மஹிந்த அரசு வெளியில் சிங்கள மக்களிடம் தம்மை ஓர் அனைத்துலகத்திற்கு அடிபணியாத தலைமைத்துவம் என்று காட்டிக்கொண்டிருந்தாலும் உள்ளுக்குள்ளே பீதியடைந்த நிலையிலேயே காணப்படுகின்றது.
தமிழ் மக்களின் விடுதலைப்போராட்டத்தினை பயங்கரவாதம் என்று சர்வதேச சக்திகளை உள்வாங்கி தமிழர்களது போராட்டத்தினை ஒடுக்கியது போன்று
இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....