சுதந்திரமான வாழ்வு, கெளரவமான , கற்பதற்கேற்றதான அமைதியான சூழல் தெரிவுகள் ,அனைத்தையும் இழந்துபோன மனதின் சுமைகளோடு வாழ்வதற்க்கு
நிர்ப்பந்திக்கபடுதலே வன்னி மாணவர்களின் இன்றைய சூழல் , கொடும்போரின் வடுக்களை சுமந்த வாழ்வே வாழ்வழிக்கிறது. யுத்தத்தில் அவயங்களை இழந்து
உற்றார், உறவினர் , நண்பர்களை பிரிந்து ,சாதாரண மக்களாக எப்படி இவர்கள் வாழ்வார்கள்.
உடல் ,உள ரீதியாக பாதிக்கபட்ட மாணவர்களை வழிநாடாத்த முன் வருபவர்கள் யார் ? உதவுபவர்கள் யார் ? யாருமேயில்லை பல எதிர்கால கனவுகளுடன்
சிறகடித்து திரிந்த எம்மலர்களின் கனவுகள் சிதைந்ததும் , சிதைக்கபடுவதுமான காலம் இதுவே எனலாம்
போரின் இழப்புகளிற்குள் மீண்டெழுவதற்குள் சிங்களபேரினவாதத்தின் இராணுவ புலனாய்வு செயற்பாட்டளர்களின் விசாரணைகள் , கெடுபிடிகள் ,
சந்தேகபார்வைகள் , இராணுவ கெடுபிடிகளின் மத்தியில் எவ்வாறு தான் தங்கள் கற்றல் செயற்பாடுகளை கொண்டு செல்ல முடியும்.
யாழ் பல்கலைகழகத்தில் 325 ற்கு அதிகமான மாணவர்கள் எதுவித உதவியுமற்று , வன்னி போரின் வடுக்களை சுமந்து. சுயமான வாழ்வியக்கத்திற்குள்
தள்ளபட்டாலும் தங்களது எதிர்காலம் பற்றிய கேள்விகளுடனும், எந்நேரமும் இராணுவ புலனாய்வாளர்களால் விசாரணைக்கு உள்படுத்தபடுவோம் என்ற
அச்சத்திலேயே தங்களின் வாழ்வியக்கத்தை கொண்டு நகர்த்துவதை காணலாம்
அண்மையில் யாழ் பல்கலைகழக மாணவர்களான ரவீந்திரதாஸ் விக்ரர் - அருள்தாஸ் , வேலாயுதம் - திருவிழி ஆகியோர் கடிதங்களூடாக தம்
மனக்குமுறல்களை இவ்வுலகத்திற்க்கு தெரிவித்துவிட்டு தங்களை மாய்த்து கொண்ட சம்பவம் எம் மனங்களை விட்டு மறையும் முன்பே மீண்டுமொரு அவலம்
நடந்தேறியுள்ளது. வன்னி மாணவர்கள் எனும் காரணத்தால் சக மாணவர்களின் ஏளன பேச்சுக்கள்,, பேராசிரியர்களின் பாகுபடுகள்,, விசனமான பார்வைகள் ,,
அதனை தவிர இராணுவ புலனாய்வாளர்களின் விசாரணை தொந்தரவுகளின் தாக்கத்தின் பாதிப்புகளே மாணவர்களை இந்நிலைக்கு கொண்டு செல்ல
ஏதுவாகின்றது..
மாணவர்களான அருள்தாஸ்,, திருவிழி ஆகிய இருவரும் யாழ்ப்பாண அச்செழு இராணுவ முகாமிற்கு அழைக்கபட்டு புலனாய்வாளர்களால்
விசாரணைக்குள்படுத்தபட்டார்கள் என்பதும் , இருவரின் உடல்களிலுமுள்ள யுத்த தழும்புகளிற்கான காரணங்கள் ஆராயப்பட்டு , எச்சரிக்கை செய்யபட்ட பின்பே
இவ்விருவரும் இக்கோர முடிவிற்க்கு தள்ளபட்டார்கள் என அறியமுடிகிறது.
செஞ்சோலை மாணவியான புஸ்பமலர் ஜெயந்தி (சாளினி) சிறிலங்கா வான்படையால் செஞ்சோலை சிறுவர் இல்லத்தில் மேற்கொள்ள பட்ட வான் தாக்குதலில்
அகப்பட்டு தனது தோழிகள் பலரை இழந்த சோகத்துடன் வாழ்ந்து வந்தவர். வன்னியின் கொடூரபோர் மேலும் அவரை பாதிப்புகுள்ளாக்கியது . உறவுகளை பிரிந்து ,
தான் நேசித்தவர்களை காணமுடியாத அவ் இளம் பிஞ்சின் சோகமான வாழ்வு இவ்வாறான கொடூர முடிவை எற்படுத்தியுள்ளது..
எம் எதிர்கால சிற்பிகளின் கனவுகளை நிறைவு செய்தலும் , அவர்களினை உள ரீதியான உளவுரனூட்டல் ,,மேம்படுத்தல் ,, நம்பிக்கையூட்ட உதவுதலே எம்மாலான
காலக்கடமையாகிறது.
இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
செவ்வாய், 10 ஆகஸ்ட், 2010
தமிழர்களுக்கான நீதி கிடைக்கும் வரை இந்த நெடும் பயணம் ஓயக்கூடாது.......
ஐக்கிய நாடுகள் சபை நோக்கி நீதி கேட்டு நடக்கும் இளைஞனின் பயணம் 600 கிலோ மீற்றர்களையும் கடந்து முன்னோக்கி நகர்ந்துகொண்டிருக்கின்றது.
மேஜர் இளநிலவன்
''ஒரு பிச்சைக்காரனின் வயிறு, எளிய சுமை, வலிமை ஏறிய கால்கள்." ஒரு கெரில்லாப் போராளி கொண்டிருக்கவேண்டிய தகுதிகள் இவைகள்தான். உலகின் தலை சிறந்த விடுதலை வீரன் சேகுவேராவின் இதயத்திலிருந்து உதிர்ந்த வார்த்தைகள் அவை. இதை வாசிக்கும்போது என்னுள் ஓடோடி வந்தவர்களுள் நிலவனும் ஒருவன்.
15 வயதுச் சிறுமி மீது வல்லுறவு!
புத்தளம் மாவட்டத்தில் கடமையாற்றும் கிராம சேவையாளர் ஒருவர் 15 வயதுச் சிறுமி ஒருவரைக் கற்பழித்தமைக்காக இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தக் கற்பழிப்புச் சம்பவம் அவருடைய அலுவலகத்தில் நேற்று இடம்பெற்றுள்ளது.
இந்தக் கற்பழிப்புச் சம்பவம் அவருடைய அலுவலகத்தில் நேற்று இடம்பெற்றுள்ளது.
நடந்துமுடிந்த போரின் பின்னரான அரசியலாய்வுகள், புலிகளுக் கெதிரான விமர்சனங்கள், ஒப்பீடுகளனைத்தும் இந்த இனப்பிரச்சனையின் அடித் தளத்தை விளங்கிக்கொள்ளத் தவறிவிட்டன.....
வரலாறு எம்மைச் சுற்றி தன்னை நிகழ்த்திக் கொண்டேயிருக்கிறது. அலையலையாய்ப் படிவுண்ட அதன் பக்கங்களுக்குள் ஒரு மீள முடியாத் துயரத்தின் சாட்சியாய் நாம் விசனித்திருக்கிறோம். ஒரு தேசம் தூர்ந்துகொண்டிருக்கிறது, எமதனைவரின் கனவுகளினூடு.....
முன்னாள் புலிகள் மற்றும் ஆதரவாளர்களுக்கு எப்போது விடுதலை கிடைக்கும் என்ற கேள்விக்குச் சரியான விடை அரசதரப்பில்??
இறுதிப்போரில் சரணடைந்த கைது செய்யப்பட்ட புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர்கள் பற்றிய செய்திகள் இப்போது அதிகமாக வெளிவரத் தொடங்கியுள்ளன. அரசாங்கத் தரப்பே இவர்களைப் பற்றிய செய்திகளை நாளாந்தம் கொடுக்க நினைக்கிறது.
இரண்டொரு மாதங்களுக்கு முன்னர் இந்த நிலை இல்லை. சரணடைந்த புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர்கள் பற்றிய தகவல்களை வெளியிடுவதற்கு அப்போது தயங்கிய அரசாங்கம் படைத்தரப்பும் இப்போது அவர்கள் பற்றிய செய்திகள் தினம் வெளிவருவதை விரும்புகின்றன.
இரண்டொரு மாதங்களுக்கு முன்னர் இந்த நிலை இல்லை. சரணடைந்த புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர்கள் பற்றிய தகவல்களை வெளியிடுவதற்கு அப்போது தயங்கிய அரசாங்கம் படைத்தரப்பும் இப்போது அவர்கள் பற்றிய செய்திகள் தினம் வெளிவருவதை விரும்புகின்றன.
திங்கள், 9 ஆகஸ்ட், 2010
பலவந்தமாக சிங்கள குடியேற்றம்...!
இலங்கையில் திருகோணமலை மாவட்டத்தில் தமிழர்களுக்குச் சொந்தமான விவசாய நிலங்கள் உட்பட 3ஆயிரம் ஏக்கர் சுற்றி வளைக்கப்பட்டு சிஙகளவர்கள் குடியமர்த்தப்பட்டு வருகின்றனர்.
விடுதலைப்புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்டப்போர் முடிவடைந்த பின்னரும்,
விடுதலைப்புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்டப்போர் முடிவடைந்த பின்னரும்,
புலிகளின் தலையில்......தெரிந்தோ தெரியாமலோ??
நோர்வே நாட்டில் நிறுவனங்களில் பெயரலால் வங்கிகளில் கடன்களை பெற்றவர்கள் மற்றும் நிறுவனங்கள் நஷ்டமடைந்து விட்டது என கைகளை உயர்த்தியவர்கள் யாவரும் அதற்கான பொறுப்புக்களை புலிகளின் தலையில் சுமத்துவது தெரியருகின்றது. நோர்வே நாட்டின் தேசியப் பத்திரிகையான டக்பிளாடட் (Dagbladet) மேற்படி இத்தகவல்களை வெளியிட்டுள்ளது.
கப்டன் அன்பரசன்
‘ஐயா’ என்றுதான் அவன் எங்களால் அழைக்கப்பட்டான். அவன் அதை விரும்பாதபோதும், சிலவேளைகளில் ‘இப்பிடிக் கூப்பிட்டா இனி நான் கதைக்க மாட்டன்’ என்று விசனத்துடன் சொன்னாலும் இறுதிவரை நாங்கள் அவனை ‘ஐயா’ என்றுதான் கூப்பிட்டோம். மற்றப் பிரிவினர் அவனை அன்பரசன் என்று கூப்பிட்டாலும் நாங்கள் அவனை ‘ஐயா’ என்றுதான் அழைப்போம். அவன் யாழ்ப்பாணத்தில் ஐயர் குடும்பமொன்றைச் சேர்ந்தவன் என்பதுதான் அதற்குக் காரணம்.
புதன், 4 ஆகஸ்ட், 2010
இறுதி போர் முடிந்து ஒருவருடம் கடந்து பல மாதங்களாகியும் விட்டது இக்கால காலகட்டம் வரைக்கும் தமிழருக்குள் நிகழ்ந்த முன்னேற்றம்தான் என்ன?
தேசியத்தின் பெயரால் ஒருவர் மீது ஒருவரை ஒருவர் குற்றம் சுமத்தியதும் காட்டிக்கொடுத்ததும் எம்மை நாமே ஏமாற்றிக் கொண்டதும் தான் மிச்சம்.
ஈழத்தமிழனின் கடமை....
தேசியம் என்பது மக்களின் சிறப்பான மன எழுச்சியாலும் செயற்திறனாலும் தோன்றி நிலைத்து நிற்கிறது தேசியம் என்பது உணர்வு மாத்தரமல்ல, உருவமும் கூட தேசியத்தின் உணர்வுக்கு உருவம் கொடுப்பவை தேசியச் சின்னங்கள் அவை காலத்தைக் கடந்து நிற்கின்றன.
சனி, 31 ஜூலை, 2010
எப்படி கேபி ஒரு இன உணர்வுள்ள தமிழனாக ......?ஒட்டு மொத்த போராட்டத்தையும் குறைசொல்ல இவருக்கு என்னதகுதி ? பேட்டி என்று புலம்புகிறார் ...???
கேபி உள்ளூர் ஊடகத்திற்கு வழங்கிய உளறல்
4வது ஈழப் போரின் கடைசி மாதங்களில் நீங்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்பு கொண்டிருந்தீர்களா? வன்னிப் பகுதியில் விடுதலைப் புலிகளின் தலைமை தப்ப முடியாத அளவுக்கு சிக்கியிருந்ததா? ராணுவத்தை தடுக்க முடியவில்லை என்று உங்களது தலைமை உங்களிடம் கூறியதா?
4வது ஈழப் போரின் கடைசி மாதங்களில் நீங்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்பு கொண்டிருந்தீர்களா? வன்னிப் பகுதியில் விடுதலைப் புலிகளின் தலைமை தப்ப முடியாத அளவுக்கு சிக்கியிருந்ததா? ராணுவத்தை தடுக்க முடியவில்லை என்று உங்களது தலைமை உங்களிடம் கூறியதா?
“புலிகளின் பெயரைக் கறைப்படுத்துவதாக எண்ணி, தேசத்திற்காக மாண்ட தமிழர்களின் தியாகத்தை மறந்து விடாதீர்கள்”
தமிழர்களுக்காக கட்டப்பட்ட இராணுவக் கட்டமைப்பு, அழிக்கப்பட்ட நிலையில், அப்பிரதேசங்கள் அனைத்திலும் சிங்கள ஆக்கிரமிப்புக்கள் இடம் பெறுவதையும், ஒரே தேசத்திற்குள் அதாவது சிங்கள பிரதேசங்களில் தமிழ் பதாகைகள் நிராகரிக்கப்பட்ட நிலையில், தமிழ் பிரதேசத்தில் வலுக் கட்டாய
புலத்திலுள்ளவர்களின் கடமை .............!
யாழ்ப்பாணத்தில் கஞ்சா அபின் போன்ற போதை வஸ்துக்களை சமூகச் சீர்கேடுகளை ஊக்குவிக்கும்நடவடிக்கைகளில் ஸ்ரீலங்கா படையினர் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஆபாசப் புத்தகங்கள் மற்றும் சீடீக்களின் விற்பனை, கஞ்சா அபின் போன்ற போதை வஸ்துக்களின் பாவனை போன்றவற்றை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளின் பின்னணியில் படையினர் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஆபாசப் புத்தகங்கள் மற்றும் சீடீக்களின் விற்பனை, கஞ்சா அபின் போன்ற போதை வஸ்துக்களின் பாவனை போன்றவற்றை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளின் பின்னணியில் படையினர் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அன்பான தமிழ் மக்களே! ஏன் இன்னும் நாம் விழித்துக் கொள்ளாமல் இருக்கிறோம்??? ஏன் இன்னும் இன்னும் எம்மை நாமே அழிப்பதற்கு துணைபோகின்றோம்??? தயவுசெய்து சிந்தியுங்கள்!!!!!!!!
தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு ஒரு நீண்ட வரலாறுண்டு. இருப்பினும் தமிழ்மக்களின் மனங்களின் தடம்பதித்த சில வரலாற்றுத் துணுக்குகளை மீள்நினைவுக்குட்படுத்தல் பொருத்தமாகும். ஒரு இயக்கத்தை உருவாக்குவது என்பது கஷ்டம் மிகுந்த அத்தியாயம். அதன் கட்டமைப்பு குலையாமல் மூன்று தசாப்தங்கள் வரை நகர்த்தி வந்தது என்பது பெரும் எதிர்நீச்சல்கள் மலிந்த அத்தியாயம்.
ஊடகங்கள் மீது வன்முறை !!!போர் முடிந்தது என்ற சொல்லுக்கு என்ன ...???த.தே.கூ உறுப்பினர் மகிந்தவுக்கு முறையிட்டுள்ளாராம்..
யுத்தம் நிலவிய காலப்பகுதியில் பல்வேறு ஊடக நிறுவனங்கள் தாக்கப்பட்ட அதேவேளை, ஊடகவியலாளர்கள் பலரும் கொல்லப்பட்டனர். ஆனால் யுத்தம் முடிவடைந்து சமாதான சூழல் ஏற்பட்ட பின்னரும் இவ்வாறு ஊடகங்களுக்கு எதிராக அராஜகங்கள் கட்டவிழ்த்து விடுவது மிகவும் கண்டிக்கத்தக்கது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)


.jpg)
















