யாழ். மாவட்டத்தின் வலிகாமம் வடக்கு அதியுயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள வயாவிளான் மத்திய மகா வித்தியாலயம் கடந்த செவ்வாய்கிழமை திறந்து வைக்கப்பட்டது. அது சம்பந்தமான செய்திகள் அனைத்து ஊடகங்களிலும் பரவலாக முக்கியத்துவம் மிக்க செய்தியாக வெளிவந்தது. இதனையடுத்து அதியுயர் பாதுகாப்பு வலயங்களிலுள்ள பல கல்லுரிகள் மக்கள் குடியிருப்புக்கள் மற்றும் ஆலயங்கள் என்பன தொடார்சியாக மக்களின் பாவனைக்கு வரலாம் என்ற நம்பிக்கை யாழ். மக்களின் மனங்களில் தோன்றின. ஆனால், இந்த நிகழ்வில் பாடசாலை கையளிப்பு என்பது மக்களை ஏமாற்றுவதற்கு நடத்தப்பட்ட ஒன்று போல் தென்படுகின்றது.
இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....