ஞாயிறு, 28 நவம்பர், 2010

டக்ளஸ் - மாவை இணைந்து செயற்படத் தயார் ! மாவை தெரிவிப்பு

13 வது திருத்தச் சட்டத்தை அமுல் படுத்தி அதன் மூலம் எமது மக்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வைப் பெற்றுக் கொடுப்பதில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுடன் இணைந்து செயற்பட நாமும் தயாராகவுள்ளோம் என்றும் மாவை. சேனாதிராஜா மேலும் தெரிவித்தார். மீள்குடியேற்றத்திற்கு தயாராகவுள்ள பகுதிகளில் மீளக்குடியேறவுள்ள மக்களுடனான சந்திப்பு கீரிமலை நகுலேஸ்வரக் கோயில் முன்றலில் நடைபெற்ற மக்களுடனான சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவத்துள்ளார்.