புதன், 24 மார்ச், 2010

தலைவன் வழிகாட்டுதலில் தொடர்ந்து போராட வேண்டியதன் அவசியம்.

ஈழ விடுதலைப்பயனத்தில் மீண்டும் உறுதியான, தெளிவான முடிவினை அறுதியிட்டு பதிவுசெய்து அந்நிய ஆக்கிரமிப்பிற்குள் சிறைவைக்கப் பட்டிருந்தாலும் தலைவன் வழிநிற்கும் புலிகள் சேனை என தலைநிமிர்ந்து நிற்கின்றனர் எம்தேச மக்கள். சிறிலங்காவின் ஆறாவது சனாதிபதியை தெரிவுசெய்வதற்கான தேர்தல்களமானது எமக்கான உண்மையான உறுதியான ஒரே தலைமை தமிழீழ விடுதலைப்புலிகள்தான் என்பதனை ஏற்கமறுத்தவர்களையும் மறுப்பவர்களையும் தலைகுனியவைத்து தமிழ்தேசம் தலைநிமிர வைத்துள்ளது. இவ்வாறான தீர்ப்பினை நிச்சயமாக எதிர்வரும் பொதுத் தேர்தலிலும் எமது மக்கள் பதிவு செய்து தேசத்தை விலைபேச முற்பட்டவர்களை நிராகரிப்பது உறுதி. இந்த நூற்றாண்டு கண்டிராத வரலாற்றுத் துயரத்தை முள்ளிவாய்காலில் அரங்கேற்றி எமது சொந்தங்களை வேட்டையாடி எமது தேசத்தை சுடுகாடாக்கி எஞ்சியவர்களை ஒருவேளை சோற்றிற்கும் ஒருவாய் தண்ணீருக்கும் கையேந்துபவர்களாக முற்கம்பி வதைமுகாமில் சிறைவைத்தும் தமிழீழ மீட்புப் பணியில் தலைவன் வழிநின்று சமராடிய வீரப் புதல்வர்களை கொடும்சிறை வைத்து வரும் வேளை அதற்கு காரணகர்த்தா யார் என்பதனை மக்கள் தீர்ப்பின் மூலம் உறுதிசெய்து கொள்வதற்காக கடந்த சனவரி 26ம் நாள் சிறிலங்காவே அமர்களப்பட்டு ஓய்ந்து போய் தற்போது தலைகீழ் மாற்றம் கண்டுள்ளது. தமிழின அழிப்பினையும் தமிழீழ விடுதலைப்புலிகளது பலத்தினை முற்றுமுழுதாக அழித்தொழித்து விட்டதனையும் மூலதனமாகக் கொண்டு மகிந்த ராசபக்ச இக்களத்தில் முதன்மையானவராக குதித்த வேளை யாவற்றிலும் உடனிருந்த முன்னால் இராணுவத்தளபதியும் கட்டளை அதிகாரியுமான சரத்பொன்சேகா எதிர்பாராத வகையில் எதிர்க்களம் புகுந்து சிங்களம் இரண்டுபட்டு நிற்பதை உறுதிப்படுத்தியிருந்தார். இவ்வேளை அடையாளம் இழந்துபோயிருந்தவர்களை ஒருங்கினைத்து தமிழர் தரப்பின் அரசியல் தலைமையாக்கி அவர்களுக்கு தேர்தல் மூலம் அங்கீகாரம் கிடைக்க தமிழீழ தேசியத் தலைமை வாய்ப்பளித்திருந்தமையால் இம்முறை அதிக முக்கியத்துவம் வாய்ந்தவர்களாக விளங்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தடுமாற்றமான போக்கினை வெளிப்படுத்தி மீண்டு;ம் ஒருதடவை தமிழர்களால் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். கடந்த 2005இல் சனாதிபதித் தேர்தலை புறக்கணிப்பது என தமிழீழ தேசியத்தலைமை எடுத்த முடிவு தவறானது எனவும் அதனாலேயே இன்றைய அழிவு, அவல நிலை ஏற்பட்டது என்றும் அவற்றை நிவர்த்தி செய்யப்போவதாகவும் தனியாவர்த்தனம் செய்ய முற்பட்ட சம்பந்தனின் முகத்தில் கரியை அள்ளிப் பூசியுள்ளனர் தமிழ் மக்கள். எதிர்பார்ப்புக்கள், நம்பிக்கைகள், எதிர்வு கூறல்களைக்கடந்து சிறிலங்காவின் ஆறாவது சனாதிபதியாக சிங்கள மக்கள் தமக்கான தலைவராக மகிந்த ராசபக்சவினை தேர்ந்தெருத்திருந்தனர். மகிந்தவின் இந்த வெற்றிக்கு பல காரணங்கள் இருந்தாலும் சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்த நிலைப்பாடும் ஒரு காரணமாக அமைந்துவிட்டது. கடந்த 2005 இல் நடைபெற்ற சனாதிபதித் தேர்தலில் 48இலட்சத்து87ஆயிரத்து162 வாக்குகளையும், போர் வெற்றியையும் தமிழின அழிப்பினையும் முக்கிய சாதனையாக காண்பித்து சமகாலத்தில் நடாத்தப்பட்ட மாகாணசபைத் தேர்தல்களில் சுமார் 50இலட்சம் வாக்குகளையும் பெற்றிருந்த மகிந்த ராசபக்ச இம்முறை 60இலட்சத்து15ஆயிரத்து934 வாக்குள் பெற்றதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் நிலைப்பாடே காரணமாக அமைந்திருந்தது என்றால் மிகையாகாது. சிங்கள மக்கள் தெளிவானவர்கள். தமக்கான தலைவனாக மகிந்த ராசபக்சவை தேர்ந்தெடுத்திருந்தமையால் பொன்சேகா ஒன்றும் குறைந்தவர் அல்ல. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு பொன்சேகாவை ஆதரிப்பது என்று முடிவானபின்னர் அதுவரைகாலமும் சிங்கள மக்களது கதாநாயகனாக விளங்கிய பொன்சேகா துரோகியாக மாறிவிட்டார். இதுவே மகிந்தவை வெற்றிபெற இலகுவாக்கியது. பிரதான இனவாதக் கட்சிகள் புடை சூழ போட்டிக்களத்தில் எதிர்நின்ற பொன்சேகாவை கண்டு ஒருகணம் மகிந்த ராசபக்சவே மிரண்டுதான் போயிருந்தமை தேர்தல் முடிவு வெளியாகும் நாளுக்கு முன்புவரை அவரது தோல்விப்பயம் கவ்விய முகமும் பதட்டமான நடவடிக்கையுமே வெளிப்படுத்தியிருந்தது. 2002ல் போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டதை காரணம்காட்டி நாட்டை இரண்டாகப்பிரித்து புலிகளிடம் தாரைவார்த்துவிட்டதாக ரணிலை துரோகியாகக் காட்டி 2005ல் வெற்றி பெற்ற மகிந்தவிற்கு இம்முறை கூட்டமைப்பினருடனான மறைமுக உடன்படிக்கை பேருதவி புரிந்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் சேர்ந்து நாட்டை காட்டிக்கொடுத்துவிட்டதாக மேற்கொண்ட பரப்புரை காரணமாக சிங்கள மக்கள் சரத்பொன்சேகாவை நிராகரித்து மகிந்த ராசபக்சவே தமக்கான சரியான தலைவனாக தெரிவுசெய்துள்ளனர். சுருங்கக் கூறின் சிங்களத்தின் கதாநாயகனை துரோகியாக மாற்றி தோல்வியடையச் செய்த பெருமை சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பையே சாரும். இந்தப் பெருமைக்குரிய சம்மந்தனின் செயற்பாட்டின் எதிர்வினையாக தமிழ்மக்கள் எதிர்கொள்ளப் பேகும் நிலை மிகவும் ஆபத்தானதாகும். எதிரியின் கொடிய வதைகளிற்குள்ளாகிய நிலையிலும் எதிரியின் முற்றுகைக்குள் இருக்கின்ற போதும் தமிழ்த் தேசியத்தின்பால் தாம் வைத்திருக்கும் உறுதியை வாக்களிக்கச் செல்லாது வெளிப்படுத்தியிருக்கும் எமது மக்கள் தற்போதும் எதிர் நோக்கிவரும் கடத்தல் கைதுகள் மூலம் காணாமல்போகும் சம்பவங்களும் மர்மக் கொலைகளுக்கும் எதிர்வரும் நாடகளில் எதிர்கொள்ளப்போகும் யாவற்றிற்கும் சம்மந்தனே பொறுப்பாளியாவார். பொதுவான ஒரு களத்தில் மக்களை வழிநடத்தாது தோல்வியைத் தழுவி தன்னையே காத்துக்கொள்ள முடியாது தற்போது சிறைக்கம்பிகளை எண்ணிக்கொண்டு இருக்கும் சரத்பொன்சேகாவினை ஆதரிப்பது என்ற நிலைப்பாட்டினை எடுத்து குறிப்பிட்ட மக்களையும் அதற்கேற்றவாறு வழிநடத்தி மகிந்தவின் கொலைவெறிப் பார்வைக்கு உள்ளாக்கியுள்னதன் விளைவுகள் என்னவாக இருக்குமோ என்பதை சிந்திக்கும் போது கலக்கமேற்படுகின்றது. முட்கம்பி வதைமுகாமில் சிறைவைக்கப்பட்டுள்ள ஒரு இலட்சத்து ஐம்பதாயிரத்திற்கு மேற்பட்ட மக்களும் சிறப்பு தடுப்பு முகாம்கள் என்ற போர்வையில் தனித்தனியாகவும் குழுவாகவும் அடைத்து வைக்கப்பட்டு எதிர்காலமே சூன்யமாக்கப்பட்டுள்ள பதின் மூவாயிரத்திற்கு மேற்பட்ட போராளிகளதும் நிலை இனி என்னவாகுமோ என்பதற்கு சம்மந்தனால் பதில் கூறமுடியுமா……? அல்லது அவர்களை விடுவிக்கத்தான் முடியுமா…..? சிறிலங்காவின் ஆட்சிபீடத்திற்கு நடாத்தப்படும் தேர்தல்கள் மூலம் தமிழ்மக்கள் எதனையும் பெற்றுவிட முடியாது அவ்வாறு தெரிவு செய்யப்படுபவர்களும் தமிழ்மக்களிற்கு உரித்தான சுயநிர்ணய உரிமைகளை வழங்கி தனித்துவமாக வாழ வழியேற்படுத்தப் போவதில்லை என்ற நிலையை மெய்ப்பிப்பது போன்றே கடந்த 33வருடங்களாக சிறிலங்காவின் தேர்தல்களை புறக்கணித்து வந்துள்ளனர் எமது மக்கள். இதனை முற்றிலும் உணர்ந்து கொண்டதனால்தான் கடந்தமுறை 2005இல் சனாதிபதித் தேர்தலை புறக்கணிப்பது என்ற முடிவை தமிழீழ தேசியத் தலைமை எடுத்திருந்த தமிழர்களதும் சிங்களவர்களதும் எண்ணங்கள், செயற்பாடுகள் முரண்நிலை கொண்டவை என்பதனையும் அவற்றிற்கான தலைமையும் வேறு வேறுவானவை என்பதனையும் அனைத்துலகத்திற்கு புரியவைப்பதற்கு முற்பட்டிருந்தனர். இம்முடிவுதான் தவறானது எனக்கூறி சரத்பொன்சேகா என்ற சிங்களனை ஆதரிப்பதே சரியானது என மக்களை தவறாக வழிநடாத்த முற்பட்ட சம்மந்தனுக்கு சரியான பாடம் புகட்டியுள்ளனர் தமிழத் தேசியத்தில் வழிநடாத்தப்பட்டுள்ள எம் மக்கள். முள்ளிவாய்காலின் பின்னரான காலப்பகுதியில் ஏற்பட்ட துன்ப துயரங்கள் களையப்பட்டு தத்தமது சொந்த இடங்களில் யாருடைய தலையீடும் இல்லாது சுதந்திரமான நடமாட்ட உரிமையுடன் வாழக்கூடிவாறான சூழல், முட்கம்பி வதைமுகாம்களில் அடைபட்டுள்ள இலட்சத்திற்கு மேற்பட்ட மக்களிற்கு கிடைக்காது விடினும் ஓரளவிற்கேனும் தமது வாழ்வினை மீள அமைத்துக் கொள்வதற்கான வாய்ப்பாக ஒரு ஆட்சிமாற்றத்தினை எதிர்பார்த்திருந்தது என்னவோ உண்மதான். ஆனால் அதற்குமப்பால் தமிழர்கள் ஒன்றுபட்டு ஓரணியில் உள்ளோம் என்பதனை சனநாயக முறைப்படி வெளிப்படுத்த கிடைத்த ஓர் அரிய சந்தர்ப்பத்தினை தவறவிட்டு விட்டோமே என்ற வருத்தம்தான் மேலிடுகிறது. தமிழர் பகுதியல் மிகவும் குறைந்தளவே வாக்குப் பதிவு நடைபெற்றிருந்த போதும் அவற்றில் 70சதவிகிதமான வாக்குகள் சரத்பொன்சேகாவிற்கு கிடைத்துள்ளமையானது தமிழர்கள் பொன்சேகாவை மன்னித்து ஏற்றுக்கொள்ள தயாராக உள்ளனர் என அர்த்தப்படுத்திவிட முடியாது. பிரதான எதிரி மகிந்த ராசபக்சவினை தோற்கடிக்க வேண்டும் என்ற எண்ணமும் தமிழின அழிப்பினை மேற்கொண்டதற்கு எக்காலத்திலும் மன்னிப்பே கிடையாது என்பதனை வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பமாக இந்த சனாதிபதித் தேர்தல்களம் கிடைத்த போது அதனை சரியாக பயண்படுத்திக் கொண்டிருந்தனர் வாக்களித்திருந்த தமிழ்மக்கள். எமக்கான தலைமை வேறு இந்த தேர்தல் சிங்களத்தின் தலைமையினை தேர்வுசெய்யும் களம் என்பதனை பட்டவர்த்தனமாக வெளிப்படுத்தும் முகமாக பெரும்பாலான தமிழ்மக்கள் தேர்தலை புறக்கணித்தும், கிடைத்த சந்தர்ப்பத்தினை பயன்படுத்தி கொலைவெறியன் மகிந்த ராசபக்சவிற்கு எதிரான பழிவாங்கும் உணர்வு அணையாத் தீபமாக எம்மனங்களில் கணன்று கொண்டிருக்கின்றது என்பதனை வெளிப்படுத்தும் விதமாக வாக்களித்திவர்களில் பெரும்பாலானவர்கள் சரத்பொன்சேகாவை ஆதரித்து வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. மக்களது இந்த மன உணர்வினை சரியான முறையில் இனம் கண்டு தமிழர் தரப்பு பொதுவேட்பாளராக சிவாசிலிங்கத்தை முன்னிறுத்தி இந்தத் தேர்தல்களத்தை எதிர் கொண்டிருந்தால் இன்னும் அதிகமானவர்கள் முன்வந்து வாக்களித்து எமது மக்களின் மனவெளிப்பாட்டினை சனநாயக முறைப்படி பதிவுசெய்ய வாய்ப்பு ஏற்பட்டிருக்கும். அவ்வாறு நடைபெற்றிருந்தால் தமிழ்மக்கள் இன்று எதிர் நோக்கியருக்கும் அச்சுறுத்தல் நிலையினை தவிர்த்திருக்கராம் அல்லவா….? இந்த அரியவாய்பினை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு சரியானமுறையில் கையாளாது விட்டதனால் மகிந்த ராசபக்சவின் கொலைவெறிப் பார்வை இன்னும் வீரியம் பெற்று எமது மக்களை நோக்கித் திரும்பியுள்ளது. அது எப்போது எவ்வாறு உருவம்பெற்று மீண்டும் தமிழர்களை தாக்கும் என்ற அச்சத்துடன் வாழவேண்டிய நிலைக்கு சம்மந்தன் தலைமையிலான கூட்டமைப்பின் தவறான நிலைப்பாடே காரணமாகும். சனநாயக முறைப்படி தேர்தல்கள்த்தில் குதித்த எதிரணி வேட்பாளரையும் அவர்சார்ந்தவர்களையும் பரம எதிரியாகக் கருதி உயிரச்சத்தை விளைவிதிருக்கும் போதும் எதிர் வேட்பாளரை கைது செய்து சகல வழிகளிலும் முடக்கப்பட்டு கொடுஞ்சிறை வைத்திருக்கும் போது தமிழர்கள் எம்மாத்திரம். சிங்களத்தின் கதாநாயகனாக விளங்கிய சரத்பொன்சேகாவுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட சிறுபான்மை கட்சிகள் அணிசேர்ந்து கொண்டபின்னர் சிங்களவர்களது தனிப்பெரும் தலைவன் மகிந்தராசபக்ச தான் என்ற நிலை ஏற்பட்டுள்ளமை மறுக்கமுடியாத உண்மையாகும். ஆட்சி அதிகார வெறியில் ஊறிப்போயுள்ள மகிந்த ராசபக்ச சகோதரர்களது கையில் சிறிலங்காவின் அதியுச்ச அதிகார பீடங்கள் சிக்கிக் கொண்டிருந்தமையும் இந்த அசாத்தியமான வெற்றிக்கு வாய்ப்பாக அமைந்துள்ளது. எந்தெந்த வகைகளில் சட்டமீறல்களை, அதிகார முறைகேடுகளை, வன்முறைகளை கட்டவிழ்த்து தமக்கு சாதகமான முடிவினை நோக்கி மக்களது தீர்ப்பினை வளைத்துக் கொள்ள முடியுமோ அந்தந்த வழிகளில் எல்லாம் முயற்சி செய்தே இந்த வெற்றியை தமதாக்கிக் கொண்டுள்ளனர் ராசபக்ச சகோதரர்கள். கடந்த இருபது ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிகவும் மோசமன வன்முறை வெறியாட்டங்களிற்கு இடையே இம்முறை சனாதிபதித் தேர்தல் நடைபெற்றுள்ளது. இம்முறை சனாதிபதித் தேர்தலை கண்காணித்த “ட்ரன்ஸ் பரன்ஸி இன்டர் நேசனல்” என்ற தன்னார்வ கண்காணிப்பு அமைப்பின் அதிகாரியான வெலியமூன் இது தொடர்பாக சிங்களப்பத்திரிகையாளர்களிடம் கூறியபோது: ராசபக்சே தேர்தல் நடைமுறைகள் ஆரம்பித்ததில் இருந்து வாக்கு எண்ணிக்கை நடக்கும்வரை அரச இயந்திரத்தை தனது விருப்பப்படி பயன்படுத்தியதாக 427 புகார்கள் எங்களிற்கு வந்துள்ளன, அவரது ஆதரவாளர்கள் தேர்தல்பணியாற்றுவதற்காகவும் வாக்காளர்களை கட்டாயப்படுத்தி வாக்குச்சாவடிகளுக்கு கூட்டிவருவதற்காகாவும் 1024 சிறிலங்கா அரசுப் பேரூந்துகளை பயன்படுத்தியிருக்கின்றார்கள். அதிபர் மாளிகை உள்பட அனைத்து அரச அலுவலகங்களும் ராசபச்சவிற்காக தேர்தல் வேலை பார்த்துள்ளன. இம்முறை நடந்து முடிந்த தேர்தல், வரலாற்றில் மிக மோசமாக நடைபெற்ற தேர்தலாக பதிவு செய்யப்படும் என வெலியமூன் தெரிவித்திருந்தார். இவைதவிர தேர்தலிற்கு முன்கூட்டியே வெற்றிலை சின்னத்திற்கு புள்ளடி போடப்பட்ட நிலையில் உள்ள வாக்குச் சீட்டுக்கள் நிரப்பிய பெட்டிகளை ஏற்றிக் கொண்டு யாழ்ப்பாணம் சென்றது சிறிலங்கா இராணுவவாகனங்கள். எதிர்பாராத விதமான விபத்து சம்பவத்தினை அடுத்து இந்த திருட்டுத்தனம் அம்பலமாகியிருந்தது. தமிழர் பகுதியிலையே இவ்வாறு சித்து வேலைகளை காட்டமுற்பட்ட ராசபக்சே கும்பலுக்கு சிங்களப்பகுதியில் மேற்கொள்வது என்பது கடினமானதாக இருந்திருக்காது, இருக்காது. தீவிர இனவாதவெறியில் ஊறித்திழைத்திருக்கும் சிங்கள மக்களின் வாக்குகள் இருவருக்கும் இடையே பிரிக்கப்பட தமிழர்களது வாக்கே வெற்றியைத் தீர்மாணிக்கும் என்ற நிலை நடந்து முடிந்த சனாதிபதித் தேர்தல் களத்தில் ஏற்பட்டிருந்தது யாவரும் அறிந்ததே. இன்று பலர் இந்த கூற்றை மறுதலிக்க முற்பட்டு தமது புலமையினை காட்டமுற்பட்டுள்ளமை வேடிக்கையாக உள்ளது. மேற் கூறப்பட்ட நிலையே உண்மையாகும். ஏறத்தாள 35இலட்சத்திற்கு மேற்பட்டதாக இருந்த சிறுபான்மை இனமக்களான தமிழர், இசுலாமியர்களது வாக்குள் முழுவதுமாக பதிவாகியிருக்குமாயின் நிலைமையே தலைகீழாக மாறியிருக்கும் என்பதே உண்மையாகும். இதனை உணர்ந்து கொண்டதனால்தான் தமிழர் பகுதிகளில் அச்ச கூழ்நிலையினை தோற்றுவித்து முழுமையாக வாக்குப்பதிவு நடைபெறாது பார்த்துக் கொண்டதுடன் தமது வெற்றியையும் உறுதி செய்து கொண்டுள்ளனர் கொலைவெறி பிடித்த மகிந்த சகோதரர்கள். இதற்கு எலும்பு பொறுக்கிகளாக அவர்களது காலை சுற்றிவரும் துரோகிகள் குழுக்களும் உடந்தையாக இருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இதனை உறுதிப்படுத்துவது போலவே தமிழர் பகுதி வாக்குப்பதிவு முடிவுகள் அமைந்துள்ளன. யாழ்ப்பாணத்தில் வாக்களிப்பு தினத்தன்று அதிகாலைவேளை 13இடங்களில் குண்டுவெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றதும் பேரூந்து சேவைகள் முற்றாக நிறுத்தப்பட்டு ஒருவித அச்சுறுத்தலான சூழ்நிலை ஏற்படுத்தப்பட்டிருந்த போதும் அளிக்கப்பட்ட வாக்குகளில் ராசபக்சவினை விட கிட்டத்தட்ட மூன்று மடங்கு வாக்குகள்(ஒரு இலட்சத்து ஏழாயிரம் வாக்குகள்) பொன்சேகாவிற்கு ஆதரவாக பதிவு செய்யப்பட்டிருந்தது. கள்ளவாக்கு போடுவதற்காக இருபதிற்கு மேற்பட்ட சிங்களக் காடையர்கள் கிளிநொச்சியில் கொண்டுவந்து இறக்கப்பட்டிருந்தமை பண்டாரிக்குளம் கிராமத்தில் பத்தாயிரத்திற்கு மேற்பட்ட மக்களை வாக்களிக்கச் செல்லவிடாது சிறிலங்கா இராணுவத்தினரால் தடுத்து நிறுத்தப்பட்டிருந்தமை ஒட்டுக் குழுக்களின் அடாவடி என வன்னி மாவட்டத்தில் சனநாயகம் காற்றில் பறக்கவிடப்பட்ட நிலையிலும் கொலைபாதகன் மகிந்தவை விட(24ஆயிரம்) சுமார் மூன்று மடங்கு (61ஆயிரம்) வாக்குகள் சரத்பொன்சேகாவிற்கு ஆதரவாக பதிவு செய்யப்பட்டிருந்தது. இதேபோன்று சரத்பொன்சேகாவை ஆதரித்த முசுலீம் காங்கிரசு செல்வாக்கு மிக்க பகுதிகளில் அதிகாலைமுதல் இராணுவ கவசவாகனங்களையும் இராணுவத்தினரையும் நிறுத்தி போர்ச் சூழலை ஏற்படுத்தியிருந்த நிலையிலும் அளிக்கப்பட்ட வாக்குகளில் மூன்றில் இரண்டு மடங்கு வாக்குள் சரத்பொன்சேகாவிற்கு ஆதரவாக பதிவு வெய்யப்பட்டிருந்தது. மலையகப்பகுதி உள்ளிட்ட இதர தமிழர் பகுதிகளிலும் இதே நிலைதான் வெளிப்படுத்தப்பட்டிருந்தது. மொத்தமாக 35இலட்சம் வாக்குப்பலத்தினை கொண்டிருந்த சிறுபான்மை இன தமிழர், இசுலாமியர்களில் ஆறு இலட்சம் பேரே இம்முறை சனாதிபதித் தேர்தலில் வாக்க்ளித்திருந்தனர். அதிலும் 70சதவிகித வாக்குள் சரத்பொன்சேகாவிற்கு ஆதரவாகவே அளிக்கப்பட்டிருந்தது. சரத்பொன்சேகா பெரும்பான்மை வாக்குகள் பெற்ற ஆறு மாவட்டங்களில் தமிழர்கள் அதிகமாக வாழும் யாழ்ப்பாணம், வன்னி, திருகோணமலை, மட்டக்களப்பு உள்ளிட்ட தமிழர்களின் தாயக பூமியான வடகிழக்கு பகுதியில் உள்ள ஐந்து மாவட்டங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சரத்பொன்சேகாவை தமிழர்கள் ஏற்றுக்கொண்டதனாலோ….. அதிகப்பிரசங்கி சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பினரின் வழிகாட்டுதலை ஏற்றுக் கொண்டதனாலோ தாயக மக்கள் இந்த முடிவை வெளிப்படுத்தவில்லை என்பதனையும் மாறாக தலைவணங்கா தேசமாக விளங்கிய வன்னியை சுடுகாடு ஆக்கி எமது இனத்தையே கொன்று குவித்த கொலைபாதகன் மகிந்தராசபக்சவையும் அவனது சகோதரர்களையும் பழிவாங்கவதற்காகவும் தமது எதிர்ப்புக்களை தெரிவிப்பதற்காகவுமே இந்த முடிவை வெளிப்படுத்தியுள்ளனர் என்பதனை இந்த அதிமேதாவிகள் புரிந்து கொள்ள வேண்டும். மேற் சொன்னவை வெறும் வாதத்திற்காக முன்வைக்கவில்லை. தேர்தல் வாக்களிப்பு சூன்யமாக்கப்பட்டால் உடனடியாக மறுதேர்தல் நடாத்தப்படும் என மிகக்கடுமையாக கருத்துத் தெரிவித்த தேர்தல் ஆணையாளர் தயானந்த திசநாயக்க தேர்தல் நிறைவடைந்த பின்னர் துண்டைக்காணோம் துணியைக் காணோம் என கதறித்துடித்து புலம்பியது மேற்சொன்னவற்றின் அடிப்படையிலே ஆகும். கடந்த சில தினங்களாக எனக்குத் தரப்பட்ட அழுத்துங்களும் நெருக்கடிகளும் மிரட்டல்களும் தாங்கமுடியாதவை எனது வரலாற்றில் இத்தகைய அழுத்தங்களை முன்னெப்போதும் நான் சந்திக்கவில்லை. நான் தேர்தல் ஆணையாளராக எட்டுவருடங்கள் கடமையாற்றியிருக்கின்றேன். இப்போது எனது பதவியில் இருந்து என்னை விடுவிக்குமாறு நான் வேண்டுகிறேன். வாக்குகள் எண்ணப்படும் வேளை பலர் மிரட்டப்பட்டனர். புத்தளம் அனுராதபுரம் மாத்தளை ஆகிய பகுதிகளில் தேர்தல் நடைமுறைகளை அமுல்படுத்த விடாமல் தேர்தல் பணியாளர்களும் அதிகாரிகளும் தடுக்கப்பட்டனர். இனியும் இந்தப்பதவியில் நீடிப்பது பொருத்தமாக இருக்காது என்றே கருதுகின்றேன். இனியும் என்னால் நெருக்கடிகளை சமாளிக்க முடியாது. இந்த அறிக்கைக்குபின்னர் எனக்கு என்ன நடக்கும் என்பது தெரியவில்லை. எவ்வளவு விரைவாக இந்தப் பொறுப்பில் இருந்து எ;னனை விடுவிக்க முடியுமோ அவ்வளவு விரைவாக விடுவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன். நடந்து முடிந்த சனாதிபதித் தேர்தல் எவ்வளவு மோசமான சூழலில் நடந்து முடிந்துள்ளது என்பதற்கு இதைவிட என்ன சாட்சியம் வேண்டும். இவ்வாறு கதறிய தேர்தல் ஆணையாளரிற்கு என்ன நிர்ப்பந்தம் ஏற்படுத்தப்பட்டதோ… அடுத்து நடைபெற இருக்கும் பொதுத் தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார்…. எல்லாம் மகிந்தவின் திருவிளையாடல்களே….! உலகில் எங்குமே நடந்திராதவாறு எதிரணி வேட்பாளரையும் அவரது ஆதரவாளர்களையும் தேர்தல் தலைமை ஆணையாளரையும் உயிர்ப்பயம் கொள்ளச் செய்யும் அளவிற்கு மகிந்தவின் ஆட்சி சிறிலங்காவில் அமைந்துள்ளது என்றால் ஏற்கனவே கேட்பாரற்று தமது விருப்பப்படி கொன்று குவிக்கப்பட்டுவந்த தமிழர்களது நிலை என்னவாக இருக்கும் என்பதே உலகத்தமிழர்களது தீராத கவலையாகவும் முடிவு காணமுடியாத அச்சமாகவும் உள்ளது. சிங்களத்திற்கு சேகவம் செய்து தமது எஞ்சிய காலத்தை விரையமாக்கிவரும் டக்ளசுகளையும், கருணாக்களையும், பிள்ளையானகளையும் இந்தத் தேர்தல் மூலம் தூக்கியெறிந்துள்ள எங்கள் மக்கள் கூத்தடிக்கும் சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பினையும் நிராகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அமைச்சுப்பதவிகளை வைத்துப் பல சலுகைகளை காண்பித்து தமது ராசவிசுவாசத்தை காட்டமுற்பட்ட டக்ளசை யாழ்மக்கள் எவ்வாறு நிராகரித்தார்களோ அவ்வாறே தலைவன் நம்பிய தளபதிகளில் ஒருவனாக இருந்து தமிழினத் துரோகியாக மாறி சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் உபதலைவர் என்ற பதவியை அலங்கரித்த கருணாவும் கழிப்பறை கட்டுவதற்கே பசில்ராசபக்சவிடம் அனுமதி வேண்டி தவம் இருக்கும் கிழக்குமாகாண முதலமைச்சர் பதவியை அலங்காரம் செய்யும் பிள்ளையானும் அரும்பணியாற்றிய நிலையிலும் கூட மட்டக்களப்பு மாவட்டத்தில் வாக்கிளத்தவர்களில் 69சதவிகிதமான மக்கள் இவர்களை பொருட்டாக கருதாது பொன்சேகாவிற்கு ஆதரவாக வாக்களித்து துரோகத்திற்குரிய தண்டனையினை வழங்கியிருந்தனர். முழுமையாக தமிழர்கள் வாழும் வடக்கு மாவட்டங்களில் 15-20 சதவிகித வாக்குகளே அளிக்கப்பட்டிருந்மை தமிழ்த் தேசியத்தின்பால் வழிநடாத்தப்பட்ட மக்கள் தெளிவாக உள்ளதை அறிந்து கொள்ள முடிகின்றது. கடந்த முறை 2005இல் சனாதிபதித் தேர்தலை புறக்கணிப்பது என தமிழீழ தேசியத்தலைவர் முடிவெடுத்தது தவறானது என வியாக்கியானம் கூறும் சம்பந்தன் இன்று மக்கள் தன்னிச்சையாக வழங்கியிருக்கும் தீர்ப்பிற்கு என்ன பதில் சொல்லப் போகின்றார். தமிழீழ தனியரசே தமிழர்களுக்கு தீர்வாக அமையும் என்பதில் எனக்கு உடன்பாடில்லை. அதனை நான் எப்போதும் ஆதரித்தது கிடையாது என இன்று பிதற்றும் சம்பந்தன் இதனை தேர்தலுக்கு முன்பு தெளிவாக கூறியிருந்தால் துரோகிகளுக்கு வழங்கியதைவிட மிக அருமையான தீர்ப்பினை பதிவு செய்திருப்பார்கள் தன்மானம் காக்கும் தலைவனின் வழிநிற்கும் தாயகமக்கள். புலத்திலே உருப்பெற்றுவரும் அரசியல் தலைமைத்துவத்தின் வளர்ச்சியே சம்மந்தனை இவ்வாறு தடுமாறவைக்கின்றதோ தெரியவில்ல. வட்டுக் கோட்டை தீர்மாணத்தை மீள்வலியுறுத்தி புலம்பெயர் தேசமெங்கும் நடாத்தப்பட்டுவரும் வாக்கெடுப்பில் வரலாறுகாணாத தீர்ப்பினை புலம்பெயர்வாழ் ஈழத்தமிழர்கள் பதிவு செய்து தமிழீழ தனியரசே எமது விருப்பு என உலக அரங்கில் பறைசாற்றி வரும் நிலையில் சம்பந்தன் எடுத்துவரும் முரண்நிலை பற்றி வேறுஎன்ன சொல்ல. நாடுகடந்த தமிழீழ அரசை நிறுவி அரசியில் ரீதியாக எமது தாயக மீட்பு போராட்டத்தை அனைத்துலக மன்றங்களில் முன்னெடுத்துச் செல்வதற்கு தயாராகிவரும் வேளை தாயகத்தில் இருக்கும் மக்களும் தாமும் போராட்ட உணர்வு குன்றிப்போகாது விடுதலைவேட்கையுடன இருப்ப்தனை கடந்த சனாதிபதித் தேர்தல் மூலம் வெளிப்படுத்தியிருப்பது எம்மை பன்மடங்கு பலம் மிக்கவர்களாக மாற்றியுள்ளதுடன் வீறுகொண்டு களமாடும் உற்சாகத்தினையும் தந்துள்ளது என்றால் மிகையாகாது. நாம் விரும்பியது போன்றே மேற்குலகமும் சிறிலங்காவில் ஆட்சிமாற்றத்தினை விரும்பியதை நடந்து முடிந்த நடைபெற்றுவரும் ராசதந்திர நகர்வுகள் உறுதிப்படுத்துகின்றன. நான்காம் கட்ட ஈழப்போரின் இறுதிநாட்களில் சிறிலங்கா இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மனித உரிமை மீறல்கள் போன்றவற்றை காரணம் காட்டி தைத்த ஆடைகளுக்கான ஏற்றுமதி வரிச்சலுகையினை இடைநிறுத்துவது என போக்கு காட்டிவந்த ஐரோப்பிய ஒன்றியம் தேர்தல் திகதி நெருங்கிவந்தபோது ஆடை ஏற்றுமதிக்கான வரிச்சலுகை நிறுத்தப்படுவதை உறுதி செய்து கொண்டது. அத்துடன் சிறிலங்கா சனாதிபதி மகிந்த ராசபக்ச மற்றும் அவரது சகோதரரும் பாதுகாப்புத்துறை செயலாளருமான கோத்தபாய ராசபக்ச மீதும் போர்க் குற்றவழக்கு போடுவதற்கான முன்நடவடிக்கைகளில் அமெரிக்க தனது பினாமிகளான உலகமன்றங்கள் சபைகளின் ஊடாக ஈடுபட்டது. அவ்வாறு ஒரு ஆட்சி மாற்றத்தினை விரும்பியதற்கு பிரதானமாக இரண்டு விடயங்கள் நோக்கப்படுகின்றது. அமெரிக்h மற்றும் மேற்குலக நாடுகளிற்கு எதிரான களத்தில் அணிவகுத்துள்ள சீனா, ரசியா, கியூபா, வெனிசுலா, ஈரான், சவுதிஅரேபியா, வியட்னாம் போன்ற பல்வேறு நாடுகளுடன் பகிரங்கமான உறவினை மகிந்தராசபக்ச ஏற்படுத்திவருவதுடன் பல்வேறு ஒப்பந்தங்களை ஏற்படுத்தி உறவினை வலுப்படுத்தி வருகின்றமை முதன்மைக் காரணமாகும். அடுத்து: தெற்காசியப் பிராந்தியத்தில் கால்பதித்து தமது மேலாதிக்கத்தினை நிலைநிறுத்துவதற்கான வாய்ப்பினை, தமிழீழ தேசியத்தலைவர் வே.பிரபாகரன் தலைமையிலான தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் ஆளுகையில் அமையும் தமிழீழ தனியரசு பாதிக்கும் எனக்கருதியதால் முள்ளிவாய்கால் வரை விரட்டி விரட்டி தமிழ் மக்களிற்கு அரணாக விளங்கிய எமது விடுதலைப் போராட்டமும் அதன் கட்டமைப்புகளும் சிதைக்கப்பட்டதற்கும் பல்லாயிரக்கணக்கிலான எமதருமை மக்கள் கொன்றொழிக்கப்பட்டதற்கும் ஒத்தாசை வழங்கியிருந்தன இந்த அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள். ஆண்டாண்டுகளாக எமது மக்கள் ஆண்டு அனுபவித்து வந்த அரசு உலக, பிராந்திய வல்லரசுகளின் விருப்பத்திற்கேற்ப முள்ளிவாய்காலில் சிதைக்கப்பட்டு விட்டாலும் புலத்தில் இருக்கும் தலைமைகளும் மக்களும் புது வேகம் பெற்று புதிய பாதையில் பயணிக்க முற்பட்டுள்ளமை இந்த சக்திகளை மீண்டும் அச்சம் கொள்ளவைத்துள்ளது. அதனால்தான் தமது கைப்பாவையாக செயற்படும் பொன்சேகாவை சிறிலங்காவில் சனாதிபதி பதவியில் இருத்தி தமிழர்களிற்கு தற்காலிக தீர்வை திணித்து தனிநாடு, சுயநிர்ணய உரிமை, வலுவான தலைமை போன்றவற்றின் தேவையை இல்லாது செய்து தமது அச்சுறுத்தலை போக்கிக் கொள்வதற்கு இந்த அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் விரும்பியிருந்தன. அவ்வாறு நடைபெற்றிருந்தால் 2002இல் ஏற்படுத்தப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்த காலப்பகுதியில் எவ்வாறு எமது மக்கள் (வன்னி தவிர்ந்த பிரதேசங்களில் வாழ்ந்த பெரும்பாலான மக்கள்) தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் இருந்து அன்நியப்பட்டு கிடைத்த வாழ்க்கையினை ஏற்றுக் கொண்டு வாழப்பழகிக் கொண்டார்களே… அதுபோன்றே தற்போதும் வெளிப்படையாக சில பல வசதிவாய்ப்புக்களை வழங்கி எம்மமை மந்தைகளாக்கியிருப்பார்கள். தற்போது யாழ்ப்பாணத்தில் வீதிச் சோதனைச்சாவடிகள் பெரும்பாலும் அகற்றப்பட்டும் ஆள் அடையாள அட்டை கொண்டுதிரிய வேண்டியதில்லை நினைத்த உடன் சிறிலங்காவின் எப்பகுதிக்கும் சென்று திரும்பலாம் கொழும்பு கடைகளில் கிடைக்கும் அத்தனை பொருட்களும் யாழ்ப்பாணத்தில் ஒவ்வொரு ஊரிலும் தெருக்களிலும் நடைபாதை கடைகளில் கிடைக்கின்றது இவைதவிர இன்னபிற வசதிவாய்ப்புக்ள் எமது மக்களிற்கு கிட்டியுள்ளன. இவையே போதும் என்னற மனநிலைக்கு எமது மக்கள் இப்போதே வந்துவிட்டனர். புலத்திலிருந்து தொடர்பு கொள்ளும் உறவுகளுடனான உரையாடலில் இதனை வெளிப்படுத்தி வருகின்றனர். இப்போது இங்கு ஒரு பிரச்சினையும் இல்லை…. நீங்கள் ஏன் இன்னும் அங்கை இருந்து கஸ்ரப்படுகிறியள்…. ஊருக்கு வரலாம் தானே… இது போன்ற சில வினாக்களை எழுப்பி தமது நிலையினை வெளிப்படுத்திவருகின்றனர். இவை மேற்சொன்னவற்றை உறுதிப்படுத்துகின்றன. உண்மையில் சொல்லப்போனால் எமது மக்கள் பட்டுவந்த துன்பங்கள் ஏற்படுத்திய தாக்கம்தான் தற்போது ஓரளவு தற்காலிக சுகம் கிடைத்தவுடன் குதூகலிக்க வைக்கின்றது. வீட்டுப் படலையை தாண்டும் போது ஒன்றுக்கு பலமுறை அடையாள அட்டையினை எடுத்துவிட்டோமா என உறுதி செய்து கொண்டு புறப்படும் நிலையும் வீதிக்கு வீதி தெருவுக்கு தெரு இராணுவச் சோதனை சாவடிகளில் குந்தியிருந்து எமது அவசரம் தெரியாது சோதனை என்ற பெயரில் அவதிக்குள்ளாக்கும் சிங்கள இராணுவ வீரர்களது ஆக்கினையினை அனுபவித்தவர்களுக்குத் தெரியும் அதன் தாக்கம். அப்போது மீண்டும் ஒரு போராட்டம் தனி நாடு எனக்கூறிக்கொண்டு அடுத்த கட்டத்தை முன்னகர்த முற்பட்டால் எதுக்கு இவ்களுக்கு தேவையில்hத வேலை நாங்கள் சந்தோசமாக இருப்பது இவர்களுக்கு பிடிக்கவில்லை போல…. என்ற கேள்வியே வரவேற்கும். இதுவே இன்றைய நிலையும் கூட. எழுபதுகளின் ஆரம்பத்தில் அடக்கியாண்ட சிங்களனுக்கு எதிராக போரட களம்புகுந்து தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் போதும் இவ்வாறான கேள்விகளே எமது வீரர்களை வரவேற்pருந்தமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் புலம்பெயர் தேசங்களில் முன்னெடுக்கப்பட்டு வரும் அரசியல் ரிதியிலான போராட்டங்களும் வரவேற்பில்லாது போய் முக்கியத்துவம் இல்லாது போயிருக்கும். இதனை கருத்தில் கொண்டுதான் சிறிலங்காவில் தமக்கு சார்பான ஒருதலைமையினை கொண்ட ஆட்சியாக சரத்பொன்சேகாவின் ஆட்சியை அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் விரும்பியிருந்தன. எப்படியோ அது சாத்தியமற்றதாய் போனபிற்பாடு முதற்காரணமான மகிந்தவின் எதிரணி உறவுகளால் சினமடைந்திருந்த அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் புலத்தில் உள்ள ஈழத்தமிழர்களது அரசியல் தலைமையினை ஏற்று அங்கீகரிப்பது போன்று ஒரு தோற்றப்பாட்டினை ஏற்படுத்தி மகிந்தவிற்கு தூக்கத்தை கலைத்துள்ளன. தமக்கு எதிரான அணியுடன் கரம்கோர்க்கும் மகிந்தவை தட்டிவைப்பதற்காகவே எம்மை நெருங்கி வந்து கொஞ்சிக்குலாவும் நாடுகள் எவ்விதத்திலும் எமக்கான நிரந்தர தீர்வினை பெற்றுத்தரப்போவதில்லை என்பதனை நாம் நினைவில் கொள்ள வேண்டும். சிங்களத்திற்கு எதிரான நிலைப்பாடு காரணமாக இருந்தாலும் இவ்வளவு நாட்களாக புலம் பெயர்வாழ் ஈழத்தமிழர்கள் மேற்கொண்ட போராட்டத்தின் காரணமாகவே இன்று அனைத்துலக நாடுகள் ஒப்பிற்காகவேனும் ஏற்றுக்கொள்ள முன்வந்தமைக்கான காரணமாக அமைந்துள்ளது. முன்னர் இந்த புலத்தில் இயங்கிவரும் அரசியல் தலைமைகளை செயலிழக்கச் செய்வதற்கு முன்வந்த இந்த நாடுகள் ஏன் இன்று அரவணைக்கின்றன….? இங்கும் இவர்களது சூழ்ச்சிகள் உள்ளது. முட்கம்பி வதைமுகாம்களில் சிங்களத்தால் கொடும் சிறைவைக்கப்பட்டிருக்கும் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட எமது மக்களை மீட்n;டடுத்து அவர்களது பூர்விக மண்ணில் மீண்டும் குடியேற்றுவதும், அனைத்துலக போர் நியமங்களிற்கு புறம்பாக தனிமைச்சிறையில் வைத்து எதிர்காலமே சூனியமாக்கப்பட்டுள்ள பதின்மூவாயிரத்திற்கு மேற்பட்ட போராளிகளை விடுவித்து மறுவாழ்வு ஏற்படுத்திக் கொடுப்பதும் உடனடித்தேவையாக இருக்கும் போது இந்த நாடுகள், மன்றங்கள், சபைகள், அமைப்புகள் எதுவுமே இதுதொடர்பாக சிங்களத்தை வலியுறுத்தவில்லையே… குறைந்தபட்சம் கோரிக்கையோ வேண்டுதலோ வைக்கவில்லையே. செய்யவேண்டியவற்றை தமது வல்லமையினை பயண்படுத்தி செய்யாது எமக்கான நியாயமான உரிமைகளை பெற்றுத்தராது நாடகமாடி எம்முடன் ஒட்டவரும் இவர்களை அவதானத்துடன் கையாளவேண்டியது அவசியமாகும். எமக்கான விடுதலையை யாரும் தங்கத் தாம்பாளத்தில் வைத்து துக்கித்தரப் போவதில்லை. அது எமது உரிமை. அதனை நாம் போராடித்தான் பெறமுடியும். அதுவே இன்றைய யதார்த்த நிலையும் கூட. அதனால்தான் எமது தேசியத்தலைவர் எவ்வித சமரசங்களிற்கு உட்படாது தனது பாதையில் உறுதியுடன் சுதந்திர சோசலிச தமிழீழம் என்ற இலக்கு நோக்கி போராடிக் கொண்டிருக்கின்றார். முள்ளிவாய்க்காலில் முழுவதுமாக முடிந்துவிட்து என்றநிலையில் கூட சில வல்லாதிக்க நாடுகள் தேசியத்தலைவரிடம் சமரசங்கள் பேசியிருந்த போதும் அவற்றை எமது தேசமக்களின் விடுதலையினை முதன்மைப்படுத்தி புறக்கிணத்திருந்ததுடன் பாதுகாப்பான இடத்திற்கு முக்கிய தளபதிகளுடன் நகர்ந்து சென்று தமது இருப்பினை உறுதிப்படுத்திக்கொண்டுள்ளார். இவ்வாறு பாதுகாப்பான இடத்தில் தமது இருப்பினை வெளிப்படுத்தாது உலக பிராந்திய வல்லரசுகளுடன் மௌணப் போர் புரிந்துவரும் எமது தேசியத் தலைவர் புலம்பெயர்ந்திருக்கும் தமிழர்களாகிய எம்மிடம் எதிர்பார்ப்பது தொடர்ச்சியான பங்களிப்பினையே. “இந்த வரலாற்றுச் சூழமைவில், தமிழர் உலகில் எந்த மூலையில் வாழ்ந்தாலும், எந்த இடத்தில் வளர்ந்தாலும் எமது தேசவிடுதலைக்கு உறுதியாகக் குரல் எழுப்பி, எமது சுதந்திர இயக்கத்தின் கரங்களை பலப்படுத்துமாறு அன்போடு வேண்டுகிறேன். அத்துடன் தங்களது தாராள உதவிகளை வழங்கித் தொடர்ந்தும் பங்களிக்குமாறும் உரிமையோடு கேட்டுக் கொள்கின்றேன்…..” இவ்வாறு கடந்த 2008 மாவீரர் நாள் உரையில் உலகத்தமிழர்களை நோக்கி வேண்டுகோள் விட்டிருந்தார் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள். எனவே அவ்வளியில் தொடர்ந்து போராடுவதே எமது கடரைமயாகும். சத்திய இலட்சியத் தீயில் தம்மையே அழித்துச் சரித்திரமாகிவிட்ட எமது மாவீரர்கள் வழியில் சென்று நாம் எமது இலட்சியத்தினை அடைவோமென தாயக மீட்புப் போரில் களப்பலியாகிய முப்பதாயிரத்திற்கு மேற்பட்ட மாவீரர்களதும் அந்த போரில் தோளோடு தோள்நின்று சாவடைந்த இரண்டு இலட்சத்திற்கு மேற்பட்ட மக்களதும் கல்லறைகள் மீது கரம்பதித்து உறுதிஎடுத்துக்கொண்டு தற்போது ஏற்பட்டுள்ள அனைத்துலக சூழ்சிகள், தடைகள், நெருக்கடிகள் போன்றவற்றை தகர்த்தெறிந்து தலைவன் வழிகாட்டுதலில் தொடர்ந்து போராடுவோம். தமிழீழம் காண்போம். “தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”

உயிர்த்தெழுங்கள்…

முள்ளிவாய்க்காலில் பிணமான ஆயிரமாயிரம் பேரோடு பிணங்களான புலம் பெயர் தமிழர்களே உயிர்த்தெழுந்திடுங்கள். இன்னும் எம் உரிமைகள் கிடைக்கவில்லை. நீங்கள் வீதியில் இறங்கி போராடிய அந்த போராட்டத்தின் இலக்கை நாம் இன்னும் அடையவில்லை. பாராம் என்று நீங்கள் சலித்து விட்டால் மீண்டும் மீண்டும் நாங்கள் அடக்கப்ட்டுக்கொண்டிருப்போம். எம் இனத்தில் குரல்கள் அடக்கப்பட்டுள்ளது. அதன் நியாயபூர்வமான கோரிக்கைகள் மறுதலிக்கப்படுகின்றது. அது உங்கள் எல்லோருக்கும் தெரிந்த போதும் அது பற்றிய அக்கறையை காட்ட நீங்கள் யாரும் தயாராய் இல்லை என்பது வேதனையான விடயமாகும். ஆயுதப்போராட்டத்தில் முடிவு எம் ஈழப்போரின் முடிவு அல்ல. நாம் தொடர்ந்து நகரவேண்டும், எம் கனவுகள், எம் தேச மக்களின் சோகங்கள் எல்லாம் களைந்து எமக்கான தேசத்தை அடைய வேண்டும் என்பதில் ஒவ்வொரு தமிழனும் தெளிவாயும் அதே நேரம் அதற்காய் அந்த இலக்கை அடைய தம்மை அர்ப்பணித்து பணியாற்ற தயராய் இருக்க வேண்டும். வீதிகளில் கொடிகளை கொண்டு விரைந்து வந்து நின்ற போது தமிழனின் ஒற்றுமை பற்றி பேசிய இந்த ஊடகங்கள், இன்று எம்மை பற்றி குறைந்த பட்ச செய்திகளை கூட கொண்டுவருவதில்லை. போர் இல்லாதவிடத்து தமிழன் என்பவனின் அடையாளம் அழிக்கப்பட்டிருக்கும் ஆனால் இன்று அந்த விடுதலைப்போர் பின்னடைவைச் சந்தித்துள்ள இந்த வேளை நாம் அந்த இடத்தை நிரப்ப வேண்டும். கடந்த மூன்று தசாப்தங்களாக தம்மை அhப்;பணித்து மூன்று ஒரு சந்ததி போராடி அதன் இலக்கை அடையாது பின்னடைவைச் சந்தித்திருக்கின்றது. முப்பதாயிரத்துக்கு அதிகமான இளைஞர்கள் யுவதிகள் தங்கள் உயிர்களை கொடுத்து சென்றுள்ளனர். இன்னும் லட்சக்கணக்கான மக்கள் இந்த போரின் போது தங்கள் உயிர்களை இழந்துள்ளனர். அதுமட்டுமன்றி, கோடிக்கணக்கான சொத்துக்களை நாம் இழந்துள்ளோம். ஊரிழந்து, சொந்த நாடிழந்து சிங்களத்தின் திட்டமிட்ட வல்வளைப்பால் நாங்கள் அகதியாக அடுத்தவன் நாடுகளின் வாழ்கின்றோம். இந்த வாழ்வு எமக்கு இனிக்கின்றது. ஆனால் சொந்த மண்ணில் அகதியாய் சிங்களவன் காவலுக்குள் எந்த நேரம் என்ன நடக்கும் என்ற அச்சத்தில் உறைந்து கிடக்கும் லட்சக்கணக்கான மக்களை பற்றி கவலை இன்றி எம்மால் வாழமுடியுமா? அவர்கள் எம் உறவுகள் என்றில்லை என்று சொல்லி ஒதுக்கிட முடியுமா? புலத்தில் அமிழ்த்தப்பட்ட போராட்டங்கள் மீண்டும் மீட்சி பெறவேண்டும். உறங்கு நிலையில் இருக்கும் இளையோர் அமைப்புக்கள் புலம் எங்கும் சிலருக்கும், சில அமைப்புக்களுக்கும் பின்னால் அணிதிரள்வதை விடுத்து எமது மக்களுக்கான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். இளையோர் அமைப்பு முள்ளிவாய்க்காலின் அடுத்த நாளே செயல் இழந்து கிடப்பது வேதனை! தலைவர் இளையோரை நம்பி ஒப்படைந்த போராட்டம் சிலரின் பதவி பசியால் வாடி வதங்கி அந்த இளைஞர்களின் உணர்வுகள் முடக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இளையோரை நீங்கள் அடுத்த கட்ட தலைவர்கள், உங்களுக்குள் நிச்சயமாக பதவிச் சண்டைகள் இல்லை. சிலரின் இந்த சண்டைக்குள் நீங்கள் பலிக்கடாவாக்கப்படுகின்றீர்கள்! எமது இனத்தின் ஒற்றுமையை வளர்க்க வேண்டும் என்பதற்காகவே தலைவரின் சிந்தனையில் உதித்தது இளையோர் அமைப்பு! அந்த அமைப்பு இன்று சிலரின் தலையாட்டு பொம்மையாக செயற்ப்படுவது வருந்தத்தக்கது. இந்நிலை மாற்றம் பெற்று இளையோர் அமைப்புக்கள், மாணவர் அமைப்புக்கள், இன்னும் இதர இளையோர் சம்பந்தமான கழகங்கள் மக்களை அணிதிரட்டி போராட்டங்களை முன்னேடுக்க வேண்டும். அகதி முகாம்களுக்குள் முடங்கி கிடக்கும் உறவுகளை மனதில் வையுங்கள்! இன்னும் இன உணர்வுகளை கொச்சைப்படுத்தி சிலரின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களுக்குள் உங்கள் உன்னத அமைப்பை அடகு வைக்காதீர்கள். பிணங்களாய் இருக்கும் அவர்களையும் உயிர்ப்பியுங்கள். நீங்களும் உயிர்த்தெழுங்;கள்.

மே பதினெட்டு எம்தேசிய துயர் பகிர்வு நாளாக எம்மவர்களால் கொண்டாடப்படவேண்டும்

தமிழ் மக்களின் உணர்வுகள் மழுங்கடிக்கப்பட்ட நாளை நாம் துக்க தினமாக அனுஸ்டிக்க உலகத்தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைந்து மீண்டும் எமது பலத்தை உலகுக்கு காட்டும் வாய்ப்பை தவற விட்டால் மீண்டும் மீண்டும் சபிக்கப்பட்ட இனமாகி வரலாற்றில் வீர தமிழன் வாழ்ந்தார்கள் என்ற சொற்பதம் தமிழீழ வரலாற்றில் இல்லாமல் போய்விடும்.எனவே ஒவ்வொரு தமிழனின் குருதியும் அடங்கிய அந்நாளை துக்க தினமாக அனுஷ்டித்து எம்மவர்களை மீண்டும் உயிர்ப்பிப்போம்.

தமிழர் வரலாற்றின் தொன்மை சொல்லும் கந்தளாய்க் கல்வெட்டுக்கள்

கி.பி 10 ஆம் நூற்றாண்டில் சோழரது நேரடி ஆட்சி இலங்கையில் ஏற்பட்டபோது நாகநாட்டில் இருந்த( தற்போதைய வடகிழக்கு மாகாணம்) தமிழ் அரசும் அவர்களது ஆதிக்கத்துக்கு உட்பட்டது என வரலாற்றாதாரங்கள் மூலம் அறிய முடிகிறது. சோழப்பேரரசின் படையெடுப்பின் மூலம் இப்பிரதேசம் இராஜராஜனின்(கி.பி 985 - கி.பி 1014) ஆதிக்கத்தின்கீழ் வந்தபின் 'இராஜராஜ சதுர்வேதி மங்கலம்' என்றே அழைக்கப்பட்டிருக்கிறது. (சோழர் ஆட்சியின் கீழ் தமிழ்ப் பௌத்தர்களால் நிர்வகிக்கப்பட்ட விகாரை இராசராசப் பெரும் பள்ளி யெனப் பெயர்மாற்றம் செய்யப்படதுபோல்) அதன் பின்னர் அவரது மகன் இராஜேந்திரன் (கி.பி 1012 - கி.பி 1044) காலப்பகுதியில் திருகோணமலை நகரம், இராஜ ராஜ சதுர்வேதி மங்கலம்(கந்தளாய்) என்பவற்றை உள்ளடக்கிய பிரதேசம் 'இராஜேந்திர சோழவழநாடு' என அழைக்கப்பட்டிருக்கிறது. கி.பி 1010 ஆம் ஆண்டி ல் இங்கு இராசேந்திர சோழனால் சிவன் கோவில் கட்டப்பட்டது. அப்புராதானக் கோயிலின் சிதைந்த பாகங்களைக்கொண்ட சிவன் பார்வதி சிலை, தூண் சிதைவுகள் , ஆவுடையார் போன்றவை இன்றும் அக்கோயிலின் வரலாற்றுத் தொன்மைதனை பறைசாற்றி நிற்கிறது. வரலாற்றுத் தகவல்களின் அடிப்படையில் இங்கிருந்த ஆலயம் பிரசித்தமானதாகவும், பலர் ஒன்றுகூடி அமர்ந்து கலந்துரையாடக்கூடிய மண்டபங்களைக்கொண்ட பிரமாண்டமானதாகவும் இருந்திருக்கவேண்டுமென அறியமுடிகிறது. கந்தளாயிலுள்ள பேராறு எனுமிடத்தில் அமைந்திருக்கும் இவ்வாலயச் சிதைவுகள் 1950ம் ஆண்டு காலப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டு பின்னர் அவ்விடத்தில் அமைக்கப்பட்ட சிவனாலயத்தையே மேலுள்ள படத்தில் காண்கிறீர்கள் இவ்வாலயச் சூழலில் கண்டெடுக்கப்பட்ட பல சாசனங்களில் இருந்து இவ்வாலயத்தின் சிறப்பையும் இங்குவாழ்ந்த மக்களது சமய, பண்பாட்டு நடமுறைகளையும், இப்பிரதேசத்தில் நிலவிய அரசாட்சி பற்றியும் அறிந்துகொள்ள முடிகிறது. அங்கு கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுக்கள் சொல்லும் செய்திகளின் சுருக்கம். 01. இராஜராஜ சதுர்வேதி மங்கலத்தின் ஊராட்சி அமைப்பான பெருங்குறி(மகாசபை) பொது மக்கள் ஒரு இரவு ஒன்றுகூடி விக்கிரம சோழ வாய்க்கால் தொடர்பாக எடுத்த தீர்மானத்தின் பதிவுகளையே ஒரு கல்வெட்டு சொல்கிறது.இதனை ஆராய்ந்த கலாநிதி.கா.இந்திரபாலாவின் கருத்துப்படி கி.பி 1033 மாசி 13ம் திகதி/ கி.பி 1047 மாசி 10 ம் திகதி இம் மகாசபைக்கூட்டம் நிகழ்ந்திருக்கவேண்டுமெனக் கருதுகிறார். 02. இங்குள்ள இன்னுமொரு சாசனம் முதலாம் விஜயபாகு தேவரின் 42 ம் ஆட்சியாண்டிலே எழுதப்பட்டது.(கி.பி 1097) நங்கைசானி என்னும் பிராமணப்பெண் தனது கணவனின் நினைவாக சதுர்வேத மங்கலத்து விஜயராஜ ஈஸ்வரம் என்னும் ஆலயத்தில் ஏற்படுத்திய அறக்கட்டளை பற்றிய விவரங்களை அது வர்ணிக்கிறது. 03.கி.பி 12 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அதாவது கி.பி 1103 ஆண்டுக்குரியதான கல்வெட்டில் கந்தளாய் என்றே அக்காலத்தில் இப்பிரதேசம் அழைக்கப்படதாக அறிய முடிகிறது. அத்துடன் பொலநறுவையை ஆட்சி புரிந்த விஜயபாகு தனது 37ஆம் ஆட்சியாண்டில் தானமளித்தான் என்பதையும் அறியமுடிகிறது. இதுவரை இலங்கையில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுக்களில் இதில்தான் முதன் முறையாக திருப்பள்ளியெழுச்சி, திருப்போனகம் என்னும் சொற்பதங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக பேராசிரியர் பத்மநாதன் அவர்கள் குறிப்பிடுகிறார். இவை தவிர சோழ இலங்கேஸ்வரன், சோழர்களின் ஆட்சிமுறை, என்பனவற்றோடு தமிழர்களின் தொன்மையையும் ஆதாரப்படுத்தி நிற்கும் இச்சாசனங்கள் அரிய பொக்கிசங்களாகும்.

ஜேர்மனியில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான தேர்தல்கள்!

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான மக்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல்களை மே மாதம் 2 ஆம் திகதி உலகளாவிய ரீதியில் நடாத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதனைத் தாங்கள் அறிவீர்கள். ஊடக அறிக்கை 24.03.2010 ஜேர்மனியில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான தேர்தல்கள்! நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான மக்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல்களை மே மாதம் 2 ஆம் திகதி உலகளாவிய ரீதியில் நடாத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதனைத் தாங்கள் அறிவீர்கள். இவ் அடிப்படையில் ஜேர்மனியில் நடாத்தப்படவுள்ள தேர்தல்கள் தொடர்பான திட்டங்கள் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினை அமைப்பதற்கான செயற்குழுவின் அனைத்துலகச் செயலகத்தினால் வகுக்கப்பட்டுள்ளன. 82 மில்லியன் மக்கள் தொகையையும் 357112 சதுர கிலோமீட்டர் பரப்பளவையும் கொண்ட இன்றைய ஜேர்மனி (கிழக்கும் மேற்கும் இணைந்த) பதினாறு மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இதில் கிழக்கு ஜேர்மனியில் (ஐந்து மாநிலங்கள்) மிகச் சொற்ப எண்ணிக்கையிலான தமிழர்களே வாழ்கிறார்கள். மிகுதியாகவுள்ள பதினொரு மாநிலங்களிலும் (மேற்கு ஜேர்மனி) தமிழர்கள் பரந்து வாழ்கிறார்கள். இவற்றை அடிப்படையாக வைத்தே ஜேர்மனியில் தேர்தல்களை நடாத்துவதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. நான்கு தேர்தல் தொகுதிகள்: 10 பிரதிநிதிகள் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது அரசவைக்காக ஜேர்மனியில் இருந்து தெரிவு செய்யப்படவேண்டியுள்ள 10 பிரதிநிதிகளையும் தமிழர்கள் பரந்து வாழும் பிரதேசங்கள் முழுவதிலிருந்தும் தெரிவு செய்யும் நோக்கத்தில் பதினொரு மாநிலங்களையும் நாம் நான்கு தேர்தல் தொகுதிகளாகப் பிரித்துத் தேர்தலை நடாத்த எண்ணியுள்ளோம். இவை பற்றிய விபரங்கள் பின்வருமாறு: தேர்தல் தொகுதி 1: Berlin மாநிலம் (தலைநகரை உள்ளடக்கியது) - 1 பிரதிநிதி தேர்தல் தொகுதி 2: வடக்கு ஜேர்மனி: Bremen, Hamburg, Niedersachsen, Schleswig-Holstein - 2 பிரதிநிகள் தேர்தல் தொகுதி 3: மத்திய ஜேர்மனி: Nordrhein-Westfalen (தமிழ் மக்கள் மிகவும் செறிந்து வாழும் இடம்) - 4 பிரதிநிகள் தேர்தல் தொகுதி 4: தெற்கு ஜேர்மனி: Baden-Württemberg, Bayern, Hessen, Rheinland-Pfalz, Saarland - 3 பிரதிநிகள் கிழக்கு ஜேர்மனியில் வாழும் சொற்ப எண்ணிக்கையிலான தமிழ் மக்கள் இத் தேர்தலின் போது பேர்லின் மாநிலத்துடன் (தேர்தல் தொகுதி1) இணைக்கப்படுவர். தேர்தல்களை ஒழுங்கு செய்து நடாத்துவதற்காக நான்கு தேர்தல் தொகுதிகளுக்கும் தனித்தனியே செயற்பாட்டுக் குழுக்கள் அமைக்கப்படும். இச் செயற்பாட்டுக் குழுக்கள் தேர்தல் ஆணையங்களை உருவாக்கி ஜேர்மனியின் நான்கு தேர்தல் தொகுதிகளிலும் தேர்தலை நடாத்துவர். இச் செயற்பாட்டுக் குழுக்கள் எமது அனைத்துலகச் செயலகத்தினால் ஒருங்கிணைக்கப்படும். இந் நான்கு தேர்தல் தொகுதிகளில் முதற்கட்டமாக தெற்கு ஜேர்மனிக்கான செயற்பாட்டுக்குழு விபரங்கள் இன்றைய தினம் அறிவிக்கப்படுகிறது. ஏனைய மூன்று தேர்தல் தொகுதிகளுக்கும் உரிய செயற்பாட்டுக்குழு விபரங்கள் விரைவில் அறியத்தரப்படும். தேர்தல் தொகுதி 4: தெற்கு ஜேர்மனிக்கான செயற்பாட்டுக்குழு ஒருங்கிணைப்பாளர் திரு குலசேகரம் குலதீபன் 01773444282 Bayern மாநிலம்: மயில்வாகனம் ரமணன் 01638638697 அரசரட்ணம் நகுலேந்திரன் 01772098267 கிருஸ்ணமூர்த்தி தவராசா 01781300627 ஆசீர்வாதம் வின்சன் 01602259496 Hessen மாநிலம்: சாரா தவராஜா 01736978263 கிசோதனன் தேசிங்குராஜா 0277134786 Rheinland-Pfalz மாநிலம்: சுப்பிரமணியம் சிவானந்தன் 017645111626 அப்பையா தேவதாஸ் 017641037065 Baden-Württemberg & Saarland மாநிலங்கள்: கலைமகன் தங்கவேல் 01773430627 சஜீர்தன் பஞ்சலிங்கம் 017663348559 கவிதாஸ் சிவராஜா 01736275988 அன்புசெல்வன் பாலசுந்தரம் 01742117163 ஜெல்சன் ஜெகநாதன் 017665578202 வசந்தராணி பஞ்சலிங்கம் 017663348559 சாகித்தியா ஜெகதீஸ்ஐயர் 07191960739 ஜெயச்சந்திரன் பாலச்சந்திரமூர்த்தி 017682134527 அருள்தாஸ் பாலசுந்தரம் 01742117163 முகுந்தன் அன்னலிங்கம் 01772023046 நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான தேர்தல்களை குறிப்பிட்ட காலத்தில் நடாத்தி முடித்து அரசாங்கத்தின் முதலாவது அமர்வினை மே மாதம் 17-19 காலப்பகுதிக்குள் கூட்டுவதற்கு நாம் திட்டமிட்டுள்ளோம். நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது அரசவை இக் காலப்பகுதிக்குள் கூடுவது முள்ளிவாய்க்காலுடன் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முறியடித்து விட்டதாகக் கூறி மார் தட்டும் சிறிலங்கா அரசுக்கு ஈழத் தமிழர் தேசம் கொடுக்கும் குறியீட்டு வடிவிலான பதிலடியாக அமையும். இத் தேர்தல்களை ஜேர்மனியில் வெற்றிகரமாக நடாத்தி முடிப்பதற்குத் தேவையான உதவிகளையும் ஒத்துழைப்புக்களையும் வழங்குமாறு ஜேர்மனியில் உள்ள அனைத்துத் தமிழ் அமைப்புக்களையும் அன்புடன் அழைக்கிறோம். நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினை அமைக்கும் திட்டத்துடன் இணைந்து இயங்க விரும்பும் அனைவரையும் எம்முடன் தொடர்பு கொள்ளுமாறும் வேண்டுகிறோம். நீங்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி: infogermany@govtamileelam.org விசுவநாதன் ருத்ரகுமாரன் இணைப்பாளர் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைப்பதற்கான செயற்குழு

திபெத்தில் அடுத்தடுத்து நிலநடுக்கம்

திபெத்தில் இன்று காலை அடுத்தடுத்து இரண்டு முறை ஏற்பட்ட மிதமான நிலநடுக்கம் காரணமாக, மக்கள் பீதியடைந்து தங்கள் வீடுகளைவிட்டு வெளியே ஓடிவந்தனர்.திபெத்தின் வடக்குப் பகுதியில் உள்ள நயின்ராங் என்ற இடத்தில் இன்று காலை 10.06 மணியளவில் அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. முதல் நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.7 ஆக பதிவான நிலையில், இரண்டாவது நிலநடுக்கம் 5.5 ஆக பதிவானது. அடுத்தடுத்து ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தினால் மக்கள் பீதியடைந்து தங்களது வீடுகளைவிட்டு வெளியே ஓடிவந்தனர். அதே சமயம் இந்த நிலநடுக்கத்தினால் உயிர்களுக்கோ அல்லது உடமைகளுக்கு சேதம் ஏதும் ஏற்பட்டதாக தகவல் இல்லை.

ஹி‌ட்லரின் கடிதம் 8,000 பவுண்ட்களுக்கு விற்பனை

ஜெர்மன் சர்வாதிகாரி அட்லாஃப் ஹிட்லர் எழுதிய கடிதம் ஒன்று 8,000 பவுண்ட் தொகைக்கு ஏலத்தில் விற்பனை ஆகி உள்ளது.1931 ஆம் ஆண்டு செப்டம்பர் 30 ஆம் தேதியன்று ஹிட்லர் அந்த கடிதத்தை எழுதியுள்ளார்.பிரிட்டன் - ஜெர்மனிக்கு இடையே இருந்த நல்லுறவை ஹிட்லரின் இந்த கடிதம் வெளிப்படுத்துவதாக உள்ளது. பிரிட்டன் பத்திரிகையாளர் செப்டன் டெல்மர் என்பவர், பிரிட்டன் எதிர்கொண்டிருக்கும் பொருளாதார நெருக்கடி குறித்து தமது பத்திரிகையில் கட்டுரை ஒன்று எழுதுமாறு அழைப்பு விடுத்து, ஹிட்லருக்கு கடிதம் அனுப்பியிருந்தார். அதற்கு பதிலளித்தே ஹிட்லர் மேற்கூறிய கடிதத்தை எழுதியிருந்ததாக கூறப்படுகிறது.

இந்தியாவிற்கு புலிகளால் ஆபத்து இல்லை நரிகளால் தான் ஆபத்து

மார்ச் 13 ஆம் திகதி இந்திய பிரதமர் மன்மோகன் சிங், சோனியா காந்தி ஆகியோர் தமிழ் நாட்டுக்கு வந்திருந்தனர். சட்ட மன்ற கட்டடதொகுதியினை திறந்து வைப்பதற்காகவே சோனியா காந்தி, மன்மோகன் சிங்க் ஆகியோர் வந்தனர். இவர்களின் வருகையினை ஒட்டி விசேட வேவுகள், தரவு சேகரிப்பு, பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. வழமையாக எதற்கெடுத்தாலும் புலிகள் மீது பழி சுமத்தும் எண்ணம் எள்ளளவும் இந்திய பிசாசுகளுக்கு விட்டுபோகவில்லை. ஆகையால் சோனியா காந்தி, மன்மோகன் சிங்க் ஆகியோர் வரும் காலப்பகுதியில் புலிகள் யாராவது ( ஈழ தமிழர்கள்) அந்த பகுதிக்கு புதிதாக வந்துள்ளார்களா என பொலிசார் துருவி துருவி விசாரித்ததில் 06 ஈழத்தமிழர் வலசரபாக்கத்திற்கு வந்துள்ளதை மணந்து பிடித்துள்ளனர். இவர்களுக்கு புலிசாயம் இட்டு வழமையாக தங்களின் விசாரணைகள், கட்டுக்கதைகள், புரளிகள் ஆகியவற்றை தயார் செய்து அதிகாரிகளுக்கும் அனுப்பி கொண்டிருக்கும் வேளையில் தான் இன்னும் அதிர்ச்சிகரமான தகவல்கள் பொலிசாருக்கு கிடைத்துள்ளது. அதாவது புலிகளின் சற்றலைட் தொலைபேசிகளை ஒட்டுகேட்பதற்காக பொலிசார் சற்றலைற் போன் ஒட்டுக்கேட்கும் கருவியினை இயக்கி கொண்டிருந்தவேளை மூன்று சற்றலைட் போன்கள் இயக்கத்தில் உள்ளதனை கண்டுபிடித்துள்ளனர். மூன்றினது அமைவிடங்களையும் தேடியபோது அந்த மூவரும் இஸ்ரேல் நாட்டினை சேர்ந்தவர்கள். பிரதமரும், சோனியாவும் தமிழ் நாட்டிற்கு வரும் வேளை இந்த மூன்று இஸ்ரேலியர்களுக்கு தமிழ் நாட்டில் என்ன வேலை? அதுவும் சற்றலைட் போனை மூவரும் வைத்திருந்ததற்கான காரணம் என்ன? விசாரணையில் அவர்கள் தாம் உல்லாசபயணிகள் என உளறியுள்ளனர் ஆனால் விசாரணை தொடர்கின்றதாம். அடுத்ததாக வந்த தலையிடி அமெரிக்காவுக்கு அனுப்பவென பொதி செய்யப்பட்டு இருந்த பெட்டகம் ஒன்றினை சுங்க பொலிசார் பரிசோதித்த போது அதற்குள் பல பாதுகாப்புடன் தொடர்பான வரைபடங்கள் புளூ பிரின்ற்கள் இருந்தமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இந்த பொதி ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரியான கேணல் ஹூ ஏ மேளி என்பவரால் அமெரிக்காவில் உள்ள ஒருவருக்கு முகவரி இடப்பட்டு பதிவு செய்யபட்டு இருந்தது. இது தொடர்பாகவும் விசாரணைகள் நடக்கின்றனவாம். ஓ நாய்கள் புலிவேட்டையினை கைவிட்டுவிட்டு நரி வேட்டைகளில் இறங்குவதே நல்லது ஏனெனில் புலிகள் அங்கு இல்லை, இருந்தாலும் ஆபத்து இல்லை. நரிகளே அங்கு அதிகம் என்பதனை இப்போது புரிந்து கொள்ளுமா ஓ நாய்கள்.

சிங்கள தேசம் ஒரு முள்ளிவாய்க்காலைச் சந்திக்காது

சிங்கள தேசம் ஒரு முள்ளிவாய்க்காலைச் சந்திக்காது என்று நிச்சயமாகக் கூற முடியாது!. முள்ளிவாய்க்காலில் விடுதலைப் புலிகளின் போராயுதங்கள் மவுனமாக்கப்பட்டுவிட்ட பின்னர், இன்றுவரை தொடர்ந்தும் தமிழ் மக்கள் அவமானப்படுத்தப்பட்டே வருகின்றார்கள். அவர்களது தன்மானத்தின் மீதான சிங்களத் தாக்குதல் தொடர்ந்தே வருகின்றது. அதன் உச்ச வெளிப்பாடே மாவீரர் துயிலும் இல்லங்களின் சிதைப்பும், தியாகி திலீபன் அவர்களது நினைவுத் தூபி அழிப்பும் ஆகும். மனித நாகரிகத்தின் நிழல் கொஞ்சமும் படியாத வக்கிர மனங்களுடன் சிங்கள தேசம் மேற்கொள்ளும் இத்தகைய ஈனத் தனங்கள் நிச்சயம் எதிர் விளைவுகளைப் பிரதிபலிக்கக் கூடியவை. தமிழ் மக்கள் மீதான இன வன்முறைத் தாக்குதல் காரணமாக உருவான ஆயுதப் போராட்டம் இலட்சக்கணக்கான உயிர்களைப் பலி கொண்டதுடன், இலங்கைத் தீவின் பொருளாதாரக் கட்டமைப்பையும் சிதைத்துவிட்டுள்ளது. அந்த ஆயுதப் போராட்டம், பல்வேறு நாடுகளினதும் அரசியல் வியூகங்களுக்குள் சிக்கிச் சிதை பட்டுவிட்ட போதும் சிங்கள தேசம் அதிலிருந்து பாடங்களைப் பெற்று, தமிழ் மக்களை அரவணைத்துச் செல்வதைத் தவிர்த்து வெற்றிப் போதையுடன் தமிழ் மக்களது உணர்வுகள் மீது தொடர்ந்தும் தாக்குதல்களைத்த் தொடுத்து வருகின்றது. இலங்கைத் தீவில் ஆயுத வன்முறையை அறிமுகப்படுத்திய ஜே.வி.பி. சிங்கள அரசுகளால் தோற்கடிக்கப்பட்ட பின்னர், அவர்கள் பொது மன்னிப்பு வழங்கப்பட்டு ஜனநாயக அரசியலுக்குள் உள்வாங்கப்பட்டனர். அவர்கள் சிங்களவர் என்ற காரணத்தால் தொடர் துன்புறுத்தல்களோ, அவ மரியாதைகளோ இன்றிப் புனர்வாழ்வு அளிக்கப்பட்டார்கள். போதிய எந்தக் காரணங்களும் இல்லாமல், சிங்கள படித்த இளைய தலைமுறையின் விரக்தி காரணமாகவே இந்த ஆயுதப் புரட்சி தென்னிலங்கையில் வெடித்தது. மாறாக, ஈழத் தமிழர்கள் தொடர்ந்தும் பல பத்து ஆண்டுகளாக சிங்கள இனவெறித் தாக்குதல்களுக்கும், திட்டமிட்ட இன ஒடுக்குதல்களுக்கும், திட்டமிட்ட பொருளாதார, கல்விச் சீரழிப்புகளுக்கும் ஆளான காரணத்தினாலேயே தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்திப் போராட நிர்ப்பந்திக்கப்பட்டனர். அந்த ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்துள்ள நிலையிலும், ஈழத் தமிழர்களுக்கான நியாயங்களை வழங்குவதற்கு சிங்கள தேசம் முனையாத நிலையில் இந்தத் தொடர் தாக்குதல்கள் ஈழத் தமிழர்களின் மனங்கள் மீது தொடுக்கப்பட்டு வருகின்றது. உலகில் நடைபெற்ற போர்களில் வென்றவர்கள் எல்லோரும், அதில் தோற்றவர்களை அணைத்து ஆசுவாசப்படுத்தி, அவர்களை சமாதான வாழ்வுக்கு அழைத்துச் செல்வதையே குறியாகக் கொண்டு செயற்பட்டு வந்த வரலாறு சிங்கள தேசத்தால் மறுதலிக்கப்பட்டு, தமிழர்கள் தொடர்ந்தும் அவமானப்படுத்தப்பட்டு வருவது ஈழத் தமிழர்கள் மீண்டும் ஆயுதம் ஏந்திப் போராட வேண்டிய நியாயப்பாட்டையே உணர்த்துகின்றது. இத்தனைக்கும், தியாகதீபம் திலீபன் அவர்கள் இந்தியாவின் இராணுவ ஆக்கிரமிப்பிற்கெதிராகவே உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்தார். அதன் தொடர் வினையாகவே, விடுதலைப் புலிகளுக்கும், இந்திய அமைதிப் படைக்கும் இடையே யுத்தம் மூண்டது. விடுதலைப் புலிகள் அப்படி ஒரு முடிவினை எடுக்கத் தவறியிருந்தால், இந்திய அமைதிப்படை இன்றும் இலங்கைத் தீவிலிருந்து வெளியேறியிருக்காது. சிங்கள தேசமும் இந்திய மேலாதிக்கத்தின் பிடியிலிருந்து விடுபட நீண்ட போராட்டம் நடாத்த வேண்டிய கட்டாயத்தினுள் இருந்திருக்கும். இன வெறி மேலாதிக்க சிந்தனையைத் தவிர எதுவும் மேலானது அல்ல என்று கருதும் சிங்களம் தமிழர்களின் பாரம்பரிய பிரதேசங்களை சிங்கள மயப்படுத்துவதில் மட்டுமே முனைப்புக் காட்டுகின்றது. தமிழீழ மக்களது பாரம்பரிய நிலப் பிரதேசத்தை ஆக்கிரமிக்கும் சிங்கள தேசத்தின் ஒவ்வொரு நகர்வும் ஈழத் தமிழர்கள் மத்தியில் பெரும் மனக் கொந்தளிப்பை உருவாக்கும். சிங்கள அரசின் ஒவ்வொரு இனவாத தாக்குதல்களும் உலகத் தமிழர்களை ஒன்றிணைக்கும். அது மீண்டும் சிங்கள தேசத்தின்மீது புலியாகப் பாயும். ஈழத் தமிழர்களுக்கான நியாயங்கள் உலக நாடுகளை அவர்கள் பக்கம் திரும்ப வைக்கும். அப்போது சிங்கள தேசம் ஒரு முள்ளிவாய்க்காலைச் சந்திக்காது என்று நிச்சயமாகக் கூற முடியாது.

நம்புங்கள் நல்லூர் கோயிலும் நாளை எரிக்கப்படும் சங்கிலியன் சிலை நொருக்கப்படும்!

மே 31 - ஜூன் 1, 1981 யாழ் நூலகம் எரிக்கப்பட்டது. சிங்கள படைகளின் உதவியுடன், சிங்கள கைகூலிகள் அரசியல் வாதிகள் சேர்ந்து அந்த பொக்கிசத்தினை எரித்தனர். அதற்காக எழுந்த , ஆர்ப்பரித்த குரல்கள் எத்தனை? மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஒவ்வொரு பாடசாலை மாணவனும் ஒவ்வொரு உண்டியல்களுடன் களத்தில் இறங்கி ஒரு ரூபாய் கேட்டான் மீண்டும் நூலகத்தை கட்டுவதற்காக. வீடுகள் தோறும் ஒரு செங்கல்லு கேட்கப்பட்டது நூலகத்தினை கட்டுவதற்காக உண்மையில் நூலகம் கட்டுவதற்காக என்பதனை விட எல்லோர் மனதிலும் நூலகம் எரிந்தது போல் பற்றி எரியவேண்டும் என்பதற்காகவே அந்த திட்டம். எனக்கு அப்படித்தான் இருந்தது. நானும் அந்த நாளில் (6ஆம் வகுப்பு)160 ரூபா சொச்சம் சேர்த்தேன். காசு சேர்த்ததனை விட அந்த நிகழ்தான் வெப்பியாரமாக இருந்தது. நேற்று நல்லூரில் தியாக தீபம் திலீபனின் நினைவு சிலை அதே சிங்களப்படை உதவியுடன், அதே சிங்கள கூலிகளால் நொருக்கப்பட்டது. 12 நாட்கள் நல்லூரில் எந்தவிதமான வன்முறையும் இல்லாமல் உண்ண மறுத்து போரிட்ட அந்த திருமகனிற்காக 1987 ஆம் ஆண்டு எத்தனை மாணவர்கள் அழுதார்கள்? எத்தனை பெற்றோர்கள் அழுதார்கள்? இது ஒன்றும் புலிகள் வெருட்டி நடக்கவில்லையே தானாகவே நடந்தது. ஆனால் நேற்று அந்த மா தியாகி திலீபனின் சிலை உடைக்கப்பட்டபோது ஒரு அழுகை, ஒரு குரல், ஒரு அறிக்கை, ஒரு... எங்கே ஐயா? மக்களுக்குத்தான் அலுப்பு, சலிப்பு, பதைப்பு, வெறுப்பு, பயம் ஆனால் வந்துபாரடா நின்றுபாரடா என அரசியல் முழக்கமிடும் வேட்பாளர்களாவது அரசியலுக்கு கூட ஒரு கருத்து சொல்லி இருக்க கூடாதா? அந்த இடத்தை சென்று பார்த்திருக்க கூடாதா?அதற்காக சிங்களவனிடம் ஒரு தடவை அடிவாங்கினால் என்ன?சூடு வாங்கினால் என்ன? வாக்கு கேட்பதற்காக அடி வாங்க தயாராக இருக்கும் நீங்கள் இதற்கு ஏன் பின்னடிப்பு? நம்புங்கள் நல்லூர்கோயிலும் நாளை இடிக்கப்படும், நம்புங்கள் சங்கிலியன் சிலை தூக்கி எறியப்படும், நம்புங்கள் நாளை மீண்டும் நூலகம் எரிக்கப்படும் அப்போதாவது ஏதாவது பத்துமா என்று பார்ப்போம். மாவீரர் துயிலும் இல்லங்களைத்தான் இடிக்கும் போது பேசாமல் இருந்தோம் சரி அவர்கள் , சிலர் பாணியில் சொன்னால் வன்முறையாளர்கள், பயங்கரவாதிகள்ஆனால் தியாக தீபம் திலீபனும் அப்படியா? இவ்வளவு காலமும் இடிக்கப்படாமல் இருந்த தியாக தீபத்தின் சிலை ஏன் இப்போது இடிக்கப்பட்டது? சிங்களவனுக்கு செருக்கு, முறுக்கு ஏறிவிட்டது என்றுதானே அர்த்தம். எதிர்த்து நிற்க, பயமுறுத்த புலிகள் இல்லையென்றாலும் உங்கள் உணர்வையாவது பதிவு செய்ய வேண்டாமா? எதற்கெடுத்தாலும் ஒரு அடிபோட்டு மடக்குவீர்கள் அதாவது வெளி நாட்டில் இருப்போர்களுக்கு ஒன்றும் விளங்காது என்று. இது பற்றி பின்பு எழுதுகின்றோம். ஆனால் இப்போ யாழில் வேட்பாளர்களாக நிற்பவர்கள், தமிழர்களுக்காக உரிமை கேட்க புறப்பட்டவர்களை பார்த்துத்தான் கேட்கின்றோம். எதற்காக உங்கள் மெளனம்? ஆக குறைந்தது திலீபனின் சிலை உடைக்கப்பட்டு எஞ்சி இருக்கின்ற கற்களையாவது பொறுப்பெடுத்து முடிந்தால் பாதுகாப்பாக வையுங்கள்.

தமிழனின் புலிக்கொடி தரணியெங்கும்

மகிந்தாவிற்கு எப்படி வந்தது இந்த தைரியம்? தமிழ் தேசிய இயக்கத் தலைவர்கள், புலிகள் கோரிய தாய் தமிழகம் குறித்த கோரிக்கையை முன்வைக்க முடியாது என்று பகிரங்கமாக அறிவிக்கும் அளவிற்கு துணிச்சலை தர, நமது தலைவர்களே பெரும் காரணமாகி விட்டார்கள். எமது தேசிய தலைவர் களத்தில் இல்லாத ஒரே காரணத்தால் மகிந்தாவிற்கு இத்தனை வாய்துடுக்கு வர காரணமாகிவிட்டது. கடந்த 26ஆம் தேதி வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு நிறைவடைந்துவிட்டது. இன்று களத்திலே தமிழ் தேசிய அடையாளத்தை முன் நிறுத்துவதற்கான வேட்பாளர்கள் யாரும் இல்லாமல் அந்த இடம் வெற்றிடமாக காட்சி அளிக்கிறது. கடந்த தேர்தலுக்கும், நடைபெற இருக்கின்ற தேர்தலுக்கும் பாரிய இடைவெளி இருக்கிறது. இப்போது தேர்தல் நடத்த இருக்கும் பெரும்பாலான இடங்கள், விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் சிறப்புற வாழ்ந்து கொண்டிருந்தது. இப்போது எமது மக்களின் விடுதலை வாழ்வு சிதைக்கப்பட்டு, புலிகள் இயக்கம் தமது ஆயுதங்களை அமைதிப்படுத்தி, களத்திலிருந்து சற்று தள்ளி பார்வையாளர்களாக நின்று கொண்டிருக்கிறார்கள். ஆக, இப்போதைய தேர்தல் என்பது, புலிகளின் பார்வையில் நடந்த தேர்தல், புலிகள் பார்க்க நடக்கும் தேர்தல் என்ற பொருளோடு தான் நாம் இதை எடுத்துக் கொள்ள வேண்டும். கடந்த தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழரசு கட்சியின்கீழ் பகிரங்கமாக இயக்கத்தின் ஆதரவாளர்கள் அல்லது விடுதலைப்புலிகளின் பிரதிநிதிகள் என்ற நேரிடையான அடையாளத்தோடு களத்தில் இறங்கினார்கள். இயக்கமும், இவர்களுக்கு வாக்களிக்குமாறு தமிழர்களை கேட்டுக் கொண்டது. மன்னார், முல்லைத்தீவு மற்றும் வவுனியா, வன்னி மாவட்டமும், கிளிநொச்சி உள்ளடக்கிய யாழ் மாவட்டமும் சேர்ந்தது என வடமாகாணம் அமைந்திருக்கிறது. அதேபோன்றே கிழக்கு மாகாணம் என்று சொல்லப்படுவது, திரிகோண மலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியதாகும். 2004ஆம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் யாழ் மாவட்டத்தில் 9 இடங்களில் 8 இடங்களையும், வன்னி மாவட்டத்தில் 6 இடங்களில் 5 இடங்களையும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 5 இடங்களில் 4 இடங்களையும், அம்பாறை மாவட்டத்தில் 7 இடங்களில் 1 இடத்தை கைப்பற்றியது. அதேபோன்று வடகிழக்கு மாநிலத்திற்குரிய 31 இடங்களில் 20 இடங்களை தமிழ் தேசிய கூட்டமைப்பு கைப்பற்றியது. ஆனால், அன்று நடந்ததைப் போன்று இன்றைய தேர்தல் இல்லை. கடந்த தேர்தலில் விடுதலைப் புலிகளின் நேரடி மேற்பார்வையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு இப்படி ஒரு மகத்தான வெற்றியை பெற்று, தம்மை தமிழ் மக்களின் பிரதிநிதியாக அடையாளப்படுத்தியது. இதேபோன்ற வெற்றியை இப்போது நடைபெறுகின்ற தேர்தலில் இவர்கள் அடைய முடியுமா? என்ற கேள்வியே பல்வேறு அரசியல் பார்வையாளர்களின் மனவோட்டமாக பிரதிபலிக்கிறது. ஆனால் அது இயலாது என்பதே பெரும்பாலான ஊடகங்கள் மற்றும் அரசியல் பார்வையாளர்கள் தரும் பதிலாக இருக்கிறது. மேலும், இந்த தேர்தலில் தலைகீழ் மாற்றங்கள் பல நிகழும் என்பதே இப்போதைய நிலைபாடாக இருக்கிறது. எப்படியிருந்தாலும் இந்த தேர்தலால் எமது மக்களின் வாழ்வுக்கு எந்தவித விடுதலையும் அல்லது எந்தவித மகிழ்ச்சியான நடவடிக்கையும் கிட்டப்போவது இல்லை என்பது உறுதி. ஆகையால்தான் மகிந்தாவால் இப்படி பேச முடிகிறது. நமது தலைவர்கள் ஒற்றுமையின்றி கிடப்பதாலும், தமது இனத்திற்குள்ளேயே துரோகங்கள் பெருகியதாலும், இதுவரை நம்மைக் கண்டு அஞ்சி, நடுங்கி, நடந்து கொண்டிருந்த சிங்கள பேரினவாத அரசின் தலைமை, நான் சொல்வதைக் கேள். இதற்கு மேல் நீ பேசாதே என்று சொல்லும் அளவிற்கு நமது நிலைமை தாழ்ந்து போய்விட்டது. இந்த தாழ்ச்சிக்கு யார் காரணம். ஒவ்வொரு தமிழனும் என்பதை மறந்துவிடக் கூடாது. யார்மீதும் யாரும் பழிபோடக் கூடாது. யாரும் யாரையும் குற்றம் சொல்லக்கூடாது. உலகெங்கும் வாழும் எல்லா தமிழர்களும்தான் இந்த நிலைக்குக் காரணம். குறிப்பாக வேண்டுமானால் தமிழ்நாட்டைச் சொல்லலாம். தமிழ்நாட்டில் வாழும் தமிழனுக்கு தமது இன அடையாளம், ஒரு மண்ணிலிருந்து அழிக்கப்படுகிறது என்கிற அடிப்படை உணர்ச்சிக் கூட இல்லாமல் அவன் மிக இயல்பாக தொலைக்காட்சியிலே மானாட-மயிலாட பார்த்துக் கொண்டிருந்தான். தமது இனம் செத்துக் கொண்டிருக்கிறது என்கிற உணர்வு கொஞ்சமும் இல்லாமல் அவன் திரைப்பட அரங்குகளில் வரிசையில் நின்று கொண்டிருந்தான். தமது இன வாழ்வு ஒரு மண்ணிலே முறியடிக்கப்படுகிறது என்கிற உணர்ச்சி துளியும் இன்றி அவன் தமிழனின் எதிரணியிலே நின்று வாக்கு சேகரித்துக் கொண்டிருந்தான். தமிழனுக்குள் இருக்கும் கேவலம், இந்த இன அழிப்பின் மூலம்தான் வெளிப்படுத்தப்பட்டது. அவன் தன்னலத்திற்காக, தனது மகிழ்ச்சியான வாழ்விற்காக, பணத்திற்காக, பாழும் சுகத்திற்காக இனத்தை மட்டுமல்ல, தம் சொந்த தாயையையும் காட்டிக் கொடுப்பான் என்பதை இந்த நிகழ்வுகள் நமக்கு அடையாளப்படுத்தியது. அதன் தொடர்ச்சிதான் இந்த தேர்தல். உள்ளபடியே தமது இனத்தின் ஆன்மாவை, அதன் ஆளுமையை, தமிழர்களுக்கான உள் கட்டமைப்பை, அவர்களுக்குள் புதைந்துள்ள இன உணர்வை, வாழ்வியல் அடையாளத்தை, நாம் மீட்டெடுக்க வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு இருக்குமேயானால், தமது இன மக்கள் அடைந்த துயரத்தைக் கண்டு கோபப்படுவார்களேயானால் தமக்கான தனிமனித குரோதங்களை எல்லாம் தூக்கி எறிந்துவிட்டு, கரம் கோர்ப்போம் நாம், களம் காண்போம் நாம். இது உனக்கும் எனக்கும் உயர்வு தருகின்ற தேர்தல் அல்ல. இது எமது இனமக்களின் அடையாளத்தை மீட்டெடுக்கும் தேர்தல். எமது மக்களை ஒருமனம் கொண்டவர்களாய் படைத்தாள்வோம். அவர்களை ஒரு குடையின்கீழ் கொண்டுவர முயன்றிடுவோம். அவர்களுக்குள் புதைந்துள்ள வேதனைகளையும், வலிகளையும் அகற்றுவதற்கு பக்கத்திலிருந்து தாய்மையோடு பணிசெய்வோம் என்கிற எண்ணம் நமது தலைவர்களுக்கு வந்திருக்க வேண்டும். ஆனால் அதை தவிர்த்து அவர்கள் எத்தனை இடங்களில் நாம் வெற்றி பெறுவது, நாம் மக்களவைக்குள் சென்று எப்போது அமர்வது என்ற எண்ணம்தான் மேலோங்கி இருப்பதை செயல்பாடுகள் விளக்குகின்றன. ஆனால் சற்று பின்னோக்கிப் பாருங்கள். நமது தேசிய தலைவர் தாய்மையோடு அந்த மக்களை நேசித்தார். ஒரு கோழி தனது குஞ்சுகளை காப்பாற்ற பருந்தோடு மோதுவதைப் போன்று, மிக கடுமையாக மோதினார். தமது இறப்பை குறித்து அவர் ஒருநாளும் சிந்தித்தது இல்லை. ஆனால் தமது இன மக்களின் இருப்பை அவர் விரும்பினார். அதற்காக தமது இயக்கத்தின் போராளிகளை எல்லாம் கள பலியாக்கினார். அவர்கள் காடு, மலையெங்கும் சுழன்று காற்றோடு காற்றாய் கரைந்துபோனார்கள். வானவெளி எங்கும் வார்த்தையாய் நின்று போனார்கள். அவர்கள் அம்மா என்று அலறவில்லை. என் தாய்நாடே என்று மகிழ்ந்து இறந்தார்கள். அவர்கள் ஒவ்வொருநாளும் தமது உயிரை இந்த நாட்டின் உயர்வுக்காக, இந்த நாட்டின் வாழ்வுக்காக, தமது மக்களின் மகிழ்வுக்காக, இயற்கையாக அர்ப்பணித்தார்கள். இயற்கையோடு வாழ்ந்தார்கள். ஆனால் இன்று இந்த தன்மை எங்கே போயிற்று. அப்படி ஒரு ஈக வாழ்வு வாழ்ந்த இயக்கம் ஓய்வெடுக்கும் காரணத்தினால்தானே ராஜபக்சேவிற்கு இப்படி பேசுவதற்கு துணிச்சல் வந்தது. நாம் ஒற்றுமையாக இருக்க மாட்டோம் என்கிற மனநிலைதானே இப்படி பேச வைத்தது. இனியும் காலம் கடந்துவிடவில்லை. நாம் களத்திலே இருக்கிறோம். இந்த களம் எமது மக்களின் வாழ்வை மீட்டெடுக்கும் களம். எமது மக்களின் மகிழ்வை உறுதிபடுத்தும் களம் என்பதை நாம் புரிய வைக்க இன்னமும் நமக்கு காலம் இருக்கிறது. இந்த நேரத்திலும் நாம் பிரிந்துபோய் துரோகிகள் செய்த அதே செயலை செய்வோமேயானால், நாளைய தமிழீழ அரசு அமையும்போது உங்களின் பெயர் அந்த பட்டியலிலிருந்து நீக்கப்படலாம். உங்களின் செயல் அவர்களுக்கு எதிர்மறை தன்மையை சொல்லித்தர உதவலாம். நாம், ஒற்றுமையை இழந்துவிட்ட காரணத்தினால்தான் மகிந்தாவிற்கு நம்மை எதிர்த்து பேசும் துணிச்சல் வந்திருக்கிறது. ஆகவே, இது நமக்கான காலம். மார்ட்டின் லூர்தர் சொல்கிறபடி, மகிழ்வான காலங்களில் எடுக்கும் முடிவு அல்ல, ஆனால் துயர் நிறைந்த காலங்களில் எடுக்கும் முடிவே சாதனையாகிறது” என்கிற சொல்லை உறுதிபடுத்துங்கள். சிங்கள பேரினவாத அரசிற்கு நமது தேசிய தலைவர் ஓய்வெடுக்கும் காலத்தை நீங்கள் அவரின் நிழல்களாக தொடருங்கள். அவர் யாரையும் அடிமையாக இருக்க அனுமதித்தது கிடையாது. நமது தேசிய தலைவர் எந்த நிலையிலும் தமது சுயமரியாதையை இழந்தது கிடையாது. தமது மக்களும் இழக்கக்கூடாது என்பதிலே தெளிவாக இருந்தார். நமது தேசிய தலைவர் நமக்கான விடுதலையை தவற விட்டது கிடையாது. அவரும் விடுதலை உணர்வோடு வாழ்ந்தார். நம்மையும் விடுதலை உணர்வோடு வாழ வைத்தார். ஆகவே, அவர் மீண்டும் களத்திற்கு வரும் காலத்திற்குள் நமது உறுதியான பங்களிப்பை சரியான திசையில் செலுத்துங்கள். நமது செயல், இறுதி பயணத்துக்கான செயல் என்பதை நினைத்துப் பாருங்கள். வெறும் வாக்குகள் மட்டும் வாழ்க்கையை மாற்றிவிடாது. தேசிய தலைவர் சொல்வதைப்போல நாங்கள் அரசியல்வாதிகள் அல்ல, புரட்சிவாதிகள் என்பதை உங்களுடைய செயல்களின்மூலம் உறுதியாக்குங்கள். காரணம் அரசியல்வாதிகள் மேடைகளிலே பேசி, மேடையை விட்டு கீழே இறங்கியவுடன் மூழ்கி போவார்கள். ஆனால் புரட்சிவாதிகள் தமக்கான விடுதலையை அடையும்வரை விடாமல் போராடுவார்கள். அவர்களின் குருதி விடுதலையின் வேர்களிலே பாயும். விடுதலை வீச்சோடு வளர்த்தெடுக்கப்படும். அவர்களின் உடல் விடுதலைக்கு உரமாக்கப்படும். விடுதலை மகிழ்ச்சியோடு கிளைவிட்டு பரவும். அவர்களின் பேச்சு விடுதலைக்கு ஒளியூட்டும். விடுதலை ஒளிவந்த திசை நோக்கி முகம் சாய்க்கும். ஆம்! நாம் புரட்சியாளனிடம் பாடம் பயின்றவர்கள். நாம் ஒரு தாயிடம் பாடம் கற்றவர்கள். அந்த தாய் நம்மை, நமது பிள்ளைகளை நேசிக்க கற்றுக் கொடுத்தவன். அவரின் வாழ்வியல், அவரின் தியாகம், அவரின் களப்பணி, அவரின் செயல்திறன், ஆற்றல், அளப்பறியா தொலைநோக்கு, அடுக்கடுக்காய் அரசியல் அறிவு, எவனுக்கும் இல்லாத ஆளுமை, தனிமனித மேன்மை, வாழ்வில் தனித்தன்மை, தமது இனமக்களின்மீது அன்பு, அவர்களின் வாழ்விற்காக அர்ப்பணிப்பு என அடுக்கடுக்காய் ஆதாரமாய் வாழ்கிறவன் நமது தலைவன். இந்த நேரத்தில் அந்த தலைவனுக்கு நன்றி உடையவனாக இருங்கள். இதுவே போதும் ராஜபக்சே நம்மை பார்த்து அச்சமுற. அதை தவிர்த்து, தேசிய தலைவர்தான் களத்தில் இல்லையே? நாம் விரும்பியபடி செய்யலாம், வாழலாம் என்ற எண்ணம் நமக்குள் எழுமேயானால் அது நமது வீழ்ச்சிக்கு வழிவகுக்கும். நமது வீழ்ச்சிக்கு மட்டுமல்ல, நமது இன வீழ்ச்சிக்கும் அதுவே வழி சொல்லும் என்பதை இந்த தேர்தல் களத்தில் நாம் புரிந்து கொள்ள வேண்டும். விரைவாய் செயல்பட வேண்டும். புரிதலுடன் செயல்பட வேண்டும். புரட்சி நிறைந்த எண்ணத்தோடு செயல்பட வேண்டும். மகிழ்வாய் செயல்பட வேண்டும். அதில் ஒவ்வொன்றிலும் எமது மக்களின் வாழ்வு இருக்கிறது, அவர்களின் எதிர்காலம் குவிந்திருக்கிறது, நமக்கான ஒரு வரலாற்றுத் தேவை இருக்கிறது, தமிழீழம் என்கின்ற அடிப்படை உரிமை இருக்கிறது என்பதையெல்லம் இந்த நேரத்திலே நாம் மீண்டுமாய் நினைவுப்படுத்திக் கொள்ள வேண்டும். இதுதான் நம்மை செம்மையாக நடத்துவதற்கு துணைபுரியும். மகிந்தாவின் நாவை மட்டுமல்ல, மகிந்தாவின் நடமாட்டத்தையும் இது முறியடிக்கும். மீண்டும் தமிழனின் புலிக்கொடி தரணியெங்கும் பரக்க வழிவகுக்கும் என்பதை மறந்துவிடாமல் செயல்படும் தருணத்தை திட்டமிட்டு வினையாற்றுங்கள்

பாலிதா கோஹனவிற்கு எதிரான ஒழுங்கு நடவடிக்கையை ஐ.நா மேற்கொள்ளலாம்?

12ஆம் தேதி நியூயார்க்கில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் சிறிலங்காவைச் சேர்ந்த 16 பேர் பங்கு பெற்றனர். அமெரிக்காவில் உள்ள சிறிலங்கா தூதரகம் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது. ஆர்ப்பாட்டத்தில் பங்கு பெற்றவர்கள் ஒவ்வொருவருக்கும் மத்திய உணவும் 100 அமெரிக்க டாலர்கள் பணமும் வழங்கப்பட்டது. ஆலோசனை குழுவின் மூலம் கோஹனவின் குற்றம் நிருபிக்கப்பட்டால் எதிர் காலத்தில் சர்வதேச அளவில் எந்த செயலகத்திலும் அவர் பணியாற்ற முடியாது என ஐக்கிய நாடுகள் அமைப்பில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐக்கிய நாடுகளின் செயலாளர் பான் - கி - மூனுக்கு எதிராக நியூயார்க் நகரில் சிறிலங்காவின் ஒரு குழுவினர் அண்மையில் ஆர்ப்பாட்டங்களை நடாத்தியிருந்தனர். அதற்கு ஏற்பாடு செய்ததற்காக ஐ. நா. வுக்கான சிறிலங்கா நிரந்தர பிரதிநிதியான பலிதா கோஹன [Palitha Kohona] மீது ஒழுங்கு நடவடிக்கைகளை மேற்கொள்ள ஐக்கிய நாடுகள் அமைப்பு தீர்மானித்துள்ளதாக உறுதிப்படுத்தப்படாத செய்திகள் தெரிவிக்கின்றன. ஐக்கிய நாடுகள் அமைத்திருக்கும் இந்த ஒழுங்கு முறை ஆலோசனை குழுவில் இந்தியா மற்றும் சீனாவை சார்ந்த பிரதிநிதிகள் இடம் பெற மாட்டார்கள் எனத் தெரிகிறது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிறிலங்கா குழுவிற்கு கோஹன மலர்கொத்து கொடுத்த போது எடுக்கப்பட்ட ஒளிப்படம் வெளியான பிறகே இந்த ஒழுங்கு நடவடிக்கையை மேற்கொள்ள ஐக்கிய நாடுகள் சபை தீர்மானித்துள்ளது.

நாங்கள் யாருக்கும் கட்டுப்பட மாட்டோம் - இலங்கை

இலங்கை அரசு பிற நாட்டவர்களின் முடிவுக்கு ஒருபோதும் கட்டுப்படாது என்றும், எங்கள் உள்விவகாரத்தில் மூன்றாம் நபரின் தலையீட்டை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்று இலங்கை பிரதமர் ரத்னசிறி விக்ரமநாயக தெரிவித்தார். போரின் போது இலங்கை அரசு அப்பட்டமாக மனித உரிமையை மீறியதாகவும்,​​ மனித உரிமை குறித்து அந்நாட்டுக்கு அறிவுரை வழங்க நிபுணர்கள் அடங்கிய தனிக் குழு அமைக்கப்படும் என்றும் சமீபத்தில் ஐ.நா.​ பொதுச் செயலாளர் பான் கீ மூன் தெரிவித்திருந்தார். இந்நிலையில் புத்தளம் பகுதியில் பொதுத் தேர்தலுக்கான பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த ரத்னசிறி விக்ரமநாயக,​​ ஐ.நா.பொதுச் செயலாளரின் கருத்துக்கு பதில் அளிக்கும் விதத்தில் பேசியதாவது, இலங்கை சுதந்திரமான,​​ இறையாண்மையுடைய நாடு.​ தனி நாடு என்ற விதத்தில் சுயமரியாதையும் இலங்கைக்கு உண்டு.​ ஆனால் சில மேற்கத்திய நாடுகள் இதை உணர்ந்து நடப்பதில்லை.​ இலங்கை இன்னும் காலனி ஆதிக்கத்தின் கீழ் அடிமைப்பட்டுக் கிடப்பதாகவே அவர்கள் நினைக்கின்றனர்.​ இதனால்தான் இலங்கையின் உள்விவகாரத்தில் அவர்கள் சற்றும் தயக்கமில்லாமல் மூக்கை நுழைக்க முயல்கின்றனர். இதை இலங்கை ஒருபோதும் அனுமதிக்காது.​ ஒரு நாட்டின் உள்விவகாரத்தில் மற்றொரு நாடு தலையிடுவதை கடுமையாக எதிர்க்கும் வியன்னா ஒப்பந்தத்தில் இலங்கை கையெழுத்திட்டதுடன்,​​ அதை தீவிரமாகவும் கடைப்பிடித்துவருகிறது.​ இதுவரை இலங்கை எந்த ஒரு உள்நாட்டு விவகாரத்திலும் தலையிட்டது கிடையாது.​ இலங்கையை எப்படி ஆட்சி செய்ய வேண்டும் என்று இலங்கை ஆட்சியாளர்களுக்கு தெரியும்.​ இதுகுறித்து பிற நாட்டவர்கள் எங்களுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை.​ இலங்கை அரசு பிற நாட்டவர்களின் முடிவுக்கு ஒருபோதும் கட்டுப்படாது என்றார்.

மரணித்த மனித நேயம் மனித எச்சம் தேடுகிறது

உலக மண் எங்கும் ஓயாது ஒலித்தோம். மண்ணின் சோகத்தை மனம் வெம்ப சொல்லி நின்றோம். எவருமே செவி சாய்க்கவில்லை ஒன்ரறை மாத காலம். ஒருவரும் காணாக் கோலம். நான்கு லட்சம் மக்கள் என்றோம். நாதி அற்ற நிலை என்றோம். பாதி கூட நோக்கவில்லை. பச்சாதாபம் காட்டவில்லை. பதைபதைக்க பல கொலைகள். படைத்து விட்ட சிங்களமும். துணை புரிந்த வல்லரசுகளும். ஏன் அங்கு போகின்றார்கள் மிச்சம் ஏனும் காக்காமல். எச்சம் தேடி என்ன பலன்? தப்பி ஒடி வந்தவருக்கும். தரம் பிரித்த தடுப்புக்காவல் எட்டுப்பட்டு முட்கம்பி வேலி. ஏந்தி நிற்கும் துப்பாக்கி தாரர். எவர் வருவார் எவர் வருவார். எம்மை எவர் மீட்பார்? ஏக்கம் கொண்ட நெங்சங்கள் வழியை வழி பார்த்து கண்கள் பூத்து நிற்கும் காட்சிகள் பார்த்தும் கருணை கொள்ளா உலகம் கண்னை மூடி இருந்து விட்டு கறை படிந்த நிலத்தில் துடைத்து அழித்த தடயம் தூர்வை செய்து பலன் என்ன? கணக்கில்லா வதை முகாம்கள் கண்காணா இடங்களில் அங்கே கண் விழித்து தேடு உலகே மரணித்த மனித நேயம் உயிர்க்கட்டும். -webdunia