திங்கள், 29 மார்ச், 2010

"உங்களின் அரசியல் நலன்களுக்காக விடுதலைப் புலிகளை விலை பேசுவது" நியாயமா........?

ஈபிடிபியின் கைங்கரியம் தொடர்கிறது!!

வவுனியாவில் இளைஞர் ஒருவரை ஓட ஓட அடித்து படுகொலை செய்ததன் மூலம் ஈபிடிபின் வழுமையான முகம் மீண்டும் வெளிப்பட்டுள்ளது. வவுனியா சாந்தசோலையைச் சேர்ந்த தங்கராசா கிருஸ்ணகோபால் என்ற இளைஞரை ஈபிடிபியின் 20 பேர் அடித்துக் கொலை செய்த சம்பவம் தொடர்பில் வவுனியாவில் கொதிப்பு நிலை ஏற்பட்டுள்ளது. தங்கராசா குடும்பத்தினரது ஒரே ஒரு பிள்ளையான கிருஸ்ணகோபால் என்ற இளைஞருக்கு நேற்று பிறந்தாள் நடைபெறவிருந்தது. இந்த நிலையில் அவரது பிறந்தநாள் குறித்து அறிந்த ஈபிடிபியினர் தமக்கு மதுபானம் வாங்கித் தருமாறு வற்புறுத்தி அவரை மதுசாலைக்கு அழைத்திருக்கின்றனர். அங்கு சென்ற இருபது ஈபிடிபியினர் மது அருந்தியிருக்கின்றனர். இதனை அடுத்து மதுப் போத்தலால் கிருஸ்ணகோபாலின் தலையில் தாக்கியிருக்கின்றனர். சம்பவத்தை அடுத்து கிருஸ்ணகோபால் வவுனியாவின் வீதி வழியாக ஓடியிருக்கின்றார். அவரை இருபது ஈபிடிபியினரும் துரத்திச் சென்றுள்ளன். வீதியில் அலறியபடி ஓடிய கிருஸ்ணகோபாலது செருப்பு அறுந்ததில் அவர் நிலை தடுமாறி நிலத்தில் வீழ்ந்துள்ளார்.அவரை சுற்றிவளைத்துத் தாக்கிய ஈபிடிபியினர் அருகில் இருந்த எல்லைக் கலினைத் தூக்கி கிருஸ்ணகோபாலது தலையின் மீது போட்டிருக்கின்றனர். சம்பவம் இடம்பெற்ற பகுதியில் உள்ள வீட்டு உரிமையாளர்கள் அவசர சேவைப் பிரிவிற்கு அறிவித்திருக்கின்றனர். அதன் பின்னர் சம்பவ இடத்திற்குச் சென்ற நோயாளர் காவு வண்டி கிருஸ்ண்கோபாலனை மருத்துவமனைக்கு ஏற்றிச் சென்றுள்ளது. படுகாயம் அடைந்த அவர் தன்னை ஈபிடிபியினரே தாக்கியதாக சிறீலங்கா காவல்த்துறையினரிடம் வாக்குமூலம் வழங்கியிருக்கின்றார். இதேவேளை வவுனியாவில் இளைஞர்கள் ஈபிடிபியினர் மீது தாக்குதல் நடத்தப் போவதாக கொதிப்படைந்து உள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. வவுனியாவில் இளைஞர் ஒருவரை ஓட ஓட அடித்து படுகொலை செய்ததன் மூலம் ஈபிடிபின் வழுமையான முகம் மீண்டும் வெளிப்பட்டுள்ளது. வவுனியா சாந்தசோலையைச் சேர்ந்த தங்கராசா கிருஸ்ணகோபால் என்ற இளைஞரை ஈபிடிபியின் 20 பேர் அடித்துக் கொலை செய்த சம்பவம் தொடர்பில் வவுனியாவில் கொதிப்பு நிலை ஏற்பட்டுள்ளது.