கள்
தூக்கி சுமக்கவேண்டாம் ஒரு கைகொடுங்கள்
மீண்டும் இமயமாய் நிமிர்ந்துகொள்வார்கள்....!!

தென்னிலங்கை வியாபாரிகளின் தகாத செயற்பாட்டால் வாள்வெட்டு !.

தென்னிலங்கையில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு வந்திருந்த தளபாட வியாபாரிகள் மூவர். வீதியால் சென்று கொண்டிருந்த மாணவியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதன் விளைவாக மோட்டார் சைக்கிளில் வந்த சுமார் 10 பேர் கொண்ட மர்ம நபர்கள் கொக்குவில் பகுதியில் துணிகரத் தாக்குதல் ஒன்றை நடத்தி விட்டு மாயமாக மறைந்துள்ளார்கள்.

இராணுவத்தின் தொண்டர் படையணியில் கே.பி ?.

விடுதலைப்புலிகளின் சர்வதேச பொறுப்பாளராக செயற்பட்டு வந்த கே.பி என்ற குமரன் பத்மநாதனை இராணுவத்தின் தொண்டர் படையணியில் இணைந்துக்கொள்வதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக "சதிமெத லங்கா" பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
முப்படைகளின் தளபதியான ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் நிர்வாகத்துறையுடன் சம்பந்தப்பட்ட கௌரவ பதவியை கே.பிக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

யாழில் மீண்டும் படையினரின் சோதனைக் கெடுபிடிகள்.

யாழ்ப்பாணத்தில் வழமைக்கு மாறாக படையினர்  கோப்பாய், அச்சுவேலி, மிருசுவில், நாவற்குழி பகுதிகளில் திடீர் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

இவ் வீதிகள் ஊடாக போக்குவரத்தில் ஈடுபட்ட அனைத்து வாகனங்களும் வழிமறிக்கப்பட்டு தீவிர சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதுடன் இளைஞர்கள் துருவித் துருவி விசாரிக்கப்பட்டனர்.

வன்னி பெண்கள் மீதான.............


பல உயிர்களையும் , சொத்துகளையும் இழந்து தமது அன்றாட வாழ்வாதரத்திற்க்கு கையேந்தும் பெண்களை இனம்கண்டு கவர்ச்சிகரமான சலுகைகளையும்,     சம்பள கொடுப்பனவுகளின் ஊக்கதொகைகள் தருவதாக கூறியே அண்மையில் கிளிநொச்சியில் பகுதியில் பல இளம் யுவதிகளை தேர்வு செய்து கொண்டது.