விண் வரும் மேகங்கள் பாடும் மாவீரரின் நாமங்கள் கூறும்
கண் வெளி கங்கைகள் பாயும் இவர் காவிய நாயகர் ஆகும்.
புதைந்த குழியில் இருந்து நீங்கள் எழுந்து வாருங்கள்!!!
எரிந்த இடத்தில இருந்து நீங்கள் நிமிர்ந்து வாருங்கள்!!!.
வேங்கைகள் ஆகி விடிவுகள் தேடி விழுந்த வீரர்களே!!!
தமிழ் வீடுகள் யாவிலும் விளக்குகள் ஆக எரியும் சுடர்களே!!!
இளமைக்கால இனிமைகள் யாவும் திறந்த வேங்கைகளே!!!!
தமிழ் இனத்திற்காக இரந்து தீயில் எரிந்த வீரர்களே...
இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
திங்கள், 22 நவம்பர், 2010
கார்த்திகை பூவே!!!
கார்த்திகை பூவே!!! கார்த்திகை பூவே!!! கல்லறை மடியினில் மலர்ந்து விடு. கன்னங்கள் சிவக்கும் செவ்வந்திப் பூவே சில்லென்று குளிர்ச்சியை பொழிந்து விடு அழகாக பூக்கும் புது ரோஜாப் பூவே தனியாக வீரர்களின் புகழ் பாடு மனசெங்கும் வாசம் தரும் முல்லைப் பூவே துயில்கின்ற வீரர்களை தாலாட்டு மல்லிகைப் பூச் சிரிப்புடன் தங்கள் உயிர் பூவைத் தந்த வீரருக்கு எந்தப் பூவும் இணை இல்லையே.....
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)