இலங்கை அரசு, அதன் முன்னைய நிலைப்பாட்டிலிருந்து விலகி, ஐநாவின் தலைமைச் செயலரால் நியமிக்கப்பட்டுள்ள மனித உரிமைக் குழுவை நாட்டுக்குள் அனுமதிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. இறுதிக்கட்டப் போரின்போது இடம்பெற்றதாக கூறப்பட்ட போர்க்கால குற்றங்கள் பற்றி ஆராய்ந்து பான் கிமூனுக்கு ஆலோசனை வழங்குவதற்காக மூவரடங்கிய நிபுணர்குழு நியமிக்கப்பட்டமையை இலங்கை அரசாங்கம் முன்னர் கடுமையாக விமர்சித்து வந்தமை குறிப்பிடத்தக்கது..
இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....