புதன், 8 டிசம்பர், 2010

இசைப்பிரியாவுடனுள்ள பெண் போராளி இனம் காணப்பட்டுள்ளார்

மல்லாவியை சொந்த இடமாக கொண்ட குணலிங்கம் - உசாளினி (இயக்க பெயர் - அகல்விழி. வயது 19 ) இவர் ஒரு புதிய போராளியாவார் ..இராணுவ கொடுமைகள் காரணமாக 2008 / 05 ம் மாதமளவிலே போராளியாக இணைந்தவர் . தமிழீழ தொலை காட்சி செய்தி சேகரிப்பாளராக பணி புரிந்துள்ளார் என உறவினர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

மலேசியாவுக்குப் புறப்பட்ட விமானம். வந்தடைந்த ராஜபக்ச

இலண்டன் விஜயத்தின் போது எதிர்பாராத விதமாகச் சந்தித்த நெருக்கடிகளை அடுத்து அவசரமாக கொழும்பு புறப்பட்ட ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் அவரது குழுவினரும் மலேசியாவுக்குப் புறப்பட்ட விமானம் ஒன்றையே கொழும்புக்குத் திசைதிருப்பி வந்ததாக சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கொலை வழக்கில், டக்ளஸ் . தலைமறைவு குற்றவாளி என்பதை ரத்து செய்ய முடியாது.

ஆனந்தன் என்ற டக்ளஸ் தேவானந்தா, . இவர் முன்பு `இ.பி.ஆர்.எல்.எப்' என்ற போராளி இயக்கத்தில் இருந்தார். சென்னை சூளைமேடு பகுதியில் அந்த இயக்கத்தை சேர்ந்த சிலருடன் அவர் வசித்து வந்தார். கடந்த 1.11.86 அன்று அந்த பகுதியில் ஏற்பட்ட தகராறில் திருநாவுக்கரசு என்பவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக அமைந்தகரை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் டக்ளஸ் தேவானந்தா உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டு சென்னை 4-வது கூடுதல் செசன்சு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
 

ஈரானில் தயார் நிலையில் தற்கொலைப் படகுகள்!

ஈரானின் கடற்படையினரால் பெருந்தொகையான தற்கொலைப் படகுகள் உருவாக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பயங்கர வெடிமருந்துகள் இணைக்கப்பட்ட 9000 க்கும் அதிகமான வேகப் படகுககளை ஈரானின் கடற்படை உருவாக்கியுள்ளது இந்தப் படகுகள் பாரசீக வளைகுடாப் பிரதேசத்தில் காவல் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளன. ஈரானின் இச்செயற்பாடு அமெரிக்காவுக்கு விழுந்த பலத்த அடியாகவே அரசியல் அவதானிகள் கருதுகின்றனர்

தாயின் மடி செல்ல தவமிருக்கிறேன். "சிறையின் மடியில்" – பேரறிவாளன்

“எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து நான் இந்த சோப்பு கட்டிதான் பயன்படுத்துகிறேன்.” என்ற தொலைக்காட்சி விளம்பரத்தினைப் பார்க்கும் ஒவ்வொரு கணப்பொழுதிலும் “எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து நான் சிறைக்குள் நான் இருந்தேன்.” என வேடிக்கையாக நினைப்பதுண்டு. ஆம்! தாயின் மடியிலிருந்து நேரே சிறையின் மடிக்குள் விழுந்தவன் நான். பிறந்து 19 ஆண்டு 10 திங்கள் கரம் பிடித்து நட்ந்தவன். அடுத்த 19 ஆண்டு 6 திங்களாக சிறைக்கம்பிகள் பற்றியபடி நகர்பவன். மாந்தர் உரிமை குறித்தும், மண்ணின் பெருமை குறித்தும் கருத்துகளை விதைத்தது, என் தாயின் மடி எனில், விதைத்ததை வளர்த்து, காத்தது சிறையின் மடி.
மிக நீண்ட நெடுங்காலமாகவே ஒரு கொலையாளி என்பதாகவே சித்தரிக்கப்பட்டு, அக்கரையுள்ள சக்திகளால் பரப்புரை செய்யப்பட்ட எனது வாழ்வின் நெடுங்கதை, விரிப்பின் கொள்கைகளால் மட்டுமே நிரம்பி கிடக்கும். “மனிதனை நினை”என்பதையே தனது வாழ்வின் கொள்கையாக கொண்டுழைத்த மனித நேயர் அய்யா தந்தை பெரியாரையும் “அன்பின் வழியது உயர்நிலை” என்றுரைத்த உலகப் பொதுமறை தந்த பெருநாவலரையும் விழிகளாக்க் கொண்டு வழி நின்றவன்.எனது நடுவ புலனாய்வுத் துறை காவல் கண்காணிப்பின் போது, ஒரு நாள் எனது தந்தையின் மடல் வந்தது. அதில் எனது தந்தை, “புதல்வ, உன்னை விசாரணை அதிகாரிகள் அடிக்கிறபோது அவர்கள் அடிக்க வசதியாக உனது முதுகை வளைத்துக்கொடு, ஏனெனில் அவர்கள் நமது சூத்திர தமிழர்கள்” (தாக்கியோர்கள் சூத்திரர்கள் அல்ல என்பது வேறு செய்தி) எனக் குறிப்பிட்டுவிட்டு “இதைத்தான் அய்யா பெரியார் நமக்கு போதித்தார்” என முடித்திருந்தார்.