தமிழீழ தேசத்தில் எங்கெல்லாம் ஆக்கிரமிப்பு இராணுவங்கள் நிலைகொண்டுள்ளதோ அங்கெல்லாம் அவரது சுடுகலனும் கனன்றிருக்கும். களமுனைகளில் தொடர்ச்சியாக ஓய்வு , ஒளிச்சலின்றி சுழன்றடித்த வீரன் அவர். "செய்வோம் அல்லது செத்து மடிவோம்" என்ற வசனத்தை அடிக்கடி சொல்பவர், அதனைச் செயலிலும் செய்து காட்டியவர். எந்த நேரமும் இயக்கத்தின் நலனையே சிந்தித்து செயலாற்றிய மண்ணின் மைந்தன் அவர். கிளிநொச்சிப் பிரதேசத்தில் எண்பதுகளின் நடுப்பகுதி தொடங்கி, தொண்ணுறுகளின் ஆரம்பம் வரைக்கும் சிறீலங்கா இராணுவத்திற்கு எதிரான அனைத்துத் தாக்குதல்களிலும் காத்திரமான பங்கை லெப். கேணல் கிறேசி வகித்துள்ளார்.
இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
சனி, 4 செப்டம்பர், 2010
வெள்ளி, 3 செப்டம்பர், 2010
முள்ளிக்குளத்தில் கடற்படையின் வடமேற்கு கடற்படை கட்டளைத் தலைமையகம்
புத்தளத்தில் உள்ள “தம்பபன்னி“, கற்பிட்டியில் உள்ள “விஜய“, முள்ளிக்குளத்தில் உள்ள “பரண“, சிலாவத்துறையில் உள்ள “தேரபுத்தா“ ஆகிய கடற்படைத் தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. புதிதாக நிறுவப்பட்டுள்ள வடமேல் கடற்படைக் கட்டளைத் தலைமையகத்தின் பாதுகாப்பின் கீழ் புத்தளம் தொடக்கம் மன்னாரின் அரிப்பு வரையிலான கரையோரப் பிரதேசம் முழுவதும் கொண்டு வரப்பட்டுள்ளது
சந்திரிகா குமாரதுங்காவிற்க்கும் ஆப்பு.........
சந்திரிகா சிறிலங்காவினது அதிபராகவும், நாட்டினது நிதி அமைச்சராகவும் இருந்த காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட 'லுக்கோ மோட்டிவ்' உடன்பாடு, 'எமிறேற் ஏயார்பஸ்' உடன்பாடு மற்றும் 'இவான் இன்ரநாஷனல்' உடன்பாடு போன்றன தொடர்பான தகவல்களை மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் திரட்டி வருகிறது. குறிப்பிட்ட இந்த உடன்பாடுகள் சட்ட ரீதியாகவோ அன்றி முறையாகவோ இடம்பெறவில்லை என்றும் அவற்றுக்கு எதிராக விசாரணைகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்றும் ஆரம்பகட்ட விசாரணைகள் பரிந்துரைத்திருப்பதாக அந்தத் தகவல்கள் மேலும் கூறுகின்றன.
மீள்குடியேறியும் ...............
வவுனியா புனர்வாழ்வு தடுப்பு முகாமிலிருந்து விடுதலையான ஊனமுற்ற விடுதலைப் புலி சந்தேக நபர்களில் ஒரு சாரார் வாழ்வாதாரப் பிரச்சினைகளை எதிர்நோக்குவதாக தெரிவிக்கின்றனர்.கடந்த ஏப்ரில் மாதம் முதல் வாரத்தில் தாங்கள் விடுதலை செய்யப்பட்டு குடும்பங்களுடன் இணைக்கப்பட்ட போதிலும், வாழ்வாதாரம் மற்றும் தொழில் வாய்ப்புகள் தொடர்பில் தங்களுக்கு உறுதிவழங்கப்பட்ட உதவிகள் கிடைக்கவில்லை என மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது வசித்து வரும் இவர்களில் சிலர் கூறுகின்றார்கள்.
கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது
1974ஆம் ஆண்டு அன்றையப் பிரதமர் இந்திரா காந்திக்கும், அப்போது இலங்கையின் பிரதமராக இருந்த சிறிமாவோ பண்டாரநாயகவிற்கும் இடையே கையெழுத்திடப்பட்ட இந்த ஒப்பந்தம், கையெழுத்திடப்படும் வரை இரகசியமாகவே வைக்கப்பட்டிருந்தது. அது மட்டுமல்ல, இரு நாடுகளுக்கும் இடையிலான கடல் எல்லையை வரையறை செய்ய போடப்பட்ட இந்த ஒப்பந்தத்தின்படி, இந்தியாவிற்குச் சொந்தமான (தமிழ்நாட்டின் சேதுபது அரசாட்சியின் ஆளுமைக்கு உட்பட்டதாக இருந்த) கச்சத் தீவை, இரு நாடுகளுக்கும் இடையிலான தகராறுக்குட்பட்ட பகுதி என்றே (disputed island) கூறி, இலங்கைக்கு டெல்லி தாரை வார்த்தது.
புலத்தில் தமிழ்ப்பெண்கள்...........
இந்த 21ம் நூற்றாண்டிலும், தமக்குள்ளே ஊறிப் போயிருக்கும் பழைமைகளைக் களைந்தெறியத் தைரியமின்றி, தமக்கு முன்னே கட்டியெழுப்பியிருக்கும் கலாச்சார வேலிகளைத் தாண்டும் துணிவின்றி, மரபுத் தூண்களுக்குள் மறைந்து நின்று, வழமை என்ற கோட்பாட்டால் தமக்குத் தாமே விலங்கிட்டு எம்மில் சில பெண்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
1500 இராணுவத்தை கொன்றவன் அமைச்சர்,, முதலமைச்சர்,, ஆயுதம் கடத்தியவன் விருந்தாளி .ஆனால் நானோ கைதி.
வெலிக்கடைச் சிறைச்சாலையில் தொடர்ந்து ஆறு வருடங்களாக அடைத்து வைக்கப்பட்டிருக்கும் 50 வயதுடைய ஒரு தமிழ்க் கைதி சிங்கள நீதிபதியைப் பார்த்து நியாயமான ஒரு கேள்வியை எவ்வித அச்சமுமின்றி கேட்டுள்ளார். அந்த கேள்வி அந்த சிங்கள நீதிபதியை சற்று செவி சாய்க்க வைத்துள்ளது என்றே நாம் கூறவேண்டும்.
லட்சியம் வெல்லுமடா..
முற்றுப்புள்ளிகள் எல்லாம்
முடிவுரை அல்ல..
அடுத்த வாக்கியத்தின்
ஆரம்பமே...
'தோல்வி - சோர்வு '
இவையெல்லாம் உனை
பயங்கொள்ள வைக்கத் தான்
படைக்கப்பட்டன..
அரிசிமாவுக் கோலமிட்டு
எறும்புக்குகூட பசியாற்றிய
தமிழன் தான் இன்று
தன் மண்ணிலேயே அகதி...கலங்காதே தமிழனே..
லட்சியம் வெல்லும்நிச்சயம் ஒரு திகதி..
புல்கூட மிதி பட்டால்எழுந்து தானாய் நிற்கும்..புல் அல்லநீ தமிழா
நீ புலிப்படையின் வர்க்கம்..உணர்ந்து நீ எழுந்தால்
உலகம் உனது சொர்க்கம்..மூவேந்தர்கள் வளர்த்த நம்மூதாதையர் மொழியைபாவேந்தர் சொற்படிபாரெங்கும் பரப்புவோம்..
வா தமிழனே.. வென்று காட்டுவோம்..
முடிவுரை அல்ல..
அடுத்த வாக்கியத்தின்
ஆரம்பமே...
'தோல்வி - சோர்வு '
இவையெல்லாம் உனை
பயங்கொள்ள வைக்கத் தான்
படைக்கப்பட்டன..
அரிசிமாவுக் கோலமிட்டு
எறும்புக்குகூட பசியாற்றிய
தமிழன் தான் இன்று
தன் மண்ணிலேயே அகதி...கலங்காதே தமிழனே..
லட்சியம் வெல்லும்நிச்சயம் ஒரு திகதி..
புல்கூட மிதி பட்டால்எழுந்து தானாய் நிற்கும்..புல் அல்லநீ தமிழா
நீ புலிப்படையின் வர்க்கம்..உணர்ந்து நீ எழுந்தால்
உலகம் உனது சொர்க்கம்..மூவேந்தர்கள் வளர்த்த நம்மூதாதையர் மொழியைபாவேந்தர் சொற்படிபாரெங்கும் பரப்புவோம்..
வா தமிழனே.. வென்று காட்டுவோம்..
ஒன்றுபட்டு முறியடிப்போம்!!!
இலங்கை இனவெறி அரசு புரிந்த போர்க்குற்றம் உலக நாடுகளுக்கு தெரிந்த பிறகு பல்வேறு நெருக்கடிகள் ராஜபக்சே அரசுக்கு வந்த வண்ணம் உள்ளன. ஐரோப்பிய நாடுகள் பல்வேறு சலுகைகளை ரத்து செய்துவிட்டன. ஐநா மன்றம் விசாரணை குழு ஒன்றை அமைத்துள்ளது.
வியாழன், 2 செப்டம்பர், 2010
கப்டன் அறிவு
தூரத்தே கேட்ட சத்தம் வரவர அதிகரித்துக் கொண்டிருந்தது. அமைதியான அன்றைய சூழலை இடை விடாத அந்த இரைச்சல் ஓசை பயங்கரமானதாக மாற்றியது. அவர்களுக்கு அது வழமையானது தான். எனினும், அன்று ஏதோ ஓர் அசாதாரணமான சூழல் இருப்பதாக அவர்களுக்குப்பட்டது. எதிரி விளக்குவைத்தகுளம்வரை முன்னேறிவிட்டான். அது வன்னியின் ஒரு காட்டுக் கிராமம்.
' டயஸ்போரா ' ஒரு சமூக வலைப் பின்னல் தளம்
"பேஸ்புக் நாம்" அனைவரும் அறிந்ததும் எம்மில் பலர் உபயோகித்து வருவதுமான ஒரு சமூக வலைப் பின்னல் தளம். இந்நிலையில் பேஸ்புக்கிற்கு தகுந்த போட்டியளிக்கும் வகையில் புதிய சமூக வலைப்பின்னல் தளமொன்று செப்டம்பர் மாதம் 15ஆம் திகதி உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவுள்ளது. இத்தளமானது ' டயஸ்போரா ' எனப் பெயரிடப்பட்டுள்ளது.
"வரையறைகுட்பட்டே இந்தியா செயற்படும்"
தனது வெளியுறவுக் கொள்கைக்கு பாதகமில்லாத வகையில்தான் இலங்கை தமிழர் பிரச்சினையில் இந்தியா செயற்படமுடியும் என்பதை இலங்கை தமிழ்கட்சிகள் உணரவேண்டுமெனவும் , இறையாண்மை பெற்ற நாடான இலங்கையின் விவகாரத்தில் தலையிடுவதற்கு இந்தியாவுக்கு இருக்கும் வரையறைகளை இலங்கை தமிழ்கட்சிகள் உணர்ந்து கொண்டால்தான் இதில் இருக்கும் பிரச்சினைகளை அந்த கட்சிகள் புரிந்துகொள்ள முடியும்மெனஇந்திய வெளியுறவுத்துறை செயலர் நிருபமா ராவ், தெரிவித்துள்ளனர்.
வீர வணக்கங்கள் !!!
புல்மோட்டைக்கடற்பரப்பில் வைத்து சிறிலங்கா கடற்படையின் டோறா அதிவேக பீரங்கிப் படகினைத் தகர்த்து வீரகாவியமான கடற்கரும்புலிகள் மேஜர் கண்ணாளன் (விநாயகம் இளையதம்பி - மட்டக்களப்பு) மற்றும் மேஜர் நகுலன் (கந்தையா கிருஸ்ணதாய் - யாழ்ப்பாணம்) ஆகியோரின் 15ம் ஆண்டு நினைவு வீர வணக்கங்கள்!!
பிரபாகரன் அவர்களையும் மற்றும் அவரின் குடும்பத்தினரையும் பற்றி மீண்டும் மீண்டும் சொல்லியே பிழைப்பை நடத்த வேண்டியிருக்கிறது இந்த ஒட்டுண்ணிகளுக்கு....
முள்ளிவாய்க்கால் முடித்துவிடவில்லை தமிழனின் தலை எழுத்தை, இன்று வரைக்கும் புகைந்து கொண்டேயிருக்கும் சந்தேகங்களில் அது நீறு பூத்த நெருப்பாகவே இருக்கிறது.
அடிமைத்தனம் உடைக்க முப்பது வருடங்களுக்கு மேல் நடந்த போராட்டம் மௌனித்து விட்டதாக அறிவிக்கப்பட்ட நாள் முதலாய் இன்னும்
அடிமைத்தனம் உடைக்க முப்பது வருடங்களுக்கு மேல் நடந்த போராட்டம் மௌனித்து விட்டதாக அறிவிக்கப்பட்ட நாள் முதலாய் இன்னும்
நாங்கள் அடிமை இல்லை? ஆண்ட பூமி இது? பூர்வகுடி நாங்கள்? இணைந்து வாழ்வது என்பது சாத்தியமே இல்லாதது? தனி ஈழம் ஒன்று மட்டுமே சாத்யமானது என்று ஒவ்வொரு பூவும் கோர்த்து உருவான மாலை இன்று குரங்கு கையில் சிக்கிய பூமாலை போல் சிதைந்தாக காட்சியளிக்கிறது!
கோர்த்து வைத்திருந்த கைகள் சில சோரம் போய்விட்டது. சில புதிராக இருக்கிறது. சில வினாக்குறியாய் இருக்கிறது,............உலகில் இன்று வரையிலும் நாம் எத்தனையோ விடுதலைப் போராட்டங்களையும், குழுக்களையும் நாம் பார்த்து கேட்டு படித்து வந்தாலும் விடுதலைப்புலிகளின் இயக்கத்தின் வளர்ச்சி என்பது முறைப்படியான நாடுகளைக்கூட திடுக்கிட வைத்தன என்றால் அது முற்றிலும் உண்மை.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)















