சனி, 8 மே, 2010


11 ஆயிரத்திற்கும் அதிகமான எமது உறவுகளை யாருடைய கண்களுக்கும் தெரியாமல் இன்னமும் சிறைகளுக்குள் மறைத்து வைத்து சித்திரவதை செய்து தமது காழ்ப்புணர்வை வெளிப்படுத்தி வருகின்றது சிறிலங்கா தேசம். எம்மீதான இத்தனை கொடுமைகள் புரியப்பட்டு கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகின்றது. இந்த ஒரு வருட காலத்தில்; எமது இனத்தின் மீது புரியப்பட்ட கொடுமைகளுக்கு எதிராக அல்லது இந்த அநீதிகளுக்குப் பதிலாக எமக்கு இழைக்கப்பட்ட அவமானங்களுக்கு எதிராக நாம் என்ன செய்திருக்கின்றோம்? மாவிலாறு முதல் முள்ளிவாய்கால் வரை அநியாயமாக மரணித்த எமது உறவுகளின் ஆத்மாக்கள் சாந்தி அடைய நாம் என்ன செய்திருக்கின்றோம்? புலம்பெயர்ந்த நாடுகளின் தெருக்களில் நின்று கோஷம் போட்டிருக்கின்றோம். எம் தலைவன் காட்டிய வழியில் தொடர்ந்து நடப்போம் என்று இணையத் தளங்களிலும் வானொலி தொலைக்காட்சிகளிலும் வீர வசனம் பேசி இருக்கின்றோம் ஐ.நாவுக்கும் ஒபாமாவுக்கும் கடிதங்கள் போட்டிருக்கின்றோம். எம்மோடு உடன் இருந்த சிலருக்கு துரோகப்பட்டம் கட்டியிருக்கின்றோம் பல உயரிய தியாகங்களை மறைத்து அந்தத் தியாகங்களைக் கொச்சைப்படுத்தியிருக்கின்றோம். முழு மூச்சாக த.தே.கூட்டமைப்பை பிழவுபடுத்தியிருக்கின்றோம்;. நடிகர் விஜய்யின் படத்தை புறக்கணித்து இருக்கின்றோம். இலங்கைக்கு ஒரிரு தடவைகள் இரகசியமாகப் போய் வந்திருக்கின்றோம். புதிய புதிய இணையத் தளங்களைத் திறந்து ஒருவர் மீது ஒருவர் காறி உமிழ்ந்துகொண்டிருக்கின்றோம். இவற்றைத் தவிர எமது இனத்தின் மீது புரியப்பட்ட கொடுமைகளுக்கு எதிராக கடந்த ஒரு வருட காலத்தில் நாம் வேறு ஏதாவது செய்திருக்கின்றோமா என்று யாராவது கேட்டால் சிறிது நேரம் யோசித்துப் பார்த்துவிட்டு இல்லை என்றுதான் பதில் கூறவேண்டி இருக்கின்றது.

புலிகள் தோற்கவில்லை .........................


நான்காம் கட்ட ஈழப்போர் ஒரு கசப்பான அனுபவத்தோடு நிறைவடைந்திருக்கிறது. இது ஈழ விடுதலையை பின்னுக்கு தள்ளியதாகவோ அல்லது போராட்டமே நிறைவடைந்ததாகவோ நாம் கருத்தில் எடுத்துக் கொள்ள முடியாது. ஈழ விடுதலைப் போரின் எதிர்காலம் குறித்து ஏராளமான வினாக்கள் நம்முன் விரிந்திருக்கிறது. தற்போதைய நிலையில் இன ஒடுக்குமுறையின் தனிபெரும் தலைவராக திகழ்ந்த ராஜபக்சே மீண்டும் இலங்கையின் அதிபராக பொறுப்பேற்க இருக்கிறார். இன்னும் இரண்டு ஆண்டுகள் தமக்கான பதவிகாலம் இருந்தபோதும் கூட இன ஒடுக்கு முறையின் அடையாளமாக அதன் வெற்றி நாயகனாக தம்மை முழுமைப்படுத்திக்கொண்டு தேர்தல் களத்திற்கு வந்தார். அவரோடு கைகோர்த்து அவரின் சாட்டையாக இருந்த சரத்பொன்சேகா அவரின் எதிரணியின் வேட்பாளராக இருந்து தோல்வியடைந்திருக்கிறார். இது ஒரு பகுதி. வேறொரு பகுதியில் திறந்த வெளி சிறைச்சாலையில் தமிழர்கள் இன்னும் கைதிகளாய் தொடர்கிறார்கள். மற்றொரு பகுதி தமிழர்கள் அயல்நாடுகளில் புலம்பெயர்ந்து சென்று தம்முடைய வாழ்வைத்தேடி வாழ்கிறார்கள். இந்நிலையில் தமிழீழம் குறித்த உறுதியோடு இருந்த அனைவரும் இனி தமிழீழம் தொடருமா? தனியரசு அமையுமா? என்ற தனியாத தாகத்தோடு ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள். இனி ஒரு வெற்றி வருமா? என்ற எதிர்பார்ப்பு எல்லோர் மனதிலும் ஒரு ஏக்கமாய் எதிரொலித்துக்கொண்டிருக்கிறது. இதைவிட பெரும் கேள்வி தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்து நடத்திய மேதகு பிரபாகரன் அவர்களின் அடுத்தக் கட்டளை எங்கிருந்து உதிக்கும். இனி அவர்கள் மரபு வழி சமரிலிருந்துமாறி கரந்தடி தாக்குதலுக்கு தம்மை அர்ப்பணிப்பார்களா? என்கிற எதிர்பார்ப்பெல்லாம் தமிழீழ தனிஅரசு அமையவேண்டும் என்கிற எதிர்பார்ப்புள்ள எல்லோருக்கும் ஏக்கமாக இருக்கிறது. ஆனால் இப்போது நாம் செய்ய வேண்டியது தமிழீழ தலைமை அடுத்து என்னச் செய்யும். அல்லது இத்தோடு இந்தபோர் முடிந்துவிட்டதா? என்ற கேள்விகளை எல்லாம் எடுத்து மூட்டைக்கட்டிவிட்டு குழப்பங்களுக்குள் நம்மைபோட்டு கட்டி வைத்துவிடாமல் தெளிவாக வெளிவரவேண்டியதுதான் நம்முடைய தற்போதைய அவசிய செயலாகும். காரணம் நமக்குள் ஏற்படும் கருத்துச் சிதைவுகள், களமாறுபாடுகள், எதிரிகளுக்கு தொண்டாற்ற ஏதுவாகிவிடும். நாம் எந்த நிலையிலும் பகைவர்களுக்கு தொண்டுச் செய்ய அல்லது அவர்களுக்கு பயன்தரும் வகையில் நடக்க முன்வரக்கூடாது. ஆகவே, உடனடியாக இந்த நொடியே நாம் செயல்பட வேண்டும். செயல்பட வேண்டும் என்பது மட்டுமே நமது எண்ணமாக இருக்கவேண்டும். அனைத்தும் முடிந்துவிட்டது என நாம் கைகளைக் கட்டிக்கொண்டு வானத்தைப் பார்த்துக் கொண்டிருக்கக்கூடாது. இப்போது நடந்த இத்தோல்வியினால் நமக்கான இலட்சியம் அல்லது எண்ணம் நம்முடைய எதிர்பார்ப்பு தோல்வி அடைந்ததா என்றால் அறுதியிட்டுச் சொல்லலாம் இல்லை. இல்லவே இல்லை என்பது தான். எந்த ஒரு போராட்டமும் தோல்வி அடையுமா அல்லது வெற்றி அடையுமா என்று எதிர்பார்த்து முடிவு தெரிந்தப்பின் களம் காண்பதல்ல. அப்படியானால் அது போராட்டமும் அல்ல. அடிப்படையில் நமக்கான தேவை இருக்கிறது. அதை மீட்டெடுக்க வேண்டும். அல்லது அதை பெற வேண்டும். அதற்காக நாம் போராட வேண்டும் என்பதே போர்முறையின் இலக்கணமாக இருக்கிறது. கடந்தகால வரலாறு பலமுறை களதோல்வி கண்டிருக்கிறது. அந்த களதோல்வி மட்டுமே ஒரு போராட்ட லட்சியத்தை ஒடுக்கிப்போட்டது கிடையாது. மேலும் நம்முடைய குறிக்கோளை தேவையற்றது என மாற்றியதும் கிடையாது. நமக்கான தேவை தமிழீழ தனியரசு. இந்நேரத்தில் நாம் சிங்கள இனப்பகையரிடம் நமக்கான சலுகைகளை கையேந்தி பெறுவதற்கு இக்களத்தோல்வியை காரணமாக்கிவிடக் கூடாது. இது நம்முடைய லட்சியத்தை நம்முடைய தாகத்தை பெரும் பின்னடைவை ஏற்படுத்த ஒரு காரணியாகிவிடும். அல்லது இதையே காரணம் காட்டி நீங்கள் ஒன்றிணைந்து வாழுங்கள், ஒரு தேசியத்தின் குடையின் கீழ் நில்லுங்கள் என்று யாராவது வற்புறுத்தினால் அல்லது விளக்கம் கூறினால் அவர்களை நீங்கள் எளிதாக அடையாளம் கண்டுக் கொள்ளுங்கள். இந்த இனத்தின் மாபெரும் துரோகி அவர்கள்தான். இப்பொழுது நம்முடைய இனத்திற்கெதிரான தமிழீழ விடுதலைக் கொள்கையின்மேல் உறுதியான நம்பிக்கை நமக்குள் இன்னும் இன்னுமாய் ஆழமாக வேரூன்றவேண்டும். சிறு சிறு துளிகளிலிருந்து ஒரு மாபெரும் கடல்போல் தமிழ் மக்கள் அனைவரின் எண்ணங்களின் சங்கமமாக இந்த தமிழீழம் என்கிற கனவு மேலும் மேலுமாய் ஓங்கி உயரவேண்டும். தமிழீழத்திற்கெதிரான இனஒடுக்குமுறை நடவடிக்கை எடுத்த போர் குற்றவாளிகளை உலக சமூகத்திற்கு நாம் அடையாளம் காட்டவேண்டும். இந்த அடக்குமுறையாளர்களை தம்முடைய ஆயுதங்களாலும், கேடயங்களாலும் காத்துநிற்கும் இந்திய அரசை உலக நாடுகளின் அரங்கில் தோலுரிக்க வேண்டும். சிங்கள இனவெறி அரசின்மீது சிறு கீறல் விழாமல் காத்து நின்ற இந்திய அரசின் பார்ப்பனிய ஏகாதிபத்திய பொய்முகத்தை தோலுரிக்கவேண்டும். போரை நடத்துவதற்கு மட்டுமல்ல, அங்கே நடைபெற்ற இனப்படுகொலையை மறைப்பதற்கும் இப்பகையாளிகளை காப்பதற்கும் இந்திய அரசு மேலும் மேலும் உதவி செய்துக் கொண்டிருக்கிறது. இப்போர் நிகழ்ந்த இறுதிகட்ட நிகழ்வில் முள்ளி வாய்க்காலில் 20,000 தமிழ் மக்கள் ஒரே நாளில் கொலை செய்யப்பட்டார்கள். இக்கொலைக்கு இந்திய அரசு முழுகாரணமாக இருந்ததென இந்திய அரசின் அமைதிப்படை தளபதியாக செயல்பட்ட அசோக் மேத்தா குற்றம் சாட்டியபோது இந்திய அரசிடம் இருந்து அமைதியே பதில் மொழியாக வந்தது. இப்போது தமிழர்களின் இத்தாழ்நிலையை சிங்களம் பயன்படுத்திக் கொண்டு இலங்கைத்தீவை முற்றிலுமாக ஒரு சிங்கள இனவெறிநாடாக அங்கீகரிக்கும் செயலை முழு ஈடுபாட்டோடு செயல்பட தொடங்கும். அதற்காக சொந்த நாட்டுமக்களை அகதிகளாக அறிவித்து உலக நாடுகளிடம் பிச்சை ஏந்தி நிற்கும் ஒரு பயங்கரவாத கட்டமைப்பை அழிப்பதற்காக நாங்கள் நடத்திய போரில் ஏராளமான பொருட்சேதம் ஏற்பட்டிருக்கிறது. இந்த நாட்டை மறுகட்டமைப்பு செய்ய நிதி வேண்டும்என உலகமெல்லாம் சென்று பரப்புரை செய்யப்போகிறது. தமிழீழ மக்களின் வாழ்வை நிலைநிறுத்துவதாக சொல்லி உலக நாடுகளிடம் பெறும் நிதி ஆதாரத்தைக் கொண்டு சிங்கள பேரினவாதத்தை நிலைநிறுத்த ராஜபக்சே அரசு மேலும் வீச்சோடு பணியாற்றப்போகிறது. பன்னாட்டு செஞ்சிலுவை சங்கங்களும் உலக நாடுகளும் இந்த உண்மைகளை அறிந்துகொள்ளும் விதத்தில் நாம் முன்னைக்காட்டிலும் வேகமாக பணியாற்ற வேண்டிய தருணம் இது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. ஆகவே, இத்தனைக்காலம் விழிப்போடு இருந்தோம் என்பதல்ல. இப்போது வேகமாக இருக்கவேண்டிய கட்டாயம் நமக்கு இருக்கிறது. போரில் பலியான, காயமுற்ற, வீடிழந்த ஈழத்தமிழர் ஒவ்வொருக்கும் சிங்கள அரசு கட்டாயமாக தண்டம் கட்ட வேண்டும் என உலக அரங்கில் நாம் ஓங்கி குரல் கொடுக்க வேண்டும். இதற்காக உலக நாடுகள் முழுக்க மனித உரிமை ஆர்வலர்களையும் தமிழீழ ஆதரவாளர்களையும் ஒன்றிணைத்து இந்த ஒருங்கிணைப்பின் மூலமாக மேலும் இப்போராட்டத்தை செரிவாக்கி வலுபெற செய்யவேண்டும். வெறும் கருவி களத்திலே நாம் தோற்றுவிட்டோம் என்ற தாழ்வு மனப்பான்மை நமக்குள் மேலோங்கக்கூடாது. அப்போது ஏற்படுத்திய அக்காயம் எல்லோர் மனதிலும் ஒரு வேதனையை ஆறா வடுவை அழுத்தமாக பதிவு செய்திருக்கும் என்பதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை. இப்போதுதான் நமக்கும் தெரிகிறது தமிழ்நாட்டுக்கென்று ஒரு அயலுறவுத்துறை அமைச்சர் இருந்திருந்தால் பிரணாப் முகர்ஜியை கொழும்பு செல்லுங்கள் என்று கேட்டிருப்போமா? அது நம்முடைய கையறு நிலைதான். நமக்கான ஒரு நாடு இல்லாத காரணத்தால் நாம் இந்தியர்களை கேட்டுக்கொண்டிருக்க வேண்டிய கட்டாயத்தை புரிந்து கொள்ள முடிந்தது. இலங்கையில் அல்ல, இந்தியாவிலும் நாம் அடிமைகளாய் இருப்பதை அந்த நிகழ்வு நமக்கு புரியவைத்தது. ஆகவே, அடிமைகளுக்காக அடிமைகளாகிய நாம் போராட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இந்த போராட்டம் முள்ளிவாய்க்காலோடு முடக்கப்பட்டதல்ல. முள்ளிவாய்க்காலிலிருந்து முளைக்கபோவது.
காயப்பட்ட இதயத்திற்கு... கட்டுப் போட யாருமில்லை. பாவப்பட்ட தமிழ் இனத்திற்கு... படுத்துறங்க சொந்த வீடில்லை. கோவப்பட்ட சிங்கள அரசிற்கு... கேள்வி கேட்க நாடேயில்லை.!
புலம்பெயர்வாழ் தமிழ்மக்களின் ஒருமைப்பாட்டினால் பிரசவிக்கப்பட்ட நாடு கடந்த தமிழீழ அரசு கட்டமைப்பு மீது அவ்வப்போது சேறடிக்கும் பிரசாரங்களை இந்த இணையங்கள் மேற்கொண்டுவந்தபோதும், அவர்கள் திருத்திக்கொள்வார்கள் என பல மாதங்களாக எதிர்பார்த்து அதற்கான விமர்சனங்களை முன்வைக்காது இருந்தோம். அவ்வாறு மௌனமாக நாங்கள் இருப்பதனை தமக்குரிய சம்மதமாகவும் - தங்களது நடவடிக்கைக்கு கிடைத்த அங்கீகாரமாகவும் - கருதி இன்னும் பல கேடுகளை விளைவிக்கும் அபாயம் தற்போது எழுந்துள்ளதை தெளிவாக அவதானிக்ககூடியதாகவுள்ளது. என ஈழநேசன் இணையத்தளம் விசனம் தெரிவித்துள்ளது. தமிழ்நெற்றை வழிப்படுத்த வாரீர்! என தனது ஆசிரியர் பீடத்தினூடக உலகத்தமிழினத்துக்கு விடுத்திருக்கும் அவசர அறைகூவலில், அனைத்து தமிழர்களும் - குறிப்பாக புலத்துவாழ் ஈழத்தமிழர்கள் உடனடியாக செயற்படவேண்டியது அத்தியாவசியமானது

தமிழ் மக்களின் வலிசுமந்த மாதம் - கொண்டாட சிங்களதேசம் தயாராகின்றது

தமிழ் மக்களின் ஆயுதப்போரை முறியடித்த ஆண்டு விழாவை பெருமெடுப்பில் கொண்டாடுவதுடன்

மோசடிப் பேர்வழிகள் !

யாழ்ப்பாணக் குடாநாட்டில் தற்போது நிலவும் அமைதிச் சூழலைப் பயன்படுத்தி வெளியிடங்களைச் சேர்ந்த சிலர் பல்வேறு தந்திரோபாயங்கள் மூலம் பொதுமக்களை ஏமாற்றி பணம் பறித்து வருவதுடன், அவர்களில் சிலர்

வெள்ளி, 7 மே, 2010

சர்வதேச அழுத்தங்களையிட்டு சமாளிக்க சார்க்கை துணைக்கு இழுக்கும் மகிந்த

மனிதஉரிமைகளைப் பாதுகாப்பதற்கும், ஊடக சுதந்திரத்தைப் பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்குமாறு அமெரிக்கா அண்மைக்காலமாக வலியுறுத்தி வருகிறது. பூட்டானில் நடைபெற்ற சார்க் மாநாட்டுக்குச் சென்றிருந்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ, அமெரிக்காவின் தெற்காசியப் பிராந்தியத்துக்கான துணை இராஜாங்கச் செயலர் றொபேட் ஓ பிளேக்கைச் சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தார். இந்தச் சந்திப்புப் பற்றிய தகவல்கள் வெளியிடப்பட்டனவே தவிர,

குற்றங்கள் மலிந்த பூமியாக...........................

போர் முடிவுக்கு வந்து ஒரு வருடமாகப் போகின்ற நிலையிலும் யாழ்ப்பாணக் குடாநாடு பதற்றம், பீதிக்குள் இருந்து விடுபட முடியாத நிலைக்குள் சிக்கிப் போயிருக்கிறது. இதைச் சொல்லப் போனால் அரசாங்கத்துக்கு எரிச்சலோ, கோபமோ கூட வரலாம். ஆனால் உண்மை நிலை இதுதான்.
வேதனையின் வழியோடும் ஓராண்டை நோக்கும் தமிழர்களும்! வெற்றியின் ஓராண்டைக் கொண்டாடும் மகிந்தவும. வலி சுமந்த மாதம் இந்த மே மாதம். இது ஈழத்தமிழர்களுக்கு அதிலும் குறிப்பாக வன்னியில் பல ஆண்டுகளாக வாழ்ந்து அங்கு விடுதலைப்புலிகளுக்கு தூண்களாக நின்ற நமது உறவுகளுக்கு இந்த மாதம் வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சும் நினைவுகளோடு பிறந்துள்ளது

போர்க்குற்ற விசாரணைகள் நியாயமான முறையில் மேற்கொள்ளுக!

வன்னிப் போரின் போது இடம்பெற்ற சர்வதேச போர் நியமங்களுக்கு மாறான செயல்கள் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளும் ஆணைக்குழு பக்கச் சார்பற்ற முறையில் நியாயமான முறையில் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது

புலம்பெயர் தமிழர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளிக்க வேண்டிய அவசியமில்லை

புலம்பெயர் தமிழர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளிக்க வேண்டிய அவசியமில்லை என முன்னாள் வடக்கு கிழக்கு மாகாணசபையின் முதலமைச்சர் வரதராஜா பெருமாள் தெரிவித்துள்ளார். புலம்பெயர் தமிழர்களின் கருத்துக்கள் அநாவசியமானவை எனவும், அவர்கள் ஒருபோதும் நாடு திரும்பப் போவதில்லை எனவும் வரதராஜா பெருமாள் அரசாங்கத்திற்கு சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கையின் அபிவிருத்தி மற்றும் சமாதான முனைப்புக்களில் புலம்பெயர் தமிழர்கள் பங்களிக்கப் போவதில்லை என இந்திய ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியின் போது அவர் தெரிவித்துள்ளார். தமிழர் பிரதேசங்களை ஸ்திரமற்றத் தன்மையும், யுத்தமும் நிலவ வேண்டும் என்றே புலம்பெயர் சமூகம் எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதனால், மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் புலம்பெயர் தமிழர்களின் கோரிக்கைகளுக்கு மதிப்பளிக்க வேண்டிய அவசியம் கிடையாது என அவர் தெரிவித்துள்ளார். இலங்கை வாழ் தமிழர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டள்ளார்.

பிரித்தானியாவின் புதிய பிரதமராக,டேவிட் கெமரூன்?

பிரித்தானியாவின் புதிய பிரதமராக பழமைவாதக் கட்சியின் தலைவர் டேவிட் கெமரூன் வருவதற்கான வாய்ப்புக்களே இருப்பதாக அந்நாட்டின் தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்துகின்றன. பிரித்தானியாவின் நாடாளுமன்றத்திற்கான தேர்தல் நேற்றிரவு 10 மணியுடன் முடிவடைந்திருந்தது. இத்தேர்தலில் ஆளும் தொழிலாளர் கட்சி, பழமைவாதக் கட்சி, சுதந்திர ஜனநாயக கட்சி மற்றும் பிர்த்தானிய தேசயக் கட்சி என நான்கு கட்சிகள் தேர்தல் களத்தில் முக்கிய பங்கு வகித்தன. இத்தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்ற நிலையில் பழமைவாதக் கட்சி 302 ஆசனங்களைப் பெற்று முன்னிலையில் உள்ளது. அடுத்த இடத்தில் உள்ள தொழிலாளர் கட்சி 256 ஆசனங்களைப் பெற்றுள்ளது. பிரித்தானியாவில் மேற்கொள்ளப்பட்ட கருத்துக்கணிப்பின் படி பழமைவாதக் கட்சி 307ஆசனங்களையும், தொழிலாளர் கட்சி 255 ஆசனங்களைக் கைப்பற்றும் என்று எதிர்வு கூறப்பட்டிருந்தது. ஆட்சியில் அமர்வதற்கு பழமைவாதக் கட்சிக்கு 325 ஆசனங்கள் இருக்க வேண்டும். இதனால் சிறு கட்சிகளின் ஆதரவைப் பெற்று பழமைவாக் கட்சி ஆட்சி அமைக்கும் என்பது உறுதியாகியுள்ளது. இந்நிலையில், நாட்டை நிர்வகிக்கும் நம்பிக்கையை தொழிலாளர் கட்சி இழந்து விட்டது என பழமைவாதக் கட்சியின் தலைவர் டேவிட் கெமரூன் கூறியுள்ளார். பிரித்தானிய மக்கள் மாற்றத்தை விரும்புவதாகவும், இம்மாற்றம் புதிய தலைவரை வரவேற்கத் தயாராகி இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.