திருடன் எத்தனை நாள் திட்டம் போட்டுத் திருடினாலும் திருடுகிற இடத்தில் ஏதோ ஒரு தடயத்தை விட்டுத்தான் செல்வான் என்று சொல்வார்கள். விசாரணை நேர்மையாக இருந்தால் சிறிய தடயம் கூட அவனைச் சிக்க வைத்து விடும். நடேசன் வெள்ளைக் கொடியோடு சரணடைந்த நிகழ்வில் அப்படித்தான் சிக்கியிருக்கிறார் ஜெகத் கஸ்பர் என்னும் பாதிரி!!!!!
முள்ளிவாய்க்கால் கடைசி நேரத்தில் நடந்த நிகழ்வுகள் தொடர்பாக மூன்று கேள்விகளை கஸ்பரிடம்
குமுதம் ரிப்போர்ட்டர் நேர்காணலில் முன்வைக்கிறார்...................................
இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
சனி, 29 மே, 2010
வதை முகாம்களும், பெண் வாழ்வும்
நாற்பது வயதுக்குள்தான் இருக்கும் அந்தப் பெண்மணிக்கு. இப்போது அவரைப் பார்க்க அறுபது வயது முதிய பெண் போல தோற்றமளிக்கிறார். ஈழத்தின் வடபகுதி அரசுப் பள்ளியொன்றில் ஆசிரியையாக பணியாற்றிக் கொண்டிருந்தவரின் வாழ்வை வன்னி மீதான பேரினவாத யுத்தம் குலைத்துப் போட்டு விட்டது. ஒரு வழியாக அவர்கள் இங்கே கரைசேர்ந்திருக்கிறார்கள்.
நான் அவர்களைச் சந்திக்கச் சென்றது ஒரு பண்டிகை நாளில் எங்கும் ஒரே வாண வேடிக்கைச் சத்தம்
உறங்கிவிட்டதா எம் உணர்வுகள்? எம்மை வழி நடத்தியவர் கண்ட யாகங்கள் எத்தனையோ ?......
வையகம் எங்கும் பரந்து வாழ்கின்ற தமிழர்கள் என்ற பெருமை எமக்குண்டு.
நாம் சென்ற இடமெங்கும் நமது அடையாளங்களை கலை பண்பாட்டு விழுமியங்களையும் அத்தோடு தேசத்தைவிட்டு வந்துவிட்டோம் எங்கள் வாழ்க்கையை மட்டும் பார்த்திடுவோம் என்ற குறுகிய நோக்கமற்றவர்கள் நாம் எனபதற்க்கு பல எடுத்துக்காட்டுகள் உள்ளன. தற்போது மட்டும் ஏன் இந்த மௌனம்?
நாம் சென்ற இடமெங்கும் நமது அடையாளங்களை கலை பண்பாட்டு விழுமியங்களையும் அத்தோடு தேசத்தைவிட்டு வந்துவிட்டோம் எங்கள் வாழ்க்கையை மட்டும் பார்த்திடுவோம் என்ற குறுகிய நோக்கமற்றவர்கள் நாம் எனபதற்க்கு பல எடுத்துக்காட்டுகள் உள்ளன. தற்போது மட்டும் ஏன் இந்த மௌனம்?
வெசாக் அனுஷ்டிப்பின் உட்பொருள்.......................?
வெசாக் பண்டிகை நாடு பூராகவும் கொண்டாடப்படுகின்றது. தென்பகுதியை விட வடபுலத்தில் வெசாக் பண்டிகைக் கொண்டாட்டம் களைகட்டியிருப்பது கண்டு எதுவுமே புரியாமல் திகைத்து நிற்கும் பரிதாபம் மட்டுமே தமிழ் மக்களிடம் மிஞ்சியுள்ளது.
சர்வதேச மன்னிப்புச் சபையை பயங்கரவாத அமைப்பாக அறிவிக்க வேண்டும் – சம்பிக ரணவக
உலகெங்கும் இயங்கும் பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவாகச் செயற்பட்டு வரும் சர்வதேச மன்னிப்புச் சபையை பயங்கரவாத அமைப்பாக பிரகடனம் செய்ய வேண்டும் என்று சிறிலங்கா அமைச்சரும் ஹெல உறுமய கட்சியின் கொள்கை வகுப்பாளருமான சம்பிக ரணவக கேட்டுள்ளார்.பயங்கரவாதத்தை ஒடுக்கும் நடவடிக்கைகளுக்கு எதிராகத் தொடரர்ந்து குரல் கொடுப்பதன் மூலம் பயங்கரவாதிகளுக்கு உதவிவரும் மன்னிப்புச் சபையை பயங்கரவாத அமைப்பாகப் பிரகடனப் படுத்துவதன் மூலமே உலகப் பயங்கரவாதத்தை அழிக்க முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.
இலங்கை அரசின் பய்ஙகரவாத ஒழிப்பு நடவடிக்கைகளைத் தொடர்ந்து எதிர்த்து வந்த மன்னிப்புச் சபையின் அறிக்கைகளையும் கண்டனங்களையும் பொருட்படுத்தாமல் செயற்பட்ட தலைமையினாலேயே நாடு விடுவிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.இலங்கையில் இயங்கும் வேறும் சில தன்னார்வ நிறுவனங்களும் பயங்கரவாதத்திற்கு உயிரூட்ட முனைவதாகவும் இது குறித்து அரசாங்கம் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் குறிப்பிட்ட ரணவக நாட்டு மக்களும் இந்த விடயத்தில் அவதானமாக இருக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
இலங்கை அரசின் பய்ஙகரவாத ஒழிப்பு நடவடிக்கைகளைத் தொடர்ந்து எதிர்த்து வந்த மன்னிப்புச் சபையின் அறிக்கைகளையும் கண்டனங்களையும் பொருட்படுத்தாமல் செயற்பட்ட தலைமையினாலேயே நாடு விடுவிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.இலங்கையில் இயங்கும் வேறும் சில தன்னார்வ நிறுவனங்களும் பயங்கரவாதத்திற்கு உயிரூட்ட முனைவதாகவும் இது குறித்து அரசாங்கம் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் குறிப்பிட்ட ரணவக நாட்டு மக்களும் இந்த விடயத்தில் அவதானமாக இருக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
உள்ளே மின்னலாய் வெட்டி உயிர்தின்கிறது ஓரினத்தின் ஓலம்;
மறக்கமுடியாத அந்நாட்களின்
இழப்பில் புதையுண்ட எம்
விடுதலையின் வேகத்தை
மீட்டெடுத்துவிடும் துணிவில் தான்
இரவு பகல் கடக்கின்றோம்;
அம்மா என்றழைக்கும்
இழப்பில் புதையுண்ட எம்
விடுதலையின் வேகத்தை
மீட்டெடுத்துவிடும் துணிவில் தான்
இரவு பகல் கடக்கின்றோம்;
அம்மா என்றழைக்கும்
எந்த உறுதிமொழியையும் வழங்கவில்லை =பாலித்த கோகன்ன
இறுதிக்கட்ட போரின்போது சரணடைந்த விடுதலைப்புலிகளின் தலைவர்கள் சுட்டுக்கொலைப்படமாட்டார்கள் என்று தாம் எந்த உறுதிமொழியையும் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனின் ஆலோசகர் விஜய் நம்பியாருக்கு வழங்கவில்லை என்று ஐக்கிய நாடுகள் சபைக்கான சிறிலங்காவின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதி பாலித்த கோகன்ன தெரிவித்துள்ளார்.
சரணடையும் விடுதலைப்புலிகளின் தலைவர்கள் போர்க்கைதிகளாக நடத்தப்படுவார்கள் என்று தனக்கு சிறிலங்காவின் அரச அதிபர் மகிந்த ராஜபக்ச, பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோத்தபாய மற்றும் பாலித்த கோகன்ன ஆகியோர் தனக்க உறுதிமொழியளித்ததாக விஜய் நம்பியார் அல் ஜஸீரா தொலைக்காட்சிக்கு தெரிவித்தமை குறித்து பாலித்த கோகன்னவிடம் இன்னர் சிற்றி பிரஸ் செய்திநிறுவனம் கேட்டபோது அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இந்த விவகாரத்தில் தனது கருத்தை தெரிவித்துவிட்டதாகவும் ஏனையோர் இருவரிடமும் (மகிந்த மற்றும் கோத்தபாய) இது தொடர்பில் கருத்தை கேட்டறியும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை என்ற செய்தியை நீங்கள் வெளியிடலாம் என்றும் கோகன்ன தெரிவித்தார் என்று இன்னர் சிற்றி பிரஸ் தெரிவித்துள்ளது.
சரணடைந்த புலிகளின் தலைவர்கள் கொல்லப்படமாட்டார்கள் என்று தன்னிடம் உறுதியளித்ததாக விஜய் நம்பியார் தெரிவித்த ஏனைய இருவரான மகிந்தவிடமும் கோத்தபாயவிடமும் கருத்தை கேட்டறியும் வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால், அவர்களின் அரசின் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் அண்மையில் நியூயோர்க் சென்றிருந்த சமயம், அவரிடம் இது குறித்து கேட்டறிவதற்கு முற்பட்டபோது -பீரிஸை இன்னர் சிற்றி பிரஸ் செய்தி நிறுவனம் சந்திப்பதற்கு கோகன்ன அனுமதிக்கவில்லை என்று அந்த செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.தேசிய ஊடாக கழகத்திற்கு சென்ற சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் அங்கு ஊடகவியலாளர்களை சந்திக்காமல் வெளிநடப்பு செய்தமை குறிப்பிடத்தக்கது.வோஷிங்டனில் அமைந்துள்ள தேசிய ஊடக கழகம் 2009 ஆம் சுதந்திர ஊடகவியலாளருக்கான தனது விருதினை படுகொலை செய்யப்பட்ட சிறிலங்காவின் சண்டே லீடர் ஆசிரியர் லசந்தவுக்கு வழங்கியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
தமிழினத்தின் அடையாளம் தேசிய தலைவர்!!
2009ஆம் ஆண்டு மே திங்கள் 17ஆம் தேதி தமிழீழ வரலாற்றின் ஒரு அத்தியாயம் நிறைவு செய்யப்பட்டு புதிய அத்தியாயம் தொடங்கியது. தேசிய இன போராட்ட வரலாற்றில் இப்படிப்பட்ட ஒரு இழப்பு வேறு எந்த இன விடுதலை போராட்டத்திலும் நிகழ்ந்தது கிடையாது. சற்றேறக்குறைய 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாவீரர்கள் தங்களுடைய இன்னுயிரை தேச விடுதலைக்கான விதைகளாக தமிழீழ மண்ணிலே தூவினார்கள்.
வெள்ளி, 28 மே, 2010
நேற்று இன்று நாளை ...................
தமிழீழத் தேசியத்தலைவர் ஈழ மக்களின் இதயங்களை வென்ற கதாநாயகனாக மூன்று தசாப்தமாக இருந்து வந்துள்ளார் என்பதை யாராலும் மறுக்க முடியாது. இதற்கான பல காரணங்கள் முன்வைக்கலாம். எனினும் சுறுக்கமான விளக்கம் என்று சொன்னால் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் கடந்து சென்ற ஆண்டுகள் அனைத்திலுமே சிறந்த ஒரு வெற்றிக் கதாநாயகனாகத்தான் வாழ்ந்திருக்கிறார்.. எந்த ஒரு காலத்திலும் ஒருசில பின்னடைவுகளை தவிர தோல்வியென்று எதுவும் அவரை நெருங்கியதில்லை.
கேணல் சங்கர் -வைத்தியலிங்கம் சொர்ணலிங்கம் - யாழ்
தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற் றில் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களுடன் உறுதுணையாக நின்று, இருபது ஆண்டுகளுக்குமேலாக தளரா உறுதியுடன், தமிழீழ விடிவே குறியாகக்கொண்டு செயற்பட்டு வந்த கேணல் சங்கர் என்னும் பெருவிருட்சம் சாய்ந்துவிட்டது. ஈழ விடுதலைக்காய் கொடுத்த மிகப் பெரிய விலைகளில் இதுவும் ஒன்று.
மீள்குடியமர்த்தப்படும் வன்னி மக்களின் ஆதிவாசிகளை விட மிகவும் மோசமானது: அம்பாறை மாவட்ட எம.பி பொ. பியசேன
ஆதிவாசிகளை விட மிகவும் மோசமான நிலையில் மீள்குடியமர்த்தப்படும் வன்னி மக்கள் காணப்படுகின்றார்கள். அவலத்திலும் அவலமாக உள்ளது. உடன் பிறப்புக்கள் என்போர், வீர வசனம் பேசுவோர் அமைப்புக்களாக இணைந்து விரைந்து சென்று உதவவேண்டும்’ இவ்வாறு வன்னி சென்று திரும்பிய தமிழரசுக் கட்சியின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சகநேயன் பொ. பியசேன அங்குள்ள நிலைவரம் பற்றித் தெரிவிக்கையில் குறிப்பிட்டார்.
முள்ளிவாய்க்காலும் ஸ்டாலின்கிராடும் .......................
உலக சமர் வரலாற்றில் மறக்கமுடியாத இதுவரை போர் குறித்து சிந்திக்கும் போதெல்லாம் நினைவுக்கு வரும் ஒரு களமாக ஸ்டாலின்கிராடு பேசப்படுகிறது. உலக சுற்றுலாப்பயணிகள் ரஷ்யாவிற்கு செல்லும்போதெல்லாம் ஸ்டாலின் கிராடை ஆர்வத்தோடு பார்க்கிறார்கள். இந்த நகரத்தில் நடைபெற்ற கடும் சமர்,
ஐக்கிய நாடுகளின் இலங்கை மீதான பங்களிப்பு அதிருப்தி தருகின்றது - மன்னிப்பு சபை
இலங்கையில் ஐக்கிய நாடுகளின் பங்களிப்பு திருப்தி தருவனவாக இல்லை என சர்வதேச மன்னிப்பு சபை குற்றம் சாட்டியுள்ளது. சர்வதேச நீதி அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளது இலங்கை விவகாரத்தில் ஐ.நா அமைப்பின் பங்களிப்பு அதிருப்தி தருகின்றது என சர்வதேச மன்னிப்பு சபை குற்றச்சாட்டியுள்ளது.
சர்வதேச மன்னிப்புச் சபையினால் வெளியிடப்பட்டுள்ள ஆண்டறிக்கையில் 111 நாடுகளில் சித்திரவதைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளது. பலம்பொருந்திய நாடுகள் தங்களது சுயலாப அரசியல் அபிலாஷைகளை பூர்த்தி செய்யும் நோக்கில் சர்வதேச நீதியை நிலைநாட்டத் தவறியுள்ளதாக மன்னிப்புச் சபை விமர்சித்துள்ளது.குறிப்பாக கடந்த வருடம் இலங்கையில் இடம்பெற்ற யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்படவில்லை என குற்றம் சுமத்தியுள்ளது. இலங்கை விவகாரத்தில் ஐக்கிய நாடுகள் அமைப்பின் பங்களிப்பு அதிருப்தி அளிக்கும் வகையில் காணப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ளது.
யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் இதுவரையில் எவரும் தண்டிக்கப்படவில்லை எனத் தெரிவித்துள்ளது. அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் ஆற்ற வேண்டிய கடமைகளை தவறவிட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளது.
குறிப்பாக இஸ்ரேலினால் காஸா பள்ளத்தாக்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளக்கு எதிராக எவ்வித அழுத்தங்களும் பிரயோகிக்கப்படவில்லை என தெரிவித்துள்ளது. பிரித்தானியாவில் இடம்பெற்ற சித்திரவதைச் சம்பவங்கள் தொடர்பில் பூரண விசாரணை நடத்தப்பட வேண்டுமென மேலும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சர்வதேச மன்னிப்புச் சபையினால் வெளியிடப்பட்டுள்ள ஆண்டறிக்கையில் 111 நாடுகளில் சித்திரவதைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளது. பலம்பொருந்திய நாடுகள் தங்களது சுயலாப அரசியல் அபிலாஷைகளை பூர்த்தி செய்யும் நோக்கில் சர்வதேச நீதியை நிலைநாட்டத் தவறியுள்ளதாக மன்னிப்புச் சபை விமர்சித்துள்ளது.குறிப்பாக கடந்த வருடம் இலங்கையில் இடம்பெற்ற யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்படவில்லை என குற்றம் சுமத்தியுள்ளது. இலங்கை விவகாரத்தில் ஐக்கிய நாடுகள் அமைப்பின் பங்களிப்பு அதிருப்தி அளிக்கும் வகையில் காணப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ளது.
யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் இதுவரையில் எவரும் தண்டிக்கப்படவில்லை எனத் தெரிவித்துள்ளது. அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் ஆற்ற வேண்டிய கடமைகளை தவறவிட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளது.
குறிப்பாக இஸ்ரேலினால் காஸா பள்ளத்தாக்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளக்கு எதிராக எவ்வித அழுத்தங்களும் பிரயோகிக்கப்படவில்லை என தெரிவித்துள்ளது. பிரித்தானியாவில் இடம்பெற்ற சித்திரவதைச் சம்பவங்கள் தொடர்பில் பூரண விசாரணை நடத்தப்பட வேண்டுமென மேலும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
போரின்போது சிறிலங்கா இராணுவம் ஒரு பொதுமகனைக்கூட கொல்லவில்லை: மகிந்த
"சிறிலங்கா இராணுவம் போரின்போது பொதுமக்கள் எவரையும் கொல்லவில்லை. அவ்வாறு கொலை செய்திருந்தால் மூன்று லட்சம் மக்களும் இராணுவத்தின் கட்டுப்பாட்டு பிரதேசத்திற்கு வந்திருக்கமாட்டார்கள். மக்கள் அனைவரும் இராணுவத்தில் நம்பிக்கை கொண்டிருந்தார்கள். அதனால்தான் அவர்கள் அரச கட்டுப்பாட்டு பிரதேசத்துக்கு வந்தார்கள்" - என்று சிறிலங்கா அரச அதிபர் மகிந்த ராஜபக்ச அல் ஜஸீரா செய்திச்சேவைக்கு வழங்கிய செவ்வியில் கூறியுள்ளார்.
உருவாகி வரும் புதிய சிக்கல்கள்..............
இலங்கையின் அரசியல் இப்போது மீண்டும் ஒரு சிக்கலான நிலைமைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. இரண்டு பிரச்சினைகள் இந்த நெருக்கடியை உருவாக்கியிருக்கின்றன. அல்லது இரண்டு விவகாரங்கள் இந்த நெருக்கடிக்குக் காரணமாக இருக்கின்றன. இனங்களுக்கிடையிலான அதிகாரப்பகிர்வு முதலாவது பிரச்சினை.
செய்தித் துளிகள்..
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கு சார்பான பிரசாரங்களில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டுக்களின் கீழ் கல்முனை மற்றும் களுவாஞ்சிக்குடி ஆகிய இரு பிரதேசங்களையும் சேர்ந்த இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)














