செவ்வாய், 27 ஜூலை, 2010

அன்பான தமிழ்பேசும் உறவுகளே நாம் விழிக்காவிட்டால் எமது அடையாளத்தை தொலைத்துவிடுவோம் ......

முள்ளிவாய்க்கால் முடிவுக்கு பின்னர் நாம் தொடர்ந்து வலியுறுத்தியும் எல்லோரையும் கேட்டுக்கொண்டுமிருப்பது ஒன்றே ஒன்றை தான். இனியாவது ஒரே அணியில் எல்லோரும் ஒரு பொது உடன்பாட்டின் அடிப்படையின் இணைந்து கொண்டு அடுத்த கட்டம் பற்றிய கருத்து பரிமாற்றங்களுக்கு உங்களை இணைத்துக்கொள்ளுங்கள் என்பதே!

வீரவணக்கம் -மேஜர்- தேவன் (அம்பாறை மாவட்டம்)

அம்பாறை மாவட்டத்தை பிறப்பிடமாக கொண்ட இவர்.2005 ம் ஆண்டின் பிற்பகுதியில்

கோத்தபாயாவின் கைகளில் காவல்துறையின் நான்கு பிரிவுகள் !

காவற்துறை திணைக்களத்தின் 4 முக்கிய பிரிவுகளான விசேட அதிரடிப்படை, பயங்கரவாத விசாரணைப் பிரிவு, குற்றப்புலனாய்வுத் திணைக்களம், கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு ஆகியன பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய

லெப்.கேணல் பாண்டியன்(செல்லத்துரை சிறிகரன் கொக்குவில் - யாழ் )

இம்ரான்-பாண்டியன் இருவரும் உற்ற நண்பர்கள். அவர்கள் யாழ்ப்பாணத்தில் கொக்குவில் பிரம்படி என்ற இடத்தில் பிறந்து பக்கத்துப் பக்கத்து வீட்டில் வாழ்ந்த நண்பர்களாக இருந்து நண்பர்களாகவே போராட்டத்தில் இணைந்து நண்பர்களாகவே களமுனைகளில் களமாடி நண்பர்களாகவே தங்களுடைய இலட்சியத்திற்காக வீரச்சாவைத் தழுவிக் கொண்டவர்கள்.

சிறையில் வாடும் எம்மினப் பெண்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்யுமாறு சிறையில் இருந்து கதறும் ஒரு பெண்ணின் குரல் உங்கள் காதுகளுக்கு கேட்கிறதா ?


கம்போடியா சிறை அதிகாரிக்கு மனித உரிமை மீறியதால் வருட சிறைத்தண்டனை ...

கம்போடியாவில் 1975 – 1979 காலப்பகுதியில் அரசுக்கு எதிரானவர்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டு பின்னர் கொலைக்களங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு 20 லட்சம் அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவங்கள் தொடர்பான

மீள்குடியேற்றமின்றி அவஸ்தை படும் கிழக்கு மக்கள் ..!

மட்டக்களப்பின் வாகரைப் பிரதேசமான தோணிதாண்டமடு எனும் எல்லைக் கிராம (மட்டக்களப்பு பொலநறுவை எல்லையில் உள்ள கிராமம்) மக்கள் நாட்டில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக இடம் பெயர்ந்து கதிரவெளி எனும் இடத்தில் இன்னும் வசித்து வருகிறார்கள்
கிழக்கு மாகாணம் அரச கட்டுப்பாட்டின் கீழ்

புதிதாக உருவாகியுள்ள ரம்புகலவின் பிரதி அமைச்சர்

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச பொறுப்பாளரான கே.பி. என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதனை அதிக முக்கியத்தும் கொடுத்து பேசுவது முட்டாள்தனமானது என வினாயகமூர்த்தி முரளிதரன்  கூறியுள்ளார்.

புதிய கிரகங்கள் கண்டு பிடிப்பு ...

அமெரிக்காவின் வி்ண்வெளி ஆராய்ச்சி அமைப்பான நாஸா அனுப்பியுள்ள கெப்லர் விண்கலம் 5 புதிய சூரிய குடும்பங்களையும் (Solar systems) 706 புதிய புதிய கிரகங்களையும் (Planets) கண்டுபிடித்துள்ளது. இதில் 140கிரகங்கள் பூமியைப் போன்றே உள்ளதும் தெரியவந்துள்ளது.

இந்தியாவின் தந்திரமும் முஸ்லிம் பிரதிநிதிகளின் குழப்பமும் ...

முஸ்லிம் அரசியலில் மிகப் பெரிய சந்தேகங்கள் இருக்கின்றன. புலிகள் முழுமையாக அழிக்கப்பட்டாயிற்று. இனிமேல் தனித் தரப்பு என்ற கோசத்திற்கு இடம் கிடையாது. இனப்பிரச்சினைக்கான பேச்சுவார்த்தை என்பது இந்தியாவின் தேவைக்காக மட்டும் அடிக்கடி பேசும் விடயமாகவுள்ளது. இங்கிருந்து இந்தியாவிற்கு படையெடுத்துச் சென்று பேசினாலும் இங்கு பழைய குருடி கதவைத் திறவடி என்ற கதையாகவே இருக்கின்றது

குற்ற செயல்களை கட்டுப்படுத்த முடியாத இலங்கை ...

இலங்கையில் பூராகவும் குற்றச்செயல்கள் அதிகரித்துக்கொண்டு செல்கின்றது. 7 வயது சிறுமி ஒருத்தி 60 வயது நபர் ஒருவனால் வாழைச்சேனை பிரதேசத்திலும் 14 வயது சிறுமி ஒருத்தி 22 வயது இளைஞன் ஒருவனால் றுவன்வெல பிரதேசத்திலும் கற்பழிக்கப்பட்டுள்ளனர்.

திங்கள், 26 ஜூலை, 2010

மணலாற்று தாக்குதலின் அதிர்ச்சி பின்னணி ...

கடந்த வருடம் தடைமுகாமில் இருந்து தனியே பிரித்து எடுக்கப்பட்ட போராளிகளில் தீவிரமான விடுதலைப்
புலிப் போராளிகளைபிரித்து (பெண் போராளிகள் உட்பட )தனி வதைமுகாமில் அடைத்து வைத்திருந்தது அனைவரும்
அறிந்த ஒன்றே .அப் போராளிகுழுவில் இருந்து ஒரு தொகுதியினரை பல குழுக்களாக பிரித்து கள சேவைக்காகவும்தேடுதல் வேட்டைக்காகவும் அவர்கள் பயன் படுத்தி 
வந்தனர்.




இக் குழுவில் யுத்தகளமுனையில் விழுப்புண் அடைந்து இராணுவத்தால்
கைது செய்யப்பட்ட போராளிகளும் அடங்குவர்.இத் தருணத்தில் இராணுவத்தின் கட்டளைக்கு அடி பணியாத கொள்கையில் உறுதி
கொண்ட போராளிகள் சிலரை இராணுவ சீருடை அணிவித்து அவர்களை நய வஞ்சகமாக கொலை செய்து விட்டு,இது புலிகளுக்கும்
ராணுவத்திற்கும் இடையில் நடந்த மோதலாக தமிழ் ஊடகங்கள் வாயிலாக செய்திகளை மெதுவாக கசியவிடுகிறது. மணலாற்றில் நேற்றைய தினத்திற்கு முன்பு கொல்லப்பட்டவர்களும் காயப்பட்டவர்களும் மேற்படி ராணுவத்தால் கைது செய்யப்பட்டு சித்திர வதைகலுக்கு உள்ளாகி வந்த விடுதலைப் புலிப் போராளிகளே. இத்தகவல்சரத் பொன்சேகா தரப்பிலிருந்து இருந்து கசிய விடப்பட்ட புலனாய்வு செய்தியாகும்.
ஜி.எஸ் .பி வரி சலுகை இலங்கை அரசாங்கம் தொடர்ந்து பெற்றுக் கொள்ள வேண்டுமானால் சில முக்கிய நிபந்தனைகளை ஐரோப்பிய ஒன்றியம் விதித்திருந்தது. அதில் இலங்கை அரசாங்கமானது நீண்ட காலமாக இருந்து வரும் அவசர கால சட்டத்தை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை முக்கியமாக விடுத்திருந்தது. இதை கருத்தில் கொண்டே மேற்கண்ட மணலாற்றுச் சம்பவம் நடைபெற்றுள்ளதாக அறிய முடிகிறது. அதாவது, இலங்கைத் தீவில் இன்னும் பயங்கர வாதம் ஒழியவில்லை ஆகையால் அவசர கால சட்டத்தை நீக்க முடியாது என்று ஐரோப்பிய ஒன்றியம் உட்பட அனைத்து உலக நாடுகளையும் நம்ப வைக்கும் ஒரு சதித் திட்டமாகும். அரசாங்கத்தின் இச்செயலானது அரச சார்பற்ற நிறுவனங்கல் மற்றும் ஊடகவியலாளர்களின் பிரசன்னம் மற்றும் செயல்பாடுகளை மட்டுறுத்தும் நோக்கமாகவே அறிய முடிகிறது. தமிழர்களுக்கெதிராக தமிழர்களைக் கொண்டே தமிழ் ஊடகங்கள் வாயிலாக உலகுக்கு பறை சாற்றுவதே ராஜபக்ஷே அரசாங்கத்தின் சாதுர்யமாகும்.

சிங்களவரின் ஆர்ப்பாட்ட ஊர்வலம் சுவிசில் நடந்தேறியது !

இலங்கைக்கு எதிரான ஐ.நா நிபுணர் குழுவின் நியமனத்தைக் கண்டித்து இத்தாலியில் வாழும் சிங்களவர்கள் இன்று ஜெனிவாவில் உள்ள ஐ.நா தலைமைக் காரியாலயத்தின் முன்பாக மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்றை நடத்தினார்கள்.

தென் கொரியா -அமெரிக்கா கூட்டு பயிற்சி வட கொரியா எச்சரிக்கை

அமெரிக்க-தென் கொரியப் படைகள் வட கொரியாவின் தாக்குதல் எச்சரிக்கையைப் பொருட்படுத்தாது நேற்று ஜப்பானியக் கடலில் பயிற்சியைத் தொடங்கின. இந்த மாபெரும் போர்ப் பயிற்சியில் 20 போர்க்கப்பல்கள், 200 விமானங்கள், அமெரிக்கா, தென் கொரியா ஆகிய இரு நாடுகளையும் சேர்ந்த 8,000 வீரர்கள் கலந்துகொள்கின்றனர்


மீண்டும் வீதிக்கு இறங்கிப் போராட வேண்டும் சிவந்தன் அழைப்பு

தமிழ் மக்கள் தமது இனத்தின் விடுதலைக்காகவும், தடுத்து வைக்கப்பட்டுள்ள உறவுகளை விடுவிக்கவும் மீண்டும் வீதிகளில் இறங்கிப் போராட்டங்கள் மேற்கொள்ள வேண்டும் என, ஐ.நா மனித உரிமைகள் சபை நோக்கி மனிதநேய நடைப்பயணம் மேற்கொண்டுள்ள சிவந்தன் அழைப்பு விடுத்துள்ளார்.