திங்கள், 13 செப்டம்பர், 2010

உங்கள் கண்டனங்களை குப்பையில் கொட்டுங்கள்

இலங்கையின் அரசியலமைப்பின் 18 - வது திருத்தச் சட்டத்தை அமெரிக்கா கண்டித்துள் ளது. அமெரிக்காவின் இந்த கண்டனம் என்ன செய்யும் என்றால் எதுவுமே இல்லை என்பதே அதற்கான பதிலாக அமையும்.கண்டனங்கள், ஆழ்ந்த அனுதாபங்கள், அதிர்ச்சிகள் அனைத்தும் சம்பிரதாயமானவை. இவற்றால் எதுவும் ஆகப் போவதில்லை. அதே நேரம் பாதிக்கப்படும் மக்களுக்கு இத்தகைய கண்டனங்கள் எத்தகைய விமோசனங்களையும் பெற்றுத்தரப் போவதில்லை என்பதும் தெரிந்த விடயமே.


மரத்தில் தொங்கிய யுவதியின் சடலம்

நாவற்குழி தச்சன் தோப்புப் பகுதியில் மரம் ஒன்றில் கயிற்றில் தொங்கிய நிலையில் யுவதியின் சடலம் காணப்பட்டது.


இதே இடத்தைச் சேர்ந்த தம்பிப்பிள்ளை தனுஷா (வயது 19) என்னும் யுவதியே இறந்தவராவார். இவரது சடலத்தை சாவகச்சேரி பொலிஸார் மீட்டு சாவகச்சேரி ஆதார வைத்திய சாலை பிரேத அறையில் ஒப்படைத்துள்ளனர்.