நீங்களெங்கள் நெஞ்சமதை வென்றீர்,வாழ்கின்றீர்
கருகற்பொழுதினிலே சென்று விடிவானம் தெரிவதற்குள்
உயிரைக்கருகாக்கி களத்திலே காவியமானீர்
உங்கள் கனவுகள் என்றுமே அழியாது,
எம் மக்களின் விடுதலைக்காய் என்றும் நீங்கள்
எங்களுடன் நிற்பீர்கள்!!!
இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
எங்களுக்காகத் தங்களைக் களப்பலியாக்கிய மாவீரர் தினத்தைக் கேள்விக்குள்ளாக்கும் எவரும் நிச்சயம் எம்மவர்களாக இருக்க முடியாது. மாவீரர்களது தியாகத்தைத் தமக்கான அடையாளப்படுத்தலுக்கும், தமது சுய லாபத்திற்கும் பயன்படுத்த நினைக்கும் எவரும் தமிழனாகப் பிறந்திருக்க முடியாது..காலம் உங்களுக்கு வழங்கிய கடமைகளை நேர்மையான பாதையில் நின்ற...ு நிறைவேற்றுங்கள். மாவீரர்கள் தங்களது உயிரை அர்ப்பணித்து உயர்த்திப் பிடித்த தமிழீழ இலட்சிய நெருப்பை நீங்களும் கைகளில் ஏந்துங்கள். அவர்கள் கல்லறைகளில் உங்கள் கண்ணீரையும் காணிக்கையாக்குங்கள். மாவீரர் நாளில் ஆயிரம் ஆயிரமாகத் திரளும் தமிழ் மக்களுடன் நீங்களும் விளக்கேற்றி சத்தியம் செய்யுங்கள். ‘தமிழீழ இலட்சியம் நோக்கிய பாதையில் நாங்கள் எல்லோரும் ஒன்றாகஎழுவோம்’