காலை 9.30 மணி! பாடசாலை பிள்ளைகள் வரிசையாக வந்து திலீபனைச் சந்தித்து விடைபெறுகிறார்கள். எல்லோருடனும் அவர் அன்பாகப் பேசுகிறார். “வோக்கிடோக்கி”யில் தலைவருடன் சில நிமிடங்கள் பேசுகிறார். பேசிவிட்டு அந்த மண்ணிற “வானை” நோக்கி நடக்கிறார்…. எல்லோரும் பின் தொடர்கிறோம்…. ஆம், அவரின் தியாகப் பயணம் ஆரம்பமாகி விட்டது. மிக மிடுக்காக நடந்து முன் ஆசனத்தில் ஏறுகிறார். அவரின் பக்கத்தில் சொர்ணம், அன்ரன் மாஸ்ரர், முரளி, பின் ஆசனத்தில் காசி ஆனந்தன், ராஐன், நான், மற்றும் சிலர்….! வான் நல்லூர் கந்தசாமி கோயிலை நோக்கி ஓடுகிறது…. பாதையின் இரு பக்கத்திலும் மாணவர்கள், பொதுமக்கள் ஆகியோர் கையசைத்து வழியனுப்புகிறார்கள்.
இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
செவ்வாய், 14 செப்டம்பர், 2010
இலங்கைப் பிரச்சினைகளை மூடிமறைக்க ஐ.நா.முயற்சி! - இன்னர் சிட்டி பிரஸ் குற்றச்சாட்டு
இலங்கை பிரச்சினைகளை மூடிமறைக்க ஐ.நா.செயலர் முயற்சிப்பதாக இன்னர் சிட்டி பிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் பான் கீ மூன் மற்றும் அவரது பேச்சாளர் மார்ட்டின் சினர்கீ ஆகியோர் இலங்கை, சூடான் போன்ற நாடுகளில் தீவிரமிக்க விடயங்கள் குறித்து கருத்து வெளியிடாமை குறித்து இன்னர் சிட்டி பிரஸ் கண்டனம் வெளியிட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையில் நாளாந்த செய்தியாளர் சந்திப்பு ஒன்றின் போது இலங்கை, சூடான் மற்றும் கொங்கோ போன்ற நாடுகளில் முக்கியமான பிரச்சினைகள் குறித்து எந்தக் கருத்துக்களும் வெளியிடப்படவில்லை.
இரத்தினபுரி தோட்டமொன்றில் பதற்ற நிலை, தமிழ் மக்கள் இடம்பெயர்வு
இரத்தினபுரி மாவட்டம் நிவத்திகலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தேல குக்குலகலை தோட்டத்திலுள்ள தமிழர்களின் குடியிருப்புக்கள் தாக்குதலுக்கு இலக்காகி உள்ளன என்றும் அச்சம் காரணமாக தமிழ்க் குடும்பங்கள் இடம் பெயர்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தேல குக்குலகலைத் தோட்டத்தைச் சேர்ந்த பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த காவற்காரர் ஒருவர் கரவிட்ட திமியாவ என்னுமிடத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து இந்தத் தோட்டத்தைச் சேர்ந்த இரண்டு வீடுகள் தீக்கிரைக்கப்பட்டதாகவும் பத்துக்கும் மேற்பட்ட வீடுகளிலிருந்து பொருட்கள் சூறையாடப்பட்டுள்ளன என்றும் தெரியவருகின்றது.
தேல குக்குலகலைத் தோட்டத்தைச் சேர்ந்த பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த காவற்காரர் ஒருவர் கரவிட்ட திமியாவ என்னுமிடத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து இந்தத் தோட்டத்தைச் சேர்ந்த இரண்டு வீடுகள் தீக்கிரைக்கப்பட்டதாகவும் பத்துக்கும் மேற்பட்ட வீடுகளிலிருந்து பொருட்கள் சூறையாடப்பட்டுள்ளன என்றும் தெரியவருகின்றது.
"எகானமிஸ்ட்" இதழ் மீண்டும் பறிமுதல்.
நேரடியாகவும், தயவு தாட்சண்டமின்றியும் கருத்துக்களைத் தெரிவிக்கும் எகானமிஸ்ட் நாளிதழின் தலையங்கங்கங்கள் இலங்கை அதிகாரிகளை சில முறை கொதிப்படையச் செய்துள்ளன. சில முறை அதன் அதிகாரிகளை எரிச்சலடையச் செய்துள்ளன. இதன் காரணமாக உலகில் பெரிய அளவில் வாசிக்கப்படும் அரசியல் மற்றும் வர்ச்சக சஞ்சிகைளில் ஒன்றான எகானமிஸ்ட்டின் பிரதிகள் இலங்கையில் இருக்கும் அதன் ஒரே முகவரை சென்றடையும் முன்பே பல முறை பறிமுதல் செய்யப்படுகின்றன.
கிணற்றில் இருந்து ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார்
கைதடி வடக்கில் காணாமல் போயிருந்தவரை தேடிய போது காணாமல் போயிருந்த நபர் கிணற்றில் இருந்து சடலமாக மிதப்பது தெரியவந்தது. வீட்டுக்கு அருகில் இருந்த கிணற்றில் இவர் தவறுதலாக வீழ்ந்து இறந்திருக்கலாம் என நம்பப்படுகின்றது. அயலவர்களின் உதவியுடன் சடலம் மேலே எடுக்கப்பட்டு போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. கைதடி வடக்கை சேர்ந்த கந்தையா டபிளேஸ்வரன் என்பவரே சடலமாக மீட்கப்பட்டவர் ஆவார்
வீரவேங்கை நிதி ( மன்னார் மாவட்டம் )
மன்னார் மாவட்டத்தில் வீரமரணம் அடைந்த முதல் புலி. இராணுவச் சுற்றிவளைப்பின் போது இறுதி வரை போராடி எதிரியின் கையில் தான் பிடிபடக்கூடாது என நினைத்து தன் கைத் துப்பாக்கியாலே தன்னைத் தானே சுட்டு எமது இயக்க மரபுக்கு இணங்க வீர மரணத்தை அடைந்தவன் நிதி.அன்று நாங்கள் நிதியைப் பற்றி அறிந்திருந்தோமே தவிர விடுதலையைப் பற்றிப் புரியவில்லை. நிதியின் இறுதி நிகழ்வு பெரிதாக ஊர்வலமாக நடத்தப்படவில்லை. அன்றைய காலகட்டம் மிகப்பயஙகரமாக இருந்ததால், ஒவ்வொருவர் வாயிலும் மெதுவாகப் பேசப்படுகிறது.
யாழ்ப்பாணத்தில் சமூகச் சீர்கேடுகளை ஊக்குவிக்கும் படையினர்
யாழ்ப்பாணத்தில் சமூகச் சீர்கேடுகளை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளில் படையினர் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.ஆபாசப் புத்தகங்கள் மற்றும் சீடீக்களின் விற்பனை, கஞ்சா அபின் போன்ற போதை வஸ்துக்களின் பாவனை போன்றவற்றை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளின் பின்னணியில் படையினர் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.அத்துடன் கஞ்சா, அபின் போன்ற போதை வஸ்துக்களை படையினரே தென்னிலங்கையிலிருந்து கொண்டு வந்து தமக்கு நெருக்கமானவர்கள் மூலம் மக்களிடையே குறிப்பாக இளைஞர்களிடையே விநியோகித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கீரிமலை தீர்த்தக் கேணிக்கு “தம்பல பட்டுணவ”
வரலாற்றுப் புகழ் பெற்ற கீரிமலை தீர்த்தக் கேணிக்கு "தம்பல பட்டுணவ" எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். குதிரை முகம் கொண்ட மன்னன் மகளின் பிணியறுத்து முக அழகை கொடுத்த வரலாற்று சிறப்பு மிக்க மாவட்டபுரம் கீரிமலை தீர்த்த கேணிக்கு சிங்களவர்களால் பெயர்பலகைசூட்டப்பட்டுள்ளது.
திங்கள், 13 செப்டம்பர், 2010
உங்கள் கண்டனங்களை குப்பையில் கொட்டுங்கள்
இலங்கையின் அரசியலமைப்பின் 18 - வது திருத்தச் சட்டத்தை அமெரிக்கா கண்டித்துள் ளது. அமெரிக்காவின் இந்த கண்டனம் என்ன செய்யும் என்றால் எதுவுமே இல்லை என்பதே அதற்கான பதிலாக அமையும்.கண்டனங்கள், ஆழ்ந்த அனுதாபங்கள், அதிர்ச்சிகள் அனைத்தும் சம்பிரதாயமானவை. இவற்றால் எதுவும் ஆகப் போவதில்லை. அதே நேரம் பாதிக்கப்படும் மக்களுக்கு இத்தகைய கண்டனங்கள் எத்தகைய விமோசனங்களையும் பெற்றுத்தரப் போவதில்லை என்பதும் தெரிந்த விடயமே.
மரத்தில் தொங்கிய யுவதியின் சடலம்
நாவற்குழி தச்சன் தோப்புப் பகுதியில் மரம் ஒன்றில் கயிற்றில் தொங்கிய நிலையில் யுவதியின் சடலம் காணப்பட்டது.
இதே இடத்தைச் சேர்ந்த தம்பிப்பிள்ளை தனுஷா (வயது 19) என்னும் யுவதியே இறந்தவராவார். இவரது சடலத்தை சாவகச்சேரி பொலிஸார் மீட்டு சாவகச்சேரி ஆதார வைத்திய சாலை பிரேத அறையில் ஒப்படைத்துள்ளனர்.
இதே இடத்தைச் சேர்ந்த தம்பிப்பிள்ளை தனுஷா (வயது 19) என்னும் யுவதியே இறந்தவராவார். இவரது சடலத்தை சாவகச்சேரி பொலிஸார் மீட்டு சாவகச்சேரி ஆதார வைத்திய சாலை பிரேத அறையில் ஒப்படைத்துள்ளனர்.
ஞாயிறு, 12 செப்டம்பர், 2010
காருக்குள் 'வொயிஸ் பேஸ்புக் அப்டேட்டிங்
பிரபல வாகன உற்பத்தி நிறுவனமான ஜெனரல் மோட்டர்ஸ் (ஜிஎம்) புதிய வகை மென்பொருள் ஒன்றினைத் தற்போது பரீசீலித்து வருகின்றது. கார் சாரதியின் கட்டளைக் குரலுக்கு இணங்க 'பேஸ்புக்'கில் 'ஸ்டேடஸ் அப்டேட்' செய்வதே இம்மென்பொருளாகும்.மேலும் 'பேஸ்புக்'கில், தான் பெற்றுள்ள செய்திகளினை (மெசேஜஸ்) வார்த்தைகளாக கேட்பதையும் இது உள்ளடக்கவுள்ளது.மேற்படி சொற்கள் மூலமான 'அப்டேட்கள்', 'ஒன்ஸ்டார் நெட்வோர்க்' மூலமாக மேற்கொள்ளப்படவுள்ளன.
வவுனியாவில் ஜே.வி.பி அலுவலகம் திறப்பு
மக்கள் விடுதலை முன்னணியின் வவுனியா மாவட்ட கட்சிக் காரியாலம் திறப்பு வைபவத்திற்கு பொலிஸார் இடையூறு விளைவித்ததாக மக்கள் விடுததலை முன்னணியின் ஊடக பிரிவு தெரிவித்தது.குறித்த காரியாலயத்தை அமைப்பதற்கு காணி வழங்கியவரிடம் பொலிஸார் வாக்குமூலம் பெற்றுக் கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவை நம்பி ,, இந்தியாவை கைகழுவுகிறது
இந்தியா ,சீனா இரண்டு நாடுகளும் உலகின் சர்வவல்லமை பொருந்திய நாடுகளாக நிலைமாற்றம் பெற்று வருகின்றன.மூன்றாவது உலகப் போர் இடம்பெறுமாக இருந்தால்,அது இந்தியாவுக்கும் சீனாவுக்கு மான போரில் இருந்து ஆரம்பிப்பதாக அமை யும்.அந்தளவிற்கு இரண்டு நாடுகளினதும் எதிர்த்தன்மை அதிகரித்த வண்ணமுள்ளதுடன் உலகமும் அந்த இரண்டு நாடுகளின்பால் பிளவு பட்டிருப்பதைக் காணமுடியும். இந் நிலைமையை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள இலங்கை அரசு முற்பட்டது.
இடம்பெயர்ந்த மக்களுக்கு வழங்கிய சிமெந்து மூடைகள் பதுக்கிவைப்பு
யுத்தம் காரணமாக வன்னிப்பகுதியிலிருந்து இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றத்தின் போது மக்களுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட 1500 சிமெந்து மூடைகள் வவுனியா பலநோக்கு கூட்டுறவுச் சங்க கட்டிடத்தொகுதியில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் இவை மேற்படி கட்டிடத்தில் அடுக்கப்பட்டதாகவும் அவ்வேளையில் ஒரு சில சிமெந்து மூடைகளை மீள்குடியேறிய மக்களுக்கு வழங்கிய பின்னர் ஏனையவற்றை வழங்காது அங்கேயே பதுக்கப்பட்டதாகவும் தெரியவருகின்றது.
அமெரிக்கா தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளது
இலங்கை அரசியலமைப்பில் அண்மையில் செய்யப்பட்ட 18 வது திருத்தம் குறித்து அமெரிக்கா தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளது.இது குறித்து அமெரிக்க பொது விவகார பணியக துணைச் செயலர் பிலிப் ஜே கிரௌலி அவர்களால் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையிலேயே இந்தக் கண்டனம் வெளியிடப்பட்டுள்ளது.
காணாமல் போயுள்ள தமது உறவுகள் திரும்பி வருவார்கள் என்ற நம்பிக்கையுடன்.....
இலங்கையில் கிழக்கு மாகாணம் அரசாங்கத்தின் முழுமையான கட்டுப்பாட்டினுள் கொண்டு வரப்பட்டு, மூன்று வருடங்கள் கடந்துவிட்ட நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டும் பெண்கள் உட்பட 95 பேர் காணாமல் போயிருப்பதாக மாவட்ட நாடாளுன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா கூறுகின்றார். காணாமல் போயுள்ளவர்களின் உறவினர்கள் தங்களிடம் பதிவு செய்துள்ள விபரங்களின்படி, பாதுகாப்பு தரப்பு மற்றும் தமிழ் ஆயுதக்குழுக்கள் மீதே இது தொடர்பான சந்தேகங்களை அவர்கள் தெரிவித்திருப்பதாகவும் அவர் கூறியிருக்கின்றார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)















