வெள்ளி, 2 ஜூலை, 2010

இரகசியம்

எனக்குத் தெரியும்
அங்கே சிதறிய செங்குருதியின்
சொந்தக் காரனை
அவன் பெயர்
காற்றின் அசைவுக்குள்
தவழ்ந்து செல்லாது
அது இரகசியமாய்ப்
பேணப்பட வேண்டிய
உன்னத பெயர்
சிலரின் இதய அறைக்குள் மட்டுமே
அவனுக்கான சடங்குகள்
நடக்கும்
பெற்ற தாயும் அறியாத
பரம இரகசியம்
அவனது விடுதலை வேள்வி
அந்த செங்குருதியின்
சொந்தக் காரனின் பெயர்
எந்த நடுகல்லிலும் இல்லை
மலரும் தமிழீழத்தில்
உரத்து உச்சரிக்கப்படலாம்
அந்த வேங்கையின்
அதிசய சாதனைகள்

கரும்புலி மேஜர் டாம்போ(காசிப்பிள்ளை தயாபரன் நாச்சிக்குடா மன்னார்)

1991 மூன்றாம் மாத நடுப்பகுதி:
சிலாபத்துறை இராணுவ முகாம்மீது ஒர் பாரிய தாக்குதல் நடத்துவதென தீர்மானக்கப்பட்டது.


"அண்ணை, மன்னாரில நடக்கிற முதலாவது கரும்புலித் தாக்குதலை நான்தான் செய்யவேணும்" இது கரும்புலி மேஜர் டாம்போ மிகத் தெளிவாகத் தன் தளபதியிடம் கூறிக்கொண்டது. தாக்குதலுக்கான நாள் வந்தது. அவனது விருப்பப்படியே அம் முகாம் மீதான தாக்குதலுக்காக, வெடி மருந்து நிரப்பிய வண்டியை ஓட்டிச் செல்வது டாம்போதான் எனத் தீர்மானிக்கப்பட்டது.

பிழைக்கத்தெரியாத என் தலைவா..

இனத்தை அடகு வைத்து பிழைத்திருக்கலாம்
உன் பேரன்கள் உலகின் பெரிய பணக்காரர்
வரிசையில் வந்து சேர

புலனாய்வாளர்களின் உள்நோக்கம் கொண்ட சதி...!

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள குடும்பிமலை காட்டுப் பகுதியில் சில நாட்களுக்கு முன்பு சிறிலங்கா இராணுவ அணிக்கும் புலிகளுக்கும் இடையில் சண்டை நடந்ததாகவும் அதனால் அந்த பகுதியில் விமானப் படைக்குச் சொந்தமான கிபீர் விமானங்கள் குண்டு வீச்சு தாக்குதலில் ஈடுபட்டது.

அரசாங்க அதிபர் நியமனம் தொடர்பாக குழப்பம்

யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் யார் என்பது தொடர்பாக நேற்று வியாழக்கிழமை குழப்பகரமான நிலைமை ஏற்பட்டது.