இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
ஞாயிறு, 28 நவம்பர், 2010
டக்ளஸ் - மாவை இணைந்து செயற்படத் தயார் ! மாவை தெரிவிப்பு
13 வது திருத்தச் சட்டத்தை அமுல் படுத்தி அதன் மூலம் எமது மக்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வைப் பெற்றுக் கொடுப்பதில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுடன் இணைந்து செயற்பட நாமும் தயாராகவுள்ளோம் என்றும் மாவை. சேனாதிராஜா மேலும் தெரிவித்தார். மீள்குடியேற்றத்திற்கு தயாராகவுள்ள பகுதிகளில் மீளக்குடியேறவுள்ள மக்களுடனான சந்திப்பு கீரிமலை நகுலேஸ்வரக் கோயில் முன்றலில் நடைபெற்ற மக்களுடனான சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவத்துள்ளார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)