நாமும் கதை சொல்லி வெகு நாட்களாகி விட்டது. என்னவோ தெரியவில்லை நமது கிராமங்களில் கதை சொல்லி நமக்கு சில செய்திகளை புரிய வைக்கிறார்கள். அந்த கதைகள் நமது மனங்களில் இறுதிவரை தங்கி வருகிறது. இன்று போகும் தமிழீழ விடுதலை அரசியல் போக்கு நம்மை பெரும் வியப்புக்குள் ஆழ்த்துகிறது. விடுதலை போராட்டத்திற்கான வரலாற்று காரணங்கள், போராட்டம் துவக்கப்பட்ட காலத்திலிருந்து அது கருவி போராட்டமாக உருமாறிய காலக்கட்டங்கள். அதிலிருந்து மீட்டெடுக்கப்பட்ட தமிழனின் மானம், மரியாதை, உரிமை, தமிழனுக்கான வாழ்வடையாளம், அவனுக்கு கிடைத்த அங்கீகாரம் ஆகியவைகள் தற்காலிகமாக ஒரு பின்னடைவை சந்தித்திருக்கின்றன.
இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
வெள்ளி, 21 மே, 2010
ஈரானுக்கு எதிராக பொருளாதாரத் தடை!
ஈரானுக்கு எதிராக பொருளாதாரத் தடை விதிக்கும் திட்டத்தில் மாற்றமில்லை என அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமா தெரிவித்துள்ளார். துருக்கி மற்றும் பிரேஸிலுடனான ஈரானின் அணுத் திட்டங்கள் திருப்தி அளிக்கும் வகையில் அமையவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஈரானின் அணுத் திட்டங்கள் தொடர்பில் மேற்குலக நாடுகள் தொடர்ச்சியாக சந்தேகம் வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. சக்தி வளப் பயன்பாட்டுக்காக ஈரான் அணு ஆலைகளை பயன்படுத்துவதாக தெரிவிக்கப்பட்ட போதிலும், ஆணுவாயு உற்பத்திகள் நடைபெறுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சரக்குக் கப்பல் கண்காணிப்பு வங்கி கொடுக்கல் வாங்கல் போன்றவை தொடர்பில் ஈரான் மீது கட்டுப்பாடுகள் விதிக்கப்படக் கூடுமென எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், மேற்குலக நாடுகளின் இந்த தீர்மானத்திற்கு பிரேஸில் மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் அதிருப்தி வெளியிட்டுள்ளன. ஈரான் மீது பொருளாதார விதிக்கப்பட வேண்டுமென பல உறுப்பு நாடுகள் வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மரணத்தின் விளிம்பில் மனித இனம்....
உலகின் பல ஆய்வாளர்களும் கூட கண்டுகொள்ளாத அல்லது ஒருவேளை கண்டு சொல்லாத மிகப்பெய செயல் ஒன்று தொடர்ந்து நடந்தபடி பூமியை வாட்டிவதைத்து உருக்கிக்கொண்டே இருக்கிறது. இமயமலை, ஆர்டிக், அண்டார்டிக் உருக மிக முக்கிய காரணம் நம் பூமியின் அடிப்பகுதியிலிருந்து மேல் எழும்பி வரும், வந்து கொண்டிருக்கும் லாவா மற்றும் மேக்மாவின் அளவு கடந்த, தடுக்கப்படாத வெப்பமே.
“செப்ரப்பர்-11” …. “மே – 17”……
2001 செப்ரெம்பர் 11இல் அமெரிக்காவில் நடத்தப்பட்ட இரட்டைக்கோபுரத் தாக்குதலின் பின்னர் “செப்ரெம்பர் 11′ என்ற குறியீட்டுச் சொல் புழக்கத்துக்கு வந்தது. அது சர்வதேச ரீதியில் பிரபலமடைந்துமிருக்கிறது. அதேவேளை இந்தத் தாக்குதலுக்குப் பின்னர், அதாவது “செப்ரெம்பர் 11 க்குப் பின்னரான நிலைமைகள்’ என்று அரசியல் ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் வெளியுறவுக் கொள்கைகள் என்ற அளவிலும் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டன. இந்த மாற்றங்கள், விளைவுகளின் அடிப்படையிலேயே மேற்படி குறியீட்டுச் சொல் கையாளப்படுகிறது. இதைப்போல “மே 17′ என்பது இலங்கைத் தீவில் எத்தகைய நிலைமைகளை உருவாக்கியிருக்கிறது?
வதை முகாம்களும், பெண் வாழ்வும் – டி.அருள் எழிலன்
நாற்பது வயதுக்குள்தான் இருக்கும் அந்தப் பெண்மணிக்கு. இப்போது அவரைப் பார்க்க அறுபது வயது முதிய பெண் போல தோற்றமளிக்கிறார். ஈழத்தின் வடபகுதி அரசுப் பள்ளியொன்றில் ஆசிரியையாக பணியாற்றிக் கொண்டிருந்தவரின் வாழ்வை வன்னி மீதான பேரினவாத யுத்தம் குலைத்துப் போட்டு விட்டது. ஒரு வழியாக அவர்கள் இங்கே கரைசேர்ந்திருக்கிறார்கள்.
வியாழன், 20 மே, 2010
”தனி ஈழம்தான் இந்தியாவுக்கு அரண்!”
பேராசிரியர் பிரான்சிஸ் பாயில் அமெரிக்காவின் மிகப் பிரபல மான சட்ட மேதை. சிகாகோவில் உள்ள இல்லினாய் பல்கலைக்கழகத்தின் சட்டத் துறை பேராசிரியர். மனித உரிமைகள் மற்றும் சர்வதேச தனிமனித உரிமை, அரசியலமைப்பு சட்டங்களில் கீர்த்தி வாய்ந்தவர். இஸ்ரேலுக்கு எதிராக 60 ஆண்டுகளாகப் போராடிவரும் பாலஸ்தீன அரசின் சட்ட ஆலோசகரான பாயில், அதன் அரசியலமைப்பு மற்றும் அரசியல் சட்டம் போன்ற அயல் நாட்டு உறவுகளுக்கு ஆலோசனை தருகிறார். சில ஆண்டுகளாக ஈழத்தமிழர் பிரச் னைகளில் முழுமூச்சாக ஈடுபட்டு, சர்வதேச நீதிமன்றத்தில் ராஜபக்ஷே அரசின் மனித உரிமை மீறல்களுக்கு தண்டனை பெற்றுத்தரப் பாடுபடுபவர். நாடு கடந்த தமிழீழ அரசு அமைய ருத்திரகுமாரனுக்கு ஆலோசனை கூறி வருகிறார். சமீபத்தில், நடைபெற்ற நாடு கடந்த தமிழீழத் தேர்தலில், தேர்தல் குழுவின் முக்கிய உறுப்பினரான இவரது ஆலோசனையின் பேரில்தான் தேர்தலே நடைபெற்றது.
சிங்கள நினைவு தூபிகளையும், குடியேற்றங்களையும் அமைப்பது எந்த வகையில் நீதியானது?
தன்னுடைய படைகளை, ஆசுவாசப்படுத்துவதற்காக நினைவுச்சின்னங்களை எழுப்புவது தவறில்லை, ஆனால் அதை தமிழர்கள் பிரதேசத்தில் நிறுவுவது, தமிழர்களை மேலும் அவமானப்படுத்துவதாகவும் கேலிசெய்வதாகவும் காணப்படுகின்றது. இவ்வாறான நினைவுச்சின்னங்களை அமைத்து, தமிழ்ப்பிரதேசங்களையும் தமிழர்களையும் உல்லாசப்பயணிகளின் பார்வைக்குவைத்து நிதியீட்ட முனைகின்றார் என்பது வெளிச்சம்.
முள்ளிவாய்க்கால்- தமிழரின் வரலாற்றில் என்றுமே மறக்கப்பட முடியாத மரணபூமி.
அப்பாவிப் பொதுமக்கள்- காயம்பட்ட, சரணடைந்த போராளிகள் என்று ஆயிரக்கணக்கானோரின் குருதி உறைந்து போன மண். அங்கு நடந்த கொடுமைகளும் கொடூரங்களும் உலகின் பார்வைக்கு இப்போது தான் வரத் தொடங்கியுள்ளன. சரணடைந்த போராளிகளை ஈவு இரக்கமின்றிச் சுட்டுக் கொல்லும் காட்சிகள் உலகத் தொலைக்காட்சிகளில் வந்து அதிர்ச்சியை ஏற்படுத்தின. போராளிகளின் உயிரற்ற உடல்களை சிதைத்துச் சின்னாபின்னப்படுத்தி கேவலப்படுத்தும் காட்சிகளை புகைப்படங்கள் காண்பித்தன. இருபத்தோராம் நூற்றாண்டில் இப்படியும் மனிதர்களா- என்று உலகமே ஒரு கணம் வெட்கித் தலைகுனிந்தது. சிங்கள தேசத்தின் படைகள் போரிடும் வீரர்களைக் கொண்டதல்ல- மனித முகத்தோடு இரத்த வெறிகொண்டு அலையும் மிருகங்கள் என்பது நிரூபணமானது.
இயற்கை எனது நண்பன் ..............
ஓர் இனத்தின் வரலாறு தோற்கடிக்கப்பட்டதாக அறிவித்து, ஓராண்டு நிறைவெய்தி இருக்கிறது. கடந்த ஓராண்டிலே எத்தனையே விமர்சனங்கள் புதிது புதிதாக தோன்றி மறைந்து கொண்டிருக்கின்றன. விமர்சனங்களைப் பொறுத்தமட்டில் அதன் ஆளுமை மாந்த வாழ்வின் அடித்தளத்தை முன்னிருத்தியே அதன் நிலைத்தன்மை நீடித்திருக்கும். மார்க்சிய கோட்பாட்டின்படி இந்த மண்ணின் மேல் உள்ள எல்லா வகையானவையும் விமர்சனத்திற்குரியவை தான். ஆக,
புதன், 19 மே, 2010
தமிழகத்தில்இருந்து வெளி வரும் நக்கீரன் பத்திரிகையில் இவ்வாறு செய்தி பிரசுரிக்கப்பட்டுள்ளது ...........
ஈழ மண்ணில் சுதந் திரக் காற்று வீசும் என்ற நம்பிக்கை இன்னமும் அற்றுப் போய்விடவில் லை. கிழக்கு மாகாணக் காடுகளில் உள்ள மரங்களுடன் சேர்ந்து அந்த நம்பிக்கை உயர்ந்து நிற்கிறது. ""முள்ளி வாய்க்கால் கொடூரத்தின் ஓராண்டு நிறைவில், உலகத் தமிழர்கள் அனைவரும் ஈழத் துயர நினைவுகளில் மூழ்கி யிருக்கும் நிலையில், விடுதலை நம்பிக்கை வீழ்ந்துவிடவில்லை'' என்கிறார் தமிழகத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர் பாண்டி யன்.
இமாலய வெற்றிகள் பலவற்றுக்கு நடுநாயகமாக நின்று செயற்பட்டவர் பிரிகேடியர் பால்ராஜ்: தேசியத் தலைவர் புகழாரம்
விடுதலை இலட்சியத்தில் பிடிப்பு ஏற்பட்டு விட்டால், எமக்கு துன்ப துயரங்கள் தெரிவதில்லை. வேதனைகள் புரிவதில்லை. உடல் உபாதைகள் அழுத்துவதில்லை. இயற்கைகூடக் குறுக்கே நிற்பதில்லை. எனது அன்புத் தளபதி பிரிகேடியர் பால்ராஜூக்கும் அப்படித்தான். ஓயாது குமுறும் சமர்க்களங்களையெல்லாம் அவன் ஓய்வில்லாது, உறக்கமில்லாது எதிர்கொண்டான். அங்கு இரவு, பகல் பாராது செயற்பட்டான். கொட்டும் மழையும் கோடையின் கொழுத்தும் வெய்யிலும் அவனைக் கட்டிப்போட்டது கிடையாது. கொடிய சண்டைக் களங்களில் எல்லாம் எத்தனையோ துன்பங்களைச் சுமந்தவாறு, எத்தனையோ நெருக்கடிகளைச் சமாளித்தவாறு, எத்தனையோ ஆபத்துக்களை எதிர்கொண்டவாறு அபாரமான மனவுறுதியோடு போராடினான். தலைசிறந்த போர்த்தளபதி என்ற வகையில் நான் அவனை ஆழமாக நேசித்தேன். அவன் மீது அளவுகடந்த அன்பும் பாசமும் கொண்டிருந்தேன். அவன் அறிமுகமாகிய நாளிலிருந்து அவனுள் அபூர்வ போர்ப் பண்புகளும் போர்க் குணங்களும் இயற்கையாகவே நிறைந்து கிடப்பதைக் கண்டுகொண்டேன். ஆற்றல் மிக்க, ஆளுமை மிக்க இலட்சியப் போராளியாக அவனை வளர்த்தெடுத்தேன். அபாரமான துணிவும், அசுர வேகமும், சிறந்த தாக்குதல் உத்திகளும், நேர்த்தியாகப் படை நகர்த்தும் ஆற்றலும், கூட்டுக்குலையாத குறிதவறாத செயற்பாடுகளுமாக அவன் வெளிப்படுத்திய போர்ப்பண்புகள், எமது எதிரிக்கு அச்சத்தைக் கொடுத்தன. அதேநேரம், எமது போராளிகளின் மனோதிடத்தையும் இலட்சிய உறுதியையும் மேலும் உரமாக்கின. எமது மக்களுக்கு பெரும் வெற்றிகளைத் தேடித்தந்தன.
வீரத்தளபதி பிரிகேடியர் பால்ராஜ்
இயற்பெயர்: பாலசிங்கம் கந்தையா, கொக்குத்தொடுவாய், முல்லைத்தீவு) தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் ஒரு முதுநிலைத் தளபதியாவார். தமிழீழத்தின் பல போர்க்களங்களை வழிநடத்தியவர். 1983 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்து கொண்டார். 1991 ஆம் ஆண்டு தொடக்கம் 1993 ஆம் ஆண்டு வரையும் பின்னர் 1995 ஆம் ஆண்டு தொடக்கம் 1997 ஆம் ஆண்டு வரையும் விடுதலைப் புலிகளின் முதலாவது மரபுவழிப் படையணியான
இந்திய அரச பயங்கரவாதம் : காலத்தின் தேவை என்ன? : சபா நாவலன்
இந்தியா சீனா போன்ற புதிய ஆசிய வல்லரசுகள் இலங்கை அரசுடன் இணைந்து நிகழ்த்திய இனப்படுகொலையின் இரத்ததம் உறைந்து போய்விட முன்னமே இந்தியாவெங்கும் தனது எழைக் குடிமக்கள் மீது அரச பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கிறது. இலங்கையில் நடைபெற்ற அதே போர்த்தந்திரோபாயங்களும், பிரச்சார முறமைகளும் உள்வாங்கப்பட்டு இந்தியப் புறச்சூழலுக்கு உகந்தவாறு பிரயோகிக்கப்படுகிறது. மனித அவலங்களுக்கு மத்தியில் அப்பாவி மக்கள் மந்தைகள் போல விரட்டியடிக்கப்படுகிறார்கள். ஆந்திரா, மேற்கு வங்கம், சட்டீஸ்கர். ஜார்க்கண்ட். மகாராட்டிரம். ஒரிசா போன்ற மாநிலங்களெல்லாம் ஏழை மக்களில் அவலக் குரல்கள் ஒலிக்கின்றன. மேற்குவங்கத்தில் நூற்றுக் கணக்கானோர் அனாதைப் பிணங்களாகக் கொல்லப்பட, இன்று ஏனைய மாநிலங்களில் இராணுவமும், துணைப்படைகளும் அன்னிய தேசம் ஒன்றுடன் போர் நடைபெறுவதைப் போல குவிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின்றன.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)


















