ஐரோப்பிய ஒன்றியத்தின் வரிசலுகையினைப் பெறுதல், அனைத்து நாடுகளில் இருந்து வரும் உல்லாசபயணிகளின் வரவினை கூட்டுதல், வெளி நாட்டு முதலீடுகளை அதிகரித்தல் என்பனவே அண்மையில் வெளி நாட்டு அமைச்சருக்கு கொடுக்கப்பட்ட இலக்கு. இதற்கேற்ப காய்களை நகர்த்துமாறு அனைத்து நாட்டு தூதரகங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
செவ்வாய், 31 ஆகஸ்ட், 2010
வடக்கில் சிங்களக் குடியேற்றங்கள்
இனப்பிரச்சினை தீவிரம் பெறுவதற்கான தோற்றுவாய்களில் ஒன்றாக இருந்த சிங்களக் குடியேற்றங்கள் மறுபடியும் தமிழ்மக்களுக்கு அச்சத்தைக் கொடுக்க ஆரம்பித்து விட்டன. முன்னர் கிழக்கில் தான் சிங்களக் குடியேற்றங்கள் பற்றிய அச்சம் ஏற்பட்டிருந்தது. கிழக்கைத் தமிர்களிடம் இருந்து பறிக்கும் முயற்சிகள் நடப்பதாக தமிழர்கள் முன்னர் பயந்தார்கள். அதுபோலவே நடந்தும் விட்டது. இப்போது வடக்கின் மீது அதேபோன்று குறி வைக்கப்பட்டிருக்கிறது.
நிருபமா ராவின் நெருங்கிய நண்பனாம் !!!!! ......டக்ளஸ்
இலங்கை சென்றுள்ள இந்திய வெளியுறவுச் செயலர் நிருபமாராவிடம், இலங்கைத் தமிழ் மக்களுக்குச் செய்திருக்க வேண்டிய பல விடயங்களை இந்திய அரசு செய்யத் தவறிவிட்டது என யாழ்ப்பாணத்தில் அவரை சந்தித்த தமிழ் மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஏன் நாம் கொல்லப்பட்டோம் யாரால் என்று.....
பிஞ்சென்றும் பூவென்றும் பிரித்து
அவ் சிறு வண்டு கூட பார்த்து தான் தேன்பருகும்.
இங்கு சிங்கள வெறியனுக்கு தமிழ் பிஞ்சின்
இறப்பெனில் சந்தோசம். செய்த சிப்பாய்க்கு பதவி
உயர்வுகள் தானாக கிட்டும்.
பெற்றதாய் முன்னே தந்தையும் தமையனும் கூடவே
இறந்து கிடப்பது தான் விதியா????
இதை பார்த்து வெறும் காகித துண்டின் அறிக்கைகள்
எழுதிடத்தான் ஐ.நாவே நீயா??
சர்வவல்லமை கொண்டதாய் சொல்லும்
சர்வ தேசத்தின் பணியா??
காந்திய நாடே நீகொடுத்த குண்டுகள் இங்கு
இவரை துளைத்துள்ளது.
அந்த பிஞ்கின் உயிரையும் கூட குடித்துள்ளது.
இதுதான் காந்தி உனக்கு சொல்லி தந்ததா??
இல்லை புத்தரின் போதனையும் இதுதானா??
வாழப்பிறந்தவரா நாங்கள் இல்லை
பலராலும் வஞ்சிக்க பிறந்தவரா??
சொல்லி விட்டு கொல்லுங்கள் சாகும் போது தன்னும்
தெரிந்து கொண்டு இறப்போம்
ஏன் நாம் கொல்லப்பட்டோம் யாரால் என்று
கப்டன் ஈழமாறன் (இராமையா தினேஷ்)
"டேய் மச்சான் என்னைக் கொண்டுபோய் வீடுறா... என்ர பெடியள் என்ன மாதிரியோ... விடடா மச்சான்..." வைத்திய சாலையின் கட்டிலில் இருந்தபடி, காலில் குத்திய திருக்கை முள்ளைப் பற்றிப் பெரிதும் கவலைப் படாதவனாய், தன் அருகில் இருந்த போராளியிடம் கூறிக் கொண்டிருந்தான் "ஈழமாறன்" அவனின் நச்சரிப்பைத் தாங்காது வைத்தியரிடம் அவர்களுக்கு, அவரின் வார்த்தைகள் ஏமாற்றத்தையே கொடுக்கும். "விசம் உடனே இறங்காது தம்பி. இதால ஆக்கள் செத்துப்போயிருக்கினம். ஒரு இரண்டு நாள் பொறும்! பிறகு போகலாம்." என்ப் புன்னகை முகத்தில் தவழவிட்டவாறு சொல்வதை, ஏமாற்றத்துடன் பார்ப்பான் அவன்.
திங்கள், 30 ஆகஸ்ட், 2010
பொன்னகருக்குள் நுழைந்த மக்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டனர்
பொன்னகர் மக்கள் குடியிருப்பதற்காக தங்கள் காணிகளுக்கு நுழைந்த பொழுது அவர்கள் தடுக்கப்பட்டு வெளியில் அனுப்பப்பட்ட சம்பவம் பெரும் பதற்றத்தை உண்டாக்கியது. கடந்த சில மாதங்களாக காணிகளுக்குச் செல்லவிடாமல் இந்த மக்கள் தடுக்கப்பட்டுள்ளனர். காணிகள் வடக்குமாகாணசபைக்கு சுவீகரிக்கப்படுகின்றன என்று கூறப்பட்டு தடுக்கப்பட்டுள்ள மக்கள் பொன்னகரிலும் கிளிநொச்சி மத்திய கல்லூரியிலும் தங்கியிருந்தனர்.
இந்திய இராணுவ உயர்மட்டக் குழுவினர் இலங்கைக்கு.....
இந்திய இராணுவத் தளபதி வி.கே.சிங் , அதேபோல இராணுவத்தின் பல்வேறு மட்டத்திலான தளபதிகளும் இலங்கைக்குவரவுள்ளதாக தகவல்கள் தெரிவித்தன.அதேவேளை இலங்கையிலிருந்தும் இராணுவ தளபதிகள் இந்தியா செல்லவுள்ளனராம். இரு நாடுகளுக்கிடையிலான பரஸ்பர பாதுகாப்பு ஒத்துழைப்பு கடலோரப்பாதுகாப்பு போன்றவை
தொடர்பாக இந்த பயணம் அமையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
தொடர்பாக இந்த பயணம் அமையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
"உயரிய சிந்தனை" இந்த தொழில் தருநர்களுக்கு எவ்வாறு வந்தது?
வடக்கில் உள்ள இளைஞர்,யுவதிகளின் வறுமை நிலை, வேலைவாய்ப்பின்மை போன்றவற்றைப் பயன்படுத்தி அவர்களுக்கு கைநிறைய சம்பளத்துடனும் இன்னும் பல சலுகைகளுடனும் தென்னிலங்கையிலுள்ள நிறுவனங்களில் வேலைவாய்ப்புகளைப் பெற்றுத்தருவதாகக் கூறி சட்டவிரோதமான முறையில் அந்த அப்பாவிகளைத் தென்னிலங்கைக்கு அழைத்துச் சென்று அவர்களின் எதிர்கால வாழ்க்கையை சீரழிக்கும் நடவடிக்கைகளில் சில போலி தொழில் தருநர்களும் தொழில் தரகர்களும் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகத் தற்போது பல்வேறு குற்றச்சாட்டுகளும் கிளம்பியுள்ளன
விடுதலைப் புலிகளின் ஆறு விமானங்கள் எரித்திரியாவில்.....
தனி இயந்திரங்களைக் கொண்டு இயங்கக் கூடிய ஆறு விமானங்களை புலிகள் எரித்தியாவில் பாதுகாப்பதாக சர்வதேச பயங்கர வாத ஒழிப்பு தொடர்பான நிபுணர் பேராசிரியர் சேனக ஜயசேகர தெரிவித்துள்ளார்.பேராசிரியர் சேனகஜயசேகர பயங்கரவாத ஒழிப்பு மற்றும் புலனாய்வுத் தொடர்பான சிட்னி பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக கடமையாற்றுகிறார். அவர் இதுதொடர்பில் மேலும் தெரிவித்ததாவது,
3 லட்சத்துக்கும் அதிக கண்ணிகள்
இன்னமும் 2ஆயிரம் சதுர கிலோ மீற்றர் பரப்பளவில் கண்ணிகள் வன்னிப் பகுதியில் அகற்றப்படவேண்டியுள்ளன. மேஜர் ஜெனரல் உதய வன்னியில் புதைக்கப்பட்ட கண்ணிவெடிகளில் அரைப் பங்கு மீட்கப்பட்டுவிட்டன. 2ஆயிரம் சதுர கிலோ மீற்றரில் புதைந்துள்ள 3 லட்சத்துக்கும் அதிக கண்ணிகள் இன்னும் அகற்றப்படாத நிலையில் வன்னியில் புதைக்கப்பட்ட கண்ணிவெடிகளில் அரைப் பங்கு மீட்கப்பட்டுவிட்டன. இதுவரை 1,800 சதுர கிலோ மீற்றர் பிரதேசத்தில் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ளன. புதைக்கப்பட்டு அடையாளம் காணமுடியாத நிலையில் உள்ள 3 லட்சத்து 500 கண்ணிவெடிகளை கண்டுபிடித்து அழிக்கப்படவேண்டியுள்ளன
ஐந்நூறுபோராளிகள் ஒப்படைக்கப்படவுள்ளனர்
புனர்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னாள் விடுதலைப்புலிகள் அமைப்பின் மேலும் ஐந்நூறுபோராளிகள் எதிர்வரும் 4ஆம் திகதி சனிக்கிழமை பெற்றோர் மற்றும் உறவினர்களிடம்ஒப்படைக்கப்படவுள்ளனர்.
வியாழன், 26 ஆகஸ்ட், 2010
17ம் ஆண்டு நினைவுநாள்
கிளாலி கடல்நீரேரியில் போக்குவரத்தில் ஈடுபட்டிருந்த மக்கள் மீது தாக்குதல் நடத்தவந்த சிறிலங்கா கடற்படையினர் மீது தாக்குதலை மேற்கொண்டு இரு நீரூந்து விசைப்படகுகளை மூழ்கடித்து வீரகாவியமான கடற்கரும்புலிகள் மேஜர் நிலவன்(வரதன்) மற்றும் கப்டன் மதன் ஆகியோரின் 17ம் ஆண்டு நினைவுநாள்(26.08.1993) இன்றாகும்
மேஜர் நேரியன்..
ஓ.... அந்த நாள் எங்கள் இதயத்தை இடி வந்து தாக்கிய நாள் எம்முயிர்த் தோழன் விதையாகிப் போன செய்தியது. எம் செவிப்பறையை அதிரவைத்த நாள். எம் வாழ்வுக் காலமதில் காலக்கடல் கரைத்துச் சென்ற நாட்களில் சோகத்தின் எல்லையைத் தொட்ட நாள். நீளும் எங்கள் இவன் கனவினை வாழ்வில் சுமப்போம். என்பதை எங்கள் எழுத்தால் மட்டுமல்ல எம் உள்ளத்தாலும் உறுதியெடுத்துக் கொள்ளும் நாள். எனம் கரம் பிடிக்கும் எழுது கோலால் இவன் வாழ்வினை முழுமையாக வரைந்திட முடியாது. என்றாலும் எழுதத் துடித்தது எம் மனம். சிறு துளியென்றாலும் உன்னால் முடிந்ததை எழுது என்றது. இவன் வீர வரலாற்றில் துளிகள் இங்கே.........
மருத்துவ பீட மாணவன் சாரங்கன் தற்கொலையா.? கொலையா ?
வைத்தீஸ்வரன் - சாரங்கன் கடந்த பொது தேர்தலின் போது ஈ.பி.டி.பி அமைப்பிற்கெதிரான பிரச்சார வேலைகளை முன்னின்று செயற்படுத்தியொருவர் ஜனாதிபதி ராஜபக்சவினால் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்க்கு எதிராக யாழ் குடா நாட்டில் களமிறக்கபட்ட அங்கஜன் - இராமநாதனின் நெருங்கிய நண்பனே மாணவன் சாரங்கன் என்பதும். ஜனாதி பதிராஜபக்சவினால் அண்மையில் யாழ் மாவட்ட சுதந்திர கட்சி அமைப்பாளராக அங்கஜன் தெரிவு செய்யபட்ட நிலையில் அவரின் நெருங்கிய நண்பனின் மரணம் பல்கலைகழக மாணவர்கள் மத்தியில் பலத்த சந்தேகங்களை எழுப்பியுள்ளது
புதன், 25 ஆகஸ்ட், 2010
தமிழர்களின் நிலைவரத்தை ஆராய................?
இலங்கைத் தமிழர்களினதும் இடம்பெயர்ந்த மக்களினதும் நிலைவரத்தை நேரில் ஆராய்வதற்காக இந்தமாத இறுதியில் இலங்கைக்கு தான் பயணம் மேற்கொள்ள விருப்பதாகவும் அதற்கு முன்னர் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் கொழும்புக்குச் செல்வாரெனவும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா அறிவித்திருக்கிறார்.
மட்டக்களப்பிலிருந்து இளம் பெண்களை தென் பகுதிக்குக் கூட்டிச் செல்லும் முயற்சி தடுக்கப்பட்டது
மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த இளம் பெண்களை தென்பகுதிக்கு அழைததுச் செல்லும் முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டது. தென்னிலங்கையிலுள்ள ஆடைத் தொழிற்சாலைகளில் வேலை வழங்குவதாகக் கூறி ஆடைத் தொழிற்சாலை நிறுவனங்களைச் சேர்ந்த சிலரால் இப்பெண்கள் அழைத்துச் செல்லப்படவிருந்தனர்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)















