திங்கள், 24 மே, 2010

ஊடகங்களுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் விடுத்திருக்கும் வேண்டுகோள்!





காணமல் போன உறவுகளைத் தேடி கண்ணீர் வடிக்கும் ஜீவன்கள்




சவாலாகும் போர் வெற்றிக் கொண்டாட்டங்கள்.!


விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிவுக்கு வந்த முதலாவது ஆண்டு நிறைவைக் கொண்டாடுவதற்கு கடந்த வாரம் அரசாங்கம் பெருமெடுப்பிலான ஏற்பாடுகளைச் செய்திருந்தது. கடந்த 20ஆம் திகதி காலிமுகத்திடலில் பிரமாண்டமான வெற்றிவிழா, இராணுவ அணிவகுப்பு என்பன நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அவையெல்லாம் இயற்கையின் கோரத் தாண்டவத்துக்கு முன்பாக நின்று பிடிக்க முடியாமல்

பகத்சிங்கும் தேசிய தலைவரும்!!


புரட்சி என்பது ரத்த ஆறு பெருக்கெடுக்கும் ஒரு போராட்டமாய் இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. அது ஒன்றும் வெடிகுண்டு அல்லது துப்பாக்கியின் மீதான பக்தி இல்லை. குறிக்கோளை அடைவதற்கு அவை சில வேளைகளில் வெறும் வழிகளாக அமைவதுண்டு. நான் பயங்கரவாதி இல்லை. என் பலம் முழுவதையும் ஒன்றுக்கூட்டி உறக்க அறிவிக்கிறேன். நான் பயங்கரவாதி இல்லை.

தடுக்குமா புலம்பெயர் தமிழர் சமூகம்?

நாட்டின் தற்போதைய நிலவரம் குறித்து தற்போது பிரசல்ஸிற்கு விஜயம செய்துள்ள சட்ட மா அதிபர் மொஹான் பீரிஸ் தலைமையிலான இராஜதந்திரிகள், ஐரோப்பிய ஒன்றிய முக்கியஸ்தர்களுக்கு இலங்கை நிலவரம் குறித்து விளக்கமளித்துள்ளனர். குறிப்பாக இலங்கையில் சமாதானத்தை நிலைநாட்டுவதற்காக எடுக்கப்பட்டுள்ள முயற்சிகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

சிறுமியைக் கடத்தும் முயற்சி சாவகச்சேரியில் முறியடிப்பு

சாவகச்சேரி நவீன சந்தைப் பகுதியில் வைத்து ஆறு வயதுச் சிறுமி ஒருவரைக் கடந்த வெள்ளிக்கிழமை கடத்தும் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் முள்ளிவாய்க்கால் பகுதி யில் கணவனை இழந்த பெண் ஒருவர் தனது உறவினரைப் பார்ப்பதற்கு வவுனியா செல்வதற்காக சாவகச்சேரிக்கு வந்திருந்தார். அங்கு இவரது ஆறு வயது மகளை நவீன சந்தை விறாந்தையில் விட்டு விட்டு சந்தைக் குள் மரக்கறி வாங்கச் சென்றி ருந்தார். மரக்கறி வாங்கிவிட்டு அவர் வந்து பார்த்தபோது மகளைக் காணாது அப்பகுதி முழுவதும் தேடிவிட்டுக் கடைசியாகப் பொலிஸ் நிலை யத்திலும், சாவகச்சேரிப் புலனாய்வுப் பிரிவி லும் முறையிட்டார். இதையடுத்து புலனாய்வுத்துறையினரும் தேடுதல் வேட்டையில் இறங்கினர். இதன் பயனாக இரவு 7மணியளவில் சாவகச்சேரி டச்சு வீதியிலுள்ள பேக்கரி ஒன்றுக்கு முன் பாக உள்ள மிதிவண்டி திருத்தும் நிலை யத்தில் காணாமல்போன சிறுமி கண்டு பிடிக் கப்பட்டார். அங்கு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டிருந்த வேளையில் கடத்திச் சென்ற நபர் அங்கு வந்தபோது மிதிவண்டி திருத்தும் நிலைய உரிமையாளர் அவரை அடையாளம் காட்டினார். சிறுமியைக் கடத் திச் சென்ற நபர் நிலைமை அறிந்து ஓடத் தொடங்கினார். எனினும் நின்ற பொதுமக்க ளும் பொலிஸாரும் அந்த நபரைத் துரத்திச் சென்று பிடித்தனர். மட்டுவிலைச் சேர்ந்த இந்நபர் தனிப் பட்ட பகை காரணமாகவே சிறுமியை கடத் தியதா கக் கூறப்பட்டது. இந்நபரை பொலி ஸார் கைது செய்து அழைத்துச் சென்றனர்.

1987 ஆம் ஆண்டின் உடன்படிக்கையை மீண்டும் அல்படுத்துக !


1987 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட இந்திய – இலங்கை உடன்படிக்கையை மீண்டும் அல்படுத்துமாறு இலங்கையிடம் இந்தியா கோரியுள்ளது. இந்த உடன்படிக்கையின் அடிப்படையிலேயே அதிகாரப் பகிர்வு மற்றும் மாகாணசபை முறைகள் தொடர்பான செயல்முறைகளுக்கு வழிகோலப்பட்டிருந்தது. ஆனால் பின்னர் வடமாகாணத்தையும் கிழக்கு மாகாணத்தையும் இரண்டாகப் பிரிக்கும் உத்தரவை உயர் நீதிமன்றம் பிறப்பித்தது. வடகிழக்கு மக்களுக்கு அரசியல் தீர்வொன்றை பெற்றுக்கொடுப்பதற்கு சமமாக இந்திய -இலங்கை உடன்படிக்கையை அல்படுத்த வேண்டும் என்பது இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கின் எண்ணமாகும் எனவும் இந்தியத் தலைமைகள் இது தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளதாகவும் தூதரக வட்டாரத் தகவல் மூலம் தெரியவருகிறது. வடக்கில் பயங்கரவாதத்தைத் தோற்கடிப்பதற்கு இந்திய அரசு பூரண ஒத்துழைப்பை இலங்கைக்கு வழங்கியுள்ளதால் இப்போது இந்தியா இலங்கை உடன்படிக்கையை அல்படுத்தப்பட வேண்டியது அவசியம் என்ற கருத்து நிலவுவதாகத் தெரியவருகிறது. இந்தியாவின் இந்தக் கோரிக்கை தொடர்பாக அடுத்த மாதம் முதல் வாரத்தில் இந்தியாவுக்கு விஜயம் செய்யும் ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷவுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்படவுள்ளன. அதற்கு முன்னர் ஆரம்பக் கட்டம் பேச்சுவார்த்தைகளை நடத்தும் பொருட்டு அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் அடுத்த வாரம் புதுடில்லி செல்லவுள்ளார்.

உண்மையை நிரூபிக்கும்வரை தொடரப்போகும் போர்க்குற்றச்சாட்டு..

விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிப்போரின் போது போர்க்குற்றங்கள் நடந்ததாக இலங்கை அரசுக்கு எதிரான குற்றச்சாட்டு தொடர்ச்சியாக வரத்தொடங்கியுள்ளது. அடுத்தடுத்து சனல்4 தொலைக்காட்சி இரண்டு ஒளிப்பதிவுகளை வெளியிட்டது. முதலாவது ஒளிப்பதிவு பொய்யானது என்று பாதுகாப்பு அமைச்சு உள்ளூர் நிபுணர்களைக்கொண்டு கூற வைத்தது. ஆனால் இதுகுறித்து ஆய்வு நடத்திய அமெரிக்க நிபுணர்கள் அது உண்மையானதே என்று கூறியிருந்தனர்

ஞாயிறு, 23 மே, 2010

சூடான் பிரதிநிதியின் ஆலோசனைகளும் நிபுணர் குழுக்களின் பிரவேசமும் – இதயச்சந்திரன்

அமெரிக்காவின் பிலடெல்பியா மாநிலத்தில் நடைபெற்ற, நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதல் அமர்வில், தென் சூடான் மக்கள் விடுதலை இயக்கத்தின் (SPLM) அமெரிக்க பிரதிநிதி டொமச் றொச்சும் (Domach Rauch) முன்னாள் அமெரிக்காவின் சட்டமா அதிபர் ராம்சே கிளார்க்கும் (Ramsey Clark) சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டுள்ளனர். இவர்களின் பிரசன்னம், பல செய்திகளைக் காவி நிற்பதனை உணரலாம். அவர்கள் அங்கு ஆற்றிய உரைகளில்

வாருங்கள் மீட்டெடுப்போம் களப் போராளிகளை!!


வீர வரலாற்றை வாசிக்கும்போது நமக்கெல்லாம் உணர்வு சிலிர்த்தது. ரத்தம் கொதித்தது, மகிழ்ச்சி பொங்கியது. அடடா... தமிழனின் வீரம் தரணியெங்கும் கொட்ட, எமது தமிழ் குலக் கொடிகள் களம்காணும் காவியம் வரலாறாய் அல்ல, நம் கண்முன்னே வரிவரியாய் வாசிக்கிறோமே என்று புலங்காதிகப்பட்டோம். நாம் அந்த வார்த்தைகளை கேட்டபோது, எண்ணங்களெல்லாம் எழுச்சியாய், எரிதழலாய், ஏற்றமிகு தமிழ் உணர்வை எமது உச்சி முதல் உள்ளங்கால்வரை பெரும் அனலாய் பரப்பியது. அவர்கள் ஆயுதம் ஏந்துகிறார்கள் என்கிற வார்த்தைகள், எம்மையும் அறியாமல் எமது விரல்களை அசைத்துப் பார்த்தது. தமிழனின் அடையாளம் இதோ,

சனி, 22 மே, 2010

தமிழினப் படுகொலைக்கு ஐ.நா. உடந்தையா?

 இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரின் இறுதிகட்டத்தில் பல்லாயிரக்கணக்கில் அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டது தொடர்பான ஆதாரங்கள் பல வெளியாகியும், எந்த விசாரணையும் நடத்தாமல் ஐ.நா. சாதிக்கும் மெளனம், அந்தப் படுகொலையில் அதற்கும் பங்கிருக்குமோ என்ற ஐயத்தை எழுப்புகிறது என்று சர்வதேச சிக்கல் தீர்ப்புக் குழுவின் தலைவர் லூயிஸ் ஆர்பர் கூறியுள்ளார். இலங்கையில் தமிழினத்திற்கு எதிராக போரின் இறுதி

ஆணைக்குழுக்கள் மூலம் ஏன் நேரத்தை வீணடிக்க வேண்டும்?

இலங்கை ஏற்கனவே 20 வருடங்களை விவாதங்களில் வீணாகக் கழித்து விட்டது என்பது தெளிவானது. மேலும் அர்த்தமற்ற ஆணைக்குழுக்கள் மூலம் ஏன் நேரத்தை வீணடிக்க வேண்டும்? காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடிய தருணம் இதுவாகும். என ஓய்வு பெற்ற இந்திய புலனாய்வுத்துறை அதிகாரி கேணல் ஹரிஹரன் தெவித்துள்ளார். இலங்கையின் ஆங்கில நாளிதழ் ஒன்றில் “சில வெற்றித் தின சிந்தனைகள்' எனும் தலைப்பில் வெளியான ஆசிரிய தலையங்கம் குறித்து

காந்தி தேசம் அம்மணமாகக் காட்சி!


புலம்பெயர் தமிழர்களின் மனச்சாட்சிக்குச் சவாலாக அண்மையில் சிங்கள தேசம் ஈழத் தமிழர்கள் மீது நடாத்திய கோரப் படுகொலைகளின் காட்சிப் படங்கள் வெளியாகி வருகின்றன. இறுதி யுத்த காலத்திலும், விடுதலைப் போராளிகளும், பொது மக்களும் சிங்களப் படைகளிடம் வேறு வழியற்ற நிலையில் சரணடைந்த காலத்திலும், அதற்குப் பின்னரான இன்று வரையான இந்த ஒரு வருட காலத்திலும் இந்த மிலேச்சத் தனமான இனப் படுகொலைகள் நடாத்தப்பட்டுள்ளது. இன்னமும் நடாத்தப்பட்டு வருகின்றது. சிங்களர்களின் வரலாறுகளில், அவர்களது கொடூர குணங்கள் ஆங்காங்கே பதிவுகளாக உள்ள போதும், இருபத்தோராம் நூற்றாண்டில் வரலாறே வெட்கித் தலை குனியும் அளவிற்கு தற்போதைய சிங்கள தேசத்தின் இன வன்முறை வெளிப்படுத்தப்பட்டு வருகின்றது.

தசை நார்கள்

 தசை நார்கள் கிழிந்தபோதும்... - பிரளய நெருப்பை அணைக்க நினைக்கும் மூடர்களின் மாதிரிக்கு ஒரு துளி. சதையின் ஊடே உளி பாய்ந்தாலும் உருகுலையாத கண்களின் ஒளி. சிதைக்கப்பட்ட விடுதலையின் ஒளிப்படமாய் - இங்கே ஒரு புலிப்படம். தசை நார்கள் கிழிந்தபோதும் விடுதலையின்... திசை நோக்கி விழித் திரும்பும். அசைக்க முடியா எஃகு மனம். அவன் விடுதலையின் வரைப்படம். சாவின் விளிம்பு வரையில் சண்டாளர் - தம்மை அறுத்தபோதும் தடம்மாறா பெரும் புலியாய் மனம் இடம் மாறா உருவம் கொண்டவன். மாய்த்தப் பின்னர் புலிக்கொடி - அவன் மாய்ந்தப் பின்னர் புலிக்கொடி. அவனுக்கு உயிர் கொடுக்கும் மீண்டுமாய். சிங்களனின் அக்கிரமத்திற்கு சாட்சியமாய் மாந்த மாண்புக்கு சவாலாய் - இங்கே ஒரு புலி சிதைக்கப்பட்டது. புதைக்கப்பட்ட மண்ணிலிருந்து வேறோடி - விடுதலை பெரும் மரமாய் செழித்து நிற்கும். அது சிங்களனின் சங்கறுக்கும். தமிழ் மனதின் குருதியை உறையச் செய்த குரூரத்தை செய்தவனை வேரறுப்போம். பழி தீர்க்கும் நாளுக்காய் பொறுத்திருப்போம். தமிழீழம் வென்றெடுப்போம் என்பதிலே உறுதியாவோம்.

நக்கீரன் பத்திரிக்கை கேணல் ராமுடனான பேட்டியின் 2 ஆம் பாகம் ...

""படபடக்கும் பறவைகளின் சிறகுகள்கூட அச்சத்தை ஏற் படுத்துவதாகவே இருக்கிறது அந்த வனப்பகுதியில். ஆனால், மரணத்தை எந்த நேரத்திலும் வரவேற்கக் காத்திருக்கும் விடுதலை வீரர்களை இந்த சலசலப்புகளால் எதுவும் செய்துவிடமுடியாது என்பதை அவர்களின் மன உறுதி வெளிப்படுத்துகிறது'' என்கிறார்

தேசிய தலைவர் கற்றுத் தந்தது ..........

தேசிய தலைவர் கற்றுத் தந்தது நாமும் கதை சொல்லி வெகு நாட்களாகி விட்டது. என்னவோ தெரியவில்லை நமது கிராமங்களில் கதை சொல்லி நமக்கு சில செய்திகளை புரிய வைக்கிறார்கள். அந்த கதைகள் நமது மனங்களில் இறுதிவரை தங்கி வருகிறது. இன்று போகும் தமிழீழ விடுதலை அரசியல் போக்கு நம்மை பெரும் வியப்புக்குள் ஆழ்த்துகிறது. விடுதலை போராட்டத்திற்கான வரலாற்று காரணங்கள், போராட்டம் துவக்கப்பட்ட காலத்திலிருந்து அது கருவி போராட்டமாக உருமாறிய காலக்கட்டங்கள்.