ஞாயிறு, 25 ஜூலை, 2010

மேஜர் ஆதித்தன்(முனியாண்டி சுதாகரன் பதுளை )

ஆண்டு 1983, யூலை மாதத்தின் அந்தக்கரிய நாளில். தாயொருத்தி தன் இருபிள்ளைகளையும் இழுத்துக்கொண்டு ஓடுகிறாள். இனக்கலவரம் கொழுந்துவிட்டு எரிகிறது. சிங்களக் காடையரின் கண்களில் பட்டால் இவர்களும் தாக்கப்படக்கூடும். சிறிய மரவள்ளித் தோட்டம் ஒன்றில் பிள்ளைகளுடன் ஒழித்துக்கொள்கிறாள் அந்தத்தாய்.

இலங்கைக்கு வருகிறது மீண்டும் ஒரு தலைஅடி ...........இம்முறை தொழிலாளர் உரிமை மீறல்

பல்வேறு உரிமை மீறல் குற்றச்சாற்றுக்கு உள்ளாகி இருக்கும் இலங்கை மீது தற்போது தொழிலாளர் உரிமை மீறல் புகாரும் எழுந்துள்ள நிலையில், அது குறித்து விசாரிப்பதற்காக அமெரிக்கக் குழு ஒன்று கொழும்பு வர உள்ளது. இலங்கையில் தொழிலாளர் உரிமைகள்மீறப்பட்டிருப்பதாக அமெரிக்க தொழிற்சங்கம் குற்றஞ்சாட்டியிருக்கும் நிலையில்,

போரின் இறுதிக்கட்டத்தில் காணாமல் போனவர்கள் குறித்தவிசாரணைஆரம்பமாம் !

போரின் இறுதிக்கட்டத்தில் வன்னியில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து வெளியேறிய பின்னர் காணாமல் போனவர்கள் குறித்த முதற்கட்ட விசாரணைகளைத் தாம் ஆரம்பிக்க இருப்பதாக யாழ்ப்பாண மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.

ஐ. நா ஆலோசனைக்குழு விசா கோரவில்லை..

ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனின் யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான நிபுணர் குழு இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வதற்கான விசா அனுமதி கோரி எதுவித கோரிக்கைகளையும் முன்வைக்கவில்லை என அமெரிக்காவிலுள்ள இலங்கை உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.

அரசின் நல்லிணக்க குழு கேலிக்குரியது...!

வடமாகாணத்தைச் சிங்கள மாகாணமாக மாற்றி அங்கு இராணுவத்தினர் உட்பட அவர்களது குடும்பங்களுமாக சுமார் நான்கு இலட்சம் பேரை குடியேற்ற அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக அரச காணிகள் மட்டுமின்றி தமிழர்களது காணிகளும் சுவீகரிக்கப்படுகின்றன. இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதிக்கு நாம் அறிக்கை கொடுத்தும் எதுவித நடவடிக்கையும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை.

கண்டுபிடித்தால் கூறுங்கோ எங்கே என் தலைவன் ...ஈழத்திலிருந்து ஒரு குரல்

தமிழ் வீரம் தமிழ்நாட்டின் புறநானூற்றில் மட்டுமல்ல
ஈழத்தில் பிரபாகரன் பரணியிலும் உண்டு
பரணிபாடும் தலைமகனின் மர்மம்தான் என்ன உண்டா இல்லையா
கடவுள் உண்டா இல்லையா நாம் கண்டதில்லை
கல்லைக்கண்டோம் சொன்னார்கள் நம்பினோம் கும்பிட்டோம்

மு.கா – த.தே.கூ ?வடக்கு ,கிழக்கு ?...?!

ஒரு கட்சியின் நா டாளுமன்ற உறுப்பினர் தேசிய ரீதியான பிரச்சினைகள் தொடர்பாக கருத்துக்களை முன் வைக்கும்போது மிகவும் பொறுப்புடன் நடந்து கொள்வது கட்டாயமாகும். நாடாளுமன்ற உறுப்பினரின் கருத்தானது, அது சார்ந்த கட்சியின் கொள்கையாகவே கருதப்படும்.
அந்த வகையில்

சனி, 24 ஜூலை, 2010

கறுப்புயூலை கறுப்பாகவே.....

எட்டி உதைக்கும் கால்தழுவி
தொழுது கிடந்த பொழுதுகளாகவே
ஆண்டுகள் பலவாக அப்படியே கிடந்தோம்.
காலிமுகத்திடலில் யூனியன்கொடி இறக்கி
ஏற்றி வைத்த சிங்கக்கொடியின் நிழலே
எந்நாளும் எமக்கானது என்ற நினைப்பிலேயே
நீட்டித் தூங்கிக் கிடந்தனர் எம் முன்னோர்.
ஒருதீவு ஒரேநாடு என்ற தேசியக்கனவில்
திளைத்திருந்தோம்.

நாடும் நடப்பும் ......புலிகளின் வெளிநாட்டு முகவர்களை பிடிக்க இலங்கை அரசு இன்டர்போலின் உதவியை நாடுகிறது ...

வெளிநாடுகளில் தளம் அமைத்து செயற்படும் தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பை முறியடிப்பதற்கும் புலிகளின் முக்கியஸ்தர்களை கைது செய்வதற்கும் இன்டர் போல் பொலிஸாருடன் இணைந்து இலங்கை புலனாய்வுப் பிரிவினர் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

கடற்கரும்புலி மேஜர் நித்தியா (செல்வராசா தயாளினி )யாழ்ப்பாணம் பருத்தித்துறைக் கடற்பரப்பில் கப்பல் தொடரணி மீதான கரும்புலித் தாக்குதல்.

சிறுத்தைகளைப் போன்று பதுங்கிப் பாயும் அணியொன்றின் நிர்வாக வேலையில் சிலகாலம் பங்கேற்ற பின் விடுதலைப்புலிகள் மகளிர் படையணிக்கு வந்திருந்தார் நித்தியா. எப்போதும் சிரித்த முகம். மனம் சிரிப்பது விழிகளில் வெளிப் படையாகத் தெரியும் படியான சிரிப்பு. சளைக்காமல், களைக்காமல் எத்தனை கடின பயிற்சியையும் செய்தார். விடுதலைப்புலிகள் மகளிர் படையணிக்கு வந்த நாளிலிருந்து தொடர்ந்து சண்டைதான். தொடர்ந்து காயங்கள்தான்.

பொலிஸ் பதிவுச் செயற்பாடுகள் தொடர்பாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்த தகவல்கள்முரண்படுகின்றன- மனோ கணேசன்

"பொலிஸ் பேச்சாளர் ஜயகொடி வெள்ளவத்தையை தமிழர் பெரும்பான்மையாகவுள்ள பிரதேசம் எனக் குறிப்பிட்டுள்ளதுடன் வெள்ளவத்தையில் வசிப்பவர்களை பொலிஸில் பதிவுசெய்யும் நடைமுறை இருப்பதையும் ஏற்றுக்கொண்டுள்ளார்.

சிவந்தனின் நடைபயணம் ஆரம்பித்தது..

கறுப்பு ஜுலையை முன்னிட்டு பிரித்தானியாவின் தலைநகர் லண்டனில் நேற்றிரவு (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற பேரணியில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டு தமது கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.
சிறீலங்கா அரசு மீது போர்க்குற்ற விசாரணை மேற்கொள்ள வேண்டும்,
தடுப்பு முகாம்களிலுள்ள போராளிகள், பொதுமக்கள் விடுதலை செய்யப்பட்ட வேண்டும். முகாம்களிலுள்ளவர்களை பார்வையிட அனுமதிக்க வேண்டும்,
மனித உரிமைகளை மதிக்கும்வரை சிறீலங்காவைப் புறக்கணிக்க வேண்டும்

அரசுசாரா(ngo) நிறுவனங்கள் வன்னியை விட்டு வெளியேறும் அபாயம் ...!

வன்னிப் பகுதியில் தங்கி, சேவையாற்றும் சில சர்வதேச மற்றும் உள்ளூர் அரசு சாரா நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை அரசாங்கம் மேலும் இறுக்கியுள்ளதால், அவை அங்கிருந்து வெளியேற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

போய் சேருமா இடம்பெயர்ந்த மக்களின் கைகளில் ...........

வன்னியில் இடம்பெற்ற யுத்தத்தில் இடம்பெயர்ந்து , இடைத்தங்கல் முகாம்களிலிருந்து மீள்குடியமர்த்தப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு அவர்களுக்கு

எதிரணியின் யோசனைகளை மஹிந்த ஏற்கின்றார்..!

அதிகரித்து வரும் நெருக்கடிகளை சமாளிக்க எதிரணியினை சர்வதேசத்திற்கு முன் நிறுத்தி மஹிந்த காய்களை நகர்த்த ஆரம்பித்துக்கொண்டிருக்கின்றார். இது குறித்த பல பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளன. மஹிந்த பல யோசனைகளை ஏற்றுக்கொண்டுள்ளாராம்.