செவ்வாய், 14 செப்டம்பர், 2010

கீரிமலை தீர்த்தக் கேணிக்கு “தம்பல பட்டுணவ”

வரலாற்றுப் புகழ் பெற்ற கீரிமலை தீர்த்தக் கேணிக்கு "தம்பல பட்டுணவ" எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். குதிரை முகம் கொண்ட மன்னன் மகளின் பிணியறுத்து முக அழகை கொடுத்த வரலாற்று சிறப்பு மிக்க மாவட்டபுரம் கீரிமலை தீர்த்த கேணிக்கு சிங்களவர்களால் பெயர்பலகைசூட்டப்பட்டுள்ளது.

திங்கள், 13 செப்டம்பர், 2010

உங்கள் கண்டனங்களை குப்பையில் கொட்டுங்கள்

இலங்கையின் அரசியலமைப்பின் 18 - வது திருத்தச் சட்டத்தை அமெரிக்கா கண்டித்துள் ளது. அமெரிக்காவின் இந்த கண்டனம் என்ன செய்யும் என்றால் எதுவுமே இல்லை என்பதே அதற்கான பதிலாக அமையும்.கண்டனங்கள், ஆழ்ந்த அனுதாபங்கள், அதிர்ச்சிகள் அனைத்தும் சம்பிரதாயமானவை. இவற்றால் எதுவும் ஆகப் போவதில்லை. அதே நேரம் பாதிக்கப்படும் மக்களுக்கு இத்தகைய கண்டனங்கள் எத்தகைய விமோசனங்களையும் பெற்றுத்தரப் போவதில்லை என்பதும் தெரிந்த விடயமே.


மரத்தில் தொங்கிய யுவதியின் சடலம்

நாவற்குழி தச்சன் தோப்புப் பகுதியில் மரம் ஒன்றில் கயிற்றில் தொங்கிய நிலையில் யுவதியின் சடலம் காணப்பட்டது.


இதே இடத்தைச் சேர்ந்த தம்பிப்பிள்ளை தனுஷா (வயது 19) என்னும் யுவதியே இறந்தவராவார். இவரது சடலத்தை சாவகச்சேரி பொலிஸார் மீட்டு சாவகச்சேரி ஆதார வைத்திய சாலை பிரேத அறையில் ஒப்படைத்துள்ளனர்.

ஞாயிறு, 12 செப்டம்பர், 2010

காருக்குள் 'வொயிஸ் பேஸ்புக் அப்டேட்டிங்

பிரபல வாகன உற்பத்தி நிறுவனமான ஜெனரல் மோட்டர்ஸ் (ஜிஎம்) புதிய வகை மென்பொருள் ஒன்றினைத் தற்போது பரீசீலித்து வருகின்றது. கார் சாரதியின் கட்டளைக் குரலுக்கு இணங்க 'பேஸ்புக்'கில் 'ஸ்டேடஸ் அப்டேட்' செய்வதே இம்மென்பொருளாகும்.மேலும் 'பேஸ்புக்'கில், தான் பெற்றுள்ள செய்திகளினை (மெசேஜஸ்) வார்த்தைகளாக கேட்பதையும் இது உள்ளடக்கவுள்ளது.மேற்படி சொற்கள் மூலமான 'அப்டேட்கள்', 'ஒன்ஸ்டார் நெட்வோர்க்' மூலமாக மேற்கொள்ளப்படவுள்ளன.


வவுனியாவில் ஜே.வி.பி அலுவலகம் திறப்பு

மக்கள் விடுதலை முன்னணியின் வவுனியா மாவட்ட கட்சிக் காரியாலம் திறப்பு வைபவத்திற்கு பொலிஸார் இடையூறு விளைவித்ததாக மக்கள் விடுததலை முன்னணியின் ஊடக பிரிவு தெரிவித்தது.குறித்த காரியாலயத்தை அமைப்பதற்கு காணி வழங்கியவரிடம் பொலிஸார் வாக்குமூலம் பெற்றுக் கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவை நம்பி ,, இந்தியாவை கைகழுவுகிறது

இந்தியா ,சீனா இரண்டு நாடுகளும் உலகின் சர்வவல்லமை பொருந்திய நாடுகளாக நிலைமாற்றம் பெற்று வருகின்றன.மூன்றாவது உலகப் போர் இடம்பெறுமாக இருந்தால்,அது இந்தியாவுக்கும் சீனாவுக்கு மான போரில் இருந்து ஆரம்பிப்பதாக அமை யும்.அந்தளவிற்கு இரண்டு நாடுகளினதும் எதிர்த்தன்மை அதிகரித்த வண்ணமுள்ளதுடன் உலகமும் அந்த இரண்டு நாடுகளின்பால் பிளவு பட்டிருப்பதைக் காணமுடியும். இந் நிலைமையை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள இலங்கை அரசு முற்பட்டது.


இடம்பெயர்ந்த மக்களுக்கு வழங்கிய சிமெந்து மூடைகள் பதுக்கிவைப்பு

யுத்தம் காரணமாக வன்னிப்பகுதியிலிருந்து இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றத்தின் போது மக்களுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட 1500 சிமெந்து மூடைகள் வவுனியா பலநோக்கு கூட்டுறவுச் சங்க கட்டிடத்தொகுதியில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் இவை மேற்படி கட்டிடத்தில் அடுக்கப்பட்டதாகவும் அவ்வேளையில் ஒரு சில சிமெந்து மூடைகளை மீள்குடியேறிய மக்களுக்கு வழங்கிய பின்னர் ஏனையவற்றை வழங்காது அங்கேயே பதுக்கப்பட்டதாகவும் தெரியவருகின்றது.


அமெரிக்கா தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளது

இலங்கை அரசியலமைப்பில் அண்மையில் செய்யப்பட்ட 18 வது திருத்தம் குறித்து அமெரிக்கா தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளது.இது குறித்து அமெரிக்க பொது விவகார பணியக துணைச் செயலர் பிலிப் ஜே கிரௌலி அவர்களால் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையிலேயே இந்தக் கண்டனம் வெளியிடப்பட்டுள்ளது.

காணாமல் போயுள்ள தமது உறவுகள் திரும்பி வருவார்கள் என்ற நம்பிக்கையுடன்.....

இலங்கையில் கிழக்கு மாகாணம் அரசாங்கத்தின் முழுமையான கட்டுப்பாட்டினுள் கொண்டு வரப்பட்டு, மூன்று வருடங்கள் கடந்துவிட்ட நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டும் பெண்கள் உட்பட 95 பேர் காணாமல் போயிருப்பதாக மாவட்ட நாடாளுன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா கூறுகின்றார். காணாமல் போயுள்ளவர்களின் உறவினர்கள் தங்களிடம் பதிவு செய்துள்ள விபரங்களின்படி, பாதுகாப்பு தரப்பு மற்றும் தமிழ் ஆயுதக்குழுக்கள் மீதே இது தொடர்பான சந்தேகங்களை அவர்கள் தெரிவித்திருப்பதாகவும் அவர் கூறியிருக்கின்றார்.


புதன், 8 செப்டம்பர், 2010

நினைவு வீரவணக்கம்

"வவுனியா அமைந்திருந்த வன்னி கூட்டுப்படைத் தலைமையகம்" மீது மேற்கொள்ளப்பட்ட அதிரடித் தாக்குதலில் காவியமான கரும்புலிகளின் நினைவு வீரவணக்கம். வான் புலிகள் மற்றும் கேணல் கிட்டு பீரங்கிப் படையணி ஆகியவற்றின் துணையுடன் 09.09.2008 அன்று இப்பத்து கரும்புலி வீரர்களும் வன்னி கூட்டுப்படைத் தலைமையகத்திற்குள் ஊடுருவி சிறிலங்கா படையினருக்கு பாரிய அழிவுகளை ஏற்படுத்திருந்தனர்.

தமிழில் இணையத்தள முகவரி : முதல் தடவையாக...

உலக இணையத்தள வரலாற்றில் முதன் முறையாக இணையத்தள முகவரிகளை தாய்மொழியில் பயன்படுத்தும் சந்தர்ப்பம் இலங்கைக்கு கிட்டியுள்ளது. இந்த வாய்ப்பினைப் பெறுவதற்கு 'அய்கன்" (ICANN) நிறுவனம் அனுமதி வழங்கியுள்ளது . இணையத்தள முகவரியை 'இலங்கை' என்று நாம் பதிந்து கொள்ள இதன் மூலம் எமக்கு வாய்ப்பேற்பட்டுள்ளது. ' உதாரணமாக வீரகேசரி இணையத்தளத்தை பார்வையிடுவதாயின் http://தளம்.வீரகேசரி.இலங்கை என்று தட்டச்சு செய்யலாம். "எமது சொந்த மொழியில் இணையத்தள முகவரியை முதன் முதலாக ஆசியாவில் மட்டுமல்ல, முழு உலகிலும் அறிமுகப்படுத்திய பெருமை உண்டு. அதுவும் முதன் முறையாக தமிழில் இணையத்தள முகவரி உருவாகியுள்ளது

18ஆவது அரசியலமைப்பு திருத்தம் 144 மேலதிக வாக்குகளால் வென்றது

18-வது அரசியலமைப்பு சீர்திருத்தம் மூன்றில் இரண்டு பெரும் பான்மை அதிகாரத்துடன் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. சீர் திருத்தத்திற்கு ஆதரவாக 161 வாக்குகளும் எதிராக 17 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன. இதற்கு ஆதரவாக வாக்களித்த நாடாளுமன்ற உறுப்பினர்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் ஒருவரும்
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் 8 உறுப்பினர்களும் உள்ளடங்குகின்றனர்.இலங்கை ஜனாதிபதிக்கு அதிக அதிகாரங்களை வழங்குவதாக குற்றம் சாட்டப்பட்ட இலங்கை அரசியலமைப்பின் 18 ஆவது திருத்தச் சட்டமூலம் நேற்று நிறைவேற்றப்பட்டது.

ஆசியாவின் முக்கியமான உறுப்பினர் சீனா.

தெற்காசியாவில் தனது வகிபாகத்தை கோடிட்டுக்காட்டியுள்ள சீனா, ஆசியாவின் முக்கியமான உறுப்பினர் என்ற வகையில் உபகண்டத்தின் சமாதானத்திற்கும் ஸ்திரத்தன்மைக்கும் இந்தியாவுடன் இணைந்து செயற்படத் தான் விரும்புவதாகக் கூறியுள்ளது. தெற்காசியா உட்பட ஆசியாவின் சமாதானம், ஸ்திரத்தன்மையைப் பாதுகாப்பதற்கு சீனா பற்றுறுதியுடன் இருப்பதாக சீன வெளிவிவகார அமைச்சுப் பேச்சாளர் ஜியாங் யூ கூறியுள்ளார்.


சம்பந்தன் ஜயாவும் , பியசேனா மாத்தையாவும்.

ஐயா சம்பந்தன் தேர்ந்தெடுத்த ஆட்கள் இவர்கள்!. பியசேன என சிங்களப் பெயருடன், தமிழ் தாயின் பாலைக் குடித்து வளர்ந்த இவர் பெயரில் உள்ள சிங்களப் புத்தியைக் காண்பித்துவிட்டார் தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் முதல் முதல் போட்டியிட்ட சிங்களவர் பியசேன. நாடாளுமன்ற உறுப்பினராக இவர் தெரிவானார். மக்கள் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மேல்வைத்திருந்த நம்பிக்கையால் இவருக்கு வாக்களித்தனர்.

செட்டிக்குளத்தில் யுவதி கைது !!!!

தமிழீழ விடுதலைப் புலிகளின் தற்கொலை படையைச் சேர்ந்தவரென்ற சந்தேகத்தின் பேரில் இளம் யுவதி ஒருவர் செட்டிகுளம் பகுதியில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

செவ்வாய், 7 செப்டம்பர், 2010

கொன்றவன் சொகுசு வீட்டில் கொல்லப்பட்டவர்கள் மரத்தின் கீழ் !!!!!

எல்லோருமே தன் மக்கள் எனக்கூறும் மஹிந்த தமிழர்களுக்கு இன்னமும் உதவமுன்வராதது ஏன்? தொடர்ந்தும் அடிமைகளாகவும், கைதிகளாகவும் தமிழர்களை வைத்திருப்பது ஏன்? வன்னி யுத்தத்தில் 40 ஆயிரம் மக்களை கொன்று
 குவித்து 3 இலட்சம் மக்களை வேரோடு பிடுங்கி எடுத்து முகாம்களில் அடைத்தது மஹிந்த அரசு. தன்னுடைய பிசாசுகளால் கொல்லப்பட்ட மக்களின் உறவுகளுக்கோ அல்லது வேரோடு விரட்டியடிக்கப்பட்ட மக்களுக்கோ இன்னமும் நட்ட ஈடுகளையோ இழப்புக்களையோ கொடுக்கவில்லை.