ஞாயிறு, 2 ஜனவரி, 2011

கிளாலிப் படுகொலைகள் (02.01.1993 - 29.07.1993 வரை)

யாழ் குடாநாட்டினையும் அதன் வெளி நிலப்பரப்பையும் ஊடறுத்துச் செல்லும் பிரதான தரைவழி மார்க்கம் ஆனையிறவு ஆகும். 1990ஆம் ஆண்டு ஏப்பிரலுக்கு முன்னர் யாழ் குடாநாட்டிலிலுள்ள எட்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்களின் போக்குவரத்து, விநியோகப் பாதையாக ஆனையிறவு ஊடான தரை வழிப்பாதையே இருந்தது. 1990ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் மீண்டும் ஆரம்பமான போரின் விளைவால் தரைவழிப் பாதை மூடப்பட்டது. இதன் பின்னர் யாழ் மக்களின்போக்குவரத்துநகர்வுகள்,உணவுவிநியோகமார்க்கங்கள்என்பனஆனையிறவுக்குமேற்குப்புறமாகஅமைந்துள்ளபூநகரி-கேரதீவு-சங்குப்பிட்டியினூடாக நடைபெற்றது. இப்போக்குவரத்து மார்க்கம் கடல் நீரேரியூடாக இருந்தது.

பறவைகளே எங்கிருந்து வருகிறீர்கள்? முன்பும் நீங்கள் வந்ததாக ஞாபகம்!!!

கனவு பற்றி அதிகமாக ஆய்வு செய்தவர் ‘சிக்மண்ட் பிராய்ட்’ என்ற உளவியலாளர். கனவு பற்றி அவர் முன்வைத்த கருத்துக்கள் முதன்மை பெற்றுள்ள போதிலும் கனவு குறித்த பல கதைகள் ஏற்கெனவே நம்மிடம் உண்டு.திரிசடை கண்ட கனவு சீதையின் விடயத்தில் சரியாகிப் போனது. எனவே கனவுகள் அத்தனையும் நனவிலி மனத்தின் வெளிப்பாடு என்று கூறுவதற்கு அப்பால் எதிர்கால நிகழ்வுகளும் கனவுகளாகக் காட்சி தரும் என்பதை அடியோடு மறுத்துவிட முடியாது. அந்த வகையில் நேற்று இரவு ஆழ்ந்த நித்திரையில் ஒரு கனவு கண்டேன். அது வித்தியாசமான கனவு.மிகப்பெரியதொரு பறவைக் கூட்டம் போட்டி போட்டு பறந்து வருகிறது. பறவைகளில் கறுப்புப் பறவைகள் ஏராளம். பறக்க முடியாத பறவைகளும் தாராளம். குஞ்சுப் பறவைகள் முதல் முதிய பறவைகள் வரை தமது சிறகுகளை விரித்து அடித்துப் பறந்து வரும் வேகத்தைக் கண்ட போது, ஏதோ வைத்த பொருளை எடுக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு அவை பறந்து வருவதாக உணர முடிந்தது.

அரசுடன் பேசும் வாய்ப்பு இந்த மாதம் ஏற்படலாம் -சுரேஷ் பிரேமச்சந்திரன்

அரசியல் தீர்வு தொடர்பாக அரசாங்கத்துடன் இந்த மாதம் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு எதிர்பார்ப்பதாகத் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இச்சந்திப்பு தொடர்பில் அரசாங்கத்திடமிருந்து சாதகமான சமிக்ஞை தென்படுவதாக,, அரசாங்கத்தின் நிலைப்பாடு தொடர்பில் தமக்கு எதுவும் தெரியாது. அவர்கள் உண்மையாக செயற்பட்டால் எமது முன்மொழிவுகளை கையளிப்போம். நாம் பொறுத்திருந்து பார்ப்போம் என்றார். வடக்குக் கிழக்கு மாகாணங்கள் மீண்டும் இணைய வேண்டும். மற்றும் சமஷ்டி முறையின் கீழ் வடக்கு கிழக்கு மாகாணங்களில் அதிகார பரவலாக்கம் இடம்பெற வேண்டும் என கடந்த ஏப்ரல் 8ஆம் திகதி தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்ததையும் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஞாபகப்படுத்தினார்.

இலங்கைக்கான பயணத்தை ஐ.நா. நிபுணர் குழு கைவிட்டது!

ஐ.நா. நிபுணர்குழு இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளும் முடிபை கைவிட்டுள்ளதாகவும் இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு அடுத்த வாரம் வெளியாகும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐ.நா. நிபுணர்குழு இலங்கை வருவதற்கு நுழைவு அனுமதி வழங்கத் தயார் என்றும் ஆனால் அவர்கள் நல்லிணக்க ஆணைக் குழுவை மட்டுமே சந்திக்க முடியும். வேறுயாரையும் சந்திக்கவோ விசாரணை நடத்தவோ முடியாது என்றும் அரசாங்கம் அறிவித்திருந்தது.

புத்தாண்டு தினத்தில் உரும்பிராயில் ஒருவர் காணமற்போயுள்ளார்

புத்தாண்டு தினத்தில் உரும்பிராயில் ஒருவர் காணமற்போயுள்ளார் இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, சிவகுல வீதி, உரும்பிராய் மேற்கு, உரும்பிராயைச் சேர்ந்த ஓட்டோ சாரதியான சோதிநாதன் கோபிநாத் (வயது – 27),என்பவரே நேற்று காணமற் போய்யுள்ளார் புத்தாண்டு தினத்தன்று அதிகாலை 7.30 மணியளவில் ஒரு தொலைபேசி அழைப்பு வந்ததாகவும்,அதனைத் தொடர்ந்து தனக்கு ஒரு HIRE வந்திருப்பதாகவும், உடனே போய்ட்டு வருவதாகவும் கூறிய கோபிநாத் இன்றுவரை வீடு திரும்பவில்லை. கோபிநாத் வீடு திரும்பாததை அடுத்து, அவரது மனைவி  தனது கணவர் காணமற் போயுள்ளார் என முறைப்பாடு செய்துள்ளார். கோபிநாத் ஒரு பிள்ளையின் தந்தையாவார்

சனி, 1 ஜனவரி, 2011

யாழிலும் மீன்பிடி முறைகளில் இறுக்கம்

இலங்கையில் நாடளாவிய ரீதியில் சட்டரீதியாக நடைமுறையில் உள்ள மீன்பிடி முறைகளுக்கமைய யாழ் பிரதேச மீனவர்களும் மீன்பிடி தொழிலில் ஈடுபட வேண்டும் என்றும், அவற்றை மீறிச் செயற்படுபவர்கள் மீன்பிடி தொழில்தண்டனைச்சட்டத்திற்கமைய தண்டிக்கப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய ஆண்டின் துவத்திலிருந்து இந்த நடைமுறை இறுக்கமாக கடைப்பிடிக்கப்படும் என கடற்தொழில் திணைக்களத்தின் யாழ் மாவட்டத்திற்கான உதவிப் பணிப்பாளர் கந்தையா தர்மலிங்கம் தெரிவித்திருக்கின்றார்.

குடாநாட்டில் மர்மமான முறையில் தொடரும் வன்முறைகள்

யாழ் குடாநாட்டில் மர்மமான முறையில் தொடரும் வன்முறைகள் மற்றும் ஆட்கடத்தல் சம்பவங்களினால் அங்குள்ள பொதுமக்கள் மத்தியில் அச்சமும் பதற்ற நிலைமையும் தொடர்வதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கடந்த இரண்டு தினங்களுக்குள், இளைஞன் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கின்றார். மற்றுமொரு இளைஞனும் பெண் ஒருவரும் வெவ்வேறு சம்பவங்களில் கடத்திச் செல்லப்பட்டிருக்கின்றார்கள்.

வவுனியா – மன்னார் எல்லையில் 2500 ஏக்கர் காடழிப்பு! நில ஆக்கிரமிப்பு தீவிரம்

வவுனியா – மன்னார் எல்லையில் உள்ள 2500 ஏக்கர் காடுகள் முற்றாக தமிழ் மக்களுக்குச் சொந்தமான நிலப் பகுதி சிங்கள மயமாக்கப்படும் அதேவேளை இயற்கை வளங்களும் சுரண்டப்பட்டுவருவதாக மன்னார் தகவல்கள் தெரிவிக்கின்றன.இது குறித்து மேலும் தெரியவருவதாவது, மன்னார் மாவட்டத்திற்குபட்ட சின்னத்தம்பனை, மடுக்குளம், வேலங்குளம் ஆகிய கிராமங்களை அண்டியதாக இந்த காடழிப்பு இடம்பெற்று வருவதாக அண்மையில் குறித்த கிராமங்களில் மீளக்குடியமர்ந்த மக்கள் தெரிவித்திருக்கின்றனர்.

வன்னி மக்களைச் சொல்லி சிங்களக் குடியேற்றங்களுக்கு இந்தியா உதவி!!!!

வன்னிமக்களுக்கு எனத் தெரிவித்து வடக்கில் சிங்களக்குடியேற்றங்களுக்கு உதவிபுரியும் நடவடிக்கையில் இந்தியா செயற்பட்டுவருவதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கவென இந்திய அரசினால் அனுப்பப்பட்ட உழவியந்திரங்களில் 200 கஜூ பண்ணை, கோகொணெற் பண்ணை ஆகியவற்றுக்கு அனுப்பப்பட்டதன் அடிப்படையிலேயே இந்தச் சந்தேகம் வலுப்படுத்தப்பட்டுள்ளது.

விடுதலைப் போராட்டத்தின் எதிரிகள் அத்தனைபேரும் அடையாளம் காணப்பட்ட ஆண்டு. பிரபாகரன் என்ற வீரனின் புகழ் தொடர்ந்து அதிகரித்து சென்ற ஆண்டு.!!

2010 என்னும் ஆண்டு. 2011 ஐ ஈழத்தமிழனுக்கென்றே உயில் எழுதிவிட்டுப் போகும் ஆண்டாகும்.
கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக புலிகளால் வழி நடாத்தப்பட்ட இலங்கைத் தமிழர் அரசியல் அவர்களின் வழிநடாத்தல் இல்லாமல் தனிவழி நடந்து பார்த்த முழுமையான ஆண்டு இதுவாகும். இந்த ஆண்டில் நடந்த சம்பவங்கள் என்ன… 2010 விட்டுச் செல்லும் பாடங்கள் என்ன… இதோ சில உதாரணங்கள்…

வெள்ளி, 31 டிசம்பர், 2010

நேற்றும் இன்றும் நாளையும் ஒரே மாதிரித்தான் விடிகிறது.. புதிய வருடம் மாற்றங்களை தர வேண்டும்!

நேற்றும் இன்றும் நாளையும் ஒரே மாதிரித்தான் விடிகிறது. எந்த மாற்றங்களும் இல்லை. எந்த முன்னேற்றங்களும் இல்லை. மூடப்பட்ட ஊர்கள் அப்படியே இருக்கின்றன. உரிமைகள் மறுக்கப்பட்ட  மக்கட் கூட்டத்தின் தொடரும் சாபம், இரத்தமும் சதையுமாய் எங்கள் காலத்திலும் பரவிச் செல்கிறது தமிழர்களுக்கு மட்டும் ஏன் துப்பாக்கிகளின்; அச்சுறுத்தல்கள் எப்பொழுதும் பரிசளிக்கப்படுகின்றன. உரிமைக்காக இலட்சியத்திற்காக துப்பாக்கி ஏந்திய மக்களை, தங்கள் துப்பாக்கிகளும் காக்கி உடைதரித்த துப்பாக்கிகளும் அச்சுறுத்துகின்றன.
 தமிழர்கள் எதையும் கேட்க முடியாத  அச்சமான சூழலுக்குள் வைத்திருக்க வேண்டும் என்று இந்தத் துர்ப்பாக்கியமான  துப்பாக்கிதாரிகளும் நினைக்கிறார்கள் வாழ்வுக்காக போராடும் தமிழ் பேசும் மக்களினின்வாழ்வுரிமைகள் சிறக்க வேண்டும். ஒன்றாய் பலம் சேரக்க வேண்டும்.  இன்றும் சிலர் கொல்லப்படலாம் என்ற அச்சத்தில் இருக்கிறது தாய்நிலம். கொல்லப்பட்டவர்களில் யாரினதோ சடலம் கொண்டு செல்லப்படும் பொழுது வெடியோசைகள் கனத்துக் கேட்கின்றன. இந்த வெடியோசைகள் புதுவருடத்திற்காகவா?
 

சிறிலங்கா காவல்துறை மா அதிபர் எழுதியுள்ள விடுதலைப் புலிகள் தொடர்பான நூல்

விடுதலைப் புலிகளின் எழுச்சியும் வீழ்ச்சியும்‘ என்ற தலைப்பிலான நூல் ஒன்றை சிறிலங்காவின் காவல்துறை மா அதிபர் மகிந்த பாலசூரிய எழுதி வெளியிட்டுள்ளார்.  இந்தநூலில் விடுதலைப் புலிகள் இயக்கத்தை முறியடிப்பதற்கு சிறிலங்கா காவல்துறை தரப்பில் கையாளப்பட்ட உத்திகள் தொடர்பாகவும் அவர் எழுதியுள்ளதாக தெரியவருகிறது.

இலங்கையின் நிபந்தனையை ஐக்கிய நாடுகள் சபை ஏற்க மறுப்பு

ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவால் நியமிக்கப்பட்ட உண்மைகளைக் கண்டறிவதற்கான நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிப்பதற்கு மட்டுமே ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர் குழுவுக்கு நுழைவு அனுமதி வழங்கப்படும் என அரசாங்கம் விதித்திருக்கும் நிபந்தனையை ஐக்கிய நாடுகள் சபை நிராகரித்துள்ளது.  வன்னியில் கடந்த வருடம் இடம்பெற்ற போரின் போது படைத்தரப்பால் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக சுயாதீனமான சர்வதேச விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென மனித உரிமை அமைப்புக்களும் மேற்கத்தேய நாடுகளும் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றன.

அல்வாயில் ஆயுததாரிகளால் பெண் கடத்தப்பட்டார்

அல்வாய் கிழக்குப் பகுதியில் அப்பகுதியிலுள்ள வர்த்தக நிலையமொன்றின் உரிமையாளரான பெண் ஒருவர் வெள்ளைவானில் வந்த 6 பேர் கொண்ட இனந்தெரியாத ஆயுததாரிகளினால் கடத்திச் செல்லப்பட்டுள்ளார். அல்வாய் கிழக்கு மணியம் பாடசாலை வீதியிலுள்ள வர்த்தக நிலையமொன்றின் உரிமையாளரான திருமதி யோகநாதன் புஸ்பாதேவி (வயது 48) என்பவரே இவ்வாறு கடத்தப்பட்டவராவார். நேற்று மாலை அவரது வீட்டிற்குள் நுழைந்த ஆயுததாரிகள் வலுக்கட்டாயமாக அவரை இழுத்துச் சென்றுள்ளனர். இதன்போது தாயாரை ஆயுததாரிகளிடம் இருந்து காப்பாற்றுவதற்காக இழுபறிபட்ட பிள்ளைகளை துப்பாக்கியால் அச்சுறுத்தி விட்டு அவரைக் கடத்திச் சென்றுள்ளனர். கடத்தப்பட்ட பெண் ஆறு பிள்ளைகளின் தாயாராவார்.

'சிலோன் போய் சிறிலங்கா வருகிறது'

இலங்கையில் பழைய காலனித்துவ கால பெயரான சிலோன் என்ற பெயரைக் கொண்டிருக்கும் அனைத்து அரசாங்க நிறுவனங்களுக்கும் சிறிலங்கா என்று பெயரை மாற்றிவைக்க இலங்கை அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.இலங்கைக்கு சிறிலங்கா என்று பெயரிடப்பட்டு 39 வருடங்களுக்குப் பின்னர் தற்போது இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவிருக்கிறது.இந்த பெயர் மாற்ற நடவடிக்கைகள் 2011இல் முடிந்தவரை விரைவாக நடக்கும்.அனாவசியமான காலனித்துவ கால எச்ச சொச்சங்களை களைவோம் என்ற புதுவருட உறுதி மொழியாக இது மேற்கொள்ளப்படவிருக்கிறது.

குடத்தனைச் சம்பவத்தில் படுகாயம் அடைந்தவர் உயிரிழந்தார்!? மணற் விற்பனையை அம்பலப்படுத்தினாராம்!!

வடமராட்சி கிழக்குப் பிரதேசத்தின் குடத்தனை கிழக்கில் வீடு புகுந்து ஆயுததாரிகள் துப்பாக்கியால் சுட்டதில் இளம் குடும்பஸ்தர் தபாலக ஊழியரான தேவராசா கேதீஸ்வரன் (வயது 28) ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மந்திகை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. தனது முகநூல் (Facebook) பகுதியில் சிறீலங்கா இராணுவம் மற்றும் துணைக் குழுக்களின் ஆதரவுடன் யாழ். மணித்தலைப் பகுதியில் மணல் அள்ளப்படுவதால் கடல் நீர் உட்புகுந்துள்ளதற்கான ஆதாரபூர்வமான படங்களையும், கார்த்திகைப் பூவை கையில் வைத்தபடி நிற்கும் படங்களையும் பதிவு செய்து வைத்திருந்தார். இதனாலேயே இவர் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது. அந்தத் தகவலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, குடத்தனை கிழக்கில் உள்ள இவரது வீட்டிற்குள் புகுந்த இனந்தெரியாத ஆயுததாரிகள் அவரது கணனியை காண்பிக்குமாறு கேட்டுள்ளனர். அதற்கிணங்க வீட்டினுள் அழைத்துச் சென்றபோது ஆயுததாரிகள் அவர்மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.