இனப்படுகொலை ஸ்ரீலங்காவின் நவீன சர்வாதிகாரி ராஜபக்க்ஷ 2,12,2010 வியாழன் புகழ்பெற்ற இலண்டன் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக அரங்கை தனது அரசியல் மேடையாக்கி சர்வதேசத்தை ஏமாற்ற இருந்த நிகழ்வு புலம்பெயர் தமிழர்களால் தடைசெய்யப்பட்டது.
இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
வெள்ளி, 10 டிசம்பர், 2010
போரில் வென்றவர்களுக்குத்தானே எல்லா உரிமையும். தோற்றுப் போன சமூகம் எல்லாவற்றையும் கைகட்டிப் பார்ப்பதைத் தவிர வேறென்ன செய்ய முடியும்?
மழை மெல்லத் தூறிக் கொண்டிருந்தது. முன்னிருட்டுக் காலம் என்பதால் எங்கும் இருளின் போர்வை. இருளின் கருமையைக் கிழித்துக் கொண்டு வந்து சேர்ந்த வாகனங்கள். பழைமையோடு யாழ்ப்பாணத்தில் ஒரு காலத்தைய செழுமையைச் சொல்லி நிற்கும் அந்தக் கட்டடத்தின் முன்னால் வந்து
விக்கிரமபாகு கருணாரத்தின கைது செய்யப்படலாம்!!!
லண்டனில் நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றில் அரசாங்கத்துக்கெதிரான கருத்துக்களை வெளியிட்ட காரணத்துக்காக விக்கிரமபாகு கருணாரத்தின கைது செய்யப்படலாம் என்று ஜனாதிபதி செயலகத்தின் முக்கிய
இசைப்பிரியா படுகொலை, அனைவரும் குரல் கொடுக்கவேண்டும் - காமாட்சி துரைராஜு (மலேசியா பஹாங் மாநில ஜ.செ.க-வின் மகளிர் தலைவி)
ஷோபா என்ற இசைப்பிரியாவை சரண் அடைந்த பிறகும், பாலியல் வன்முறைக்கு ஆளாக்கி துன்புறுத்தி சித்ரவதை செய்யப்பட்டு கொன்ற செய்தி, சிங்கள மனித மிருகங்களின் கொடூரமான செயலை காட்டுகிறது. ஒரு போர் வீரர் என்று கூட பார்க்காமால், அவரை கொன்ற செய்தி பலரின் மனதை ஆழமாக பாதித்துள்ளது. அதிலும் ஒரு ஈழத் தமிழ்ப் பெண்மணியை இப்படியா பாலியல் கொடுமைக்கு ஆளாக்குவது?
பயங்கரவாத எதிர்ப்புப் போர்...??????

மனநோயாளியின் செயலிற்காய் - அல்ல
தமிழனாய் பிறந்ததாலே
சிங்கள காடையரின் _ பரிசு.
சிங்களவனின் கொடுமைகள் எங்கே?
மனிதவுரிமையாளர்களின் மனிதங்கள்
மரித்து போனதுவோ !!!!!
இதுவுமொரு
பயங்கரவாத எதிர்ப்பு போரோ ?
ஒக்ஸ்போர்ட்டுக்குச் சென்றவர் நாட்டின் தலைவரே, நாட்டாமை அல்ல" கெஹகலிய சீற்றம்
லண்டன் ஒக்ஸ்போர்ட் யூனியனில் உரையாற்றுவதற்கு கொழும்பிலிருந்து நாட்டாமையை அனுப்பவில்லை எனவும் பொது நலவாய அமைப்பில் அங்கம் வகிக்கும் நாட்டின் தலைவரேசென்றதாகத் தெரிவித்த
அணு குண்டு தயாரிக்கும் முயற்சியில்பர்மா!
பர்மாவில் உள்ள சர்வாதிகார ஜிந்தா ஆட்சியாளர் இரகசியமான முறையில் அணுகுண்டு, ஏவுகணைகள் போன்றவற்றை தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது. பர்மாவின் அடந்த காட்டுப்பகுதியில் நிலத்தடியில் மிகக் கவனமாக உருவாக்கப்பட்ட கட்டிடப்பகுதியில்
பிரச்னைகள் இல்லாத மனிதனே கிடையாது!
வாழ்க்கையில் நமக்கு ஏற்படும் பிரச்னைகள் கூட ஒரு அனுபவம் தான். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான பிரச்னைகள் இருக்கும். அதுபோலவே, ஒவ்வொரு பிரச்னைக்கும் ஒவ்வொரு விதமான தீர்வு இருக்கும்.எனவே, பிரச்னைகளைக் கண்டு பயந்துவிடாமல்
போர்க்குற்றங்கள் தொடர்பான ஒளிப்படத்தில் போராளியொருவர் தற்போது அடையாளம் காணப்பட்டார்.!!!!!!
மல்லாவி, யோகபுரம் 02 ம் யுனிற்றை சேர்ந்த சந்திரசேனன் - வினோதன் (இயக்க பெயர்- இமையவன் .வயது 20 ) என்பவராவார் 2007 / 03ம் மாத மளவில் இயக்கத்தில் இணைந்து கொண்ட இவர் கிளிநொச்சி மருத்துவ மனை,,புதுக்குடியிருப்பு மருத்துவமனை ஆகிய வைத்தியசாலைகளில் மருத்துவ போராளியாக காயமடைந்து வரும் பொது மக்களுக்கான பணியினை மேற்கொண்டிருந்தார். போர் உக்கிரமடைந்த காலப்பகுதியில் மாத்தளன் மற்றும்,,முள்ளிவாய்க்கால் பகுதி தற்காலிக வைத்தியசாலைகளில் தனது கடமைகளை மேற்கொண்டிருந்த வேளை காயமடைந்த பொது மக்கள்,, போராளிகளுடன் இராணுவத்தால் 2009 / 05 /18 கைது செய்யபட்டுள்ளார்.. மேலும் இவரது சகோதரனான சந்திரசேனன் -விருந்தன் வயது 18 என்பவரும் படுகாயமடைந்த நிலையில் இராணுவத்தால் கைது செய்ய பட்டு காணமல் போய்யுள்ளார். என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை????
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை, தாம் இரண்டாம் தவணையிலும் அதே பதவியில் நீடிக்கும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக, இன்னர் சிற்றி பிரஸ் குற்றம் சுமத்தியுள்ளது. இதன் அடிப்படையிலேயே அவரது தற்போதைய செயற்பாடுகள் காணப்படுவதாக அது தெரிவித்துள்ளது.
மகிந்தவின் முட்டாள்தனம் !!!
“பிரிட்டனுக்குச் சென்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, உறங்கிக் கொண்டிருந்த விடுதலைப் புலிகளைத் தட்டி எழுப்பி விட்டுள்ளார். அவர்கள் போராட் டங்களை மீள ஆரம்பிப்பதற்கான வாசலையும் திறந்து விட்டுள்ளார்’ என்று ஜே.வி.பியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா நேற்றுக் குற்றஞ்சாட் டினார்.
இயற்கையும் வஞ்சிக்கிறது - மழை,வெள்ளத்தில் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிப்பு!
சிறிலங்காவில் கடந்த இரண்டு வாரங்களாகப் பெய்து கடும் மழையினால் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் வடபகுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வியாழன், 9 டிசம்பர், 2010
விரிந்துக் கிடக்கின்ற ஈர நிலத்தில் விடுதலைக் கனவு சுமந்த கண்கள் கட்டப்பட்டு..மறுத்த உரிமைகளின் மேல் வெகுண்டெழுந்த கைகள் இறுக்கப்பட்டு… தகிக்கின்ற சுதந்திர தாகத்திற்காக, இறுதியில் ஆடையும் அவிழ்க்கப்பட்டு ..சிறு முனகலோடு சிதைகிற சகோதரன். வன்புணர்வின் வலியில் கசங்கிய மலராய்.. உதிர முகத்துடன் உரு கலைக்கப்பட்டு ..வீழ்ந்து கிடக்கின்ற சகோதரி.. இறுகிக் கிடக்கும் உடலில் போர்த்தப்பட்டிருக்கும் உடையை காற்று கூட விலக்க துணியாமல் கண் கலங்கி நிற்கையில்.. வக்கிர சிரிப்புடன் ஆடை அவிழ்ந்து காட்டும் மன நோய்க்கு உலகம் வைத்திருக்கும் பேர்தான் பயங்கரவாத எதிர்ப்புப் போர்..
இந்த உலகில் வாழ்கிற சாதாரண மனிதர்களைப் போல் உரிமைகளுடன் கூடிய வாழ்க்கைக்காக ..விடுதலை வேட்கையுடன் போராடியமாவீரர்களை பயங்கரவாதிகள் என சித்தரித்த சர்வதேச சமூக வல்லாதிக்கத்தின் முகத்திற்கு முன் அலை அலையாய் விழுந்துக் கொண்டே இருக்கின்றன...
தேசிய பாதுகாப்பு சட்டம் ரத்து. சீமான் விடுதலை ஆவார்
திரைப்பட இயக்குனரும், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான சீமான் மீதான தேசிய பாதுகாப்பு சட்ட நடவடிக்கையை ரத்து செய்து, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிபதிகள் தர்மாராவ், ஹரிபரந்தாமன் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்கப்படுவதை கண்டித்து, சென்னையில் நாம் தமிழர் இயக்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் இந்திய இறையாண்மைக்கு எதிராக சீமான் பேசியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பின்னர் அவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.பரபரப்பான அந்த சூழ்நிலையில் சென்னை பத்திரிகையாளர் மன்றத்துக்கு பத்திரிகையாளர்களை சந்திக்க சீமான் வந்தபோது, போலீசார் அவரை கைது செய்து வேலூர் சிறையில் அடைத்தனர்.
வன்னி மக்கள் மழைத் தண்ணீரைத் தவிர வேறு தண்ணியினை கண்டதேயில்லை. அவர்களுக்கு தண்ணீரைக் காட்டியவர்களே நாங்கள் தான் என்று அடிதடி அமைச்சர் மேர்வின் சில்வா சபையில் கூச்சலிட்டிருக்கின்றார்!!!
நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற விவாத்தின் போது தனது உரையில் வன்னி மக்களை மிகவும் கீழ்த்தரமானவர்கள் என்றும் அவர்கள் எதனையும் கண்டதில்லை என்ற தொனிப்பட கீழ்த்தரமான சொற்பிரயோகங்களைக் கையாண்டு உரையாற்றியிருக்கின்றார்.
இலங்கையில் இடம்பெற்ற யுத்த குற்றங்களில் இந்தியா பாரிய பொறுப்பு -அமெரிக்கா
இலங்கையில் இடம்பெற்ற யுத்த குற்றங்களுக்கு இந்தியா பாரிய பொறுப்பு வகிப்பதாக, அமெரிக்க இராஜாங்க தகவல்கள் தெரிவித்துள்ளன. புதிதாக வெளியாகியுள்ள விக்கிலீக்ஸ் இணையத்தளத்தின் தகவல்கள் இவற்றை உறுதி செய்துள்ளன. விக்கிலீக்ஸ் வழங்கிய தகவல் அடிப்படையில், த வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் என்ற சஞ்சிகை இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)













