புதன், 14 ஏப்ரல், 2010

ராஜீவ் கொலை - நளினி விடுதலை - தடை என்ன? - கீற்று

ராஜீவ் காந்தி கொலைவழக்கில் தண்டிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினியை விடுவிக்க வேண்டும் என்ற சட்ட நடவடிக்கை தற்போது சூடுபிடித்துள்ளது. இந்த விவகாரத்தில் பெரும்பாலான இந்தியர்கள், நளினியை விடுதலை செய்யக்கூடாது என்ற கருத்துடையவர்கள் என்று மீடியாக்கள் கூறுகின்றன.


நளினியை விடுவிப்பதில் அரசியல் ரீதியான தடையைவிட, சட்டரீதியான தடையைவிட உளவியல் ரீதியான தடையே மிகுந்த முக்கியத்துவம் வகிக்கிறது. நளினியை விடுதலை செய்யவேண்டும் என்று கருத்து தெரிவிப்பவர்களுக்கு தேசவிரோதி, தீவிரவாதி என்பது போன்ற முத்திரைகள் குத்தப்படலாம் என்பதாலேயே இந்த பிரச்சினையில் கருத்து கூறுவதற்கு பலரும் தயங்குகின்றனர்.

ராஜீவ் காந்தியை கொலை செய்ததை நியாயப்படுத்தியும், நளினியை தண்டித்தது தவறு என்றும் நாம் வாதிடுவதாக பொருள் கொள்ள வேண்டிய அவசியமில்லை. ஆனால் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினியை விடுவிக்கவே கூடாது என்று கருதுவதிலும், அக்கருத்தை பரப்புவதிலும் உளவியல் ரீதியான சிக்கல்கள் இருக்கின்றன.


இந்த உளவியல் ராஜீவ் காந்தி கொலை வழக்கு மற்றும் நளினி ஆகியோர் மட்டுமே தொடர்புடையது அல்ல. இந்த உளவியல் சமூகத்தின் அனைத்து பிரச்சினைகளிலும் பிரதிபலிக்கும்போது அது அனைத்து இந்தியர்களின் மனித உரிமைகளுக்கும் எதிராக செயல்படுகிறது. அதாவது பொதுமக்களின் நலன்களுக்கு எதிரான உளவியல் பொதுமக்களிடமே இருக்கிறது என்பது சுவாரசியமான ஆனால் கவலைக்குரிய உண்மை.
விரிவாகப் பார்ப்போம்.


நளினி விடுதலை குறித்து கருத்து சொல்ல விரும்பும் அரசியல் சாராத பொதுமக்கள், இந்த பிரச்சினை குறித்து ஆழ்ந்து யோசித்து முடிவுகளையும், கருத்துகளையும் சொல்வதில்லை. அதற்குப் பதிலாக சமூகத்தில் பிரபல மனிதர்கள் மீது மீடியாக்கள் கட்டமைக்கும் பிம்பங்களை உண்மையென்று நம்பி, அதன் அடிப்படையில்தான் பொதுமக்களின் கருத்துகள் உருவாக்கப்படுகின்றன. தங்களுக்கு சாதகமான இந்த நிலை நீடித்திருப்பதையே ஆதிக்க சக்திகளும், மீடியாக்களும் விரும்புகின்றன.

இதற்கு மிகச்சிறந்த உதாரணம் ராஜீவ் காந்தி விவகாரம்தான். ராஜீவ் காந்தி குறிந்து இந்திய மீடியாக்கள் கட்டமைக்க விரும்பும் பிம்பம் இதுதான்! அவர் மலிவான அரசியலுக்கும், ஊழல் கலாசாரத்திற்கும் அப்பாற்பட்டவர்... இளமைத் துடிப்பு மிக்கவர்... அவர் உயிரோடு இருந்திருந்தால் இந்தியா மிக எளிதில் வல்லரசாகி இருக்கும்... என்பது போன்ற கருத்துகளையே மீடியாக்கள் மக்கள் மனத்தில் உளவியல் ரீதியாக நிறுவ விரும்புகின்றன. தற்போது ராஜீவ் காந்தி இல்லாததால்தான் இந்தியா இத்தகைய முன்னேற்றங்களை அடையமுடியவில்லை என்று மக்கள் எண்ணுவதற்கு மீடியாவின் இத்தகைய திட்டமிட்ட செயல்பாடுகளே காரணம்.


ஆனால் உண்மைகளோ வேறு விதமாக இருந்ததை வரலாறு உணர்த்துகிறது. மிக இளம் வயதில் பிரதமர் பதவியை ராஜீவ் காந்தி ஏற்றதற்கு, அன்றைய காலகட்டத்தில் நிலவிய அரசியல் சூழலே காரணம். உண்மையில் ராஜீவ் காந்தியே அதை அன்று எதிர்பார்த்திருக்க மாட்டார்.

இந்திரா காந்தி கொலை சம்பவத்தை தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியின் தலைமை பீடத்தை அலங்கரிக்க அனைத்து மாநில மக்களின் ஆதரவு பெற்ற கவர்ச்சியான தலைவர்கள் யாரும் இல்லை. எனவே நேரு குடும்பம் மற்றும் காந்தி என்ற பெயர் ஆகியவற்றுக்கு மக்களிடையே இருந்த நல்லெண்ணத்தை கொள்முதல் செய்யும் வகையிலும், காங்கிரஸின் வாரிசு அரசியல் பாரம்பரியத்தை மீண்டும் ஒருமுறை நிரூபிக்கும் வகையிலும் காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராஜீவ் காந்தி தேர்வு செய்யப்பட்டார். அதோடு பிரதமர் பதவியையும் ஏற்றார்.

காங்கிரஸ் கட்சியில் பல்வேறு பதவிகளை ஏற்று, பல்வேறு பணிகளை செய்த தலைவர்களும், இளைஞர்களும் ஏராளமானோர் இருந்தபோதிலும், “நேரு குடும்பத்து வாரிசு” என்ற ஒற்றைத் தகுதியின் அடிப்படையிலேயே அவரிடம் அதிகாரமும், பதவியும் போய்ச் சேர்ந்தது. சீமான் வீட்டு வாரிசாக, சாதாரண மக்களின் எந்த பிரச்சினை குறித்தும் உரிய அறிவோ, தெளிவோ இல்லாத நிலையில் மிகப்பெரும் செல்வந்தர்களின் பொழுதுபோக்கான விமானம் ஓட்டுதலில் ஆர்வம் செலுத்திவந்த ராஜீவ் காந்தியிடம் பதவி வந்து சேர்ந்தது. ஆட்சிப் பொறுப்பை ஏற்ற ராஜீவ் காந்தி அவரது இயல்புக்கு ஏற்ற ஆட்சியையே நடத்தினார்.

உதாரணமாக, இந்திரா காந்தி கொலையைத் தொடர்ந்து சீக்கியர்களை அழித்தொழிப்பதை ஒரு பிரிவு காங்கிரஸ் கட்சியினர் ஒரு வேலைத்திட்டமாகவே நிறைவேற்றினர். இந்த சம்பவத்தில் சுமார் 3 ஆயிரம் சீக்கியர்கள் கொல்லப்பட்ட கொடுமை நிகழ்ந்த்து. இந்தப் படுகொலைக்கு காரணமானவர்கள் மீதான விசாரணை இதுவரை முழுமையாக முடியவில்லை. இந்தச் சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த திருவாளர் ராஜீவ் காந்தி, “ஒரு பெரிய ஆலமரம் வீழும்போது, அருகிலிருக்கும் நிலம் அதிரத்தான் செய்யும், அந்த அதிர்வில் புல், பூண்டுகள் பாதிப்படைவதை தவிர்க்க முடியாது!” என்று கூறினார். அதாவது இந்திரா காந்தி ஆலமரமாம். அவரது மரணத்தைத் தொடர்ந்து கொல்லப்பட்ட சீக்கியர்கள் அனைவரும் புல், பூண்டுகள்! ராஜீவ் காந்தியின் இந்தக் கருத்து அகில உலகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாத ராஜீவ் காந்தி தமது கருத்துக்கு பகிரங்கமாக மன்னிப்பு கோரி அக்கருத்தை திரும்பப் பெற்றார்.

ஆனாலும், சுமார் 3 ஆயிரம் சீக்கியர்கள் கொல்லப்பட்ட சம்பவம் நடந்து 25 ஆண்டுகள் கடந்துவிட்ட பின்னரும் இதுவரை ஒருவர்கூட இந்த வழக்கில் தண்டிக்கப்படவில்லை. இந்த சம்பவங்கள் குறித்து எந்த சான்றுகளும், ஆதாரங்களும் இல்லாதவகையில் திட்டமிட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த கயமைக்கு அப்போதைய இந்திய அரசின் தலைவரான ராஜீவ் காந்தியும் ஒரு முக்கிய காரணம் என்பதை மறந்து விட முடியாது.


இத்தகைய சிந்தனையோட்டம் கொண்ட ராஜீவ் காந்தி இன்று இருந்திருந்தால் என்னவெல்லாம் நடந்திருக்கும் என்பதை எண்ணிப்பார்க்கவே அச்சமாக இருக்கிறது. பன்னாட்டு நிறுவனங்களுக்கு இந்தியாவை தாரை வார்க்கும் இன்றைய அரசியல் சூழலில் எவ்வாறு செயல்பட்டிருப்பார் என்பதை கணிக்க முடியவில்லை. குறிப்பாக வடகிழக்கு மாநிலங்களில் உள்ள தாது மற்றும் இயற்கை வளத்திற்காக அப்பகுதியின் மண்ணின் மைந்தர்களான பழங்குடி மக்களை கொன்றும், பாலியல் உள்ளிட்ட பலவகை வன்முறைகளை செய்தும் அகற்றி, அப்பகுதிகளை பன்னாட்டு நிறுவனங்களுக்கு கையளிக்கும் ஆபரேஷன் கிரீன்ஹன்ட் என்ற அரச பயங்கரவாத நடவடிக்கைக்கு சிதம்பரத்திற்கு பதிலாக ராஜீவ்காந்தியே தலைமை ஏற்று செயல்பட்டிருப்பார்.


ராஜீவின் சகோதரர் சஞ்சய் காந்தி நெருக்கடி நிலை காலத்தில் அறிவிக்கப்படாத அதிகார மையமாக செயல்பட்டதும், ஏராளமான ஏழை மற்றும் ஆதரவற்ற மக்களுக்கு கட்டாய கருத்தடை செய்து, வறுமை ஒழிப்புத் திட்டங்களை அமல்படுத்தியதும் இளைய தலைமுறைக்குத் தெரியாது. மூத்த தலைமுறையோ இதுபோன்ற அராஜகங்களை திட்டமிட்டு மறைத்து வருகிறது.

ஈழத் தமிழர் பிரச்சினையிலும் ராஜீவ் காந்தியின் போக்கு அவரது இயல்புக்கு ஏற்றதாகவே இருந்தது. பிராந்திய மேலாதிக்கத்தை தக்கவைத்துக் கொள்ளும் நோக்கத்தில், பிரச்சினை தொடர்பானவர்களை ஆலோசிக்காமலே ஒப்பந்தங்களை தீட்டி அந்த ஒப்பந்தத்தை ஈழத்தமிழர் மீது திணித்ததில், தமது அரசியல் திறனின்மையை ராஜீவ் காந்தி வெளிக்காட்டினார்.

இதையடுத்து ஏற்பட்ட அரசியல் சூழல்களில் இந்திய ராணுவம் இலங்கையின் அரசியலில் நேரடியாக தலையிடும் சூழல் ஏற்பட்டது. அமைதி காப்பதற்காக போன ராணுவம், அங்கே செய்த காரியங்கள் அன்றைய முதலமைச்சர் கருணாநிதியையும் பெருத்த அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இலங்கைக்கு சென்ற ராணுவம் திரும்பிவந்தபோது அந்த ராணுவத்தை வரவேற்க முதலமைச்சர் கருணாநிதி செல்லவில்லை என்பது வரலாறு!

இதற்கிடையில் இந்திய அரசியலில் சமூக நீதி என்ற புதிய ஆயுதத்தோடு களம் இறங்கிய வி.பி. சிங்-கின் வீச்சால் காங்கிரஸ் ஆட்சியையும் இழந்திருந்தது. கூட்டணி ஆட்சியின் பிரதமராக வி.பி. சிங் பதவியேற்று, பல ஆண்டு காலமாக காங்கிரஸ் கட்சி கிடப்பில் போட்டிருந்த மண்டல் கமிஷன் பரிந்துரையை அமல் செய்து பெரும்பான்மை மக்களான பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீட்டிற்கு வழிவகுத்தார். வி.பி. சிங்கின் இந்த நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட பாரதிய ஜனதா கட்சி, ராமர் கோவில் பிரச்சினையை கையில் எடுத்து வி.பி.சிங் ஆட்சியை கவிழ்த்தது.

மீண்டும் தேர்தல்! நாட்டின் பெரும்பான்மையாக உள்ள பிற்படுத்தப்பட்ட மக்களின் ஆதரவு பெற்ற வி.பி.சிங், மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கு உகந்த சூழ்நிலை நிலவியது.

தேர்தல் பிரச்சாரத்திற்கு தமிழகம் வந்த காங்கிரஸ் கட்சியின் தலைவரும், பிரதமர் வேட்பாளருமான ராஜீவ் காந்தி சென்னை அருகே திருபெரும்புதூர் அருகே பொதுக்கூட்டம் ஒன்றிற்கு வந்தபோது மனிதவெடிகுண்டு தாக்குதலில் உயிரிழந்தார். இந்த தாக்குதலில் வேறெந்த காங்கிரஸ் கட்சித்தலைவரோ, காவல்துறை உயர் அதிகாரிகளோ பாதிக்கப்படவில்லை என்ற உண்மை உலகத்தினரை வியப்பில் ஆழ்த்தியது.

இதையடுத்து நடந்த விசாரணையில் ராஜீவ் காந்தி கொலையாளிகளுக்கு உதவியதாக குற்றம் சாட்டப்பட்ட நளினிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் இது ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது. இதன்படி கடந்த 19 ஆண்டுகளாக நளினி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

ஆயுள் தண்டனை என்பதன் பொருள் இந்திய சட்டங்களில் சரியான வரையறை செய்யப்படாத நிலையில், நீண்ட நாட்களாக சிறையில் நன்னடத்தையுடன் இருக்கும் சிறைவாசிகளை விடுவிக்க பல்வேறு மாநில அரசுகள் பல்வேறு நடைமுறைகளை பின்பற்றி வருகின்றன.

தமிழ்நாட்டில் பத்து ஆண்டுகளை சிறையில் கழித்த ஒரு சிறைவாசி, அவர் மீது வேறு எந்தப் புகார்களும் இல்லாத நிலையில் (ஆயுள் தண்டனை என்பதற்கான கால அளவு சரியாக நிர்ணயிக்கபடாததால்) முன் விடுதலைக்கு பரிசீலிக்கப்படுகிறார். இவ்வாறான முன் விடுதலைக்கு தம்மை பரிசீலிக்க வேண்டும் என்று கேட்கும் உரிமை ஒவ்வொரு சிறைவாசிக்கும் உண்டு. இந்த உரிமையை நளினியும் பயன்படுத்துகிறார். ஆனால் மற்றக் கைதிகளை விடுதலை செய்வதில் ஆர்வம் காட்டும் தமிழக அரசு, நளினி விவகாரத்தில் மட்டும் ஏனோ தயங்குகிறது. இந்த தயக்கத்திற்கு நளினி விடுதலை குறித்து சமூகத்தில் நிலவும் பொதுக்கருத்தும் ஒரு காரணமாக அமைகிறது.

நளினியை தூக்கில் போட வேண்டும்: நளினியின் கை மற்றும் கால்களை செயல் இழக்கச் செய்துவிட்டு அவரை விடுதலை செய்யலாம் என்பது போன்ற பல்வேறு கருத்துகள் செய்திநிறுவனங்களின் இணையதளங்களில் பொதுமக்கள் கருத்தாக சேர்கிறது. ஏன் இந்த நிலை?

தங்கள் உரிமைகள் மிதிக்கப்படும் போதெல்லாம் விலங்குகள் கூட எதிர்ப்பை தெரிவிக்கும். ஆனால் எந்த உரிமை பறிக்கப்படும்போதும் அதை இயல்பாக ஏற்றுக்கொள்ளும் தியாக உள்ளம் கொண்டவர் சராசரி இந்தியர். சராசரி இந்தியனின் உளவியல் என்பது ஆன்மிகத்தின் அடிப்படையில் அமைந்தது. அடையாளமே தெரியாத கடவுளை, அனைத்தும் அறிந்தவன் – அனைத்தையும் இயக்குபவன் என்று நம்பும் இந்த உளவியலின் மறுபக்கமோ, தன்னை மிகவும் வலிமை இல்லாதவனாக, எதற்கும் பயனற்றவனாக, மிகவும் எளிமையானவனாக உருவகப்படுத்துகிறது.


கடவுளை, எல்லாம் வல்லவனாக பார்த்துப் பழகிய இந்த உளவியலின் நீட்சியே, ஆட்சித் தலைமைகளை – அது மன்னனாக இருந்தாலும் சரி: மக்களாட்சி முறையில் மந்திரியாக இருந்தாலும் சரி – மிகவும் உயர்ந்தவனாக பார்க்கிறது. அதன் மறுபக்கமாக தம்மை எளியேனுக்கும், எளியேனுமாக உருவகிக்கிறது. இதனால்தான் தனக்கு நடக்கும் எந்த அநீதிகளையும் உணரவே மறுக்கும் இந்தியனின் மனசாட்சி, அரசியல் தலைவர்களுக்கு ஒரு சாதாரண பிரச்சினை என்றால்கூட தீக்குளிக்குமளவுக்கு துணிகிறது. சாமானிய மனிதர்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டால்கூட எந்த அதிர்ச்சியையும் அடையாத இந்தியனின் மனசாட்சி, ஒரு அரசியல் கட்சியின் தலைவன் இறந்த 20 ஆண்டுகள் கழிந்த பின்னரும் துக்கம் அனுஷ்டிக்கிறது.

இதன் காரணமாக பல்வேறு முக்கிய அம்சங்கள் இந்தியனின் மனசாட்சிக்கு எட்டாமல் போகிறது. இந்திய கடல் எல்லைக்கருகில் நூற்றுக்கணக்கான மீனவர்கள் கொல்லப்பட்டதற்கு இலங்கையின் கடற்படைதான் காரணம் என்று காவல்துறை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தாலும் இந்தியனின் மனசாட்சி அதை இயல்பாக ஏற்றுக்கொள்கிறது. இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ளதாக செய்திகள் வந்தாலும், ஏதோ ஒரு சாமியாரின் படுக்கை அறையுள்ளேயை இந்தியனின் மனசாட்சி சிக்கிக் கொள்கிறது.

இந்திய கடல் எல்லையை தாண்டிய மீனவர்களுக்கு இந்திய அரசு எந்த உத்தரவாதமும் கொடுக்க முடியாது: சாதாரண மீனவர்களை கொன்றதற்காக இலங்கை மீது போர் தொடுக்கமுடியுமா? என்று மத்திய அரசு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் கேள்வி எழுப்பும்போது இந்தியனின் மனசாட்சி இலவசத் தொலைகாட்சியிலிருந்து திரும்ப மறுக்கிறது. அதேபோல் பாதிக்கப்பட்ட இனத்தின்மீது போர் தொடுத்த ஒரு நபர் கொல்லப்பட்டதற்கு பழி தீர்க்கும் விதத்தில் அந்த இனத்தை சார்ந்த பல்லாயிரம் பேர் கொல்லப்பட்டபோதும்கூட இந்தியனின் மனசாட்சி “மானாட, மயிலாட” நிகழ்ச்சியிலேயே மூழ்கி இருக்கிறது. ஆனால் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட நளினியை விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுப்பப்படும்போதுமட்டும் இந்தியனின் மனசாட்சி துயிலெழுந்து துள்ளி குதிக்கிறது, நளினியை தூக்கில் போடவேண்டும் என்று கூக்குரல் எழுப்புகிறது!

ஆனால் சட்டத்தின் நிலையோ வேறாகத்தான் இருக்கிறது. சட்டம் என்ற கருத்தியலின் முன் அனைவரும் சமமே. ராஜீவ் காந்தியை கொன்றவருக்கு கடும் தண்டனை: நடைபாதையில் படுத்துறங்கும் அன்றாடங்காய்ச்சியை கொன்றவருக்கு வேறு சாதாரண தண்டனை என்ற பேதமெல்லாம் சட்டத்திற்கு கிடையாது. சட்டத்தைப் பொறுத்தவரை அது இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவு 302ன் கீழ் ஒரு குற்றம். அந்த குற்றத்தில் பலியானவரின் சமூக முக்கியத்துவம் குறித்து ஒரு நீதிமன்றம் கவலை கொள்ளக்கூடாது.

ஆனால் நடைமுறையில் இது வேறாக இருக்கிறது. சாமானிய இந்தியனுக்கு நடக்கும் எந்த தீவிரமான மனித உரிமை மீறலையும் மிக எளிதாகவும், இயல்பானதாகவும் பார்க்கும் அமைப்புகள், சமூகத்தில் ஏதோ ஒரு வகையில் பிரபலமடைந்தவர்களின் சிறு பிரச்சினைகளைக்கூட மிகுந்த அக்கறையோடு கவனிக்கிறது. எத்தனையோ தொழில் சார்ந்தவர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு போராடினாலும் திரும்பி பார்க்காத தமிழ்நாடு அரசு, திரைப்படத்துறையினரின் மிகவும் சாதாரண பிரச்சினைகளைக்கூட அதிகபட்ச கரிசனத்தோடு பரிசீலிப்பதை ஒரு உதாரணமாக கூறலாம். இதை எதிர்த்துப் போராட வேண்டிய இந்தியனின் மனசாட்சி அதற்குப் பதிலாக இது போன்ற அநீதிகளையும், முறைகேடுகளையும் இயல்பாக ஏற்க பழகிவிடுகிறது.

இதன் விளைவாகவே தமது உண்மையான பிரச்சினைகளை உணரவும், அதை எதிர்த்துப் போராடவும் தயங்கும் இந்தியனின் மனசாட்சி – அரசியல் தலைவர்களின் இழப்புகளை மட்டும் பிரமாண்டமாக்கி பார்க்கிறது. தன்னிச்சையாக செயல்பட்டு மக்களுக்கு பணியாற்ற வேண்டிய மீடியா, நீதித்துறை உள்ளிட்ட அமைப்புகள் அரசு சார்பு அமைப்புகளாக செயல்பட்டு வருகின்றன.

எனவேதான் அரசின் பார்வையிலேயே, அதாவது மக்களுக்கு எதிரான பார்வையிலேயே மீடியாக்கள் இயங்குகின்றன. அதாவது மக்களின் நலன்களுக்கு எதிரானவற்றை இயல்பாக ஏற்றுக்கொள்ளும் வகையில் மக்களை மீடியாக்கள் மூளைச்சலவை செய்கின்றன. இவ்வாறு மூளைச்சலவை செய்யப்பட்டு உருவாக்கப்படும் பொதுக்கருத்துகளுக்கு எதிரான முடிவை மேற்கொள்ள நீதிமன்றங்கள் தயங்குகின்றன.

இவ்வாறு ஆளும் வர்க்கங்களால் திட்டமிட்டு கட்டமைக்கப்படும் பொதுக்கருத்துகளுக்கு எதிராக ஒரு நீதிபதி தீர்ப்பளித்துவிட்டால், அந்த நீதிபதிக்கு எதிரான பிரச்சாரத்தில் மீடியாக்கள் இறங்கிவிடும். இதனால் அந்த நீதிபதியின் எதிர்கால பதவி உயர்வுகளோ, வேறு வாய்ப்புகளோ பாதிக்கப்படலாம் என்ற நிலை காரணமாகவே இதுபோன்று அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளில் தொடர்புடையவர்களுக்கு மிக அதிக தண்டனை வழங்கப்படுகிறது.

உண்மையிலேயே சட்டத்தின் ஆட்சி நடைபெற வேண்டும் என்றால் இந்த நிலை மாற வேண்டும். எந்த விவகாரத்திலும் உணர்ச்சிவசப்பட்டு செயல்படுவதைவிட, அறிவுப் பூர்வமாக சிந்தித்து செயல்படுவதற்கு மக்கள் பழக வேண்டும். ஆனால் இதை ஆளும் வர்க்கமோ, ஆதிக்க சக்திகளின் மீடியாக்களோ உதவி செய்யாது என்பதுடன், இடையூறும் செய்யும். இதையெல்லாம் மீறினால்தான் மக்களின் நலன்களை முன்னிறுத்தும் அரசை அமைக்கமுடியும். இதற்கான பணிகளில் மக்கள் இயக்கங்களும், மாற்று ஊடகங்களும் தொடர்ந்து செயல்பட்டால்தான் மனித உரிமைகளை மதிக்கும் சமூகத்தை அமைக்க முடியும்.


நீரடி நீச்சல் எல்லாம் நாம் அறிவோம் துயர் - நீந்திக்கரையேறும் வழியறிவோம் யாரடிச்சாலும் திருப்பியடிப்போம் தன்மான மீட்பிற்க்காய் உயிரை கொடுப்போம்.. நம்பியேமாறும் அண்ணன் அவன் மறுத்து விட்டான் தன்னாட்டின் உரிமைதனை வன்னியிலே நடாத்திவிட்டான் தாய் மண்ணை மீட்டெடுக்கும் தன்னாட்சியாய் மலர்வோம் என்று ஈழத்தமிழா நீயும் எழுச்சி குரல் உறுமலடா.. மண்ணின் விடுதலையும் பெண்ணின் விடுதலையும் கண்ணின் மணியாக நாம் கருதி வாழ்ந்திருந்தோம் புண்ணில் வழிந்தோடும் ரத்தமாய் நெஞ்சம் சிதறி அங்கே நித்தமும் சாக்காடு.. புலம் பெயர் வாழ் தமிழனின் தன்மான காற்று தனதானிக்காற்றாக ஈழத்தை நிரப்பட்டும் வெடிக்கட்டும் மக்கள் புரட்டிச்சியின் வேகாறுகள் அன்னியக் கட்டுக்களை பொசுக்கி எரிக்கட்டும் ஆழுமையும் ஆழுகையும் உந்தனுக்கு இல்லையென்றால் வீடுமில்லை நாடுமில்லை தமிழனே நீயும் நம்பு.. ஈழத்தமிழனின் வாழும் தன்னாட்சி உரிமை தன்னை மறுத்துரைக்கும் சிறப்புரிமை உலகின் எந்த உருப்புரிமை நாடுகளுக்கும் கிடையவே கிடையாது எம் இனத்தை இல்லாதொளிக்கும் இறுதி இலக்கில் சிங்களம் வெற்றி பெறும் என்று நம்பும் இரட்டை நாக்கு உலக நாடுகளின் நம்பிக்கைகளை நாம் தவிடு பொடியாக்காவிட்டால் நாமும் நம் ஈழக்கொள்கைகளும் பின்னடைவிற்கு உள்ளாகும்... நாளைய இருப்பிற்கான எம் இனத்தின் ஈழத்திற்கான எம் கரங்களின் பலங்களின் அசைவிலேதான் வாழ்வா சாவா என்ற எம் இனத்தின் இறுதி மூச்சு.. தமிழனே நீயும் பலமாகு தாயக கோட்பாடு உனதாகும்.. தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்..

ஆழும் கட்சியினுள் தொடரும் உள்வீட்டு மோதல்கள்

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர்களுள் விருப்பு வாக்குகளுக்காக இடம்பெற்றுவந்த உள்வீட்டு மோதல்கள் தொடர்ந்த வண்ணமே உள்ளது. புத்தளம் மாவட்டத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்துள்ள காலம்சென்ற அமைச்சர் டி.எம் தசநாயக்கவின் மனைவியான இந்திராணி தசநாயக்கவின் ஆதரவாளர் ஒருவர் வெற்றி பெற்றுள்ள வேட்பாளர் ஒருவரின் ஆதரவாளர்களால் அடித்துக்கொலை செய்யப்பட்டள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்துள்ள ஆனமடுவப் பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞன் தேர்தல் காலங்களில் திருமதி இந்திராணி தஸநாயக்க சார்பாக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டவர் என தெரியவருகின்றது.

செவ்வாய், 13 ஏப்ரல், 2010

தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள். தமிழனின் நிலை,!புத்தனின் நிலை,! இனி வரும் காலங்களில் பதில் கூறும் மனித தர்மம் ..........................

இனப்பிரச்சனை தீர்வுக்கான வாய்ப்பை தவறவிட்டால் இன்னொரு இனமோதல் வெடிக்கும்!

இலங்கையின் தேசிய இனப்பிரச்சினை எத்தகைய போக்கினை அடையப் போகின்றது என்பதை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் அடுத்த நகர்வுதான் தீர்மானிக்கப் போகிறது.

தமிழ் மக்களின் நியாயமான பிரச்சினைகளைத் தீர்த்து வைக்க கிடைத்திருக்கின்ற சந்தர்ப்பத்தைத் தவறவிடுவோமானால், அது இன்னொரு இனமோதல் உருவாவதற்கு வழிவகுத்து விடுமென எச்சரித்துள்ளார் கொழும்புப் பல்கலைக்கழகத்தின் வரலாற்று விரிவுரையாளர் நிர்மல் தேவசிறி.

விரிவுரையாளர் நிர்மல் தேவசிறியை மேற்கோள் காட்டி ஏ.எவ்.பி செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வுக் கட்டுரையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைத் தீவில் வாழும் தமிழ்ச் சமூகத்தினை ஒன்றிணைத்து செயற்படுவதில் சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பெரும் சவால்களை எதிர்கொண்டிருப்பதாகவும் தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வை வழங்குவது தொடர்பாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் செயற்பாடுகளை சர்வதேச சமூகம் உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் அக்கட்டுரை குறிப்பிட்டுள்ளது.

இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்துவிட்ட நிலையில், அரசியல் வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு, நாட்டின் பொருளாதார வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்வதற்கேற்ப பெரும்பான்மை பலத்துடன் அரசாங்கத்தை அமைக்க உதவும்படி தேர்தல் பரப்புரையின்போது மகிந்த ராஜபக்ச மக்களைக் கேட்டுக் கொண்டிருந்தார்.

ஆனால், ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பெற்றுக் கொண்ட நாடாளுமன்ற ஆசனங்களின் அடிப்படையில் மக்கள் அவரது கட்சிக்கு பெருமளவில் வாக்களித்துள்ளனர் எனக் கருதினாலும், நாட்டின் சுமார் 55 சதவீதமான மக்களே தேர்தலில் வாக்களித்துள்ளமையானது, நாடு தனக்குப் பின்னால் நிற்பதாக மகிந்த ராஜபக்ச தெரிவித்துவரும் கருத்தில் சந்தேகத்தை எழுப்பியுள்ளதாகவும் ஏ.எவ்.பி நிறுவனம் வெளியிட்டுள்ள இவ் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்காவில் நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக அச்செய்தி நிறுவனம் தெரிவித்திருக்கும் கருத்தினை இங்கே தொகுத்துத் தருகின்றோம்.

இத்தேர்தலில் குறைந்தளவு மக்களே வாக்களிப்பில் கலந்து கொண்டமை அரசியல் நடைமுறையில் மக்கள் நம்பிக்கை இழந்திருப்பதையே காட்டுவதாக அரசியல் ஆய்வாளரான விக்ரர் ஐவன் குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் மத்தியில் நம்பிக்கையை மீண்டும் கட்டி எழுப்புவதோடு, நாட்டின் இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணவேண்டிய பெரும் சவால் மகிந்த ராஜபக்சவின் முன்னால் உள்ளதாக அவர் கூறினார்.

இத்தேர்தலில் குறைந்தளவு மக்கள் வாக்களித்துள்ளமை தொடர்பாக கருத்துத் தெரிவித்த எதிர்க்கட்சிகள், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசின் மீது மக்கள் மத்தியில் காணப்படும் அதிருப்தியின் வெளிப்பாடே இது எனத் தெரிவிக்கின்றார்கள்.

இலங்கையின் வரலாற்றில் முதற்தடவையாக, மக்களின் ஆணையற்ற ஒரு நாடாளுமன்றம் நாட்டுக்குக் கிடைத்திருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

இத்தேர்தலில் தமிழ் மக்களும் மிகக் குறைந்தளவே வாக்களித்துள்ளார்கள். நாடு இன்னமும் பிளவுபட்டிருப்பதை வெளிப்படுத்தும் ஒரு தெளிவான சமிக்ஞை இது, ஐனாதிபதி மகிந்த ராஜபக்சவின் தேசியவாதக் கொள்கை குறித்து தமிழ் மக்கள் கொண்டிருக்கும் பெரும் சந்தேகத்தின் வெளிப்பாடே இது.

தமிழ் மக்கள் செறிந்து வாழ்கின்ற யாழ்ப்பாணம் மற்றும் வன்னி ஆகிய மாவட்டங்களில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் பரப்புரைக் கூட்டங்களில் கலந்து கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, தமிழீழ விடுதலைப் புலிகளுடனான போரின் போது சிதைந்து போன இப்பகுதிகள் பல பில்லியன் டொலர் செலவில் மீண்டும் கட்டியெழுப்பப்படும் என்ற உறுதி வழங்கியிருந்தார்.

ஆனால், தமிழ் மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட ஒரு மாவட்டத்தில் கூட மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசு முழு வெற்றி பெறவில்லை. மாறாக, தமிழ் மக்களுக்கு சுயாட்சி வகையிலமைந்த தீர்வு வழங்கப்பட வேண்டுமென கோரி வரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்றுள்ளது.

சிங்கள மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசில் தமிழ் மக்கள் நம்பிக்கை இழந்திருப்பதையே இத்தேர்தல் முடிவுகள் காட்டுவதாக மனித உரிமை ஆர்வலரான நிமல்கா பெனாண்டோ தெரிவிக்கின்றார். இலங்கை இன்னமும் பிளவடைந்திருப்பதை தேர்தல் முடிவுகளைக் காட்டும் மாவட்ட ரீதியான வரைபடம் தெளிவாகக் காட்டுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில் பலமான நாடாளுமன்றப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கப் போகின்ற ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதிலிருந்து தப்புவதற்கு எந்தவொரு காரணத்தையும் கூறிவிட முடியாது.

அவர் வாக்குறுதி அளித்ததைப் போல நாட்டில் இன நல்லிணக்கத்தையும், அமைதியினையும் ஏற்படுத்துவாரா என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என நிமல்கா பெனாண்டோ குறிப்பிடுகின்றார்.

நீதியனதும், நியாயமானதுமான அதிகாரப் பகிர்வு வழங்கப்படுவதோடு, தமக்கு மறுக்கப்படடுள்ள கல்வி மற்றும் வேலை வாய்ப்புக்கள் பெற்றுத்தரப்பட வேண்டும் எனவும் தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்றார்கள் எனவும் இவ் ஆய்வுக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழீழ மக்கள் என்பது புலம்பெயர் தமிழர்களையும் உள்ளடக்கியது

தமிழீழ மக்கள் என்பது புலம்பெயர் தமிழர்களையும் உள்ளடக்கியது என்பதைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் புரிந்துகொள்ள வேண்டும்!

இலங்கைத் தீவின் தேர்தல் திருவிழா ஒருவாறு முடிவுக்கு வந்துவிட்டது. மகிந்த ராஜபக்ஷ விரும்பியது போல் மூன்றில் இரண்டு பங்கிற்கு நெருக்கமான அளவு ஆசனங்களைப் பெற்றுவிட்டார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கடந்த முறை போலல்லாவிட்டாலும், 12 ஆசனங்களைப் பெற்று தமிழீழ மக்களது முக்கிய அரசியல் சக்தியாக மீண்டும் தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கையில் மீண்டும் ஒரு முக்கியமான அரசியல் தீர்மானத்திற்குரிய களம் திறக்கப்பட்டுள்ளது. தமிழ் மக்களுக்கு நீதியானதொரு தீர்வை வழங்க வேண்டும் என்ற சர்வதேச விருப்பங்களை மகிந்த ராஜபக்ஷ வழக்கம்போன்ற காரணத்தைச் சொல்லித் தப்பிக்க முடியாது. தமிழ் மக்களது அரசியல் அபிலாசைகளைத் தீர்ப்பதற்கு அரசியலமைப்பில் மாற்றங்களைச் செய்வதற்கான பலம் தமக்கு இல்லை என்று இப்போது தட்டிக் கழிக்க முடியாது. மகிந்த ராஜபக்ஷ உண்மையிலேயே அரசியல் அமைப்பில் மாற்றங்களைச் செய்து தமிழீழ மக்களுக்கான அரசியல் தீர்வை வழங்க விரும்பினால், அதற்குத் தேவையான மேலதிக அரசியல் பலத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடமிருந்து பெற்றுக்கொள்ளும் சாத்தியமும் தற்போது உள்ளது.

தமிழ் வாக்காளர்களில் எண்பதுக்கும் மேற்பட்டவர்கள் தேர்தலைப் புறக்கணித்துள்ள நிலையில் தற்போது, மீண்டும் தமிழீழ மக்களுக்கான அரசியல் பலமாக உருவாகியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் காலம் அதிக அளவு கடமைகளைச் சுமத்தியுள்ளது. முன்பு போல அவர்களை நேர் வழியில் பயணிக்க வைக்க களத்தில் விடுதலைப் புலிகள் இல்லை. ஆனாலும், அவர்கள் விட்டுச் சென்ற இலட்சிய தாகம் ஒவ்வொரு தமிழ் நெஞ்சத்திலும் கனலாகக் கனன்று கொண்டே உள்ளது. கடந்த காலத்தில் விடுதலைப் புலிகளின் ஆணைக்குக் கட்டுப்பட்டு, ஒட்டு மொத்தமாக 22 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களை சிங்கள நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வைத்த தமிழ் மக்கள் தற்போது அளவுக்கு அதிகமாக நம்பிக்கையைத் தொலைத்து விட்டு மௌனித்துப்போய் உள்ளார்கள். அவர்களை அதிலிருந்து மீட்டு, அவர்களிடம் எதிர்கால நம்பிக்கை ஊட்டும் பணியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு உண்டு.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கொள்கைத் தடுமாற்றமே புலம்பெயர் தமிழ் மக்கள் மத்தியில் அவர்கள் குறித்த நம்பிக்கையின்மை வெளிப்பட்டது. அதனை நிவர்த்தி செய்ய வேண்டிய முக்கிய கடப்பாடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு உண்டு. புலம்பெயர் தமிழர்கள் தமது விருப்பு வெறுப்புக்களுக்கும் அப்பால், ஈழத் தமிழர்களின் எதிர்காலம் குறித்து அதிக அக்கறை கொண்டுள்ளார்கள். ஈழத் தமிழர்களது விடுதலைக்காகவும், விடிவுக்காகவும் கடுமையாகப் போராடி வருகின்றார்கள். அவர்களது ஆத்மார்த்தமான உணர்வுகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் புரிந்து கொள்ள வேண்டும். அவர்களது தமிழீழம் குறித்த அக்கறைகளையும், அர்ப்பணிப்புக்களையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமக்கான பலமாக ஏற்றுக் கொள்ள வேண்டும். புலம்பெயர் தமிழ் அமைப்புக்களுடன் இனியாவது நெருக்கமான உறவினைப் பேண முயல வேண்டும்.

தமிழீழத்திற்கு வெளியே, ஈழத் தமிழர்களின் பலமாக உருவாகிவரும் மக்கள் பேரவைகள், நாடு கடந்த தமிழீழ அரசு ஆகியவை ஈழத் தமிழர்களுக்கான மேற்குலக ஆதரவுத் தளத்தைப் பலப்படுத்தி வருகின்றன. புலம்பெயர் தேசம் எங்கும் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் மீது நடாத்தப்பட்ட மீள் வாக்கெடுப்பில் 98 வீதத்திற்கும் அதிகமான புலம்பெயர் தமிழர்கள் 'தமிழீழமே ஒரே தீர்வு' என்ற தமது விருப்பை நிலைநாட்டியுள்ளனர். எண்பது வீதத்திற்கும் அதிகமான தமிழர்கள் நிராகரித்த இந்தத் தேர்தல் மூலம் சிங்கள நாடாளுமன்றத்திற்குச் செல்லும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இதற்கு மாறான ஒரு தீர்வை ஈழத் தமிழர்களிடம் திணிக்க முயலக் கூடாது. தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை என்ற வட்டுக்கோட்டைத் தீர்மானம் மட்டுமே தமிழீழ மக்களின் ஆணைக்குட்பட்டது. மாறாக, வேறு எந்தத் தெரிவானாலும் அவர்களிடம் மீண்டும் ஆணை பெற்றே தீர்மானிக்கப்பட வேண்டும். தமிழீழ மக்கள் என்பது புலம்பெயர் தமிழர்களையும் உள்ளடக்கியது என்பதைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் புரிந்துகொள்ள வேண்டும். புலம்பெயர் தமிழர்களின் விருப்பங்களுக்கு மாறான எந்தத் தீர்வும் நிரந்தரமானதாக இருக்க மாட்டாது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.

சாதாரணமான அமைதி வாழ்வு வாழ்ந்த தமிழர்கள் தான் புயலாகச் சினந்து புலியாக மாறினார்கள். இப்போதும் அவர்களது அந்த மாற்றங்களுக்கான காரணங்கள் சிங்கள இனவாதிகளால் அதிகரிக்கப்பட்டே வருவதால் தோற்கடிக்கப்பட்ட நிலையில் திசை இழந்து தவிக்கும் ஈழத் தமிழர்களது இந்த மௌனம் நீடிக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. ராஜபக்ஷக்களின் இந்த அரசியல் வெற்றிகள் ஈழத் தமிழர்கள் மீது இன வன்முறையையே தொடர்ந்தும் பிரயோகிப்பதற்குப் பயன்படுமானால், மீண்டும் அவர்கள் புலியாக எழுவது தவிர்க்க முடியாமல் போகும். அது, சிங்கள அரசும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் எப்படிப் பயணிக்கப் போகின்றது என்பதில்தான் தங்கியுள்ளது

படையினரின் நடமாட்டத்தால் வன்னியில் பெண்கள் அச்சத்துடன் வாழ்கின்றனர்.

வன்னியில் படையினரின் நடமாட்டத்தினால் தமிழ்ப்பெண்கள் அச்சத்துடன் வாழ்து வருகின்றார்கள் என்று ஐக்கிய நாடுகளுக்கான அகதிள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தற்போது அரசின் மீள்குடியேற்றம் மற்றும் அபிவிருத்தி பணிகளை வன்னியில் பார்வையிட சென்றுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான ஆணைக்குழு, அபிவிருத்தி மற்றும் ஒத்திசைவிற்குமான சுவிசின் பிரதிநிதிகள் இணைந்து நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை சுட்டிக்காட்டியுள்ளார்கள். வன்னியில் தமிழ்ப்பெண்கள் மீள்குடியேற்றப்பட்ட பின்பு தமது நாளந்த வாழ்க்கையில் பல சிரமங்களை எதிர்கொண்டு வருவதாகவும் குறிப்பாக இருப்பிடங்களை அமைப்பதற்கும் மற்றும் ஏனைய தேவைகளை பெற்றுக்கொள்வதிலும் மற்றவர்களில் தங்கி வாழும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழ் பெண்கள் தமது நாளாந்த வாழ்க்கை தொடர்பில் பாரிய சிரமங்களை எதிர்கொண்டு வருசதாகவும் தெரிவிக்கப்டப்டுள்ளதுஇவ்வாறு பலதமிழ் பெண்கள் விதவைகள் ஆக்கப்பட்டுள்ள நிலையிலும், துணைவன்மார்கள் தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்டப்டுள்ள நிலைகளில் இருப்பதால் படையினரின் அதிகளவான நடமாட்டத்தினால் இவ்வாறு ஆண்துணையின்றி வாழும் பெண்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வன்னிப்போரின் போது இடம்பெயர்ந்த மக்கள பல இன்னல்களை சந்தித்து வதைமுகாம்களுக்கு வந்தபோது ஐக்கிய நாடுகள் சபையினால் ஒருதொகை உதவிக்கொடுப்பனவு வழங்கப்பட்டு வந்துள்ளது. இது தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் இடம்பெயர்ந்து மீள்குடியமர்ந்துள்ள மக்கள் தமக்கான அடிப்படை வசதிகளை பெற்றுக்கொள்வதில் தற்போது பாரிய சிரமங்களை எதிர்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.

திங்கள், 12 ஏப்ரல், 2010

அந்த சித்திரவதைகளை பகிர எங்களிடம் வார்த்தைகளில்லை!

அந்த சித்திரவதைகளை பகிர எங்களிடம் வார்த்தைகளில்லை என்று குறிப்பிடுகிறர்கள் முன்னாள் பெண் பேராளிகள். நாடாளமன்றத் தேர்தல் நெருங்கும் பொழுது வாக்குகளை பிரதியீடாக கோருவதற்காக எப்படியும் முன்னாள் போராளிகளில் குறிப்பிட்ட எண்ணிக்கையினரை விடுவிக்கப்படலாம் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. அவர்கள் விடுவிக்கப்படும் சூழல் நெருங்கிக் கொண்டிருக்கும் பொழுது அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒரு முகாமின் வாசலுக்கு சென்று சில நிமிடங்கள் அவர்களுடன் உரையாட முடிந்தது. அவர்கள் புன்னகைக்க விரும்புகிறார்கள். காயங்களுடனும் ஆறாத குருதிகளுடனும் புன்னகைக்கிறார்கள். நாங்கள் எதையும் பகிர விரும்பவில்லை என்று உதயா என்ற முன்னாள் பெண்போராளி குறிப்பிடுகிறாள். நெருக்கடியான சூழ்நிலை காரணமாக அவள் போராளியாக மாறியிருந்தாள். மிக மென்மை கொண்ட உதயாவால் எப்படி அந்த களங்களை எதிர் கொள்ள முடியும் என்றுதான் வியப்பாக இருந்தது. மிக மெல்லிதாகவே அவள் பேசுகிறாள். உதயா இப்பொழுது புன்னகைத்தபடியிருக்கிறாள். இரண்டு ஊன்றுகோல்களை ஊன்றியபடி கனி என்ற மற்றொரு பெண் வருகிறாள். வெட்டப்பட்ட அவளது தலைமுடி கொஞ்சம் வளர்ந்திருக்கிறது. அதை இழுத்துக் கட்டியபடி கனி வருகிறாள். வன்னியில் புளியங்குளத்தை சேர்ந்த கனி இறுதி நாட்களில் தன் அண்ணாவின் தொடர்பையும் இழந்து விட்டாள். இராணுவப் பகுதிக்குள் போகும்படி அவளையும் அவளின் தாயையும் அவளது அண்ணன் கூறியிருந்த பொழுதும் அதற்கு இடையில் அவளும் சூழ்நிலைக்காக போராளியானாள். செல்வி தனது ஒற்றைக் கையை இழந்தபடி வருகிறாள். செல்வி துடிதுபடிப்பானவள். ஷெல்லில் தன் ஒற்றைக் கையை இழந்த அவரை பார்த்து எப்படி இப்படியானது என்று கேட்கும் தைரியமும் மனநிலையும் யாருக்கும் வராது. செல்வியைத் தொடர்ந்து, ஒற்றைக் கையில் காயமற்று இயங்காது தூங்கும் கையை ஏந்தியபடி அருளினி என்ற இன்னொரு பெண் வருகிறாள். அருளனி தனக்குரிய கடமைகளை நிறைவேற்ற மிகுந்த சிரமங்களை அனுபவிப்பதாக கனி சொல்லிக் கொண்டிருக்கிறாள். இயங்காத அந்தக் கை தன்பாட்டில் தூங்கிக் கொண்டிருக்கிறது. எழுதும் வலது கையை இழந்ததினால் அவள் பல நாட்கள் தொடர்ந்து அழுது கொண்டிருந்தாள் எனவும் உதயா சொல்லுகிறாள். ஒரு திடமான பெண்ணாக நம்பிக்கையளித்தபடி அருளினி இருக்கிறாள். எனக்கு என் நண்பிகள் எல்லா உதவிகளையும் செய்வார்கள் என தன் பாதிக்கப்பட்ட ஒற்றைக் கையை மடியில் தூக்கி வைத்தபடி குறிப்பிடும் அருளினி ஒரு குழந்தையை மாதிரிதான் புன்னகைக்கிறார். இப்பொழுது நம்பிக்கை கொண்டபடி தன்னைக் கட்டியெழுப்புவதைப்போல அவரது புன்னகை இருக்கிறது. இது எப்படியான சித்திரவதைச்சாலை என்பதை சொல்லுவது மிகச் சிரமமானது என்று குறிப்பிடும் கனி அங்கு யாரும் எங்களை தடிகளால் தாக்கவில்லை. ஆனால் தண்ணீருக்காக நாங்கள்தான் அடிபட்டுக் கொண்டிருப்போம். ஒரு வாழி தண்ணீரில் தோய வேண்டும். அந்த ஒரு வாழி தண்ணீரும் வடிய எவ்ளவு நேரம் ஆகும்? அந்த கொஞ்ச நீருக்காக வரிசையில் நிற்கத் தொடங்கினால், காலை மாலை என்று வரிசை கட்டி எங்களை எண்ணுவார்கள் நாங்கள் ஓடிவிடலாம் என்பதற்காக அவர்கள் எண்ணிக் கொண்டிருப்பார்கள். வீட்டுக்கார் பார்ப்பதாக சந்திப்பதாக இருந்தால் 15 நாட்களுக்கு ஒரு முறைதான் வர முடியும். அதுவும் கிராம சேவையாளரின் அனுமதி ஒவ்வொரு முறையும் எடுக்க வேண்டும். அப்படி வரும் பொழுது கொண்டு வரும் பொருட்களை தந்து விட்டு திரும்பிச் செல்லுவதற்குத்தான் அவர்களது நேரம் சரியாகி விடும். பிறகு விசில் சத்தம்தான் எங்கள் காதை கிழிக்கும். நாங்களே சமைத்து சாப்பிடுவோம். ஊத்தையும் புழுதியுமாக எமது நாட்கள் நிறைக்கப்பட்டிருந்தன என்று கனி சொல்லிக் கொண்டிருக்கிறாள். இவர்களுக்கிடையில் தனது இரண்டு வயது மகனை வைத்துக் கொண்டு மற்றொரு பெண் எனது பார்வைக்கு தெரிகிறாள். மிக நீண்ட காலமாக அவரும் அவரின் கணவரும் விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்ததின் காரணமாக கணவர் மற்றொரு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார். நிறைய பெண்போராளிகள் தங்கள் கணவர்மார் எங்கு எப்படி இருக்கிறார்கள், உயிருடன் இருக்கிறார்களா என்றே தெரியாதபடி இருக்கிறார்கள். இப்படி அவர்கள் சொல்லியது பின்னர் பசில் ராஜபக்ஷ பெயரில்லாதவர்கள் இறந்து விட்டார்கள் என்றே அர்த்தப்படும் என்பதுடன் பொருந்துகிறபோது அதிர வைக்கிறது. அண்ணாவை இறுதியாக இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வரும் பொழுது சந்தித்தேன். அவன் நெருப்பாய் எரியும் களத்தில் நின்று சண்டை பிடித்துக் கொண்டிருந்தான். எங்களைப்போய் சரணடையுங்கள் என்று சொல்லியவன் இப்பொழுது எங்கே இருக்கிறான் என்று தெரியவில்லை என்று கனி முகத்தை கோணலாக்கியபடி குறிப்பிடுகிறாள். ஓற்றைக்காலை இழந்தபடி கால்சிதைவுகளால் ஊன்றுகோல்களுடன் நடந்தபடி உடல் காயங்களுடன் என்று ஒவ்வொருதரும் வெளியில் வந்து செல்லுகிறார்கள். இன்னும் உயிர் இருக்கிறது எனபதை புரிய வைத்தபடி ஏக்கங்களும் பிரிவுகளும் காத்திருப்புகளும் ஆறாத உள் காயங்களும் என்று வலிகளை தங்களுக்குள் வைத்திருக்கும் இந்த முன்னாள் பெண்போராளிகளை ஒரு யுத்தத்தின் பின்னர் சிறைப்பிடிக்கப்பட்ட கைதிகளாக்யிருக்கிறது காலம். இவர்களில் கொஞ்சப் பேர் மட்டும் விடுவிக்கப்படுகிறார்கள் என்பது அவர்களக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. ஏனைய பெண்கள் தொடர்ந்தும் வாழ முடியாதபடி காலத்திற்கும் சூழலுக்கும் பொருந்தாபடி சித்திரவதைகளை விரிக்கும் அந்த முகாங்களில் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களை விரைவில் விடுதலை செய்து புன்னகைகளையும் அவர்களது உள்ளங்களையும் காப்பாற்றும் அவசியம் அனைவரிடமும் இருக்கிறது.

ஈழத்துச்சூரியனே...

வேங்கையாக வந்தவரே! அக்கினி குஞ்சாய் வந்து தூங்கிய தமிழரை எழுப்பிய அயனே. குருதி சொட்ட கூனிக் குறுகி ஓடிய தமிழனை பாயும் புலியாக்க நீர்வந்து நின்றீர் அச்சத்தில் அடங்கி அழுது கிடந்த தமிழன் வீரத்தினை தட்டி எழுப்பி தமிழனாய் வாழ சொல்லிகொடுத்தீர். நெஞ்சில் உரமிட்டு வீரராய் வளர்த்தீர். வாழ்வதும் வீழ்வதும் இனி விதி எனச் சொல்லி விதியே கதியென வீழ்ந்து கிடந்தவனை ஆயுதம் கொடுத்து களத்தினில் விட்டீர். புலியாக புறப்பட்ட தமிழனை உலகறிய வைத்ததீர். கார்திகைப்பூவேடு கூடவே பிறந்தீர் காட்டிலும் மேட்டிலும் தமிழருக்காய் நடந்தீர். தெற்கிற்கும் ஆமிக்கும் அஞ்சிய எங்களை களமாட விட்டு கண்ட ரசித்தீர். அறைக்குள் அடங்கிய தமிழிச்சி வீரத்தை கரும்புலியாக்கியே உலகறிய வைத்தீர். அகப்பையோடு அலைந்த அவளை ஆட்லறியோடிங்கு விளையாடச்செய்தீர் அடுப்பு விறகில் தீயிட்ட பெண்னை எதிரி குகையிலும் தீமூட்ட செய்தீர். அன்ன நடை நடந்த எம் பெண்கள் நீரிலும் வானிலும் தரையிலும் மிடுக்குடன் நடப்பது உம்மால்.. தர்மயுத்தமாய் இராமாயணம் பாரதம் எல்லாம்வெறும் புராணமாய் நாம்அறிந்தோம் ஈழத்தின் தர்ம யுத்தத்தை நடாத்திட தலைவனாய் நீங்கள் வந்த பின்னர்தான் அவை நியம் என நாம் உயர்ந்தோம். காகிதக்கப்பலை மழை வெள்ளத்தில் விட்டுத்தான் இதுவரை நாம் இரசித்தோம் இனிவரும் நாட்களில் தமிழ் ஈழத்தின் கப்பலை ஓட்டிடும் கனவுடன் பலர் உங்களின் படை தொடர்வோம். காற்றினில் பட்டத்தை ஏற்றித்தான் இதுவரை நாம் வான் தொட்டோம் தமிழீழ வான்படை கண்டதன் பின்னர் தான் எம் பலம் நாம் உணர்ந்தோம்.. வால்பிடித்து கால்பிடித்து இனம் விற்ற எழியவர்கள் தலைகுனிந்தார் அமைதியாய் உறங்கிய வீரத்தமிழர்கள் உம் செயல் கண்டு உமைத் தொடர்ந்தான் இறுதிவரை உமைத் தொடர்வார். மலையென எதிரி எம் குகை புகுந்தாலும் இறப்பொன்று நாளை நம் இருபிடம் வந்தாலும் உம்முன்னே நாம் நடப்போம் வீர இனத்தின் பிறப்பென்னும் புகழுடன் உங்களின் வழி தொடர்ந்திருப்போம்...

மார்பில் வெடிகுண்டு!

விமான நிலைய ஸ்கேனிங்கிலிருந்து தப்பிக்க பெண்களின் மார்பில் திரவ வெடி பொருள் பொருத்தி வெடிக்கச் செய்யும் முறையை அல் குவைதா தொடங்கி உள்ளது. அல் குவைதாவின் பெண் தற்கொலை படையினர் இந்த புதிய முயற்சியில் இறங்கி உள்ளனர். பெண்களின் மார்பில் அறுவை சிகிச்சை மூலம் இந்த வெடிக்கும் திறன் கொண்ட திரவப் பையைப் பொருத்துகின்றனர். பெண்களின் மார்பகப் பகுதியில் இயல்பாக திரவம் இருப்பதால் ஸ்கேனிங்கில் இதைக் கண்டுபிடிப்பது இயலாத காரியம். இதுபோல் ஆண்களின் பின்புறத்திலும் ( அமரும் பகுதி) இதே திரவப் பொருளை நிரப்பி வெடிக்கும் முயற்சியும் நடைபெற்று வருவதாக பிரிட்டிஷ் உளவு நிறுவனம் தெரிவித்துள்ளது. சமீபத்தில் அமெரிக்காவில் ஒரு விமானத்தைத் தகர்க்கும் முயற்சியில் ஈடுபட்ட நைஜீரிய நாட்டு இளைஞரைப் பிடித்து விசாரித்‌த போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. பிரிட்டனில் மருத்துவம் படிக்கும் அல் கொய்தா ஆதரவாளர்கள் இது போன்ற பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை முறையை பயின்று, பின் தங்கள் நாட்டுக்குத் திரும்பிய பிறகு அல் குவைதா இயக்கத்திற்காக இந்த அறுவை சிகிச்சையை செய்து வருகின்றனர் எனத் தெரிய வந்துள்ளது.

அம்பாறையில் இனியபாரதி குழுவினரின் அட்டகாசம் ...

அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆலையடிவேம்பு பிரதேசத்தில் ஆயுதம் தாங்கிய கருணாகுழு(இனியபாரதி குழு)வினரால் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவாளர்கள் ஏழு பேரின் வீடுகள் உடைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று சனிக்கிழமை இரவு 7.00மணியளவில் அக்கரைப்பற்று 7ஆம் குறிச்சிப்பகுதியில் கமலகம் வீதியில் உள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவாளர்களின் வீடுகளே உடைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளைவானில் வந்த ஆயுதம் தாங்கிய இனியபாரதி குழுவினர் வாசல்கதவுகளை வெட்டி வீட்டுக்குள் புகுந்து வீடுகளை உடைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் சில தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவாளர்களும் இனியபாரதி குழுவினரின் கடும் தாக்குதலுக்குள்ளனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளபோதிலும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று திருக்கோவில் பிரதேசத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் ஆதரவாளர்களும் இனியபாரதி குழுவினரின் தாக்குதலுக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்தில் நடந்து முடிந்த தேர்தலில் தமிழ் மக்கள் இனியபாரதி குழுவினரை நிராகரித்துள்ள இந்த வேளையில் அவர்களின் அடாவடித்தனங்கள் அதிகரித்துவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கில் ஆயுதக்குழுக்களின் ஆயுதங்கள் களையப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளபோதிலும் அம்பாறை மாவட்டத்தின் இனியபாரதி குழுவினர் ஆயுதங்களுடன் அராஜகத்தில் ஈடுபட்டுவருகின்றமை தொடர்பில் கடும் கவலைவெளியிடப்பட்டுள்ளது. அத்துடன் கிழக்கில் இனியபாரதி குழுவினர் சிறுவர்களை தமது ஆயுதப்படையில் சேர்ப்பதாக ஐக்கிய நாடுகள் சபை அண்மையில் குற்றஞ்சாட்டியிருந்த நிலையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அதனை மறுத்திருந்ததும் குறிப்பிடத்தக்கது

ஞாயிறு, 11 ஏப்ரல், 2010

உலக தமிழ் உறவுகளுக்கு மெராக் தமிழ் அகதிகள் கப்பலிலிருந்து ஒரு மடல்

கடந்த 2009 ஒக்ரோபர் 11ம் திகதி 254 இலங்கை தமிழ் அகதிகளை உள்ளடக்கிய கப்பல் அவுஸ்திரேலியா நோக்கி சென்று கொண்டிருந்த வேளை அவுஸ்திரேலிய பிரதமர் கெவின் றூட் அவர்களின் பணிப்பின் பேரில் இந்தோனேசிய கடற்படையினரால் கிறிஸ்மஸ் தீவிற்கு செல்வதற்கு முன்னதாக இடை நிறுத்தப்பட்டது. [ [ வீடியோ எழுத்தில் திருத்தம்]கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக ] கப்பல் இடை நிறுத்தப்பட்ட வேளை அவுஸ்திரேலியா ஐ.நாவின் அகதிகள் சாசனத்தில் கையொப்பமிட்ட நாடாகையால் நாம் அவுஸ்திற்ரேலியாவிற்கே செல்வோமென கப்பலை இந்தோனேசியாவிற்கு நகர்த்த மாட்டோமென அடம்பிடித்தோம். அந்த வேளையில் அவுஸ்திரேலிய தூதரக அதிகாரியென இந்தோனேசிய கடற்படையால் அறிமுகப்படுத்திய பெண்மணி ஒருவர் எம்மை கரைக்கு வருமாறும் எமக்கு தேவையான எரிபொருள் மற்றும் நீர் வசதிகளை வழங்கி மீண்டும் கிறிஸ்மஸ் தீவிற்கு செல்ல அனுமதிப்பதாக பொய் உறுதி மொழியை வழங்கி கரை செல்ல பணித்தார். அவரின் உத்தரவின் பேரிலும் இந்தோனேசிய அதிகாரிகளின் கட்டாயத்தின் பேரிலும் இந்தோனேசியாவின் மெராக் துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டு தடுத்து வைக்கப்பட்டோம். ஆனால் அவுஸ்திரேலியா எங்களுக்கு பதில் தரும் வரை நாங்கள் கப்பலை விட்டு இறங்க மாட்டோமென மறுத்து வருகிறோம். நாம் இந்தோனேசியாவில் இறங்குமிடத்து தடுப்பு முகாமில் வைக்கப்படலாம் அல்லது நாட்டுக்கு திருப்பியனுப்பபடலாம் என்ற பயத்தினாலேயே இறங்க மறுத்து 6 மாத காலமாக குழந்தைகள் சிறுவர் இன்னும் சில நாட்களுக்குள் மகப்பேற்றினை எதிர்பார்த்துள்ள கர்ப்பிணிப் பெண் உட்பட குடும்பஸ்தர் மற்றும் இளைஞர் யுவதிகள் உள்ளிட்டோர் கப்பலில் வாழ்ந்து வருகிறோம். அவுஸ்திரேலியா இன்று வரை எமது விடயம் தொடர்பில் இரட்டை வேடம் பூண்டு வருகிறது. முன்னதாக எமக்கு கரிசனை காட்டி வருவதாக தெரிவித்து வந்த போதும் இன்று எமது விடயம் தொடர்பில் கை கழுவி விட்டதாக சமிக்கை காட்டி வருகின்றது. 6 மாத காலமாக பல நோய் நொடிகளுக்கு மத்தியில் கடலில் மிதந்து கொண்டிருக்கும் நாம் சந்தித்த துயரங்கள் சொற்களால் வர்ணிக்க முடியாதவை. கடந்த டிசம்பர் மாதம் உரிய நேரத்தில் மருத்துவ வசதி கிடைக்காததன் காரணத்தால் எம்மோடு ஒருமித்து பயணித்த உறவு “ஜேக்கப் சாமுவேல் கிறிஸ்டின் “காலனால் அரவணைத்துச் செல்லப்பட்டார். சுதந்திர கனவுகளோடு கப்பலேறிய அப்பாவி இளைஞன் அந்நிய மண்ணில் அநியாயமாக அழிக்கப்பட்டான். நாம் எச்சந்தர்ப்பத்தில் அகதிகளாக்கப்பட்டோம் என்ற நியாயப்பாட்டினை எமது உறவுகள் அறிந்துள்ளீர்கள். தமிழ் மக்களாகிய நாம் இலங்கை அரசின் கொடிய ஆட்சியை நிராகரிக்கின்றோமென்பதை அண்மையில் நடைபெற்ற தேர்தலில் வாக்களிக்க மறுத்த 75 வீதத்திற்கு அதிகமான தமிழ் மக்கள் நிரூபித்துள்ளார்கள். எமது கண் முன்னே எங்கள் உடன் பிறப்புகள் அழிக்கப்பட்டனர். உடமைகளை இழந்து சொந்த மண்ணிலேயே அனாதைகளாக்கப்பட்டு இன்று மீண்டும் அகதிகளாக்கப்பட்டோம். சுதந்திரத்தையும் சமாதானமான வாழ்க்கையையும் தேடிவந்த நாம் இன்று தண்ணீரில் தவிக்க விடப்பட்டோம். சர்வதேசத்தின் போக்குகளில் கரிசனையில்லாதவிடத்து எம்மை தோள்களில் சுமந்து எமது விடயத்தை வெளிச்சமாக்கி வருகின்ற அவுஸ்திரேலிய, கனேடிய, நியூசிலாந்து மற்றும் பிற நாடுகளின் அகதிகள் ஆர்வலர் பெருந்தகைகளுக்கு எமது மனமார்ந்த நன்றிகள். உங்களுடைய கரம் எம்மை என்றும் பற்றி பிடித்திருக்க வேண்டுமென பணிவுடன் வேண்டி நிற்கிறோம். கடந்த 7ந் திகதி இந்தோனேசிய வெளிவிவகார அமைச்சின் பிரதிநிதிகள் யு.என்.எச்.சி.ஆர் பிரதிநிதி மானுவேல் மற்றும் சில இந்தோனேசிய அதிகாரிகள் உள்ளிட்டோர் கப்பலுக்கு வந்து எம்மை கப்பலை விட்டு இறங்குமாறு நிர்ப்பந்தித்தார்கள். நாங்கள் திருப்பியனுப்பப்பட மாட்டோம் என்றோ தடுப்பு முகாமில் வைக்கப்பட மாட்டோமென்றோ எதுவித உறுதி மொழிகளையும் வழங்கவில்லை. மீள்குடியேற்றம் தொடர்பிலும் எந்த ஒரு உறுதி மொழிகளும் வழங்கப்படவில்லை. ஒரு பெரிய கட்டிடத்தின் படத்தை காட்டி நாம் தங்குவதற்கான இடம் இதுதானெனவும் உங்களுக்கான சகல வசதிகளையும் பெற்றுத்தருவோமெனவும் குறிப்பிட்ட அவர் அதன் அமைவிடத்தை குறிப்பிட மறுத்து விட்டார். உடனடியாக இறங்க மறுத்த நாம் 5நாட்கால அவகாசமொன்றை அவர்களிடம் பெற்றுக்கொண்டோம். நாம் தடுப்பு முகாமுக்கு கொண்டு செல்லப்படுவோமோ அல்லது இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படுவோமோ என்ற அச்சத்தில் இன்று தடுமாறிக்கொண்டிருக்கின்றோம். நாம் நாளையும் இறக்கப்படலாம். இறங்க மறுக்குமிடத்து வலுக்கட்டாயமாக இறக்கப்படலாம். வெளி உலகை தொடர்பு கொள்ள முடியாதவாறு எமது தொடர்பு சாதனங்கள் பறிக்கப்படலாம். இன்னுமோர் மடலை எழுத சந்தர்ப்பம் வழங்கபடுவோமோ என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது. ஆகவே இந்த இக்கட்டான சூழ்நிலையில் உங்கள் அனைவரது ஒருமித்த குரல்களையும் எமக்காக வழங்குமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம். புலம்பெயர் நாடுகளிலுள்ள தமிழ் அமைப்புகள் மற்றும் அனைத்துலக ஊடகங்கள் எமக்கு கரிசனை காட்டுங்கள். உங்கள் நாடுகளிலுள்ள இந்தோனேசிய தூதரங்களிடம் எமது பாதுகாப்பை உறுதிப்படுத்த வலியுறுத்துங்கள். உங்கள் நாடுகளில் புகலிடம் பெற்றுத்தருவதற்காக உங்கள் அரசாங்கங்களை வலியுறுத்துங்கள். உங்களாலான உதவிகளை எங்களுக்கு வழங்குங்கள். என்றும் நாம் உங்களுக்கு நன்றியுடையவராக இருப்போம்.

வி. உருத்திரகுமாரன் "சிறப்புச் செவ்வி":

"வீண் அவதூறுகள் வேண்டாம்" நாம் யார்? என்பதுவும் எமது பணி என்ன? என்பதையும் "வரலாறு எடுத்துரைக்கும்" 2009 மே மாதத்திற்குப் பிறகு உருவான நாடு கடந்த தமிழீழ அரசு ஈழத் தமிழ் மக்களிடம் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது? நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் இன்னும் அமைக்கப்படவில்லை; அதனை உருவாக்குவதற்கான பணிகள்தான் தற்போது நடைபெற்று வருகின்றன என்பதனைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். 2009 ஆம் ஆண்டு யூன் மாதம் 16 ஆம் திகதி நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தொடர்பான முன்மொழிவு வெளிப்படுத்தப்பட்டதிலிருந்து இவ் அரசாங்கத்தினை அமைக்கும் பணி முன்னேற்றமடைந்து வருகிறது. இவ் அரசாங்கம் எவ்வாறு அமைக்கப்படவேண்டும் என்பதனை ஆய்வு செய்து இதனை அமைக்கும் வழிவகைகள் தொடர்பான அறிக்கையினை மதியுரைக்குழு தைத்திருநாளன்று மக்கள் கருத்துப் பரிமாற்றத்திற்காக வெளியிட்டிருந்தது. 15.02.2010 வரை மக்கள் கருத்துக்கள் பெறப்பட்டு அதன் அடிப்படையில் மீளமைக்கப்பட்ட அறிக்கை 15.03.2010 அன்று வெளியிடப்பட்டுள்ளது. நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான முதலாவது அரசவையில் 135 பிரதிநிதிகள் இடம் பெறுவர். இவர்களில் 115 பேர் மக்கள் மத்தியிலிருந்து இதற்கென நடாத்தப்படும் தேர்தல்கள் மூலமாக ஈழத் தமிழ் மக்கள் புலம் பெயர்ந்து வாழும் பல்வேறு நாடுகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்படுவர். தேர்தல்கள் உடனடியாக நடாத்துவதற்கு கடினமான இடங்களில் 20 பேராளர்கள் முதலாவது அரசவையால் தெரிந்தெடுக்கப்படுவார்கள். நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான நேரடித் தேர்தல்கள் மே மதம் 2 ஆம் திகதி உலகளாவியரீதியில் நடாத்தப்படுகிறது. அரசாங்கத்தின் முதலாவது அமர்வினை மே மாதம் 17-19 காலப்பகுதிக்குள் கூட்டுவதற்கு நாம் திட்டமிட்டுள்ளோம். நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது அரசவை இக் காலப்பகுதிக்குள் கூடுவது முள்ளிவாய்க்காலுடன் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முறியடித்து விட்டதாகக் கூறி மார் தட்டும் சிறிலங்கா அரசுக்கு ஈழத் தமிழர் தேசம் கொடுக்கும் குறியீட்டு வடிவிலான பதிலடியாக அமையும். நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் உருவாக்கப்படுவது ஈழத் தமிழ் மக்களிடம் புதியயொரு நம்பிக்கையையும் நாம் தோற்றுப் போய்விடவில்லை என்ற உணர்வையும் கொடுத்து வருகிறது. கே.பி. பற்றி ஏராளமான குற்றச்சாட்டுகள். குறிப்பாக அவர் இலங்கை அரசோடு பேசிக் கொண்டு தானாக முன் வந்து கைதாகி கொழும்பில் அரசு அரவணைப்பில் இருக்கிறார் என்பது பிரதான குற்றச்சாட்டு இது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? திரு செ. பத்மநாதன் அவர்கள் (கே.பி.) மலேசியா கோலாலம்பூரில் வைத்து மலேசிய இராணுவப் புலனாயு;வுத்துறையால் கடத்திச் செல்லப்பட்டு பின்னர் சிறிலங்கா அரசிடம் கையளிக்கபட்டிருக்கிறார். இது தொடர்பான நம்பகமான தகவல் எமக்குக் கிடைத்தமையால் சட்டநெறிமுறைகளுக்கு அப்பாற்பட்ட இக் கடத்தலைக் கண்டித்தும் இச் சம்பவம் குறித்து விசாரணை கோரியும் நாம் அறிக்கை ஒன்றினை விடுத்திருந்தோம். அவர் தானாக முன்வந்து கைதாகியது என்று கூறப்படுவதற்கு எவ்வித ஆதாரங்களும் இல்லை. 30 வருடங்களுக்கு மேலாக விடுதலைப் போராட்டத்தில் இயங்கிய ஒரு போராளி குறித்து எவ்வித ஆதாரங்களும் இல்லாமல் இத்தகைய குற்றச்சாட்டுக்களை சுமத்துவது எவ்விதத்திலும் நியாயமானதும் அல்ல. இவர் சிறிலங்காவின் கைதியாகிய பின்னர் பல்வேறுவகையான தகவல்கள் ஊடகங்களில் வந்த வண்ணம் உள்ளன. இவர் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டுள்ளார் என்பதில் இருந்து வசதியாக வைக்கப்பட்டள்ளார் என்பது வரையிலான செய்திகள் வரை ஊடகங்கள் வெளியிடுகின்றன. இவற்றின் உண்மை பொய் குறித்த விடயங்கள் எதுவும் எமக்குத் தெரியாது. இருந்த போதும், சிறிலங்கா தமிழ் அரசியல் கைதிகளைக் கையாளும் விதம் உலகறிந்தது. அனைத்துலக மனித உரிமை அரங்குகளில் சித்திரவதை சிறிலங்காவில் ஒரு நிரந்தர விடயம் எனத் தொடர்ச்சியாகக் கூறப்பட்டு வருவது நாம் அனைவரும் அறிந்ததொன்று. எனவே அவர் மட்டுமல்ல தமிழீழ விடுதலைப்புலிகளது ஏனைய தலைவர்களும் போராளிகளும் என்ன சூழ்நிலையில் இருக்கிறார்கள் என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். சிறைக்கைதிகளாக இருக்கும் அவர்களது நிலையை அந்தச் சூழலில் இருந்து தான் நாம் புரிந்து கொள்ள வேண்டும். மேலும், நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தொடர்பான முதல் அறிவிப்பினை இவரே விடுத்திருந்தபடியால் எத்தயை ஏற்பாட்டின் அடிப்படையில் இவ் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது என்பதனை இச் சந்தர்பத்தில் வெளிப்படுத்தல் பொருத்தமானது எனக் கருதுகிறேன். நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைக்கும் பணியைப் பொறுத்த வரையில்; நாம் இந்த முயற்சியினை ஆரம்பிக்கும் போதே எழக்கூடிய சட்டப்பிரச்சினைகள் காரணமாகவும் தற்போதய சர்வதேச அரசியல் யதார்த்த நிலை காரணமாகவும் இது ஒரு சுயாதீனமான முயற்சியாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியான கருத்தைக் கொண்டிருந்தோம். இந்த அடிப்படையிலேயே நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைக்கும் முயற்சியை ஒருங்கிணைக்கும் பணியை நான் ஏற்றுக் கொண்டேன். இதற்கமைய திரு செ.பத்மநாதன் அவர்களும் 15.06.2009 அன்று நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் குறித்து தான் விடுத்திருந்த அறிவிப்பில் இதனை அமைக்கவுள்ள செயற்குழு சுயாதீனமானது என அறிவித்திருந்தார். ஆரம்பம் முதல் நாம் எமது முயற்சியினை சுயாதீனமான குழு என்ற நிலையிலிருந்தே முன்னெடுத்து வருகிறோம். இதற்கிடையில், திரு செ.பத்மநாதன் அவர்கள் கைது செய்யப்பட்ட பின்னரும் நாம் அவருடன் தொடர்புகளைப் பேணுவதாகவும் அவரது வழிகாட்டலில் செயற்படுவதாகவும் வதந்திகளை சிலர் பரப்ப முனைவதான தகவல்கள் எமக்குக் கிடைத்துள்ளன நாம் அவருடன் எந்தவகையான தொடர்புகளையும் பேணவில்லை. அவரது வழிகாட்டலில் செயற்படவும் இல்லை. இந்த விசமத்தனமான வதந்தி பரப்பும் முயற்சி நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைக்கும் எமது முயற்சிக்கு இடையூறு விளைவிக்கும் கெட்ட உள்நோக்கம் கொண்டதாகவே நாம் கருதுகிறோம். இவை மட்டுமன்றி, நாம் எடுத்துள்ள முயற்சி ஒரு ஜனநாயக வழியிலான முயற்சி. இதில் வெளிப்படைத் தன்மை முக்கியமானதாக உள்ளது. நாடு கடந்த அரசாங்கத்தை நடத்தப்போகிறவர்கள் திரு கே.பி யோ அல்லது ருத்ரகுமாரனோ அல்லது மதியுரைக்குழுவோ அல்லது நாடுவாரியான செயற்பாட்டுக்குழுக்களோ அல்ல. இதனை நடத்தப்போகிறவர்கள் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்காக நடத்தப்படவுள்ள நேரடித் தேர்தல்களில் போட்டியிட்டு மக்களால் தெரிவு செய்யப்படுபவர்கள். கொள்கை மீதும் மக்கள் மீதும் நேர்மையான விசுவாசம் கொண்ட, சுதந்திர இறைமையுள்ள தமிழீழம் அமைக்கும் பணிக்கு ஆக்கபூர்வமான பங்களிப்பு வழங்கும் ஆற்றல் உள்ளவர்களைத் தான் மக்கள் தமது பிரதிநிதிகளாகத் தெரிவு செய்வார்கள் என்பது எனது திடமான நம்பிக்கை. எல்லா தரப்புக் குழுக்களையும் ஒருங்கிணைத்து பரந்து பட்ட ஒரு தமிழர்களுக்கான அமைப்பை உருவாக்கி மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்த முடியாதா? நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் உருவாக்கப்படுவதற்கு இத்தகைய நோக்கமும் உண்டு. இத் திட்டம் தொடர்பாக நாம் 16.06.2009 அன்று விடுத்த முதலாவது முன்மொழிவில், ”1976ல் வரையறுக்கப்பட்ட வட்டுக்கோட்டைப் பிரகடனத்தினதும், 1977ல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் தமிழ் மக்களால் ஒரு மனதாக வாக்களித்து வரவேற்கப்பட்டதும், பின்பு 1985ல் திம்புப் பிரகடனத்தில் வெளிப்படுத்தப்பட்டதும், 2003ல் இடைக்காலத் தன்னாட்சி அதிகாரப்பகிர்வின் தளமாக அமைந்ததுமாகிய - தமிழர் ஓர் தேசிய இனம் - வடக்கு- கிழக்கு தமிழர் தாயக நிலம் - ஈழத் தமிழரின் தன்னாட்சி உரிமை போன்ற அடிப்படைக் கோட்பாடுகளை ஈழத்தமிழரின் அரசியல் அபிலாசைகளின் ஆதார சுருதியாக ஏற்றுக் கொள்ளும் அனைத்துத் தமிழ் மக்களையும் ஓன்றிணைப்பது” என்பதனை இம் முயற்சியின் அடிப்படைகளில் ஒன்றாகக் குறிப்பிட்டிருந்தோம். மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்டு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைக்கப்பட்டவுடன் தமிழர் சமூகத்தின் மத்தியில் இயங்கி வரும் உருவாகி வரும் அமைப்புக்களுடன் இணைந்து செயற்படுவதற்குpய திட்டங்களையும் அதற்குரிய கட்டமைப்பு வடிவங்களையும் உருவாக்கும் போது நீங்கள் குறிப்பிடும் வகையிலான இணைவு நடந்தேறும் என்றே நான் கருதுகிறேன். புலத்து மக்கள் போராட்டங்களை கைவிட்டு விட்டார்கள். மே மாதம் கடும் கொந்தளிப்போடு வீதிகளுக்கு வந்தவர்கள் இன்று மௌனமாகி விட்டார்கள். இந்நிலைக்கு நிலவும் குழுச்சண்டைகளும் ஒரு காரணம் இல்லையா? மே மாத நடுப்பகுதி வரை நாhளாந்தம் பெருந்தொகையான மக்கள் சிறிலங்காபடையினரால் கொல்லப்பட்டபோது – உலகின் மனச்சாட்சியினைத் தட்டியெழுப்பி யுத்தநிறுத்தத்தையும் அதைத் தெடர்ந்த சமாதானப் பேச்சுவார்த்தைகளையும் வேண்டி – புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களும், தமிழ்நாடு மற்றும் உலகப்பரப்பெங்கும் உள்ள தமிழ் மக்களும் வீதியில் இறங்கிப் பெரும் எழுச்சியுடன் போராட்டங்களை நடாத்தினார்கள். இருந்த போதும் உலகம் எமக்காக அருகில் வரவில்லை. நம் கண் முன்னாலேயே நடந்த இனப்படுகொலையினை தடுத்து நிறுத்த நம்மால் முடியவில்லை. மே 2009 க்குப் பின்னரான காலம் நான் முன்னர் குறிப்பிட்டவாறு ஒரு இடைமாறு காலகட்டம். வீதியில் இறங்கிப் போராட்டங்கள் நடாத்தவதனை விட உலகினை எம்மை நோக்கி அசையச் செய்யதற்காகச் செயற்படக்கூடிய கட்டமைப்புக்களை உருவாக்குவது குறித்துக் கூடுதல் கவனங்கள் செலுத்தப்பட்டன. நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைப்பதுவும் இத்தகைய ஒரு முயற்சியே. முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்குப் பின்னர் உலங்கிலும் உள்ள தமிழர்கள் தலைமை ரீதியாக பிளவு பட்டிருக்கிறார்கள். இது பெருங்குறை இல்லையா? முள்ளிவாய்க்கால் இறுதிக்கட்டம்வரை இருந்த சூழலும் தற்போதய சூழலும் முற்றிலும் வேறுபட்டது. இப் புதிய சூழலில், புலம் பெயர்ந்த நாடுகளில் முன்னெடுக்கப்படும் முயற்சிகள் மாறுபட்ட குறிக்கோள்களைக் கொண்டுள்ளதாக நான் கருதவில்லை. என்னைப் பொறுத்தவரை இவற்றின் குறிக்கோள் ஒன்றுதான். ஆனால் அவற்றை அடையும்; மூலோபாயங்களில் தான் வித்தியாசம். வித்தியாசமான மூலோபாயங்களைக் கொண்டு ஒரே குறிக்கோளை நோக்கி இயங்குவது நன்மை பயக்கக்கூடியதே. இதற்கு இம் முயற்சிகளிடையே ஏதோ ஓரு வகையான ஒருங்கிணைவு இருத்தல் அவசியம். இவ் ஒருங்கிணைவு ஒரு ஒருமைப்பாடு என்ற வடிவத்தில், வேற்றுமையிலும் உடன்பாடுகாணக்கூடிய ஒரு தளத்தில் (யபசநந வழ னளையபசநந) இருந்தாலே போதுமானது. இத்தகைய புரிந்துணர்வு செயற்பாடுகளுக்குள்ளால் எட்டப்படக்கூடியது என்பதனை நான் திடமாக நம்புகிறேன். தற்போதய இடைமாறு காலகட்டத்தில் ஏற்படக்கூடிய குழப்பங்கள் எல்லாம் செயற்பாடு எனும் தளத்தில் இணையும்போது தெளிந்து விடும். நாடு கடந்த தமிழீழ அரசு இன்றைய உலகச் சூழலில் உலக நாடுகளின் கவனத்தை குறிப்பாக ஐய்ரோப்பிய நாடுகளின் கவனத்தை தன்பால் ஈருக்குமா? நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் முழுக்க முழுக்க ஜனநாயக விழுமியங்களுக்கு அமைவாக அமைக்கப்படுகிறது. இதன் செயற்பாடுகளும் முழுமையாய் அந்தந்த நாடுகளின் சட்டத்திற்கமைவாகவே வடிவமைக்கப்படுகின்றன. ஜரோப்பிய மற்றும் மேற்குலக மக்கள் ஜனநாயக விழுமியங்களுக்கு மிகுந்த மதிப்புக் கொடுப்பவர்கள். இதனால் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினை இந் நாடுகளால் நிராகரிக்கமுடியாது. நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே சிறிலங்கா அரசு தனது ஆரவாரத்தால் உலக நாடுகளின் கவனத்தை நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மீது திருப்பி விட்டுள்ளது. நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் குறித்து சிறிலங்கா அரசு அச்சமடைந்துள்ளது என்பதனை இதன் ஊடாகப் புரிந்து கொள்ளக்கூடியதாகவும் உள்ளது. நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் உலக நாடுகளின் ஆதரவைப் பெறுவது, அது ஜரோப்பிய நாடுகளாக இருந்தாலும் சரி அல்லது ஏனைய உலக நாடுகளாக இருந்தாலும் சரி - இந் நாடுகளின் நலன்களும் ஈழத் தமிழர் தேசத்தின் நலன்களும் ஒரே கோட்டில் சந்திக்கும்போதுதான் முழுமையாக வெற்றியளிக்கும். தற்போது சிறிலங்கா அரசின் போக்கில் ஜரோப்பிய நாடுகள் உள்ளடங்கலான மேற்குலகம் அதிர்ப்தியடைந்திருப்பதனை உணரமுடிகிறது. இது நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் முன்னெடுப்பக்குத் துணைபுரியக்கூடிய சாதகமான ஒரு அம்சமே. உலகின் எந்த ஒரு நாடுமே ஒரு இன விடுதலைப் போராட்டம் என்கிற அளவில் கூட ஈழ மக்களின் இறையாண்மை உணர்வுகளை புரிந்து கொள்ள வில்லையே? இங்கு நாடுகள் எனும்போது அரசுகளையும் அந் நாட்டு மக்களையும் நாம் பிரித்து பார்த்தல் நல்லது. ஈழத்தமிழர் தேசம் தனது இறையாண்மையினை பிரயோகிப்பதற்கு போராடும் போது அவ் இறையாண்மையின் அடிப்படையில் ஈழத் தமிழர் தேசம் தனிஅரசினை அமைப்பதற்கு ஒத்துழைப்பு வழங்குவதற்குரிய சூத்திரம் அரசுகளைப் பொறுத்த வகையில் நலன்கள் என்ற மந்திரக்கோலில்தான் தங்கியுள்ளது. அதற்குரிய சமன்பாடு மிக எளிதானது. இலங்கைத்தீவு ஒரு நாடாக இருப்பதா அல்லது இரு நாடுகளாக இருப்பதா தமது நலன்களுக்கு நல்லது என்ற கணக்கிலிருந்துதான் அரசுகளின் முடிவுகள் எடுக்கப்படுகின்றன. இதனால் ஈழத்தமிழ் மக்களின் இறையாண்மை உணர்வினை உலக நாடுகள் புரிந்து கொள்ள முயலவில்லை. இவ் விடயத்தில் இந்தியாவின் நிலையும் உலக நாடுகளின் நிலைப்பாட்டிற்கு காரணமாகவிருந்திருக்கிறது. ஆனால் மக்களைப் பொறுத்தவரை ஈழத்தமிழர் தேசம் தனது இறையாண்மையினை பிரயோகிப்பதற்கான நியாயப்பாடுகள் உரியமுறையில் அவர்களைச் சென்றடையும் போது எமது கோரிக்கையின் நியாயத்தன்மையினைப் புரிந்து கொளகிறார்கள். ஆதரவினைத் தருகிறார்கள். வன்னி மீதான போரில் இந்தியாவின் பங்களிப்பு வெளிப்படையானது. தமிழர்களுக்கு எதிரான இந்தியத் தலையீடு தமிழகத்திலும் புலத்திலும் இந்தியாவின் மீது கடும் விசனத்தை உண்டு பண்ணியிருக்கும் நிலையில் இந்தியா உங்களின் கோரிக்கைக்காக உதவும் என்று நம்புகிறீர்களா? ஈழத் தமிழர் தேசத்திற்கு இந்திய அரசு உதவுவது என்பது அதன் நலன்களோடு தொடர்புபட்டது. முற்றி வரும் உலக ஒழுங்கில் இந்தியாவின் நலன்களும் ஈழத் தமிழர் தேசத்தின் நலன்களும் ஒரே கோட்டில் சந்திப்பதற்கான வாய்ப்பக்கள் உண்டு எனறே நாம் கருதுகிறோம். சிறிலங்கா அரசினைத் தனது செல்வாக்கிற்கு உட்படுத்தி வைத்திருத்தல் தனது பிராந்திய மற்றும் ப+கோள நலன்களுக்கு அவசியம் என இந்தியா கருதுகிறது. அதற்காக சிறிலங்கா அரசுக்கு உதவியளித்து – அதனைத் தனது செல்வாக்கிற்குட்படுத்தி வைத்திருக்கும் கொள்கையை தற்போது நடைமுறைப்படுத்தி வருகிறது. இது தான் வன்னிப்போரிலும் எதிரொலித்தது. இலங்கைத்தீவினை சீனமயப்படுத்தும் முயற்சியில் சிறிலங்கா அரசு தற்போது ஈடுபட்டிருப்பதானது தற்செயலானதல்ல. அல்லது உதவி செய்யும் சீனாவின் விருப்பத்திறகிணங்க மட்டும் நடைபெறுமொன்றுமல்ல. இந்தியாவின் தன் மீதான ஆதிக்கத்தை மட்டுப்படுத்தும் நோக்குடன் சிறிலங்கா அரசு தனது நலனின் அடிப்படையிலும்தான் சீனாவுக்குக் கதவு திறந்து விட்டுள்ளது. காலவோட்டத்தில் சீனா இந்தியாவின் செல்வாக்கினையும் மீறி இலங்கைத்தீவினை விழுங்கத்தான் முயலும். இவ்விடத்திலிருந்து இந்திய நலன்களும் ஈழத் தமிழர் நலன்களும் இணையக்கூடிய வாய்ப்புக்கள் உள்ளன. இன்னமும் முகாம்களுக்குள் ஒன்றரை லட்சம் மக்கள் அடைபட்டிருக்கிறார்கள். பன்னிரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட அரசியல் கைதிகள் வதை முகாம்களில் சிக்கியிருக்கிறார்கள். இவர்களின் உயிர் பாதுகாப்பு... விடுதலை குறித்தெல்லாம் முன்னெடுப்புகளை உங்களால் செய்ய முடியாதா? இவை குறித்து தற்போது எமது மதியுரைக்குழு உறுப்பினர்கள் தம்மால் ஆன முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைக்கப்படும் போது இவ் அரசாங்கம் இவை குறித்த நடவடிக்கைக்கான திட்டங்களை வகுத்துச் செயற்படும் என்பது எமது நம்பிக்கை. புலத்தில் வாழும் தமிழ் மக்களுக்கு அஞ்சி நாம் எமது வெளிநாட்டுப் பயணங்களை கைவிட மாட்டோம் என்று இலங்கை அரசு சொல்லியிருக்கிறதே?இது பற்றி என்ன நினைகிறீர்கள்? சிறிலங்கா அரசு இவ்வாறு கூறுவதே புலம் பெயர் தமிழ் மக்கள் தொடர்பான அச்சம் அவர்களுக்கு உண்டு என்பதனை வெளிப்படுத்துகிறது. மேலும், புலம் பெயர் தமிழ் மக்கள் முக்கியமான அரசியல் சக்தியாக பரிமாணம் அடைந்துள்ளனர் என்பதனையும் இது காட்டுகிறது. புலத்து மக்கள் போராட்டங்களை கைவிட்டு விட்டார்கள். மே மாதம் கடும் கொந்தளிப்போடு வீதிகளுக்கு வந்தவர்கள் இன்று மௌனமாகி விட்டார்கள். இந்நிலைக்கு நிலவும் குழுச்சண்டைகளும் ஒரு காரணம் இல்லையா? மே மாத நடுப்பகுதி வரை நாhளாந்தம் பெருந்தொகையான மக்கள் சிறிலங்காபடையினரால் கொல்லப்பட்டபோது – உலகின் மனச்சாட்சியினைத் தட்டியெழுப்பி யுத்தநிறுத்தத்தையும் அதைத் தெடர்ந்த சமாதானப் பேச்சுவார்த்தைகளையும் வேண்டி – புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களும், தமிழ்நாடு மற்றும் உலகப்பரப்பெங்கும் உள்ள தமிழ் மக்களும் வீதியில் இறங்கிப் பெரும் எழுச்சியுடன் போராட்டங்களை நடாத்தினார்கள். இருந்த போதும் உலகம் எமக்காக அருகில் வரவில்லை. நம் கண் முன்னாலேயே நடந்த இனப்படுகொலையினை தடுத்து நிறுத்த நம்மால் முடியவில்லை. மே 2009 க்குப் பின்னரான காலம் நான் முன்னர் குறிப்பிட்டவாறு ஒரு இடைமாறு காலகட்டம். வீதியில் இறங்கிப் போராட்டங்கள் நடாத்தவதனை விட உலகினை எம்மை நோக்கி அசையச் செய்யதற்காகச் செயற்படக்கூடிய கட்டமைப்புக்களை உருவாக்குவது குறித்துக் கூடுதல் கவனங்கள் செலுத்தப்பட்டன. நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைப்பதுவும் இத்தகைய ஒரு முயற்சியே. இனக்கொலை, தடுப்பு முகாம்களில் மக்கள், அரசியல் கைதிகள், இதற்கெல்லாம் என்ன வேலைத் திட்டம் உங்களிடம் இருகிறது? இத்தகைய விடயங்களை கையாள்வது குறித்து தொடர்பான சில விபரங்கள் மதியுரைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன. இவை குறித்த விரிவான திட்டங்கள் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் உருவாக்கப்பட்டவுடன் வகுத்துச் செய்யப்படவேண்டியவை. அமெரிக்க நீதிமன்றத்தில் நீங்கள் வாதாடும் பயங்கரவாதம் தொடர்பான வழக்கு எந்த நிலையில் இருக்கிறது? அமெரிக்காவில் பயங்கரவாத அமைப்புக்களாக பிரகனடப்படுத்தப்பட்ட அமைப்புக்களில் தமிழீழ விடுதலைப் புலிகளும் ஒன்றாகும். அமெரிக்கச் சட்டப் படி இவ் அமைப்புக்களுக்கு பொருண்மிய உதவி வழங்குதல் குற்றமாகும். ஆயினும் இவ் அமைப்புக்களின் அரசியல் கொள்கைகளுக்கு சுயாதீனமான முறையில் ஆதரவு வழங்குவது சட்டத்திற்கு ஏற்புடையது. விளக்கமாக கூறுவதாயின், ஒரு நபர் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் குறிக்கோளை, அரசியல் வேலைத்திட்டத்தை சுயாதீனமான முறையில் எடுத்துச் செல்லலாம், அமெரிக்க உச்ச நீதி மன்றத்தில் எடுத்துக்கொண்ட சாரம் என்னவெனில், ஒரு நபர் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் வேலைத்திட்டம் தொடர்பாக அவர்களுடன் இணைந்து செயல்படும் உரிமையை மறுப்பது அமெரிக்க அரசியல் அமைப்புச் சட்டத்தில் உறுதி செய்யப்பட்ட பேச்சுச் சுதந்திரம், ஒன்று கூடும் சுதந்திரத்திற்கு முரணானது என்பதாகும். உச்ச நீதிமன்றதின் தீர்ப்பு ஜுன் மாதத்தில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. புலிகள் இன்னமும் இருக்கிறார்கள் என்றீர்களே? அவர்கள் ஈழப் போராட்டத்தில் அரசியல் போராட்டத்தில் உறுதியாக இருக்கிறார்களா? ’புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது’ நம் மத்தியில் உள்ள பழமொழி அல்லவா! தாயகத்தின் சுதந்திரமே எங்கள் கொள்கை

கைவிட்டுவிடாதீர்கள்……!!!

தனித்தவில் வாசித்தவர்களுக்கு புலித்தமிழர் தகுந்த பாடம் படிப்பித்திருக்கின்றார்கள். தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணி நாடாளுமன்றத் தேர்தலில் தமிழீழ மக்களால் நிராகரிக்கப்பட்டமையானது சில பாடங்களைக் கற்றுத் தந்துள்ளது. வெறும் கோஷங்களுக்காக தமிழ் தேசியத்தைத் தூக்கிப் பிடித்துக் கொண்டு வந்தவர்களை யாழ்ப்பாணம் மற்றும் திருமலை மக்கள் சரியாகவே இனம்கண்டுள்ளனர். ஒரு சிலரை தோற்கடிப்பதற்காக கூட்டமைப்பின் கட்டமைப்பை உடைத்தவர்கள் இன்று விலாசமில்லாதவர்களாகியுள்ளனர். புலம்பெயர் அமைப்புகள் சிலவற்றின் – குறிப்பாக பிரான்ஸ் தமிழ் சங்கங்கள் கூட்டமைப்பின் – தவறான வழிநடத்தலின் விளைவே கஜேந்திரன்களின் தனிவழிப் போக்குக்கும் அவர்களின் படுதோல்விக்கும் காரணமாகிவிட்டது. அவர்களை உடைத்ததில் காட்டிய அக்கறையை இணைப்பதில் காட்டியிருந்தால் இன்றைக்கு கூட்டமைப்பு இன்னும் மூன்று ஆசனங்களைக் கூடுதலாகப் பெற்றிருக்கும். கடைசிவரை பிரான்ஸ் தமிழ் சங்கங்களின் கூட்டமைப்பு தளத்தில் உள்ள தமிழர்களின் மனநிலையை புரிந்துகொள்ளாமல் போனமையும் கஜேந்திரன்களின் படுதோல்விக்கு வித்திட்டது. அதுசரி..தவறான வழிநடத்தலில் கஜேந்திரன்கள் பிழையாகப் போயிருக்கலாம். இனி அவர்களை சரியான வழியில் பயணிக்க வைப்பது புலம்பெயர் தமிழர்களினதும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினதும் முக்கிய கடமையாகும். தளத்திலுள்ள தமிழர்கள் எங்களுக்கு சரியான பதிலைத் தந்திருக்கின்றார்கள். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கொள்கைகளை தாங்கள் ஆதரிக்கின்றோம் என்றும் அவர்களின் பின்னால் தளத் தமிழர்கள் அணி திரண்டு நின்கின்றார்கள் என்றும் எங்களுக்குச் சொல்லியிருக்கின்றார்கள். இவற்றையெல்லாம் சரிவரப் புரிந்துகொண்டு கஜேந்திரன்களை மீண்டும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் உள்ளீர்ப்பது, பிரித்துவைத்த புலம்பெயர் தமிழர்களின் கடமையாகும். கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நாங்கள் நேசித்த – எங்களை இறுதி மூச்சுவரை நேசித்த மாமனிதர் பெற்றெடுத்த புதல்வர். அவர் தற்போது பயணிக்கும் பாதை பிழையானது என்று தேர்தலில் மக்கள் தெரிவித்துவிட்டார்கள். இனி அவராக யோசித்து தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயலாற்ற முன்வரவேண்டும். பொன்னம்பலங்களின் குடும்பம் தமிழர்களுக்கு நன்மையே செய்துவருகின்றார்கள் என்று தம்பி கஜேந்திரகுமார் நிரூபிக்கவேண்டும். அதற்காகவது பொறுக்கித்தன அரசியலைக்கைவிட்டு – தளத் தமிழர்களின் விருப்புகளை புரிந்து தம்பி செயற்பட வேண்டும் என்பதே அநேக புலம்பெயர் மக்களின் அவா. அடுத்தது செல்வராசா கஜேந்திரன். தேர்தலில் இவரின் பொங்குதமிழ் பாச்சா பழிக்கவில்லை. பொங்குதமிழ் நிகழ்வுகள் நடைபெறத் தானே காரணம் என்று தேர்தல் மேடைகளிலும் பேட்டிகளிலும் முழங்கினார். ஆனால் அவை எடுபடவில்லை. எனினும் பொங்குதமிழ் நிகழ்வுகளின் ஒரு நாயகனாகவே இன்றும் அந்தச் செல்லக்குழந்தையை நாங்கள் பார்க்கின்றோம். ஒரு பல்கலைக்கழக மாணவனாக – பல்கலைக்கழக மாணவர் தலைவராக – தமிழீழ சர்வதேச மாணவர் தலைவராக கஜேந்திரன் அவர்கள் தமிழீழத் தேசியப் போராட்டத்திற்கு பல உதவிகளைப் புரிந்திருக்கின்றார். தற்போது அவர் பிழையான வழிநடத்தலுக்கு உட்பட்டிருக்கின்றார். அவரும் மக்களின் தீர்ப்பை உணர்ந்திருப்பார். இனிமேலாவது தமிழ் தேசியத்தை அவர் வெறும் தேர்தல் கோஷமாக எடுக்கமாட்டார் என்பது உறுதியானது. அவர் இனித் தெளிவடைய வேண்டும். தமிழ் தேசிய மக்கள் முன்னணி என்பதைக் கலைத்துவிட்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பை மேலும் பலம்பொருந்திய அமைப்பாக - தமிழர்களுக்காக பேரம் பேசும் ஆற்றல் கொண்ட அமைப்பாக மாற்ற கஜேந்திரன்கள் முன்வரவேண்டும் என்பதே எங்களின் எதிர்பார்ப்பு. தமிழ் தேசிக் கூட்டமைப்பின் தலைமையிடம் புலம்பெயர் தமிழர்களாகிய நாங்கள் முன்வைக்கும் ஒரே வேண்டுகோள். கஜேந்திரன்களைக் கைவிட்டுவிடாதீர்கள். அவர்களைச் சரியான பாதையில் பயணிக்கவைப்பதறகாக நீங்கள் கடுமையான முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும்

வணக்கம்!

மே 2 - நாடுகடந்த தமிழீழ அரசுக்கு தேர்தல்! கேட்கும் போதே மெய்சிலிர்க்கின்றது. மயிர்க்காம்பெல்லாம் கூச்செறிந்து புல்லரிக்கின்றது. புதிய வடிவம் !புதிய சிந்தனை! புதிய பாதை! தமிழீழம் தமிழர்களுக்கானது மட்டுமல்ல: அங்கு இரண்டு தாயகங்கள் என்கின்றீர்கள்! ஒன்று முஸ்லிம்களின் தாயகம், மற்றையது தமிழர்களின் தாயகம் என்கின்றீர்கள் ஈழத்தீவில் தமிழீழ அரசமைக்கும் உரிமை தமிழர்களுக்கு உண்டென்றால்... தமிழீழத்தைத் துண்டாடி அரசமைக்கும் உரிமை முஸ்லிம்களுக்கு உண்டென்கின்றீர்கள்! இப்படித்தான் உங்கள் இறுதி அறிக்கை கூறுகின்றது. தமிழர்களைப் போன்று முஸ்லிம்கள் ஒரு தனித்துவமான இனம் என்கின்றீர்கள். மதசார்பற்ற தமிழீழம் அமைப்பது உங்கள் இலக்கு என்கின்றீர்கள். ஆனால் முஸ்லிம்களின் மதத் தனித்துவம் பேணப்படும் என்கின்றீர்கள். ஐயா! தமிழீழத்தைத் துண்டாடி அரசமைக்க வேண்டும் என்று எப்போது உங்களிடம் எங்கள் முஸ்லிம் சகோதரர்கள் மனுச்செய்தார்கள்? தமிழீழத்தில் தமிழ் - முஸ்லிம் பிராந்தியங்கள் இருப்பதாக உங்களிடம் எந்த வரலாற்று அறிஞர் கூறினார்? இந்து, கிறிஸ்துவம், இஸ்லாம் என மூன்று மதங்களைத் தழுவி வாழும் ஈழத்தமிழர்களை, தமிழர்கள் என்றும் முஸ்லிம்கள் என்றும் இரு தேசிய இனங்களாகக் கூறுபோடும் உரிமையை உங்களுக்கு யார் அளித்தார்கள்? ஈழத்தீவு என்பது தமிழர்களின் பூர்வீகப் பூமிஅங்கு ஆண்டாண்டு காலமாய் ஆட்சி செய்தவர்கள் தமிழர்கள். பௌத்தத்தின் வருகையோடு அங்கு தோற்றம்பெற்றது சிங்களம். அதற்கு முன் மாதகலில் இருந்து இருந்து தெய்வேந்திரமுனை வரை தமிழர்கள் ஆட்சிசெய்தது பண்டைய வரலாறு. திருகோணமலையும், மாந்தையும், அனுராதபுரமும் தமிழர்களின் தலைநகர்களாக விளங்கியது அன்றைய கல்வெட்டு. பின்னர் யாழ்ப்பாண அரசாகவும், வன்னிமைகளாகவும் ஈழத்தீவின் வடகிழக்கு மாநிலத்தில் தமிழரது ஆட்சி சுருங்கிப் போக, கண்டியும், கோட்டையுமாக தென்னிலங்கையில் சிங்கள ஆட்சி விரிந்தது வரலாறு. 16ஆம் நூற்றாண்டில் ஈழமண்ணில் வெள்ளையர்கள் கால்பதித்த பொழுது அங்கு இருந்தது இரண்டு இனங்களின் அரசுகள்: ஒன்று தமிழரசு, மற்றையது சிங்கள அரசு. பின்னர் எங்கிருந்து முஸ்லிம் அரசு முளைத்தது? தனித்துவமான மதத்தையும், பண்பாட்டையும் எமது முஸ்லிம் சகோதரர்கள் கொண்டிருப்பதை எவரும் மறுக்கவில்லை.தமது மதத்தையும், பண்பாட்டையும் இஸ்லாமியத் தமிழர்கள் பேணிப் பாதுகாக்கும் உரிமையை யாரும் மறுதலிக்கவுமில்லை. தமிழீழ மண்ணின் விடிவிற்காகப் போராடி வீழ்ந்த மாவீரர்களில் எத்தனையோ முஸ்லிம் சகோதரர்களும் உள்ளார்கள். இறுதியாக ஆனந்தபுரத்தில் நிகழ்ந்தேறிய நெருப்பாற்றில் கனரக ஆயுதமேந்தி வீரகாவியமாகிய முஸ்லிம் போராளியை நாங்கள் மறந்துவிட முடியாது. வீட்டுகொரு மாவீரன் என்ற நிலைமாறி வீட்டில் இரண்டு மாவீரர்களைக் கண்ட முஸ்லிம் குடும்பங்களும் இன்றி வன்னி மண்ணில் வாழ்கின்றன.தமிழகத்தில் தீக்குளித்து ஈகைச்சாவெய்திய எங்கள் அப்துல் ரவூப்பை நாங்கள் யாரும் மறக்கவில்லை. இந்த மாவீரர்களின் வாழ்வும் சாவும் தமிழீழத்திற்கானது.தமிழீழத்தைக் கூறுபோடுவதற்காக அல்ல! ஐயனே! தமிழீழத்தில் இருந்து பிரிந்து சென்று முஸ்லிம் தனியரசை முஸ்லிம்கள் நிறுவலாம் என்கின்றீர்கள். சரி. அந்த அரசுக்கான தொடர்ந்தேர்ச்சியான நிலம் எது? காத்தான்குடியா? சம்மாந்துறையா? பொத்துவிலா? மூதூரா? புத்தளமா? மன்னாரா? அல்லது யாழ் நகரமா? பலஸ்தீனர்களை காசாவிலும், மேற்குக்கரையிலும் இஸ்ரேலிய ஏகாதிபத்தியம் முடக்கியமை போன்று எமது முஸ்லிம் சகோதரர்களை முடக்கிச் சிதறடிப்பதா உங்கள் எண்ணம்? அப்படித்தான் இருந்தாலும்... அங்கு வாழும் ஏனைய தமிழர்களின் கதி? ஆரையம்பதியும், வீரமுனையும், சம்பூரும், வண்ணாத்திவில்லும், திருக்கேதீச்சரமும், முற்றவெளியும் எந்த அரசின் ஆளுகைக்கு உட்படும்? தமிழீழ அரசினதா? முஸ்லிம் அரசினதா? அல்லது சிங்கள அரசினதா?தமிழீழத் தனியரசை நிறுவுவது ஈழத்தமிழர்களின் கடன். அதற்கு இராசதந்திர அங்கீகாரம் பெற்றுக்கொடுப்பது புகலிட உறவுகள் ஒவ்வொருவரின் கடன்.ஆனால் தமிழீழத்தை துண்டாடுவது எவரது கடன்? தமிழீழத்தை தமிழ், முஸ்லிம், சிங்களப் பிராந்தியங்களாகப் பிரித்து தீர்வுத் திட்டமொன்றை 1985இல் இந்தியப் பேரரசு முன்வைத்த போது அதனை அடியோடு நிராகரித்தவர் எமது தேசியத் தலைவர். அந்த சூரியத்தேவனால் நிராகரிக்கப்பட்ட திட்டத்திற்கு நீங்கள் செயல்வடிவம் கொடுக்க முற்படுவதன் சூத்திரம் என்ன? இதுதான் உங்கள் நாடுகடந்த அரசமைக்கும் திட்டத்தின் விஞ்ஞாபனம் என்றால் இதற்கு எதற்காக புகலிட தேசத்தில் தேர்தல்? இந்தியாவிலேயே உங்கள் தேர்தலை நிகழ்த்தலாமே? புகலிடத் தமிழர்களை சிதறடிப்பது சிங்கள அரசின் திட்டம் என்றால்... தமிழீழத்தை துண்டாடுவது இந்தியாவின் திட்டமா? புலம்பெயர் உறவுகளை இணைப்பதற்காக நாடுகடந்த அரசமைப்பது வரவேற்கத்தக்கதுதான். ஆனால் ஈழத்தமிழர்களின் தன்னாட்சியுரிமையைப் பற்றிப் பேசுவதை விடுத்து புதிதாக முஸ்லிம்களின் தனியரசு உரிமையைப் பற்றி நீங்கள் பேசுவதன் சூத்திரத்தைத்தான் எம்மால் விளங்கிக் கொள்ள முடியவில்லை. தயைகூர்ந்து விளக்குவீராக. நிற்க: தமிழீழத் தேசியக் கொடியாகிய புலிக்கொடியை நீங்கள் அங்கீகரிக்கவில்லையாமே? உங்கள் நாடுகடந்த அரசின் கொடியாக புலிக்கொடி அமையாது என்று உங்கள் அறிவாலோசகர் பீற்றர் சால்க் கூறியுள்ளாராமே? இதன் அர்த்தம்தான் என்ன? உங்களின் தேசியக் கொடிதான் என்ன? அதுசரி... உங்கள் நாடுகடந்த அரசுக்கான தேர்தலில் போட்டியிடுவதற்கு ஒவ்வொரு வேட்பாளரும் தலா ஆயிரம் பவுண்கள் கட்டுப்பணம் செலுத்த வேண்டுமாமே? எதற்காக? ஏழை எளியவர்கள் தேர்தலில் போட்டியிடுவதை தவிர்ப்பதற்கா? அல்லது தடுப்பதற்கா? பிரித்தானிய நாடாளுமன்றம் செல்வதற்கு ஐநூறு பவுண் கட்டுப்பணம் செலுத்தினால் போதும். ஆனால் உங்கள் அரசில் இணைவற்கு ஆயிரம் பவுண்களா? நினைக்கவோ பிரமிப்பாக இருக்கின்றது. சட்ட அறிஞரே! நாடுகடந்த தேர்தல் திருவிழா தொடங்கும் நிலையில் இறுதியாக உங்களிடம் இரண்டு கேள்விகள். தென்சூடானிற்கு இடைக்கால நிர்வாகம் கிடைத்தது போன்று தமிழீழத்திற்கும் இடைக்கால நிர்வாக ஆட்சி கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப் போவதாக 2003ஆம் ஆண்டில் தேசியத் தலைவரிடம் வாக்குறுதி அளித்திருந்தீர்களே, உங்கள் வாக்குறுதி என்னவாயிற்று? அதுதான் போகட்டும். ஐ.நா செக்கியூரிட்டிக் கவுன்சிலிலும், ஒபாமாவுடனும் பேசி அமெரிக்கப் படைகளை முள்ளிவாய்க்காலுக்கு அனுப்புவதாக நடேசன் அண்ணாவிடம் கதையளந்தீர்களே, அதற்கு என்ன நடந்தது? எங்கள் போராளிகளும், பொறுப்பாளர்களும் நயவஞ்சகமாக படுகொலை செய்யப்பட்டதன் பின்னணியும், சிறைப்பிடிக்கப்பட்டதன் சூத்திரமும் உங்களுக்கும், திருவாளர் கே.பி அவர்களுக்கும் நன்கு தெரியும். தயைகூர்ந்து விளக்குவீராக!

தேர்தலின் பின் சிறிலங்காவின் அரசியல் நிலைவரம்

அணுசக்தி பாதுகாப்பு தொடர்பான மாநாட்டில் கலந்துகொள்வதற்காக அமெரிக்கா சென்றுள்ள இந்திய பிரதமர் மன்மோகன் சிங், அந்நாட்டு அரசு தலைவர் பராக் ஒபாமாவுடன் சிறிலங்காவின் தற்போதைய அரசியல்நிலைவரம் குறித்து முக்கிய பேச்சுக்களில் ஈடுபடவுள்ளார். இந்த சந்திப்பு நாளை திங்களன்றும் நாளை மறுதினமும் வோஷிங்டனில் இடம்பெறவுள்ளது. சிறிலங்காவில் நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் ஆளும் மகிந்த அரசு கூட்டணிக்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலம் கிட்டக்கூடிய அதிக வாய்ப்பு ஏற்பட்டிருப்பதால், இனிவரும் காலங்களில் சிறிலங்காவில் ஏற்படக்கூடிய அரசியல் மாற்றங்களில் சர்வதேச சமூகத்தின் சக்தி எவ்வகையானதாக இருக்கப்போகிறது மற்றும் அதற்கான சாத்தியங்கள் என்ன என்பது குறித்து இந்த சந்திப்பில் பேசப்படலாம் என்று கொழும்பிலுள்ள இந்திய தூதரக வட்டாரங்கள் தெரிவித்தன. இதேவேளை, சிறிலங்கா நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக தெற்காசிய விவகாரங்களுக்கான அமெரிக்க துணை செயலர் ரொபேர்ட் ப்ளாக் கருத்து தெரிவிக்கையில் - "பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக்கொள்ள விரும்புவதாக ஜனாதிபதி எப்போதும் கூறியிருந்தார். அவ்வாறு பெற்றுக்கொள்வதானது இலங்கையின் அரசியலமைப்பைத் திருத்துவதற்கு அவருக்கு இடமளிக்கும். "13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவதில் தான் உறுதிப்பாட்டுடன் இருப்பதாக அவர் (ராஜபக்ஷ) கூறியுள்ளார். இந்த 13 ஆவது திருத்தமானது மாகாணங்களுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்கும். வடமாகாணம் உட்பட மாகாணங்களுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பதாக அது அமையும். "நல்லிணக்கம் தொடர்பாக எப்போதும் அவர் உறுதிப்பாட்டுடன் இருப்பதாக நான் நினைக்கிறேன். அதனை இப்போது முன்னெடுப்பது மிகவும் முக்கியமானது என்று நான் நினைக்கிறேன்" - என்று கூறியிருந்தார்