சனி, 21 மே, 2011

வரலாறு காலத்திற்கு காலம் எமக்கு வாய்ப்புக்களை உருவாக்கித் தரும். அதனை நாம் ஒழுங்காக பயன்படுத்தாவிட்டால் வரலாறு ஒருபோதும் எம்மை மன்னிக்காது......

ஐ.நா போர்க்காலத்தில் அந்நிறுவனத்திற்குரிய விழுமியங்களுடன் செயற்படவில்லை. ஐ.நா நினைத்திருந்தால் போரை நிறுத்தியிருக்க முடியும். தமிழ் மக்களினுடைய அரசியல் இருப்பையும் பாதுகாத்திருக்க முடியும். ஐ.நா செயலாளர் தனக்குள்ள அதிகாரத்தை இதற்காக பயன்படுத்தியிருக்க முடியும்.
போருடன் மக்களின் உயிர் அழிவு,

இன அழிப்பின் இரண்டாம் ஆண்டு நினைவு

முள்ளிவாய்க்கால் இன அழிப்பின் இரண்டாம் ஆண்டு நினைவும், ஆத்ம சாந்தி பூஜையும் 20.05.2011 அன்று Leicester முருகன் கோவிலில் மிகவும் அமைதியாகவும், உணர்வுபூர்வமாகவும் நடைபெற்றது. நிறைவில் நாடுகடந்த தமிழீழ அரசின் வெளிவிவகாரங்களுக்கான அமைச்சர் திரு.தயாபரன் ( ஜனகன் மாஸ்டர் ) அவர்கள் தேசத்தின் பாலம் ஈழ மண்ணில் ஆற்றும் பணிகள் பற்றி விளக்கமளித்தார். அதனை தொடர்ந்து, முள்ளிவாய்க்கால் வரை நின்று களமாடிய போராளி ஒருவர், அங்கு மக்கள் பட்ட துயரங்களை அங்கு வந்திருந்த மக்களுடன் பகிர்ந்து கொண்டார். இறுதியாக அன்னதானம் வழங்கப்பட்டது.


இப் பூசையினை தேசத்தின் பாலம் அமைப்பினரும், முன்னாள் போராளிகளும் சேர்ந்து நடத்தி வைத்தனர்.