செவ்வாய், 22 ஜூன், 2010

இன உணர்வு, தேசியம் என்பதெல்லாம் வெறும் வாய்ப்பேச்சில் இருப்பதை விட செயலில் இருப்பதே அழகு!

இருபது ஆண்டுகளுக்கும் மேலாக வன்னியைப் பற்றி எல்லா ஊடகங்களும் எழுதியும் சொல்லியும் வருகின்றன. இந்த இருபது ஆண்டுகளில் வன்னியும் ஏதோ ஒரு வகையில் முக்கியத்துவத்தை அடைந்தே இருக்கிறது.


போர், சமாதானம், போருக்குப் பிந்திய மீள்குடியேற்றம் என

தடுத்துவைக்கப்பட்டுள்ள முன்னாள் போராளிகளை சென்று பார்வையிட்டு வந்த ஒருவர் .............!

தமிழீழ விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதிகள் மீது சிறிலங்கா இராணுவம் மேற்கொண்ட முன்னேற்ற நடவடிக்கையின்போது விடுதலைப்புலிகளின் அமைப்பில் இருந்தனர் என்றும், அவர்களுடன் வேலைசெய்தனர் என்றும்,

மேஜர் தங்கவேல்

1971 பங்குனித் திங்கள் 21ம் திகதி நம்பியார் இராமச்சந்திரன் தம்பதிகளின் செல்வப் புதல்வனாய் மறத்தமிழ் மகனாய் முத்துக்கள் விளையும் பூமி முருங்கனில் ராஜேந்திரம் என்னும் பெயருடன் இம்மண்ணில் உதித்தான். இவன் மிகவும் வறிய குடும்பத்தில் பிறந்தும் இவனது தந்தை இவனின் ஆரம்பக்கல்வியை மன்னார் முருங்கன் மகாவித்தியாலயத்தில்; பயிற்றுவித்தார். இவன் ஆசிரியர்கள் மத்தியில் நற்பெயருடனும் திறமையானவனாகவும் செயற்பட்டு வந்தான்.

உயிர்க்கொடை-முள்ளிவாய்க்காலை மறக்க வேண்டாம்-ஓவியக்கல்லூரி மாணவர் சசிக்குமார்

ஈழப்பிரச்சனைக்காக தமிழ்நாட்டில் முத்துக்குமார் உள்ளிட்ட 19 பேர் தங்கள் இன்னுயிரைத்தியாகம் செய்துள்லனர்.இப்பொழுது அதைப்போல சென்னை ஓவியக்கல்லூரி மாணவர் ஒருவர் தன் இன்னுயிரை தூக்கிட்டு போக்கி கொண்டுள்ளார்.இது பற்றிய விபரம் வருமாறு.

தமிழகத்தில் உள்ள தமிழீழ மக்களுக்கு... அவசர அறிவித்தல்

தமிழீழம் சிங்களத்திடம் வீழ்ந்த பின்பு எமது உறவுகள் பலர் பல நாடுகளுக்கு அகதிகளாக தஞ்சம் கோரி வெளிக்கிட்டார்கள்.
அப்படி தஞ்சமடைந்த நாடுகளில் தமிழ் நாடும் அடங்கும். பல நாடுகளில் தஞ்சமடைந்தவர்கள் விடுதலைப்புலிகள் ஆகவே அவர்களை தங்களிடம் ஒப்படைக்குமாறு சிங்கள அரசு கேட்டு வருவது அனைவரும் அறிந்தது. அந்த வகையில் சுமார் 250க்கும் மேற்பட்ட பெயர் பட்டியல் ஒன்றை தமிழக அரசிடமும் சிங்கள அரசு கையளித்திருக்கின்றது.
அவர்களில் பெரும்பாலானோர் சென்ற ஆண்டு மே17ம் திகதிக்குப் பிறகு வந்தவர்கள். இவர்கள் அனைவரையும் கைது செய்து தம்மிடம் ஒப்படைக்குமாறு சிங்களம் வேண்டுகோள் விடுத்திருக்கின்றது. தற்சமயம் செம்மொழி மாநாடு நடைபெறுவதால் இப்போதைக்கு ஏதும் செய்து தொலைக்க வேண்டாம் என மத்திய அரசுக்கு தமிழக அரசு அறிவித்திருப்பதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வந்தபடி உள்ளன.
அதே கட்டளையை தமிழக அரசு தனது காவல்த் துறைக்கும் அறிவித்திருக்கின்றது. நேற்று முள்ளிவாய்க்காலை மறக்க வேண்டாம் என பத்து பக்கத்திற்கு எழுதி வைத்துவிட்டு தூக்கிலிட்டு மறைந்து போன ஓவியக்கல்லூரி மாணவனின் மரணமும் மூடி மறைக்க தமிழக காவல்த்ததுறை முயல்வதாக தெரிகிறது.
ஆகவே செம்மொழி மாநாட்டிற்குப்பிறகு தமிழ் நாடு வழமையில் இருந்து மாறுபடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. தமிழகத்தில் உள்ள உறவுகளே ஏற்கனவே பல துரோகிகளையும் புலனாய்வாளர்களையும் தமிழகத்தில் சிங்கள அரசு அனுப்பியிருந்ததை நீங்கள் அனைவரும் அறிவீர்கள்.
அப்படிப்பட்டவர்கள் ஊடாகவே பலரது தகவல்கள் திரட்டப்பட்டிருக்கும் என்பதை நாங்கள் நம்புகின்றோம். துரோகிகளது வேலைகள் முடிந்து இப்போது பட்டியல் கையளிக்கப்பட்டுள்ளதாகவே தெரிகிறது

திங்கள், 21 ஜூன், 2010

செம்மொழி மாநாடு கண்ட கருணாநிதி சோழன் பராக்….பராக்!


“தர்ம ஏகத் கலைஞர் தேவஸ்ய
கருணாநிதி ஸ்ரீமச்சாசனம்
ஊர்வச சிரோபபிஷசேகரி…”


இச்செப்பேடு
செப்புவது யாதெனில்,


“காப்பாற்றுங்கள்.. காப்பாற்றுங்கள்!”
என்று ஈழத்தமிழர் கதறிய காலத்தே
பராக்கிரமத்தோடு சோனியாவுக்கு
விடாது கடிதமெழுதியதோடு,

அபுதாபியின் கேட் கப்பிற்றல் (Gate-Capital) கோபுரம்

உலக அதிசயங்களில் ஒன்றாகக் கருதப்படும் இத்தாலியின் பைசா என்ற சாய்ந்த கோபுரத்தை முறியடித்துள்ளது அபுதாபியின் நவீன கட்டடம். அதிகளவில் சாய்ந்திருக்கும் சாதனையில் இத்தாலியின் பைசா கோபுரத்தை அபுதாபியின் கேட் கப்பிற்றல் (Gate-Capital) கோபுரம் முறியடித்து கின்னஸ் சாதனையில் இடம்பெற்றுள்ளது.

பெண் போராளிகள் தென்பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டனர்!

சிறையில் உள்ள 400 பெண் போராளிகள் தென்பகுதிக்கு ஆடைத்தொழிற்சாலை ஒன்றில் பணி புரியவென நேற்று அழைத்து செல்லபட்டுள்ளனர். வேலைவாய்ப்பிற்காகவே இவர்கள் அழைத்து செல்லப்பட்டதாக வவுனியா படை அதிகாரிகள் தெரிவித்துள்ளபோதும். இந்த விடயங்கள் தொடர்பில் குறித்த 400 பெண் போராளிகளினதும் பெற்றோர்கள் உறவினர்களுக்கு தெரிவிக்கப்படவில்லை என்றும் கூறப்படுகின்றது

லெப்டினன்ட் மலரவன்- ஒரு வேவுப்போராளியின் உண்மைக் கதை

ஆனையிறவு கூட்டுப்படைத்தளம் அந்த ஜனவரி மாதத்து நிசப்தமான குளிரில் உறைந்துபோய்க் கிடந்தது. உடலை ஊடுருவும் உப்புக் காற்றின் குளிரையும் மீறீச் சில உருவங்கள் எதிரியின் முன்னணித் தடைகளை நோக்கி வரிசையாக நகர்ந்து கொண்டிருந்தன.

நாம் வீழ்ந்தாலும் தமிழ் வீழக்கூடாது......

செம்மொழி மாநாடால் கலைஞருக்கு வேண்டப்படாத புகழும், அரசியல் அனுகூலங்களும் கிடைக்கப் போவதென்பது உண்மை. கலைஞரை மட்டும் குறைசொல்லி ஏது பலன்? நாம எல்லோரும் ஒருத்தரை ஒருத்தர் நாம் கொண்ட கொள்கைக்காகப் பிடறியில் குத்துவதில்லையா?! இன்று தமிழினம் என்றுமில்லாதாவாறு பிளவுபட்டுள்ளது. ஓற்றுமையே பலம்; அடம்பன் கொடியும் திரண்டால்தான் மிடுக்கு. கருத்தியல் வேற்றுமைகளைக் களைந்து தமிழுக்காகத் தமிழின் பெயரில் ஒன்றுபடுவோம். ஓன்றுபட்டு தமிழினதும் தமிழர்களினதும் வளர்ச்சிக்கும் சளைக்காது உழைப்போம். சாதி, மத, மார்க்க, வர்க்க, நெறி, அரசியல், சித்தாந்த, கொள்கை, கருத்தியல் வேற்றுமைகளைக் களைந்து தாய்த்தமிழின் பெயரில் ஒன்றுபடுவோம். நாம் வீழ்ந்தாலும் தமிழ் வீழக்கூடாது.

கே.பி அவர்களுக்கு ஓர் திறந்தமடல் - சேரமான்


அமைச்சரோ அல்லது முதலமைச்சரோ...
தெரியவில்லை.


மாண்புமிக்கவரோ அல்லது மேன்மைதங்கியவரோ...
அறியவில்லை.


கே.பியோ, குமரன் பத்மநாதனோ அல்லது செல்வராசா பத்மநாதனோ...
புரியவில்லை.


எவராயிருப்பினும் தவறாக விளித்திருப்பின் மன்னித்தருள்க!

இலங்கை அரசின் போலி முகத்திரையைக் கிழிப்போம் !

சில தினங்களுக்கு முன்னர் புலம்பெயர் நாடுகளில் இருந்து முக்கிய பிரமுகர்களும் மற்றும் கே.பி என்று அழைக்கப்படும் குமரன் பத்மநாதன் என்பவரும் இணைந்து 9 பேர் கொண்ட ஒரு குழு அமைத்திருப்பதாக இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் சண்டே ஒப்சேவர் பத்திரிகை செய்திவெளியிட்டிருந்தது யாவரும் அறிந்ததே. இதன் பின்னணி என்ன, இதில் வெளிவராத செய்திகள் என்ன என்பதை ஆராய்வோம்.

சண்டே லீடர் பத்திரிகை ஆசிரியர் பிரெட்றிக்கா ஜெய்ன்ஸ் இன் மடிக்கணனி நீதிமன்ற பாதுகாப்பில்!

வெள்ளைகொடியுடன் சரணடைய வந்த புலிகளின் முக்கியஸ்தர்களை சுட்டுக்கொல்லுமாறு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச களமுனைத் தளபதி ஒருவருக்கு கட்டளையிட்டிருந்தார் என முன்னாள் இராணுவத்தளபதி ஜெனரல் பொன்சேகா தெரிவித்தாக செய்தி வெளியிட்ட சண்டே லீடர் பத்திரிகை ஆசிரியர் பிரெட்றிக்கா ஜெய்ன்ஸ் இன் மடிக்கணனி நீதிமன்ற பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகள் கைது!

தமிழகத்தின் திருச்சி நகரில் விடுதலைப் புலிகள் 3 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக போலீசார் கூறுகின்றனர்.

பிரிவினைவாத உணர்வைத் தூண்டுகிறது ஜேவிபி

வடக்கு, கிழக்கு தமிழ்மக்களிடம் பிரிவினைவாத உணர்வுகளைத் தூண்டும் வகையில் ஜேவிபி நடந்து கொள்வதாகக் குற்றம்சாட்டியுள்ளார் சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச.
கொழும்பு நாளிதழ் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள செவ்விலேயே ஜேவிபி மீது இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

மீன்பிடிக்க சீனா போடும் தூண்டில்!

முல்லைத்தீவு நந்திக்கடலை மீன்பிடி அபிவிருத்தித் திட்டம் ஒன்றுக்காக சீன நிறுவனம் ஒன்றிடம் கையளிப்பதற்கு இலங்கை அரசாங்கம் தயாராகி வருகிறது. கடற்றொழில் அமைச்சர் ராஜித்தசேனா ரத்ன கடந்த வாரம் இதுபற்றிய தகவலை வெளியிட்டிருந்தார்.