சனி, 4 செப்டம்பர், 2010

போலீஸ்காரனாக நடந்து கொள்ள முடியாது. ஆனால் கொலைகாரனாக மட்டும் நடந்து கொள்ள முடியுமா?..

“ஈவிரக்கமின்றி தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சேவின் சகோதரர் பசிலை ‘கிங்’ என அழைக்கிறார் டி.ஆர்.பாலு. டி.ஆர்.பாலுவின் உண்மையான மனநிலை என்ன என்பதை வெளிப்படையாக அறியமுடிகிறது. ஆக ராஜபக்சே குடும்பத்தினருடனும் அவர் நல்லுறவு கொண்டிருக்கிறார் என்பதையும் இந்த பதில் வெளிப்படுத்துகிறது,” என்கிறார்கள் தமிழுணர்வாளர்கள்!


சூரிய ஒளி சக்தியில் மொபைல் போன்.

சூரிய ஒளி  சக்தியில் இயங்கும், மொபைல் போன் ஒன்றை இந்தியாவில் " வோடபோன் " நிறுவனம், விற்பனைக்குக் கொண்டு வருகிறது. VF 247 என அழைக்கப்படும் இந்த போன், கிராமங்களில் வாழும் மக்களுக்கு, எப்போதாவது ஒருமுறை மின்சாரம் பெறும் கிராமங்களுக்கு ஒரு பெரிய வரப்பிரசாதமாக இருக்கும். இந்த போனை சார்ஜ் செய்வதற்கு மின் இணைப்பே தேவையில்லை. ஏற்கனவே, ஓர் ஆண்டுக்கு முன் "சாம்சங் "நிறுவனம், இதே போன்றதொரு மொபைல் போனை Guru 1107 என்ற பெயரில் இந்தியாவில் அறிமுகம் செய்திருந்தது. "வோடபோன் '"தரும் இந்த போனை நல்ல ஒளியில் வைத்திருந்தாலே போதும். தானாகவே சார்ஜ் செய்து கொள்கிறது.

லெப்.கேணல் கிறேசி

தமிழீழ தேசத்தில் எங்கெல்லாம் ஆக்கிரமிப்பு இராணுவங்கள் நிலைகொண்டுள்ளதோ அங்கெல்லாம் அவரது சுடுகலனும் கனன்றிருக்கும். களமுனைகளில் தொடர்ச்சியாக ஓய்வு , ஒளிச்சலின்றி சுழன்றடித்த வீரன் அவர். "செய்வோம் அல்லது செத்து மடிவோம்" என்ற வசனத்தை அடிக்கடி சொல்பவர், அதனைச் செயலிலும் செய்து காட்டியவர். எந்த நேரமும் இயக்கத்தின் நலனையே சிந்தித்து செயலாற்றிய மண்ணின் மைந்தன் அவர். கிளிநொச்சிப் பிரதேசத்தில் எண்பதுகளின் நடுப்பகுதி தொடங்கி, தொண்ணுறுகளின் ஆரம்பம் வரைக்கும் சிறீலங்கா இராணுவத்திற்கு எதிரான அனைத்துத் தாக்குதல்களிலும் காத்திரமான பங்கை லெப். கேணல் கிறேசி வகித்துள்ளார்.