முள்ளிவாய்க்கால் முடித்துவிடவில்லை தமிழனின் தலை எழுத்தை, இன்று வரைக்கும் புகைந்து கொண்டேயிருக்கும் சந்தேகங்களில் அது நீறு பூத்த நெருப்பாகவே இருக்கிறது.
அடிமைத்தனம் உடைக்க முப்பது வருடங்களுக்கு மேல் நடந்த போராட்டம் மௌனித்து விட்டதாக அறிவிக்கப்பட்ட நாள் முதலாய் இன்னும்
இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
வியாழன், 2 செப்டம்பர், 2010
நாங்கள் அடிமை இல்லை? ஆண்ட பூமி இது? பூர்வகுடி நாங்கள்? இணைந்து வாழ்வது என்பது சாத்தியமே இல்லாதது? தனி ஈழம் ஒன்று மட்டுமே சாத்யமானது என்று ஒவ்வொரு பூவும் கோர்த்து உருவான மாலை இன்று குரங்கு கையில் சிக்கிய பூமாலை போல் சிதைந்தாக காட்சியளிக்கிறது!
கோர்த்து வைத்திருந்த கைகள் சில சோரம் போய்விட்டது. சில புதிராக இருக்கிறது. சில வினாக்குறியாய் இருக்கிறது,............உலகில் இன்று வரையிலும் நாம் எத்தனையோ விடுதலைப் போராட்டங்களையும், குழுக்களையும் நாம் பார்த்து கேட்டு படித்து வந்தாலும் விடுதலைப்புலிகளின் இயக்கத்தின் வளர்ச்சி என்பது முறைப்படியான நாடுகளைக்கூட திடுக்கிட வைத்தன என்றால் அது முற்றிலும் உண்மை.
புதன், 1 செப்டம்பர், 2010
இராணுவ நிர்வாகத்தின் கீழ் வன்னி.
விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த வன்னியைப் படையினர் கைப்பற்றிய பின்னர், அங்கு பல மாற்றங்களைச் செய்வதில்; அரசாங்கமும் படைத்தரப்பும் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. விடுதலைப் புலகளின் ; எச்சங்கள், அடையாளங்கள் என்று எதுவுமே இல்லாத வகையில் துடைத்தழிப்பு நடவடிக்கைகள் முதற்கட்டமாக மேற்கொள்ளப்பட்டன.
கண்டியிலே கோயில் கொண்ட புத்ததேவா உன்னை கைதொழுவார் கைகளிலே எங்கள் சாவா ?
பிக்குகளின் உடம்பினிலே மஞ்சள் துண்டா உன்னை பின்பற்றுவார் கைகளிலே வெடிகுண்டா ?
ரத்தம் மரணம் ஏன் சாமி உன்கோயில் வாசலிலே தீபமெரித்தார் எங்கள் ஊரில் வந்து பாரவரே வீட்டை எரித்தார்
உன்மலர் கால்மீதில் பூச்செண்டுகள் போட்டார் நாங்கள் உயிர்த்துடிக்க எங்கள் மண்ணில் குண்டுகள் போட்டார்
பிக்குகளின் உடம்பினிலே மஞ்சள் துண்டா உன்னை பின்பற்றுவார் கைகளிலே வெடிகுண்டா ?
ரத்தம் மரணம் ஏன் சாமி உன்கோயில் வாசலிலே தீபமெரித்தார் எங்கள் ஊரில் வந்து பாரவரே வீட்டை எரித்தார்
உன்மலர் கால்மீதில் பூச்செண்டுகள் போட்டார் நாங்கள் உயிர்த்துடிக்க எங்கள் மண்ணில் குண்டுகள் போட்டார்
கப்டன் மயூரன்
1988 காலப்பகுதிகளில் காடுகளில் வாழும் தமிழ் போராளிகளை அழிக்கும் நோக்கில் ஈழப்பகுதியில் காலடி வைத்திருந்த இந்திய இராணுவத்தினரின் தந்திரமான காடு வளைப்புத் தாக்குதல்களில் பெரும்பாலும் மயூரன் பங்குபற்றி இருந்தான். ஒரு தடவை இராணுவத்தினரின் முரட்டுத்தனமான தாக்குதல்களிலிருந்து மீளும் பொருட்டு, போராளிகள் பின்வாங்கும் படி அறிவுறுத்தப்பட்ட பின்பும், மயூரன் தனியாக நின்று 70க்கு மேற்பட்ட இந்திய இராணுவத்தினரை அழித்தும் காயப்படுத்தியும் இருப்பிடம் திரும்பிய கதைகள் சக போராளிகளால் சிலாகித்துப் பேசப்பட்ட சேதிகளாக ஒலித்துக் கொண்டிருந்தன.
செவ்வாய், 31 ஆகஸ்ட், 2010
வாருங்கள் பழகலாம் ?..........
ஐரோப்பிய ஒன்றியத்தின் வரிசலுகையினைப் பெறுதல், அனைத்து நாடுகளில் இருந்து வரும் உல்லாசபயணிகளின் வரவினை கூட்டுதல், வெளி நாட்டு முதலீடுகளை அதிகரித்தல் என்பனவே அண்மையில் வெளி நாட்டு அமைச்சருக்கு கொடுக்கப்பட்ட இலக்கு. இதற்கேற்ப காய்களை நகர்த்துமாறு அனைத்து நாட்டு தூதரகங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கில் சிங்களக் குடியேற்றங்கள்
இனப்பிரச்சினை தீவிரம் பெறுவதற்கான தோற்றுவாய்களில் ஒன்றாக இருந்த சிங்களக் குடியேற்றங்கள் மறுபடியும் தமிழ்மக்களுக்கு அச்சத்தைக் கொடுக்க ஆரம்பித்து விட்டன. முன்னர் கிழக்கில் தான் சிங்களக் குடியேற்றங்கள் பற்றிய அச்சம் ஏற்பட்டிருந்தது. கிழக்கைத் தமிர்களிடம் இருந்து பறிக்கும் முயற்சிகள் நடப்பதாக தமிழர்கள் முன்னர் பயந்தார்கள். அதுபோலவே நடந்தும் விட்டது. இப்போது வடக்கின் மீது அதேபோன்று குறி வைக்கப்பட்டிருக்கிறது.
நிருபமா ராவின் நெருங்கிய நண்பனாம் !!!!! ......டக்ளஸ்
இலங்கை சென்றுள்ள இந்திய வெளியுறவுச் செயலர் நிருபமாராவிடம், இலங்கைத் தமிழ் மக்களுக்குச் செய்திருக்க வேண்டிய பல விடயங்களை இந்திய அரசு செய்யத் தவறிவிட்டது என யாழ்ப்பாணத்தில் அவரை சந்தித்த தமிழ் மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஏன் நாம் கொல்லப்பட்டோம் யாரால் என்று.....
பிஞ்சென்றும் பூவென்றும் பிரித்து
அவ் சிறு வண்டு கூட பார்த்து தான் தேன்பருகும்.
இங்கு சிங்கள வெறியனுக்கு தமிழ் பிஞ்சின்
இறப்பெனில் சந்தோசம். செய்த சிப்பாய்க்கு பதவி
உயர்வுகள் தானாக கிட்டும்.
பெற்றதாய் முன்னே தந்தையும் தமையனும் கூடவே
இறந்து கிடப்பது தான் விதியா????
இதை பார்த்து வெறும் காகித துண்டின் அறிக்கைகள்
எழுதிடத்தான் ஐ.நாவே நீயா??
சர்வவல்லமை கொண்டதாய் சொல்லும்
சர்வ தேசத்தின் பணியா??
காந்திய நாடே நீகொடுத்த குண்டுகள் இங்கு
இவரை துளைத்துள்ளது.
அந்த பிஞ்கின் உயிரையும் கூட குடித்துள்ளது.
இதுதான் காந்தி உனக்கு சொல்லி தந்ததா??
இல்லை புத்தரின் போதனையும் இதுதானா??
வாழப்பிறந்தவரா நாங்கள் இல்லை
பலராலும் வஞ்சிக்க பிறந்தவரா??
சொல்லி விட்டு கொல்லுங்கள் சாகும் போது தன்னும்
தெரிந்து கொண்டு இறப்போம்
ஏன் நாம் கொல்லப்பட்டோம் யாரால் என்று
கப்டன் ஈழமாறன் (இராமையா தினேஷ்)
"டேய் மச்சான் என்னைக் கொண்டுபோய் வீடுறா... என்ர பெடியள் என்ன மாதிரியோ... விடடா மச்சான்..." வைத்திய சாலையின் கட்டிலில் இருந்தபடி, காலில் குத்திய திருக்கை முள்ளைப் பற்றிப் பெரிதும் கவலைப் படாதவனாய், தன் அருகில் இருந்த போராளியிடம் கூறிக் கொண்டிருந்தான் "ஈழமாறன்" அவனின் நச்சரிப்பைத் தாங்காது வைத்தியரிடம் அவர்களுக்கு, அவரின் வார்த்தைகள் ஏமாற்றத்தையே கொடுக்கும். "விசம் உடனே இறங்காது தம்பி. இதால ஆக்கள் செத்துப்போயிருக்கினம். ஒரு இரண்டு நாள் பொறும்! பிறகு போகலாம்." என்ப் புன்னகை முகத்தில் தவழவிட்டவாறு சொல்வதை, ஏமாற்றத்துடன் பார்ப்பான் அவன்.
திங்கள், 30 ஆகஸ்ட், 2010
பொன்னகருக்குள் நுழைந்த மக்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டனர்
பொன்னகர் மக்கள் குடியிருப்பதற்காக தங்கள் காணிகளுக்கு நுழைந்த பொழுது அவர்கள் தடுக்கப்பட்டு வெளியில் அனுப்பப்பட்ட சம்பவம் பெரும் பதற்றத்தை உண்டாக்கியது. கடந்த சில மாதங்களாக காணிகளுக்குச் செல்லவிடாமல் இந்த மக்கள் தடுக்கப்பட்டுள்ளனர். காணிகள் வடக்குமாகாணசபைக்கு சுவீகரிக்கப்படுகின்றன என்று கூறப்பட்டு தடுக்கப்பட்டுள்ள மக்கள் பொன்னகரிலும் கிளிநொச்சி மத்திய கல்லூரியிலும் தங்கியிருந்தனர்.
இந்திய இராணுவ உயர்மட்டக் குழுவினர் இலங்கைக்கு.....
இந்திய இராணுவத் தளபதி வி.கே.சிங் , அதேபோல இராணுவத்தின் பல்வேறு மட்டத்திலான தளபதிகளும் இலங்கைக்குவரவுள்ளதாக தகவல்கள் தெரிவித்தன.அதேவேளை இலங்கையிலிருந்தும் இராணுவ தளபதிகள் இந்தியா செல்லவுள்ளனராம். இரு நாடுகளுக்கிடையிலான பரஸ்பர பாதுகாப்பு ஒத்துழைப்பு கடலோரப்பாதுகாப்பு போன்றவை
தொடர்பாக இந்த பயணம் அமையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
தொடர்பாக இந்த பயணம் அமையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
"உயரிய சிந்தனை" இந்த தொழில் தருநர்களுக்கு எவ்வாறு வந்தது?
வடக்கில் உள்ள இளைஞர்,யுவதிகளின் வறுமை நிலை, வேலைவாய்ப்பின்மை போன்றவற்றைப் பயன்படுத்தி அவர்களுக்கு கைநிறைய சம்பளத்துடனும் இன்னும் பல சலுகைகளுடனும் தென்னிலங்கையிலுள்ள நிறுவனங்களில் வேலைவாய்ப்புகளைப் பெற்றுத்தருவதாகக் கூறி சட்டவிரோதமான முறையில் அந்த அப்பாவிகளைத் தென்னிலங்கைக்கு அழைத்துச் சென்று அவர்களின் எதிர்கால வாழ்க்கையை சீரழிக்கும் நடவடிக்கைகளில் சில போலி தொழில் தருநர்களும் தொழில் தரகர்களும் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகத் தற்போது பல்வேறு குற்றச்சாட்டுகளும் கிளம்பியுள்ளன
விடுதலைப் புலிகளின் ஆறு விமானங்கள் எரித்திரியாவில்.....
தனி இயந்திரங்களைக் கொண்டு இயங்கக் கூடிய ஆறு விமானங்களை புலிகள் எரித்தியாவில் பாதுகாப்பதாக சர்வதேச பயங்கர வாத ஒழிப்பு தொடர்பான நிபுணர் பேராசிரியர் சேனக ஜயசேகர தெரிவித்துள்ளார்.பேராசிரியர் சேனகஜயசேகர பயங்கரவாத ஒழிப்பு மற்றும் புலனாய்வுத் தொடர்பான சிட்னி பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக கடமையாற்றுகிறார். அவர் இதுதொடர்பில் மேலும் தெரிவித்ததாவது,
3 லட்சத்துக்கும் அதிக கண்ணிகள்
இன்னமும் 2ஆயிரம் சதுர கிலோ மீற்றர் பரப்பளவில் கண்ணிகள் வன்னிப் பகுதியில் அகற்றப்படவேண்டியுள்ளன. மேஜர் ஜெனரல் உதய வன்னியில் புதைக்கப்பட்ட கண்ணிவெடிகளில் அரைப் பங்கு மீட்கப்பட்டுவிட்டன. 2ஆயிரம் சதுர கிலோ மீற்றரில் புதைந்துள்ள 3 லட்சத்துக்கும் அதிக கண்ணிகள் இன்னும் அகற்றப்படாத நிலையில் வன்னியில் புதைக்கப்பட்ட கண்ணிவெடிகளில் அரைப் பங்கு மீட்கப்பட்டுவிட்டன. இதுவரை 1,800 சதுர கிலோ மீற்றர் பிரதேசத்தில் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ளன. புதைக்கப்பட்டு அடையாளம் காணமுடியாத நிலையில் உள்ள 3 லட்சத்து 500 கண்ணிவெடிகளை கண்டுபிடித்து அழிக்கப்படவேண்டியுள்ளன
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)














